சிறகு முளைத்த பறவையாய் நாட்கள் பறந்தோட அன்று இரவு உணவு உண்ண டெய்னிங் ஹாலிற்கு வந்தனர் சக்தியும் சந்தியாவும்..
சூடான உணவின் வாசம் கமகமவென இவர்கள் நாசி வழியாக நுழைந்து பசியை தூண்ட உணவு தட்டுடன் தங்களுக்கான பரோட்டா குருமாவை எடுத்துக்கொண்டு வரிசையாக போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் ஒன்றில் அமர்ந்தனர்.
“ம்ஹூம்..இந்த காலேஜில் சேர்ந்ததுக்கு வயுத்துக்கு வஞ்சம் இல்லாமல் சாப்பாடு திருப்தியாய் இருக்கு..இதுக்காகவே கே.வி.எஸ் வாழ்க..”
என்று இலவச பாராட்டோடு பரோட்டாவை பிய்த்து குருமாவில் தொட்டு சந்தியா சாப்பிட அவள் அருகில் அமர்ந்திருந்த மித்ராவும் அதே சமயம்,
“சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும் போலவே..”
என்று கண்களில் ஏக்கத்தோடு கேட்க அவள் பேசுவதை கேட்கும் ஒரே ஜீவனான சக்தி,
“ம்ம்..ஆமா..வேணும்னா எடுத்துக்கோ..”
என்றாள் தாராளமாய்..
சலிப்பாய் நொடித்துக்கொண்ட மித்ரா,
“என்னால சாப்பிட முடிந்தால் நான் உன்னுட்ட எல்லாம் பர்மிஷன் கேட்பேன்னு நினைச்சியா சக்தி..ஹூம்..என்ன செய்யுறது பார்க்க மட்டும் தான் முடியும்…”
என்றாள். சந்தியாவோ, அவள் தன்னை கேட்கிறாள் என்றெண்ணி,
“என் தங்கப்புள்ள..”
என்ற கொஞ்சலோடு தட்டையில் கைவைக்க கையை தட்டிவிட்ட சக்தி,
“எரும..அதான் வச்சிருக்கேல.. அப்புறம் ஏன்டி என் தட்டையில் கை வைக்கிற..”
என்று முறைத்தவளை தலைமுதல் கால்வரை பார்த்தவள்,
“எனக்கு தான் கிறுக்கு புடிச்சிருச்சா..இல்ல இவ லூசாகிட்டாளா..”
என்று தீவிரமாய் யோசிக்க சக்தியோ ஒன்றும் அறியா பச்சைபிள்ளைப் போல் மும்முரமாய் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினாள்.
அப்பொழுது உள்ளே நுழைந்தவளை கண்ட சந்தியா,
“பூ அக்கா..ஹாய்..”
என்று கைக்காட்ட,
‘ஹப்பாடி..விட்டுட்டா..தப்பிச்சேன்..’என்று பெருமூச்சிட்டவள் நிமிர்ந்து தானும் கைக்காட்ட பூ என்று அழைக்கப்பட்ட பூங்கோதையும் அவள் தோழிகளும் இவர்கள் அருகில் வந்தனர்.அவர்கள் சந்தியா,சக்தியின் சீனியர்ஸ்.
விடுதியிக்கு வந்த புதிதில் ரேக்கிங் என்ற பெயரில் அவர்களை ஒருவழியாக்கி அப்படியே நட்பானவர்கள்.இவர்கள் எல்லாம் சேர்ந்து அடித்த லூட்டி எண்ணில் அடங்கா..சுருக்க சொல்லவேண்டும் எனில் ‘எங்க புள்ளிங்க எல்லாம் பயங்கரம்..’ என்று திரியும் அராத்துக் கூட்டம்.
“எங்க உங்களை பார்க்கவே முடியல…வேர் இஸ் நாச் அக்கா..”
என்று அவள் கேட்க ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள்,
“உங்களுக்கு தெரியாதாடி…மதியம் நாச்-அ வீட்டிலிருந்து வந்து அழைச்சிட்டு போயிட்டாங்க..”
என்று சொல்ல இருவருக்குமே இது புதிய தகவல்.
“ஏன்க்கா..அதான் உடம்பு சரியாகிடுச்சே..அப்புறம் ஏன்..”
“உடம்பு தான் சரியாச்சு..ஆனால் அவ பயம் இன்னும் விடவே இல்லை..ஒரு மாதிரி மந்திரிச்சு விட்டாப்போல தான் இருந்தாள்.அதான் பயந்து கொஞ்ச நாள் வீட்டில் இருக்கட்டும்னு அழைச்சிட்டு போய்டாங்க..”
“சாரிக்கா..அன்னைக்கு அப்புறம் உங்க ரூம் பக்கமே வரமுடியல….நாச் அக்கா இப்படி இருந்தது கூட தெரியாமல் இருந்துட்டோம்.. ம்ச்..”
என்று உண்மையாவே சந்தியா வருத்தப்பட சக்தி தன்னருகில் பாவமாய் முகத்தை வைத்து அமர்ந்திருந்த அக்னிமித்ராவை முறைத்தாள்.
“ஃபீல் பண்ணாத விடுடி..நாங்களே இவ்ளோ சீரியஸாகுமுனு நினைக்கல…இந்த ஜுனியர் பொண்ணுங்க ஏதேதோ சொன்னப்பக்கூட விளையாட்டா தான் எடுத்துக்கிட்டு கிண்டல் பண்ணிட்டு திரிஞ்சோம்..ஆனால் நாச்..!! அவ எவ்வளவு போல்ட்..அவளே இப்படி பயந்தது திக்பிரம்மை பிடிச்சா மாதிரி இருந்தது எங்களுக்கும் பயமா இருக்கு..இங்கே ஏதோ இருக்கு தான் போல.. ஜாக்கிரதையா இருங்கடி..”
என்று கூறிவிட்டு அவர்கள் செல்ல,
“நாச் அக்கா..பாவம்ல..”
என்றாள் சந்தியா.
அதன்பின் இருவரும் அமைதியாய் உண்ண சக்தியின் மனமோ ‘நாச்’ என்ற நக்ஷத்திராவிற்கு நடந்த சம்பவத்தன்றை நோக்கி சென்றது.
அந்த இரவு வேளையில் தங்கள் அறையில் மறுநாள் சமர்பிக்க வேண்டிய பாடத்தை எழுத்திக் கொண்டிருந்த போது அந்த நிசப்தமான சூழலை கிழித்துக்கொண்டு ஒரு பெண்ணில் அலறல் சத்தம் கேட்க இருவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.
வேகமாய் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தவர்கள் அந்த வராண்டாவின் கடைசியில் எல்லோரும் கூட்டமாய் நிற்பதை கண்டு என்னமோ ஏதோவென்று பயந்து அவர்களை நோக்கி ஓட அங்கே கீழே மயங்கிய நிலையில் கிடந்தாள் நக்ஷத்திரா.
“நாச்..நாச் இங்கே பாரு..”
என்று அவளை மடியில் தாங்கியிருந்த பூங்கோதை அவள் கன்னத்தை தட்ட அப்பொழுதும் அவள் எழும்பாதது அனைவருக்கும் பதற்றத்தை கொடுத்தது.
“ஏய்..நகருங்கடி..தள்ளுங்க..”
என்று கூட்டத்தை விளக்கிவிட்டு உள்ளே வந்த வார்டன் சுபத்ரா அவளருகில் மண்டியிட்டு கையோடு கொண்டு வந்திருந்த தண்ணீரை பளீச்சென்று தெளிக்க மெதுவாய் விழித்தவள் உடல் உதற,
“பூ..பூ..என்னை காப்பாத்து டி…அது…என்னவோ இருக்கு..எனக்கு பயமா இருக்குடி..என்னை எதாவது பண்ணிடும்..பயமா இருக்குடி…”
என்று பூங்கோதையை இறுக்கி பிடித்துக்கொண்டு அழுக தானும் அவளை அணைத்துக்கொண்டவள்,
“ஒன்னுமே இல்லடி..பயப்படாத..இங்க பாரு..நாங்க எல்லாம் இருக்கோம் பாரு..”
என்று அவளை தேற்ற,
“இந்நேரத்தில் இங்க என்ன பண்ற நக்ஷத்திரா…சூழல் சரியில்ல..நைட் எல்லாரும் சீக்கிரம் படுங்கனு சொன்னேன்ல..என் பேச்சை கேட்க கூடாதுனே இருக்கீங்களா…”
என்று கண்டித்தாலும் சுபத்ரா அவளுக்கு தண்ணீர் புகட்டி தோளை தடவிக்கொடுக்க நக்ஷத்திரா இன்னும் அதே பதற்றத்தில் தான் இருந்தாள்.
விடுதிக்கு பக்கத்தில் இருக்கும் இடத்தில் இரண்டு பிணத்தை தோண்டி எடுத்துள்ளார்கள் என்று அறிந்த பின்னர் ஏதேதோ கட்டுக்கதைகள் விடுதியிலும் கல்லூரியிலும் வலம்வர அதனை தொடர்ந்து நடந்த சில அமானுஷ்ய நிகழ்வுகள் பயத்தைதர வெளியே தைரியமாக காட்டிக் கொண்டாலும் அனைவருக்கும் உள்ளே ஒரு ஓரத்தில் பயம் இருந்துக்கொண்டு தான் இருந்தது.இந்நிலையில் இன்று நக்ஷத்திராவின் நிலை வெளிப்படையாகவே நடுக்கத்தை தர பயத்தில் ஆளாளுக்கு புலம்பினர்.
தலையில் கைவைத்தப்படி சுற்றும் முற்றும் பார்த்த சக்தி கைப்பிடி சுவரில் சாய்ந்து நின்ற அக்னிமித்ராவை கண்டதும் முகம் மாற அவளையே அழுத்தமாய் நோக்கினாள்.
அவள் பார்வையில் இல்லை என்பது போல் மித்ரா தலையசைக்க அதனை கண்டுக்கொள்ளாது அவளையே பார்த்தபடி யாரும் கவனியா வண்ணம் உள்ளே செல்ல பின்னோடு வந்தாள் அக்னிமித்ரா..
தனியே வந்ததும் கோபமாய் ஏறிட்ட சக்தி,
“அப்போ நீ தான் இதெல்லாம் பண்றதுல்ல…அன்னைக்கு கேட்டதற்கு இல்லவே இல்லைனு சாதிச்ச..இப்போ என்ன சொல்ல போற..இது தான் உன் நோக்கமா..உனக்கு போய் உதவ நினைச்சேன் பார்..என்னை சொல்லணும்..”
என்று கோபமாய் கத்த முகம் சுணங்க லேசாக கலங்கிய விழிகளோடு அவள் கையை பற்றிய மித்ரா,
“நான் வேணும்னே செய்யல..என்னை நம்பு சக்தி..இன்னைக்கு என் மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது.நான் அனுபவிச்ச கொடுமை எல்லாம் என் கண்முன்னால நியாபகம் வந்து ரொம்பவே நொந்து போயிட்டேன்..
உயிரோடு இருக்கும் போது தான் கொடுமை அனுபவிச்சேனா செத்ததுக்கு அப்புறமும் அந்த லேப்ல அத்தனை வருஷம் அடைந்து கிடந்தது எவ்வளவு கொடுமை தெரியுமா..யாராவது வந்து உதவ மாட்டாங்களானு
ஏங்கியிருந்தேன்… இத்தனை வருஷம் வேதனையிக்கு விடிவா நீ வந்த…உன்னோட என் ஆத்மா இப்போ பிணைந்திருக்கு..அந்த கடவுள் எனக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு நீ..அதை எப்படி நான் வீணாக்குவேன்..”
என்று உருக்கமாய் கூறினாள் மித்ரா.
ஆம்…மித்ரா ஆத்மா சக்தியோடு பிணைந்து தான் இருக்கிறது..சக்தி எங்கே இருந்தாலும் அந்த இடம் முழுதும் மித்ராவால் இருக்க முடியும்..எதையும் தொட முடியாவிட்டாலும் காற்றை வசப்படுத்தும் சக்தி அக்னிமித்ராவிற்கு உள்ளது.
காற்றின் உதவியோடு தான் முதல்முறை சக்தி முன் உருவம் பெற்றது,ஆரியனை அன்று இரவு அடித்தது,விஜய் மீது ஷீல்ட்டை விழ செய்தது எல்லாம்..
“அப்போ இன்னைக்கு நடந்ததுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை..அப்படிதானே..”
என்று கூர்மையாய் கேட்க சிரம் தாழ்த்தினாள் மித்ரா..
“இல்ல..என்னால தான்..எனக்கு அஸ்வந்தோட நியாபகம் வந்திடுச்சு..நாங்க உயிரோட இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷமான வாழ்க்கைய வாழ்ந்திருப்போம்னு நினைச்சு ஏங்கிட்டு இருந்தேன்..அப்போ அந்த பொண்ணு அங்க ஃபோன் பேசிட்டே வந்தாள்..ஃபோனில் அவள் லவ்வர் போல..அவள் கொஞ்சி கொஞ்சி பேசிட்டு இருந்ததை கேட்கும்போது எனக்கு பொறாமையா இருந்தது.ஏன்னே தெரியாமல் அந்த பொண்ணு மேல கோபமா வந்துச்சு..அவ பேசுறது எனக்கு பிடிக்கல..அதான் அந்த ஃபோனை தள்ளி விட்டேன்..அவ மறுபடியும் அதை எடுக்க வந்ததும் ரொம்ப கோபம் வந்திடுச்சு..என்ன பண்றேன்னு தெரியாம அதை சிதறு தேங்காவாய் ஒடச்சிட்டேன்..எடுக்க வந்த அவளையும் தள்ளி விட்டேன்..இன்னும் என்ன பண்ணிருப்பேனோ..அதுக்குள்ள அவ கத்தி எல்லாரையும் கூட்டிடாள்.நான் பண்ணது தப்பு தான்.. ம்ச்..எனக்கு ஏன் அவ்வளவு கோபம் வந்துச்சுனே தெரியல சக்தி.. மறுபடியும் இந்த மாதிரி நடக்காது ப்ராமிஸ்..”
என்று பாவமாய் மன்னிப்பு கேட்பவளை என்ன சொல்வது என்று தெரியாமல் விட்டுவிட்டாள்.ஆனால் இவளால் எந்த பிரச்சனையும் வராது என்று உறுதியாய் இருந்த நம்பிக்கை லேசாய் ஆட்டம் கண்டது.
இன்றும் அதே யோசனையோடு சாப்பிட்டு முடித்தவள் சந்தியாவோடு அறையை நோக்கி சென்றாள்.
இருவருமே மௌனமாய் நடக்க தீடீரென சந்தியா,
“பேய் இருக்குனு நம்புறீயாடி…”
என்று கேட்டாள்.
“ஏன்டி நீ வேற…”
“நடப்பதெல்லாம் பார்த்தால் எனக்கு சந்தேகமா இருக்குடி..இப்பக் கூட நம்ம ரெண்டு பேரும் தானே இங்க இருக்கோம்..ஆனால் எனக்கென்னமோ இன்னொரு ஆள் கூடவே வரா மாதிரி ஒரு ஃபீலிங்..”
என்று கண்களை உருட்டி சொல்ல சந்தியாவின் கையில் இருந்த ப்ரெஸ்லேட்டை ஆராய்ந்தப்படி வந்த மித்ராவையும் அவளையும் பார்த்து திருதிருத்த சக்தி,
“உளறாதடி..அப்படி எல்லாம் எனக்கொன்னும் தோணலை..யாரோ கிளப்பிவிட்ட ரூமரை நம்பி ஆளாளுக்கு கற்பனை பண்ணி பயப்படுறாங்க.. அவ்வளவு தான்..”
என்றாள் அவள் கண்களை நோக்காது அங்கும் இங்கும் பார்த்தபடி…
“என்னவோ போ.. இதுக்கு டேஸ்காலராக ஏஞ்சல் மாதிரி இருந்திருந்தால் பிரச்சனையே இல்ல..காலைல வந்தோமா.. ஈவ்னிங் வீட்டிற்கு போனோமானு இருக்கலாம்…இப்பவும் இதெல்லாம் என் அம்மாக்கு தெரிஞ்சிது..நீ படிச்சவரை போதும் தாயேன்னு இழுத்துட்டு போயிடுவாங்க..”
என்று பேசியபடி அவர்கள் அறையை அடைந்துவிட்டனர்.
அந்த சாரியில் அவர்களது தான் கடைசி அறை.எனவே அறையின் வெளியே பால்கனி போன்ற அமைப்பு இருக்கும்..அந்த இரவு வேளையில் மெல்லிய தென்றல் அவர்களை தீண்ட உள்ளே செல்ல விருப்பம் இல்லாமல் இங்கேயே நின்று விட்டனர்.
“இந்த மாதிரி அக்கறை வைக்கிற அம்மா கிடைப்பது வரம் தான் சந்து..”
என்று தன்னைமீறி சொல்லி விட்டவள் பின்பே தான் கூறியது உறைக்க சந்தியாவின் பார்வையை சந்திக்காது அறைக்குள் செல்ல முற்பட்டாள்.
அவளை தடுத்த சந்து,
“இருடி..இதுவரை உன் அம்மா-அப்பாவை பத்தி நீ பேச விரும்பியது இல்ல..நாங்க மீறி கேட்டாலும் எதாவது சொல்லி மழுப்பிடுற..என்ன தான் உன் பிரச்சனை..?உனக்கு அவ்வளவு உடம்பு சரியில்லாமல் இருந்தப்போ கூட உங்க வீட்டில் இருந்து பார்க்க வரலை.ஒருவாட்டி ஃபோன் பண்ணாங்க அவ்வளவு தான்…நீ ஊருக்கும் அவ்வளவா போறது இல்ல.. ஏன் இப்படி சக்தி..உன்னை பத்தி நாங்க தெரிஞ்சிக்க கூடாதா..”
என்று அவள் கையை பற்றி கேட்க விரக்தியாய் ஒரு புன்னகை சிந்திய சக்தி,
“சொல்லிக்கிறா மாதிரி எதுவும் இல்ல சந்து…எங்க அப்பா- அம்மா ரெண்டு பேருக்கும் அவங்க கெரியர் தான் முக்கியம்..அப்பா ஆரியநல்லூரில் பெரிய டாக்டர்..இருப்பத்தி நாலு மணி நேரமும் அவருக்கு வேலை இருந்திட்டே இருக்கும்..எங்க டாடி ரொம்பவே திறமையான கைராசியான டாக்டர்.. அவரோட தேவை ஒரு இடத்தில் இல்ல..பல ஊருல..நாடுல இருந்திட்டே இருக்கும்..அவரும் நிற்க நேரமில்லாமல் ஓடிட்டே இருப்பார்..அம்மா…”
என்று நிறுத்தியவள்,
“‘சோல்’ சேனல் தெரியுமுல..அதுல ‘வாய்ஸ் எக்ஸ்பெட்ஸ்..’ ஷோவோட டைரக்டர் எங்க அம்மா..”
என்று கூற விழி விரித்தாள் சந்தியா..அந்நிகழ்ச்சி தமிழகத்தில் எவ்வளவு பிரசித்தம் என்று நன்றாக தெரியுமே..!!
“அவங்க சேனல் தான் அவங்க லைஃப்..எப்பவும் அதை பற்றி மட்டும் தான் அவங்க தாட்ஸ் இருக்கும்..அப்பாவும் அம்மாவும் லவ் மேரேஜ்..கல்யாணம் பண்ணி நான் பிறக்கிறவரை தான் ரெண்டு பேரும் ஒரே லைஃப் ஆ வாழ்ந்திட்டு இருந்தாங்க.. அப்புறம் அப்பாக்கு அப்பாவோட க்ரியர் அம்மாவிற்கு அவங்க கெரியர் முக்கியமாய் போய்விட்டது..நான் இரண்டு பேருக்குமே முக்கியமாய் படலை போல..ஃபிஃப்த் வரை தான் அவங்களோட இருந்தேன்.. அப்புறம் ஃபுல்லா ஹாஸ்டல் தான்..இரண்டு பேருக்கும் அவங்க பிஸி ஸ்கீடியூல்ல என்னை பார்த்துக்க முடியலையாம்..மாசம் மாசம் தவறாமல் அவங்க அவங்க சார்பிற்கு பணம் அனுப்புவாங்க அவ்வளவு தான்..லீவுன்னு வீட்டிற்கு போனாலும் அங்கேயும் தனியா தான் இருப்பேன்..அதுக்கு ஹாஸ்டலே பெட்டர்னு ஊருக்கு போக மாட்டேன்..”
என்று கூற கேட்டுக்கொண்டிருந்த சந்தியாவிற்கு மனம் பாரமாகியது.கண்கள் கலங்க அவளை அணைத்துக் கொண்டு,
“இவ்வளவையும் உன் மனசுலே வைத்துக்கிட்டு எப்படிடி சாதாரணமாய் இருக்க..”
என்று சொல்ல அவள் தோளில் தட்டி,
“ஏய்..லூசு..எனக்கு இது பழகிப்போன விசயம்..இது தான் என் லைஃப்னு சின்ன வயசுலே ஏத்துக்கிட்டேன்..அதனால இதெல்லாம் நினைச்சு வருத்தப்படாத..”
என்று சிரிப்புடன் கூற அவர்களையே பார்த்தபடி நின்ற அக்னிமித்ரா,
“இந்த உலகத்தில் அப்பா,அம்மா,சொந்தம் எல்லாமே வெறும் போலி கண்ணாடி தான் சக்தி..நமக்கு தனிமை தான் எப்பவுமே நிலலயானது…”
என்றாள் கண்களில் ஆக்ரோஷம் தெறிக்க..
மித்ராவின் முகத்தில் இருந்த அதே ஆக்ரோஷம் அவள் சாயல் கொண்ட விஜயின் முகத்திலும் பொங்க தன்முன் இருந்த பன்சிங் பேக்கை கடும்கோவத்தோடு விடாமல் குத்தினான்.அதற்கு மட்டும் உயிர் இருந்தால் நிச்சயம் இறந்திருக்கும்..
உடல் வேர்வையில் நனைந்திருக்க விடாமல் பன்சிங் செய்துக்கொண்டிருந்தவனை அறைக் கதவு தட்டும் ஒலி நிறுத்தியது.
கதவின் அருகில் நின்ற வேலையாள்,
“இன்ஸ்பெக்டர் வந்திருக்காங்க ஐயா..”
என்று கூறியவன் அவன் ‘சரி..’ என்பது போல் தலையசைக்கவும் சென்றுவிட டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தவன் குளித்து வேறு உடைக்கு மாறி ஹாலிற்கு வந்தான்.
அவன் வரவும் இன்ஸ்பெக்டர் கார்த்திக் காஃபியை அருந்தி முடிக்கவும் சரியாக இருந்தது.
“ஹாய் கார்த்திக்..”
என்றபடி வந்தவன் அவன் எதிரில் அமர்ந்து,
“நான் கொடுத்த வேலை என்னாச்சு..”
எந்த சுற்றி வளைத்த பேச்சும் இல்லாது நேராக விசயத்திற்கு வர,
“முடிச்சிட்டேன் சர்..கால் வந்த நம்பரை ட்ரேஸ் பண்ணினேன்..டெட்பாடிஸ் பத்தி தகவலை கொடுத்தது ஒரு பொண்ணு தான்..ஆனால் அந்த நம்பர் டாக்டர்.விஷாகன் என்றவர் பேரில் தான் இருக்கு..இது அவரோட அட்ரெஸ் அன்ட் ஃபோடோஸ்…”
என்று ஒரு கோப்பை நீட்டினான்.
அதில் இருந்த சக்தி அப்பாவின் புகைப்படத்தையும் முகவரியையும் கூர்ந்து நோக்கினான்.
ஆம்..சக்தி காவல்துறைக்கு அழைத்து பேசியது தன் சொந்த எண்ணில் இருந்து தான்..அவள் பள்ளி படிக்கும்போதே அவளுக்கு அலைப்பேசி வாங்கிக் கொடுத்திருந்த விஷாகன் தன் பெயரில் தான் நம்பரை பதிவு செய்திருந்தார்.
விஷயத்தை கூறிவிட்டு கார்த்திக் எதிர்பார்ப்போடு பார்க்க அவனுக்கு கைக்கொடுத்த விஜய்,
“தேங்க் யூ மிஸ்டர்.கார்த்திக்…நாம பேசிய அமௌன்ட் உங்க அக்கௌன்டிற்கு வந்திருக்கும்..”
என்று அவன் சொல்லவும், “தேங்க் யூ சர்..”
என்று வாயெல்லாம் பல்லாக கூறி விடைப்பெற்று செல்ல அட்ரெஸையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ‘ஆரியநல்லூர்..’ என்பதை எங்கோ சமீபத்தில் யார் சொல்லியோ கேட்டது போல் தோன்றியது.ஆனால் எங்கே..யார்.. என்பது நினைவு இல்லை.யார் என்று தெரியவரும் போது..????