கே.வி.எஸ் கல்லூரி நூலகம் புத்தகங்களின் பிரத்யேக வாசனையும் ஒழுங்கான வரிசைப்பாடும் முழு நிசப்தம் நிரம்பிய இடத்தில் ஆங்காங்கே சின்ன முணுமுணுப்புகளோடு அதற்கே உரித்தான வழக்கத்தோடு இயங்கிக் கொண்டிருக்க அங்கே ஒரு பகுதியை நம் ஆரியனும் அவனது நண்பர்கள் கூட்டம் ஆக்கிரமித்திருந்தனர்.
அவர்கள் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து புத்தகத்தில் ஆழ்ந்து இருப்பதை காணும்போது நமக்கு மைல்ட் அட்டாக் வந்தாலும் அத்திபூத்தார் போல் நடக்கும் இந்த காட்சியை ஜீரணித்துக் கொண்டு ஆரியனும் அனித்தும் அமர்ந்திருந்த மேசையை நோக்கி செல்வோம்..
மும்முரமாய் புத்தகத்தில் இருந்து பார்த்து நோட்ஸ் எழுத்திக் கொண்டிருந்த நண்பனை பார்த்த அனித்,
“டேய்..ஆரியா..நீ படிச்சா அநியாயத்திற்கு படிப்பாளியா இருக்கடா..முடில..கூட ஒருத்தன் இருக்கான்னு கூட மறந்து அப்படியே புக்குள்ள போயிட்ட..எனக்கு தூக்கமா வருது..நான் வேணும்னா கிளம்பட்டா..”
“தூங்கி வழியாதடா..எந்த வேலையை எடுத்தாலும் அதை முழுசா செஞ்சி முடிக்கணும்..அறைக்குறையா செஞ்சா எனக்கு பிடிக்காது தெரியும்ல..”
என்று கூறியவன் மீண்டும் தன் வேலையில் ஆழ அவனை விடுத்து சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்க தொடங்கிய அனித் அப்பொழுது உள்ளே நுழைந்தவளை கண்டு,
“மச்சான்..உன் ஆளுடா..”
என்று கூற, ‘யார சொல்றான்..’ என்பதுபோல் திரும்பி பார்த்தவன் அங்கே சக்தியும் அவள் தோழிகளும் வருவதை கண்டான்.
முதல் பார்வையிலே அவள் முகம் வெளிறி கலையிழந்து இருப்பதை கண்ட ஆரியன் ‘என்னாச்சு இவளுக்கு..’ என்று யோசித்தாலும் நண்பனின் தலையில் தட்டி,
“டேய்….அவ என் ஆளுனு சொன்னேனா..இஷ்டத்துக்கு பேசாத..”
என்று முறைக்க,
“இல்லையா பின்ன..அப்போ அன்னைக்கு எங்களை கலட்டிவிட்டு பேசின..”
“ஏன் பேசினாலே ஆளுனு முடிவு பண்ணிடுவீங்களாடா…?!?!அவ கம்ப்ளைன்ட் கொடுக்கலையாம்..அவளால தான் சஸ்பென்ட் ஆக இருந்தேன்னு அவ சாரி கேட்க தான் வந்தாள்..உங்க முன்னாடி பேச தயங்குனா.. அவ்வளவு தான்..அதுக்குள்ள கதை கட்டாத…”
என்று அனித்திடம் விளக்கி கொண்டிருந்தவனின் கவனம் உள்ளே சென்றவள் மீது தான் இருந்தது.
‘எதையோ பறிக்கொடுத்தவள் போல் ஏன் இருக்கிறாள்.. என்னவென்று கேட்போமா..?’
என்று நினைத்தாலும்,
‘ஆமா..எப்ப பாரு..நீ ஓடி ஓடி போய் நிற்பதால் தான் அவளுக்கு நீனா ஒரு இளக்காரமா இருக்கு..போட்டும் போய் அவ பாசமலருட்டையே சொல்லிகட்டும்..”
என்று மனம் முரண்டியது.
“ஓஓஹோ… அதுவும் உண்மை தான்டா..சக்திகாக மனோஜ் தான் கம்ப்ளைன்ட் பண்ணது..சக்திக்கு மனோஜ் அண்ணன் மாதிரியாம்..அப்படி தான் காலேஜ் பூரா சொல்லி வச்சிருக்கான்..அதான் அந்த புள்ளைய ஒருத்தனும் சீண்ட மாட்டான்..”
என்று அனித் சொன்னதை அலட்சியமாய் காதில் போட்டுக்கொண்டு புத்தகத்தை புரட்ட அனித்தோ தன் போக்கில் பேசினான்.
“மனோஜ் பத்தி பேசவும் தான் நியாபகம் வருது..உனக்கு தெரியுமாடா..மனோஜுக்கும் தர்ஷனுக்கும் பெரிய கைகலப்பாக ஆகிடுச்சு..அதுனால அவனுங்க பிரண்ட்ஸ் கேங்கே பிரிஞ்சிடுச்சுடா..”
என்று சொல்ல புருவத்தை உயர்த்திய ஆரியன்,
“ஏனாம்..அன்னைக்கு அந்த தர்ஷன்காக என்னிடம் வரிந்து கட்டிக்கிட்டு வந்தான்..இப்போ என்ன..”
என்று கேட்க,
“அக்சுவலீ..தர்ஷனோட மொள்ளமாரி தனம் எல்லாம் மனோஜுக்கு தெரியாதுடா..அவன் ப்ரெண்டுனு அவன் வார்த்தையை நம்பினான்.ஆனால் இப்போ உணமை எல்லாம் தெரிந்திருக்கும்போல..பேச்சு சண்டை அடிதடிக்கு போயிடுச்சு.. ஆனால் விசயம் எந்த ஸ்டாஃப் காதுக்கும் போகல..அதனால இது பெரிய இஸு ஆகல..”
என்றவன், “ஆனாலும் மனோஜ் நல்லவன் தான் தெரியுமா..அவனுட்ட என்ன குறை சொல்ல முடியும்..??என்னவோ நமக்கும் அவனுக்கும் ஆரம்பத்தில் இருந்து ஆகல…”
என்று கூற தலையை சிலுப்ப,
“அவன் நல்லவனோ கெட்டவனோ நம்மை மதிக்காதவனை நாம மதிக்க வேண்டியது இல்லையே..”
என்று கூறினான் தோளை குலுக்கி..
பேச்சோடு ஆரியன் கண்கள் அவன் அணுமதியின்றி அவள் எங்கே என்று தேட ஒரு ரேக்கில் புத்தகத்தை எடுத்து வெறுமனே புரட்டிக்கொண்டிருந்த அவளும் அதே சமயம் அவனை பார்த்துவிட பார்த்ததும் அவள் கண்ணில் ஒர் மின்னலாய் நம்பிக்கை.
அவனை அங்கே அவள் எதிர்பார்க்கவில்லை.தவிப்போடு அவள் ஏதோ சொல்ல பரபரப்பது புரிந்தாலும் வேண்டுமென்றே அலட்சியமாய் பார்வையை அவளிடம் இருந்து திருப்ப சட்டென்று அவள் முகம் வாடி விட்டது.அதனையும் அவன் ஓரப்பார்வையில் கண்டு விட்டான்.
“ம்ஹூம்.. அதுவும் சரி தான்..”
என்ற அனித் ஆரியனின் பார்வை போகும் திசையை கவனித்துவிட்டு,
“அப்போ உனக்கு அந்த சக்தி மேல இன்ரெஸ்ட் இல்லை..அப்படி தானே..”
என்று கேட்க முகத்தை சுளித்து,
“ச்சே..ச்சே..இல்லவே இல்லை..அவளை போய் யாரு லவ் பண்ணுவா..”
என்று தோளை குலுக்க,
“உனக்கு பிடிக்கலேனா போடா..நான் ட்ரை பண்ண போறேன்..”
என்று கண்சிமிட்டிய நண்பனை அதிர்ந்து நோக்கினான்.
“டேய்ய்ய்ய்..”
“ஆமா மச்சான்..அன்னைக்கு அந்த பொண்ணு ஃப்லுட் வாசிக்கும்போதே என் மனசுல ஒரு தென்றல்.. அப்புறம் பார்த்தால் நீ லவ் பண்றயோனு ஒரு டவுட்ல இருந்தேன்..இப்போ தான் இல்லேன்னு சொல்லிட்டேலே இனி என் ரூட் கிளியர்…”
என்று உற்சாகமாய் சொன்னவனை பார்வையாலே பஸ்பமாகிய ஆரியன்,
“அவ பக்கம் உன் கண்ணு போச்சு..கண்ணை நோண்டி எடுத்திடுவேன்..அவளை எல்லாம் நீ பார்க்க கூடாது..”
என்றான் கோபமாய்..
“ஏன்..ஏன்..ஏன்..”
“ஆமா..கூடாது..அவ உனக்கு தங்கச்சி மாதிரி..”
“அடேய்…நா அவளை தங்கச்சியா ஏத்துக்கவே இல்லையே..”
“நீ என்ன ஏத்துக்கிறது..நான் சொல்றேன்..அவ இந்த நிமிஷத்தில் இருந்து உன் தங்கச்சி..சரியா..இப்போ மூடிட்டு வேலையை பாரு..”
என்க,
‘இவரும் லவ் பண்ணலையாம்..யாருமும் பார்க்க கூடாதாம்..போடா டேய்..கத்திரிக்காய் முத்தினால் கடை வீதி வந்து தான் ஆகணும்..’
என்று வாய்குள்ளே முணுமுணுக்க,
“என்னடா சொல்ற…”
என்று கேட்டவனிடம் புத்தகத்தை விரித்து காட்டி,
“படிக்கிறேன் சாமி..”
என்று அனித் கடுப்பாய் சொல்லவும்,
“ச்செரி..ச்செரி…படி மாப்ள..”
என்று கூறியவன் மீண்டும் சக்தியை பார்க்க அங்கே தான் நின்றாள்.
பார்வையில் கெஞ்சலோடு அவள் நிற்க பேசுடா என்று துடித்த மனதை கெத்து கெத்து என்று கூறி அடக்கி அழுத்தமாய் அமர்ந்திருந்தான்.
பின்னால் நிகழபோகும் விபரீதங்களை பற்றி அறிந்திருந்தால் தற்போது பிடிவாதம் பிடித்திருக்க மாட்டான்..ம்ஹூம்..என்ன செய்வது விதியில் ஆட்டத்தில் அனைவரும் நூல் பொம்மைகள் தானே..!!!
இனி அவன் பேச மாட்டான் என்று புரிந்துவிட இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் இழந்தாள் சக்தி.
“ஹே..நான் க்ளாஸ் போறேன் டி…”
“ஏன்.. இன்னும் புக்கே எடுக்கலையே…”
“என்னால முடியலப்பா… தலைவலிக்குது..”
“இதுக்கு தான் சொன்னேன் ஹாஸ்டலிலே ரெஸ்ட் எடுனு கேட்டியா..சரி போ..”
என்று அவள் சொல்ல அங்கிருந்து வெளியேறினாள் சக்தி.
“இப்ப என்ன செய்வது…”
என்று குழம்பி போய் நின்றவளை மேலும் அச்சுறுத்துவது போல சற்று தொலைவில் நின்று அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான் விஜய் வரதன்.
அவனை பார்த்ததும் பயத்தில் உடல் வெடவெடக்க என்னவாக போகிறதோ என்ற அச்சத்தோடு அவள் நிற்க சில நொடிகளில் அவள் உடலுள் ஏதேதோ மாற்றங்கள்.
அதை உணர முடிந்தாலும் அவளால் அதனை தடுக்க முடியாமல் திணறினாள்.
கொஞ்ச கொஞ்சமாய் அவள் பயந்த பாவணை ரௌத்திரமாய் மாற இறுகி போய் நின்ற உருவம் சக்தி உடையது தான் எனினும் அது சக்தி இல்லை என்பதை காண முடிகிறது.
“சிரிக்கிறியா…சிரி..சிரி…இதான் நீ கடைசியா சிரிக்கிறதா இருக்கும் விஜய்..தோல்வியே எனக்கு வராது என்று இறுமாப்பா
சொல்வேல்ல..இழப்புகளை சந்திக்க தயாரா இருடா..உடனே எல்லாம் உன்ன கொல்ல மாட்டேன்..உன் மண்டைக்குள்ள வண்டு மாதிரி கொடைச்சல் கொடுத்து கொஞ்ச கொஞ்சமா கொல்லுவேன்..”
என்று பற்கள் இடையே அரைப்பட்டு வார்த்தைகள் வந்து விழ ஆங்காராமாய் உறுதியெடுத்தாள்.
இதை அறியாது தன் அன்னையோடு பேசிக்கொண்டிருந்தான் விஜய்.
“முடிவா..வருவீங்களா..மாட்டீங்களா..அதை சொல்லுங்க…”
“உங்க அப்பா தான் பிஸியாவே இருக்கார்..நான் என்ன பண்ணட்டும்..”
“கொஞ்ச நாள் பிரதாப் அங்கிளிடம் பொறுப்பை ஒப்படைத்துட்டு என்னோட வந்து இருங்க..நான் மட்டும் எவ்வளவு நாள் தனியா இருக்கிறது..”
“சரி..அப்போ கல்யாணம் பண்ணிக்கோ…உன் பொண்டாட்டி வந்திட்டால் நீ தனியா இருக்க வேண்டாம்ல..”
“நான் நீங்க வரதை பத்தி தான் பேசிட்டு இருக்கேன்…ஸே..எஸ் ஆர் நோ..”
என்று தன் வழக்கமான பிடிவாதத்தோடு கேட்டவனிடம் மறுப்பு செல்லுபடி ஆகாது என்பதை உணர்ந்து,
“சரிரிரிரி வரோம்..போதுமா…உன் பிடிவாததுக்காக ஒன்னும் இல்ல..நம்ம பழைய வீடு வேற பராமரிப்பு இல்லாம மோசமா இருக்கு..அதை பார்க்க சொன்னால் அந்த வீட்டு மேலே நீ அக்கறையே காட்ட மாட்டேங்குற..நானே வந்து அதை பார்த்துக்கறேன்..அதுக்கு தான் வரேன்..”
என்று கீழே விழுந்தாலும் கெத்தாய் சொல்ல சிரித்தவன்,
“ஆமா..ஆமா..நீங்க அதுக்கு தான் வரீங்க..ஒத்துக்குறேன்..”
என்று கிண்டலாய் சொன்னவன் இன்னும் சில நிமிடங்கள் பேசிவிட்டே அழைப்பை வைத்தான்.
*****
அந்த நடுநிசி இரவில் தன் அறையில் போர்வையுள் உடலை மறைத்து முகம் மட்டும் வெளியே தெரிய சுகமாய் உறங்கிக் கொண்டிருந்தான் விஜய்.கட்டில் அருகில் உள்ள டேபிளில் அவன் கலட்டி வைத்திருந்த கைக்கடிகாரத்தில் நேரம் சரியாய் இரண்டு என்று காட்டியது.
ஏஸியின் குளுமை நிறைந்திருந்த அறை மெல்ல மெல்ல உஷ்ணமாய் மாறியது.விஜயின் உடலில் வேர்வை சுரக்க காற்று இல்லாமல் மூச்சுவிட சிரமமாகவும் பட்டென்று எழுந்து அமர்ந்தான்.
மூச்சை இழுத்து இழுத்து விட்ட விஜயால் இயல்பாய் சுவாசிக்க முடியவில்லை.இத்தனைக்கும் ஏஸி ஓடிக்கொண்டு தான் இருக்க வேகமாய் எழுந்தவன் மூடியிருந்த விண்டோவின் அருகில் சென்று திறக்க முயல அது இம்மியும் நகரவில்லை.
அதற்குள் தொப்பளாய் நனைந்திருந்த விஜய் விடாமல் முயற்சி செய்ய ஒரு கட்டத்தில் அதனை உடைத்துவிடுபவன் போல் பட்டென்று இழுக்கவும் கதவும் திறந்துவிட வெளிக்காற்று அவன் முகத்தை தீண்டவும் தான் எங்கோ சென்ற உயிர் மீண்டும் அவனை சேர்ந்தது போல் இருந்தது.
‘என்னாச்சு…ஏன் தீடீரென்று இந்த ரூமே காற்றே இல்லாத மாதிரி சஃப்பகேட்டடா இருந்துச்சு..’
என்று யோசித்தபடி தண்ணி அருந்தியவன் பெருமூச்சுகளுடன் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவே அவனுக்கு சில நிமிடங்கள் ஆனது.
அரைமணி நேரம் சென்று மீண்டும் தூக்கத்தை நாடி அவன் படுத்து அரை நிமிடம் ஆகி இருக்காது தீடீரென கீழே ஏதோ தட்டும் சத்தம் கேட்க மீண்டும் எழுந்தமர்ந்தான்.
‘என்ன இது..’
என்று எரிச்சலாய் யோசித்தபடி விளக்கை போட்டவன் மீண்டும் சத்தம் கேட்கிறதா என்று கூர்ந்து கவனிக்க ஒரு நிமிடம் இடைவெளி விட்டு மீண்டும் ‘டொக்..டொக்..’ என்று தட்டும் ஓசை கேட்க அறை கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தான்.
வேலையாட்கள் யாரும் இரவில் தங்குவது இல்லை.வெளியே செக்கியூரிட்டி மட்டும் தான்.எனவே என்ன சத்தம் இது என்ற யோசனையோடு வெளியே வந்தான்.
விஜய் அறை மேல் தளத்தில் இருக்க சத்தம் கீழே கேட்கவும் அதனை தொடர்ந்து இறங்கி வந்தான்.
அந்த திசையில் செல்ல செல்ல அது மற்றொரு அறை உள்ளிருந்து கேட்க அதனை திறந்துக்கொண்டு உள்ளே வரவும் இன்னும் நெருங்கி கேட்டது.ஏதோ சுத்தியலால் அடிப்பது போல் இருக்க அறை விளக்கை போட்டவன்,
“யாரு…”
என்று அதட்டலாய் கேட்க சட்டென்று சத்தம் நின்றது.ப்