பொட்டானிக்கல் கார்டனுக்கு பின் பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். ஓரிடத்தில் காரை நிறுத்தி விட்டு மகிழ்வுடன் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே நீர்வீழ்ச்சியை அடைந்தனர். ரசிகாவிற்கு அவ்விடம் பிடித்து போயிற்று. அதே போல் அவளால் அக்குளிரை தாங்க முடியாமல் நடுங்கிக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆதி அவளிடம் வந்து தேனீரை நீட்டினான். “தேங்க்யூ சார்” என்று குடித்து விட்டு அருவி இருக்கும் பக்கம் நெருங்கி சென்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
ரசிகா நிதுவுடன் இருந்தாலும் அமைதியாக நின்று கொண்டிருந்தாள். அகரன் அவளை வாங்கி அவன் வைத்துக் கொண்டு, உன்னோட முடிவு இது தானா? என்று அருவியை பார்த்துக் கொண்டே கேட்டான்.
ஆமாம். என்னால் என் தோழன் அகரனை காதலிக்க முடியாது. கல்யாணமெல்லாம் இப்ப முடியாது. “முதல் தேடல் முற்றிலும் கோணல்” என்பது போல் என் வாழ்க்கை ஆன பின் திருமணம் விருப்பமில்லை. காரண காரியம் ஏற்பட்டால் பார்க்கலாம். ஆனால் என்னால் எனக்கு தாலி கட்டியவனுடனோ? இல்லை உன்னுடனோ வாழ முடியாது.
அவனுடன் வாழ்ந்தால் கேவலமான வாழ்க்கையை வாழ வேண்டி வரும். உன்னை என்னால் கணவனாக நினைக்க கூட முடியாது என்று அகரனை பார்த்தாள்.
முடியாதுல்ல..என்று அவனை கண்ணீருடன் பார்க்க, அவளால் தாங்க முடியவில்லை. என்னோட நண்பன்டா என்று அவன் தோளில் கை போட்டு கண்கலங்கி இதழ்களில் புன்னகை மலர சொன்னவளை பார்த்து, இந்த ட்ரிப் முடியவும் உன்னிலிருந்து நான் வெளியே வர நேரம் வேண்டும். அதுவரை நாம சந்திக்க வேண்டாம் என்றான் அகரன்.
“தேங்க்ஸ்டா” என்று ரசிகா அவன் கையை பிடிக்க, அகரன் ஆதியை பார்த்தான். அவனை மீறியும் அவன் கோபம் அப்பட்டமாக வெளியே தெரிந்தது. மெல்லினா தன் அண்ணன் கையை பிடித்து சமாதானப்படுத்தினாள். பின் அங்கிருந்து அவர்கள் ஏரிக்கு வந்து படகு சவாரியை எஞ்சாய் செய்தனர்.
பின் அவர்கள் சாப்பிட்டு வீட்டிற்கு வர மணி பதினொன்றை தாண்டியது. ஆதி ரசிகா அறைக்கு சென்று லிதுவை படுக்க வைத்தான். மெல்லினாவும் அவளுடனே படுத்துக் கொண்டாள்.
மறுநாள் பொண்ணுங்க குட்டீஸூடன் தயாராகி வந்தனர். ஆதியும் அகரனும் ரசிகாவை மெய்மறந்து ரசித்து பார்த்தனர். அவள் பிங்கும் மஞ்சலும் கலந்த காட்டன் புடவையில் வந்தாள். அகரன் இதற்கு முன் அவளை புடவையில் பார்த்தாலும் அவன் மனதினுள் தப்பா யோசிக்காதடா என கட்டுப்பாடுடன் திரும்பிக் கொண்டான்.
ஆதிரேயன் ரசிகாவை பார்த்த பார்வை அவளுக்கு தெளிவாக புரியவில்லை என்றாலும் கூச்சத்துடன் அவர்களிடம் வந்தாள்.
“வாவ், கார்ஜியஸ்” என்று அகரன் சொல்ல, போடா என்று அவள் ஆதிரேயனிடம் கிளம்பலாமா சார்? என்று கேட்டாள்.
ம்ம் என்ற ஆதியின் கண்கள் அவளிடமிருந்து நகர மறுத்தது.
போகலாம் போகலாம் என்று இருவர் இடையிலும் வந்த அகரன் ஆதியை முறைத்து இழுத்து சென்றான். பைன் காடுகள், ஸ்டோன் ஹவுஸ் மியூசியம் என சில இடங்களை பார்த்து விட்டு அவலாஞ்சி ஏரியை பார்த்தனர். பின் அண்ணா ஹிட்டன் நீர் வீழ்ச்சி, “பிளாக் தென்டர் போகலாமா?” என மெல்லினா கேட்டாள்.
ஹிட்டன் நீர்வீழ்ச்சியோட இன்று முடித்து நாளை அதிகாலை வீட்டிற்கு போகணும் என்றான் அகரன்.
அண்ணா, ப்ளீஸ்.
இல்லடா, உன்னோட பள்ளியை முடி. அப்புறம் “பிளாக் தென்டர்” போகலாம் ஆதிரேயன் சொல்ல, அண்ணா அப்ப ரசி கூட இருப்பாங்கன்னு சொல்ல முடியாதே? என்றாள்.
ஏன்? எங்க போகப் போறாங்க? என்று ஆதிரேயன் கேட்க, சார் என்னோட வொர்க் முடிந்தால் நான் கிளம்பிடுவேன் என்று அவள் சொல்ல, குழந்தைகள் அழுதனர். ஆதிரேயனும் காரை நிறுத்தி அவளை பார்த்தான்.
“சாரி சார், தனியாக சொல்ல வேண்டியதை இப்ப சொல்லீட்டேன்” என்று குழந்தைகளிடம் பேச்சை மாற்றினாள்.
அப்படின்னா? எப்பொழுது வேண்டுமானாலும் இவள் நம்மை விட்டு சென்று விடுவாளோ? ஏன்று அவன் அதே யோசனையிலே காரை செலுத்த, இடையே வந்த ஒருவன் ஆதியின் காரில் விழுந்தான்.
அகரனும் ஆதியும் கீழிறங்கி அவனை பார்க்க, நீளவாக்கில் இருந்த அரிவாளை ஆதியை நோக்கி விட்டான் அவன். சிறிய இடைவெளியில் ஆதி விலக, இருவரும் அவனை தள்ளி விட்டு காரை எடுத்தனர்.
ஆனால் கார் ஒன்று அவர்களை இடிக்க, இவர்களின் கார் அவ்விடத்திலிருந்து அவர்கள் தேடிக் கொண்டிருந்த நீர்வீழ்ச்சிக்கு பின் பக்கமாக மரத்தில் இடித்து கீழே விழுந்தது. ஆதி பதறி அனைவரையும் பார்த்தான். பசங்க பாதுகாப்பாக உள்ளே நகர்த்தி வைத்திருந்தனர் மெல்லினாவும் ரசிகாவும். ஆனால் இருவருக்கும் லேசான காயம் தான். ஆதிக்கும் அகரனுக்கும் தான் கை, கால், தலை, நெற்றி என இரத்தம் வந்தது.
கார் ஓரமாக மறைந்து இருக்க, எல்லாரும் இருங்க. நாங்க பார்த்துட்டு வாரோம் என்று ஆதியும் அகரனும் வெளியேற, அகரனால் நகர முடியவில்லை. மரச்சில்லுகள் அவன் காலில் குத்தி இருந்தது. ரசிகாவும் ஆதியும் அவனுக்கு கட்டு போட்டு விட்டனர். அகரா நீ இரு. நான் பார்த்துட்டு வாரேன் என்று ஆதி இறங்க மழை கொட்டி தீர்த்தது.
“போச்சு. நல்லபடியா வீட்டுக்கு போன மாதிரி தான்” என பயத்தில் மெல்லினா கூற, அகரா நீயும் மெல்லியும் பசங்களை பார்த்துக்கோங்க. தனியா பொண்ணுங்க இருப்பது சரியில்லை. நானும் சாரும் வெளியே போகும் வழியை பார்த்துட்டு வாரோம் என்றாள் ரசிகா.
இவ பெரிய சூறப்புலி.
போதும். பேசாத..ரசி சொல்றதும் சரி தான். அவனுக வந்தாலும் நம்ம கார் தெரியாது. அமைதியா மட்டும் இருங்க என்று ரசி இந்தா என்று ஓர் கனமான மரக்குச்சியை அவள் கையில் ஆதி கொடுக்க, இது எதுக்கு சார்? அவள் கேட்க, “பாஸ் தலையில் போட்டு கொல்ல” என்று அகரன் சத்தமிட்டான்.
ரசி இந்தா, இதை ஊன்றி நட மெதுவாக மழையும் விட்டுருச்சி. ரொம்ப சகதி சேறுமாய் இருக்கும். இதை வைத்து பார்த்து நட என்று அவனும் ஒன்றை எடுத்து அவளை முன்னே விட்டு இவன் பின்னே நடந்தான்.
“அண்ணா, சீக்கிரம் வந்துரு” என்று மெல்லினா சொல்ல, உங்க அண்ணா இந்த காட்டுல்ல தான் தங்கப் போறான் என்ற அகரனின் முகூர்த்தமான வார்த்தை பழிக்க போகிறது என்று அறியாமல் இருவரும் காட்டினுள் வழியை தேடி சென்றனர். அடர்ந்த காடு இல்லை என்றாலும் நடப்பது மிகவும் சிரமமே..
ஏய், இந்தா நிதுவை பார்த்துக்கோ மெல்லினா கட்டளையிட, “எல்லாம் என நேரம்” என அகரன் அலுத்துக் கொண்டான்.
ஆதிரேயனும் ரசிகாவும் சென்று கொண்டிருந்தனர். சேறாக இருந்த படியில் ஏறிக் கொண்டே சார், எந்த பக்கம் போகணும்? என்று கேட்டுக் கொண்டே திரும்பி அவனை பார்த்தாள். அவன் கையை நீட்டி காட்டினான்.
“ஓ.கே சார்” என்று முன் திரும்பி படியில் காலை வைத்தாள். சேறு அவள் காலை வாற, ஆதியின் மீது சாய்ந்தாள். அவன் விழாமல் இருக்க, அவன் கையிருந்த தடியுடன் அவளை இருபக்க இடையை அழுந்த பிடித்தான். ஆதி கையிலிருந்த தடி அவளது இடையில் காயத்தை ஏற்படுத்தியது.
ஷ்..என்ற அவளை ஆதி பார்க்க, ரசிகாவும் ஆதியை பதட்டமுடன் பார்த்தாள். மேகம் இடி முழக்கத்துடன் மழைய பொழிய, இருவரும் சுதாரித்து நகர்ந்தனர்.
“மெதுவா நட ரசி” என்றான் ஆதி. அவள் அவன் முகத்தை பாராது நகர, அவள் இடையில் இருந்த காயம் தெளிவாக தெரிந்தது ஆதிக்கு. அவனுக்கு சொல்ல சங்கடமாக உணர்ந்தான்.
அடை மழை தொடர, குளிரில் ரசிகா நடுக்க ஆரம்பித்தாள். “ரசி நில்லு” என்று அவள் கையை பிடித்து அவன் ஓர் பக்கமாக இழுத்து சென்றான்.
அங்கே ஆற்றின் ஊடே இருந்த பெரிய மரத்தடியில் அவளை நிறுத்தினான். குளிர் தாங்க முடியாமல் மரத்தின் கீழே காலை குறுக்கி அமர்ந்தாள். ஆதியாலும் குளிர் தாங்க முடியவில்லை. அவனும் அமர்ந்தான்.
இருமணி நேரத்திற்கு பின் மழை நிற்க, இருவரும் மேலும் நடந்தனர். குளிர் இருவரையும் வாட்டியது. சிக்னல் இல்லாததால் அகரனை அழைக்கவும் முடியவில்லை. திரும்பி செல்லும் முன் இருட்டாகி விடும். என்ன செய்யலாம்? என்று யோசனையுடன் ஆதிரேயன் இருந்தாள்.
தூரத்தில் டென்ட்டு போட்டு இருந்தது. யாராவது இருப்பார்கள் என்று ரசிகாவை அழைத்து சென்றான். ஆனால் அங்கே யாரும் இருக்கும் தடயம் கூட இல்லை. சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா? என சத்தமிட்டு பார்த்தனர். யாரும் வரவில்லை. இருவர் கையிலும் போனை தவிர ஏதுமில்லை. ரசிகாவை தனியே விட்டு வழி தேடி செல்லவும் ஆதிரேயனுக்கு பயமாக இருந்தது.
இன்று இங்கே தான் தங்கணும் என்றான். அவள் நடுக்கத்துடன் அவனை பார்த்தாள். அவன் தன்னுடைய மேல் சட்டையை கழற்றி பிழிந்து உதறி அவளுக்கு போட்டு விட்டான். ஈரமான ஆடை வேற, இருவராலும் குளிரை தாங்க முடியவில்லை. இருவரும் டென்டினுள் நுழைந்தனர்.
ஆதியை பார்த்த ரசிகா, அவனது சட்டையை அவனிடம் கொடுக்க, இருவரும் பேச கூட முடியாத குளிர். அவன் வாங்க மறுத்து தலையசைத்து அவளை போட்டுக் கொள்ள சொன்னான்.
அவள் மெதுவாக அவனருகே நகர்ந்து அமர்ந்து ஒரு பக்கம் அவள் போட்டு மறுபக்கம் அவனுக்கு கொடுக்க, சட்டென அவளை தன்னுடன் அணைத்தான் ஆதி. அவள் வேகமாக விலக, அவனும் விலகி குளிரில் நடுங்கினான்.
மீண்டும் அவனை நெருங்கி அமர்ந்தாள் ரசிகா. ஆதிரேயன் அவனது கை விரல்களை அவள் விரல்களுடன் கோர்த்தான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகம் வெளுத்து இருக்க, அவன் சட்டையை அவனுக்கு போட்டு விட்டு அவன் மார்போடு நெருங்கி அமர்ந்தாள். அவளால் அப்பொழுது குளிர் தாங்க முடியவில்லை.
ஆதிரேயன் ரசிகாவை இழுத்து மார்போடு அணைத்து அவளை பார்த்தான். அவள் அவனை பார்த்தாள். அவள் ஏதும் சொல்லவில்லை என்றதும் அவளது நடுங்கிய பற்கள், இதழ்கள் அருகே வந்து அவளை பார்த்தான். அவள் அமைதியாக இருக்க, அவளுக்கு இதழணைப்பை கொடுத்து இருவரது நடுக்கத்தையும் குறைத்தான்.
ரசிகா கண்ணீர் வர, மேலும் அவளை இறுக்கிக் கொண்டான். அவள் பயத்துடன் அவனை அணைத்தாள். ஆதி மெதுவாக இறுக்கத்தை குறைத்து, அவள் நெற்றி, கன்னம், மூக்கி, உதடு, கழுத்து என இருவரும் ஒன்ற, அவள் பயம் அதிகமானது.
ஆதி அவளுக்கு சம்பளம் கொடுக்கும் பாஸ். நாம் செய்வது தவறு என அவளுக்கு உறைத்தாலும் அவளால் குளிரால் அவனை விட்டு விலக முடியவில்லை. ஆதியின் மிருதுவான இத்தீண்டல் அவள் மனதில் அவன் பதிய ஆரம்பித்தான்.
பின் மெதுவான அனைத்தையும் குறைத்து அவளை அணைத்துக் கொண்டு படுத்தான். அவன் மார்பிலே படுத்து இருவரும் குளிரின் தாக்கத்தில் கண்ணை மூடினர். ஆதி அத்துமீறாமல் சூழ்நிலைக்காக தான் தனக்கு முத்தமிட்டான். அவ்வளவே தான் என ரசிகா அவள் மனதில் எண்ணிக் கொண்டே அவன் மார்பில் நிம்மதியாக தூங்கினாள்.
நேரமாகுது. மழை இப்படி பெய்யுதே? ருச்சி என்ன செய்கிறாளோ? பாஸ் வேற கூட இருக்கிறாரே? என்னால வெளியே நகர கூட முடியவில்லையே என்று கண்ணீருடன் அகரன் சொல்ல, என்னோட அண்ணாவை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது? மெல்லினா கேட்டாள்.
ருச்சி சாதாரண குளிரையே தாங்க மாட்டா. மழையுடன் இப்படி குளிர் அடிக்குதே. கண்டிப்பா ஏதோ நடக்கப் போகுது? அகரன் மீண்டும் புலம்பினான்.
சும்மா இரேன். என்னோட அண்ணா இதுவரை எந்த பொண்ணு மேலும் விருப்பப்பட்டதே இல்லை. முதல் முறை காதலிக்கிறான். ரசி விருப்பமில்லாமல் அவளை தொட மாட்டான் என்ற மெல்லினா லிது நிதுவை பார்த்தாள். இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த திண்பண்டங்களை மெல்லினா அவர்களுக்கு கொடுத்திருப்பார்கள்.
பாஸ் ருச்சியை காதலிப்பது உனக்கு தெரியுமா? அகரன் கேட்க, என் அம்மா, சின்னண்ணனை தவிர அப்பா, டாக்டர் அங்கிளுக்கும் தெரியும். அப்புறம் விசயம் உனக்கு தெரியும்ல்ல வேறு யாருக்காவது தெரிஞ்சது பார்த்துக்கோ? என்று மிரட்டுவது போல் மெல்லினா பேசினாள்.
காதலிக்கிறார்ல்ல? வெளிய தெரிந்தால் என்ன உங்களுக்கு அவமானம் ஆகி விடுமோ?
அவமானமா? அண்ணா பேட்டியையும் அதற்கு வந்த கமெண்டையும் பார்த்தாயா? நாங்க ரசிக்காக தான் எதையும் காட்டிக்காமல் இருக்கோம். அண்ணா காதல் கூட எங்களுக்கு தெரியும் என்று அவன் முன் காட்டவில்லை.
உங்க வீட்ல எப்படி ரசியை ஏத்துப்பாங்க? அவளுக்கு திருமணம் முடிந்தது. அவள் நிறத்தை வைத்து பாஸ்ஸையும் ஆட்கள் கேலி பண்ணுவாங்க. மத்தவங்க என்ன பேசுவாங்க? அகரன் கேட்க,
என்னோட அண்ணா முதல் மனைவியுடன் கஷ்டப்படும் போது மத்தவங்க என்ன செய்தாங்க? யாருக்கும் அவன் வாழ்க்கையில் பட்ட கஷ்டமும் அவமானமும் தெரியுமா? இப்ப கூட என்னோட அண்ணியை கஷ்டப்படுத்தியதா தான் எல்லாரும் பேசுனாங்க.
அப்புறம் எனக்கும் ரசியை பார்த்தவுடன் பிடிக்காமல் தான் இருந்தது. ஆனால் இப்ப அப்படி இல்லை. அவளுடன் பழகினால் அவளை பிடிக்காத அனைவருக்கும் பிடித்து விடும். அவ்வளவு நல்லவள். யார் என்ன சொன்னாலும் நாங்க பார்த்துப்போம். நீ அதை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று மெல்லினா சொல்ல, அகரன் சிரித்தான்.
ஏய், வாய மூடு மிருகம் ஏதும் வந்திடாமல் என்று அவள் சொல்ல, மிருகமா இங்கே பூச்சிகள் தான் அதிகம் இருக்கும். மிருகங்கள் அதிகம் இருக்காது. என்னிடமே ருச்சியை பத்தி சொல்றியா? அவள் வலிகள் உன் அண்ணாவால் அதிகமாகாமல் இருந்தால் நல்லது தான்.
“ஓ..அப்ப நீ ரசி அருகே இனி வரமாட்டேல்ல” என்று மெல்லினா கேட்டாள். இல்லை அவளுக்கு என்னை பிடிக்கலை என்றான் கண்ணீருடன்.
பிடிக்காமலா உன்னுடன் பேசுவா? அவள் உன்னை தோழனாக பார்க்கிறாள். பிடிக்காமல் இல்லை. தோழனை கல்யாணம் பண்ணிக்க முடியாதே? என்று மெல்லினா சொல்ல, ம்ம். அதுவும் சரிதான் என்று அவன் சீட்டில் சாய்ந்து படுத்துக் கொண்டான் அகரன்.
நடுஇரவில் விழித்த ஆதிரேயன் தன் மார்பில் தூங்கும் ரசிகாவை மேலும் அணைக்க, அவள் உடல் காய்ச்சலால் கொதித்து இருந்தது. அந்த குளிரிலும் அவளை மெதுவாக நகர்த்தி, அவன் அணிந்திருந்த கோர்ட்டையும் சட்டையையும் கழற்றி விட்டு அவளை பார்த்தான். அவள் கூந்தலும்,புடவையும் ஈரமாக இருந்தது. அவன் தயக்கத்துடன் கண்ணை மூடிக் கொண்டு அவள் புடவையை அவிழ்த்து அவனது சட்டையை மட்டும் போட்டு விட்டான். அச்சட்டை ரசிகாவின் முழங்கால் வரை இருந்தது. பின் டென்ட்டின் உள்ளே கயிற்றை கட்டி புடவையை காயப் போட்டு மீண்டும் அவளிடம் வந்து லேசாக காய்ந்த தன் கோர்ட்டை எடுத்து அவள் தலையை துவட்டினான். அவள் காய்ச்சலில் தூங்கிக் கொண்டிருந்ததால் ஏதும் அவளுக்கு தெரியவில்லை. பின் கோர்ட்டையும் காயப் போட்டு அவளை நெருங்க, அவள் கண்ணீர் அவனை தடுத்தது. முன் போல் அவன் மார்பின் மீது அவளை போட்டு அவன் படுத்துக் கொண்டான். ஆனால் அந்த குளிரில் வெற்று மார்புடன் படுத்திருந்தான். அவள் சூட்டை உணர்ந்து அவளை இறுகி அணைத்து கொண்டே தூங்கினான்.
காலையில் இருவரையும் இந்த கோலத்தில் பார்த்து திகைத்து இருந்தனர் தமிழரசன், பிரபாகரன், அகரன், மெல்லினா. இப்பொழுது ரசிகா இடையை சுற்றி இருந்தது ஆதியின் கோர்ட்.
ரசிகா அருகே செல்ல இருந்த அகரனை நிறுத்திய மெல்லினா, நீ இரு ரசியை நான் பார்க்கிறேன் என்று இருவரிடமும் சென்று ரசிகாவை நகர்த்தினாள். அவள் முணங்களுடன் படுக்க, அனைவரும் பதறினான்.
அங்கிள், ரசிக்கு ரொம்ப ஜூரம் இருக்கு என்று ஆதியை அண்ணா,..அண்ணா,.. என்று சத்தமிட்ட அவன் கன்னத்தை தொட்டாள் மெல்லினா.
“அப்பா, அண்ணாவுக்கும் காய்ச்சலா இருக்கு” என்று மெல்லினா அழுதாள்.
எல்லாரும் அவர்களிடம் வந்தனர்.
என்ன? இவ்வளவு காய்ச்சலா இருக்கு? என்ற தமிழரசன், உடனே ஹாஸ்பிட்டலில் சேர்க்கணும் என்றார்.
ஹாஸ்பிட்டல்லா? அங்கிள் ரசியை எப்படி இப்படியேவா அழைத்து செல்வது? இப்ப மாற்ற கூட ஆடை இல்லை. அதான் அவளோட புடவை இருக்குல்ல பிரபாகரன் கேட்க, அது ஜில்லுன்னு இருக்கு. அண்ணா, பேண்ட்டு கூட காயாமல் தான் இருக்கு.
அங்கிள், அண்ணாவையும் ரசியையும் நாங்க தங்கிய நம் வீட்டிற்கு அழைச்சிட்டு போவோம். பக்கத்து ஹாஸ்பிட்டலில் இருந்து நர்ஸ் யாராவது பார்த்துக்க அப்பாயிண்ட் பண்ண முடியுமா? அவள் கேட்க, நர்ஸ் வேண்டாம்மா. முதல்ல இருவரின் உடல்நிலையும் எப்படி இருக்குன்னு பார்க்கணும்? நீ சொன்னது போல் இருவரும் இந்த நிலையில் அலைய வேண்டாம். இங்கிருக்கும் வீட்டிலே இருக்கட்டும் என்று தன் பேத்தி லிதுவை தோளில் தட்டிக் கொண்டே சொன்னார்.
அகரன் காலை இழுத்துக் கொண்டு வந்தான். மெல்லிம்மா “பாப்பாவை பிடி” என்று அகரனுடன் சேர்ந்து இருவரையும் காரில் ஏற்றினர். அகரன் கண்ணீருடன் ரசிகாவையும் ஆதியையும் பார்த்தான்.
ஒரு பக்கம் காதலித்த பொண்ணு, மறுபக்கம் தனக்கு எப்போதும் உதவும் அவனுடைய அன்புக்குரிய பாஸ்.
“சின்னப்பிள்ளை மாதிரி அழாதடா” என்ற பிரபாகரன், தமிழ் “சீக்கிரம் போ” என்று வீட்டிற்கு விரைந்தனர். வந்தவுடன் இருவரையும் பார்க்க, ரசிகா விழித்து தன் ஆடையை பார்த்து அழுதாள்.
“ரசி ஒன்றுமில்லை” என்று மெல்லினா சொல்ல, இரவு குளிரில் நடந்தது நினைவிற்கு வந்தது. அவள் எழ, காய்ச்சலால் உடல் சோர்வுடன் மெல்லினாவை பார்த்துக் கொண்டே மீண்டும் படுத்தாள். அவளை சுற்றி இருந்தவர்களை பார்த்தாள். அங்கே அகரனும் ஆதியும் இல்லை.
அப்பா..என்று தமிழரசனை அழைத்தாள்
ஒன்றுமில்லைம்மா. காய்ச்சல் தான் என்றார்.
அப்பா, அவங்கள எங்க? என்று ரசிகா மெதுவாக கேட்டாள்.
அகரன் அங்கே வந்தான். அவனை பார்த்து விட்டு ஆதி வருகிறானா? என்று அவள் வாயிலை நோக்கினாள். அதை புரிந்து கொண்ட மெல்லினா, “அண்ணாவுக்கும் காய்ச்சலா இருக்கு” என்றாள்.
காய்ச்சலா? என்னால தானே? நான் தான் சாருடன் சென்றேன். என்னால் தான் அவருக்கும் கஷ்டம் என்று மெதுவாக சொல்லிக் கொண்டே அழுதாள்.
இல்ல ருச்சி. பாஸூடன் நீயும் போனதால் தான் அவருக்கு காய்ச்சலோட நின்றது. அவர் மட்டும் தனியே போயிருந்தால் இப்பொழுது இருந்திருக்க மாட்டார். நீ அருகே இருந்ததால் நம்மை விரட்டியவர்கள் சென்று விட்டனர்.
என்னை பார்த்தா? ஏன் என்னை பார்த்து பயந்துட்டாங்கன்னு சொல்றீயாடா? என்று ரசிகா மேலும் அழுதாள்.
இல்ல ருச்சி. அவங்க டார்கெட் சார் தான். உனக்கு ஏதாவது ஆகி பிரச்சனையானால்?
என்னால் சார் தப்பித்தாரா? என்று ஏதும் பேச முடியாமல் மீண்டும் கண்ணை மூடினாள். அகரன் சொன்ன கட்டுக்கதையை நம்பி விட்டால் என அனைவரும் நினைக்க அது தான் உண்மை என இவர்களுக்கு எப்போது தெரிய வருமோ?
அன்று முழுவதும் தமிழரசன் இருவரையும் பார்த்துக் கொண்டார். இருவரையும் ஒரே அறையில் மாற்றி அவரும் அகரனும் அங்கே தங்க, பிரபாகரன் ஆதி வேலையையும் சேர்த்து கவனிக்க சென்று விட்டார். அவர் மனதினுள் “யார் இவர்கள் சென்ற காரை விரட்டி இருப்பார்கள்” என சிந்தித்துக் கொண்டிருந்தார்.
மறுநாள் காலை ஆதியும் ரசிகாவும் மட்டும் அறையில் இருந்தனர். இருவரும் ஒரே நேரத்தில் விழித்து, உனக்கு ஒன்றுமில்லையே? என்று ஆதி ரசிகாவிடம் வந்தான். அவளும் அவனை பார்த்து, நீங்க ஓ.கே தான சார்? என்று கேட்டாள்.
நல்லா விசாரிக்கிறீங்களே? என்று மெல்லினா கையில் கஞ்சியுடன் வந்தாள். அவளை பார்த்து, வீட்டையும் பார்த்து, யார் இதை செஞ்சாங்க? நீயா? என ஆதியும் ரசிகாவும் கேட்டுக் கொண்டே அவர்கள் பார்த்துக் கொண்டு அவளை பார்த்தனர்.
நோ, வொரி. நானில்லை. டாக்டர் அங்கிள் தான். தைரியமா குடிங்க என்று ரசிகா, ஆதி இருவருக்கும் ஒவ்வொரு பவுலை வைத்து விட்டு நகர்ந்தாள். ஆதி பாவமாக சென்று படுத்துக் கொண்டான்.
“சாரி சார்” என்றாள் ரசிகா.
எதுக்கு? ஆதி கேட்க, அன்று இரவு அந்த காட்டு குளிரில் என்று கண்ணீருடன் சாரி என்றாள்.
நடந்தது கூட உனக்கு நினைவிருக்கா? என்று ஆதி ரசிகா பக்கம் திரும்பி அவளை பார்த்துக் கொண்டே கேட்டான்.
ம்ம்..என்றாள்.
அது அந்த குளிரால் நடந்தது. அதனால் என்ன?
“நீங்க எந்த பொறுப்பும் எடுத்துக்க வேண்டாம்” என்றாள்.
ரசி, என்ன சொல்ற? நான் எதுக்கு பொறுப்பு எடுக்க வேண்டாம்?
சார், அன்று நாம் ஒன்றாக என்று அவள் சொல்ல, அன்று ஏதும் நடக்கலை ரசி. உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை தானே? ஆதி கேட்டான்.
அய்யோ, அப்படியெல்லாம் இல்லை சார். குளிரில் உயிருக்காக?
நாம சேர்ந்து கட்டிக் கொண்டு, முத்தம் கொடுத்தோம் தவிர வேரெதுவும் நடக்கலை என்றான்.
முத்தம் என்று அவன் சொன்னதும் ரசிகா கை தானாக அவள் இதழை தொட்டு பார்த்தது. ஆதி புன்னகையுடன் திரும்பிக் கொண்டான்.
ரசி, அப்பா காய்ச்சல் போயிருச்சா? என்று லிதுவும் நிதுவும் வந்தனர். இருவரும் எழ, அமருங்கள். நாங்கள் ஊட்டி விடுகிறோம் என்று அகரனும் மெல்லினாவும் வந்தனர்.
“இல்ல, நானே சாப்பிட்டுப்பேன்” என்று ரசிகா சொல்ல, “ரசி பிடிவாதம் பண்ணாத” என்று அவள் சொல்லவது போல நிது சொல்ல அனைவரும் சிரித்துக் கொண்டே ஊட்டினர். மறுநாள் ஒரளவே காய்ச்சல் சரியாக இருக்கவும் அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.
அகரன் அந்த வாரம் முழுவதும் அவனாகவே ஆதியின் பேக்டரி, ஹோட்டல், ரெசார்ட்டிற்கு சென்று வந்தான்.
ஆதிரேயன் வீட்டில் ஓய்வில் இருந்தான். ரசிகா ஒரு நாள் மட்டும் அவளறையில் ஓய்வெடுத்து விட்டு அவள் வேலையை கவனிக்கலானாள்.
பிரபாகரனுக்கு ரசிகா சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டே, “சார் பாப்பாக்களை பள்ளியில் சேர்க்கலாமே?” எனக் கேட்டாள்.
“பிள்ளைங்க பிரச்சனையை இழுத்து வச்சிடுறாங்கம்மா” என்றார் அவர். ஆதிரேயனும் மெல்லினாவும் அவளை பார்த்தனர். லிது, நிது என ரசிகா அழைக்க, இருவரும் வந்து நின்றனர்.
லிது, நாம ஸ்கூலுக்கு போகலாமா? ரசிகா கேட்க, ஊகூம் என்று நிது அழுது கொண்டே ஓடினாள். லிதுவை தூக்கிக் கொண்டு நிது பின்னே ரசிகா ஓடினாள். எல்லாரும் அவர்களை தொடர்ந்து சென்றனர்.
“நிது, இங்க வா” என்று ரசிகா அழைத்தாள்.
போ, நான் ஸ்கூலுக்கு வர மாட்டேன்.
எதுக்கு ஸ்கூலுக்கு வர மாட்டீங்க? ஸ்கூலுக்கு போனா நிறைய ப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. விளையாடலாம். நிறைய தெரிஞ்சுக்கலாம் ரசிகா சொன்னாள்.
லிதுவும் நிது அருகே சென்று, “சரண் எங்களை கேலி செய்வான். நாங்க வர மாட்டோம்” என்றாள்.
கேலி செய்வதற்காகவா ஸ்கூலுக்கு போக மாட்டேங்கிறீங்க? ரசிகா கேட்க, லிது என்று ஆதி அவளிடம் வந்து, நீங்க அவனை அடிக்கலையா? என்று கேட்டான்.
நான் தான் அடித்தேன் என்ற லிது, அவன் எங்களை பார்த்து செட் தோசைன்னு சொன்னான். அவனாகவே அவனோட கலரிங் கிரையான்ஸ எங்களது பையில் வைத்து, நாங்க திருடினோம்ன்னு பழி போட்டான்.
அப்பா, நீங்களும் அவன் சொன்னதை தானே நம்பி எங்களை திட்டுனீங்க? என்று லிது அழுதாள்.
அப்பா, அவனை லிது அடிக்கலை. பேசிட்டு தான் இருந்தோம். அவன் என்னை அடிக்க வந்த போது அவனை தடுக்கும் போது அவன் மேல் கை பட்டிருச்சு என்று நிது சொல்ல, ஆதி லிதுவை பார்த்தான்.
ஆமா, இப்ப நீ சொன்னால் அப்பா என்ன நம்பவா போறாங்க? என்ற லிது, ரசிகாவை பார்த்தாள். அவள் மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆதி லிது கையை பிடிக்க, லிது அவன் கையை உதறி விட்டு “ரசி, நாங்க ஸ்கூலுக்கு போக மாட்டோம்” என்று அவளிடம் வந்து அழுதாள்.
ஆதி இருவரையும் பார்த்தான். ரசி அவளை தூக்கி, மத்தவங்களுக்காக நீங்க எதுக்கு உங்க படிப்பை நிறுத்தணும்? அப்பாவிடம் அன்றே சொல்லி இருக்கலாமே? எனக் கேட்டாள்.
“அப்பா, எங்களை பேசவே விடலை. மிஸ் சொன்னதும் எங்களை திட்ட ஆரம்பிச்சுட்டாங்க” என்று லிது ஆதியை பார்த்தாள். அவன் நிதுவை தூக்க, “போப்பா, உன்னிடம் நான் வர மாட்டேன்” என்று அவன் கையை தட்டி விட்டாள்.
அன்று இருந்த வொர்க் டென்சன்ல்ல. நம்ம பள்ளியில் என் பிள்ளைகளையே குறை சொல்றாங்கன்னு தான் கோபம். சாரிடா என்று லிதுவிடம் வந்தான்.
இல்லம்மா..என்று அவன் சொல்ல, எங்களுக்கு அப்பா வேண்டாம். அம்மா தான் வேணும் என்று நிது அழுதாள். அமைதியாக பேசிக் கொண்டிருந்த ஆதிக்கு தன் பிள்ளைகள் வாயிலிருந்து அம்மா என்றதும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்த டேபிளில் இருந்த மருந்துகளை தள்ளி விட்டு உடைக்க, பிள்ளைகள் மேலும் அழுதனர்.
இனி மேல், “உங்க வாயிலிருந்து அம்மான்னு வந்தது. என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று கத்தி விட்டு கோபமாக அறைக்கு சென்றான் ஆதிரேயன்.
அவர்கள் இருந்தது சவிதாவின் அறையில். சவிதா கண்ணிலிருந்து கண்ணீர் வடிய, அம்மா என்று மெல்லினா அவரிடம் ஓடினாள். பிரபாகரனும் தன் மனைவியிடம் சென்றார்.
“சார், அவங்களிடம் பேசுங்க” என்ற ரசிகா லிது, நிதுவை கையில் பிடித்துக் கொண்டு ஆதிரேயன் அறைக்கு சென்றாள்.
ஆதிரேயன் கோபமாக சுவற்றில் கையை குத்திக் கொண்டிருந்தான். கையிலிருந்து இரத்தம் வந்தது. பிள்ளைகளை அறைக்குள் இழுத்து சென்று அவர்கள் கையை விட்டு, சார் என்று ஆதியிடம் ஓடி வந்தாள் ரசிகா.
என்ன சார் செய்றீங்க? என்று அவனை அமர வைத்து, அவளது துப்பட்டாவை அவன் கையில் கண்ணீருடன் கட்டினாள். ஆதி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கண்ணீரில் அவன் கோபம் குறைந்து யோசனை மேலிட்டது.
ஆதி அவளையே பார்ப்பதை கவனித்த ரசிகாவிற்கு அப்பொழுது தன் கண்ணீர் வெளிப்பட்டதை உணர்ந்தாள். வேகமாக அவனிடமிருந்து ரசிகா நகர்ந்தாள்.
பிள்ளைகள் ஆதியை நோக்கி ஓடி வந்தனர். அப்பா..சாரி, இனி மேல் அம்மா பத்தி பேச மாட்டோம் என்று லிது கூற, நிது அவன் கையை ஊதி விட்டாள். ரசிகா ஒதுங்கி நின்றாள்.
எனக்கு எதுக்கு திடீர்ன்னு கண்ணீர்? ஹா..பாஸ்ஸிற்கு அடிபட்டதால் தான் கஷ்டமா இருந்திருக்கு. வேற ஒன்றுமில்லை என்று சிந்தனையுடன் அவளுக்கு அவளாகவே உதட்டை அசைத்துக் கொண்டிருந்தாள் ரசிகா.
மூவரும் அவளை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து, “சார் நீங்க பசங்களோட பேசுங்க” என்று அவள் நகர, அவள் முன் வந்த ஆதிரேயன், “எனக்கு எப்படி பேசணுன்னு தெரியல” என்றான். லிதுவும் நிதுவும் கையை கட்டிக் கொண்டு ஆதிரேயனை முறைத்துக் கொண்டிருந்தனர்.
ரசிகா அவனை பார்த்து, “பசங்க முன்னாடி இப்படி வெளிப்படையாவா சொல்லுவீங்க?” என கேட்டான். அவன் பாவம் போல் முகத்தை வைத்தான்.
“முதல்ல உங்க கைக்கு ட்ரீட் செய்யணும்” என்று அவன் அறையை பார்த்தாள். உள்ளிருந்த அறையில் பெயிண்டிங்க போர்ட்டை துணியால் மூடி வைத்திருந்தான்.
சார், நீங்க பெயிண்ட் பண்ணுவீங்களா? என்று ஆர்வமாக அவனறை பக்கம் ரசிகா செல்ல, ஆதி சட்டென விழித்து, ”ரசி நில்லு அங்க நீ போகக்கூடாது” என்றான்.
ஆமால்ல. பாஸ் அறைக்கு வந்ததே தவறு. அவர் பொருளை வேற எடுக்கப் போகிறேன் என்று மனதில் எண்ணிக் கொண்டே அவனை பார்த்தாள். அவன் மருந்தை எடுக்க, இருங்க சார். நான் போட்டு விடுகிறேன் என்று அவள் துப்பட்டாவை அவன் கையிலிருந்து எடுத்து ஓரமாக வைத்து விட்டு, அவனுக்கு மருந்து போட்டு கட்டிட்டாள்.
லிது, நிது அப்பா உங்க பிரச்சனையை சரி செஞ்சுட்டா நீங்க பள்ளிக்கு போவீங்கல்ல? ரசிகா கேட்க, இருவரும் அமைதியாக நின்றனர்.
என்னது பிரச்சனையை சரி செய்வதா? ஆதி கேட்க, ம்ம்..என்று ரசிகா தலையசைத்து விட்டு, ஈவ்னிங் உங்களுக்கு வொர்க் இருக்குமா சார்? என்று கேட்டாள்.
இல்லை.
தயாரா இருங்க சார். நாம வெளிய போகணும்.
வெளியவா? எங்க? அவன் கேட்க, அவள் போனை எடுத்து அதில் ” சரணையும் அவன் பெற்றோரையும் சந்திக்கணும்” என்று எழுதி காட்டினாள்.
இன்றா?
ம்ம்..என்று இருவரையும் பார்த்து மண்டியிட்டு அமர்ந்த ரசிகா, சரண் பிரச்சனை செய்யலைன்னா பள்ளிக்கு போகலாம்ல்ல? என்று கேட்க, இருவரும் அவளை அணைத்து “சரி” என்றனர்.
ஆமா சார் என்று அவள் சொல்ல, ஆதி பயத்துடன் லிதுவிடம் வர, அவளே தூக்க சொல்லி கையை தூக்கினாள். நிதுவை ரசிகா தூக்க இருவரும் கீழே அவன் அம்மா அறைக்கு பிள்ளைகளுடன் வந்து நின்றனர்.
சார், என்று ஆதி தோளை தட்டினாள் ரசிகா. அண்ணா அம்மா பேசுறாங்க. ஆனால் எழ முடியல்லை என்று மெல்லினா ஓடி வந்து கண்ணீருடன் ஆதியை அணைத்தாள். பிள்ளைகள் கீழே இறங்கி, பாட்டி என்று அவர்களிடம் ஓடினர்.
சவிதா ஆதியையும் ரசிகாவையும் பார்க்க, அவள் புன்னகையுடன் விலகி அவரிடம் வந்தாள். சவிதா விழித்து பேசுவதை ஆதியால் நம்பவே முடியவில்லை. அவன் அப்படியே நின்றான்.
அம்மா, நான் உங்களை பார்த்த முதல் நாளில் சொன்னது இன்று நடந்து விட்டது. ஆனால் என்னால நடக்கலை. சார் தான் காரணம் என்று ஆதியை பார்த்து ரசிகா புன்னகைத்தாள்.
“ரசி, அவன் மட்டுமல்ல நீயும் தான்” என்று சவிதா சொல்ல, அம்மா நானில்லை. சாரால் தான் என்று அவள் சொல்ல, அவளது உள்ளங்கையில் முத்தமிட்ட சவிதா, ரொம்ப நன்றிம்மா என்றார்.
அய்யோ அம்மா, நானில்லை..
உன்னால தான என்னோட குடும்பமே என்னிடம் பேசுனாங்க. நீயும் பேசுனேல்ல. உன்னை பத்தி தான் எல்லாருமே சொன்னாங்க. அது சரி தான் என்று சவிதா அவள் கையை பிடித்துக் கொண்டே தன் மகனாக ஏற்றுக் கொண்ட ஆதிரேயனை பார்த்து அருகே வரச் சொல்லி கண்ணசைத்தார்.
ஆதி கண்ணீருடன் அவரிடம் வந்து, சவிதா கையை கண்ணில் வைத்துக் கொண்டு அழுதான். அவர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“ரொம்ப நன்றாகவும் சரியாகவும் இருக்குப்பா” என்று அவர் கூற, அனைவரும் புரியாமல் விழித்தனர். ஆதியும் அவரை பார்க்க, அவர் கண்ணை ரசிகாவிடம் காட்டினார்.
ஆதி ஏற்கனவே அவன் அம்மாவிடம் ரசிகா பற்றி சொல்லி, அவளை காதலிக்கிறேன்னு சொல்லி இருந்திருக்கான். அவர் அவன் காதலை ஏற்றுக் கொண்டு சொன்ன வார்த்தைகள் தான், நன்று. சரி என்பது என்று எனக்கு புரிந்தது.
ரசிகா புரியாமல் இருவரையும் பார்த்தாள்.
நீ என்னை அம்மான்னு அழைக்க கூடாது என்றார். அவன் வருத்தமாக, ஆமா ஆமா..அவங்களுக்கு பையனும் இருக்கான். பொண்ணும் இருக்கேன். ஆன்ட்டின்னு கூப்பிடு ரசி என்றாள் மெல்லினா.
நானா? உங்களை எப்படி?
ஏம்மா, கூப்பிட மாட்டியா? சவிதா வருத்தமாக கேட்க, இல்ல ஆன்ட்டி. இனி உங்களை ஆன்ட்டின்னு கூப்பிடுறேன் என்று அவள் சொல்ல, பிரபாகரன் தன் மனைவியை பார்த்தார்.
உங்களுக்கு காய்ச்சல் எப்படிடா இருக்கு? என்று சவிதா ஆதியிடம் கேட்டார். “இப்ப குணமாகிடுச்சும்மா” என்று ரசிகாவை பார்த்தான். அவள் விழித்துக் கொண்டு எல்லாரையும் பார்த்தாள்.