மிருணா கோவமாக மேலே சென்றாள். சங்கவியைத் தவிர, மற்றவர்களும் அவள் பின்னால் சென்றனர். வேகமாக அவள் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். “மிருணா, அவ சொல்றத கேட்டுட்டு நீ ஏன் கிளம்பற?”, என்றாள் ஸ்ரீ அவளை தடுத்து.
“ஸ்ரீ, விடு என்னைய”, என்று நகர்ந்து சென்றாள்.
“மிருணா, நீ வெளிய போனா உனக்கு இருக்க ஆபத்து தெரியும்ல? தெரிஞ்சிருந்தும் அவ சொன்னான்னு நீ கிளம்பலாமா?”, என்றாள் அனு அவள் கையை பிடித்து.
“இங்க பாரு மிருணா, நீ கோவத்துல எடுக்குற முடிவு எதுவும் சரியா இருக்காது”, என்றான் ராகவ்.
“நான் தானே முடிவு எடுக்குறேன், அதனால வர ஆபத்த நானே பார்த்துக்குறேன்”, என்று கோவமாக அனுவின் கையை விலக்கிவிட்டு துணியை எடுத்து வைத்தாள்.
“பாப்பா, போதும்! நீ பண்ணுன ஒரு வேலைக்கு தான், அப்பா, அம்மா, விஷா மூணு பேரும் யூஎஸ்ல இருக்காங்க. மறுபடியும் ஏதாச்சும் பண்ணி வைக்காத”, என்றான் அமர் கோவமாக.
“ஓ! எல்லாத்துக்கும் நான் தான் காரணம்னும் நீ பேசுறல? பேசு பேசு! நல்லா பேசு! எல்லாம் என் தப்புதான். நான் தான் அந்த சிவாவ என் பின்னாடி சுத்த சொன்னேன்ல?”, என்றாள் கோபமும் அழுகையுமாக.
“நான் அப்படி சொல்லல டா”, என்றான் பாவமாக.
“வேற எப்படி அமர் சொல்ற? என்னால தான் அப்பா, அம்மா, விஷா கஷ்டப்படுறாங்க, அவங்க மட்டுமா? நீயும் தானே கஷ்டப்படுற? என்னால தானே உன் கல்யாணம் தள்ளி போச்சு? எல்லாம் என்னால தான், யாருக்கும் நான் பாரமா இருக்க விரும்பல”, என்று கோபமும் அழுகையுமாக பேக்கில் அடுக்கினாள் .
மூவரும் இயலாமையுடன் விக்ரமை பார்த்தனர். எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல், அவள் எடுத்துவைக்கும் துணியை மீண்டும் எடுத்து கப்போர்டில் வைத்தாள். “நீ என் கிட்ட அடி வாங்க போறடி அனு. கம்முனு இருக்க மாட்டியா?”, என்று திட்டினாள்.
“நான் என்னடி பண்ணுனேன்?”, என்றாள் அப்பாவியாய்.
‘அட நம்ம ஆளு சரியான ஆளுதான் போல. பண்றதெல்லாம் பண்ணிட்டு அப்பாவி மாதிரி முகத்தை வச்சிருக்குறா டார்லிங்’, என்று ராகவ் மனதிலயே கொஞ்சினான்.
“சும்மாயிரு டி”, என்றாள் கோபமாக.
விக்ரம் வெளியே செல்லும்படி கண் ஜாடை காட்டினான். ஸ்ரீ அனுவின் கையை பிடித்து இழுத்தாள். “நீ எங்க இழுக்குற? அடுக்கி முடிக்க போறா டி”, என்றாள் மெதுவாக.
“நீ வா அண்ணா பேசிப்பான்”, என்று ஸ்ரீ அனுவை இழுத்து சென்றாள். விக்ரம் தவிர அனைவரும் வெளியே சென்றனர்.
மிருணா அழுகையும் கோபமுமாக, “எருமமாடு! எடுத்து வச்ச எல்லாத்தையும் கப்போர்டுல வச்சுருச்சு”, என்று திட்டிக்கொண்டே அடுக்கினாள். விக்ரம் கைகளை கட்டி பார்த்துக் கொண்டே இருந்தான். யார் சத்தமும் கேட்காமல் அமைதியாக இருப்பதை, அப்போதுதான் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள். விக்ரம் சிரிப்புடன் நின்றான்.
“ஏய்! நீ மட்டும் எதுக்கு நிக்கிற? போக வேண்டியது தானே”, என்றாள் கோபமாக.
விக்ரம் நிதானமாக கூர்மையான பார்வையுடன், மிருணா பக்கத்தில் வந்தான். “இப்ப எதுக்கு எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு இருக்கே?”, என்றான் பொறுமையாக.
“ம்ம்.. எல்லாம் தெரிஞ்சு கிட்டு தெரியாத மாதிரி கேட்காத, எல்லாத்துக்கும் காரணம் நீதான், ஆமா நீ பாட்டுக்கு தனியா வந்து பேசுற, எங்க உன் கொள்கை பரப்பு செயலாளர்? அவளுக்குத் தெரியாம வந்தியா?”, என்றாள் நக்கலாக.
“நான் ஏன் தெரியாம வரணும்? நீ என்ன என் கள்ள பொண்டாட்டியா?”, என்றான் கிண்டலாக.
“உன்ன! என் வாய கிளறாத, நான் எடுத்து வைக்கணும் கிளம்பு முதல்ல”, என்றாள் கோபமாக.
“நான் உன்ன எதுவும் பண்ணல, எடுத்து வை. எங்க போறன்னு சொல்லு. நானே உன்ன விட்டுறேன்”, என்றான் சாதரணமாக.
“எனக்கு போய்க்க தெரியும். யாரோட உதவியும் எனக்கு தேவையில்ல”, என்றாள் கோபமாக.
“மிரு, யாரோட உதவியும் இல்லாமல் தனியா வாழ முடியாது. வீணா வீம்பு பிடிக்காம, எடுத்துவச்ச துணிய காப்போர்டுல எடுத்து வை”, என்றான் கண்டிப்பான குரலில்.
“நீ சொன்னா நான் கேட்கணுமா? நான் கேக்குற எந்த கேள்விக்காச்சும் பதில் சொன்னியா? உன்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்குறப்ப, அவ எதுக்கு நடுவுல வரா, இது உன் வீடு, நான் இங்க கெஸ்ட்டா தான் வந்து இருக்கேன், அதுனால கேள்வி கேட்க கூடாது அப்படி தானே?”, என்றாள் கோபமாக.
“உன்ன இங்க யாராச்சும் கெஸ்ட் மாதிரி நடத்தறாங்களா? இல்லல்ல. உன்ன இந்த வீட்டில ஒருத்தியா தானே நடத்துறாங்க. அப்புறம் எதுக்கு அவ சொல்றத எல்லாம் காதுல வாங்கிற”, என்றான் பொறுமையாக.
[the_ad id=”6605″]
“எப்படி வாங்காம இருக்க சொல்ற? நான் அப்படி எல்லாம் இருக்க மாட்டேன், பாரு என்னால தான் எல்லாருக்கும் பிரச்சன. எங்கயாச்சும் நான் போறேன்”, என்று அவன் மார்பில் கை வைத்து தள்ளி விட்டு, துணியை பெட்டியில் அடுக்கினாள்.
விக்ரம் அவளை பின்னால் அணைத்து கழுத்தில் முகத்தை வைத்தான். “விடு என்னைய, ஏற்கனவே செம்ம கோவத்துல இருக்கேன். நீ வேற அடிவாங்காத”, என்று கோபமாக அவன் கையை எடுக்க முயற்சி செய்தாள்.
விக்ரம் அவளை வேகமாக முன்னால் திருப்பி அணைத்துக்கொண்டான். “விடு டா என்னைய, நான் போறேன்”, என்று திணறினாள். அவள் திமிரியது, அவனிடம் எடுபடவில்லை. அமைதியாக அவன் மார்பில் புதைந்து கொண்டாள் .
அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது. விக்ரம் லேசாக விலகி கை வலைவிலே வைத்துக்கொண்டே, “இப்பல்ல நீ ரொம்ப மாறிட்ட மிரு. எதுக்கு எடுத்தாலும் சண்ட போடுற, அழுகுற என்ன இதெல்லாம்?”, என்றான் கண்ணீரை துடைத்து. மிரு அவன் முகத்தை பார்த்தாள். “இன்னைக்கே எத்தன தடவ அழுத சொல்லு? உனக்கு அழுக கூட தெரியுமா?”, என்றான் கிண்டலாக.
“ஏன்டா இப்படி பண்ற? நான் கேட்ட கேள்விக்கு ஒன்னுகாச்சும் பதில் சொல்றியா? நீ பதில் சொல்லாதனால தான் டென்ஷனாகி சண்டை போடுறேன்”, என்றாள் அழுகையுடன்.
“நான்தான் பண்ணுனேன்னு எப்படி சொல்ற?”, என்றான் புருவம் உயர்த்தி.
“நேத்து நாம டிரஸ் வாங்கிட்டு வரப்ப, நீ தான் முதல்ல ரவுடி எல்லாத்தையும் கவனிச்சு அழச்சிட்டு போன, யாராவது வராங்களான்னு கவனிச்சுக்கிட்டே இருந்த”.
“அடியே! இதெல்லாம் நார்மல் டி. இதுக்கு போய் என்னைய இந்த கேள்வி கேக்குற?”, என்றான் சலிப்புடன்.
“இதெல்லாம் ஒரு காரணமா டி? எங்களுக்கு எஸ்டேட்டுல் கொஞ்சம் வேல இருந்தது”, என்றான் சிரிப்புடன்.
‘ஸ்சப்பா… இந்த சப்ப விஷயத்துக்காக என்கிட்ட இவ்ளோ கேள்வி கேட்டா? இனிமே ஈஸியா சமாளிச்சுடலாம் இவள’, என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
“இல்ல நீ பொய் சொல்ற, நேத்து நைட்டு நான் மூணு மணி போல எழுந்து, பாத்ரூம் போய்விட்டு வந்தேன். அப்ப நீ ரூம்ல இல்ல, விடிஞ்சு பார்த்தா இருக்க, நைட் முழுக்க நீதான் என்னைய பார்த்து கிட்டன்னு ஸ்ரீ சொன்னா. அப்ப மூணு மணிக்கு எங்க போன?”, என்றாள் கூர்மையான பார்வையுடன்.
‘அட இவ நடுல எழுந்து இருக்காளா? சரி சமாளிப்போம்’, என்று நினைத்துக்கொண்டே, “இது எல்லாமே உன்னோட கெஸ்ஸிங் தான், நைட் ஷர்ட் கூட போடாம உன் ரூமுக்கு வந்துட்டேன், குளிர ஆரம்பிச்சிருச்சு. அதனால்தான் ஷர்ட் போட ரூமுக்கு போனேன், அதுக்கு இப்படி ஒரு கதையா கட்டிட்ட”, என்றான் சலிப்போடு.
“உன்கிட்ட நா விளையாடக்கூடாத டி? சின்னபுள்ள மாதிரி இதுக்கு போய் சண்ட போடுற”, என்றான் கன்னம் கில்லி.
“ஆ.. வலிக்குதுடா”, என்றாள் அவன் மார்பில் குத்தி கொண்டே.
விக்ரம் சிரிப்புடன், “நீ அடிக்கிறது எனக்கு வலிக்கவே இல்லடி”.
“நீதான் பனமரம் மாதிரி வளந்து இருக்கியே. அப்பா… எனக்கு தான் கை வலிக்குது”, என்றாள் முறைப்புடன்.
“நானா உன்ன அடிக்க சொன்னேன்”, என்றான் சிரிப்புடன்.
“சிரிக்காதடா! எரிச்சலா இருக்கு. விடு நான் கிளம்பறேன்”, என்று திமிறினாள்.
“அடியே! மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்காத டி”, என்றான் முறைப்புடன்.
மிருணா அவன் கையை கிள்ளினாள். “ஆ….”, என்று விடுவித்தான். “ஏன் டி கிள்ளுற?”, என்றான் கையைத் தேய்த்துக் கொண்டே.
“நான் கிளம்பனும் அதுக்குதான், என்னால இங்க இருக்க முடியாது”, என்று பேக்கை எடுத்தாள்.
பேக்கை பிடிங்கி தூக்கி போட்டான். “உனக்கு என்ன பைத்தியமா டி? வெளில போனா உனக்கு ஆபத்து இருக்கனால தானே, இங்க இருக்க, இல்லன்னா யூஎஸ் போயிருக்கலாமே? எல்லாம் தெரிஞ்சும் இது என்ன பிடிவாதம் மிரு?”, என்றான் கோவமாக.
“ஆமா எனக்கு பைத்தியம் தான், எனக்கு என்ன பிராப்ளம் வந்தாலும் நானே பார்த்துக்குறேன். யாரும் என்னைய பத்தி கவலைப்பட வேண்டாம், அந்த சிவா என்னைய என்ன பண்ணப் போறான்? மிஞ்சி மிஞ்சி போனா, என்னைய கல்யாணம் பண்ணி என் வாழ்க்கைய அழிக்க போறான். அதுக்கு நான் உயிரோட இருந்தா தானே?”, என்று அவனை பார்க்காமல் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டே போனாள்.
“மிரு..”, என்று கோவமாக அடிக்க கை ஓங்கினான். மிருணா பயத்துடன் பார்த்தாள். “ச்ச.. “, என கையை கீழே இறக்கி, “ஏன் டி பேசிப் பேசிச் சாகடிக்கிற? நீ சாகுனும்னு நினைச்சா, உன்ன எதுக்கு காப்பாத்தி இங்க அழைச்சிட்டு வர போறோம்? எங்கள பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா?”, என்று அங்குள்ள பூ ஜாடியை எடுத்து உடைத்தான்.
மிருணாவுக்கு பயத்தில் உடல் நடுங்கி கண்கள் கலங்கியது. தன் கோபத்தை தலையை கோதிக் கட்டுக்குள் கொண்டு வந்து ஒர் பெருமூச்சு விட்டான். “நீயூம் என்னைய திட்டுறல்ல?”, என்றாள் அழுகையுடன்.
[the_ad id=”6605″]
விக்ரம் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு, “இல்ல மிரு, திட்ட மாட்டேன், நீ ஓவரா பேசுற. அதான் கோவம் வந்துச்சு. கொஞ்சம் யோசிச்சு பாரு, உன் அப்பா அம்மா, நாங்க உன்ன நல்லா பார்த்துக்குறனால தானே, அங்க நிம்மதியா இருக்காங்க? உன் அசட்டு துணிச்சலால அவங்க நிம்மதிய போக்கப் போறியா?”, என்றான் விலகி அவள் இரு கன்னத்திலும் கைவைத்து.
“சரி நானாவே இருந்துட்டு போறேன், மாமா சொல்றத கேளு வீட்டை விட்டு வெளியே வராத சரியா”, என்றான் சிரிப்புடன்.
“ம்ம்.. சரி! ஆனா நீ சொன்னதுக்காக ஒன்னும் ஒத்துக்கல. எனக்கு தோணுச்சு அதனாலதான் ஒத்துகிட்டேன்”, என்றாள் கெத்தாக.
“ம்ம்.. சரி மா தாயே! நீ தான் யோசிச்சு முடிவு பண்ணுன, நான் ஒன்னும் பண்ணல சொல்லல போதுமா”, என்றான் சிரிப்புடன் அவள் நெற்றியில் லேசாக முட்டி.
“நீ சரியான ஆள் தான். ஏதேதோ பேசி ஒத்துக்க வச்சுட்ட, இதுல நடுவுல நடுவுல, மாமா மாமான்னு உன்ன நீயே சொல்லிக்கிற”, என்றாள் கிண்டலாக.
“நான் உனக்கு மாமா தானே?”, என்றான் குறும்பாக.
“அப்படிலாம் இல்ல”, என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
“ஒத்துக்க மாட்டியா? சரி இட்ஸ் ஓகே! நான் சொல்றத கேளு குட்டிமா, யார் கூப்பிட்டாலும் வீட்டை விட்டு வெளிய வராத, நான், ராகவ், அமர் மூணுபேரும் நைட்டு கிளம்புறோம். ஸ்ரீயும் சங்கவியும் வெளிய போகட்டும். நீ கூப்பிட்டாலும் போகாத”, என்றான் தீவிரமாக அவள் தலைமுடியை கோதி.
மாடியில் உள்ள ஹாலில் நான்கு பேரும், இவனுக்காக காத்துக்கொண்டிருந்தனர். இவன் வருவதை பார்த்ததும் பக்கத்தில் வந்தனர். “அண்ணா.. விக்கி.. என்னாச்சு?”, என்றனர் நால்வரும்.
“அவள சமாதானம் பண்ணிட்டேன். இங்க இருந்து பேச வேணாம். வாங்க கீழ போலாம்”, என்று இறங்கினான்.
சங்கவியின் கோவமாக சோபாவில் உட்கார்ந்திருந்தாள். இவர்கள் இறங்கி வந்ததும். “அத்தான் நீங்க எல்லாரும் எதுக்கு அவள போய் சமாதானம் பண்ண போறீங்க?”, என்றாள் எழுந்து கோபமாக. மீனாட்சி மற்றும் வாணி தூங்கி எழுந்து வெளியே வந்தனர்.
“சங்கவி போதும். என்ன நினைச்சுட்டு இருக்க, அவ என் தங்கச்சி, நான் இந்த வீட்டு மாப்பிள்ள, என் தங்கச்சிக்கு மரியாதை இல்லாத இடத்துல நான் ஏன் இருக்கணும்? நானும் பார்த்துகிட்டே இருக்கேன், அவள வாய்க்கு வந்த மாதிரி பேசுற. மதியானம் விக்கி ரூம்ல, நீ என்ன இந்த ரூமுக்கு சொந்தக்காரி, அப்படி இப்படின்னு பேசியிருக்க. என்ன நினைச்சுட்டு இருக்க? நீயும் இந்த வீட்டுக்கு வந்துருக்க கெஸ்ட் தானே? என்னமோ இந்த வீட்டுக்கு சொந்தக்காரி மாதிரி அவள பேசுற”, என்றான் அமர் கோவமாக.
“அண்ணா! போதும். உங்க தங்கச்சிய விட எனக்குத்தான் உரிமை அதிகம. வருங்காலத்துல நான் சொந்தக்காரி ஆகிடுவேன்”, என்றாள் திமிராக.
“நீ வருங்காலம் தான். நான் நிகழ்காலத்தில் சொந்தமானவன், என் தங்கச்சிக்கு மரியாத இல்லாத இடத்துல நான் மட்டும் எதுக்கு இருக்கணும்? மிருணா மிருணா! வா நாம போகலாம்”, என்று சத்தம் போட்டான்.
“அமர், அவளே இப்பதான் சமாதானம் பண்ணிருக்கோம், கொஞ்சம் அமைதியா இருங்க, ஏய்! எதுக்குடி என் வாழ்க்கையக் கெடுக்குற? நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன், ஓவரா பேசுற. நான் இந்த வீட்டுக்கு சொந்தக்காரி, நான் தான் முடிவு பண்ணனும் யார் இருக்கணும் யார் இருக்கக்கூடாதுன்னு”, என்றாள் ஸ்ரீ கோவமாக.
“ஸ்ரீ, நீ என்ன இப்படி பேசுற? அவ உன் அண்ணாவ அடக்கிறா, திட்டுறா, கேள்வி கேட்கிறா, அத நான் கேட்டதுக்கு என்னைய குத்தம் சொல்ற”, என்றாள் கோபமாக.
“சங்கவி போதும்! அவ என்னைய தானே அடிச்சா? கேள்வி கேட்டா? அத நான் பார்த்துக்குறேன். எனக்கு சப்போர்ட் பண்ணி பேச உன்ன நான் கூப்பிட்டேனா? இல்லல்ல. யாராச்சும் மிருவும் நானும் பேசுறப்ப நடுவுல வந்தாங்களா? நீ மட்டும் எதுக்கு வர? இப்படி பண்றது இதுவே கடைசி தடவையாக இருக்கட்டும்”, என்றான் கோபமாக.
“அத்தான், நீ கூட என் மேல கோவப்படுறல”, என்றாள் அழுகையுடன்.
“இங்க பாரு சங்கவி, மிருணாவ நாங்க வெளியள பார்க்கல. இந்த குடும்பத்துல ஒருத்தரா தான் பார்க்குறோம். அவ மனநிலை மாறனும் தான் இங்க இருக்கா, அவ கிட்ட போய் நீ சண்ட போட்டா, உன்ன தான் திட்டுவோம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு”, என்றான் ராகவ் பொறுமையாக.
“அத்தான் அதுக்காக எல்லாரும் இப்படி என்னைய திட்டுவீங்களா?”, என்றாள் அழுகையுடன்.
“இங்க பாரு சங்கவி, மிருணா இப்ப இங்க இருந்தா தான், அவளுக்கு பாதுகாப்பு. இனிமே அவ கூட சண்ட போடாத ப்ளீஸ்”, என்றாள் அனு கெஞ்சலாக.
“ம்ம்… சரி”, என்றாள் அரைமனதுடன். அம்மாக்கள் இருவரும் சங்கவியை முறைத்துவிட்டு கிச்சனுக்கு சென்றனர். அனைவரும் தோட்டத்துக்கு சென்று உட்கார்ந்தனர். மிருணா கீழே வந்தாள்.
“மிருணா இந்த டீயை எல்லாருக்கும் கொடுத்துடுறியா டா? எனக்கு கிச்சன்ல வேல இருக்கு”, என்றார் மீனாட்சி.
“சரி அத்த”, என்று வாங்கி சென்றாள். ஸ்ரீ அமரை முறைத்துக் கொண்டு இருந்தாள்.
“சும்மா இரு அனு. ஹனி சாரி டி, ஏதோ கோவத்துல”, என்றான் தயங்கியபடி.
“எனக்கு நீ பேசுனது கஷ்டமா இருக்காதா?”, என்றாள் கலங்கிய குரலில்.
“ஸ்ரீ மிருணா வரா”, என்றான் ராகவ் மெதுவாக. அனைவரும் திரும்பிப் பார்த்தனர். ஸ்ரீ வந்த அழுகையை தனக்குள்ளே மறைத்துக் கொண்டாள்.
“இந்தாங்க, எல்லாரும் டீ எடுத்துக்கோங்க”, என்றாள் சிரிப்புடன். அனைவரிடம் கொடுத்தாள். அனைவரும் எடுத்துக் கொண்டனர். மிருணா ஓர் காப்புடன் அனுவின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“சாரி மிருணா! நான் உன்கிட்ட தேவை இல்லாம சண்ட போட்டுட்டேன்”, என்றாள் சங்கவி.
“இட்ஸ் ஓகே”, என்றாள் குடித்துக்கொண்டே.
“என்னடி எப்படி சமாதானமான? நாங்க கெஞ்சுனப்பல்லாம், முடியாதுன்னு துணியெல்லாம் எடுத்து வச்ச. அதுக்கப்புறம் எந்த மரத்தடியில் போய் உட்கார்ந்த அறிவு கிடைச்சிருக்கு”, என்றாள் அனு கிண்டலாக.
“ஆமாம் பேபி எப்படி ஒத்துகிட்ட? அண்ணா அப்படி என்ன சொன்னாரு? என்ன பண்ணாரு?”, என்றாள் ஸ்ரீ புருவம் உயர்த்தி கிண்டலாக.
மிருணாவின் உதத்தில் ரகசிய புன்னகை விக்ரமை பார்த்து பூத்தது. “அது ஒன்னும் இல்ல பேபி, உன் அண்ணா கால்ல விழாத குறையா கெஞ்சுனாரு. இவ்ளோ பெரிய ஆள் வந்து கெஞ்சுறாரே, போனா போகுதுன்னு ஒத்துக்கிட்டேன்”, என்றாள் கெத்தாக. விக்ரம் இருமினான்.
“ஓ…”, என்றனர் ஸ்ரீ, அமர், ராகவ், அனு நான்குபேரும். சங்கவிக்கு வந்த கோவத்தை அடக்கிக் கொண்டு இருந்தாள்.
“ஹேய்! என்ன எல்லாரும் நான் சொல்றதை நம்பாத மாதிரி கத்துறீங்க?”, என்றாள் சிரிப்புடன்.
“இல்லல்ல, நம்புறோம்! நம்புவோம்!”, என்றனர் ஸ்ரீ மற்றும் ராகவ் கிண்டலாக.
“இல்லையே! நீங்க சொல்றத பார்த்தா அப்படி தெரியலையே. உள்ள இதானே நடந்துச்சு? நீங்களே சொல்லுங்க”, என்றாள் விக்ரமை பார்த்து. விக்ரம் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு சிரித்தான்.
சங்கவி அங்க இருக்க பிடிக்காமல், குடித்து வைத்த கப்பை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள். “பார்த்தீங்களா?”, என்றாள் இல்லாத காலரை தூக்கிவிட்டு. அனைவரும் சிரித்தனர்.
“பாப்பா இன்னிக்கு நைட்டு நான் கிளம்பறேன், பார்த்து இரு. நான் முடிஞ்சா கால் பண்ணுறேன்”, என்றான் எழுந்து அவள் பக்கத்தில் வந்து.
“தெரியும் அண்ணா. விக்ரமன் சொன்னாரு. இன்னும் ஒரு நாள் இருந்துட்டு போகலாம்ல”.
“இல்லடா, இப்பவே அவனுங்க என்னைய எங்கன்னு தெரியாம தேடித்து இருப்பாங்களோ தெரியல. அனு அடிக்கடி வந்து போ டா, பார்த்துக்கோ”, என்றாள் அவளிடம்.
“அண்ணா, இத நீங்க சொல்லனுமா? நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. நான் வந்து பார்த்துக்குறேன்”, என்றாள் எழுந்து.
“அண்ணா சுதா எப்படி இருக்கா? நான் கேட்டேன்னு சொல்லு”.
“அண்ணா, அவளுக்கு நான் கால் பண்ணுனேன், கால் போகல, ஏன்?”, என்றாள் அனு. அமரின் முகம் மாறியது.
சுதாவிற்கு என்ன ஆனது? இன்னும் எதை இவர்கள் மறைக்கிறார்கள்???என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…………………………………………….