அழகான காலை வேலை குயில் கூவும் சத்தம் இளந்தென்றல் வீச தன் அறையின் திரைச்சீலையை திறந்து பார்த்தால் நம் கதையின் நாயகி சாய்பிரியா…
வழக்கத்தை விட சூரியன் பிரகாஷமாய் இருப்பதாய் தோன்றியது ப்ரியாவுக்கு அதற்கான காரணம் தான் புரியவில்லை ஒரு வேலை ‘அதுவும் ஒரு காரணமோ ‘ என்று மனதில் நினைத்து கொண்டால் (என்னவா இருக்கும் ????) .
ஒரு பெருமூச்சை விட்டு விட்டு தன் அறையில் உள்ள கட்டிலை பார்த்தால் அதில் தன் கணவனும் 5 வயது குழந்தையும் தூங்கி கொண்டிருந்தனர்.
‘அழகான குழந்தைஅன்பான கணவன் ஆனால் எல்லாம் விதி ‘ என்று தன் மனதில் நினைத்து கொண்டு காலை கடன்களை தொடங்குவதற்கு அறையை விட்டு வெளியேறினால் பிரியா .
மணி காலை 5.30 பிரியா தன் அறையிலிருந்து ஹாலை தாண்டி வாசலுக்கு வந்தால்.இன்னும் சரியாக விடியாத காலை பொழுது மார்கழி மாதம் என்பதால் குளிரும் கூடியிருக்க அந்த காற்றை இழுத்து வெளியிட்டள்.
அதன் பின் வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் ஒரு பூசணி பூவை சொருகினாள்.பின் அதை கோலத்தின் நடுவில் வைப்பதற்கும் அந்த தெருவில் இருக்கும் கோவிலில் பஜனை சத்தம் கேட்பதற்கும் சரியாக இருந்தது.