நேரம் காலை 9 மணி
S.M. Hr. Sec. School ,பள்ளி வளாகத்தினுள் ப்ரியாவின் கார் நுழைவதை பார்த்த வாட்ச்மேன் அவளுக்கு புன்னகை தவழும் முகத்துடன் சல்யூட் அடித்தார் .
அவரின் அருகில் வண்டியை நிறுத்திய பிரியா அவரின் வணக்கத்தை ஏற்று கொண்டதை போல் புன்னகையுடன் தலையசைத்தாள்.
பின் அவரிடம் , குழந்தை வந்திட்டாளா ரமேஷண்ணா.
ரமேஷ் , ஓஹ் அப்போவே வந்திருச்சு கார்டன்ல விளையாடிட்டு இருக்கும்மா.
பிரியா , சரிண்ணா அப்புறம் இந்தாங்க என்னோட ரூம் சாவி ரூமை ஓபன் பண்ணி என்னோட டேபிள்ல மீட்டிங் சர்குலர் இருக்கு அதை நோட்டீஸ் போர்டுல போட்டுருங்க நான் பாப்பாவை பார்த்திட்டு வந்திரேன் என்றவள் காரை கிளப்பி சென்று பார்க்கிங்கில் விட்டுவிட்டு கார்டெனுக்கு சென்றாள் .
அங்கு குழந்தை கார்த்திகேயனுடன் விளையாடி கொண்டிருந்தாள்.
கார்த்திகேயன் M.P.Ed முடித்துவிட்டு S.M. பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணிபுரிகிறான். ப்ரியாவும் கார்த்திகேயனும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் பின் வேறு கல்லூரியில் பயின்றதால் இருவரும் வேறு வேறு வழியில் சென்றனர்.
அதன்பின் இருவரும் சந்தித்தது S.M. பள்ளியின் இன்டெர்வியூவில் தான். இன்டெர்வியூக்காக தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைத்தவனுக்கு அதிர்ச்சியாக தன் பள்ளி தோழி தலைமை ஆசிரியர் இருக்கையில் இருப்பதை கண்டு வியந்தான்.
ஆனால் ப்ரியாவோ எதையும் கண்டுகொள்ளாமல் இன்டெர்வியூவை தொடர்ந்தாள்.கார்த்திகேயனும் நல்லவிதமாக இன்டெர்வியூவை முடித்துக்கொண்டு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டெரை பெற்றுக்கொண்டான்.
அதன்பின்னே பிரியா அவனிடம் இயல்பாகபேசினால்.ஏற்கனவே அவளின் குணத்தை பற்றி அறிந்திருந்ததாள் கார்த்திக்கும் சகஜமாக பேசினான். பின் இருவரின் நட்பும் மேலும் வளர்ந்தது.
( சரி சரி வாங்க வாங்க கதைக்குள்ள போகலாம்……????)
பிரியா , பாரதி என்றழைத்தால் தன் மகளை.
அம்மாவின் குரலை கேட்டு வேகமாக ஓடிவந்தாள் பாரதி.
பிரியா , மெதுவா வாங்க குட்டி
பாரதி , அம்மா அம்மா கார்த்திக் அங்கிள் எனக்கு பாயாசம் கொடுத்தாங்க சூப்பரா இருந்துச்சு இந்தாங்க நீங்களும் சாப்பிடுங்க என்று கையில் இருந்த பாயாசத்தை ஊட்டி விட்டால் அன்பு மகள். அதை சாப்பிட்ட பிரியா , என்ன விசேஷம் கார்த்திக் பாயாசம் எல்லாம் தூள் பறக்குது.
கார்த்திக் , ஒரு விசேஷமும் இல்ல இனிப்பா சாப்பிடணும் போல இருக்குனு நைட் புனிதாகிட்ட சொன்னேன் காலையில பாயாசம் செய்து கொடுத்திட்டாள் என்றான் லேசாக சிரித்தவாறு.
பிரியா , சரி சரி வழியாத கேட்டதை செய்து தர பொண்டாட்டி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் என்றவள் , ஆமா நிஷா குட்டி எங்க ?? என்று வினவினாள்.
கார்த்திக் , அதை ஏன் கேக்குற ?????
பிரியா , சரி கேக்கல விடு என்றாள் நமட்டு சிரிப்புடன்.
[the_ad id=”6605″]
[the_ad id=”6605″]கார்த்திக் , மொக்க போடாத சொல்றத கேளு
பிரியா , சரிங்க ஆஃபீஸ்ர் என்றவள் தன் உதட்டின்மீது விரல் வைத்து நின்றாள்.
கார்த்திக் , அது அந்த பயம் இருக்கனும்….அவங்க அம்மா பாயாசம் செய்து கொடுத்ததும் அவங்க அம்மா முந்தானைய பிடிச்சிட்டு சுத்திட்டே இருந்தா நான் கூப்பிட்டு பார்த்தேன் வரலை சரின்னு அம்மாக்கூடவே வரட்டும்னு வந்திட்டேன் என்றான்.
பிரியா , சரி சரி அவங்க வரட்டும்…..இப்போ மெயின் கேட் போகலாம் ஸ்டூடெண்ட்ஸ் வர ஆரம்பிச்சிட்டாங்க போகலாம் என்றாள்.
கார்த்திக் , ஓகே ஓகே…..
பின் பாரதி குட்டியை பியானோ வகுப்பில் விட்டுவிட்டு மெயின் வாசலுக்கு சென்றனர்.அங்கு அவர்கள் செல்லவும் புனிதாவும் நிஷாக்குட்டியும் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
புனிதா , குட் மார்னிங் மேம்…..
நிஷாகுட்டி , குட் மார்னிங் மேம்….
பிரியா , குட் மார்னிங் என்று இருவருக்கும் பொதுவாக சொன்னவள் பின் நிஷாகுட்டியை பார்த்து , பியானோ கிளாஸ்க்கு டைம் ஆச்சுல்ல சீக்கிரம் போங்க என்றாள்.
நிஷாகுட்டி , ஓகே மேம் என்றவள் அங்கு இருந்து வேகமாக ஓடினாள்.
அவள் போவதை பார்த்த
புனிதா , ஓகே மேம் நானும் கிளாஸ்க்கு போறேன் 10th கு மேக்ஸ் கிளாஸ் இருக்கு.பிரியா , ஓகே யூ கேர்ரி ஆன் என்றாள் .
அதன்பின் ப்ரியாவும் கார்த்திக்கும் மாணவர்களின் ID card,uniform,shoe check செய்து அனுப்பினர்.
கூட்டுப்பிராத்தனைகாண மணி அடிக்கவும் மாணவர்கள் அனைவரும் தங்கள் வகுப்புகளில் இருந்து வரிசையாக வெளியில் வர ஆரம்பித்தனர்.
அனைவரும் ஒன்றாக கூடியதும் தமிழ் தாய் வாழ்த்து ஆரம்பமானது . அது முடிந்த பின் அன்று பிறந்தநாள் கொண்டாடும் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் அவர்களுக்கான பரிசு பொருள் வழங்கப்பட்டது.
பின்னர் ஒரு மாணவன் முன் வந்து திருக்குறளும் அதற்கான பொருளையும் கூறினான். அதன்பின் ஒரு மாணவி முன் வந்து ஆங்கில பழமொழியும் அதற்கான பொருளையும் கூறினாள்.
அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் அந்த வாரம் முழுவதும் நடந்த போட்டிகள் பற்றிய அறிவிப்பும் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
கடைசியாக தலைமை ஆசிரியருக்கான உரையை தருவதற்காக பிரியா மைக் முன் நின்றாள்.
பிரியா , ஹாய் பிரெண்ட்ஸ் ( என்னது பிரெண்டா ????? ஐயோ ஐயோ இந்தமாதிரி எனக்கு ஒரு HM கிடைக்காம போயிட்டாங்களே………கிடைச்சிருந்தா ?????….ஒன்னும் பண்ணிருக்கமாட்ட…..(என்னோட mind voice )…..??போடி…..)
குட் மார்னிங் இந்த வாரம் எல்லாருக்கும் நல்லா போயிருக்கும்னு நினைக்கிற சோ நெஸ்ட் வீக் இதைவிட பெட்டெரா போகணும்னு எல்லாரும் முயற்சி பண்ணுவோம்.அப்புறம் இந்த வீக் Prize winners,participants எல்லாருக்கும் வாழ்த்துக்கள்…ஹ்ம்ம் one Important announcement students half yearly exam start ஆக போகுது so prepare panna start பண்ணுங்க அதுலயும் Best கொடுப்பீங்கனு நம்புற…..Apart from studies, half yearly holidays முடிந்ததும் pongal celebrations இருக்கு அதுக்கான student’s circular இன்றைக்கு unga class ku வந்திரும் class teachers அதை class notice boardla பின் பண்ணிருங்க மற்ற details staff meetingla discuss பண்ணலாம் then staff cirucular already notice boardla இருக்கு check பண்ணிக்கோங்க ….. ஓகே நௌ திருக்குறள் அண்ட் ப்ரொவெர்ப் சொன்ன மாணவர்களுக்கு ஒரு சின்ன பரிசு கொடுத்திரலாம் நன்றி என்று அத்துடன் தன் உரையை முடித்து கொண்டாள்.
பின் பரிசு வழங்கப்பட்டதும் தேசிய கீதம் முடிந்து மாணவர்கள் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர். அவர்களை ஒழுங்கு படுத்தி அனுப்பிய கார்த்திகேயன் kinderguarden Gate நோக்கி சென்றான்.
அப்பள்ளியில் kinderguarden மாணவர்களுக்கு 10.30 மணிக்கு தான் வகுப்புகள் ஆரம்பமாகும் என்பதால் அவர்களை பார்ப்பதற்குத்தான் கார்த்திக் அங்கு செல்கிறான்.
தன் அறைக்கு சென்ற ப்ரியாவை அவளுக்கான பணிகள் அவளை உள் வாங்கிக்கொண்டது.
(S.M.Hr Sec.School kindergarten to 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பயிலும் கல்விக்கூடமாகும். 6 gate கொண்ட கட்டிடம் அது.
Main gate – for Staffs and parents
Kindergarten gate – for kinterguarten students
Primary gate – for primary students
senior gate – for 6 to 8 std students
Super senior gate – for 9 to 12 std students
Vehicle gate – for staff and students vehicleகாலை நேரம் அனைவரும் மெயின் கேட் வழியாக மட்டுமே உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க படுகிறது. மாலை நேரம் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேட் வழியாக செல்லலாம் அதுவும் பெற்றோர்களுடன் செல்லும் மாணவர்களுக்கு தனியாக பாஸ் காண்பிக்க வேண்டும் இல்லையேல் செல்ல அனுமதி இல்லை.
Vehicle வைத்திருக்கும் மாணவர்கள் தங்களின் டோக்கனை கொடுத்துவிட்டு செல்லவேண்டும்..இது ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.ஆனால் kinderGuarten மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் மதியம் 1மணி வரை தான் பள்ளி வேலை நேரம் என்பதால் அவர்களுக்கு இந்த நிபந்தனைகள் கிடையாது.அதுமட்டும் இல்லாமல் அவர்களின் குடும்ப உறுப்பினர் மட்டுமே அழைத்து செல்ல முடியும் அதுக்கும் பாஸ் வேண்டும்.Van,auto எதற்கும் அனுமதி கிடையாது.இதற்கு ஒப்பு கொண்டால் மட்டுமே இப்பள்ளியில் பயில Seat கிடைக்கும்.
கொஞ்சம் கண்டிப்பு என்றாலும் பள்ளியின் பெயரும் , புகழும் , மாணவர்களின் நன்னடத்தையும் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் அதற்கு ஒப்பு கொள்கின்றனர் .)
பிரியா இங்கு வேளையில் மூழ்கி இருக்க அவளை கொள்வதற்கான வேலைகளும் அதிவேகமாக நடந்துகொண்டிருந்தது.
அவர் போனில் கொடுத்த அறிவுரைகளை பெற்றுக்கொண்ட அந்த கும்பல் ப்ரியாவுக்காக அந்த ஆளில்லாத சாலையில் காத்திருந்தது.
ப்ரியாவுக்கு என்ன ஆகும் அடுத்த update ல சொல்ற…….
தொடரும் …….