அத்தியாயம் 1
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்தே யோசிக்கிறேன்
அதை தவனை முறையில் நேசிக்கிறேன்
இருள் படர்ந்த இரவு வேளையில் வானின் விண்மீண்களுக்கு போட்டியாய் வண்ண வண்ண விளக்குகள் ஒளி வீச பகல் போலவே மிகவும் சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்த மும்பை மாநகரத்தின் கோரிகான் பகுதி அது..!!
சாலையில் வாகனங்கள் பறந்துக் கொண்டிருக்க கடைவீதிகள் எங்கும் மக்கள் கூட்டம் தென்பட கண்ணிற்கும் காதிற்கும் எட்டும் தொலைவில் எங்கும் வட இந்திய மக்களாலே நிறைந்திருக்க அந்த பரபரப்பான இடத்திற்கு சற்றும் பொருந்தாமல் இனிமையாய் இரவின் தாலாட்டுபோல ஸ்வர்ணலதாவின் உயிரை உருக்கும் குரல் அந்த நவீன அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து கசிந்து நம் செவிகளை நிறைத்தது.
அலைபேசி ஒலிப்பது காதில் கேட்டாலும் ஜென்சியின் கருத்தில் பதியவில்லை.
மடிக்கணினியின் திரையில் அவளது நான்கு கண்களையும் பசைப்போட்டு ஒட்டியதுபோல் எங்கும் நகராமல் இருக்க விரல்களோ தட்டச்சில் நர்த்தனம் ஆடியது.
டீசர்ட் – பைஜாமாவில் ஐந்தடி உயரத்தில் கோதுமை நிறம் மற்றும் பூசின உடல்வாகில் சிறுப்பெண் போல் தெரிந்தாலும் ஜென்சியின் முகத்தில் தெரிந்த இறுக்கமும் அழுத்தமும் அப்படியில்லை என்பதை உணர்த்துகின்றது.
அது அவளது தந்தையின் மறைவிற்கு பிறகு உடலின் ஒரு உறுப்புபோல் அவளோடே எந்நேரமும் ஒட்டிக் கொண்டது.
உலகம் அறியாத தாயையும் மானாய் துள்ளி திரியும் பருவ வயது தங்கையையும் காக்கும் பொறுப்பில் இருப்பதாலோ என்னவோ அது அவளுக்கு ஒரு வேலியாகவே இருந்தது.
மும்பையில் பிரபல கேம் டெவலப்பிங் நிறுவனம் ஒன்றில் ப்ரோக்கராமிங் மேனேஜராக பணிபுரிகிறாள். அவளது முழுநேர வேலையும் கணினியில் தான் என்பதன் பலனாய் முகத்தில் பாதியை மறைக்கும்படி கருப்பு நிறத்தில் பெரிய ஃப்ரேம் கண்ணாடி..!! தோள்வரை அளவாய் வெட்டபட்டிருந்த கூந்தலை ஒற்றை பேண்டில் அடக்கியிருந்தாள். இல்லையெனில் கன்னங்களில் விழுந்து மீதி முகத்தையும் மறைத்து இருக்கும்..!!
அவளுக்கு கடமை, ஹாபி, டைம்பாஸ் எல்லாமே அவளின் வேலை..!! வேலை..!! வேலை மட்டுமே..!!
தொழில் பொழுதுபோக்கு வீடியோ கேம்ஸ் உருவாக்குவது என்றாலும் அவள் மிகவும் சீரியஸான கேரக்டர்..!! ஒரு நாள் அவளை போல் நாம் இருக்க நினைத்தால் முடிவில் நமக்கு மூச்சு முட்டிவிடும். ஆனால் அது தான் அவளது இயல்பான குணமே..!!
இருப்பினும் கல்லினுள் ஈரம் போல், இரும்பிலே ஒரு இதயம் போல் அவள் வாழ்வின் வண்ண பக்கங்கள் என்பது அவள் தந்தை,தாய்,தங்கை மற்றும் ஜோ.
தந்தை, தாய்,தங்கை ஒகே. அது யாரு ஜோ என்று கேட்டால் இதோ இப்பொழுது தெரிந்துவிடும்..!!
மீண்டும் ஒருமுறை அலைபேசி, “எவனோ ஒருவன்..” என்று தொடங்கவும் கவனம் கலைந்தாள்.
அழைப்பது அவள் தோழி ரே என்கிற ரேச்சல் தான் எனவும் சுவாதீனமாய் ஏற்று,
“சொல்லு ரே.. இன்னைக்கு என்ன டவுட்..”என்றாள்.
ரேச்சல் ஜென்சிக்கு கீழே பணிபுரிந்தாலும் இருவரையும் இணைக்கும் பாலமாய் அமைந்தது அவர்கள் தாய்மொழி தான். ஒதுங்கி போனவளையும், சட்டென்று அனைவரோடும் ஒன்றிவிடும் ரேச்சலின் குணமே குறுகிய காலத்தில் இருவரையும் நெருங்கிய தோழிகளாய் மாற்றியது. வேலையில் வரும் சந்தேகங்களை அடிக்கடி கால் செய்து தெளிவு படுத்திக் கொள்வது வழக்கம் என்பதால் அதே நினைப்பில் கேட்க ஆனால் அவள் சொன்ன தகவலில் அதிர்ந்து போனாள்.
“வாட்..!!!!!!! உளராத ரே..”
“நான் ஏன் உளருறேன்.. இப்ப கூட நியூஸ்ல அதான் ஓடுது. லேப்டப்ல மட்டுமே தலைய கொடுக்காம அப்போ.. அப்போ சுத்தி என்ன நடக்குதுனும் பாரு..”
என்று அவள் சொன்னதற்கு திருப்பி கொடுக்கும் எண்ணம் இன்றி,
“நான் அப்புறம் பேசுறேன்..” என்று வைத்துவிட்டு வேகமாய் வெளியே வந்தாள்.
ஜென்சியின் அன்னை எஸ்தர் தொலைகாட்சியில் ஹிந்தி சீரியல் ஒன்றை பார்த்துக் கொண்டிருக்க சற்று தள்ளி கையில் புத்தகத்தோடு அமர்ந்திருந்த லிசாவோ சீரியலில் ஒருகண்ணும் புத்தகத்தில் ஒரு கண்ணுமாய் அமர்ந்திருந்தாள்.
எஸ்தரிடம் இருந்து ரிமோட்டை பறித்து
நியூஸ் சேனலை மாறிய ஜென்சி,
“சொன்னால் மாத்துவேன்ல..ஏண்டி இப்படி புடுங்குற..”
என்றவரிடம் பதில் சொல்லாமல் டிவியை காட்டினாள்.
“Eddie Ltd நிறுவனத்தின் ‘லாக்டோ’ பால் மற்றும் குளிர்பானங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ய தடை…”
“பதப்படுத்தபட்ட பாலிலும் இதர குளிர்பானங்களிலும் கலப்படம் இருப்பதாய் FSSAI ஆல் நிறுப்பிக்க பட்டுள்ளதால் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது..”
“அறுபது ஆண்டுகளாய் இயங்கி வரும் எட்டீ நிறுவனத்தில் நுகர்வோரின் அன்றாட உபயோகிக்கும் பல பொருட்களை தயாரித்தாலும் ‘லாக்டோ..’ தான் அவர்களின்
முதல் மற்றும் முக்கிய உற்பத்தி பொருள் என்பதும் குறிப்பிடதக்கது..”
“கடந்த ஆறு மாதத்தில் இந்திய பங்கு சந்தையில் வீழ்ச்சியை தொடர்ச்சியாய் சந்தித்து வரும் எட்டீ நிறுவனத்திற்கு இது மிகப் பெரிய இழப்பாய் திகழும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்..”
ஃபளாஷ் நியூஸாய் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மாறி மாறி ஒலிப்பரப்பாக அதனை பார்த்த எஸ்தருமே பதறிவிட்டார்.
“என்னடி இது..??”
“எனக்கே ரே இப்ப சொல்லி தான்ம்மா தெரியும்..”
என்று அவள் சொல்ல,
“இப்படி ஒரு பழி விழுகும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. இன்னும் எத்தனை கஷ்டம் தான் அவங்க கடந்து வருவாங்களோ..”
என்று எஸ்தர் வருத்தப்பட அங்கே நடப்பதை புரிந்தும் புரியாமலும் பார்த்திருந்த லிசா,
“இவங்களா இப்படி..?? கலப்படமான டிரிங்ஸ் ப்ரோடியூஸ் பண்றாங்க.. ஹவ் ச்சீப்..”
என்று அதிர்ச்சியும் கோபமும் போட்டியிட கூற அவளை கோபமாய் ஏறிட்ட எஸ்தர்,
“வாய மூடுடி. நியூஸ்ல சொல்றதை வைச்சு இவங்க இப்படி தான்னு நீ முடிவு பண்ணிடுவீயா..?? அவங்களுக்கு தெரியாது. உனக்கு தெரியும்ல மேத்தியூ அங்கிள் பத்தி..? அவங்க இப்படி பண்றவங்களா.. நீயே யோசிச்சு பாரு.. அந்த குடும்பம் நமக்கு எவ்வளவு உதவி பண்ணிருப்பாங்க. அதெல்லாம் நினைச்சு பார்க்காம பேசிடுவியா நீ..” என்று சத்தம் போட்டார்.
ஜென்சி பத்து வயதிலும் லிசா நான்கு வயதிலும் இருந்த போது மும்பை வந்தனர் எஸ்தர் – அகஸ்தீன் தம்பதியர். அப்பொழுதில் இருந்தே அகஸ்தீன் உழைத்தது எட்டீ நிறுவனத்திற்காக தான். மேத்தியூ சகோதரர்களின் விசுவாசி..!! மேத்தியூ குடும்பமும் தன்னிடம் வேலை பார்பவர்கள் என்பதனை தாண்டி ஒரு நல்ல நட்போடு பழகினர். அதிலும் அகஸ்தீன் இறந்தபின் அவர்கள் குடும்பம் அளித்த ஆறுதலும் அணுசரனையும் அவரை பேச வைத்தது.
“சாரி மா..நான் அப்படி சொல்லியிருக்க கூடாது தான்..”
என்று உடனே உணர்ந்து மன்னிப்பு கேட்டது அந்த பத்தொன்பது வயது சிட்டு. தற்போது தான் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறாள்.
“ம்ம்..” என்று சமாதானம் ஆனவர்,
“இதெல்லாம் அந்த பையனோடு சதியா தான் இருக்கும். எப்பேர்பட்ட குடும்பம்.. அவங்க வீட்ல இப்படி ஒருத்தன் பிறந்து அந்த குடும்ப மானத்தையே சந்தி சிரிக்க வைச்சுட்டு இருக்கான்.. அவனை ஆளாக்கி விட்டதுக்கு இன்னும் என்னவெல்லாம் இவங்க பார்க்க போறாங்களோ..”
என்று வருத்தமாய் புலம்ப இவர்கள் சம்பாஷனை எதுவும் ஜென்சியை கவரவில்லை.
அவள் தன் எண்ணத்திலே உழன்றுக் கொண்டிருந்தாள். இந்த செய்தி அவளுள் அத்தனை பாதிப்பை ஏற்படுத்தியது.
அதே சமயம் அவள் எண்ணத்தின் நாயகனை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து பேட்டி எடுக்கும் கானொளி ஒலிப்பரப்பாகியது.
வசீகரமான அவன் முகம் அத்தனை இறுக்கமாய் மாறியிருக்க கண்கள் நெருப்பு பிழம்பாய் காட்சியளிக்க அதற்கு மாறாய் மிகுந்த அமைதியான குரலில் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தான்.
அவர்கள் மேன்மேலும் குடைந்துக் கொண்டே இருக்கவும்,
“எங்க ப்ராடக்ட் தரமானதுனு சொல்ல அறுபது வருஷ கன்ஷுமர்ஸ் தான் சாட்சி..!! வேற எந்த விளக்கமும் நான் இப்ப சொல்ல விரும்பல.. ஆனால் உண்மை இதே இடத்தில் உங்களுக்கு சீக்கிரமே உணர்த்துவேன். தர்மமே வெல்லும்..”
என்று ஆளுமை நிறைந்த குரலில் ஹிந்தியில் கூறி கையெடுத்து கும்பிட்டவன் அதற்குமேல் நிற்காமல் நகர்ந்துவிட அத்தோடு நிறுத்தி விளம்பரங்கள் ஒளிபரப்பாகியது.
இதயத்தை இறுக்கி கசக்கும் ஓர் வலி..!!
“ஜோசஃப்..” என்று மெல்லமாய் முணுமுணுத்தாள்.
அவனிடம் உடனே பேசவேண்டும் போல் இருந்தது. ஆறுதலாய் பேசவேண்டும்..!! அவன் பிரச்சனைகளை தன்னோடு பகிர்ந்துக் கொள்ள செய்யவேண்டும்..!!அனைத்தையும் நீ கடந்து வருவாய் என்று நம்பிக்கை தரவேண்டு போன்ற எண்ணம் அவளை ஊந்தினாலும் அதனை செயல்படுத்த அவளுக்கு பெரும் தயக்கமாய் இருந்தது.
ஆறு மாதங்களுக்கு முன்பு என்றால் நினைத்தை எல்லாம் எப்பொழுதோ செய்திருப்பாள். ஆனால் இப்பொழுது நிலையே வேறு அல்லவா..!!
மும்பை வந்த பின்பு அவளுக்கு கிடைத்த முதல் நண்பன் ஜோ. மொழி புரியாமல் பழக்கம் புரியாமல் அவள் திணறியபோது நல்ல துணையாக இருந்தான். அதே நட்பு இப்பவரை நீடித்து இருக்க கூடாதா என்று ஏங்கும்போதே,
‘அவன் இப்பவரையும் தூய்மையான அன்பை மட்டும் தான் வைச்சிருந்தான்.. அதுல காதல கலந்தது நீ..!!! வந்த காதலையும் அவனிடம் சொல்லல..!! இப்ப எந்த காரணமும் சொல்லாம நீயா ஒன்னு நினைச்சுக்கிட்டு அவனை திட்டவட்டமா அவாய்ட் பண்ற..!! நீ செய்யுற எதுவுமே சரியில்ல ஜென்சி..’
மனசாட்சி குமைந்ததில் உள்ள நியாயம்சுட தயக்கங்களை எல்லாம் தகர்த்தி,
“அவனிடம் பேசவேண்டும்..” என்று திண்ணமானாள்.
“தீதி..கியா ஹுவா..”
என்று தங்கை உலுக்கவும் தான் நிமிர்ந்தவள்,
“மாம்.. உங்களுட்ட தான் பேசிட்டு இருக்காங்க..”
என்று லிசா சொல்லவும் அன்னையை ஏறிட அவர் குறுகுறுவென இவளையே பார்த்தபடி இருந்தார். அவர் கண்களில் தென்கட்ட ஆராய்ச்சியில் சுதாரித்து,
“ஜோவிடம் பேசி ரொம்ப நாள் ஆகிடுச்சு.. இந்த மாதிரி சமயத்துல விசாரிச்சா எதாவது நினைச்சுப்பானா.. இல்ல பேசலாமானு யோச்சிட்டு இருந்தேன் மாம்..”
என்று தெளிவாய் ஒரு விளக்கம் கொடுத்தாள். இல்லையேல் அந்த ஆராய்ச்சி அன்னையிடம் பல கேள்விகளை தோற்றுவிக்கும் என்று அறித்தவள் ஆகிற்றே!
“நீ ஜோவுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆச்சே.. உன்னை போய் தப்பா நினைக்குமா அந்த தம்பி.. நீ பேசு ஜென்சி.. பேசலேனா தான் தப்பு..”
என்று கனிவுடன் கூறியவர், “சாப்பிட வாங்க..” என்று இரு மகள்களையும் அழைக்க,
“இல்ல மாம்..வேலை இருக்கு…நான் அப்புறம் சாப்பிடுறேன்..”
என்று சொல்லி நகர பார்த்த ஜென்ஸியை முறைத்து பார்த்தவர்,
“இதென்ன ஜென்சி.. எப்ப பார்த்தாலும் வேலை.. வேலைனு எந்நேரமும் அதுலே இருக்க.. முன்னாடி சாப்பாட்டில் ஆவது ஆர்வமா இருந்தே.. இப்ப அதிலும் கவனம் இல்ல.. என்ன தான் நினைச்சுட்டு இருக்க.. நீ உங்க ஆஃபிஸ்ல பெரிய மேனேஜராக இருக்கலாம்.. ஆனால் அதை வீட்டிலும் எடுத்து வருவது எனக்கு பிடிக்கவே இல்லை.. அதென்ன தூங்கிற நேரத்தை தவிர எப்ப பாரு வேலைல இருக்க.. இதெல்லாம் நல்லாவே இல்ல..”
என்று ஆதங்கமாய் பேசினார்.
அகஸ்தீன் மறைந்தாலும் தன் மனைவியையும் மகள்களையும் தவிக்கவிடவில்லை. இவர்கள் குடியிருக்கும் அந்த சொகுசு ப்ளாட்டில் தொடங்கி அவர்கள் பெயரில் அவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களே கோடிகளில் வரும் என்பதால் இவள் தன்னை வறுத்திக் கொண்டு வேலை பார்ப்பதன் காரணம் அறியாமல் எஸ்தர் கவலை கொண்டார்.
“ஆமா மாம்.. என்னோடையும் தீதி முன்ன மாதிரி டைம் ஸ்பெண்ட் பண்றதே இல்ல..”
என்று சிணுங்கிய லிசாவின் கழுத்தில் கைக்கொடுத்து தன்னோடு வளைத்த ஜென்சி,
“ஏய்.. வாலு.. நானே பிஸியா இருந்தாலும் ‘அது தீதி.. இது தீதி..’நு என்னோடவே தானே சுத்துற.. அப்புறம் ஏன் மாம்ட்ட கோர்த்து விடுற..”
என்று செல்லமாய் திட்டியவள்,
“இப்ப ஒரு முக்கியமான ஃப்ராஜெக்ட் போயிட்டு இருக்கு மாம்.. எங்க கெரியர்ல மைல்ஸ்டோன்னு சொல்லலாம்.. நிறைய போட்டிக்கு நடுவுல இந்த ஃப்ராஜெக்ட் எங்களுக்கு வந்திருக்கு.. இதுக்காக எல்லாரும் அவ்வளவு ஹார்ட் வொர்க் போட்டு இருக்காங்க.. எல்லாம் நல்லா பண்ணி கடைசி நேரத்தில் டெக்னிகல் ஃபால்ட் வந்து விட்டால் அவ்வளவு தான்.. என் டீம்ல யாரு எங்க தப்பு பண்ணினாலும் அது எனக்கு தான்.. அதனால தான் ரொம்ப கவனமா இருக்கேன்.. இது இன்னும் சில வாரங்கள்ல முடிஞ்சிடும்.. சரியா..”
என்று பொறுமையாய் எடுத்து சொல்ல அவர் சமாதானம் அடைந்தாலும், ‘இது மட்டுமே தான் காரணமா ஜென்..’ எள்ளிய மனதினை சமாதானம் படுத்த வழியில்லை.
அதேசமயம் ஜூஹூ பகுதியில் கடல் அருகே அமையப்பட்டிருந்த அந்த தனி பங்களாவின் அதீநவீன கிட்சனின் கேப்பினெடில் நிற்க வைத்திருந்த டாப்லெட்டிலும் அதே செய்தி ஒளிபரப்பாகியது.
ரௌண்ட் நெக்ட்டு டீஷர்ட்டும் ஷார்ட்டும் அணிந்திருந்த திடகாத்திரமான ஆண்மகன் வேக வைத்த அந்த மாரீஸ் பைப்பர் என்னும் கிழங்கின் நடுப்பாகத்தை முட்கரண்டியால் சுரண்டி எடுத்து ஒரு தட்டையில் வைத்தபடி அச்செய்தியை இளையராஜாவின் இசை கேட்பது போல் இரசித்துக் கேட்டிருந்தான்.
ஜெல் தடவாமலே படிவாய் மிணுமிணுத்த கருஞ்சிகையும் வைரவடிவ அவன் முக அமைப்பிற்கு அளவாய் வெட்டப்பட்ட அந்த தாடி மீசையும் அம்சமாய் பொருந்தியிருக்க அந்த முகத்தில் அத்தனை ஆனந்தம்..!! ஓர் குரூர திருப்தி..!! அந்த துள்ளல் அவன் கைகளில் தெரிந்தது.
அந்த காட்சியை பார்த்துவிட்டு பதறிய சமையல்காரன்,
“சாப்..” என்று அருகில் செல்ல முயல அவனை தடுத்து நிறுத்தினான் மற்றொருவன்.
“நான் தான் தோட்டகாரன் உதவிக்கு கூப்பிட்டான்னு போயிட்டேன்.. நீயாவது அவருக்கு சமைச்சு தர மாட்ட.. பாரு அவரே சமைக்கிறாரு.. போச்சு.. போச்சு.. நான் செத்தேன்..”
என்று அவன் புலம்பினான். புதிதாய் வேலையில் சேர்ந்த இடத்தில் தன் புது முதலாளியின் கோபத்தை சம்பாரித்துக் கொள்கிறோமோ என்ற பயம் அவனுக்கு..!!
“அரே.. நீ நினைக்கிறா மாதிரி ஒன்னும் இல்ல.. சாப் ரொம்ப சந்தோஷமா இருக்கும்போது இப்படி தான் தானே சமைச்சு சாப்பிடுவார்.. இது அவரோட வித்தியாசமான பழக்கம்.. இந்த நேரத்தில் இடையில போய் தொந்தரவு செஞ்சா தான் கெட்டகோபம் வரும்..”
என்று அங்கே அனுபவம் வாய்ந்தவனாய் பேச அதனை ஆச்சரியமாய் உள்வாங்கிய மற்றவன்,
“ஹோ.. அப்போ ரொம்ப நல்ல செய்தியாக இருக்குமா..என்னவா இருக்கும்..”
என்று ஆர்வமாய் கேட்க,
“ம்க்கும்.. நீ வேற.. இவர் சந்தோஷமா இருக்கார்ன்னா.. எங்கேயோ யாரோ அடியில நெருப்பு வைச்சா மாதிரி கொதிச்சிட்டு இருக்காங்கன்னு அர்த்தம்..”
என்றதும் அவன் முழிக்க, “இங்க பாரு.. இந்த ஆராய்ச்சி எல்லாம் நமக்கு எதுக்கு.. நம்ம வேலையை மட்டும் செஞ்சால் நமக்கான சம்பளம் சரியா வந்திடும்.. இப்ப பேசாமல் வா இங்கிட்டு..”
என்று அவனை இழுத்து செல்ல அப்பொழுது கோர்ட் சூர்டில் இருந்த அவனின் காரியதரிசி துரித நடையோடு அவர்களை அணுகி,
“பாஸ் எங்கே..”
என்று கேட்க அவன் கிட்சனை காட்டவும் அங்கே விரைந்தான்.
இவன் வரவை அறிந்தாலும் நிதானமாய் மிளகாய்,சிகப்பு மிளகு,கருப்பு பீன்ஸ்,பிரிஜிடா சீஸ்னிங் ஆகியவற்றோடு வைத்திருந்த ரைஸ் மிக்ஸை மெல்லிசாய் சீவப்பட்ட ச்சீஸோடு காலியான கிழங்கினுள் அடைத்துக் கொண்டிருந்தான்.
மும்முரமாய் வேலையில் இருந்தவனை அழைப்பதா இல்லையா என்ற போராட்டத்தின் முடிவில்,
“பாஸ்…”
என்று மெல்லமாய் இழுத்தான்.
“சொல்லு ஸ்குரீல்.. என்ன இந்த நேரத்தில் வந்திருக்க..”
அனில் குப்தா என்ற அவன் பெயரை ஸ்குரீல் என்று அழைப்பது தான் அவன் வழக்கம்.
அவனின் நிழல்போல் எப்பொழுதும் தொடரும் அனிலுக்கு இடைவேளை இரவு பொழுதில் மட்டும் தான்.
அவர்கள் உரையாடல் முழுவதும் ஹிந்தியில் தான் நடந்தது.
“மிஸ்டர் மஹதீரன் உங்களை காண்டாக் பண்ண ரொம்பவே முயற்சி பண்ணாராம்.. பட் ரீச் செய்ய முடியல எனவும் என்னை தொடர்பு கொண்டார்.. கண்டிப்பா பேசியே ஆகணும்னு அவர் ஃபோர்ஸ் பண்ணவும் வந்தேன் பாஸ்..”
என்று அவன் கூறியதை காதில் வாங்கியபடி தன் வேலையை தொடர்ந்தான்.
சுரண்டி தனியே வைத்த ச்சீஸ் மற்றும் பெப்பரோடு மசித்து வைத்த கிழங்கினை மிக்ஸ்டு ரைஸால் ஸ்டஃப் செய்யபட்ட கிழங்கின்மீது மற்றொரு லேயர் போல் வைத்தவனிடம் பதில்வர அனில் பொறுமையாய் காத்திருந்தான்.
அதனை மைக்ரோவேவில் வைத்த மூடிய பின்பு தான்,
“கால் ஹிம்..”
என்று சொல்ல உடனே மஹதீரனுக்கு அழைப்பு பறந்து சில நொடிகளில் ஏற்கவும் பட்டது.
அனில் கையில் இருந்து பேசியை வாங்கி காதில் வைத்தவன்,
“சொல்லுங்க மிஸ்டர் மஹதீரன்..”
என்றான் ஆளுமை நிறைந்த குரலில்..!!
“ஜோஷ்வா ஜீ.. உங்களுக்கு நிறைய தடவை கால் பண்ணேன்.. பிஸியா இருந்தீங்க போல..”
என்று பவ்யமாய் கூறினாலும் நூறு தடவை முயன்றும் அவன் ஏற்காததில் கோபம் பொங்கியது. ஆனால் அவனிடம் காட்ட முடியுமா என்ன..!!
“உங்களுட்ட பேச என்ன இருக்கு மஹதீரன்..”
“என்ன ஜீ இப்படி சொல்றீங்க.. உங்களுக்காக நான் எவ்வளவு பெரிய வேலை பார்த்திருக்கேன் தெரியும்ல.. என் வேலையை பணைய வைத்து இத செஞ்சிருக்கேன்..”
என்றான் குரலில் லேசாய் எட்டி பார்த்த கோபத்தோடு..
இந்தியாவின் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு துறையில் (FSSAI) முக்கிய பொறுப்பில் இருக்கும் மஹதீரனின் கைவண்ணத்தில் தான் இன்று எட்டீ நிறுவனம் பற்றி எரிகிறது. இந்தியாவின் பெரும்புள்ளியான மேத்தியூ சகோதரர்களையும் ஜோசஃபையும் பகைத்துக் கொண்ட பதட்டத்தில் அவன் பேச,
“லுக் மஹதீரன்.. இதை செய்யவில்லை என்றாலும் உங்க வேலையில் உங்களால் நிலைக்க முடியாது.. ஏன்னா என்னிடம் மாட்டிய ஆதாரம் அப்படி..!! நினைவு இருக்கும்னு நம்புறேன்..”
என்று எச்சரிக்கவும் மறுமுனையில் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது.
“ஜீ.. அதான் நீங்க சொன்னதை நான் சரியா செஞ்சிட்டேனே.. அப்புறம் எதுக்கு அதெல்லாம்…” என்று பம்ம,
“அதே தான்.. நான் சொன்னதை நீங்க செஞ்சிட்டீங்க.. ஸோ உங்களுக்கு வேண்டியதை நான் செய்வேன்.. இத்தோடு முடிஞ்சுது.. இஸ் தட் க்ளியர்..”
என்று கேட்டு அவன் ஆமோதித்த நொடி அழைப்பை தூண்டித்த ஜோஷ்வா,
“சேவ் தோஸ் எவிடென்ஸ்.. இவனை நம்ப முடியாது.. அது எப்ப வேணாலும் தேவைப்படலாம்.. அண்ட் சொன்னமாதிரி அவன் எதிலும் சிக்காமல் பார்த்துக்கோ.. மோஸ்ட் இம்பார்டெண்ட்லீ இனி இவன் நம்மை காண்டாக் பண்ணவே கூடாது..”
என்று ஆணைகள் பிறப்பித்தபடி ஃபோனை அனிலிடம் வீச அவன் லாவகமாய் பிடித்துக் கொண்டான்.
“ஓகே பாஸ்..”
மீண்டும் டாப்லெட்டில் அவன் கவனம் செல்ல அங்கே கசிந்த தகவல்களை கேட்க கேட்க மேலும் சிரிப்பு தான் அவனுக்கு..
“தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும் நானாட ஹோய்
தேசம் திக்குஎட்டும் சொக்கட்டும் நிக்கட்டும் பூவாரம் போடத்தான்
பாரு முன்னாலும் பின்னாலும் எந்நாளும் வாலாட ஹோய்
யாரும் வம்புக்கும் தும்புக்கும் எங்கிட்டே வாராம ஓடத்தான்
போக்கிரி ஆடுறான் மோதினா தூளுதான் நான் பாஞ்சாட
மூக்குதான் மொகறதான் எகிறித்தான் போகுமே
நான் பந்தாட ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்த
தோட்டாவும் என்ன தொலைக்காதே”
உற்சாகமாய் பாடியபடி ஓவனில் தயாராகி இருந்த ஜெகட் பரிடோஸை (jacket burritos) க்ளௌஸ் அணிந்த கையால் எடுக்க புரியாமல் விழித்தான் அனில். தமிழ் என்பதால் அவனுக்கு அர்த்தம் விளங்கவில்லை.
அவன் முழிப்பதை கண்டு,
“நீ முதல்ல தமிழ் கத்துக்க ஸ்குரீல்..”
என்றான் கட்டளையாய்..
“ஆனா பாஸ்.. நாம தான் ஹிந்தி,இங்க்லீஷ்ல பேசிக்கிறோமே..”
என்று அவன் தட்டுதடுமாறி சொல்ல அவனை கூர்மையாய் பார்த்தவன்,
“ஆமா.. ஆனா எனக்கு தமிழ் பேசாமல் இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஸோ இனி உன்னோட தமிழில் தான் பேசுவேன்… நீ பேசுறீயா.. இல்ல வேற ஆளா நான் பேச தகுந்தா மாதிரி வைச்சுக்கவா..”
என்று கூறவும் வேகமாய்,
“இல்ல பாஸ்.. நான்.. நான் கத்துக்கிறேன்..”
என்று சொல்ல,
“தட்ஸ் குட்.. இப்ப நீ கிளம்பு..”
என்றதும் அவனும் விடைப்பெற்று சென்றுவிட்டான்.
ச்சீஸ் உருகி ரைஸூம் கிழங்கோடு உறைந்து ஆவி பறக்க எடுத்த ஜெகட் பரிடோஸின் மீது சாஸினை ஊற்ற சிகப்பு,வெள்ளை,மஞ்சள், ப்ரவுன் ஆகிய ஒவ்வொரு நிறத்திலும் ஒரு லேயர் என வண்ணமயமாய் பார்க்கவே நம் சுவை நாளங்களை தூண்ட அதனை எடுத்துக் கொண்டு கிட்சனிலே அமர்ந்து உண்ணும்படி இருந்த ஸ்டூலில் அமர்ந்தான்.
அந்நேரம் தான் ஜோசஃபின் பேட்டி ஒளிபரப்பாக அதை கேட்டு நகைத்த ஜோஷ்வா பரிடோஸை ஒரு ஸ்பூனில் எடுத்து வாயில் வைத்து இரசித்து உண்டபடி,
“Do it சகோதரா…”
என்றான் நக்கலாய்…