“வங்கத்தின் கடலலை கொஞ்சி தாலாட்டி குளிர்விக்கும் புகார் “. “அரிசிலாறு” பொன்னியுடன் சேர்ந்து பொங்கி கலந்து, கடல் தாயை கட்டிபிடிக்கும் புகாரின் ரம்யமான மாலை நேரம். ஆடிமாத்தின் காற்று நீரலைகளில் மோதி, மேலெழுந்து கரையை நோக்கி வீசிக் கொண்டிருந்தது. கடலும், ஆறும் ஒன்று கூடும் இடத்தில் அமைந்திருந்த பரதவர் குடியிருப்புகள் வழக்கம் போல உற்சாகத்தில் திளைத்து இருந்தது. கடலுக்கு புறப்படும் அவர்களின் கட்டுமரங்களும், கடலிலிருந்து கரை திரும்பும் கட்டுமரங்களும் கரைவெளியெங்கும் நிறைந்து நிற்க, பரதவ பெண்களும், ஆண்களும் கூட்டமாக ஒன்றுகூடி மீன்களை கூடைகளில் சேகரித்துக் கொண்டிருந்தனர். மாலை வேளையிலும் கரை திரும்பிய மீனவர்களிடமிருந்து மீன்களை வாங்க வியாபாரிகளும், புகாரின் பொது ஜனமும் மொய்த்துக் கொண்டிருந்தனர். பரதவர் குடியிருப்பை தாண்டி கடற்கரை மணல் மேட்டில் யவன, அராபியர் வசித்து வந்தனர். இவர்கள் புகாரில் வாணிபம் செய்ய வந்த, நாவாய்களின் மாலுமிகளாக, சிப்பந்திகளாக உள்ளவர்கள். நாவாயை பழுது பார்ப்பது, பராமரிப்பது போன்ற செயல்களை பகலில் செய்துவிட்டு, இரவு நேரங்களில் அவர்களுக்கென்று உள்ள குடியிருப்பு பகுதியில், சொக்கட்டான் விளையாடுவதும், மது அருந்திவிட்டு கேளிக்கையில் ஈடுபடுவதும் வழக்கம். நள்ளிரவு கடக்கும் நேரத்தில் பரதவ பெண்கள் இங்கு வந்து சேர்ந்த பின் கேளிக்கை களைகட்டும். கூத்தும் கும்மாளமும் கதிரவன் கிழக்குக் கரையில் தலை நீட்டும் வரை நீடிக்கும்”.
“அன்றும் அவ்வாறே இரவு தொடங்குவதற்கு முந்தைய நேரத்தில் உற்சாகமான சப்தங்களுடன் புகாரின் பரதவர் குடியிருப்பும், அயல்நாட்டு கடலோடிகள் குடியிருப்பும் காணப்பட்டது”. “யவன, அராபிய கடலோடிகள் முன் இரு பரத பெண்கள் வெறிகொண்டு நடனமாடிக் கொண்டிருந்தனர். உற்சாகம் கரையோடிக் கொண்டிருந்த நேரம் அது. புகார் கோட்டையின் உள்ளேயிருந்த கலைநயம் மிக்க அரண்மனையின் “வசந்த மண்டபத்தின்” மேல்தளம் ஒரு புறம் கடலையும், மறுபுறம் துறைமுகத்தையும் அதையொட்டி இருந்த கலங்கரை விளக்கின் கோபுரத்தையும், மறுபுறத்தில் பரதவர், யவன, அராபியர் குடியிருப்பு பகுதிகளையும் தெளிவாக காட்டின. கலங்கரை கோபுரத்தில் ஏற்றப்பட்டிருந்த பெரிய விளக்கில் எண்ணை ஊற்றிவிட்டு இறங்கும் சோழ காவல் வீரன், துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள், வணிகர்கள், காவலர்கள் என்று காட்சிகளை உள்வாங்கியபடியே “தடித்திருந்த கரிய பெரிய உதடுகளில், மதுக் குவளையில் இருந்த ரசத்தை உறிஞ்சி பருகியவன், ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான உருவத்தில் இருந்தான்”. அவனின் கரங்களின் நீளமும், அவற்றில் உரமேறியிருந்த உறுதியும், பெரிய இரு தென்னை மரங்கள் போல காணப்பட்டன. உயரத்திற்கு ஏற்ற உடல் அமைப்பில், மதுவை சதா நேரமும் நிரப்புவதால், சற்று முன்னே தள்ளி தெரிந்த தொந்தியை தடவியபடி உலாவியவன், தலையில் இருந்து தோள்வரை வளர்ந்து சுருண்டு தொங்கிய கேசத்தின் ஒவ்வொரு இழையும் இரும்பு நார்களாக தெரிந்தன“.
யோசனை ஒருபுறம், சதிவலைகள் பின்னுதல் மறுபுறம், என்று ஏதேதோ யோசனையில் நடமாடிக்கொண்டே, சிந்தித்துக் கொண்டிருந்தான் இரும்பிடை வல்லன்.
“சோழ பேரரசை நிறுவி, அதை தன்னுடைய முழு பராக்கிரமத்தால் ஆட்சி செய்யவும், எதிரிகளே இல்லாத வாழ்வும் வாழ, இளவயது முதல் கண்ட கனவு நினைவாகும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது”. ஆனால் இடையூறுகள் இல்லாமல் இல்லை. சோழத்தின் வாரிசுகள் பிரச்சனையை தூண்டி விட்டாயிற்று!!. சேரத்துடன் மறைமுக உறவாடி கிரேக்கர்கள் ஆதரவை பெற்றுவிட்டோம்!!??. பாண்டியன் வழக்கம் போல தொந்தரவு செய்ய, இருக்கின்றான்!!. “அவனை அடக்க ஒரே வழி அவன் சகோதரி “வேல்விழி”. மருமகனுக்கு அவளை மணம் செய்து வைத்து விட்டால்!!!???? என்று சிந்தித்து வந்தவன் உதடுகள் தானே திறந்து சொல்லியது “ அந்தோ நாசம்…. பிரம்மன் அவ்வளவு அழகையும் கொண்டு உருவாக்கிய அந்த பொன்னெழில் பூவையை, அவளால் வரப்போகும் பலனை, வேறு ஒருவனுக்கு கொடுத்துவிட்டு தியாகி ஆவதா???”…. என்றவன் கடகடவென வசந்தமாளிகை அதிர சிரித்தான்.
“நெடுங்கிள்ளி!!…. நான் தூக்கி வளர்ந்தவன். என் சகோதரியின் பிள்ளை. இன்னமும் உலக அனுபவம் இல்லாதவன். அரசப்பதவியை இவன் சுமந்து, என்ன சாதிக்கப் போகின்றான்? போர்க்களம் குறித்து என்ன தெரியும் அந்த சுண்டெலிக்கு??!!!… வேல்விழி போன்ற வீரத்திலும், விவேகத்திலும், அழகின் அத்தனை சுரங்கத்தையும் தனக்குள்ளே வைத்துள்ள ஒரு பெண்ணுக்கு இவனால் என்ன சுகம் தர இயலும்???... “அவள் எனக்கென்று பிறந்த தேவலோக மங்கை. அவள் எனக்கென்றும், நான் அவளுக்கென்றும் தீர்மானித்து தான் என்னவோ?? இன்றுவரை நான் திருமணம் குறித்தே சிந்தியாது வாழ்ந்துவிட்டேன். இனி அப்படி இல்லை. அவளோடு தான் வாழ்வு” என தன் உள்ளத்திற்குள் பூரித்து திளைத்தபடி, போதையில் மிதந்து கொண்டிருந்தான் இரும்பிடையான்.
“சோழ தேசத்தின் முதல்வரும், அரசரின் சார்பாக நிர்வாக அதிகாரியாகவும், வெண்ணியின் மைந்தனுமான சோழத்து தலைவருக்கு பணிவான வணக்கம்.!!!” என்ற குரல் கேட்டு தலை உயர்த்தி பார்த்தான் இரும்பிடையான்.
என்ன சேவகனே? என்றான் சோழ அதிகாரி. “தன் தொப்பையை அடைந்த ஒரு குவளை மதுவின் ஸ்பரிசத்தில் வயிற்றில் எழுந்த குளிர்வில்….!!!
“தங்களை காண குடந்தையில் இருந்து, ஒற்றன் ஒருவன் வந்துள்ளான்” என்றான் சேவகன்.
“அப்படியா? வரச்சொல் என்றவன், சேவகனே எங்கே அந்த யவன ஆடலரசி? உடனே அவளை அழைத்து வா… என்னை அவளின் நடனத்தால் மகிழ்விக்க சொல்” என்று குழைவாகவும், குரூரமாகவும் சொன்னான் இரும்பிடையான்.
“உத்தரவு தலைவரே” என்ற சேவகன், அறையை விட்டு வெளியேறினான். சற்று நேரத்திற்கு எல்லாம் உள்ளே வந்தான் ஒற்றன் ஒருவன். வண்டிக்காரன் போல வேடமிட்டு வந்திருந்தவன், இரும்பிடையான் முன் பவ்வியமாக தலை குனிந்து நின்றான்.
“சோழத்து நாயகருக்கு வணக்கம். தங்களின் மருமகனும், சோழத்து பட்டத்து இளவரசருமான நெடுங்கிள்ளியிடமிருந்து தகவல் கொண்டு வந்துள்ளேன்”.
“நாகை துறையின் பொறுப்பாளரும், சோழத்தின் தனிப்படை தலைவருமான இளமாறன், தற்போது பழையாறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார்”. “பாண்டிய இளவரசியை சோழத்து ஆபத்துதவிகளிடம் இருந்து கவர்ந்து, கடத்தி ஒளித்து வைத்துள்ளதாக அவர்மீது குற்றச்சாட்டு”. “அவரை நேரடியாக இளவரசரே கைது செய்துள்ளார்”. மேலும் தங்களின் நலம் விரும்பியும், சோழத்தின் பிரதான ஜோதிடருமான சீத்தலை பெரும்நம்பி உங்களை உடனே காண விரும்புகின்றார். குடந்தையின் மாளிகையில் அவரை நீங்கள் சந்திப்பது மிக அவசரம் என்று கூறியுள்ளார் இளவரசர்” என்று நிறைவு செய்தான் ஒற்றன்.
“வேல்விழியை இளமாறன் கடத்திவிட்டானா? ஆஆஆ… என்ன இது சோதனை? “வேல்விழி இந்நேரம், உறையூருக்கு வெளியேயுள்ள என்னுடைய அந்தரங்க மாளிகையில் அல்லவா இருப்பாள்” என்று நினைத்திருந்தேன். எங்கிருந்து வந்தான் இந்த இளமாறன்? நெடுங்கிள்ளியும், இளமாறனும் தோழர்கள் ஆயிற்றே? எப்படி அவனை கைது செய்தான் நெடுங்கிள்ளி?என்று யோசித்த இரும்பிடையான்….
“ஒற்றனே… இளமாறனை ஏன் நெடுங்கிள்ளி கைது செய்தான்? அவர்கள் தோழர்கள் ஆயிற்றே!! என்று தான் சந்தேகத்தை தெளிவாக்கிக் கொள்ள வினவினான் இரும்பிடையான்.
“தலைவரே, இருவரும் ஒரே ரதத்தில் தான் குடந்தை வந்தனர். குடந்தை ஜோதிடரின் இல்லத்திற்குள் இருவரும் தோள்மீது தோள் கோர்த்தபடியே நுழைந்தனர். ஆனால் திடீரென்று ஆபத்துதவிகள் தலைவன் அங்கே உடல்முழுதும் காயங்களுடன் வந்து சேர்ந்தான். அதன் பின்பு தான் இளமாறனை கைது செய்ய இளவரசர் உத்தரவிட்டார் என்ற ஒற்றன்… தொடர்ந்தான்.
“ பாண்டிய இளவரசியை அடைவதற்கு இளமாறன் தான் தடைசெய்வதாகவும், அதற்கு இடையூராகத்தான் சோழ ஆபத்துதவிகளை தாக்கி இளவரசியை அவர் கவர்ந்து ஒளித்து வைத்துள்ளார் என்றும், இளவரசர் நெடுங்கிள்ளி நம்புவதால் தோழர்கள் எதிரிகளாக மாறிவிட்டனர்” என்றான்… ஒற்றன்
இரும்பிடையானுக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. எனினும் “ஆறுதல்” இளமாறனும், நெடுங்கிள்ளியும் எதிரிகள் ஆனது. “வேதனை” இளமாறன் வேல்விழியை கடத்தி ஒளித்து வைத்திருப்பது!!??.
இளமாறனுக்கு பாண்டியனும் நெருங்கிய தோழன். அப்படியென்றால் வேல்விழியை பாண்டியனிடம் இளமாறன் ஒப்படைத்து இருப்பானா? இருந்த மாபெரும் பிடியை இழந்து விட்டோமா? என்று குழம்பியவனுக்கு மொத்த போதையும் தெளிந்து போனது.
“ஒற்றா!!?? இளமாறன் இப்போது பழையாறை சிறையில் தான் உள்ளானா? நெடுங்கிள்ளி எங்கே என்று பதட்டத்துடன் வினவினான் இரும்பிடையான்.
“இளமாறன் சிறையில் நேற்று இரவில் அடைக்கப்பட்டுள்ளார், மூன்றடுக்கு பாதுகாப்பு பழையாறை சிறையில் போடப்பட்டுள்ளது. இளவரசர் ஜோதிடரின் மாளிகையில் தான் இரவு தங்கினார். என்னை அழைத்து, தங்களிடம் தகவல் கூற ஏவிய போது, தன் குருவை காண செல்வதாக கூறினார்” என்றான் ஒற்றன்.
“மேலும் சீத்தலை பெரும்நம்பி அவர்கள் தங்களிடம் பேச நிறைய இருப்பதாக கூறினார் என்பதை வலியுறுத்தி கூற இளவரசர் ஆணை” என்று முடித்த ஒற்றன், இரும்பிடையான் உத்தரவுக்கு காத்து நின்றான்.
“சரி ஒற்றா!!!.. நீ கிளம்பு.. நான் குடந்தை செல்ல ஆவண செய்கின்றேன், என்றவன்… “எதற்கும் நீ சீத்தலையாரை பழையாறை “பொற்கொடி” மண்டபத்தில் என்னை சந்திக்க கூறு” என்றான்.
“தலைவணங்கி “ஆகட்டும் தலைவரே” என்ற ஒற்றன் விரைவாக வெளியேறினான். அவன் சென்ற பிறகு, சேவகனை அழைத்தான் இரும்பிடையான்….”
“சேவகனே!!.. உடனே நான் குடந்தை செல்ல தேரை தயார் செய்ய சொல்”, புகாரின் கோட்டைத் தலைவனை காலம் தாழ்த்தாது வரச்சொல்!!.. என்று கூறிவிட்டு வசந்த மண்டபத்தில் இருந்து உள்ளறைக்கு கிளம்ப தயாராகி வர சென்றான் இரும்பிடையான்”.
“புகாரின் பரதவர் குடியிருப்பை தாண்டி யவனர்களின் வாழ்விட குடிசை ஒன்றை நோக்கி வேகமாக இரு உருவங்கள் சென்று கொண்டிருந்தன”. “இருவரின் உடையும், உடலை மறைத்து போர்த்தியிருந்த போர்வையும், அவர்களை இரவில் நடமாடும் அரக்கர்கள் போலவே காட்டின”. சிறிய வளைவில் திரும்பி “அரசலாற்றின்” கரையில் இருந்த குடிசைக்குள் நுழைந்த அந்த இரு உருவங்களும் குடிசை கதவை தாளிட்டு விட்டு போர்வையை விலக்கிட…”.
வா.. “போரிடஸ்” ஏதேனும் பிரச்சனை இருந்ததா? என்றவனின் குரல் எங்கோ கேட்டது போல இருக்கிறதே? என்று வாசகர்கள் எண்ணலாம். ஆனால் அதுதான் உண்மை. அந்த குரலுக்கு சொந்தக்காரன் சாத்சாத் “இளமாறனே”!!!!????.
“ஒரு பிரச்சனையும் இல்லை தலைவரே!.. தங்களின் கூற்றுப்படியே பழையாறை பொற்கொடி மண்டபத்தை சுற்றி நம் வீரர்கள் தயாராக உள்ளனர்.
இரும்பிடைவல்லன் அங்கே சீத்தலையாரை சந்தித்து பேசுவதை அறிந்து கொண்டவுடன், சீத்தலையாரை பின் தொடர்ந்து சென்று கைது செய்து விடுவார்கள் என்று முடித்தான் போரிடஸ்.
“சேந்தன் இந்நேரம் சீத்தலையாரிடம், “இரும்பிடையான் பழையாறை பொற்கொடி மண்டபத்தில்” சந்திக்க கூறியதாக ஒப்புவித்து இருப்பான்”. “இரண்டு நரிகளும் ஒன்றுகூடி ஊளையிடும் நேரம் வரட்டும். இரண்டையும் பிடித்து உயிரோடு தோலை உரித்து விடுவோம் என்றான், அராபியனான பர்ஷீத்”…
“எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த “வண்டிக்காரன்” வேடத்தில் இருந்த இளமாறன், கூறினான்…. “திட்டம் பிசிறின்றி நிறைவேற வேண்டும். சீத்தலையானை எளிதாக எடைபோட வேண்டாம். அவனை கைது செய்தவுடன் நாகை புத்த விகாரத்தில் உள்ள நம் ரகசிய அறைக்குள் அடைத்து வை பர்ஷீத்”. “நானும் போரிடசும் குடந்தையில் உள்ள சீத்தலையானின் மாளிகையில், ரகசியங்களை தெரிந்து கொள்கின்றோம். தேவை என்றால் “குரைமுகன்” மூலம் செய்தி அனுப்பி ரகசியம் பகிர்வோம்”. “ஒட்டுமொத்த செயலுக்கும் நம்முடைய முக்கிய தளபதிகள் மட்டும் செயல்பட்டால் போதும்”. நம் படையினருக்கு இது ஏதும் தெரியவேண்டாம்” என்று முடித்தான் இளமாறன்.
போரிடஸ் கேட்டான்… “தலைவரே எப்படி நீங்கள் பழையாறையின் சிறையில் இருந்து மீண்டீர்கள்?” “சிரித்தபடி கூறினான் இளமாறன்… “என்னை கைது செய்ததை சேந்தன் கண்டு கொண்டான். என்னை கைது செய்த வீரர்களையும், என்னையும் அவன் பின்தொடந்து வந்திருக்கின்றான். “சிறையின் ரகசிய வழி மூலம் வந்து என்னை காப்பாற்றினான் சேந்தன்” என்றான் இளமாறன்”.
“பர்ஷீத் உறையூருக்கு “குரைமுகன்” மூலம் அனுப்பிய செய்தி சென்று சேர்ந்திருக்குமா? என்றான் இளமாறன். “நிச்சயமாக இந்நேரம் செய்தி கிடைத்து இருக்கும் தலைவரே!” என்றான் பர்ஷீத். அனைவரும் இரண்டாம் ஜாமம் கடக்க காத்திருக்கையில், பரதவன் ஒருவன் குடிசைக்குள் வந்தான்.
“தலைவரே, ஏற்பாடுகள் முடிந்தது. நீங்கள் கூறியது போல, இரண்டு படகுகள் அரிசிலாற்று பகுதியில் தயாராக உள்ளன. உடனே கிளம்புங்கள்” என்றான். பரதவன், இளமாறன், பர்ஷீத், மற்றும் போரிடஸ் உள்ளிட்ட நால்வரும் குடிசையின் பின்பிருந்த அரிசிலாற்றின் கரையை அடைய இரண்டு படகுகள் ஆற்றிற்குள் நின்றுகொண்டிருந்தன. அவற்றில் நால்வரும் ஏறி பொன்னி நதி அரிசலாற்றோடு கலக்கும் பகுதியான குடந்தையின் மேற்கு பகுதிக்கு விரைந்தனர்.
அதே நேரம் உறையூரின் ஞானப்பிரம்மர் மாளிகையின் முற்றத்தில் பழுப்பு நிற “குரைமுகன்” ஒன்று குரல் எழுப்பியது. வேல்விழி சப்தம் கேட்டு விழித்தாள். நலங்கிள்ளியும் சப்தத்தின் வித்தியாசம் உணர்ந்தவனாக தன் அறையை விட்டு வெளியே வந்தான். அதற்கும் ஞானப்பிரம்மர் கதவை திறக்க அந்த பழுப்பு நிற குரைமுகன் உள்ளே நுழைந்தது. ஞானபிரம்மரின் கால்களில் முகத்தை வைத்து தேய்த்து, கொஞ்சிய அந்த குரைமுகனின் தலையையும் ,உடலையும் தடவி விட்டார் ஞானப்பிரம்மர். அதற்குள், நலங்கிள்ளி, பூவிழி, மற்றும் வேல்விழி அங்கே வந்துவிட்டனர். ஞான பிரம்மர் செயலை மூவரும் ஆச்சரியமுடன் பார்த்துக் கொண்டிருக்க, குரைமுகனின் கழுத்தை சுற்றியிருந்த பட்டையை பிடித்து அவிழ்த்து எடுத்தார் ஞானப்பிரம்மர். அதற்குள் ஓலை ஒன்று இருந்தது.
ஓலையை படித்தவர் புன்னகைத்தார். பின் திரும்பியவரை மூவரும் ஆச்சரியமுடன் பார்த்தனர். பூவிழி குரைமுகனுக்கு உண்ண கொஞ்சம் உணவு கொடு என்றார். பூவிழி உணவு கொண்டுவந்து சிறிய தட்டில் குரைமுகனுக்கு வைக்க, குரைமுகன் உணவை உண்ணலானான்.
வேல்விழி, நலங்கிள்ளி கேளுங்கள்….!!!, இளமாறன் இப்போது ஆபத்தில்!!??. நெடுங்கிள்ளி இளமாறனை சிறை செயது விட்டான்!!??. இரும்பிடையான் தற்போது பழையாறை செல்கின்றான்!!!. சீத்தலை நம்பியும் இரும்பிடைவல்லனும் நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர் !!! என்று நிறுத்தினார் ஞானப்பிரம்மர்….
“வேல்விழிக்கும், நலங்கிள்ளிக்கும் கலவர மனநிலையும், கவலையும் அதிகரித்தது”. “வேல்விழி ஞானப்பிரம்மரிடம் பதட்டத்துடன் வினவினாள்….!!?? “குருவே நானும், நாயகரும் இரும்பிடையான், சகோதரரை சந்திக்கும் முன் பழையாறை சென்று அவரை சிறையில் இருந்து விடுவிக்க செய்யலாமா?…!!! ” உங்கள் உத்தரவு என்னவென்று கூறுங்கள்? என்றாள்.
நலங்கிள்ளியும் அதையே ஆமோதித்தான். அவனால் “நெடுங்கிள்ளி இளமாறனை சிறை செய்ததை ஏற்க முடியவில்லை”. ஞானப்பிரம்மர் நிதானமாக பதில் கூறினார்.
“பிள்ளைகளே பதட்டம் வேண்டாம். இளமாறன் சிறையில் இருந்து தப்பிவிட்டான். இதுவரை அமைதியாக இருந்தவன் தன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டான். அவனுடைய படையின் முக்கிய தளபதிகள் அவனுடன் இப்போது உள்ளனர். குடந்தை ஜோதிடரை சிறையெடுக்க வியூகம் போட்டுள்ளனர். வேல்விழி எக்காரணம் கொண்டும் மாளிகையை விட்டு வெளியே செல்லவேண்டாம் என்பது தான் இப்போதைய நிலை”.
“நலங்கிள்ளி நீ தயாராக இரு. எப்போது வேண்டுமானாலும் இளமாறன் உன்னை அழைக்ககூடும். மீண்டும் “குரைமுகன்” செய்தி கொண்டுவரும்” என்றார் ஞானப்பிரம்மர்.
“புறாவை கொண்டு தூது அனுப்புவதும், ஒற்றர்களை பயன்படுத்தி செய்திகளை பரிமாறுவதும் கேள்விப்பட்டுள்ளேன் குருவே, இதென்ன “குரைமுகன்” மூலம் செய்தி அனுப்பும் முறை என்று ஆச்சரியத்துடன் வினவினாள்”, பூவிழி.
பூவிழி “இந்த தூது முறையை சோழ தனிப்படை மட்டுமே உபயோகிக்கின்றது. நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட, ஆரோக்கியமான, நெடும்தூரம் நிற்காமல் பயணிக்கக்கூடிய “குரைமுகன்”களை தேர்ந்தெடுத்து, அவற்றை யாருக்கும் சந்தேகம் வராமல் பயன்படுத்தும் கலை என்பது சோழ தனிப்படையின் சிறப்பு. நன்கு அறிந்த தலைவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் இந்த குரைமுகன்களின் தூது விபரம் தெரியாது, என்று நிறைவு செய்தார் ஞானப்பிரம்மர்.
மூவரும் ஆச்சரிடத்தில் வாயடைத்து போனதுடன், இளமாறன் புத்திசாலித்தனம் குறித்து பெருமை கொண்டனர். “அனைவரும் சென்று உறங்குங்கள். எனக்கு இந்த குரைமுகன் மூலம் சில காரியங்களை செய்ய வேண்டியுள்ளது. அதை செய்கின்றேன்” என்றவர், தன்னுடைய உள்ளறைக்கு சென்றார்.
அனைவரும் அறைகளுக்கு சென்றனர். நலங்கிள்ளி மட்டும் உறக்கம் பிடிக்காமல் தவித்தான்.
“இளமாறனை நெடுங்கிள்ளி கைது செய்ததை அவனால் ஜீரணிக்க முடிதவில்லை. தந்தை இருந்து இருந்தால் இளமாறன் நிலை வேறு. இளமாறனை தன் சொந்த மகனாகவே பாவித்து வளர்த்து வந்தார் தந்தை. அப்படிப்பட்ட உயர்ந்தவனை, சோழத்து நலனுக்காக உயிரையும் தர தயாராக எப்போதும் இருப்பவனை, எப்படி?, எதற்காக? நெடுங்கிள்ளி கைது செய்தான்”. “அப்படியொரு வன்மம் நெடுங்கிள்ளிக்கு ஏற்பட எது காரணமாக உள்ளது என்று நினைத்து வருந்தினான்” நலங்கிள்ளி.
அதே வேளையில் மதுரையை அடுத்து இருந்த மேற்குமலை காட்டில் இருந்த ஆடம்பர மாளிகை ஒன்றில், பாண்டிய அரசன் தவிப்போடு இருந்தான். ஆவூர் இளையராணி அனுப்பியிருந்த செய்தி அவனை மிகவும் தவிக்க செய்து இருந்தது. வேல்விழிக்கு ஆபத்து என்பது பலவகையிலும் உள்ளது. வேல்விழியை வைத்து அரசியல் செய்ய பலதரப்பும் முயல்வது வேதனையாக உள்ளது. என்று வருந்திய பாண்டியனை, நோக்கி வந்து கொண்டிருந்தான், படைத்தலைவன் ஒருவன்…
தொடரும்…..