அத்தியாயம் 17
கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தையே பார்த்திருந்தாள் உதயா.மேக்கப் செய்யும் பெண்மணி தற்போது தான் அவளை அலங்கரிக்க தொடங்கி இருக்க மற்றவர்களும் திருமண மண்டபத்திருக்கே உரிய பரபரப்போடு அங்கும் இங்கும் போய் வந்தபடி இருந்தனர்.ஆனால் அவை எதுவுமே உதயாவை எட்டவில்லை.பதற்றமான மனநிலையில் இருந்தாள்.
இன்னும் சில மணி நேரத்தில் தான் ஒருவருக்கு சொந்தமாக போகிறோம்..அதுவும் தன்னை விரும்பாத ஒருவனுக்கு..?!தன்னை வேண்டாம் என்று சொன்ன ஒருவனையே தனக்கு அனைத்தும் என்று அவனை நம்பி வர போகிறோம்.. இந்த திருமண வாழ்வு எப்படி இருக்கும்..’
நேற்று வரவேற்பில் உற்சாகமாய் நின்ற உதய் நினைவில் வந்தான்.அவனிடம் எந்த கலக்கமோ வருத்தமோ இல்லை.நண்பர்களின் கேலி,கிண்டல்களுக்கு சலிக்காமல் பதிலடித்துக் கொண்டு உறவினர்களிடம் சிரித்த முகமாய் பேசிக் கொண்டு சந்தோஷமாய் இருந்தான். இவனா தன்னை ‘திருமணத்தை நிறுத்திக் கொள்..’ என்று அலட்சியமாய் சொன்னான் என்று சந்தேகமே வந்துவிடும் அளவு இயல்பாய் இருந்தான்.
‘டேரக்டர் ஆகிற்றே..நடிப்பது என்ன கஷ்டமா.??’ என்று இடக்காய் எண்ணியது மனம்..
உதய் வீட்டோடும் அவ்வளவு பரீட்சயம் இல்லை.அத்தை மாமா அன்பாக பேசினாலும் அந்த அன்பு தான் மருமகளான பின்பும் நீடிக்குமா..?? தன் அப்பா,அண்ணா,அண்ணியிடம் செல்லமாய் தன் இஷ்டம் போல் இருந்தது போல அவர்களோடும் இருக்க முடியுமா..??விருப்பம் இருந்தாலும் இல்லை என்றாலும் அது தானே இனி அவள் வாழ்க்கை என்று எண்ணும்போதே உள்ளம் படபடவென அடித்துக் கொண்டது.இதய துடிப்பு அவள் காதுகளையே எட்டிவிடும் போல வேகமாய் அடித்துக் கொள்ள தன்னை சமன்செய்யும் வழி தெரியாது திணறினாள்.
கண்கள் அலைப்பாய அவள் நிலையாய் இல்லை என்பதை கண்டுக் கொண்ட அந்த ஒப்பனை செய்யும் பெண் அவள் தோளில் கை வைத்து,
“ரிலாக்ஸ்..எதாவது வேணுமா மேம்..”
என்று கனிவாய் கேட்டாள்.அந்நேரம் அறையில் வேறு யாரும் இல்லை.ஏனோ அந்த நிமிடம் அவளுக்கு மிகவும் தேவையான ஒன்று வெண்பா தான் என்று தோன்றியது.பருவ வயதில் இருந்தே யாரிடமும் சொல்ல முடியாத பல விஷயங்களை அண்ணியிடம் தான் பகிருவாள்.தற்போது தான் இருக்கும் நிலையில் வெண்பா தன் அருகில் இருக்க வேண்டும் போல் தோன்ற,
“எங்க அண்ணி..அவங்களை கொஞ்சம் வர சொல்றீங்களா..”
என்று அப்பெண்ணிடம் சொல்ல புரிந்துக் கொண்டு அவரும், ‘ஸூர்..’ என்று வெளியே செல்ல சில நிமிடங்களில் வேகமாய் அங்கே வந்தாள் வெண்பா.
“என்னாச்சு..உதயா..என்ன பண்ணுது..”
என்ற பதட்டதோடு..சில நாட்களாய் பேசாமல் இருந்தவள் திடீரென அழைக்கவும் என்னவோ ஏதோ என்று அவள் உள்ளம் பதறியது.
குளமாய் நிறைந்திருந்த கண்களோடு வெண்பாவை கட்டிக் கொண்ட உதயா,
“பயமா இருக்கு அண்ணி..இந்த மேரெஜ்..எல்லாம் நினைச்சால் ரொம்ப பயமா இருக்கு..” என்று லேசாய் விசும்ப
அவள் வயதிற்கு வந்தபோது நாகஜோதியை அணைத்துக் கொண்டு பயத்துடன் தன் உடல்நிலை மாற்றத்தை சொன்ன உதயாவின் முகம் அவளுக்கு நினைவு வர மனம் கனிந்தது.
ஆறுதலாய் அவளை அணைத்து தலையை வருடிக் கொடுத்து பேசினாள்.
“என்ன பயம் உனக்கு..!? உன்னை வேற எங்கையோ வா கொடுக்க போறோம்..ம்ம்..நீ படிச்ச பொண்ணு..சுயமா ஒவ்வொரு விசயத்தையும் ஆராய்ஞ்சு முடிவெடுத்து உன் சொந்தகாலில் நிற்கிற..அது கொடுக்கிற தைரியம் போதாதா..?? அதுக்கும் மேல எந்த ஒரு உறவுக்குமே நம்பிக்கை தாண்டா அடிப்படை..ஜெஸ்ட் நம்பு..உதய்யை நம்பு..அவனோடான இந்த லைஃப் நல்லா இருக்கும்னு நம்பு..எல்லாம் நல்லதே நடக்கும்..”
மென்மையாய் கூறி அவள் நெற்றியில் இதழ் ஒற்றி எடுக்க அவள் வார்த்தைகளோ இல்லை அணைப்போ ஏதோ ஒன்று சற்று அவள் மனதை அமைதியடைய செய்தது.மற்ற பெண்களும் வந்துவிட,
“உதயாவோடு இருக்காம எங்கம்மா எல்லாரும் போனீங்க..முகூர்ந்த நேரம் நெருங்கிடுச்சு..பெண் அழைக்கிற வரை இங்கேயே இருங்க..”
என்று அவர்களிடம் கூறியவள் உதயாவின் கன்னத்தில் தட்டி, “எதையும் யோசிக்காம சந்தோஷமா இரு..” என்று கூறி வெளியே வர அதே நேரம் அவளை தேடி வந்த மதி,
“இங்க தான் இருக்கியா..வா..”
என்று கைப்பற்றி வேகமாய் அழைத்து சென்றான்.
“ஏங்க..அதுக்கு ஏன் இழுக்குறீங்க..நானே நடக்க மாட்டேனா..அப்படி என்ன தல போகிற விசயம்..”
“முக்கியமான விஷயம் தான்..ஒருத்தவங்களை உனக்கு அறிமுகம் படுத்தனும்..”
“யாரு..”
“சொல்றேன்..வா..”
“சரி..நிலா எங்க இருக்கா…கண்லையே படமாட்டேங்கிறா..”
“வெளிய தயாவோட நின்னு..வரவங்களை வெல்கம் பண்றேன்னு வம்பு வளர்த்துட்டு நிற்கிறா…”
“இந்த பொண்ணு இருக்காளே..”
என்று தலையசைத்து சிரித்தாள் வெண்பா.
மதி நேராக வந்து ஒரு பெண்மணியிடம் நிறுத்த காட்டன் சுடிதாரில் மிகவும் பாந்தமாய் அழகாய் இருந்தாள்.
யாரென்று தெரியாத போதும் அருகில் வந்ததும்,
“வாங்க..” என்று வெண்பா அன்பாய் வரவேற்க மதியோ,
“கீதா..என் மனைவி வெண்பா..இவங்க தான்..”
என்று அறிமுகப்படுத்த அப்பெண்ணின் புருவங்கள் வியப்பில் விரிய சிரித்த முகமாய்,
“ஹோ..ஃபைனலி..உங்க வொய்ஃபை எனக்கு இன்ட்ரோ கொடுக்க மனசு வந்திடுச்சா..”
என்று அவள் மதியிடம் கேட்கவும் வெண்பா புரியாமல் பார்க்க மதி அசடு சிரிப்பு சிரித்தான்.
வெண்பாவிடம்,
“இவங்க கீதாஞ்சலி..என்னோட ஸ்கூல் மேட்..அத்தோடு இப்ப எங்க கம்பெனியோடு முக்கியமான க்ளைண்ட் வீவோக்ஸ் ல ஃபேஷன் டிசைனர்..”
என்று அறிமுகப்படுத்த தற்போது ஆச்சரியப்பட வேண்டியது வெண்பாவின் முறையானது. வீவோக்ஸ் மிகவும் புகழ்பெற்ற பிராண்ட்..
புன்னகை மாறாமல் பார்த்த கீதா,
“உங்களிடம் நிறைய பேசணும் வெண்பா..இப்போ நீங்க பிஸியா இருப்பீங்க..கேரி ஆன்..கண்டிப்பா ஒரு நாள் மீட் பண்ணலாம்..”
என்று அவள் சொல்ல அவளிடம் இன்னும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டே வெண்பா சென்றாள்.அதன்பின் அடுதடுத்து வேலைகள் இழுத்துக் கொள்ள கீதாவை பற்றி பெரிதாய் சிந்திக்கவில்லை.
அனைவரும் எதிர்பார்த்திருந்த முகுர்த்த நேரமும் வந்துவிட கெட்டிமேளம் ஒலிக்க உற்றார் உறவினரின் ஆசிர்வாதத்தோடு அக்னி சாட்சியாய் பொன்மஞ்சல் தாலியை உதயாவின் கழுத்தில் பூட்டி தன் மணையாளியாய் ஆக்கிக் கொண்டான் உதய்.
அரை மனதாய் அவளும் புதிரான மனதோடு அவனும் திருமண பந்ததில் அடியெடுத்து வைக்க இதே போல் பல தம்பதிகளை பல ஆண்டு வருடங்களாய் பார்த்து பழகிய காதலும் காலமும் அவர்களுள் மனைத்தக்க மாண்புகளை புகுத்த கைக்கோர்த்து காத்திருந்தது.
இருவரின் பெற்றவர்களிடம் ஆசிப்பெற்றபின் மதி-வெண்பாவின் காலிலும் விழுந்து ஆசிபெற தன் தமக்கையில் காலை மட்டும் தொட்டு வணங்கிய உதய் மதிவாணனை இலட்சியமே செய்யவில்லை.அதை மதியும் கண்டுக் கொள்ளாமல் இருவரையும் பொதுவாய் வாழ்த்தினான்.அம்மி மிதித்து அருந்ததி பார்த்து என்று அடுத்தடுத்த சாங்கியங்கள் இனிதே நடைபெற அனைத்தும் முடிந்தபின்பு மணமக்களை விருந்துண்ண அழைத்து சென்றனர்.
மதியை அவன் அலட்சிய செய்ததில் கடுப்பில் இருந்தவள்
“இவனுக்கு இருக்கிற திமிரு இருக்கே..”
என்று பல்லை கடித்து நிமிர்ந்து அவனை முறைப்போடு பார்க்க காஜலிட்ட விழிகளை கண்டு
“என்ன இவ்வளவு நேரம் கண்டுக்காம இருந்துட்டு..திடீர்னு பாசமா பார்க்கிறா..”
என்று எண்ணியவனாய் குனிந்து,
“என்ன..?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி வினவ,
“எங்க அண்ணாட்ட எதுக்கு அப்படி முகத்தை திருப்புறீங்க..”
என்று அவள் கேட்கவும் அவனுக்கு புஸ்ஸென்று ஆனது.மனைவியாய் ஆனபின் முதன்முதலில் பேசும் வார்த்தைகள்..!!எடுத்தவுடனே சண்டையா என்று கடுகடுவென வர,
“வேணாம்..எதாவது பேசின காண்டுல கடிச்சு வைச்சிருவேன்..நீ பழையபடி பேசாமலே இருந்துக்கோ..”
என்று வள்ளென்று விழ அவள் முகமும் சுருங்கிவிட்டது.
இவர்கள் மனநிலை புரியாமல்,
“இனி சொச்ச பொழுதும் நீங்க தானே பேசிக்க போறீங்க..பொறுமையாய் பேசிக்கலாம்..முதலில் சாப்பிட உட்காருங்க..”
என்று ஒருவர் கேலி செய்ய அவரை பார்த்து சிரித்துவிட்டேன் என்று பெயர் பண்ணிவிட்டு சாப்பிட அமர்ந்தனர்.
கேலிகளோடும் கிண்டல்களோடும் அன்றைய பொழுது ஓட பிறந்த வீட்டினரிடம் கண்ணீரோடு பிரியா விடைப்பெற்று நின்றவளை அண்ணன்மார்கள் மூவரும் வெகுவாய் தேற்றி உதய்யோடு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
சற்று முன் அவனை அசர வைத்த காஜல் மொத்தமும் கண்ணீரில் கரைந்து மேகப்போடு கலந்து கன்னத்தில் ஈஸியிருக்க கண்ணீரை துடைக்கிறேன் என்று குழந்தையாய் இன்னும் அதனை அவள் கலைப்பதைக் கண்டு அவன் உதடுகளில் புன்னகை நெளிந்தது.
பாக்கெட்டில் இருந்து தன் ஹன்க்கீயை நீட்டி,
“இந்தா..முகம் ஃபுல்லா மைத்தீட்டி மங்கம்மா மாதிரி இருக்க..”
என்க அவன் வீம்போடு வேண்டாம் என்பதாய் தலையசைக்க,
“அட நீ ஈஸியா வேணாம்னு சொல்லுவ..யாரு உன் முகத்தை இப்படி பார்க்கிறது..”
என்று சிரியாமல் கூறியவன் தானே அவள் கன்னத்தோடு விரவி இருந்த மையை துடைக்கவும்,
“ஏங்க என்ன பண்றீங்க…”
என்று ஓட்டுநரை ஒரு பார்வை பார்த்தபடி அவள் பதட்டமாய் கூற அதற்குள் அதனை சரி செய்திருந்த உதய்,
“தட்ஸ் இட்..இனி நீ ஃப்ரீயா ஃபீல் பண்ணு..” என்று தோள் குலுக்கி மீண்டும் பழையபடி அமர்ந்துக் கொள்ள அவள் தான் அவனை வினோதமாய் பார்த்தாள்.
ஓய்வில்லாமல் மணமக்களை அன்றைய பொழுது முழுவதும் உறவுகள் சூழ்ந்தே இருக்க இரவு உதய்யின் அறைக்குள் அவளை அனுப்பி வைத்த போது மிகுந்த கலைப்பாய் இருந்தாள்.நல்ல வேளை அறையை அலங்காரம் செய்கிறேன் என்று எதுவும் செய்யவில்லை.அவள் இருக்கும் மனநிலையில் அது ரொம்பவும் சங்கடமாய் போய் இருக்கும்.
உதய்யை காணாது நிம்மதியாய் மூச்சை இழுத்து விட்டவள் இருவருக்கும் கொண்டு வந்திருந்த பால் ட்ரேவை மேசைமீது வைத்துவிட்டு அறையை பார்வையிட்டாள்.
‘இதென்ன ரூம்மா..ஃபோட்டோ எக்ஸிபிஷன்னா..”
என்பது தான் முதலில் தோன்றியது.விதவிதமான படங்கள் அவன் அறையை அலங்கரித்து இருக்க அதனை கண்டதும் அவளுள் தூங்கி கொண்டிருந்த உதய்யின் ரசிகை விழித்துக் கொள்ள அவன் இரசனைகளை ரசித்து பார்த்திருந்தவள் உதய் வந்ததையோ தன்னை பார்த்துக் கொண்டு நிற்பதையோ கவனிக்கவே இல்லை.
காலையில் அணிந்திருந்த ஆடை அணிகலன்களை களைத்து மெல்லிய புடவையை உதயா அணிந்திருக்க அவனும் இரவு உடைக்கு மாறியிருந்தான்.
“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நிற்கிறது..”
என்று அவன் குரல் திடீரென கேட்கவும் திடுக்கிட்டு திரும்ப உதய்யை கண்டதும் இளகி இருந்த மனமும் உடலும் இறுகியது.
“ஹே..என்ன பிரச்சனை உனக்கு..நான் பேசினாலே டென்ஷன் ஆகிற..அப்படி என்ன பண்ணிட்டேன் உன்னை..”
“என்ன பிரச்சனையா..ஏன் உங்களுக்கு தெரியாதா..?என்னை பிடிக்கலைன்னு சொல்லி..முடிஞ்சா கல்யாணத்தை நிறுத்திக்கோன்னு அலட்சியமா சொன்னவர்ட்ட தோத்து அவரையே கல்யாணம் பண்ணிட்டு வந்து நிற்கிறேனே..இதவிட வேற எதுவும் வேணுமா என்ன..?உங்க அலட்சியம் எதனால வந்தது..இவ நம்மை லவ் பண்ணவதானே நம்மை வேண்டாம்னு சொல்ல மாட்டா..நம்மைவிட்டால் இவளுக்கு வேற வழி இல்லை என்ற நினைப்பு கொடுத்தது தானே..எங்கேஜ்மெண்ட்ல குத்தி காட்டுறீங்க..ஏண்டா லவ் பண்ணினோம்னு ஃபீல் பண்ண வைக்கிறீங்க உதய்..ஐ ஃபீல் வெரி லோ..”
அவள் பேசவே அவன் திகைத்து தான் போனான். ‘யம்மாடி..இதில்ல இத்தனை அர்த்தம் ஆ..’
“உஃப்..நீ சொல்றதை கேட்டாலே எனக்கு தலை சுத்துது..ஏன் இவ்வளவு யோசிக்கிற உதயா..அன்னைக்கு போன்ல நீ ரொம்ப பேசின பதிலுக்கு நான் பேசினேன்..அவ்வளவு தான்..மத்தபடி ஒன்னுமே இல்ல..பிடிக்காமல் கல்யாணம் பண்ணிக்க நான் என்ன கேனையனா..”
“ஆஹான்..அப்போ நீங்க என்னை விரும்பனீங்க..இதை நான் நம்பணும்..???”
என்று அவள் நக்கலாய் சொல்ல, “அப்படினு எப்போ சொன்னேன்..”
என்று அவன் அசால்ட்டாய் கூறவும்,
“பேசாமல் போயிருங்க..இல்ல..எதையாவது எடுத்து அடிச்சிடுவேன்..”
என்று டென்ஷனாய் கத்தியவள் கைக்கு ஏதுவாய் எதாவது பொருள் கிடைக்கிறாதா என்று சுற்றம் பார்க்க, “சொல்ல முடியாது..நீ அடிச்சாலும் அடிப்ப..” என்றவன் வேகமாய் அருகில் வந்து அவள் கைப்பற்றி இழுத்து சென்று கட்டிலில் அமர வைத்து அவள் முன் சம்மணமிட்டு அமர்ந்தான்.
“எனக்கு உன்னை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கும்..பிடிக்கும்னா அஸ்ஸ ஃப்ரெண்டா…ஓகே..இடைல நீ லவ் சொன்னப்போ நம்ம ஃபேமிலி ரெண்டுக்கும் ஆகாது..ஸோ இந்த லவ் வொர்க் அவுட் ஆகாதுனு தோனுச்சு..அதை உன்னுட்ட நான் சொன்னப்ப நீ புரிஞ்சிக்கல..அட் சம் பாய்ண்ட்..ஏதோ ஒரு வேகத்தில் உன் வீட்டுக்கு வந்து ரொம்ப பேசிட்டேன்..கண்டிப்பா அது என்னோட தப்பு தான்..இப்பவரை நான் அதை நினைத்து ரிக்ரெட் செய்றேன்..ஆனால் இப்ப எல்லாம் மாறிடுச்சு…நம்ம குடும்பம் இடையில் இருந்த மனஸ்தாபமும் தீர்ந்திடுச்சு..அதுக்கு அப்புறம் உன்னை ஏன் மறுக்க போறேன்..”
என்று அவன் விளக்கமாய் பேசியபோதும் அதே முறைப்போடு தான் அமர்ந்திருந்தாள்.
“ஸோ..நம்ம ஃபேமிலி ப்ராப்ளம் தீராமலே இருந்திருந்தால் என் பக்கம் திரும்பி கூட பார்த்திருக்க மாட்டீங்க…நான் உங்களுக்கு ஒரு அப்ஷன் தான் இல்லையா..இன்கேஸ் உங்களுக்கு பிடிச்சு என்னைவிட பெட்டரா யாராவது இருந்தாலும் நீங்க ஓகே சொல்லி இருப்பீங்க..”
“இது விதாண்டாவாதம்..”
“இது தான் ஃபாக்ட்..உங்க அக்காவே வந்து வேற பொண்ணை காட்டி கல்யாணம் பண்ணிக்க சொல்லி இருந்தால்..அந்த பொண்ணை உங்களுக்கு பிடித்து இருந்தால் என்ன பண்ணி இருப்பீங்க…அக்ஸப்ட் பண்ணி இருப்பீங்க தானே..பிகாஸ் ஐம் நத்திங் ஸ்பெஷல் டு யூ..”
“இங்க பாரேன்..இப்ப என்ன நடக்குதோ அது மட்டும் தான் உண்மை..இந்த இருந்தால் போட்டு யோசிக்க ஆரம்பிச்சோம்னா கடைசியா நாம பொறக்காமலே இருந்தால் என்ற கேள்வியில போய் தான் முடியும்..அதனால முடிஞ்சு போன விஷயத்தை இப்படி நடந்து இருந்தால் அப்படி நடந்து இருந்தால்னு யோசிக்கிறதை முதல்ல நிறுத்து..!!! உன்னோட எனக்கு கல்யாணமே முடிஞ்சுடுச்சு..நீ என் வொய்ஃப்..இனிமே நீ தான் என் பெட்டர்ஹால்ப்..ஸோ உன் இடத்துல வேற பொண்ணு வைச்சு யோசிக்கிறதே பெரிய முட்டாள்தனம்..”
“ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பி தான் மேரேஜ் பண்ணனும்னா நம்ம ஊர்ல பாதி பேருக்கு கல்யாணமே நடக்காது..இங்க எல்லாம் பிடித்ததை அடிப்படையா கொண்டு தான் மேரேஜ் நடக்குது..அதுக்கு அப்புறம் மலருவது தான் லவ்..ஏன் நம்ம மேரேஜை நீ அப்படி எடுத்துக்க கூடாது..”
நிதானமாய் அதே சமயம் தெளிவாய் அவன் பேசியதில் அவள் முகத்தில் யோசனை படிய,
‘ஹப்பாடி..யோசிக்கிறா..இப்படியே மெய்ண்டனைன் பண்ணுடா உதய்..’ என்று மானசீகமாய் தன் தோளை தட்டிக் கொடுத்தான்.
“நீங்க என்னை குழப்ப பார்க்கறீங்க..”
“இப்ப தான் நீ தெளிவா யோசிக்கிற..எனக்கு உன்னை பிடிக்கும் உதயா..உன்னை மிஸ் பண்ண நான் விரும்பல..எப்ப நம்ம எங்கேஜ்மெண்ட் முடிஞ்சிதோ அப்ப இருந்தே நான் உன்னை என் மனைவியா தான் பார்க்கிறேன்..அதனால எனக்கு எந்த குழப்பமும் இல்ல..நீ தான் தேவை இல்லாததை சிந்திச்சு மனசை கெடுத்துக்கிற..பாஸ்ட் இஸ் பாஸ்ட்..நான் தான் முழு தப்புனே இருக்கட்டும்..இதை இங்கேயே விட்டுடேன்..ஒரு நியூ லைஃப் ஸ்டார்ட் பண்ணுவோம்..”
என்று சிரிப்போடு நிறுத்தியவன் அவள் மேசைமீது வைத்திருந்த ட்ரேவை எடுத்து வந்து அவள் கையில் ஒரு க்ளாஸை கொத்து தான் ஒன்றை எடுத்துக் கொண்டு,
“இந்த பாலோட..” என்று வாக்கியத்தை முடிக்க தயங்கினாலும் மெல்ல அதனை பருகினாள் உதயா..
உதய் அவளை சமாதானம் படுத்தும் நோக்கோடு திட்டமிட்டு எல்லாம் பேசவில்லை.ஒவ்வொரு வார்த்தையும் அவன் மனதில் இருந்து நேர்மையாய் வந்தது தான்.
காதலை பற்றி பெரிதாய் சிந்தித்திராத உதயிக்கு கல்யாணம் குறித்து நிறைய கனவுகள் இருந்தது.தன் வாழ்க்கையில் இனி ஒவ்வொரு படிகளிலும் தோள் கொடுக்கவும் மடி சாய்க்கவும் தனக்காய் அவளும் அவளுக்காய் தானும் என்று இனிய சம்சாரி வாழ்க்கை வாழ நிறைய ஆசை இருந்தது.எனவே திருமண நிகழ்வு ஒவ்வொன்றையும் இரசித்து அனுபவித்தே கடந்து வந்தான் உதய் குமார்.
இன்னது என்று தெரியவில்லை என்றாலும் உதயா தன்மீது அதீத கோபத்தில் இருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது.அது எதுவாக இருந்தாலும் இன்றே பேசி தீர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவன் அதில் சற்று வெற்றியும் கண்டான்.
“ஹே..இன்னைக்கு நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல..லெட்ஸ் மேக் இட் ஸ்பெஷல்..”
என்று இருக்கையும் கோர்த்துக் கொண்டு உற்சாகமாய் சொல்ல, “என்னாது..” என்று அவள் அதிரவும் அவள் எண்ணப்போக்கை புரிந்தவனாய்,
“யம்மா..நான் அதை சொல்லல..”
என்றவன், “கேட்டால் காது ஜவ்வு தீயிற வரை திட்டி தீர்த்திட மாட்ட..’ தனக்குள்ளே முணுமுணுத்தான்.
“சும்மா..எதாவது பேசலாம்..நீ உன்னை பத்தி சொல்லேன்..மேடம் ஒரு விசயத்திலே நிலையா இருக்க மாட்டீங்க போலையே..ஸ்டெடிஸ்..கூடவே அக்டிங்..அப்புறம் டேன்ஸ் கூட கத்துக்கிட்டேன்னு ஆஷிக் ஒருமுறை சொல்லி இருக்கான்..இங்க எம்.என்.சில வேலை பார்த்துட்டே..ஷோஷியல் சர்வீஸ்..எப்படி இதெல்லாம்..சென்னையில் காருண்யாட்ட சொன்னேல..ஸ்ப்ரெட் லவ் பத்தி..நானும் அதே சென்னையில் தான் இத்தனை வருஷம் இருக்கேன்..எனக்கு இது பத்தி நீ அன்னைக்கு சொல்லும் வரை தெரியாது.உண்மையாவே அருமையான விஷயம்..”
உதயாவின் ஆர்வங்களையும் விருப்பங்களையும் ஒரு வட்டதிற்குள் அடைக்க முடியாது.சிறு வயதில் இருந்தே இப்படி தான்.பள்ளியில் படிப்பு மட்டுமே என்று இல்லாமல் என்.சி.சி, சைன்ஸ் க்ளப்,ஜூனியர் ரெட் க்ராஸ் என்று பள்ளிகளில் இருக்கும் மணவர்களுக்கான இயக்கங்களிலும் சேர்ந்துக் கொண்டு அதில் நன்றாக அறியபடும் ஒரு மாணவியாய் இருப்பாள். புதிது புதிதாய் தெரிந்துக் கொள்ளவும் அதில் தன் பங்களிப்பை ஆற்றவும் தவறமாட்டாள்.கல்லூரி கடந்து தற்போதும் சரி கிணற்று நீராய் தேங்கிவிடாமல் நதியாய் ஓட்டத்தோடே இருக்கவே அவளுக்கு விருப்பம்..!!!
அவளுக்கு பிடித்தமான ஒன்றை பற்றி அவன் பேச்சை தொடங்கவும் அவள் குழப்பங்களும் தயக்கங்களும் மறைந்து ஸ்ப்ரெட் லவ் மூலம் அவளுக்கு கிடைத்த அனுபவங்களை அவள் ஆர்வமாய் பேசினாள்.
அதன்பின் நிறைய நிறைய பேசினர்..நேரம் போனது கூட தெரியாமல் ஏதேதோ பேச்சுகள் தொடர்ந்துக் கொண்டே போக இறுதியில் தூக்கம் வந்து படுத்தபோது உதயாவின் மனம் லேசானது போல் இருந்தது.
மலையளவு எண்ணி இருந்த பிரச்சனை ஏனோ இந்த சில மணி நேரங்களில் மடுவாக தோன்றியது உதயாவிற்கு..தோன்ற வைத்திருந்தான் உதய்.
அவன் ஒருபுறம் இவள் மறுப்பக்கமும் திரும்பி படுத்திருக்க அவள் கண்களை மூட எத்தனித்தபோது,
“உதயா…ஒன்னு மறந்துட்டேன்..”
என்று வேகமாய் எழுந்தமர, “ஏன்..என்னாது..” மெத்தையில் முழுங்கை உன்றி அவனிடம் திரும்பி வினவ அவள் உணரும்முன் பட்டென்று நெற்றியில் முத்தமிட்டு,
“இது தான்..குட் நைட்..” என்று கண் சிமிட்டியவன் மீண்டும் பழையபடி படுத்துவிட்டான்.
இதனை முற்றிலும் எதிர்பார்க்காததால் உன்றிய கை தடுமாற மெத்தையிலே பொத்தென்று விழுந்தவள் முகத்தில் சில நொடிகள் சென்றபின் வெட்கத்தின் சாயல்..!!