அத்தியாயம் – 28
“குட்டிமா அப்படி என்ன தாண்ட ஆச்சு, எதுக்காக நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட இப்போ கூட என்னால நம்ப முடியல என் அனுவா இப்படி பண்ணாதுனு ” என்றான் அகிலன்.
அனு அகிலனிடம் கதிரை பற்றியும்,அவன் குணத்தை பற்றியும் அனுவிற்காக குடியை விட்டுவிட்டு கஷ்டப்பட்டு உழைத்ததைப் பற்றியும் கூறினாள் , பின் கதிரவன் மீது அவள் கொண்ட காதலில் தொடங்கி வீட்டில் வள்ளிப் பாட்டி ஆரம்பித்த கல்யாணப் பேச்சைப் பற்றியும் அதனால் தான் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துக் கொண்டதாகவும் கூறினாள்.
(கல்யாணம் பேசு என்று மட்டும் தான் கூறினாலே தவிர அகிலன் உடனான கல்யாண பேச்சால் தான் அவள் இந்த திருமணத்தை செய்தால் என்று கூறவில்லை, அதை பற்றி கூற அனுவிற்கு விருப்பம் இல்லை ).
கதிரவன் அனைத்து சொத்துக் களையும் அவள் பேரில் தான் வாங்கி வைத்திருப்பதாகவும் கூறினாள்.அவளை மகாராணி போல் பார்த்துக் கொள்வதாவும் கூறினாள்.
அனு கூறியதைக் கேட்டப் பின் அகிலனுக்கு கூட கதிரவன் மீது நல்ல அபிப்ராயம் வந்தது.இருந்தும் அனுவை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டான் என்ற கோவம் அதிகமாவே இருந்தது.
“உனக்கு அந்த பையனை பிடிச்சிருக்குனா வீட்டில சொல்லிருக்க வேண்டியது தானமா இல்லனா என் கிட்டயாது சொல்லிருக்கலாம்ல “
“நீ பண்ணாது ரொம்ப தப்புடா நாங்க எல்லாம் உன் மேல எவளோ பாசம் வச்சிருக்கோம் என்கிட்ட நீ பொய் சொல்லலாமா “என்றான் அகில்.
“நான் பண்ணாது தப்பு தான் அத்தான் நான் அதை வேணுன்னு, பண்ணல வீட்டுல கல்யாணத்தை பத்தி பேசுறாங்கனு சொன்னதும் கதிர் நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்ன, நான் முதல்ல ஒதுக்கல இது தப்பு என்னால முடியாதுனு சொல்லிட்டேன்”
“கதிர் தான் நீ என்ன உண்மை லவ் பண்ணல பண்ணிருந்தா என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருப்பா, டைம் பாஸ்க்கு தான் நீ லவ் பண்ணுன அப்படினு சொன்னா, அப்பறம் என்கிட்ட பேசாம என்ன பாக்கமா அவொய்ட் பண்ண என்னால அவனை பாக்கமா பேசாம இருக்க முடியல அதுனால தான் அவன் சொன்னதுக்கு ஒத்துகிட்டேன்”
“சத்தியமா நான் வேற எந்த தப்பும் பண்ணல அத்தான்,உங்க எல்லாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிடு வந்து உங்க முன்னாடியே இருக்குறது. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது “
“அப்பாகிட்ட பேசுற அப்போலாம் ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கும். அதுனால வீட்டுல இருக்க முடியாம நான் ஹாஸ்டலுக்கு போய்ட்டேன் “
“கதிர் அன்னைக்கு வீட்டுக்கு வரதுக் கூட எனக்கு தெரியாது அத்தான். நான் காலேஜ் முடிஞ்சதும் அவரு கிட்ட கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் அப்பா கிட்ட பேசுறேன்னு சொன்னே அவருதான் நான் சொன்னதை கேட்கமா மறுநாளே வந்துட்டாங்க “
“சாரி அத்தான் நான் பண்ணாது எல்லாமே தப்பு தான். என்னால தான் நீங்க எல்லாருக்கும் அசிங்கப்படுற மாதிரி ஆகிருச்சி என்று கூறி அழுதாள் “.
“குட்டிமா இப்போ எதுக்குடா இங்க உக்காந்து அழுதுகிட்டு இருந்த “
“அத்தான் எல்லாரும் என்ன பத்தி ரொம்ப தப்பு தப்பா பேசுறாங்க அத்தான் என்னால அதை எல்லாம் தாங்கிக்க முடியல அத்தான் “
“என்ன அனு சொல்லுற யாரு உன்ன என்ன சொன்னாங்க “
“நான் கதிர் பணத்தை பார்த்து அவனை வலைச்சி போட்டுட்டேன்னு , படிக்குற வயசுலயே கர்ப்பமாகி, அதை கலைக்குற அளவுக்கு போயிருக்கேனு , உன் குடும்பம் நல்ல குடும்பமா இருந்தா நீ இப்படிலாம் பண்ணுறதை பாத்துட்டு சும்மா இருப்பாங்களானு, நீ இந்த வயசுலயே இப்படி இருக்குற இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா இன்னும் எத்தனை பெற கைக்குள்ள போட்டுக்க போறியோ தெரியல “
இந்த மாதிரி ரொம்ப அசிங்கமா என்ன பத்தி என் காது படவே பேசுனாங்க அத்தான்.
“அவங்க பேசுனதுலாம் கேட்டு செத்துப் போயிரலாமான்னு கூட நிறைய தடவை யோசிச்சிட்டேன், என்ன பாத்தாலே அருவருப்பா இருக்குனுலாம் சொல்லுறாங்க அத்தான் “
“அவங்க பேசுறதுலாம் கேட்டு மனசு அவளோ கஷ்டமா இருக்கும் அதான். என் கஷ்டத்தை யாரு கிட்டையாது சொல்லி அழலன்னு பார்த்தா யாருகிட்ட சொல்லுறதுனு கூட தெரியல அத்தான் “
“யாருமே இல்லாத அனாதை மாதிரி இருக்கேன் அத்தான், என் பேருல சொத்து பணம் நிறைய இருக்கு அத்தான், ஆன என் கஷ்டத்தை சொல்லி அழக் கூட ஆள் இல்லை அத்தான் “அனு பேசுவதை கண்கள் கலங்க அகிலன் பார்த்துக் கொண்டிருந்தான்.அனு பேசட்டும் அவள் மனதில் உள்ள கஷ்டங்களை சொல்லி ஆளட்டும், அப்படியாவது அவள் மனம் லேசாகட்டும் என்று நினைத்தான் அகிலன்.அத்துடன் அனு பேசுவதை அகிலன் போனில் ரெகார்ட் செய்துக் கொண்டிருந்தான்.
“உன் இன்ப துன்பம் எல்லாத்து லையும் உனக்கு துணையா இருப்பன்னு நினைச்சி தானடா நீ அவனை கல்யாணம் பண்ணிக் கிட்ட,அவன் கிட்டபோய் சொல்லிருக்க வேண்டியது தானடா “
“அத்தான் கதிர் கிட்ட சொன்ன, என்ன பத்தி தப்பா பேசுனவங்ககிட்ட சண்டை போட்டுவான் அவங்களை அடிச்சாலும் அடிச்சிருவான், கதிருக்கு கோவம் வந்தா என்ன பண்ணுவானே தெரியாது.அத்தான் அதான் அவன்கிட்ட நான் எதையுமே சொல்லுறது இல்லை “என்றாள்.
“நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் அத்தான் நான் கதிரை ரெஜிஸ்டர் மேரேஜ் பன்னிருக்கவே கூடாது. ரேணுகா மாதிரி வீட்டுல பேசி கல்யாணம் பண்ணிருக்கணும் “என்றாள்.
“அத்தான் உங்க கிட்ட பேசுன அப்பறம் மனசு ரொம்ப லேசான மாதிரி இருக்கு அத்தான், ரொம்ப தேங்க்ஸ் அத்தான் நீங்களாவது என்ன புரிஞ்சிகிட்டதுக்கு “
“அனு என்னடா தேங்க்ஸ்லாம் சொல்லிக்கிட்டு, நீ எப்பவும் சந்தோசமா இருக்கனும்டா அதான் இந்த அத்தானுக்கு வேணும்”.
“நீங்க கூட இருந்த நான் எப்பவும் சந்தோசமாக தான் இருப்பேன் அத்தான் என்றாள் “அனு கூறியதை கேட்டு அகிலன் மிகவும் சந்தோசம் அடைந்தான்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை சுரேஷ் மறைவாக இருந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான்.
“அனு வா நம்ம வீட்டுக்கு போலாம், எவளோ நேரம் இங்கையே நிக்குறது”
“நான் வரல அத்தான் நான் வந்தா, அங்க இருக்குற யாருக்கும் பிடிக்காது, எதுக்கு தேவை இல்லாம அவங்கள கஷ்ட படுத்திட்டு, இதுவரைக்கும் என்னால் அவங்க பட்ட கஷ்டமே போதும் “என்றாள் அனு.
“சரி வா அனு நான் உன்ன உன் வீட்டுல கொண்டு போய் விட்டுறேன். ஆமா வரும் போது உன் புருஷன் கூட கார்ல தானா வந்த இப்போ என்ன தனியா நிக்குற “
“ரேணுகா கல்யாணத்துல சமையல் எல்லாம் எங்க கேட்டரிங் ஆளுங்க தான் செய்யுறங்க, கதிர் அங்க இருந்து வேலை எப்படி நடக்குதுன்னு பாத்துகிறான் “
“சரி வா அனு நானே உன்ன கொண்டு போய் விடுறேன், ஏறு வண்டில, அனு நீ சாப்பிடையா காலைல உண்மைய சொல்லு “
“இல்ல அத்தான் சாப்பிடுற மூடு இல்ல அத்தான் சாப்பிடாம வந்துட்டேன் “
“சரி வா அனு போகும் போது ஹோட்டல்ல சாப்பிட்டு போலாம் “
“இல்ல அத்தான் அதுலாம் எதும் வேண்டாம் “
“எனக்கும் பசிக்குது ப்ளீஸ் வா மா, நிறையலாம் சாப்பிட வேண்டாம் கொஞ்சமா சாப்பிட்டு சரியா “.
அனு அகிலனுடன் அவன் வண்டில ஏறி சென்றாள். சுரேஷ் அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்தான்.
“அனு எந்த ஹோட்டலுக்கு போக சொல்லுமா “
“நம்ம கடைக்கே போங்க அத்தான் “
“அதுலாம் முடியாது வேற ஏதாவது கடைக்கு போலாம் “என்று கூறி விட்டு வேறொரு கடைக்கு கூடி சென்றான்.
இருவரும் உணவை ஆர்டர் செய்து விட்டு பேசிக்கொண்டு இருந்தனர்.
“அனு நிஜமாவே நீ சந்தோசமா இருக்கியாடா “
“ரொம்ப சந்தோசமா இருக்கேனுலாம் சொல்ல முடியாது. கொஞ்சம் சந்தோசமா தான் இருக்கேன் “
“அப்பா அம்மா கிட்ட பேசாம தான் அத்தான் ரொம்ப கஷ்டமா இருக்கு “
“அடுத்த வாரம் கீதா வளைகாப்புக்கு நீ வா, நான் அத்தை மாமா கிட்ட பேசி உன்கிட்ட பேச சொல்லுறேன் “
“நிஜமாவா அத்தான் அப்போ நானும் கதிரும் கண்டிப்பா வர்றோம் “
“குட்டிமா நான் உன்ன மட்டும் தான் வர சொன்னே முதல்ல நீ வந்து பேசி அவங்க கூட சமாதானம் ஆகு, அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பேசி கதிரை ஏத்துக்க வச்சிரலாம் சரியா “
“நீங்க சொல்லுற படியே செய்யுறேன் அத்தான்”என்றாள் அனு மகிழ்ச்சியுடன்.
இங்கு அனு அகிலுடன் சாப்பிட்டு கொண்டிருக்க,அங்கு அனுவை காணாமல் கதிர் தேடி அலைந்துக் கொண்டிருந்தான்.
காலையில் அனைத்து பந்திகளும் முடிந்து. மதிய உணவிற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன. அப்பொழுது வெளியில் கதிரின் கார் நிற்பதை பார்த்து டிரைவரிடம் சென்று பேசினான் “அண்ணா அதுக்குள்ள ரஞ்சனிய வீட்டுல விட்டுட்டு வந்துட்டீங்களா மெதுவா போய்ட்டு வந்துருக்க வேண்டியது தான அண்ணே “
“தம்பி என்ன சொல்லுறீங்க நீங்க,நான் எப்போ பாப்பாவ விட வீட்டுக்கு போனே, காலைல வந்ததுல இருந்து நான் இங்க தான தம்பி இருக்கேன் “என்றார் டிரைவர் குழப்பத்துடன்.
“அப்போ ரஞ்சனி இங்க வந்து உங்க கிட்ட ஏதுவும் சொல்லவே இல்லையா, அவ ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வீட்டுக்கு போறேன்னு சொல்லி இங்க இருந்து கிளம்பி போய்ட்டானே, உங்க கூட தான் நான் அவளை போக சொன்னே” என்றான் பதட்டத்துடன்.
“பாப்பா இங்க வரவும் இல்லை என்கிட்ட பேசவும் இல்லை தம்பி “
கதிர் அனுவிற்கு போன் செய்தான், அனு அவளுடைய போனை காரிலேயே வைத்து விட்டுப் போய் விட்டாள்.
லட்சுமிக்கு போன் செய்து “அனு விட்டுக்கு வந்துட்டாளா”என்றான். அவர் அனு வரவில்லை என்று கூறவும், அவள் வந்ததும் எனக்கு கால் பண்ணுங்க என்று கூறிவிட்டு வைத்து விட்டான்.
கதிர் அவன் கடைகள் அனைத்திற்கும் போன் செய்து அனு அங்கு இருக்கிறாளா என்று கேட்டான். அனைவரும் இல்லை என்று சொன்னதும். ஒரு வேளை பெருமாள்சாமி எதையாவது செய்திருப்பாரோ என்று எண்ணி தன்னுடைய அடி ஆட்களுக்கு போன் செய்து பெருமாள் சாமியை கண்காணிக்குமாறு கூறினான்.
இரண்டு மணி நேரம் அனுவை அங்கும் இங்கும் தேடி கலைத்து விட்டான். அனு அகில் இருவரும் சாப்பிட்டு விட்டு, அனுவை அவள் வீட்டிற்கு அழைத்து சென்றான். அனு வீட்டிற்கு வந்து விட்டதை வடிவு கதிருக்கு போன் செய்து சொன்னால்.
அகில் வீட்டிற்குள் வர மறுக்கவே அனு கட்டாயப் படுத்தி அழைத்து வந்து அமர வைத்துவிட்டு. அகிலனை லட்சுமிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.கதிர் வீட்டுக்குள் புயல் போல் வந்தான்,வந்தவன் அனுவின் கன்னத்தில் ஓங்கி அரைந்து விட்டான். அனு எதற்காக அடித்தான் என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.
“டேய் எதுக்குடா இப்போ அனுவை அடிச்ச, என் விட்டு பொண்ணை ஏமாத்தி கல்யாணம் பண்ணதும் இல்லாம, இப்படி அடிச்சி அவளை கொடுமை படுத்துறைய, கேக்க யாரும் இல்லனு நினைக்காதடா நான் இருக்கேன்டா என் அனுக்கு “
என்று கூறி கதிரின் சட்டையை பிடித்து விட்டான் அகிலன்.
“என் வீட்டுக்குள்ள என் பொண்டாட்டிய நான் அடிக்குறேன் நீ யாருடா கேக்குறதுக்கு,எவளோ தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வந்து என் சட்டையையே பிடிப்ப வீட்டை விட்டு வெளிய போடா ” என்றான் கதிர் கோவமாக.
” எதுக்காக கதிர் அகில் அத்தான் கிட்ட இப்படி மரியாதை இல்லாம நடந்துகிறிங்க “என்றாள் அனு கோவமா.
“எல்லாம் உன்னால தாண்டி “என்று கூறி மீண்டும் அடிக்க கை ஒங்க அகில் கதிரை தடுத்து விட்டான்.
“நீ இன்னும் போகலையாடா, ஒழுங்கா சொன்ன போக மாட்ட போலையே கழுத்தை பிடிச்சி வெளிய தள்ளுனாதான் போவ போல”என்று கூறி கதிர் அகில் அருகில் போக
“கதிர் ப்ளீஸ் இப்படி பண்ணாத, அத்தான் இங்க இருந்து போயிருங்க அத்தான், இங்க இருந்து அசிங்க படாதீங்க “என்று கூறி கைக் கூப்பி வணங்கினால்.
அகில் வேதனையுடன் அங்கிருந்து சென்றான். “எதுக்கு கதிர் அத்தான் கிட்ட மரியாதை இல்லாம பேசுனா “
என்றாள் அனு.
“என்கிட்ட வீட்டுக்கு போறேன்னு பொய் சொல்லிடு,நீ எங்க போய் டி ஊர் சுத்திட்டு வர்ற முதல்ல அதை சொல்லு டி “என்றான் கதிர் கோவமாக.
“நான் ஏன்டா பொய் சொல்லிடு ஊர் சுத்த போறேன், பஸ் ஸ்டாப்ல பஸ் காக வெயிட் பன்னிட்டு இருந்தேன், அப்போ அகில் அத்தான் வந்தாங்க அவரு கூட பேசிட்டு, அப்படியே ஹோட்டல் போய் சாப்டுட்டு நேரா வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டு போறாருடா “என்றாள் அனு அழுதுக் கொண்டே.
“உன்ன கார்ல தான போக சொன்னே நீ எதுக்குடி பஸ்ஸ்டாப்க்கு போன, போனவ என்கிட்ட இல்லனா டிரைவர் கிட்ட சொல்லிடு போக வேண்டியது தானடி சொல்லாம எதுக்குடி போன ” என்றான் கோவமாக.
“நான் டிரைவர் அண்ணா கிட்ட நான் பஸ் போறேன் அண்ணா, நீங்க இருந்து கதிரை கூட்டிடு வாங்கனு சொல்லிடு தான போனே “என்றாள் அழுதுக் கொண்டே.
“பொய் சொல்லாதடி, அம்மா இனிமேல் இவ எங்கையும் வெளிய போக கூடாது. இவ வெளிய போகாம பாத்துக்கோங்கமா, டெய்லி இவ வெளிய போய்ட்டு விட்டுக்கு வந்து சேர்றதுக்குள்ள உயிர் போய் உயிர் வருது, ஒழுங்கா வீட்டுக்கு வந்துருவாளா இல்லை எவனாவது இவளை இழுத்துட்டு போயிரு வானோனு பயமா இருக்கு என்றான் “
கதிர் கூறியதை கேட்டு அனு அழுதுக் கொண்டே ரூம்குள்ள ஓடி விட்டாள்.
“கதிர் என்ன பேச்சுடா பேசுற அவளை பார்த்து, இப்படிலாம் பேச உனக்கு அசிங்கமா இல்ல “
“அனுவை கை நீட்டி அடிக்குறதும், எவனாது இழுத்துட்டு போயிருவானு பயமா இருக்குனு சொல்லுற,நீ பேசுனதை கேட்டு அந்த பொண்ணு மனசு எவளோ கஷ்ட பட்டுருக்கும் “
“உன்ன நம்பி வந்த பொண்ண இப்படிலாம் கஷ்டப்படுத்துறீயே தம்பி,உன் கூட வாழனுன்னு செத்து பொழச்சி வந்துருக்குற அவளை தலை மேல வச்சி ஆடலானாலும் பரவாயில்லை கால்ல போட்டு மிதிக்காதடா “என்று கூறிவிட்டு லட்சுமி அழுதுக் கொண்டே உள்ளே சென்று விட்டார்.
கதிர் கோவத்தில் பேசும் போது என்ன பேசுகிறோம் என்று அறியாமல் “எவனாவது இவளை சொத்துக்காக கடத்தி இழுத்துக் கொண்டு போய் விடுவானோனு எனக்கு பயமா இருக்கு “என்று கூற வந்தவன் மாத்தி கூறி விட்டான்.
கதிர் இவ்வாறு பேசியதை எண்ணி அனு மிகவும் வேதனை பட்டுக் கொண்டிருந்தாள். கதிர் கூறிய வார்த்தைகள் அனுவின் மனதில் முள்ளை போல் குத்திக் கொண்டே இருந்தது. கதிர் கோவத்தில் வார்த்தையை கொட்டிவிட்டான்.அதை எப்படி திரும்ப அல்ல முடியும்.
கதிர் நேராக டிரைவரிடம் சென்று அனு கூறியதை கூறினான், அவர் சிறிது நேரம் யோசித்து விட்டு “தம்பி நான் ஹெட் போன் போட்டு பாட்டு கேட்டுட்டு இருந்தேன் ஒரு வேளை பாப்பா அப்போ வந்து என்கிட்ட பேசியிருக்கும் போல “என்றார் சிறு தயக்கத்துடன்.
கதிர் கோவத்தில் அவரை அடிக்க கை ஓங்கி விட்டான். பின் நிறுத்தி நீங்க பண்ண சின்ன தப்புனால நான் ரஞ்சனிய கை நீட்டி அடிச்சிட்டேன். இன்னொரு தடவை இப்படி நடந்தது. என்று எச்சரித்து விட்டு சென்றான்.
அறைக்குள் அனு அழுதுக் கொண்டே இருந்தால் கதிர் அனுவின் அருகில் சென்றான். கதிர் திரும்பவும் அடித்து விடுவானோ என்று எண்ணி அனு அவனை விட்டு விலகி சென்றாள் பயத்துடன். அனுவின் கண்களில் காதலை மட்டுமே பார்த்த கதிரவன் இன்று பயத்தை பார்க்கிறான்.
“செல்லமா ப்ளீஸ் அழாதடி, நான் உன்ன காணோம்னு டென்ஷன்ல இருந்தேனா அந்த டென்ஷன்ல தான் உன்ன அடிச்சிட்டேன் சாரி மா, இனிமேல் உன்ன அடிக்க மாட்டேன் டி சாரி டி “என்றான்
ஒவ்வொரு முறை கதிர் அனுவை அடித்த பின்பும் இதை தான் கூறுவான். என்பதால் அனு அதை பொருட்படுத்த வில்லை. கதிர் அடித்த அடியை விட அவன் பேசிய வார்த்தைகள் தான் அவளை அதிகம் காயப் படுத்தியது.
இரவு அனு அழுதுக் கொண்டே தூங்கி விட்டாள்.கதிர் எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும் சாப்பிட மறுத்து விட்டாள்.கதிரிடம் பேசவும் இல்லை. கதிரும் சாப்பிடாமலே அனுவின் அருகில் படுத்து அவன் அடித்த கன்னத்தை தடவி கொடுத்துக் கொண்டே இருந்தான்.
“சாரி டி செல்லம், அந்த பெருமாள் சாமி நம்ம கடைய எழுதி வாங்குறதுகாக உன்ன கடத்திட்டு போகிறதுக்கு பிளான் பண்ணிருக்கான். இன்னைக்கு உன்ன காணோம்னு சொன்னதும் என் உயிரே போயிருச்சி டி “என்று கூறி அழுதான்.
கதிரின் கண்ணீர் பட்டு அனுவின் தூக்கம் கலைந்து விட்டது இருந்தும் ஏதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள், அவள் முழித்தது தெரியாமல் “காலைல உன்ன காணோம்னு இரண்டு மணி நேரம் நாய் மாதிரி தெரு தெருவா சுத்திட்டு இருந்தேன் செல்லம், நீ டிரைவர் கிட்ட சொல்லிட்டு போனது எனக்கு தெரியாதுடா”.
“நீ என்னோட உயிர் டி நீ இல்லாம ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது டி செல்லம், நான் உன்ன அடிச்சிருக்க கூடாது தான் ஏதோ வேகத்துல அடிச்சிட்டேன் என்ன மன்னிச்சிரு டி என்றான் அனுவின் கால்களைப் பிடித்துக் கொண்டு. அழுதான்.
அனு தூக்கத்தில் கதிரை கட்டி பிடிப்பது போலவே கட்டி பிடித்தாள். கதிர் அழுவதை பார்க்க முடியாமல் அவ்வாறு செய்தால் அனு கட்டி பிடித்ததும்.கதிர் அவளை இறுக்கமாக கட்டி பிடித்து “சாரி டி ரஞ்சு, நீ எப்பவும் என் கைக்குள்ள இப்படியே இருந்திரு செல்லம், என்ன விட்டு போயிடாத டி ” என்று கூறிக் கொண்டே தூங்கி போனான்.