கைதி-11
“சங்கவி யாரு ஸ்ரீ?”, என்றாள் மிருணா.
“அவ என் மாமா பொண்ணு மிருணு, அவ எப்பவாச்சும் வருவா, வந்ததும் விக்கி அண்ணாவ தான் முதல்ல தேடுவா”, என்று அழைத்துச் சென்றாள்.
‘ஏன் அப்படி?’, என்று மனதில் நினைத்துக்கொண்டே ஸ்ரீயிடம் கேட்காமல் விட்டாள்.
விக்ரம் போன் பேசிவிட்டு, அப்பொழுதுதான் வீட்டின் உள்ளே நுழைந்தான். அவன் பின்னால் இரு பெண்களும் வந்தனர். “அத்தான்..”, என்று சங்கவி பக்கத்தில் ஓடிவந்து, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
‘இவ தான் சங்கவியா? பார்க்க அழகா இருக்கா!’, என்று மிரு மனதிலே நினைத்துக்கொண்டாள்.
“சங்கு, வா வா!”, என்றான் சிரிப்புடன் தோளில் கை போட்டு லேசாக அணைத்தபடி.
“வந்துட்டேன் அத்தான். எப்படி இருக்க?”, என்றாள் சிரிப்புடன்.
“ம்ம்.”, என்று அவளிடமிருந்து விலகி தன்னை சுற்றி காட்டி, “எப்படி இருக்கேன்?”, என்றான் புருவம் உயர்த்தி.
“உனக்கு என்ன அத்தான்? ஹீரோ மாதிரி செம்ம சூப்பரா இருக்க”, என்றாள் சிரிப்புடன்.
‘இவ முன்ன பின்ன அழகான பையன பார்த்ததே இல்லையா? இவன போய் சூப்பர்னு பொய் பொய்யா புழுகுறா’, என்று மனதிலே புலம்பிக் கொண்டு இருந்தாள்.
விக்ரம் சிரிப்புடன், “நாம இருக்குறது மும்பை இல்ல ஊட்டி. ஆல்ரெடி கூலா தான் இங்க இருக்கு, இதுல நீ வேற எனக்கு ஐஸ் வைக்கிறியா?”, என்றான் கிண்டலாக.
‘அப்பா! இப்பவாச்சும் உனக்கு தெரியுதே! அவ வைக்கறது ஐஸ்னு’, என்று மனதிலே கிண்டலடித்தாள்.
“போ அத்தான், உண்மையைதான் சொல்லுறேன்”, என்றாள் உதட்டை பிதுக்கி.
“சங்கு, நானும் உனக்கு அத்தான் தான், நியபகம் இருக்கா?”, என்றான் ராகவ் பக்கத்தில் வந்து, அவள் தலையில் லேசாக கொட்டி.
[the_ad id=”6605″]
அனுவும் அமரும் வெளியே பேசிவிட்டு, அப்போது தான் உள்ளே வந்தனர். ‘யாரு இவ புதுசா இருக்கா?’, என்று அனு நினைத்துக்கொண்டே, ஸ்ரீ மிருணாவின் பக்கத்தில் சென்று நின்றாள்.
“ஏய்! லூசு அத்தான்! கொட்டாத வலிக்குதுல்ல, அத்த பாருங்க”, என்று கத்தினாள்.
“டேய்! உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையாடா? எப்ப பாரு யாரையாச்சும் வம்பு பண்ணிக்கிட்டே இருக்கீங்க, போடாங்க போய் வேலைய பாருங்க”, என்று வாணி வெளியே வந்து சத்தம் போட்டுவிட்டு சென்றார்.
“இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கியே! அம்மா கிட்ட போயி கம்ப்ளைன்ட் பண்ற, ஸ்மால் கேர்ள்”, என்றான் விக்ரம் கிண்டலாக.
“அத்தான்!”, என்றாள் முறைப்புடன்.
“சங்கு, எப்படி இருக்க டா?”, என்றான் சிரிப்புடன்.
“அமர் அண்ணா, நீங்க எப்ப வந்தீங்க? நான் வரப்ப ஸ்ரீயும் ராக்கி அத்தானும் தான் இருந்தாங்க, உங்கள நான் பார்க்கவே இல்ல”, என்றாள் சிரிப்புடன்.
“வெளியே இருந்தேன்டா, நேத்து காலையில வந்தேன்”.
அப்போதுதான், அவன் பக்கத்தில் இரு புதிய பெண்கள் நிற்பதை கவனித்தாள். “நல்லா இருக்கேன் அண்ணா! நீங்க? ஆமா இவங்க ரெண்டு பேரும் யாரு?”, என்றாள் புருவம் உயர்த்தி.
“என் தங்கச்சிடா. நான் நல்லா இருக்கேன்”.
“உங்க வீட்ல நீங்க மட்டும் தானே!”, என்றாள் சந்தேகமாக இருவரையும் பார்த்து.
“ஆமா! இவ என் சித்தப்பா பொண்ணு, இவ அவ ஃப்ரெண்ட் எனக்கும் இவ தங்கச்சி தான்”, என்றான் இருவரையும் காட்டி.
“ஓ…”.
“சங்கு, இவ மிருணா. என் குளோஸ் ஃப்ரெண்ட் அண்ட் நாத்தனார், இவ அனு, நியூ ஃப்ரெண்ட் அண்ட் இவளும் எனக்கு நாத்தனார் தான்”, என்றாள் சிரிப்புடன் ராகவை பார்த்து.
“ஆமா ஆமா! நாத்தனார் தான்”, என்றான் ராகவ் கிண்டலாக. அனு அவனை முறைத்தாள்.
“உனக்கு புது ஃப்ரெண்ட் கிடைச்சனால தான், என் கிட்ட பேசுறதே இல்ல, அப்படி தான?”, என்றாள் கோபமாக ஸ்ரீயிடம்.
“சச்ச… அப்படியெல்லாம் இல்லடி, ஆமா என்னையே சொல்றியே? நீ எனக்கு மட்டும் போன் பண்ணுனியா?”, என்றாள் முறைப்புடன்.
“நான் கொஞ்சம் பிஸியாக இருந்தேன், அத்தானுக்கு பண்ணுனேன். அத்தான் பிஸினு சொன்னாங்க”.
“ஓ… நானும் பிஸியா இருந்தேன், அத்தானுக்கு மட்டும் பண்ண தெரியும்”, என்றாள் கிண்டலாக.
“அத்தான், உன் தங்கச்சி ஓவரா கிண்டல் பண்றா பாரு”, என்று விக்ரமிடம் புகார் செய்தாள்.
“அட சங்கு, இப்பதானே வீட்டுக்கு வந்த மும்பையிலிருந்து. ரொம்ப சூடா வந்திருக்க போல, போய் குளிச்சிட்டு வா, சாப்பிடலாம்”, என்று பேச்சை மாற்றினான்.
“ஆனா நீ பெரிய ஆள்தான் அத்தான். எனக்கும் சப்போர்ட் பண்ணல, உன் தங்கச்சிக்கும் சப்போர்ட் பண்ணல, பேசியே சமாளிக்கிற. சரி சரி! நான் போய் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வரேன்”, என்று பேக்கை எடுத்துக்கொண்டு மேலே சென்றாள்.
“அண்ணா…”, என்றாள் ஸ்ரீ.
“நீ எதுவும் சொல்ல வேணா டா”, என்றான் விக்ரம் திரும்பி அவளைப் பார்த்து.
“அண்ணா, நான் என்ன சொல்ல வரேன்னா…”, என்றாள் தயங்கியபடி.
“வா…”, என்று ஸ்ரீயை அனைத்து நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, “உன் அண்ணா எல்லாத்தையும் பார்த்துக்குவான் டா”, என்றான் தலைகோதி.
“ஆமா டா! எங்களுக்கு தங்கச்சியா இருந்துகிட்டு இப்படி பயப்படலாமா?”, என்றான் ராகவ், விக்ரம் மற்றும் ஸ்ரீயை அப்படியே அணைத்தபடி.
அமர், மிருணா, அனு இவர்கள் அன்பை பார்த்து சிரித்தனர். “ஸ்ரீ, எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியல. எதுக்கு நீ இப்ப தேவையில்லாம பயப்படுற?”, என்றாள் மிருணா குழப்பமாக. மூவரும் விலகினர்.
“நான் போய் போன் பேசிட்டு வரேன்”, என்று மிருணாவைத் தவிர்த்து விட்டு வெளியே சென்றான்.
“ஒன்னுமில்ல மிருணு, சங்கு நல்ல பொண்ணுதான், இருந்தாலும் என் கூட அதிகமா போட்டி போடுவா, விக்கி அண்ணா தான் நடுவுல மாட்டிகிட்டு முழிப்பான், சில சமயம் மனக்கஷ்டம் கூட வரும். லாஸ்ட் டைம் அண்ணா அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசலன்னு கோவிச்சுக்கிட்டு ஊருக்கு போயிட்டா, இந்த டைம் அது மாதிரி நடந்திடுமோன்னு பயம் அவ்வளவுதான்”, என்றாள் விளக்கமாக.
“ஸ்ரீ, இதுக்கு போய் பயப்படுற? எது வந்தாலும் பார்த்துக்கலாம் விடு. மிருணு, அண்ணா நடந்த எல்லாத்தையும் சொன்னாங்க. இதுல என்ன டி? ஒரு கால் பண்ணி என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல, ஸ்ரீ வீட்ல மட்டும் உனக்கு ஹெல்ப் பண்ணாம இருந்திருந்தா, இந்நேரம் என்ன நடந்திருக்குமோ?”, என்றாள் பயத்துடன்.
“அங்க இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்? இந்நேரம் நான் செத்துப் போயிருப்பேன்”, என்றாள் தோளை குலுக்கி.
விக்ரம் அப்போதுதான் போன் பேசிவிட்டு உள்ளே வந்தவன், அவள் சொன்னதை கேட்டு பக்கத்திலிருந்த பூ ஜாடியை கோவமாக எடுத்து உடைத்தான். அனைவரும் அதிர்ந்து திரும்பி பார்த்தனர்.
உள்ளே இருந்த வாணி, மீனாட்சி, சக்கரவர்த்தி, சோமு வெளியே வந்து பார்த்தனர். மீனாட்சி எதுவும் நடவாதது போல், வேலையாளை அழைத்து சுத்தம் செய்ய சொன்னார். அனு மற்றும் மிருணாவின் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.
“விக்கி என்னாச்சு?”, என்றான் அமர் கவலையாக.
“தெரியாம தட்டிவிட்டுட்டான் போல”, என்றான் ராகவ் வேகமாக.
“விக்கி, வா! வந்து உட்காரு. மீனா தண்ணி கொண்டு வா”, என்றார் சக்கரவர்த்தி விக்ரமை அழைத்துச் சென்று சோஃபாவில் பக்கத்தில் உட்கார வைத்து. மீனாட்சி குடிக்க தண்ணீரை குடுத்தார். மறுக்காமல் குடித்துவிட்டு ஸ்ரீயை பார்த்து, மிருணா மற்றும் அனுவை கண் ஜாடை காட்டி, வெளியே அழைத்துச் செல்ல சொன்னான்.
“மிருணு, அனு, வாங்க வெளில போலாம். அங்க போய் நாம பேசிட்டு இருக்கலாம்”, என்று அழைத்து சென்றாள்.
“விக்கி இவ்ளோ கோவம் எதுக்கு?”, என்றார் சக்கரவர்த்தி.
“பின்ன என்னப்பா? இந்நேரம் அங்க இருந்தா செத்துருப்பேன்னு பேசிட்டு இருக்கா. இவ சாகறதுக்கு தான் இவ்ளோ கஷ்டப்பட்டு, அந்த சிவா கண்ணுல மண்ணைத் தூவி அழைச்சிட்டு வந்ததா, இவ பெரிய ஜான்சி ராணி மாதிரி, அப்ப அந்த சிவா கிட்ட பேசிட்டு இப்ப இப்படி பேசுறா”, என்றான் கோவமாக.
“விக்கி ரிலாக்ஸ் டா. அவ நார்மலா தான் சொன்னா”, என்றான் ராகவ்.
“நார்மலா கூட சொல்ல கூடாது டா, அவ சாகணும்னு நினைச்சா கூட, அத நான் தான் முடிவு பண்ணனும். அவ முடிவு பண்ணக்கூடாது”, என்றான் கோபமாக.
[the_ad id=”6605″]
“விக்கி அவ சின்ன பொண்ணு பா”, என்றார்.
“ஆமா சோமுப்பா, சின்ன பொண்ணு. அதனால் தான் அவள நாளு அறை விடமா, ஜாடிய உடைச்சேன்”.
“மிருணாவ நீ ரொம்ப லவ் பண்ற தான். அதுக்காக இப்படி எல்லாம் நீ நடந்துக்கிட்டா, அவ உன்ன பார்த்து பயப்பட தான் செய்வா டா, நீ உடைச்சத அவ பார்த்திருந்தா இன்னும் ரொம்ப பயந்து இருப்பா, நீ உன் கோவத்த குறை டா “, என்றான் கெஞ்சலாய்.
“ஆமா விக்கி! அமர் சொல்றது சரிதான். அவளுக்கு அம்னீசியா சரியாகுற வரைக்கும் உன்ன வெறுக்காம பார்த்துக்கோ டா”, என்றார் மீனாட்சி வேகமாக.
விக்ரம் முகத்தில் சிரிப்பு பரவியது. “அப்பா! பையன் சிரிச்சுட்டான். கொஞ்ச நேரத்துல பதற வச்சுட்ட, பதற வைக்கிறதே உன் வேலையா போச்சு டா”, என்றார் வாணி வலிக்காமல் லேசாக தலையில் கொட்டி. விக்ரம் சிரித்தான்.
சங்கு அப்பொழுதுதான் கீழே வந்தாள். இவர்கள் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து விட்டு, அவர்களுடன் வந்து உட்கார்ந்து, “என்ன ஒரே மாநாடா இருக்கு? நான் ஊர்ல இருந்து வந்ததுக்கு எப்படி கொண்டாடலாம்னு பேசிட்டு இருக்கீங்களா?”, என்றாள் கிண்டலாக.
“இது வேற உனக்கு பண்ணனுமா? இவ்ளோ பேராசை இருக்கக்கூடாது மா “, என்றான் ராகவ் கிண்டலாக.
“அத்த, இந்த அத்தான பாருங்க. எனக்காக ஸ்பெஷலா பண்ணுவீங்க தானே?”, என்றாள் இருவரிடமும்.
“கண்டிப்பாடா”, என்றனர் சிரிப்புடன்.
“பார்த்தீங்களா, இதுதான் சங்கு”, என்றாள் இல்லாத காலரை தூக்கிவிட்டு.
“பார்த்தியா, உன் பெயருலயே சங்குன்னு வச்சிருக்க ஊ… ஊ…”, என்றான் விக்ரம் கிண்டலாக.
“டேய்! சும்மா இரு”, என்றனர் தாய்மார்கள் இருவரும் லேசான சிரிப்புடன்.
“அத்தான் நீயுமா?”, என்றாள் சினுங்களுடன்.
“என்னால முடிஞ்ச சிறிய உதவி”, என்றான் சிரிப்புடன்.
“அத்தான்! நீங்க ரெண்டு பேரும் வெரி பேட், எப்ப பார்த்தாலும் வம்பு பண்ணிக்கிட்டே இருக்கீங்க, அமர் அண்ணாவ பார்த்து கத்துக்கோங்க”, என்றாள் கிண்டலாக அமரைப்பார்த்து.
“சங்கு மா, நான் பாட்டுக்கு அமைதியா தானே இருக்கேன், என்னைய ஏன் நடுவுல இழுத்து விடுற?”, என்றான் பொய்யான சோகத்துடன்.
“அண்ணா, நான் அப்படி பண்ணுவனா? ஆமா எங்க உங்க ஆளையும் காணோம், உங்க தங்கச்சியும் காணோம்”.
“அவங்க மூணு பேரும் வெளிய இருக்காங்க”.
“ம்ம்… சரி”.
“மிருணு, நீ சொல்ற ஒவ்வொரு விஷயமும் படத்துல பார்க்கிற மாதிரி இருக்கு டி, அமர் அண்ணாவும் முகிலும் இல்லனா, என்ன ஆயிருக்கும்னு என்னால நினைச்சு கூட பார்க்க முடியால டி”, என்றாள் கலங்கிய குரலில்.
“அனு, இவள டிரெயின் ஏத்திவிட்டது என் அண்ணா தான், என் அண்ணான்னு தெரியாம, அவங்கள பத்தி அவங்க வீட்டிலேயே உட்கார்ந்துக்கிட்டு கழுவி கழுவி ஊத்துனா”, என்று ஸ்ரீ நடந்த அனைத்தையும் சொன்னாள்.
அனு சிரித்துக் கொண்டே, “சரியான பெயர் தான்டி வச்சிருக்க”.
“நமக்கு பெயர் வைக்க சொல்லி தரணுமா என்ன?”, என்றாள் புருவம் உயர்த்தி.
“அதானே!”, என்றாள் சிரிப்புடன். வேலையாள் வந்து மூவரையும் உள்ளே அழைப்பதாக சொல்லிவிட்டு சென்றார். மூவரும் உள்ளே வந்தனர்.
“ஹாய்! நா சங்கவி, வந்த டயர்ட்ல கொஞ்சம் கோவமா நடந்துகிட்டேன் சாரி”, என்றாள் சிரிப்புடன். மிருணாவும் அனுவும் சிரிப்புடன் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
“அனு நீங்க இந்த ஊர்தானா? உங்க வீடு எங்க இருக்கு?”, என்றாள். அனு அவள் இருக்கும் இடத்தை சொன்னாள். ” ஓகே… ஓகே…”.
சக்கரவர்த்தியும் சோமுவும் டிவி பார்த்துக்கொண்டு இருந்தனர். அம்மாக்கள் இருவரும் கிட்சனில் இருந்தனர். விக்ரம், ராகவ், அமர் மூன்று பேரும் ஓரமாக சோபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். இவர்கள் நான்கு பேரும் தள்ளி போடப்பட்டிருந்த சோபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் சக்கரவர்த்தி சேனலை மாற்றிக் கொண்டு இருக்கும் போது, “மாமா… மாமா… அந்த நியூஸ் சேனல வைங்க”, என்றாள் மிருணா வேகமாக எழுந்து.
மீனாட்சியும் வாணியும் சாப்பிட அழைக்க வந்தவர்கள், மிருணா வேகமாக பேசுவதை கேட்டு அவளை பார்த்தனர். மற்றவர்களும் அவளைத்தான் கவனித்தனர்.
“எந்த நியூஸ் மா??”, என்றார்.
“இப்ப மாத்திட்டு வந்திங்களே, அதான் மாமா”, என்றாள் வேகமாக அவர் பக்கத்தில் வந்து. அவரும் அவள் சொன்னதை வைத்தார்.
“நேற்று நள்ளிரவு ஊட்டியில், ரவுடிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் சம்பவ இடத்திலேயே பத்து ரவுடிகள் இறந்தனர். யார் யாருக்கு சண்டை நடந்தது? எப்படி நடந்தது? என்பதை போலீசார் விசாரித்து கொண்டு இருக்கின்றனர்”, என்று செய்தியில் அவர்கள் புகைப்படத்துடன் வந்தது.
மிருணா அதிர்ச்சியுடன் அப்படியே நின்றாள். “என்னாச்சு டி?”, என்றாள் அனு அவள் பக்கத்தில் வந்து தோளைத் தொட்டு.
அதில் சுய உணர்வு வந்தவள். “ஸ்ரீ நம்மள பாலோ பண்ணுன ரவுடி இவங்க தானே?”, என்றாள் அவளிடம்.
“இல்ல, நான் அவங்கள பார்க்கவே இல்ல”, என்றாள் புரியாமல்.
பெரியவர்கள், ‘இவள் என்ன சொல்கிறாள்’, என்று புரியாமல் விக்ரமை பார்த்துவிட்டு மிருவை கவனித்தனர். சங்கு ஒன்று புரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“அமர், நீ சொல்லு இவங்கள தானே நேத்து பார்த்தோம்?”, என்றாள் பக்கத்தில் சென்று.
“பாப்பா, ரிலாக்ஸ்! எதுக்கு பதறுர? ஒன்னும் இல்ல டா”, என்றான் அவள் தோளைத் தட்டி.
“அமர் கேட்டதுக்கு பதில் சொல்லு”.
“நான் கவனிக்கல டா. இவங்களா எப்படி டா இருக்கும்? நீ ஏன் தேவையில்லாமல் போட்டு குழப்பிக்கிற? கூல்”, என்றான் அவள் தலையை கோதி.
“இல்ல… இல்ல… ராகவ், நீங்க சொல்லுங்க, நாம நேத்து பார்த்தது இவங்கள தானே?”, என்றாள் அவன் பக்கத்தில் சென்று.
“அட! என்னம்மா நீ வேற, ஏழரை பின்னாடி வந்தா யாராச்சு திரும்பி பார்ப்பாங்களா?”, என்றான் கிண்டலாக.
“இல்ல… இல்ல… இவங்க தான், நீங்க சொல்லுங்க நாம நேத்து பார்த்தது இவங்க தானே?”, என்றாள் விக்ரம் பக்கத்தில் சென்று.
“அது தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?”, என்றான் பொறுமையாக கைகளை கட்டிக்கொண்டு.
“நான் தெரிஞ்சுக்கணும் சொல்லுங்க, நாம பார்த்தது இவங்க தானே?”, என்றாள் கெஞ்சலாக.
“தினமும் ஆயிரம் பேர பார்க்குறோம். எல்லாரையும் ஞாபகம் வச்சுக்க முடியாது, அம்மா பசிக்குது சாப்பாடு எடுத்து வைங்க”, என்று விலகி சென்றான்.
அமர், அனு, ஸ்ரீ, ராகவ் மிருணா பக்கத்திலே இருந்தனர். மற்றவர்கள் சாப்பிட சென்றனர். மிருணா வேகமாக ரிமோடை எடுத்து வேறு செய்தி சேனலை மாற்றி மாற்றி பார்த்தாள். மறுபடியும் அந்த புகைப்படங்களை பார்த்து கொண்டே இருந்தாள்.
“பாப்பா நீ முதல்ல வந்து சாப்பிடு. தேவை இல்லாம யோசிச்சு மனச போட்டு குழப்பிக்காத”, என்றான் பொறுமையாக.
[the_ad id=”6605″]
“இரு அமர், ராகவ் உண்மைய சொல்லுங்க”, என்றாள் அவனை கூர்மையாக பார்த்து.
“என்ன உண்மைய?”, என்றான் புரியாமல்.
“நீங்க போலீஸ், நீங்க இவங்கள பார்க்கலன்னு சொல்றத என்னால நம்ப முடியல “, என்றாள் கோபமாக.
“மிருணா, நேத்து என்ன தான்டி அப்படி நடந்துச்சு? எனக்கு தலையும் புரியல வாலும் புரியல, எதுக்கு நீ இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க?”, என்றாள் அனு புரியாமல். மிருணா நடந்த அனைத்தையும் சொன்னாள்.
சக்கரவர்த்தி, சோமு, விக்ரம் சாப்பிட்டு வெளியே வந்தனர். சக்கரவர்த்தியும் சோமுவும் வெளியே சென்றனர்.
“மிருணா, தயவு செஞ்சு வெளிய வராத டி”, என்றாள் அனு கெஞ்சலாக.
“ம்ம்… சரி டி”, என்றாள் யோசனையுடன்.
“என்ன எல்லாரும் விரதமா? சாப்பிட வராம இருக்கீங்க, அம்மா வேற சங்கு வந்ததுக்கு ஸ்பெஷலா பண்ணி இருக்காங்க, இப்ப போயி விரதம் இருக்கீங்களே?”, என்றான் விக்ரம் கிண்டலாக பக்கத்தில் வந்து.
மிருணா வேகமாக அவன் சட்டையை பிடித்து இழுத்து, “ஏன் இப்படி பண்ணுன? பத்து பேர் செத்துட்டாங்க, இதுலாம் தப்பு இல்லையா? நீ தானே பண்ணுன?”, என்றாள் கோபமாக.
“முதல்ல டிரஸ விடுடி”, என்றான் கோவமாக.
“நான் அப்படிதான் பிடிப்பேன் சொல்லு, ஏன் இப்படி பண்ணுன? உயிர கொல்றது பாவம் இல்லையா? அவங்க ரவுடி தான், இருந்தாலும் கொல்றதெல்லாம் ரொம்ப தப்பு தானே?”, என்றாள் கலங்கிய குரலில்.
‘இவளுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்? எப்படி கண்டுபிடிச்சா?’, என்று நினைத்துக்கொண்டே, “உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சுருச்சா? நான் வீட்ல தானே இருக்கேன், நான் எப்படி கொல்லுவேன்?”, என்றான் அவள் கையை சட்டையில் இருந்து எடுத்து விட்டு.
“இல்ல நீ தான்.. ஏன் இப்படி பண்ணுன? ஒரு உயிர் உருவாகுறது எவ்ளோ கஷ்டம்?”, என்றாள் அவன் மார்பில் அடித்து அழுது கொண்டே.
“இப்ப எதுக்குடி அழுகுற? நான் வெளிலயே போகலனு சொல்றேன்ல”, என்றான் சமாதானமாக கண்ணீரைத் துடைத்து.
“நீ பொய் சொல்ற, இதுக்கு ராகவும் துணை. ரெண்டு பேரும் சேர்ந்து தானே இப்படி பண்ணுனீங்க, உயிர கொல்வது பாவம் இல்லையா? அத நாம ஏன் பண்ணனும்?”, என்றாள் அழுகையுடன்.
“ப்ச்… நாங்கதான் வெளில போகவே இல்லையேடி அழாத ஒன்னும் இல்ல”, என்று அணைத்துக் கொண்டான். அனு லேசான அதிர்ச்சியுடன் பார்த்தாள். மற்ற மூவரும் சிரிப்புடன் பார்த்தனர்.
“என்னால தான் அவங்க செத்துட்டாங்களா?”, என்றாள் விலகி அவனைப் பார்த்து.
விக்ரம் அவள் முகத்தில் இருந்த மூடியை, காதுக்குப் பின்னால் சொருகிக் கொண்டே,
“உன்னால எதுக்கு அவங்க சாகணும்? நீ சமைச்சு சாப்பிட்டு சாப்பிடலைய, தூப்பாகில சுட்டு தானே செத்து போய்ட்டாங்கன்னு நியூஸ்ல சொன்னாங்க, பார்க்கலையா? ஒருவேள அது உண்மை இல்லையா?”, என்றான் குறும்பாக.
“உன்ன…”, என்று அவனை அடித்தாள். விக்ரம் அவள் அடியை கைகளை கட்டி வாங்கிக் கொண்டு நின்றான்.
“ஓய்! உன் மேல செம்ம கோவத்துல இருக்கேன்டி. நீ இவ்ளோ அடிச்சியே, நான் ஒரு அடி திருப்பி கொடுத்தேன், நீ கீழ விழுந்துக்கிடப்ப”, என்றான் முறைப்புடன்.
“நீ என்ன பெரிய இவனா? போடா, ஸ்ரீ , அனு சாப்பிட போலாம் வா”, என்று இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.
“டேய்! விக்கி இவளுக்கு எப்படி டா தெரிஞ்சது?”, என்றான் ராகவ் மெதுவாக.
[the_ad id=”6605″]
“இது உங்க வேலை தானடா?”, என்றான் மெதுவாக.
“ம்ம்… ஆமா அமர். எப்படி அவளுக்கு தெரிஞ்சதுன்னு தெரியல, அவ கிட்ட எப்படி தெரியும்னு கேட்டு சொல்லு”, என்றான் விக்ரம் யோசனையுடன்.
“சரி…”.
சென்னை:
“யோவ்! கமிஷனர் ஒரு பொட்ட புள்ளைய பிடிக்க முடியல , எவனோ சிஐடின்னு ஒருத்தேன் கிட்ட கேஸ கொடுத்தியே, அவனாச்சும் கண்டுபிடிச்சானா? எல்லாம் சுத்த வேஸ்ட்டா இருக்கீங்க டா”, என்றான் சிவா கோபமாக.
“மிருணாவோட அப்பா, அம்மா, தங்கச்சி அமெரிக்கால இருக்காங்கன்னு தெரியும், ஆனா அங்க எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிக்க முடியல, ராகவ் இப்ப அவர் சொந்த ஊருக்கு போயிருக்காரு. வந்ததும்தான் அவர்கிட்ட கேக்கணும்”, என்றார் லேசான பயத்துடன்.
“அவன் சொந்த ஊர் எதுன்னு சொல்லு? நானே நேர்ல போய் கேக்குறேன்”, என்றான் கோபமாக.
“ஊட்டி”, என்றார்
மிருணா எப்படி விக்ரம் போட்ட பிளானை கண்டுபிடித்தாள்? சிவா ஊட்டி செல்வானா? அங்கு மிருணாவை பார்ப்பானா? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்………………………..
கைதியின் சிறை தொடரும்……………………………