“மிருணா”, என்று ஓர் சந்தோஷ குறளில் இளம் யுவதி வீட்டுக்குள் வந்தாள். முகில் சிரிப்புடன் பின்னாலே!! வந்தான்.
இவள் சத்தத்தில் அனைவரும் வெளியே! வந்தனர். மிருணா மாடியில் இருந்து வேகமாக இறங்கி வந்து, வந்தவளின் இரு கன்னத்திலும் அறைந்தாள். அனைவரும் அதிர்ந்தனர். விக்ரம் மற்றும் ராகவ் முகிலின் இரு கன்னத்தில் அறைந்தனர்.”அக்கா.. அண்ணா..”, என்றனர் விஷாலினி மற்றும் முகில் கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியுடன்.
“இப்ப எதுக்குடி இங்க வந்த??? அறிவு இருக்கா?? உன்ன எப்படி அம்மாவும் அப்பாவும் விட்டாங்க”, என்று மீண்டும் அறைய கை ஓங்கினாள்,
அவள் கையை வேகமாக ஸ்ரீ தடுத்து,”இவ விஷாலினி தானே!! மிருணு”, என்றாள் சந்தேகமாக.
“அண்ணி.. நா தான்”, என்று அணைத்தாள்.
அவளை விலக்கி,” எதுக்கு இப்படி சொல்லாம கிளம்பி வந்த விஷா??”, என்றாள் கோவமாக.
“அண்ணி அது..”, என்று தயங்கியபடி அமரைப் பார்த்ததும்,”அண்ணா காப்பாத்து”, என அவனை அணைத்தாள்.
“விஷா எதுக்குடா இப்படி சொல்லாம வந்திருக்க”, என்றான் அவளை விலக்கி.
“ஏய்!! இங்க எதுக்கு வந்த அத சொல்லு டி??”, என்று கோபமாக அவள் மேல் கையை பிடித்து இழுத்தாள்.
“ம்ம்.. நீ சாகப்போறல கடைசியா உன்ன பாக்கலாம்னு தான் வந்தேன்”, என்றாள் எரிச்சலுடன். அனைவரும் விஷாவை முறைந்தனர்.
“விஷா என்கிட்ட அடி வாங்காத ஒழுங்கு மரியாதையா சொல்லு”, என்றாள் ஆத்திரமாக.
“நீ மட்டும் இங்க கஷ்டப்படுவ அத பார்த்துகிட்டு என்னைய அங்க ஜாலியா இருக்க சொல்றியா”, என்று அழுதாள்.
“பொய் சொல்லாத விக்ரம் மாமாக்கு அடிபட்டதும் நீ அப்பாகிட்ட எப்படி அழுதனு அப்பா சொல்லிட்டாங்க, போதும் மிருணா நீ அழுகுறது எங்களால பார்க்க முடியல”, என்றாள் அழுகையுடன்.
“விஷா நா உண்மையாகவே! நல்லா தான் இருக்கேன், அன்னைக்கு எனக்கு மனசு சரியில்ல அதான் அழுதேன்”, என்றாள் அவள் கண்ணீரை துடைத்து.
“ஆனா என்கூட வளர்ந்த மிருணா அழுது நா பார்த்ததே! இல்லையே!”, என்றாள் கோபமாக.
“எல்லா நேரமும் அப்படி இருக்க முடியுமா?? அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு வந்தியா??”, என்றாள் மீண்டும் கோவமாக.
“நா ஏன் சொல்லணும்”, என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு.
“விஷா”, என்று அனு சந்தோஷமாக அழைத்துக்கொண்டு அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்தாள்.
“அனு அக்கா”, என்று அணைத்து விடுவித்தாள்.
“எப்படி இருக்க?? எப்ப வந்த??”, என்றாள் சந்தோசமாக.
“ஹ்க்கும்.. ஏன் வந்தன்னு கேக்குறாங்க இங்க, நீங்க பேசாம உங்க கூட உங்க வீட்டுக்கு அழச்சுட்டு போயிடுங்கக்கா”, என்றாள் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு.
“யாருடி சொன்னா??”, என்றாள் கோபமாக.
“நா தான் டி எரும மாடு அவ அம்மா அப்பா கிட்ட சொல்லாம வந்திருக்கா, உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா அவ கிட்ட நலம் விசாரிச்சுட்டு இருக்க”, என்றாள் ஆத்திரமாக.
“எனக்கு ரொம்ப பசிக்குது பிளைட்ல சரியாவே சாப்பிடல, முகி உனக்கு பசிக்கிதா??”, என்றாள் முகிலை பார்த்து. அவன் மற்றவர்களை பார்த்து கொண்டு தலையை மட்டும் ஆட்டினான்.
“வந்ததும் சொல்லிருக்கலாம்ல சரி வாங்க இரண்டு பேரும்”, என்று விஷா மற்றும் முகிலை அம்மாக்கள் அழைத்துச் சென்றனர்.
மிருணா தலையில் கை வைத்தபடி சோபாவில் உட்கார்ந்தாள்.” ப்ச்.. மிரு முதல்ல மாமாகிட்ட சொல்லலாம்”, என்று விக்ரம் லக்ஷ்மணனுக்கு போன் செய்து நடந்ததை சொன்னான்.
“அவ கொஞ்ச நாளாவே ஒரு மாதிரி இருந்தா விக்ரம் ஃப்ரெண்ட்ஸ் சேர்த்து புராஜெக்ட் பண்ணனும் மூன்று நாள்ல முடிக்கனும் ஃப்ரெண்டு வீட்டுக்கு போகனும்னு சொன்னா, நானும் அவ ஒரு மாதிரி இருக்கானு அனுப்புனேன், இப்படி பண்ணுவான்னு நினைக்கல”, என்றார் வருத்தமாக.
“அண்ணா என்னால அக்காவ இப்படி பார்க்க முடியல, இப்ப கூட என்கிட்ட கோவப்படுற மாதிரி நடிக்கிறா, நா வந்தது அவளுக்கு சந்தோசம் தான், அவ மட்டும் இங்க தனியா இருந்து கஷ்டப்படுவா நாங்க மட்டும் அங்க இருக்கோம், அவளுக்கு இப்ப நாங்க தேவ ஆனா அவ அத சொல்ல மாட்டா ஈகோ பிடிச்சவ”, என்றாள் அழுகையுடன்.
மிருணா வந்த அழுகையை அடக்கிக்கொண்டு,”விஷா இப்ப நீ வந்தத யாராச்சும் பார்த்து இருந்தா பெரிய பிரச்சன அது ஏன் உனக்கு புரியல, வர வழியில்ல சிவா ஆளுங்க பார்த்திருந்து உன்ன ஏதாச்சும் பண்ணி இருந்தா”, என்றாள் நடுங்கிய குரலில்.
“அதுக்குதான் நா நடுசாமத்துல இறங்குற மாதிரி ஃப்ளைட் ஏறுனேன், அதுவுமில்லாம முகி தான் இருக்கான்ல அவன் உயிர கொடுத்தாச்சும் என் உயிரக் காப்பாத்துவான்”, என்றாள் கிண்டலாக.
“அடிப்பாவி கொல பண்ணனும்குற ஐடியால தான் வந்திருக்க போல”, என்றான் தலையில் கை வைத்து முழிப்புடன். அனைவரும் சிரித்தனர்.
“நா உன்ன ரொம்ப மிஸ் பண்ணுனேன் மிருணு”, என்று அணைத்தாள்.
“நானும் தான்டி”, என்றாள் அணைத்தபடி.
“தெரியும் அதான் வந்தேன் உன்ன இங்க தனியா விட்டுட்டு போகவே மனசில்ல, அம்மா அழுதுக்கிட்டே இருந்தாங்க எனக்கும் அழுகையா வந்தது, அப்பா தான் எல்லாம் சரியாகிடும்னு ஆறுதல் சொன்னாங்க உன்ன பிரிஞ்சு இருக்கவே முடியல”, என்றாள் அழுகையுடன்.
“நாய்சேகரி உன் வாட்டர் டாம இங்க ஓபன் பண்ணி ஊட்டியாவே மிதக்க வைக்க பிளானா டி”, என்றாள் கிண்டலாக விலகி அவளைப் பார்த்து.
“ஏய்!! சண்டிராணி எத்தன தடவ சொல்றது அப்படி சொல்லாதன்னு”, என்றாள் கோவமாக.
“அப்புறம் எதுக்கு நீ அழுகுற??”, என்று கண்ணீரை துடைத்தாள்.
“சரி சொல்லு அக்கா இந்த மாமாங்க எப்படி பார்த்துக்குறாங்க?? கொஞ்சமாச்சும் தேருவாங்களா??”, என்றாள் கிண்டலாக விக்ரம் மற்றும் ராகவை பார்த்து.
“வாடி நாம போகலாம் “, என்று உள்ளே இழுத்து சென்றாள்.
“மிருணா சொன்ன மாதிரி நடந்திருந்தா??”, என்றான் அமர் யோசனையுடன்.
“அப்படி பார்த்திருந்தா எனக்கு போன் வந்திருக்கும் “, என்று விக்ரம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே! போன் அடித்தது,” ஹலோ “, என்றான்.
“அண்ணா அண்ணி இருக்குற இடம் சிவாவுக்கு தெரிஞ்சு போச்சு”, என்றான் ராம் அவசரமாக.
“எப்படி டா??”, என்றான் முகிலை முறைத்துக் கொண்டே.
“அண்ணியோட தங்கச்சி கோயம்புத்தூர் ஏர்போர்ட்ல பார்த்ததும் சிவா ஆளுங்க கால் பண்ணி சொல்லிட்டாங்க, அவள யாரு இப்ப வர சொன்னது??”, என்றான் கோவமாக.
“அவள ஏர்போர்ட்டுல இருந்து பிக்கப் பண்ணுனது முகில் தான் டா”, என்றான் முறைத்துக் கொண்டே.
“அவனுக்கெல்லாம் எப்படி நா போலீஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை கொடுத்தானுங்க, அந்த நாதாரிக்கு தெரியாது சிவா ஆளுங்க எல்லா இடத்துலயும் இருப்பாங்கன்னு”, என்றான் ஆத்திரமாக.
“தெரியும் தெரியும் தெரியாம என்ன?? மிருணா எப்படி போனா இவனுக்கு என்ன?? இவன் ஆளு வந்தா போதும் “, என்றான் ஆத்திரமாக திட்டிக்கொண்டே. முகில் முழித்தான்.
“அந்த சிவாவுக்கு மிருணா இருக்குற இடம் உன்னால தெரிஞ்சு போச்சு டா”, என்று மூவரும் அவனை குனிய வைத்து அடித்தனர்.
“அண்ணா போது வலிக்குது, விஷா ரொம்ப அழுதாணா அதான் சரி வானு சொன்னேன்”, என்றான் முதுகை தடவிக் கொண்டு.
“அதுக்காக”, என்றனர் மூவரும் கோவமாக.
“சாரிணா இப்படி நடக்கும்னு நா யோசிக்கல”, என்றான் வருத்தமாக.
“சரி வாங்க ரூம்ல போய் பேசிக்கலாம் இங்க வேணா”, என்று விக்ரம் மூவரையும் அறைக்கு அழைத்துச் சென்றான். நால்வரும் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தனர். விக்ரம் யோசனையோடு சில திட்டம் சொன்னான்.
மாலையில் அனைவரும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டு அரட்டை அடித்தனர்.சங்கவியின் முகம் சோர்வாகவே!! இருந்தது. போன் பேசுவது போல் எழுந்து சென்றாள்.அவள் போன் பேச தான் போகிறாள் என்று மற்றவர்கள் நினைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தனர். விக்ரம் மட்டும் அவள் பின்னால் சென்று,” சங்கவி என்னாச்சு?? ஏன் எழுந்து போயிட்டா??”.
சங்கவி விக்ரமை கேள்வியாக பார்த்தாள்.” சங்கவி ஒரு அவசர வேல நா உடனே! போயாகணும் ராகவ், முகில் கிளம்புங்க டா”, என்றான்.
“விக்ரம் நானும் வரேன்”.
“வேணா அமர் நீ இவங்க கூட இரு, வாங்கடா போகலாம் “, என்று அவசரமாக மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றான்.
சங்கவிக்கும் ராமுக்கும் உள்ள உறவு என்ன??? எப்படி ராமை சங்கவிக்கு தெரியும்?? விக்ரம் போட்ட திட்டம் வெற்றி அடையுமா??? அவசரமாக எங்கு செல்கின்றனர்??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…….