கருப்பசாமிக்கு பூஜை நடக்க தாத்தாவுக்கு அருள் வரும் என்று ஊர் மக்கள் எதிர் பார்க்க, தாத்தாவோ தன் மகன் வேதநாயகத்துக்கு அருள் வரும் என்று எதிர் பார்க்க ஆனால் நடந்தது……….
உறுமி முழங்க மணி சத்தங்கள் ஒலிக்க மேளதாளங்களின் ஓசைகளுக்கு நடுவில் ஹேய்யய்யய்யய் என்ற சத்தத்துடன் முன்னாடி ஆடிக்கொண்டிருந்த காமாட்சியம்மாளின் காலில் வந்து விழுந்தான் வீரசிம்மன்.
வீரசிம்மன்மீது அருள் ரொம்ப உக்கிரமாக வந்து ஆடிக்கொண்டிருந்தார். முதன் முதலில் அருள் வருவதாலோ 5 வருடத்திற்கு பின் கொடுக்கின்ற திருவிழா என்பதாலோ அருள் நிக்கவே இல்லை. உடம்பை குலுக்கி கையை நெட்டி முறித்து ஆடுவதுலே ஊர் மக்களுக்கு புரிந்து விட்டது வந்திருப்பது கருப்பசாமி என்று . ஆனால் அதனை அவரே கூறவேண்டும் அப்போதுதான் சாமியின் வீச்சரிவாளை அவரிடம் கொடுத்து சாமக்கொடையின் போது வேட்டைக்கு அனுப்ப முடியும். இல்லையேல் ஏதாவது அசம்பாவிதம் நேரக்கூடும் என்று அவ்வூர் மக்களால் நம்பப்படுகிறது.
ஆனால் அவருக்கு அருள் நிற்பதுக்குண்டான அறிகுறி எதுவும் தென்படவில்லை . நேரம் ஆக ஆக அதிகரித்ததே தவிர நிற்கவில்லை. ஒருவரும் வீரசிம்மனிடம் நெருங்க முடியவில்லை அவரும் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை .தாத்தாவிற்கு தான் ஏதோ தவறு செய்த உணர்வு ஏற்பட்டது.
யாரும் எதிர்பார்க்கா நேரம் தாத்தா வீரசிம்மனின் காலில் விழுந்தார்.
ஐயா கருப்பு என்னை மன்னிச்சிருய்யா பெரிய பாவத்தை பண்ணிட்டேன் உன் அருள் இல்லாத ஒருத்தன்கிட்ட உன்னோட பொக்கிஷத்தை ஒப்படைச்சிட்ட அதுக்காக என்னை மன்னிச்சிருய்யா என்னோட அண்ணன் மகனாயிருந்தாலும் வீரசிம்மன் எனக்கும் மகன்தான் அவனுக்கு எதுவும் வராமல் நீந்தாய்யா பாத்துக்கணும் என்றார் கண்ணில் நீருடன்.
அந்த வார்த்தைகளை கேட்ட கருப்பசாமியின் ஆக்ரோஷம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்தது. ஆனால் தாத்தா பேசிய வார்த்தைகள் மேளச்சத்தத்தில் யாருக்கும் கேட்காமல் போனது.
அதன் பின் பூசாரி வந்து வந்திருப்பது யாரு என்று கேட்க ‘கருப்புசாமி டா இந்த ஊரை காக்குறவன் டா‘ என்று வீரசிம்மன் கூற அப்போதுதான் தாத்தாவிற்கு மனம் தெளீந்தது மக்களுக்கும் அந்த வார்த்தையில் திர்ப்தி ஏற்பட்டது. பின்னர் சாமக்கொடைக்காக பூஜைகள் நடந்தது.
வீரசிம்மன் கையில் தீப்பந்தமும் வீச்சரிவாலும் கொடுக்கப்பட்டது கழுத்து நிறைய மலைகளோடு பெரியாச்சி விபூதி பூசி ஆசி வழங்க சாமி வேட்டைக்கு கிளம்பியது.மேளதாளங்களும் உறுமியும் விண்ணை பிளக்கும் அளவுக்கு சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது. சாமி வேட்டைக்கு சென்று வரும் வரை மேளச்சத்தங்கள் கேட்டு கொண்டே இருக்கவேண்டும்.
( அது ஏன்னா சாமிக்கு முழுசா அருள் இருக்கனும் இல்லனா உயிருக்கு ஆபத்தாகிடும். அருள் குறையும் போது மேளச்சத்தத்தை கேட்டாள் அருள் அதிகம் ஆகும்னு சொல்லுவாங்க …..வேட்டைக்கு போற சாமீ நல்லபடியா திரும்பி வந்தாதான் ஊருக்கு நல்லது. அதுமட்டுமில்லை கருப்பசாமி ஒரு நாள் வேட்டைக்கு சென்று வருவது தினந்தோறும் ஊரை சுற்றிவந்து அந்த ஊரையே காக்கும் என்றுகூறுவர்.)
வேட்டைக்கு சென்ற சாமீ பெரும் குரலோடு கத்திகொண்டே கோவிலுக்குள் இருக்கும் கருப்பசாமி சிலையின் முன் நின்று ஆடியது . பின் பூசாரி பூ கட்டி போட்டு எடுக்க சொல்ல நல்ல பூவையே கருப்பசாமி கொடுத்தார். இப்பொழுது தான் ஊர் மக்கள் சந்தோசமாக உணர்ந்தனர்.
திருவிழா முடிந்த சந்தோஷத்தில் ஊர் மக்கள் பெரியாச்சியாக இருக்கும் காமாட்சியம்மாளிடம் குறி கேட்க வரிசையில் நின்றனர்.
அப்போது ஒரு பெண் தன் சேலையின் முந்தானையை முன்ன நீட்டி , ஆத்தா எனக்கு 5 வருஷமா பிள்ளை இல்லம்மா நீந்தான் தஞ்சம்னு வந்திருக்க தாயீ என் வயித்தில ஒரு முத்த குடும்மா என்று கண்ணீர் மல்க கையேந்தி நின்றாள்.
அதற்கு பெரியாச்சியோ , உன் புருஷனுக்கு பெண் குழந்தை பிறந்தாள் கள்ளிப்பால் கொடுத்து கொன்றுவான். அதுக்கு ஏன் நான் உன் வயித்தில ஒரு உயிரை கொடுக்கணும்.
அப்பெண்ணோ பக்கத்தில் இருக்கும் தன் கணவனை பார்க்க அவனோ தலை குனிந்தான்.பின் அப்பெண் பெரியாச்சியிடம் , ஆத்தா எனக்கு நீ பிள்ளையை கொடு அதை நான் உன் பொறுப்புள விடுற நீயே பாத்துக்கோ என்றாள் தீர்மானத்துடன்.
பெரியாச்சியோ , ஹா ஹா ஹா என்று சிரித்துவிட்டு இந்த வார்த்தைக்காக தான் காத்திருந்த உன் வாயால சொல்லிட்ட அடுத்த வருஷம் உன் வீட்டுல தொட்டில் ஆடும் தைரியமா போ என்று கூறி விபூதி பூசிவிட்டால்.
அதன்பின் , மித்ரேந்திர ராஜா வர அவரை பார்த்த பெரியாச்சி , என்னய்யா நீ செஞ்ச தப்ப கருப்பு காலுல விழுந்து மன்னிப்பு கேட்டு உன் பாவத்தை போக்கிட்ட ஆனால் உன் மகன் பண்ணப்போற தப்பு 25 வருஷம் உன் குடும்பத்தை மட்டும் இல்லாம இந்த உயிரையே நாசமாக்க போகுதே என்ன செய்யப்போற என்றார் கோவமாக .
தாத்தா , ஆத்தா என்னம்மா சொல்ற நீதாம்மா எல்லாரையும் காப்பாத்தணும் என்று அவளின் காலில் விழுந்தார் .
பெரியாச்சி , உன் மகனுக்கு சீக்கிரம் கல்யாணத்தை முடி இதுக்கு ஒரே தீர்வு அதுமட்டும் தான் .
அவரும் சரி என்றார் .
பின்னர் திருவிழா முடிந்து வீடு திரும்பியதும் வீச்சரிவாள் இருந்த பெட்டகத்தை வீரசிம்மனிடம் ஒப்படைத்துவிட்டார் தாத்தா. அதனை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதினார் வேதநாயகம்.அதிலிருந்து அவர் தந்தையிடம் சரியாக பேசுவது இல்லை..
வேதநாயகத்தின் கல்யாண பேச்சு தொடங்கியது. தாத்தா அவருக்கு பெண் பார்க்க ஆனால் வேதநாயகமோ தன் தோழனின் தங்கையான சகுந்தலா தேவியை தான் கல்யாண செய்வேன் என்று பிடிவாதம் பிடிக்க பெரியவரும் வேண்டாவெறுப்பாக சம்மதம் தெரிவிக்க கல்யாண வேலைகள் தொடங்கியது .
கல்யாணத்தை பெரியாச்சியம்மன் கோயிலில் நடத்த முடிவு செய்ய அதற்கு வேதநாயகம் ஒப்புக்கொள்ளவில்லை. தந்தைக்கும் மகனுக்கும் நடந்த போராட்டத்தில் மகனே ஜெயிக்க கல்யாணம் மண்டபத்தில் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. சரி கோவிலுக்கு சென்று பத்திரிக்கை வைத்து கும்பிடலாம் என்று நினைத்து ஏற்பாடுகள் நடக்க கடையிலிருந்து பத்திரிக்கை வாங்க சென்ற தாத்தா காலில் காயத்தோடு வந்து நின்றார். தாத்தா எல்லாரையும் சமாதான படுத்த பாட்டி மட்டும் ஏனோ எதையும் ஏற்க மறுத்தார் .
கல்யாண நாள் மணமேடையில் வேதநாயகமும் சகுந்தலா தேவியும் அமர்ந்திருக்க ஐயர் மந்திரம் ஓதிக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பக்கத்தில் வீரசிம்மனின் மகன் ஆருத்ரமித்ரன்( வயது 4) அவனது தாய் அவனை சமாதானப்படுத்த கையில் கொடுத்திருந்த ஜூஸ் அக்னியில் கொட்டிவிட அக்னி அணைந்தது. அதனை பார்த்தவர்கள் அபசகுனம் என்று கூற தாத்தா அனைவரையும் சமாளித்தார். ஆனால் பாட்டி மட்டும் தன் மனதில் ‘இன்னும் என்னலாம் நடக்க போகுதோ’ என்று கலக்கம் அடைந்தார்.
அதன்பின் ஐயர் தாலியை கேட்க காமாட்சியம்மாளின் தங்கை விசாலாட்சி மஞ்சள் வைக்க எடுத்து சென்றதால் அதை கொண்டு வர காமாட்சியம்மாள் சென்றாள். ஆனால் அங்கோ விசாலாட்சி தாலிக்கு மஞ்சள் வைக்க வந்தவர் மின்விசிறியை போட்டுவிட்டு பின் வைக்கலாம் என்று நினைத்து தாலியை தாம்பாளத்தில் வைத்து விட்டு அந்த அறையில் இருந்த மின்விசிறியை போட ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்டார். நல்லவேளையாக அவருக்கு எதுவும் ஆகவில்லை ஆனால் கையை அசைக்க முடியவில்லை. கையை தூக்க முயல அந்த சமயம் தான் காமாட்சி உள்ளே வந்தார் நடந்ததை கேட்டதும் பெரியதாக அதிர்ந்தார்.
விசாலாட்சி , அக்கா ஏதோ தப்பா தெரியுதுக்கா கல்யாணத்தை பேசாமல் நிறுத்திரலாம் நம்ம புள்ள வாழ்க்கை யோசிக்காத அக்கா என்றார் கலக்கத்துடன்.
காமாட்சி , இல்லை விசாலாட்சி ஒரு பொண்ணுக்கு மணமேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னு போச்சுன்னா ஊரு தப்பா பேசும் அவளோட வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிடும் அதுமட்டும் இல்ல நம்ம பரம்பரைக்கே அந்த பொண்ணோட பாவம் வந்து சேரும் நீ கவலைப்படாத எல்லாத்தையும் அந்த பெரியாச்சியும் கருப்பனுக்கு பாத்துப்பாங்க வா இப்போ மணமேடைக்கு போவோம் என்று சமாதானப்படுத்தி கூட்டிச்சென்றார்.
கல்யாணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது பெரியவர்களின் மனம் மட்டும் கலக்கத்துடனே இருந்தது.
இவர்களின் திருமணம் நடந்து முடிந்து ஒரு வருடம் கடந்த நிலையில் சகுந்தலா தேவியின் மொத்த சுயரூபமும் வெளியில் வந்தது.
வீட்டு வேளைகளில் எதிலும் கலந்துகொள்ளமாட்டாள் ஆனால் மத்தவர்களை வேலை வாங்குவாள். காலையில் நேரம்கழித்து எழுபவளுக்கு bed காபி வேண்டும் இல்லையேல் வீடு ரெண்டாகும். வீட்டிற்குள் நுழைந்த சிறிது நாளில் தன் அண்ணன் குடும்பத்தையும் வீட்டிற்குள் கொண்டுவந்துவிட்டால். ஆனால் வீட்டிலுள்ள யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதுவே அவர்களுக்கு வசதியாகி போனது தன் கணவனின் கையிலிருந்த சில பொறுப்புகளை தன் அண்ணனுக்கு வாங்கித்தந்தால் சகுந்தலா தேவி.
வீட்டில் யாராவது குறை கூறினாலோ அல்லது திட்டினாலோ வேதநாயகத்திடம் திரித்து கூறி வீட்டில் ஒரு ப்ரெளயத்தையே உண்டு பண்ணிவிடுவாள் சகுந்தலா. அதனால் அனைவரும் அவளிடம் பேசவே யோசிப்பார்கள்.
ஆனால் இவர்களால் என்ன முயன்றும் வீட்டு நிர்வாகத்தில் மட்டும் எதுவும் செய்யமுடியவில்லை அதற்கு காரணம் காமாட்சியம்மாள். அவர்களின் ஜம்பம் காமாட்சியம்மாளிடம் பலிக்காமல் போனது. வேதநாயகத்திடம் மாமியார் கொடுமை என்று கூற நினைத்து அம்மா என்று பேச்சு ஆரம்பித்தாலே அவர்களை அனுசரித்து போ என்று விலகிடுவான். அது அண்ணன் தங்கை இருவருக்கும் பெரும் அடியாகவே இருந்தது . சரி கொஞ்ச நாள் போகட்டும் என்று விட்டு விடுவர். ஆனால் வேதநாயகமோ மற்ற விஷயத்தில் எப்படியோ அன்னை விஷயத்தில் அவர்கள் என்ன முயன்றும் மாறவேயில்லை.
சகுந்தலா தேவிக்கும் காமாட்சியம்மாளை கண்டால் சிறிது பயம்தான். இவள் காலையில் நேரம் கழித்து எழுவதை பார்த்துகொண்டே இருந்த காமாட்சியம்மாள் முதலில் சொல்லி பார்த்தார் பலன் இல்லை. சரி வெள்ளி கிழமை மட்டும் எழுந்துகொள்ள சொன்னார் புண்ணியம் இல்லை. பிறகு ஒரு நாள் தன் மகனின் கையாலே ஒரு வாலி தண்ணீரை ஊற்ற வைத்தார். அதிலிருந்து அவளுக்கு அவரின் மேல் சிறிது பயம் தான் . அவள் கணவன் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தால் இவரோ மகன் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார். அதிலும் ஒரு வருடம் ஆகியும் பிள்ளை இல்லை தன்னை ஒதுக்கி வைத்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துவிட்டால் பின்னர் தன் திட்டம் எப்படி பழிக்கும் என்ற பயம் வேறு அதனால அவரிடம் சற்று அடங்கியே இருந்தார்.
கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இந்த 10 வருடத்திற்குள் வீரசிம்மனின் மனைவி ராதிகாவிற்கு இரண்டு முறை கர்ப்பம் தரித்து பின் கலைந்துவிட்டது.
அப்படி இருக்க ஒரு நாள் வெள்ளிக்கிழமை பூஜை நடக்கும் பொழுது காமட்சியம்மாளுக்கு அருள் வந்து தன் சன்னதிக்கு வந்து பொங்கல் வைக்க சொன்னார் பெரியாச்சியம்மா.
மறுவாரமே சென்று பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.எல்லாம் நல்லபடியாக முடிந்து வீடு திரும்பி ஒரு மாதத்தில் சகுந்தலா தேவி கற்பமுற்றாள். அதிலிருந்து சில நாட்கள் கழித்து ராதிகாவும் கறகற்பமுற்றாள்.
ஒரு மாத இடைவெளியில் வேதநாயகம்- சகுந்தலா தேவிக்கு ஒரு ஆண் குழந்தையும் , வீரசிம்மன்-ராதிகாவுக்கு பெண் குழந்தையும் பிறந்தது.
ஆண் குழந்தைக்கு மித்ரேந்திரன் என்றும் பெண் குழந்தைக்கு புனிதமித்ரா என்றும் பெயரிட்டனர்.
அதன்பின் இரண்டு இரண்டு வருட இடைவெளியில் அரவிந்தமித்ரன் மற்றும் பிரகாஷ் மித்ரன் பிறந்தனர்.ஐந்து வருடங்கள் முடிந்த நிலையில் பெரியாச்சியம்மனை வழிபட சென்ற ராதிகா விபத்தில் இறந்துவிட மனைவி இல்லாத வீட்டில் வாழ விரும்பாத வீரசிம்மன் அதே ஊரில் உள்ள தங்களுக்கு சொந்தமான வேறு வீட்டிற்க்கு சென்றுவிட்டார் .
பெரியவர்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும் அவரை தடுக்கவும் இல்லை .
அடுத்த 5 வருட இடைவெளியில் மித்ரா தேவி பிறந்தாள்.
20 வருடங்கள் முடிந்த நிலையில் கோவில் திருவிழா நடத்த ஊர் பெரியவர்கள் முடிவு எடுத்து பெரியாச்சியிடம் குறி கேட்க அம்மன் இந்த வருடமும் உத்தரவு தரவில்லை. பெரியவர்களுக்கு அதில் பெரும் வருத்தமே 20 வருடங்களாக பெரியாச்சியம்மன் உத்தரவு தரவில்லை இந்த வருடமாவது தரும் என்ற நம்பிக்கையில் வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அடுத்துவந்த 10 வருடமும் உத்தரவு தரவில்லை கோவிலை புதுப்பிக்க கேட்டதுக்கும் அனுமதி தரவில்லை.
இந்த 30 வருடங்களில் நடந்ததை வீட்டு வாசலிலே நின்று நினைத்து பார்த்துக்கொண்டிருந்த பாட்டியை யாரோ தொட்டு அழைக்க திரும்பி பார்த்தார் பாட்டி. வேற யாருங்க நம்ம ஹீரோ தான்.
மித்ரன் , என்ன பாட்டி வாசல்ல நின்னு கனவு கண்டுட்டு இருக்கியா ???
பாட்டி , வாய்யா என்ன ஓடிட்டு வந்திட்டியா ?????
மித்ரன் , அட பாட்டி அது ஓடுறது இல்ல jogging சரி அதை விடு இங்க ஏன் நிக்கற ???
பாட்டி , அது என்னவொய்யா என் வாயில நுழைய மாட்டேங்குது… சும்மாதாய்யா நிக்குறேன் ஏதோ பழைய நியாபகம் வாய்யா உள்ள போவோம்.
மித்ரன் , என்ன தாத்தா கூட duet பாடுநீயா??? என்றான் கிண்டலாக.இருவரும் பேசிக்கொண்டே ஹாலுக்கு வந்திருந்தனர்.
பாட்டி , இந்த வயசுல நான் எங்கய்யா பாடப்போறேன் நீந்தான் ஒரு நல்ல பொண்ண காதலிச்சு duetu பாடணும் என்றார் சிரிப்புடன் .
இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்தார் சகுந்தலா தேவி வந்தவர் , அவன் எதுக்கு யாரையோ காதலிக்கனும் அவனுக்காக சின்ன வயசுல இருந்தே என் அண்ணன் பொண்ணு நீலவேணி காத்திருக்கும் போது என்றார். அதற்கு
பாட்டியோ சற்றும் யோசிக்காமல் எதுக்கும்மா உன்னை மாதிரியே 8 மணிக்கு எழுந்திருக்கவா????? என்றார்.
அவ்வளவுதான் சகுந்தலாவின் வாய் தானாக மூடிக்கொண்டது.அதனை பார்த்து சிரித்த மித்ரன் தன் அம்மாவிடம் , அம்மா நான் எப்போவும் அப்பா பண்ண தப்ப பண்ணமாட்டேன் பாட்டி பார்க்கிற பொண்ண மட்டும் தான் கல்யாணம் பண்ணுவேன் ஒருவேளை காதல் கீதல்னு வந்தாகூட பாட்டிகிட்ட தான் first சொல்லுவேன் என்றான்.
சகுந்தலா , அப்போ சின்ன வயசில இருந்து நீந்தான் வேணும்னு ஒருத்தி சுத்திட்டு இருக்காளே அவளுக்கு என்ன பதில் சொல்றது??
மித்ரன் , நீங்க என்ன பதில் வேணுனாலும் சொல்லிக்கோங்க ஆனால் அந்த fraud ஓட மகளை ஒரு நாளும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் என்றான் கோவமாக
பாட்டி , அய்யா வார்த்தை தப்பா இருக்கு பெரியவங்கள மரியாதை இல்லாமல் பேசக்கூடாது என்றார் கண்டிப்புடன்.
மித்ரன் , மன்னிச்சிருங்க பாட்டி அவரு கம்பெனியில பண்ண குளறுபடியை பார்த்ததும் tension ஆகிட்டு அதுக்கு இவங்களும் கூட்டு அதான் இனி அப்படி பேசமாட்டேன் என்று கூறியவன் மாடி ஏறி தனது அறைக்கு சென்றுவிட்டான்.
ஹாலில் இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் சகுந்தலா தேவி முகத்தை தொங்கப்போட்டு கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். காமாட்சியம்மாள் ஒரு சிரிப்புடன் பூஜை அறைக்கு சென்றார் .
தன் அறைக்கு சென்ற மித்ரனோ மிகுந்த கோவத்தில் இருந்தான். விஸ்வநாதன் ( சகுந்தலாவின் அண்ணன் ) கம்பெனியில் செய்த குளறுபடியை நினைத்து எரிச்சலாக வந்தது. விஸ்வநாதன் கோடிக்கணக்கில் திருட்டும் செய்திருந்தார். அவரை போலீஸில் ஒப்படைக்க மித்ரன் வீட்டில் உள்ளவர்களிடம் கூற சகுந்தலா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை பெரியவர்களும் குடும்பம் மனம் போகும் என்று கூறிவிட வீட்டை விட்டு மட்டும் அனுப்பினர்.
இதையெல்லாம் நினைத்து கொண்டிருந்த மித்ரனுக்கு கோபம் அதிகமானதே தவிர குறையவில்லை. அவன் மனதில் , இந்த ஆளு செஞ்சது மன்னிக்கவே முடியாதது மன்னிக்கவும் கூடாது இதுல இந்த ஆளு பொண்ண நான் கல்யாணம் பண்ணனுமா no never என்று நினைத்துக் கொண்டிருந்தவனின் கைபேசியின் மணியோசை கேட்க அதனை எடுத்து பார்த்தவனின் முகம் புன்னகையை வெளியிட்டது உடனே காலை atten செய்து காதில் வைத்தான்.
மித்ரன் , ஹலோ சோடாபுட்டி என்றான் சிரிப்புடன்
சோடாபுட்டி , என்னை அப்படி கூப்பிடக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன் கேட்கமாட்டியா?? என்றது எதிர்முனை கோவமாக.
மித்ரன் , அப்படித்தான் கூப்பிடுவ என்ன பண்ணுவ???
சோடாபுட்டி , எங்க அம்மா , அப்பா எனக்கு புனிதமித்ரான்னு பெயர் வச்சிருக்காங்க நீ என்னடான்னா சோடாபுட்டினு கூப்பிடுற பக்கி என்றாள் புனிதமித்ரா.
அட ஆமாங்க வீரசிம்மனின் மகள் புனிதமித்ராவே தான். மித்ரன் , புனிதா இருவருக்கும் ஒரே வயது என்றாலும் அண்ணன் தங்கை போலவே பழகினர். மித்ரா தேவியை விட புனிதாவின் மிதே அதிக பாசம் இருப்பதாக தோன்றும் மித்ரனுக்கு அதனாலே புனிதாவிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வான். அவளும் அண்ணன்,தங்கை என்ற பந்தத்தை தாண்டி இன்னும் ஏதோ சம்மந்தம் இருப்பதாகவே தோன்றும்.
சரி வாங்க என்ன பேசுறாங்கனு கேட்போம்…???
மித்ரன் , சரிங்க புனிதா மேடம் இனி புனிதானே கூப்பிடுறேன்… என்ன காலையிலே கால் பண்ணிருக்க என்ன விஷயம் ????
புனிதா , அது அந்த பயம் இருக்கட்டும்…. இன்னைக்கு காலேஜ் last day ல என்ன pickup drop pickup பண்ணிறிய plsss அண்ணா.
மித்ரன் , ஓஹ் ஹோ இதுக்குத்தான் எனக்கு கால் பண்ணியா??? உங்க அண்ணன் ஒருத்தன் இருக்கானே அவனை கூட்டிட்டு போகவேண்டியதான??
புனிதா , அது இல்லடா அண்ணனுக்கு ஏதோ important operation இருக்குதாம் அதாண்டா pls என்று கெஞ்சினாள் .
மித்ரன் , ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி அதுயென்ன pickup drop pickup ??? என்றான் கேள்வியாக
புனிதா , தேங்க்ஸ் டா…..வீட்டுலேருந்து pickup பண்ணிக்கோ அப்பறம் காலேஜ்ல drop பன்னிரு அப்பறம் theatre ல இருந்து pickup பண்ணிக்கோ அவ்ளோதான் என்றாள் கூலாக .
மித்ரன் , ஓஹ் ஹோ அப்படியா மேடம்….. சரிங்க மேடம் வரேன் மேடம்…. நீங்க படத்துக்கு போறது அப்பாக்கு தெரியுமா மேடம் ??? இல்ல என்று இழுத்தான்.
புனிதா , சொல்லிட்டேன் சொல்லிட்டேன் போதுமா ????
மித்ரன் , சரி கோபப்படாத செல்லக்குட்டி போன தடவை மாதிரி வெளில யாராவது பார்த்து அப்பாகிட்ட சொல்லிட்டா நமக்குத்தான் கஷ்டம் அதுக்குத்தான்டா கேட்ட என்றான் வாஞ்சையாக.
புனிதா , சரி சரி நான் சொல்லிட்டேன் நீ கவலைப்படாத சீக்கிரம் வந்திரு என்றாள்
மித்ரன் , ஓகே டா நீ கிளம்பி இரு வந்திறேன் நீ லேட் பண்ணிராத சரியா ??? என்று கேள்வி கேட்டவன் அதற்கான பதில் சுப்ரபாதமாக ஒலித்ததும் காலை வைத்துவிட்டான் .
பின் மித்ரன் குளித்து கிளம்பி கிழே செல்ல தாத்தா அவனுக்காக dining table லில் காத்திருந்தார். அவனை பார்த்ததும் ,
ஐயா வாய்யா சாப்பிடலாம் என்றழைத்தார் .
அவரை பார்த்து சிரித்தவன் அவர் அருகில் அமர்ந்தான்.வள்ளி வந்து காலை உணவை பரிமாற இருவரும் சாப்பிட ஆரமித்தனர்.
தாத்தா , ஐயா மித்ரா படிப்பு முடிய போகுது அடுத்து என்னய்யா பண்ணபோற என்றார் கேள்வியாக .
மித்ரன் , தாத்தா நான் IPS பரீட்சை எழுதப்போறேன் அதுதான் என்னோட கனவு என்றான் கண்ணில் கனவு மின்ன .
தாத்தா , நல்லதுய்யா நீயாவது சொத்து சுகம்னு யோசிக்காம உன் கனவு பற்றி யோஷிக்குறியே சந்தோசம் ராசா என்றார் கண்ணீருடன்.அதனை பார்த்த மித்ரன் பதற அப்போது அங்கு வந்த
பாட்டி , என்னங்க புள்ளை சாப்பிடும்போது என்ன பேசுறீங்க என்று அதட்டவும் தன் கண்ணீரை துடைத்து கொண்டார்.
பாட்டி , ராசா நீ வருத்தப்படாதய்யா அந்த மனுஷன் ஏதோ நினைப்புல சொல்லிட்டாரு நீ போலீஸ்காரனா ஆகப்போறேன்னு சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோசம்… எங்க ஐயா கூட போலீஸா ஆகணும்னு ஆசைபட்டாரு ஆனால் அவரு ஐயா அதுக்கு சம்மதிகளை சொத்து பத்து இருக்கும்போது நீ மத்தவங்களுக்கு சம்பளம் கொடுக்காம ஐஞ்சுக்கும் பத்துக்கும் வேற ஒருத்தன் கையை எதிர்பார்க்க போரியான்னு சொல்லி அனுமதிகளை…. நீ சந்தோசமா பரீட்சை எழுதுய்யா அந்த பெரியாச்சி துணை இருப்பா என்றார்.
இதை அனைத்தையும் கேட்டு கொண்டே வந்த சகுந்தலாவும் வேதநாயகமும் dining டேபிள் லில் அமர்ந்தனர்.
சகுந்தலா , ஏன் அத்தை என் பையனுக்கு மட்டும் என்ன தலை எழுத்தா சொத்து இருக்கும் போது எதுக்கு வேலைக்கு போகணும் என்றார் கோவமாக .
பாட்டி , சொத்து இருந்து என்ன புண்ணியம் சுலபமா ஏமாத்திறாங்க அதுவே கூட பதவி இருந்தாள் கிட்ட நெருங்க முடியுமா??? அதுவும் இல்லாமல் புள்ளைங்க ஆசையை பெத்தவங்க நிறைவேத்தனும் அதைவிடுத்து தடையா இருக்க கூடாது புரியும்னு நினைக்கிறேன் என்று பதில் கொடுத்தவர் மித்ரன் தட்டு காலியாவதை பார்த்து ‘ஐயா இட்லி வச்சிக்க என்றார்’ .
இனி சகுந்தலா அங்கே வாய் திறப்பாரா ??வாய்ப்பே இல்லை என்றுதான் நமக்கு தெரியுமே.
மித்ரன் , எனக்கு போதும் பாட்டி நீங்க சாப்பிடுங்க புனிதா கால் பண்ணிருந்தாள் அவளை காலேஜ்கு கூட்டிட்டு போகணுமாம் so நான் கிளம்புறேன் என்று கூறியவன் கை கழுவி விட்டு பாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டு தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.
வெளியில் வந்ததும் தன் bike ஐ எடுக்க எதிரில் அரவிந்தும் பிரகாஷும் வந்தனர்.
மித்ரன் , என்னடா exam முடிஞ்சிட்டு அதனால கிரிக்கெட் விளையாட ஆரமிச்சிட்டீங்களா ???
அரவிந்த் & பிரகாஷ் , ஹி ஹி ஹி……
மித்ரன் , சரி சிரிச்சது போதும் உள்ள போங்க ஈவினிங் வந்து உங்கள கவனிக்கிறேன் என்று கூறியவன் பைக்கின் ஹாண்ட்பேரை முறுக்க அந்த ‘royal enfield’ வண்டி பறந்தது .
தன் IPS கனவை பற்றி சிந்தித்து கொண்டு இருந்தவனின் வாழ்க்கையை மாற்றப்போகிற தேவதையை இன்று சந்திக்க போகிறான் என்பதை தெரியாமலே அவன் மனது வானில் சிறகின்றி பறந்து கொண்டிருந்தது என்ன காரணம் என்று அறியாமலே……
காற்றில் வாசமாக மித்ரனின் தேவதை வருவாள் அடுத்த அத்தியாயத்தில்……
தொடரும்…….
????????????????????????????????????????????????
மக்களே , பெரியாச்சியம்மன் கருப்பசாமி கோவில் திருவிழாவில் நடக்கும் அத்தனையும் உண்மை கலந்த எனது கற்பனையே பிழை இருந்தால் மன்னிக்கவும்.
கூடிய விரைவில் பெரியாச்சியம்மனின் வரலாறை பதிப்பிக்கிறேன்… அது முழுக்க முழுக்க உண்மை சம்பவமாக இருக்கும்.
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி மக்களே…
????????????????????????????????????????????????