காவலனின் கைதி அவள்-15 (1)
“ஸ்ரீ, இங்க என்ன நடக்குது? உன் அண்ணா சொல்றத அத்த அப்படியே கேக்குறாங்க, அனுகிட்ட லவ்வ சொன்னது தெரியுமா?”, என்றாள் மிருணா ஆச்சரியமாக.
“ம்ம். தெரியும்”, என்றாள் சிரிப்புடன்.
“அத்த அனுவ அக்சப்ட் பண்ணிட்டாங்களா?”, என்றாள் ஆச்சரியமாக.
“ஆமா, உன் அத்த மட்டும் இல்ல, உன் மாமாவும் அக்சப்ட் பண்ணிட்டாங்க”, என்றான் விக்ரம் சிரிப்புடன்.
“நிஜமாவா?”, என்றாள் அதிர்ச்சியுடன்.
“என்னடா, இப்படி ஷாக்காயிட்டே?”.
“ஏய் அமர்! உனக்கு இதுல ஏதாச்சும் விளங்குதா? ராக்கி நேத்து தானே அனு கிட்ட லவ்வ சொன்னாங்க. அனு ஓகே கூட சொல்லல, ஆனா வீட்ல சம்மதம் வாங்கிட்டாங்க”, என்றாள் ஆச்சரியமாக.
“பேபி, எங்க அப்பா அம்மா புள்ளைங்களோட நியாயமான ஆசைக்கு, எப்போதுமே நோ சொன்னது இல்ல. ராக்கி அண்ணா நேத்து நைட்டே விஷயத்த சொல்லிட்டாங்க. அனு வீட்டை பத்தி எல்லாம் விசாரிச்சாங்க. அனுவோட ஃபேமிலி பத்தி நல்லவிதமாக சொன்னாங்க. அதனால எல்லாருமே காலைல சம்மதம் சொல்லிட்டாங்க”, என்றாள் விளக்கமாக.
“மிரு குட்டி, நாங்க எல்லாருமே எங்க அப்பா அம்மாவ பார்த்து தான் எல்லாம் கத்துக்குறோம்”, என்றான் சிரிப்புடன்.
“ஓ. அப்படியா? கைல கிடைக்கிற பொருள உடைக்க கத்துக் கொடுத்தது யாரு சார்?”, என்றாள் முறைப்புடன். ஸ்ரீ மற்றும் அமர் சிரித்தனர். விக்ரம் முழித்தான்.
“என்ன சத்தத்தையே காணோம்?”, என்றாள் புருவம் உயர்த்தி.
“அது, என் தாத்தாக்கு பயங்கரமா கோவம் வரும், அவர மாதிரி தான் நானும்”, என்றான் இழிப்புடன்.
“ஆமாம் பேபி, தாத்தாவுக்கு ரொம்ப கோவம் வரும். விக்கி அண்ணாக்கு கோவம் வந்தா நாங்க யாருமே பக்கத்துல போக மாட்டோம், தள்ளியே தான் இருப்போம்”.
“ஓ. இது வேறயா?”, என்றாள் விக்ரமை முறைத்துக் கொண்டே.
“நான் என்னடி பண்ணுனேன்? எதுக்கு முறைக்கிற?”, என்றான் பாவமாக.
“நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? இல்ல சிவபெருமானா? கோபம் வந்தா நெற்றிக்கண்ணத் திறந்து எரிக்க”, என்றாள் நக்கலாக.
“நீ சொன்னாலும் சொல்லலனாலும், என் பெயருக்கு மீனிங் சிவன் தான்டி. நான் நினைக்கிறது செய்யுற அளவுக்கு, எனக்கு தைரியமும் துணிச்சலும் இருக்கு”, என்றான் நிமிர்வுடன்.
“சரி அப்பாட்டக்கர், உன் பெருமைய போதிச்சது போதும். போய் வேற வேல இருந்தா பாருங்க. ஸ்ரீ கிச்சனுக்கு போகலாம் வா, இங்க நீன்னா நம்ம காதுல தான் இரத்தம் வரும்”, என்று கிண்டலாக சொல்லிக்கொண்டே இழுத்து சென்றாள்.
விக்ரம் மிருணாவின் கிண்டலை ரசித்தான். “அவ போய்ட்டா, இன்னும் அங்க என்ன பார்க்குற?”, என்றான் கிண்டலாக.
“இருந்தாலும் அமர், உன் தங்கச்சி சரியான திமிரு புடிச்சவளா இருக்காடா”, என்று ஹாலில் இருந்த சார்ஜரில் போனை சார்ஜ் போட்டான்.
“ஓ. எங்க அவள கூப்பிட்டு சொல்லு பார்க்கலாம் “, என்றான் கிண்டலாக.
“அவ கிட்ட சொன்னா, உன் தங்கச்சி அடுத்த சண்டையா ஆரம்பிச்சுருவா. நாம போய் பேக் பண்றதுக்கு நேரம் சரியா இருக்கும் டா. இவள சமாதானம் பண்ணலாம் டைம் இல்ல”, என்றான் சலிப்புடன்.
“ஆமாடா, டைம் வேற ஆச்சு. வா எடுத்து வைக்கலாம்”, என்று பேசிக்கொண்டே இருவரும் மாடிக்கு சென்றனர்.
“அஜு டார்லிங்! என்ன எதுவுமே பேச மாட்டேங்கிற”, என்றான் காரை ஓட்டிக்கொண்டே.
“நீ எதுக்கு என்னைய விட வர? தேவையில்லாம அடிக்கடி என் விஷயத்துல மூக்க நுழைக்கிற”, என்றாள் கோபமாக.
“ஓ. நான் எப்ப உன் மூக்க உரசுனேன்”, என்றான் குறும்பாக.
“எனக்கு பத்திக்கிட்டு வருது, நீ பேசறத கேட்டா”, என்றாள் கோபமாக.
“சரி, நானே உன்ன அணைச்சு அத அணைய வைக்கிறேன்”, என்றான் குறும்பாக.
“இங்க பாரு ராகவ், நீ ரொம்ப ஓவரா பேசுற. இது நல்லதுக்கு இல்ல. தயவு செஞ்சு இப்படி டைம்பாஸ்க்காக என் கூட பழகாத”, என்றாள் கோபமாக.
ராகவ் வண்டியை ஓரமாக நிறுத்தி அவளைப் பார்த்து, “என்னைய பார்த்தா உனக்கு டைம் பாஸ் பண்ற மாதிரி இருக்கா?”, என்றான் கோவமாக.
[the_ad id=”6605″]
அனு அவன் கோவத்தை கண்டு மிரண்டு போனாள். “ப்ளீஸ்! வண்டிய எடுங்க. என்னைய உங்க கூட யாராச்சும் பார்த்தா தப்பா பேச போறாங்க”, என்றாள் கெஞ்சலாக.
“எவன்டி அப்படி பேசுவான்? அவன முதல்ல காட்டுடி”, என்றான் கோபமாக.
“இங்க பாரு ராகவ், நான் மிடில் கிளாஸ் ஃபேமிலிய சேர்ந்தவ. உன்ன மாதிரி பணக்கார பையன் என் பின்னாடி சுத்துனா, உன்ன இல்ல என்னைய தான் தப்பா பேசுவாங்க”, என்றாள் கலங்கிய குரலில்.
“போதும் அனு. என்னைய பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? ஏமாத்திட்டு உன்னைய அம்போன்னு பாதிலையே விட்டுட்டு போற மாதிரி தெரியுதா? உன்ன லவ் பண்றேன்னு நேத்தே வீட்ல சொல்லிட்டேன்”, என்று குண்டை தூக்கி போட்டான்.
“என்ன சொல்ற? உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? அவங்க என்னைய என்ன நினைப்பாங்க? உன்ன பார்க்க தான் வீட்டுக்கு வந்தேன்னு நினைக்க மாட்டாங்க”, என்றாள் கோபமாக.
“அவங்க ஏன் அப்படி நினைக்க போறாங்க? நான் தான் லவ் பண்றேன்னு சொன்னேன், நீ லவ் பண்றேன்னு சொல்லல “, என்றான் அடிக்குரலில்.
“இருந்தாலும் உன் முன்னாடி நானே வந்து, மயக்க பார்க்குறேன் அப்படி இப்படின்னு சொல்லிட்டா”, என்றாள் அழுகையுடன்.
“ஏய்! லூசு அவங்க உன்ன கல்யாணம் பண்ண ஓகேவே சொல்லிட்டாங்க. அது தெரியாம என்ன என்னனமோ பேசிட்டு இருக்க”, என்றான் சிரிப்புடன்.
“என்ன சொல்ற?”, என்றாள் அதிர்ச்சியுடன்.
“அது ஒன்னும் இல்ல, எங்க விருப்பம் தான் எங்க பேரென்ட்ஸ் விருப்பமும். காலையிலயே எங்களுக்கு சம்மதம்னு சொன்னாங்க, ஆனா அனுக்கு சம்மதம்னா மட்டும்தான் பண்ணுவோம்ன்னு, உன் பக்கம் எங்க மம்மிஸ் தாவிட்டாங்க. எங்க வீட்டுக்கு வரதுக்கு முன்னாடியே உனக்கு சப்போர்ட் பண்ண ஆள் ரெடி பண்ணிட்ட ம்ம்..”, என்றான் கிண்டலாக.
“அவங்க தெளிவா தான் சொல்லி இருக்காங்க, என் சம்மதம் இருந்தாதானே. தேவையில்லாம என்னைய கடுப்பேத்தாத. ஆமா இன்னொரு விஷயம் கேட்கணும்னு நினைச்சேன், விக்ரம் ஏன் மிருணா கிட்ட ரொம்ப அட்வான்டேஜ் எடுக்குறாங்க? உங்கள மாதிரி தான் அவங்களுமா?”, என்றாள் முறைப்புடன்.
“லூசு, விக்ரமும் மிருணாவும் லவ் பண்றாங்க”.
அனு முறைத்துக் கொண்டே, “டேய்! என் ஃப்ரெண்ட பத்தி எனக்கு தெரியாதா? மிருணாவுக்கு விக்ரம் மேல ஒரு சாப்ட் கார்னர், அதான் அவர் கிட்ட பேசுறா”, என்றாள் உறுதியாக.
“லூசு, உன் காலேஜ் டூருக்கு நீ போனியா?”.
“இல்ல, அப்ப எனக்கு சிக்கன் பாக்ஸ் வந்திருச்சு. என்னால போக முடியல”, என்றாள் வருத்தமாக.
“நினைச்சேன், நீ போயிருந்தா விக்ரம தெரிஞ்சுருக்கும். உன் ஃப்ரெண்ட் சுதாவுக்கு விக்ரம தெரியும். டூர் போன இடத்துல மிருணா பார்த்ததும் விக்ரமுக்கு பிடிச்சுப் போச்சு, விக்ரம் பேசிப்பேசியே மிருணாவ லவ் பண்ண வச்சுட்டான். அந்த ஒரு வாரத்துல ரெண்டு பேருக்கும் அவ்ளோ லவ்வுனா பார்த்துக்க”.
அதை நம்பாமல் பார்த்தாள். “நிஜமா தான்டி சொல்லுறேன், உங்க டூர் போன பஸ் ஆக்சிடென்ட் ஆச்சா?”.
“ஆமா, எல்லாருக்கும் கொஞ்சம் அடிபட்டிச்சு”, என்றாள் யோசனையுடன்.
“அப்ப அடிபட்டதுல மிருணா விக்ரமை மறந்துட்டா. இத நியாபகம் படுத்த முயற்சி பண்ணாதீங்க, அவளுக்கா நியாபகம் தானா வரட்டும். அப்படி நியாபகப்படுத்த முயற்சி பண்ணுனா, ரொம்ப ரிஸ்க்குன்னு டாக்டர் சொல்லிட்டாங்க”, என்றான் கவலையாக.
“அப்படியா? அப்ப ஏன் சுதா இந்த விஷயத்த என்கிட்ட சொல்லல”, என்றாள் குழப்பமாக.
“விக்ரம்தான் யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டான். அதான் அவ சொல்லி இருக்க மாட்டா”, என்றான் பெருமூச்சுடன்.
“இருந்தாலும்”, என்றாள் யோசனையுடன்.
“ஏய்! ரொம்ப யோசிக்காத, விக்ரம் மேல இருக்க லவ் மிருணா மனசுல இருந்தனால தான், அவன் சொன்னத கேட்டு மிருணா இங்க இருக்கா டி”, என்றான் பொறுமையை இழந்து.
“இங்கபாரு முதல்ல வண்டிய எடு”, என்றாள் முறைப்புடன்.
“நான் டிரைவர் பாரு உனக்கு”, என்றான் முறைப்புடன்.
[the_ad id=”6605″]
“நானா உங்கள டிரைவர் வேலைக்கு வரச் சொன்னேன்?”, என்றாள் நக்கலாக.
ராகவ் பேச வரும்போது அவன் போன் அடித்தது, “ஹலோ!”, என்றான்.
……..
“என்ன? எப்ப?”, என்றான் முக மாற்றத்துடன்.
…….
“சரி, நான் விக்ரம் கிட்ட சொல்றேன்”, என்று வைத்துவிட்டு, “அஜு, நான் உன்னை வீட்ல விட்டுட்டு உடனே போயாகனும்”, என்று காரை எடுத்தான்.
“என்னாச்சு ராகவ்? ஏன் டென்ஷனா இருக்கீங்க?”, என்றாள் கவலையாக.
“அதுலாம் ஒண்ணுல்ல, நீ வழிய சொல்லு”, என்று வேகமாக ஓட்டினான். போகும் வழியெல்லாம் விக்ரமுக்கு கால் செய்து கொண்டே ஓட்டினான். அனு வழி சொன்னாள்.
“ச்ச.. ஃபோன ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு இவன் என்ன பண்றான்?”, என்று புலம்பிக்கொண்டே அனு வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான்.
“உள்ள வாங்க”.
“இன்னொரு நாள் வரேன்”, என்றான் வேகமாக.
“யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லையே?”, என்றாள் கவலையாக.
“இல்லடா நான் பார்த்துக்கறேன்”, என்றான் உறுதியாக.
“மிருணாவுக்கு ப்ராப்ளமா?”, என்றாள் பயத்துடன்.
“அஜூ, அதெல்லாம் இல்ல ஒரு நிமிஷம்”, என்று போனை எடுத்து அனுவிற்கு அழைத்தான். எடுத்து பார்த்தாள். “இது என் நம்பர். விக்ரம் நம்பர அப்புறமா அனுப்பறேன், சேவ் பண்ணிக்கோ. முக்கியமான விஷயம் மிருணாவ நல்லா பார்த்துக்கோ. அவ வெளிலயே வரக்கூடாது”, என்றான் அவள் கையை பிடித்து.
“நான் பார்த்துக்குறேன், நீங்க பார்த்து போயிட்டு வாங்க”, என்றாள் உறுதியாக.
“சரி, பாய் டா! டேக் கேர்!”, என்று கன்னத்தை தட்டினான்.
“ம்ம்..”, என்று காரை விட்டு இறங்கி, “பாய்”, என்றாள்.
“ம்ம்..”, என்று காரை திருப்பி வேகமாக ஓட்டினான். கார் கண்ணை விட்டு மறையும் வரை இருந்து பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.
“விக்ரம்.. விக்ரம்..”, என்று கத்திக் கொண்டே உள்ளே வந்தான். சங்கவி, ஸ்ரீ, மிருணா, அம்மாக்கள், ரூமில் இருந்த அப்பாக்கள் அனைவரும் வெளியே வந்தனர். விக்ரம் மற்றும் அமர் மேலே இருந்து கீழே வந்தனர்.
“போன் எங்கடா?”, என்றான் வேகமாக.
“சார்ஜ் இல்ல, சார்ஜ் போட்டேன்”, என்று போனை எடுத்தான்.
“அறிவு இருக்காடா? ஸ்விட்ச் ஆன் பண்ண மாட்டியா? எத்தன தடவ ட்ரை பண்ணிட்டு இருக்கோம் தெரியுமா?”, என்றான் கோவமாக.
விக்ரமின் முகம் மாறியது. “ஏன் டென்சனா இருக்கா டா? வேற போனுக்கு ட்ரை பண்ணி இருக்கலாமே?”, என்றான் கூர்மையான பார்வையுடன்.
“டேய்! எதுக்குடா சத்தம் போடுற அவன்கிட்ட”, என்றார் சோமுப்பா.
“ராகவ் என்னாச்சுப்பா?”, என்றார் மீனாட்சி.
“ஏதாச்சும் ப்ராப்ளமா?”, என்றனர் ஸ்ரீ, சங்கவி மற்றும் மிருணா மூவரும்.
“நீ அனுவ தானே விட போன? போன இடத்துல பிரச்சனையா?”, என்றார் வாணி.
“எல்லாரும் அமைதியா இருங்க. ராகவ் வாட் ஹேப்பெண்ட்?”, என்றான் பொறுமையாக.
“போன ஆன் பண்ணு முதல்ல”.
போனை ஆன் செய்தான். பல கால்களும் மெஸேஜும் வந்திருப்பது தெரிந்தது. “என்னாச்சு விக்கி?”, என்றார் சக்கரவர்த்தி.
“ஒன்னும் இல்லப்பா, ராகவ் வா”.
“நானும் வரேன் டா”, என்றான் அமர் வேகமாக.
“சரி வா”, என்று மேலே அவன் அறைக்கு அழைத்து சென்று கதவை மூடினான். மற்றவர்கள் கவலையாக போனவர்களை பார்த்தனர்.
“போச்சு! எல்லாம் போச்சு! நாம போட்ட பிளான் இப்ப இப்படி ஆச்சு”, என்று புலம்பினான்.
“என்னாச்சு ராகவ்?”, என்றான் அமர் புரியாமல்.
“அந்த சிவா ஊட்டிக்கு வரான் டா”, என்றான் இயலாமையுடன்.
விக்ரம் அமைதியாக யோசித்தான். “இப்ப நாம என்ன பண்றது?”, என்றான் பயத்துடன்.
“என்ன பண்றது? ஒன்னும் பண்ண முடியாம நிக்கிறோம். போட்ட ப்ளான் எல்லாம் நம்ம கண்ணு முன்னாடியே வேஸ்ட்டா போக போகுது”, என்றான் எரிச்சலும் இயலாமையுமாக.
“ஜஸ்ட் ஷட்டப் ராகவ்”, என்றான் கோவமாக.
“விக்கி”, என்றனர் இருவரும்.
“அமர் பயப்புடுறானா? அதுல ஒரு லாஜிக் இருக்கு, நீ எதுக்கு இப்படி வாய் ஓயாமல் புலம்புற? என்ன பயமா?”, என்றான் கோவமாக ராகவை பார்த்து.
“இல்லடா”, என்றான் வேகமாக.
“அப்புறம் என்னடா? அவன் எதுக்கு இப்ப ஊட்டி வரான்? முதல்ல அத சொல்லு”, என்றான் கோவமாக.
“அந்த சிவா, மிருணாவ பத்தி விசாரிக்க அந்த சொட்ட தலையன் கமிஷனர பார்க்க வந்திருக்கான். நான் ஊர்ல இல்லைன்னு தெரிஞ்சதும், என் ஊர் எதுன்னு கேட்டு இருக்கான். அந்த சொட்ட மண்டையன் ஊர் அட்ரஸ் எல்லாம் சொல்லிட்டான். இப்ப என்னைய பார்க்க தான் வரான். இப்ப அவன் கிட்ட நான் என்ன சொல்றது? எனக்கு ஒன்னும் புரியல”, என்று மீண்டும் புலம்பினான்.
“வாய மூடு ராகவ். இப்படி புலம்புறத நிறுத்து, அவன் கிளம்பிட்டானா? இல்லையா?”, என்றான் கோபமாக.
[the_ad id=”6605″]
“இல்ல நைட் தான்”.
“அந்த கூமுட்ட இந்த விஷயத்த ஏன் முன்னாடியே சொல்லல?”, என்றான் கோவமாக.
“இல்லடா, நம்ம இங்க இருக்கனால சிக்னல் பிராப்ளம். ரொம்ப நேரம் ட்ரை பண்ணி இருக்கான்”.
“சரி டா, கொஞ்சம் அமைதியா இரு”, என்று போனை எடுத்து கால் செய்தான்.
“சார்.”.
“அங்க என்ன நடக்குது?”, என்றான் நிதானமாக.
“சார், சிவா ஊட்டிக்கு கிளம்புறான்”.
“இத ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?”.
“அவன் வரது கூட நீங்க போட்ட பிளான்னு நினைச்சேன் சார்”.
“நான் பிளான் போட்டுருந்தா, உன்கிட்ட முன்னாடியே சொல்லி இருப்பேன்”.
“அவன் ஊட்டிக்கு போயே ஆகணும்னு பிடிவாதமா இருக்கான் சார். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல, சாரி சார் சொல்லிருக்காணும்”.
“சரி விடு”, என்று தன் திட்டத்தை சொன்னான்.
“ஓகே சார்! பண்ணிடுறேன்”, என்றான் உறுதியாக.
“கவனமா இருடா”, என்று சொல்லிவிட்டு வைத்தான். விக்ரம் மீண்டும் வேறொருவருக்கு போன் செய்தான்.
“ஹாய் தல! என்ன தல இப்ப கால் பண்ணி இருக்கீங்க? கிளம்பிட்டீங்களா?”, என்றான் முகிலன்.
“டேய்! நாயே இவ்ளோ நேரம் ரிங்க போகுது எடுக்காம என்ன பண்ற?”.
“ஈஈஈஈஈ.. எல்லாம் உங்க மச்சினிச்சி கிட்ட தான் பேசிட்டு இருந்தேன். என்னைய ரொம்ப மிஸ் பண்றலாம்”, என்றான் குழைவான குரலில்.
விக்ரம் பல்லை கடித்துக்கொண்டு, “எருமை, உன் கஸ்டடியில வச்ச அந்த நாலு பேரும் இருக்காங்களா?”, என்றான் கோபமாக.
“இருக்காங்க தல”, என்றான் வேகமாக.
“சரி வீடியோ கால் வா”, என்று வைத்தான்.
முகில் வீடியோ கால் செய்தான். மூவரையும் பார்த்ததும், “ஹாய்!”, என்றான்.
மூவரும் முறைந்தனர். “டேய்! விளையாட்ட அப்புறமா வச்சுக்கோ”, என்றான் அமர்.
“ஒய் டென்ஷன்?”, என்றான் வேகமாக.
“நான் சொல்றத கவனி முதல்ல”.
“நீங்க சொல்றதுதான் தல கேட்குறேன்”.
“நீ எங்ககிட்ட மாட்டுனா, அவ்ளோ தான் டா. வாய மூடிட்டு கவனி”, என்றான் ராகவ் கோவமாக. முகில் விளையாட்டு தனத்தை ஒதுக்கிவிட்டு கவனித்தான். விக்ரம் தன் அறையில் இருந்த ஃபோர்டை எடுத்து நடுவே வைத்து தன் திட்டத்தை விவரித்தான்.
“ஓகே”, என்றனர் மூவரும்.
“சரி, முதல்ல கிளம்பலாம். பேக்க எடுத்துட்டு வாங்க, பாய் டா நான் சொன்னத பண்ணு”, என்று முகிலிடம் சொல்லிவிட்டு வைத்தான்.
“விக்கி, சிவா என் கிட்ட மிருணாவ பத்தி கேட்டா, நான் என்ன சொல்றது?”, என்றான் தவிப்புடன்.
விக்ரம் முறைப்புடன், “எல்லாத்தையும் நானே யோசிச்சு சொல்றதுக்கு, நீ எதுக்கு டா இருக்க? நீ ஒன்னும் ரோபோ இல்ல டா, நான் சொல்றத பண்றதுக்கு”, என்றான் தீர்க்கமான குரலில்.
“ஓகேடா! நான் அத பத்தி யோசிக்கிறேன்”, என்றான். மூவரும் பேகை எடுத்துக் கொண்டு கீழே வந்தனர்.
தொடர்ச்சி அடுத்த லிங்க்கில்…………………