காவலனின் கைதி அவள்-14
“அண்ணா, ஏன் இப்படியே நிக்கிற? சுதாவுக்கு என்னாச்சு? ஒன்னும் இல்லையே?”, என்றாள் மிருணா பயத்துடன்.
“ச்சேச்சே.. உன் ஃப்ரெண்ட் நல்லா இருக்கா மிரு. உனக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம்?”, என்றான் விக்ரம் எழுந்து பக்கத்தில் வந்து.
“ஆமா! நாங்க சுதாவ வரப்ப பார்த்துட்டு தான் வந்தோம்“, என்றான் ராகவ் பக்கத்தில் வந்து.
“ஓ.. ம்ம்..”, என்றாள் அரைமனதுடன்.
“அவ என்ன சொன்னா?”, என்றாள் அனு ஆர்வமாக.
“என்ன சொன்னான்னா?”, என்றனர் இருவரும்(விக்ரம் மற்றும் ராகவ்) புரியாமல்.
“மாமியார் வீட்டுல அவள நல்லா பார்த்துக்குறாங்களான்னு கேக்குறேன்“.
“ம்ம்.. நல்லா பார்த்துக்குறாங்க அஜு“.
“ஆமா, உங்கள அவளுக்கு எப்படி தெரியும்?”, என்றாள் சந்தேகமாக.
“அட! என்ன மிருணா இவ்ளோ கேள்வி கேட்குற? நான் தான் கூட்டிட்டு போனேன்“, என்றான் அமர் வேகமாக.
“ஓ..”.
“டேய் அமர்! நீ போய் ஸ்ரீய சமாதானம் பண்ணு, நைட்டு கிளம்பணும்ல“.
“சரி விக்கி, வா ஹனி போலாம்“, என்று கையை பிடித்து தோட்டத்து பக்கம் இழுத்துச் சென்றான்.
“எதுக்கு சமாதானம்?”, என்றாள் புரியாமல்.
“அது ஒன்னும் இல்லடி, இவங்க மாமா பெத்த பொண்ணு ரத்தினம் இருக்கால்ல, அவ உன்ன திட்டுனதுக்கு நம்ம அண்ணா லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாரு“, என்றாள் சிரிப்புடன்.
“இதுக்கு எதுக்கு அனு ஸ்ரீய சமாதானம் பண்ணனும்?”, என்றாள் குழப்பமாக.
“உன் அண்ணா உன்னைய இப்பவே கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டான். எங்க மாமா பெத்த பொண்ணு ரத்தினத்தை, ஸ்ரீ வெளுத்து வாங்கிட்டா. அதுக்கு அப்புறம் தான் அவ அமைதியானா. அமர் கோவப்பட்டு உன்ன அழச்சுட்டு போறேன்னு சொன்னது அவளுக்கு வருத்தம்“, என்றான் ராகவ்.
“ச்ச.. என்னாலதான், தேவை இல்லாம நானே சீன் கிரியேட் பண்ணிட்டேன்“, என்றாள் வருத்தமாக.
“மிரு, அதெல்லாம் ஒன்னும் இல்ல, ஸ்ரீ சமாதானம் ஆயிடுவா, அமரும் அப்படியே விட்டுட்டு கிளம்பி வர மாட்டான்“, என்றான் ஆறுதலாக.
“அஜு டார்லிங்! ஜாக்கி வரான் பாரு, உன்ன இன்ட்ரோ பண்றேன் வா“, என்று கையை பிடித்து இழுத்தான்.
“லூசு! நானே அத பார்த்து பயப்படுவேன். அதுகிட்ட போய் என்னைய இழுத்துட்டு போற“, என்று உதறப் பார்த்தாள்.
“அதெல்லாம் ஒன்னும் பண்ணாது, ஜாக்கி மிருணாவ பார்த்ததும் எப்படி பாச மழை பொழிஞ்சுதுன்னு தெரியுமா?”, என்றான் கிண்டலாக ஜாக்கியின் பக்கத்தில் இழுத்து சென்று.
“நீ சொல்ற தோரணையே சரியில்லையே! எதுக்கும் நான் உனக்கு பின்னாடியே நிக்கிறேன்“, என்று அவனுக்கு பின்னால் நின்றுகொண்டாள்.
விக்ரம் மற்றும் மிருணாவும் சிரித்தனர். “ஓய்! மிரு உனக்கு அறிவு இருக்கா டி?”, என்றான் சம்பந்தமே இல்லாமல்.
“ஏன்? இல்லனா தரப் போறியா? ஆனா அதுக்கு உன் கிட்ட அறிவு இருக்கணுமே, அதான் இல்லையே!”, என்றாள் கிண்டலாக.
“எனக்கு நிறையவே இருக்குடி, உனக்கு தர முடியாது. யூஸ் பண்ணாதவங்களுக்கு நான் ஏன் தரணும்?”, என்றான் கிண்டலாக புருவம் உயர்த்தி.
“ஓ.. இப்ப எதுக்கு இந்த ஆராய்ச்சி?”, என்று இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.
“பின்ன என்னடி, நான் உன் கால்ல விழாத குறையா கெஞ்சுனனா?”, என்றான் புருவம் உயர்த்தி.
“இல்ல காலுலயே விழுந்துட்டே“, என்றாள் கிண்டலாக சிரித்துக்கொண்டே.
“ஏன்டி சொல்ல மாட்ட? நீ சொன்னது பொய்னு அப்பட்டமாக தெரிஞ்சு போச்சு“, என்றான் சலிப்புடன்.
“இல்லயே எல்லாரும் நம்பிட்டாங்களே!”, என்றாள் வேகமாக.
“லூசு! நான் எப்போதுமே யார்கிட்டயும் கெஞ்ச மாட்டேன். எனக்கு கெஞ்சி பழக்கமே இல்ல. அப்படிப்பட்ட என்னைய நீ இப்படி சொன்னா எப்படி நம்புவாங்க“.
“அவங்க எல்லாரும் நம்பிட்டாங்க, அது உனக்கு தான் தெரியல“, என்றாள் தோளை குலுக்கி.
“நீ சொன்னத அமரும் அனுவும் வேணா நம்பி இருக்கலாம், ஸ்ரீயும் ராக்கியும் நம்ப மாட்டாங்க“, என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடையிலே,
“ஏன்? ஏன்?”, என்றாள் வேகமாக.
“ஏய்! அவங்க என் உடன்பிறப்பு டி. அவங்களுக்கு என்னைய பத்தி தெரியாதா?”, என்றான் முறைப்புடன்.
“அப்ப நா ஓவரா பில்டப் பண்ணி மாட்டிக்கிட்டனோ?”, என்றாள் முழித்துக்கொண்டே.
“ஆமா..”, என்று சிரிப்புடன் தலையாட்டினான்.
“இட்ஸ் ஓகே! பரவால்ல விடு, இதெல்லாம் எனக்கு தூசி தட்டுற மாதிரி“, என்று தன் தோளை தட்டிக் கொண்டாள்.
விக்ரம் வேகமாக அவள் இடது கையை பிடித்து, “என்னடி இது கட்டு போட்டிருக்க?”, என்றான் பதட்டமாக.
“நீ உடைச்சு வச்சியே, அத யாரு க்ளீன் பண்ணுவா? கிளீன் பண்றப்ப குத்திருச்சு“, என்றாள் கோபமாக.
“ஏய்! அத வேலைக்காரவங்கள கூப்பிட்டு கிளீன் பண்ண சொல்ல மாட்டியா முட்டாள்“, என்றான் கோபமாக.
“அவங்களும் மனுஷங்கதானே. அவங்க என்ன ரோபோவா? நீ ஒவ்வொரு தடவையும் உடைக்கிறத ரத்தம் வராம கிளீன் பண்ண“, என்றாள் கோபமாக கையை உருவிக் கொண்டு.
“நான் அப்படி சொல்லல, அவங்களுக்கு அது பழக்கப்பட்ட வேலை, எப்படி க்ளீன் பண்ணுனா குத்தாதுன்னு அவங்களுக்கு தெரியும், உனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல“, என்றான் அவள் கையைப் பிடித்து பார்த்து.
“ம்ம்.. பழகிக்கிறேன். இனிமே இப்படி நீ உடைச்சா, நான்தான் கிளீன் பண்ணப் போறேன்“, என்றாள் முறைப்புடன்.
“நீ பண்ணுனா மறுபடியும் குத்திப்ப“, என்றான் முறைப்புடன்.
“அப்பக்கூட உடைக்க மாட்டேன்னு சொல்ல வாய் வருதா பாரு“, என்றாள் கோபமாக.
“அது ரொம்ப கஷ்டம், நீ நான் கோபப்படுற மாதிரி நடந்துக்காம இருந்த எதுவும் நடக்காது“, என்றான் சிரிப்புடன்.
“இது வேறயா“, என்றாள் உதட்டை பிதுக்கி.
ஜாக்கி குரைத்தது. இருவரும் பக்கத்தில் சென்று பார்த்தனர். “ஜாக்கி! இவ தான் உன் சின்ன அண்ணி. பேரு அனுஜா. எனக்கு அஜு டார்லிங்“, என்றான் கீழே முட்டிக்கால் போட்டு உட்கார்ந்து. ஜாக்கி குரைத்தது.
“ஜாக்கி! இவன் சொல்றது பொய். நான் சின்ன அண்ணில்லாம் இல்ல“, என்றாள் கீழே முட்டிபோட்டு உட்கார்ந்து.
“இல்லடா! இவ உன் அண்ணிதான்“, என்றான் வேகமாக.
[the_ad id=”6605″]
“இல்ல, நான் காலையில்ல உன்கிட்ட என்ன சொன்னேன் ஜாக்கி? நான் உன் ஃப்ரெண்ட்ன்னு சொன்னேல்ல, உனக்கு நான் ஃப்ரெண்டு தான் டா“, என்றாள் வேகமாக.
“இல்லடா சின்ன அண்ணி“.
“இல்லடா ஃப்ரெண்ட்“, என்றாள். இருவரும் மாறி மாறி சண்டை போட்டனர். ஜாக்கி குரைக்க ஆரம்பித்தது. அப்பொழுதும் இருவரும் எழுந்து நின்று சண்டையை போட்டுக் கொண்டனர்.
“ஏய்! இதுக்கு எதுக்கு இப்படி சண்டை போடுறீங்க?”, என்றான் விக்ரம்.
ஜாக்கி மீண்டும் குரைத்து விட்டு மிருணாவின் காலை சென்று நக்கியது. “ஏய்! நாய்களா, உங்களால ஜாக்கி டயர்ட் ஆயிட்டடான்“, என்று திட்டிக்கொண்டே கீழே உட்கார்ந்து அதன் தலையை வருடினாள். இவர்கள் கலவர சத்தத்தை கேட்டு அமரும் ஸ்ரீயும் வந்தனர்.
“ஏய்! எங்கடி ஜாக்கி?”, என்றான் அனுவிடம்.
“நீ போட்ட சண்டையில, இந்த வீட்டுக்கு ஒரு நாய் போதும்னு தெரிஞ்சு ஓடிருக்கும்“, என்றாள் நக்கலாக.
“ஏய்! அவன் எங்க தம்பி டி“, என்றான் கோவமாக.
“ஓ.. அது உன்ன பார்த்ததுமே தெரிஞ்சு போச்சு, நீயும் ப்ளூகிராஸ் சேர்ந்தவன்னு“, என்றாள் நக்கலாக. மற்ற நால்வரும் சிரித்தனர். சிரிப்பு சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர்.
“ஜாக்கி, நான் உன் ஃப்ரெண்ட் தான். இந்த டாகி சொல்றத கேட்காத“, என்றாள் வேகமாக.
“இல்ல சின்ன அண்ணி தான், ஜாக்கி அண்ணன் சொல்றத கேளுடா“, என்றான் வேகமாக.
“இவன் பொய் சொல்றான் ஜாக்கி“, என்று மீண்டும் இருவரும் சண்டையை ஆரம்பித்தனர்.
ஜாக்கி வேகமாக கடிப்பதுபோல் பக்கத்தில் ஓடி வந்து, இருவரையும் பார்த்து குரைத்தது. அனு பயத்தில் வேகமாக ராகவ் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
“டேய் ஜாக்கி! அண்ணி பயப்படுறால்ல, பாரு அமைதியா இரு“, என்றான் பொறுமையாக. ஜாக்கி இவனை பார்த்து இன்னும் சத்தமாக குரைத்தது. மற்றவர்கள் சிரித்தனர்.
“டேய்! விக்கி விட்டா என்னையே கடிச்சுருவான் போல, போக சொல்லுடா இவன“, என்றான் வேகமாக.
“ஜாக்கிய ரெண்டு பேரும் சேர்ந்து கடுப்பேத்திட்டிங்க. நாங்க மட்டும் வரல, உன் தொடையில் இருக்க எலும்பை எடுத்து டேஸ்ட் பார்த்துருப்பான்“, என்றான் கிண்டலாக.
“டேய்! விக்கி இப்ப கிண்டல் பண்ற நேரமா டா? சொல்லு டா இவன் கிட்ட, ஜாக்கி ராக்கி அண்ணன் ராக்கி அண்ணன் டா“, என்றான் அதனிடம். ஜாக்கி மீண்டும் குரைத்தது. நால்வரும் சத்தமாக சிரித்தனர்.
“டேய்! சிரிக்கிற நேரமா டா? காப்பாத்து டா கிராதகா“, என்றான் கோவமாக. ஜாக்கி ராகவிடம் சென்றது.
“ஜாக்கி! கம் ஹியர்“, என்றான் விக்ரம் கட்டளையாக. ஜாக்கி ராகவை பார்த்து குரைத்துவிட்டு விக்ரமிடம் சென்றது. விக்ரம் கீழே உட்கார்ந்து அதன் தலையை வருடினான்.
“ஸ்சப்பா.. கொஞ்ச நேரத்துல பயப்பட வச்சுட்டான்“, என்றான் பெருமூச்சுடன்.
“ராக்கி, ஜாக்கி கடைசியா என்ன சொல்லிச்சு தெரியுமா?”, என்றான் அமர் கிண்டலாக.
“அது எதுவும் சொல்லலியே“, என்றான் குழப்பமாக.
“இல்லடா, அதோட வாய்ஸ் எங்களுக்கு கேட்டுச்சு, விக்கி கூப்பிடுறனால நான் போறேன். திரும்பி வருவேன்னு சொல்லுச்சு“, என்றான் கிண்டலாக.
“ஆமா அப்படித்தான் சொல்லிச்சு“, என்றனர் மற்ற மூவரும்.
“அப்படியா சொல்லிச்சு, எல்லாம் உன்னால தான் அஜு“, என்று பின்னால் நின்றவளை முன்னால் இழுத்தான்.
“எல்லாத்தையும் நீ பண்ணிட்டு என்னை சொல்றியா?”, என்றாள் கோபமாக. மீண்டும் இருவரும் சண்டைக்கு தயாரானார்கள். ஜாக்கி குரைத்தது. இருவரும் அமைதியானவர்கள்.
“ஜாக்கி, குட் பாய் தானே குல் டவுன்“, என்று அதன் நெற்றியில் முத்தமிட்டு, வேலையாளை கூப்பிட்டு அழைத்து செல்ல சொன்னான். ஜாக்கி அமைதியாகச் சென்றது.
“இனிமே இப்படி ஜாக்கி முன்னாடி பண்ணக்கூடாது, கொஞ்சம் விட்டா அண்ணன்னு கூட பார்க்காம லெக்க பிஸாக்கிருப்பான்“, என்றான் ராகவ் பெருமூச்சுடன்.
“ஆமா.. ஆமா..”, என்றாள் அனு வேகமாக. பிறகு இவர்கள் அனைவரும் அங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
சங்கவி ஜன்னல் வழியாக இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு, கோபமாக கிச்சனுக்கு சென்று உட்கார்ந்து, “அத்த எனக்கு செம்ம கோவமா வருது“, என்றாள் கோபமாக.
“வா! உன்ன தான் எதிர்பார்த்தேன். உனக்கு எதுக்கு தேவையில்லாத வேல? அமர் தங்கச்சின்னு தெரிஞ்சும், எதுக்கு மிருணா கிட்ட பிரச்சனை பண்ற? உன்னால என் பொண்ணோட வாழ்க்கையே போயிருக்கும்“, என்றார் வாணி கோவமாக.
“அத்த போதும்! ஸ்ரீ ஒன்னும் நீங்க பெத்த பொண்ணு இல்ல. என் அத்தையே அமைதியா இருக்கிறப்ப, நீங்க எதுக்கு திட்டுறீங்க?”, என்றாள் கோபமாக.
மீனாட்சி சங்கவியை அறைந்தார். “அக்கா விடுங்க“, என்று கையைப் பிடித்து வேகமாகத் தடுத்தார். சங்கவி கன்னத்தில் கைவைத்து அதிர்ச்சியுடன் எழுந்து நின்றாள்.
“நீ விடு வாணி. முளைச்சு மூணு இல விடல, என் தங்கச்சிய மரியாத இல்லாம பேசிட்டு இருக்க? இந்த வீட்ல இவங்க இவங்களோட பிள்ளைங்கன்னு, எப்போதுமே நாங்கள் பிரிச்சு பார்த்தது இல்லை. என்ன ஒரு திமிரு? உன் அப்பா விக்ரமுக்கு உன்ன கல்யாணம் பண்ண கேட்டாரு. என் பையன் என்ன விருப்பப்படுறானோ, அத தான் நான் பண்ணுவேன்னு சொல்லிட்டேன். இந்த வீட்டுக்கு நீ இன்னும் அந்த ஸ்தானத்துக்கு வர, நாங்க முடிவு கூட பண்ணல. அதுக்குள்ள எங்கள பிரிக்க பார்க்குறியா? இப்படிப்பட்ட மருமக எப்போதுமே எங்களுக்கு தேவையில்ல“, என்றார் கோபமாக.
“அத்த, சாரி அத்த! நான் ஏதோ கோவத்துல அப்படி பேசிட்டேன். நீங்க அமைதியா இருந்து வாணி அத்த திட்டிட்டாங்கன்னு, கோபத்தில் தான் இப்படி பேசிட்டேன்“, என்றாள் அழுகையுடன்.
“என்னடி கோவத்துல? மிருணாவ நீ இப்படி பேசினதுக்கு, உன் மேல செம்ம கோவத்துல இருக்கேன். அதனாலதான் நான் பேசாம அமைதியா இருந்தேன். வாணி ஸ்ரீய விக்ரம அவ பெத்த பிள்ளைங்களா தான் பார்க்குறா. அவளை போய் இப்படி பேசிட்ட“, என்றார் கோபமாக.
“சாரி அத்தை! ப்ளீஸ் என்னைய மன்னிச்சிடுங்க“, என்றாள் வாணியின் கையை பிடித்து.
“அக்கா, அவ சின்ன பொண்ணு தானே விடுங்க“, என்றார் சமாதானமாக.
[the_ad id=”6605″]
“சின்ன பொண்ணுனா வாய மூடிட்டு இருக்கணும். எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறா, நீ பேசினதுக்கு மிருணா கோபப்பட்டு வெளிய போயிருந்தா என்ன ஆயிருக்கும்? நினைக்கவே பயமாக இருக்கு“, என்றார் நடுக்கத்துடன்.
“அக்கா, அதான் பிள்ளைங்க சமாதான பண்ணிட்டாங்களே விடுங்க“, என்றார் சமாதானமாக அவர் தோளில் கை வைத்து.
“என்னதான் மிருணாவுக்கு பிரச்சன?”, என்றாள் குழப்பமாக.
“அம்மா.. அம்மா..”, என்றனர் மூவரும்(விக்ரம், ராகவ், ஸ்ரீ) உள்ளே நுழையும் போதே.
“இதோ வரோம்டா“, என்றனர் இரு அம்மாக்களும்.
“சங்கவி, இத பத்தி அப்புறம் பேசலாம், பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசணும், சரியா?”, என்றார் வாணி பொறுமையாக.
“ம்ம்.. சரி அத்த“.
“சரி! வாங்க வெளில போலாம். பசங்க கூப்பிடுறாங்க“, என்று மீனாட்சி அழைத்து சென்றார்.
“ஆன்ட்டி, நான் கிளம்புறேன் டைமாச்சு “, என்றாள் அனு.
“ஏன்டா இன்னைக்கு இருந்துட்டு நாளைக்கு போலாம்ல“, என்றார் வாணி.
“இல்ல ஆன்ட்டி, இன்னொரு நாள் வரேன். அம்மா அப்பா இன்னும் வரலையேன்னு பார்த்துக்கிட்டே இருப்பாங்க“.
“அடிக்கடி வாடா, ஒரு நிமிஷம் இரு வரேன்“, என்று வாணியை அழைத்துச் சென்றார்.
அனு மிருணாவையும் ஸ்ரீயையும் என்ன என்பதுபோல் பார்த்தாள். இருவரும் தெரியாது என்பது போல் உதட்டை பிதுக்கினார். கையில் ஒரு தாம்பூலத்தட்டுடன் இருவரும் வந்தனர். “இந்தா டா வாங்கிக்கோ“, என்றார் வாணி. அதில் பட்டுப்புடவை குங்கும சிமிழில் குங்குமம், பூ, வளையல்கள் இருந்தது.
“ஆன்ட்டி, இதெல்லாம் எதுக்கு?”, என்றாள் அதிர்ச்சியுடன்.
“இது எங்க வழக்கம் டா வாங்கிக்கோ“, என்றார் மீனாட்சி.
“இல்ல ஆன்ட்டி இதுல வேணா“, என்றாள் வேகமாக.
“ஏய்! வாங்கிக்கோ டி”.
“இல்ல ஸ்ரீ வேணா“, என்று மறுத்தாள்.
“அனு, இதெல்லாம் எங்க குடும்ப வழக்கம் டா வாங்கிக்கோ“, என்றார் வாணி.
“அனு, இதெல்லாம் வேணானு சொல்லக்கூடாது. உன்ன இந்த வீட்டு பொண்ணா தான் பார்க்கிறோம் நாங்க. அப்படி நாங்க நினைக்க கூடாதுன்னு நினைச்சா வாங்கிக்க வேண்டாம்“, என்றார் மீனாட்சி. விக்ரமின் அம்மா என்பதை பேச்சிலேயே நிரூபித்தார்.
“இருங்க ஆன்ட்டி“, என்று இருவரின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள். இருவரும் அவளுக்கு குங்குமம் வைத்தனர். வாணி அவருக்கு பூவை வைத்துவிட்டார். “தேங்க்ஸ் ஆன்ட்டி“, என்று வாங்கிக் கொண்டாள்.
“ஒரு நிமிஷம் டா“, என்று வேலையாலை கூப்பிட்டு, பேக்கில் போட்டுக்கொண்டு வர சொன்னார்.
“எப்படிப் போகப் போற டா, வண்டில வந்தியா?”, என்றார் வாணி.
[the_ad id=”6605″]
“இல்ல ஆன்ட்டி, ஆட்டோல தான் வந்தேன். நான் போயிடுவேன் இது என் சொந்த ஊர் தானே“, என்றாள் சிரிப்புடன்.
“கார்ல போ டா“.
“மீனும்மா, நான் போய் விட்டுட்டு வரேன்“, என்றான் ராகவ் பக்கத்தில் வந்து.
“நீங்க நைட்டு கிளம்பனும் சொன்னீங்களே அத்தான்?”, என்றாள் சங்கவி குழப்பமாக.
“அதுக்கு இன்னும் டைம் இருக்கு சங்கவி, மம்மிஸ் நான் விட்டுறேன்“, என்றான் லேசான கெஞ்சலுடன் குனிந்து.
“டேய்! நைட் நீ ஊருக்கு போகணும். அவகிட்ட அடி வாங்கிட்டு வந்தா எப்படிடா கிளம்புவ?”, என்றார் கிண்டலாக.
“மீனும்மா, உங்க பையன் யாரு? எவ்ளோ பெரிய போலீஸ்? இவ கூட அனுப்ப இப்படி பயப்படுறீங்க“, என்றான் மெதுவாக.
“நீ போறது எங்க மருமக கூட டா அதான். அதுவும் இல்லாம அவ இன்னும் உனக்கு ஓகேவே சொல்லல“, என்றார் வாணி மெதுவாக. இதை அனைத்தும் பக்கத்தில் நின்ற மிருணாவின் காதில் விழுந்தது. ஆச்சரியமாக பார்த்தாள்.
“நான் பார்த்துக்குறேன்மா, ப்ளீஸ் மீனும்மா“.
“ம்ம்.. சரிடா. அனு ராக்கி உன்னைய ட்ராப் பண்ணுவான் டா“, என்றார் வேலையாள் இவரிடம் கொடுத்த பேக்கை அவளிடம் கொடுத்து.
அதை வாங்கிக் கொண்டு, “இல்ல ஆன்ட்டி, நான் போயிக்கிறேன். நோ ப்ராப்ளம்“, என்றாள் வேகமாக.
“பரவாயில்லை வா, நான் விட்டுறேன். இப்பவே இருட்ட ஆரம்பிச்சிடுச்சு“, என்று அவளை பேசவிடாமல் சந்தோஷமாக இழுத்து சென்றான்.
சங்கவி அவள் அறைக்கு சென்றாள். அம்மாக்கள் சிரிப்புடன் கிச்சனுக்கு சென்றனர்
விக்ரமின் போன் அடித்தது. எடுத்து அட்டென்ட் பண்ணுவதற்குள் சார்ஜ் இல்லாமல் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியது.
ராகவ் போகும் போது சந்தோஷமாக செல்பவன் திரும்பி வரும்போது அந்த சந்தோஷம் இருக்குமா? விக்ரம் போனை எடுக்காததால் வரும் விளைவு அவன் அறிவானா? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்……………………
கைதியின் சிறை தொடரும்………………….