“குட் மார்னிங் கோச்..வர சொன்னீங்களாமே..”
கையில் பந்துடன் தன்னை சுற்றி நின்ற சில மாணவர்களுக்கு எதையோ விளக்கி கொண்டிருந்தவர் ஆரியன் வந்து நிற்கவும்,
“நீங்க ப்ராக்டீஸ் பண்ணுங்க..”
என்று அவர்களை அனுப்பிவிட்டு ஆரியனை நெருங்கி அவன் தோளில் கைப்போட்டு,
“ஆமாடா ஒரு முக்கியமான விஷயமா தான்..இப்போ உன் கால் பரவாயில்லையா…”
“ஐயம் ஃபைன் கோச்…பழையபடி நார்மல் ரொடீன்னுக்கு திரும்பியாச்சு…”
“குட்..ஏன் கேட்கிறேன்னா நீ ஸ்டெட் லெவலில் பார்டீசிப்பேட் பண்ண போற..ஸோ காம்படீஷன் ஹெவியா இருக்கும்.. நீ அதுக்கு தயாரா இருக்கணும்ல..”
என்று அவர் கேஷ்வலாய் நடந்துக் கொண்டே சொல்ல திகைத்து நின்று விட்டான் ஆரியன்.
அவன் பாவனையில் சிரித்தவர்,
“ஏண்டா.. நம்ப முடியலையா..? நிஜமா தான் சொல்றேன்.. யூ ஆர் செலக்டட் ஃபார் ஸ்டெட் லெவல் அத்லெடீக்ஸ்..”
என்று உற்சாகமாய் சொல்ல முகம் மலர்ந்தாலும் ஓரத்தில் நெருடிய சந்தேகத்தோடு,
“ நான் எப்படி கோச்..மனோஜை தானே செலெக்ட் செய்ய போகிறதா கேள்விப்பட்டேன்..”
என்று தயக்கமாய் கூறியவனை,
“அப்படினு யார் சொன்னா..”
என்று அவர் கூர்மையாய் கேட்க சங்கடமாய்,
“ நிறைய பேர் சொன்னாங்க கோச்..ஏன் மனோஜே சொல்லிருக்கான்..பட் ஏன் அவனை தேர்வு செய்யல..”
என்ற ஆரியனை சில நொடிகள் அமைதியாய் ஏறிட்டார்.
“ஆமா ஆரியன்.. நீ சொல்ற மாதிரி மனோஜ் தான் செலெக்ட் ஆனான்.ஆனால் அவன் போட்டியில் பங்கேற்க தயாராக இல்லைனு விலகிட்டான்.. ஸோ அவனுக்கு அடுத்த பிரிஃப்ரன்ஸ்ல இருந்த உன்னை செலெக்ட் பண்ணினாங்க…”
என்று அவர் கூறவும் அவன் முகம் மாறியது.
மனோஜ் ஏன் விலகினான் என்று அதிர்ச்சியாய் இருந்தது.
“தன் பேஷன்மேல் எவ்வளவு வெறியாக இருந்தான் என்று தெரியும்…அப்படி இருக்கும் போது ஏன் விலக வேண்டும்..”
என்று தோன்ற மற்றொருப்புறம்,
‘ஆக.. எனக்காக வந்த வாய்ப்பு இல்லை இது..அவன் விலகியதால் வந்த அதிர்ஷ்டம்..’
என்று தோன்ற அந்த உண்மை அவனுக்கு உவப்பாக இல்லை.மனம் ஏமாற்றமாய் உணர்ந்தான்.அதனை மறைக்காமல்,
“கோச்.. நா.. நான் பாடீசிப்பேட் பண்ணல..”
என்றவனை அதிர்ந்து நோக்கிய கோச்,
“பைத்தியம் பிடிச்சிருக்கா ஆரியா..இது உனக்கு எவ்வளவு முக்கியம்னு மறந்துவிட்டதா..? இதுல மட்டும் நீ ஜெயித்துவிட்டால் நீ நினைக்கிற இடத்தில் மேற்படிப்பு படிக்க ஸ்போர்ட்ஸ் கமீட்டியே ஸ்பான்ஸர் பண்ணும்..உன்னோட கெரியர்டா இது..”
என்று அவர் டென்ஷனாய் பேச நிதானமாய் ஏறிட்டவன்,
“இல்ல கோச்..கெரியர், கனவு எல்லாம் அவங்கவங்க சொந்த முயற்சியில் கிடைக்கணும்..அடுத்தவன் விட்டுக் கொடுத்து எனக்கு அது சேர்வதில் விருப்பம் இல்லை..வெற்றியே பெற்றாலும் அது எனக்கு திருப்தி தராது கோச்…”
என்று கூறி அவரை இன்னும் டென்ஷன் ஏற்றினான்.
“உளராதடா..உங்க ரெண்டு பேருக்கும் இதெல்லாம் ரொம்ப விளையாட்டா போய்விட்டதா..வேணும் என்றாலும் ரெண்டு பேரும் அடிச்சிக்கிறீங்க..வேண்டாம் என்றாலும் ஒரேடியாய் மறுக்குறீங்க..எத்தனை பசங்க எத்தனை காலேஜ்ல இந்த வாய்ப்புகாக போராடி இருக்காங்க தெரியுமா..அவங்களை எல்லாம் தாண்டி உங்க திறமையால் உங்க ரெண்டு பேருக்கும் கிடைத்திருக்கு..அதுவும் மனோஜுக்கு இந்த வாய்ப்பு எப்படி போனது என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை..இருந்தும் கடவுள் உன் பக்கம்..அதான் உனக்கு சான்ஸ் கிடைத்திருக்கு..வெட்டி வீம்பால் மிஸ் பண்ணிடாதே.. அண்ட் ஒன்மோர் திங்க்..இது நம்ம காலேஜ் ப்ரெஸ்டீஜ் சம்மந்தப்பட்டது.. நீ விருப்பம் இல்லை என்றாலும் பங்கு பெறதான் வேணும்..”
என்று கோபமாய் கூறிவிட்டு சென்றுவிட தன் சிந்தனையிலே உழன்றப்படி நண்பர்கள் இருந்த இடத்திற்கு வந்தவன் ‘என்ன விசயம் என்று கேட்டவர்களிடம்.’ என்று அசுவாரஸ்யத்துடன் சொல்ல எல்லாரும் ரெட்டிப்பு மகிழ்ச்சி..
“மச்சான் டேய் சூப்பர்டா..”
“கங்கிராஸ்டா மாப்ள…”
“டேய் ட்ரீட்டு..”
என்று ஆளாளுக்கு ஆர்பரிக்க அவன் முகம் விடியவே இல்லை எனவும்,
“இவ்வளவு சந்தோஷமான விஷயத்தை இப்படியா முகத்தை தொங்க போட்டு சொல்லுவ..ஏன் உனக்கு ஹாப்பியா இல்லையா..”
என்று அனித் கேட்க தனக்கும் கோச்சிற்கும் நடந்த சம்பாஷணை முழுவதையும் கூற,
“கோச் சொல்றதில் தப்பே இல்லை..உனகென்ன கிறுக்கு புடிச்சிருக்கா.. என்னவோ நீ சும்மா இருந்து, கையில் தானா வந்த அதிர்ஷ்டம் மாதிரி சொல்ற.. நீ எவ்வள்வு உழைத்திருக்கனு எங்களுக்கு தெரியும்..அதற்கு கிடைத்த பரிசு இது..அத்தோட அந்த மனோஜ் உனக்காகவே தியாகம் பண்ணினா மாதிரி பேசுற..அவனுக்கு என்ன காரணமோ விலகிட்டான்..அதுக்கு நம்ம ஏன் கவலைப்படணும்..”
என்று ஜெய் திட்ட மத்தவர்களும் பேச அவன் அமைதியாக இருந்தான்.
மாலையில் கல்லூரி முடிந்து கிளம்பும் போது நண்பர்களிடம்,
‘கோச் பார்த்துப் பேசிட்டு வரேண்டா.. நீங்க போங்க..’
என்றவன் அவரிடம் காலையில் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு பின் தான் முழு முயற்சியோடு பங்கேற்ப்பேன் என்று உறுதி கொடுத்தான்.
அவரிடம் விடைப்பெற்று வாகன நிறுத்ததிற்கு வந்து தன் பைக்கை எடுத்தவன் அதனை இயக்கும்போது,
“கங்கராஜூலேஷன் ஆரியன்..”
என்றுக் கேட்ட மனோஜ் குரலில் திரும்பி பார்த்தான்.
இவனாக தன்னிடம் வந்து பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை.ஒருவேளை தன்னை சீண்டுகிறானோ என்று பார்த்தாலும் அவன் முகத்தில் அத்தகைய பாவனைகள் இல்லை.இருந்தாலும்,
“என்ன உன்னால தான் இந்த ஆப்பர்சியூனிட்டி கிடைத்ததுனு சீன் போட வந்தியா..”
என்று ஆரியன் கடுகடுக்க சன்னமான புன்னகையோடு தலையசைத்து மறுத்த மனோஜ் மேற்கொண்டு எதுவும் பேசாமல் நிற்க பதிலுக்கு அவன் எதாவது சொல்வான் நன்றாக கேட்டுவிட வேண்டும் என்று காத்திருந்த ஆரியனிற்கு அவன் மௌனம் என்னவோ போல் இருந்தது.
அவன் அமைதியாய் நிற்க வண்டியை கிளப்பி செல்ல சொன்ன மூளையின் பேச்சை கேட்க மனம் விழையவில்லை.
எப்போதும் கெத்தாய் விறப்பாய் திரியும் மனோஜின் சோர்ந்த தோற்றம் அவனை பேசத் தூண்டியது.
“நீ ஏன் விலகினே மனோஜ்… நீ எவ்வளவு தீவிரமா இருந்தாய்..யாருக்காக விட்டுக் கொடுத்த..”
“நான் விட்டுக் கொடுத்தேனா..? நோ ஆரியா.. நான் பண்ணின தப்பை சரிப்பண்ணினேன்.
இது முழுக்க உன் திறமை…உன் திறமைக்கும் நேர்மைக்கும் நீ கண்டிப்பா ஜெய்ப்ப.. நான் உன்னை மாதிரி இல்லை ஆரியா..என்னுட்ட நேர்மை இல்ல..நான் என் டாடி இன்ஃப்லுவன்ஸ் யூஸ் பண்ணி தான் என்னை செலெக்ட் பண்ண வச்சேன்..பட் இப்போ அதில் உடன்பாடு இல்லை.. நான் நேர்மையா இல்லாததால் தான் என்னுட்டையும் யாரும் நேர்மையா இல்லை..”
என்று உணர்ச்சியற்று பேசிய மனோஜிற்கு என்னாகிவிட்டது என்று குழம்பிய ஆரியனிற்கும் ஏனோ கஷ்டமாய் இருந்தது.
விருப்பிற்கும் வெறுப்பிற்கும் இடையில் நூல் அளவு தானே வித்தியாசம்…அதிக விருப்பமோ இல்லை அதிக வெறுப்போ ஒருவரிடம் கொள்ளும்போது நம்மை அறியாமலே அவர்களோடு ஒர் பிணைப்பு உண்டாகிறது.அது காலத்தின் கையில் நூலிழை வித்தியாசத்தை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் நம்மை தள்ளிவிடும்.
வண்டியில் இருந்து இறங்கி வந்தவன்,
“வாயேன்..சும்மா கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்..”
என்று அழைக்க ஆரியனின் இந்த இயல்பான அணுகுமுறையில் அவன் தன்னைவிட எல்லா விததிலும் நல்லவன் என்று நினைத்தான்.
இருவரும் ஒரு இருக்கையில் வந்த அமர அங்கிருந்து நேராக சற்று தொலைவில் புதுக்கட்டிடம் தெரிய இரண்டாம் தளத்தில் விஜயும் சேர்மனாகிய அவனது தந்தையும் நின்று பேசுவதை பார்த்தான் ஆரியன்.
இப்போதெல்லாம் விஜயை பார்த்தால் தானாய் அவன் மனம் சக்தியிடம் தான் செல்கிறது.அன்று லைப்ரெரியில் பார்த்ததோடு சரி.அதன்பின் அவளை பார்க்கவே இல்லை.அவள் தோழிகள் கூட ஒரு சில நேரங்கள் தென்பட்டாலும் அவளை அவர்களோடு காணமுடியவில்லை.
‘என்னத்தான் ஆச்சு இந்த ஊசிப்பட்டாசுக்கு..ஒரு பேச்சுக்கு மூஞ்சிலேயே முழிக்காதேன்னு சொன்னால் அதை இவ்வளவு சீரியசா கடைபிடிக்கிறா..கண்டுக்காதே..! போனால் போகிறானு கெத்தாய் இருக்க நினைத்தால் இந்த மானங்கெட்ட மனசும் கேட்க மாட்டேங்குதே…இருக்கட்டும் தக்காளி ஒரு நாள் மாட்டாமலா போயிடுவா..அன்னைக்கு இதுக்கும் சேர்த்து இருக்கு..’
என்று ஒருவனை கூப்பிட்டு தன்னோடு உட்கார வைத்தையே மறந்து ஆரியன் பாட்டு தன் சிந்தனையில் மூழ்கிவிட தொண்டையை கனைத்துக் கொண்டு தானே பேச்சை தொடங்கினான் மனோஜ்.
“உன்னைவிட ஒரு வயசு பெரியவன் நான்..ஆனால் உன் அளவுக்கு எனக்கு மெச்சுரிட்டி இல்லடா.. நான் உனக்கு தெரிந்தும் தெரியாமலும் நிறைய பண்ணிருக்கேன்..ஆனால் எதையுமே மனசில வைக்காமல் நான் பேசினதும் சாதாரணமாய் பேசுற பாத்தியா..இந்த குணத்திற்காக தான் உன்னை எல்லாருக்கும் பிடிக்குது..ஆனால் இப்பக்கூட என்னால சட்டுன்னு என்னை மாத்திக்க வரலை..உன்னோட இப்படி உட்கார்ந்து பேசுவது வியர்ட்டா இருக்கு..”
“ஹே..இது ஒரு சாதாரண விசயம் ப்பா.. ஏன் இவ்வளவு ஃபீல் செய்யுற.. நமக்குள்ள கொஞ்சம் ஈகோ க்ளாஷ்..அதனால சின்ன சின்ன சண்டை போட்டு இருக்கோம்..அதுக்கு போய் ஒரு வில்லன் ரேஞ்சிற்கு உன்னை சொல்லுற..சில் மேன்..”
“இல்ல..உனக்கு தெரியலை ஆரியா..உன்னை ஆளு வச்சு அடிச்சு கொஞ்ச நாள் நீ நடக்க முடியாமல் கஷ்டப்பட்டதுக்கு நான் தான் காரணம்..”
என்று குற்றவுணர்வோடு சொல்ல,
“தெரியும் மனோஜ்..”
என்றான் எங்கோ பார்த்தப்படி..
“வாட் தெரியுமா..?எப்படி..ஒருவேளை சக்தி சொன்னாளா..”
என்றவனை மறுத்து தலையசைத்து,
“உன் பாசமலர் உன்னை காட்டிக்கொடுத்துட்டாலும்..அவ சொல்லல..பட் அன்னைக்கு நடந்ததை பார்க்கும்போது நீதான் சக்திகாக இப்படி பண்ணினனு புரிஞ்சுது..ஆனால் பசங்களுக்கு கூட தெரியாது”
என்றான்.
“தெரிந்தும் ஏன் அமைதியா இருந்த ஆரியா..உனக்கு கோபம் வரலை..”
“கோபம் இருந்துச்சு நிறையாவே.. நீ பண்ணியதை பதிலுக்கு பண்ண எனக்கு ரொம்ப நேரம் ஆகாது.. ஆனால்
எனக்கு இதை இழுத்துட்டே போக பிடிக்கல மனோஜ்..சும்மா ரௌடி பசங்க மாறி நீ அடிச்ச பதிலுக்கு நான் அடிச்சேன்னு இதை வளர்த்தால் அப்புறம் நாம என்ன படிச்சு என்ன பயன் சொல்லு..அத்தோட என் அப்பாகாகவும்…” என்றவன் ‘சக்திகாகவும்’ என்பதை மனதில் சொல்லிக்கொண்டான்.
ஆரியனை ஆழ்ந்து நோக்கிய மனோஜ்,
“ நான் மிஸ் பண்ணிட்டேன் ஆரியா…”
“எதை..?”
“ நீ என்னோட ஃப்ரெண்ஷிப் வச்சுக்க பிரியப்பட்டாய் தானே..அதுக்கு நான் ரொம்ப இன்செல்ட் பண்ணிருக்கேன்.ஆனால் இப்போ ஃபீல் பண்றேன் ஆரியா..உன்னை மாறி ஒரு ஃப்ரெண்டகூட நான் சேர்க்கல..”
“இப்போ என்னாகி போச்சுனு நீ வாழ்வே மாயம் ரேஞ்சுக்கு விரக்தியாய் பேசிற மனோஜ்..உண்மையா உனக்கு இந்த ஃபேஸ் நல்லாவே இல்ல..”
அவன் மனநிலையை மாற்றும் பொருட்டு இலகுவாய் சொல்ல ஆனாலும் அவனிடம் பலனில்லை.சில நாளாய் தன்னை அழுத்திக் கொண்டிருந்த விஷயங்களை பகீர்ந்துக் கொள்ள ஆள் கிடைத்தாற்போல் பேசினான்.
“என் ஃப்ரெண்ஸ் எல்லாருக்கும் நான் உண்மையாய் இருந்தேன் ஆரியா..அவங்களுக்கும் அப்படிதான்னு நினைச்சேன்..பட்..எல்லாம் ஒரு நிமிஷத்தில் மாயமாகிடுச்சு..தர்ஷன்….தர்ஷன்காக உன்னிடம் சண்டைப்போடேன்ல..சாரி…தர்ஷன் சொன்னதை கேட்டு நீ தான் அப்படி பண்ணிருப்பேன்னு நம்பினேன்..சத்தியமா அவன் தான் இந்த தப்பை பண்ணிருப்பான்னு எதிர்பார்க்கல..உண்மை தெரிந்ததும் என்னால..என்னால கோவத்தை கன்ரோல் பண்ண முடியலை..அவனை சாத்தி எடுத்துட்டேன்..ஆனால் என்னோட மத்த ஃப்ரெண்ஸ் எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்கன்னு நினைச்சேன்.. பட் எல்லாரும் அந்த தர்ஷனுக்கு நியாயக் கொடி தூக்குறானுங்க..கேட்டால் அவனை சொல்லுறீயே நீ ரொம்ப ஒழுங்கான்னு இன்னும் இன்னும் கேவலமாய் பேசிட்டானுங்க..இவ்வளவு வன்மம் மனசில் இருக்கும் போது எப்படி என்னுட்ட அவ்வளவு நல்லா பழகினாங்க புரியல.. நான் திமிறு புடிச்சவன் தான்..ஆனால் பொண்ணுங்க விஷயத்துல நான் கண்ணியம் தவறியதே இல்லை ஆரியா.. ஏன் சந்தியாவை தவிர வேற பெண்ணை விளையாட்டாய் கூட இரசித்தது இல்லை..ஆனால் என்னை போய் நான் உயிரா நினைச்ச என் ஃப்ரெண்ஸே தப்பா பேசவும் தாங்க முடியல..எல்லாத்திலும் பிடிப்பு விட்டுப் போச்சு..காலேஜ்யே மூச்சு முட்றா மாதிரி இருக்கு…”
மனசு விட்டுப்போன குரலில் சொல்லி முடித்தவனை பார்க்கும் போது ஆரியனிற்கே கஷ்டமாய் தான் இருந்தது.எதுவும் சொல்லாமல் அவன் தோளில் கைப்போட்டு அழுத்திக் கொடுத்தான்.
“ஆனால் சக்திக்கு தான் நான் நன்றி சொல்லணும்.. நான் உண்மையை விலங்கிக்க அவ தான் காரணம்..இல்லை முட்டாளாவே இருந்திருப்பேன்..”
“சக்தியா…?”
“ஆமா சக்தி தான்..உன்னை ஒருநாள் சக்தியோட திட்டினேன்ல நியாபகம் இருக்கா…”
என்றவன் அன்று நடந்ததை விவரிக்க, கேட்ட ஆரியனின் கண்கள் விரிந்தது.தனக்காக அவளது கோவத்தை எண்ணி மனசில் புது வெள்ளை மழை தான்.
‘ஏன் சக்தி.. நான் உனக்கு அவ்வளவு முக்கியமா..’
என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டவன் ‘ச்சே..அவளை போய் லைப்ரெரியில் அலட்சியப்படுத்தி பாவம் ஊசிப்பட்டாசு..முகமே விழுந்திடுச்சு..”
என்று எண்ணியவன்,
“ஆனால் எங்க இப்போல்லாம் சக்தியை பார்க்கவே முடியல..”
என்று முடிந்தளவு எதார்த்தமாய் கேட்க,
“அவ ஊருக்கு போயிட்டாப்பா..உடம்பு கொஞ்ச நாளாவே சரியில்லைனு ரெஸ்ட் எடுக்க ஊருக்கு மேடம் கிளம்பிட்டாங்க..”
என்று அவன் கூறியது ஏதோ செய்தது.
“ஹோ…”
என்றபடி பார்வையை திரும்பிய ஆரியன் கண்முன்னே அச்சம்பவம் நிகழ்ந்தது.
எதிரே கட்டிடத்தில் நின்ற விஜயின் தந்தை தவறிவிழுக அதிர்ந்து அவன் எழும் நேரம் விஜய்யும் மயங்கிவிழ பின்னால் குரூரச் சிரிப்புடன் நின்ற சக்தி சில நொடிகளில் மறைந்தாள்.
இதனை கண்டதும் ஆரியனின் தேகம் நடுங்க மூச்சுகாற்று வெளியேற மறுத்து உள்ளேயே உறைய மூளை ஸ்தம்பித்தது.
நிமிடங்கள் கடந்தப்பின் கேட்ட கூச்சலில் சுயம் உணர்ந்த ஆரியன் நொடியில் சூழல் புரிய அவசர அவசரமாய்,
‘கடவுளே சக்தியை யாரும் கவனித்திருக்க கூடாது..’
என்று வேண்ட அதே நேரம்,
“அது…அது சக்தி தானே..”
என்றான் மனோஜ் இவனுக்கு சற்றும் குறையாத அதிர்ச்சியோடு…