வேலையில் வைஷ்ணவியும் ஷெர்லினும் சேர்ந்து இன்றோடு ஒரு மாதம் மேல் ஆகியது. பெரிய ப்ராஜெக்ட் ஆதலால் குற்றாலத்திலே ஒரு வீட்டை பிடித்து தங்கிவிட்ட சுந்தர் தினமும் காலையிலிருந்து மாலை வரை வேலையாட்கள் அனைவரும் கிளம்பி செல்லும் வரை உடன் நின்று ஒவ்வொரு வேலையையும் பார்த்துக்கொண்டே இருப்பான்.
இந்த ஒரு மாதத்தில் சுந்தரின் அசிஸ்டன்ட் என்ஜினீயர் சார்லஸ் என்னும் ஒருவன் உதவிக்கு வந்திருக்க வைஷ்ணவி, ஷெர்லின் இருவரையும் நிற்க கூட விடாமல் இருவரையும் மாறி மாறி வேலை வாங்கிக்கொண்டே இருந்தான் சுந்தர் சார்லஸ் மூலம்.
ஒரு முறை இவன் கொடுக்கும் வேலையை செய்ய முடியாமல் சுந்தரிடமே, “யார் ண்ணே நீ? பாக்க ரொம்ப நல்லவன் மாதிரி இருந்த ஆனா பழக பழக இப்டி மிலிட்டரி மாதிரி விறைப்பா சுத்துறியே” என்ற அவள் கேள்விக்கு நக்கலாய் அவளை பார்த்தவன் பதில் பேசாமல் வேலையை தொடர்ந்தான்.
“சிரிக்கவே தெரியாத காட்ஜில்லா தலையன மதிச்சு பேசுனா இப்டி தான் அசிங்க பட்டு நிக்கணும்” என ஷெர்லினும் அவள் பங்கிற்கு தங்களுக்கு முதுகு கட்டிக்கொண்டு செல்லும் சுந்தரை கருவியபடி அவன் கூறிய இடத்தை அளக்க துவங்கினாள்.
“ஏன்லா இவன அன்னைக்கு நடு ரோட்டுல வச்சு எதுவும் பேசாம வந்துருக்கணுமோ?” – வைஷ்ணவி.
“அத தான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன்… பேச்சோட நிருத்திருக்க கூடாது மீனா ஒரசுர மாதிரி வாய தார் ரோட்டுல வச்சு ஒரசிருந்தா இன்னைக்கு இவ்ளோ வேலை வாங்க மாட்டான்ல?” கருவிக்கொண்டே வேலையில் இருந்தாள் ஷெர்லின்.
தோழியின் குமுறலை செவி சாய்த்தாலும் வைஷ்ணவிக்கு கண்கள் மொத்தமும் வாயிலை நோக்கியே இருந்தது.
“நம்மளையும் ஒரு என்ஜினீயரா மதிச்சு அவர் வேலை போட்டு குடுத்துருக்கார் அவரை இப்டி எல்லாம் சொல்லலாமா ஷெர்லின்?” – வைஷ்ணவி
“அவனுக்கு முதல வேலை தெரியுமான்னு கேளு? ஓரமா நின்னு வேடிக்கை தான் பாக்குறான் தவற இளநி தலையன் ஒரு வேலையும் பாக்குறது இல்ல” – ஷெர்லின்
“வேலை தெரியாமயா ஷெரூ இவ்ளோ பெரிய ரிசார்ட்ட கட்ட கார்த்திக் ஓகே சொல்லுவாரு?” – வைஷ்ணவி
“இவன் பேசி பேசியே ஏமாத்திருப்பான்டி… அந்த அண்ணே நல்லவரு அது தான் சரி பொழப்பே இல்லாம ஒருத்தன் கெஞ்சுறான்னு ப்ராஜெக்ட்ட குடுத்துருப்பாங்க. இவன ஒழுங்கா ஒரு குட்டி ரூம அளந்து காட்ட சொல்லு பாப்போம்… நாக்கு மட்டும் பாம்பு ஒடம்பு மாதிரி நீளமா இருக்கு ஆனா செயல்ல பூஜ்யம்” – ஷெர்லின்
“ச்சீ ச்சீ அப்டி எல்லாம் பேசாதடி ஆளு கறார் தான் ஆனா நல்ல மனுஷன் தான்” – வைஷ்ணவி
“ஆமா ரொம்ப நல்லவன். சரியான கஞ்சன். கணக்கு பாக்கணும்னா ஒரு ஆள போடணும். செங்கலை எண்ணு, ஜல்லிய எண்ணு-னு என்ன வேலை வாங்குறான்… கஞ்ச தீவெட்டி. இவன் பொண்டாட்டி இவன் சொத்து எல்லாத்தையும் லவட்டிட்டு போக போறா பாரு…”
“ஷெர்லினு…” வைஷ்ணவி ஷெர்லின் தோளை சுரண்ட அவள் கையை தட்டிவிட்டு,
“அவன் மேல இருக்குற கோவத்தை உன் மேல காட்டிட போறேன். சனிக்கிழமை காலேஜ்கே போகாதவள வேளைக்கு வர வக்கிறான்… நீ என்னடி என்னைக்கும் இல்லாம இன்னைக்கு அந்த ரப்பர் வாயனுக்கு” தோழியை திரும்பி பார்த்தவள் பற்கள் மொத்தமும் தந்தியடித்தது.
பவ்யமாக வைஷ்ணவி ஷெர்லின் அருகில் வந்து நிற்க தனக்கு முன்னாள் இறுகிய முகத்துடன் நின்ற சுந்தரின் தோரணையே ஷெர்லினை அச்சுறுத்தியது.
“பேச்சா பேசுன கொஞ்ச நஞ்ச பேச்சாடி பேசுன…” ஒன்றும் தெரியாதது போல் ஷெர்லின் கையில் இருந்த அளக்கும் டேப்பை வாங்கிக்கொண்டு செல்ல இருந்தவளை ஷெர்லின் பிடித்து நிறுத்தினாள் துணைக்கு ஆனால் பார்வையோ சுந்தர் மேல்.
“அப்டி பாத்தா பயந்துடணுமா நாங்க?” சுந்தரை முறைத்தாள் ஷெர்லின்.
“எப்படி பாத்தாங்க?” அவனும் ஏதோ ஒரு முடிவோடு தான் நின்றிருந்தான்.
“என்னமோ நீங்க எந்த தப்புமே பண்ணாத மாதிரியும் நாங்க தான் எல்லா தப்பையும் பண்ணிட்டு சுத்துற மாதிரி தான் இருக்கே” – ஷெர்லின்
“ஓ அப்ப நீங்க தப்பே பண்ணல… அப்டி தானே?” – சுந்தர்
“உலகத்துல யார் தான் தப்பு பண்ணாம இருக்காங்க? ஏதோ முன்ன பின்ன தெறியாத ஆள்கிட்ட மாட்டிக்கிட கூடாதுன்னு அன்னைக்கு கொஞ்சம் பேசுனோம்” – ஷெர்லின்
“பேசுனோமா? ஐயோ இன்ஜினீரியரே எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. உங்களுக்கே தெரியும் யார் பேசுனது, அருவாளை எடுப்பேன்னு சொன்னது… என்ன வேணாலும் பண்ணிக்கோங்க ஆனா உசுரோட வந்தா போதும்” அப்டியே சுந்தர் பக்கம் தாவியிருந்தாள் வைஷ்ணவி.
“கிராதகி…” தோழியை பார்த்து கருவிய ஷெர்லின் பார்வையை சிறிதும் மாற்றாமல் சுந்தரை மீண்டும் துளைத்தது.
“சரி தப்பு பண்ணிட்டேன் அதுக்குன்னு அத மனசுல வச்சிட்டு இப்படியா செங்கலை தூக்கி தலைல வச்சு ஓட சொல்றது மனசுல பீ.டீ மாஸ்டர்-னு எண்ணம்” அவள் பேசுவதை எல்லாம் அமைதியாக கையை கட்டி ஆர்வமாக வைஷ்ணவி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“இப்போ என்ன சொல்ல வர்ற நீ?” – சுந்தர்
“உன்கிட்ட எல்லாம் சொல்ல ஒன்னும் இல்ல. ஏதோ அந்த கார்த்தி அண்ணே முகத்துக்காக இங்க வேலை பாக்குறேன். இப்டி பழி வாங்குற படலத்தையே புடிச்சிட்டே சுத்துனா வேலையும் வேணாம் ஒன்னும் வேணாம் நான் போறேன்” கறாராக கூறி அவனை முறைத்தாள்.
“டேப்பை தா வைஷ்ணவி” ஷெர்லினை உதாசீனம் செய்தவன் வைஷ்ணவியிடம் கையை நீட்டினான்.
“ஆமா வைஷு குடுத்துட்டு வண்டிய எடு வீட்டுக்கு போகலாம். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு மாசம் சம்பளம் சரி, இப்போ இருந்த ஒரு வாரத்துக்கு வேலை செஞ்ச காச தர சொல்லிடு” – ஷெர்லின்
“ஸ்டரக்சரல் டிராயிங் பண்றதுக்கு இந்த டேப் தேவையில்லை வைஷ்ணவி. போய் வேலைய பாரு”
அவளோ தோழி திட்டு வாங்குவதை கண் கூடாக பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இடத்திலிருந்து நகராமல் இருக்க, “என்ன சந்தேகம்?” என்றான் சுந்தர்.
“இல்ல சார் அவளை வேலைய விட்டு அனுப்புனாலும் பரவால்ல என் வேலைக்கு சேதாரம் வராதுல? அந்த சந்தேகத்துல தான் கேக்குறேன். என் வேலைக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே?” அதற்கு பதில் எதுவும் கூறாமல் சுந்தர் அவளை முறைக்க அடுத்து பேசாமல் இடத்தை காலி செய்தாள் வைஷ்ணவி.
“என் கூட வா” சுந்தர் ஷெர்லினை அழைக்க கோவமாக அங்கேயே நின்றிருந்தாள் ஷெர்லின்.
அவளது கோவத்தை பார்த்தவன், “நான் காட்ட வேண்டிய கோவத்தை எல்லாம் நீ காட்டி எல்லாத்தையும் நியாயப்படுத்தாத ஷெர்லின். சார்ல்க்கு அங்க போய் ஹெல்ப் பண்ணு”
“வேலைய விட்டு தூக்கல?” – ஷெர்லின் வியப்பாக கேட்டாள்.
“உனக்கு வேலை குடுத்து ரொம்ப நேரம் ஆச்சு. அவனுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இந்த ட்ராயிங்ல கரெக்ஷன் நீ பண்ணி தரணும்” – சுந்தர்
“தப்பா வரஞ்சது யார் தப்பு? நீ தானே தப்பா போட்ட? நீயே சரி பண்ணு”
தனக்கு வேலை தருபவன் என்று சிறிய மரியாதை கூட இல்லாமல் நடந்தவள் அவனை பார்த்து திரும்பி மீண்டும் முறைத்து, “இவரு தப்பு பண்ணா அத நாங்க சரி பண்ணணுமாம். போயா”
தன்னை வசைபாடிக்கொண்டே செல்லும் ஷெர்லினை பார்த்த சுந்தரின் இதழுக்குள் மெல்லிய புன்னகை, ‘வாயாடி’ என்று நகர்ந்தான் சுந்தர்.
சுந்தரின் பயன்பாட்டிற்காக இரண்டு நாட்கள் முன்னர் தான் வாசல் அருகே அமைத்திருந்த சிறிய ஆஸ்பெட்டாஸ் போட்டு ஷெட் ஒன்று.
இரண்டு மேஜைகள் இருந்தது, அதை தவிர அவனுடைய பொருட்கள் சில அங்கு இருக்கும். இப்பொழுது கூட அங்கு அமர்ந்து தான் வேலையை பார்க்காமல் வாசலையே நொடிக்கொரு முறை பார்த்துக்கொண்டிருந்தாள் வைஷ்ணவி.
ஏனோ கண்கள் இன்று காலையிலிருந்து அவனது வருகைக்கு ஏங்கியது. ஒரு வாரமாக கார்த்திக்கை பார்க்கவில்லை வைஷ்ணவி. ஏதோ வேலை இருப்பதாக கூறி சென்னை கிளம்பியிருந்தான்.
நேற்று மாலை தான் அவன் அன்னையிடம் பேச்சு கொடுத்த பொழுது இன்று வருவதாக செய்தி கிடைத்தது. நிச்சயம் சைட்டை பார்த்த வருவான் என்று தெரியும், அதனால் தான் கண்கள் அங்கேயே குடிகொண்டது.
எதற்காக இந்த ஏக்கம் அவனை பார்த்த என்று மனம் கேட்ட கேள்விக்கு, ‘தினமும் அவனை தொந்தரவு செய்யாமல் விடியும் பகல் பொழுதுகள் சுவாரஸ்யம் இல்லை’ என்று நம்ப வைத்தது அவன் மூளை.
ஆனால் மனதிற்கு தானே தெரியும் இவளை ஓரக்கண்ணால் முறைக்கும் அவன் பார்வையின் சுவாரஸ்யம்.
“வாட்ச் மேன் ச்சார் காலியா தான் இருக்கு போய் ஒக்காந்துக்கோ”
தோழியை குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பிய வைஷ்ணவி அணைத்து பற்களையும் காட்ட, “நீ சரி இல்லடி சொல்லிட்டேன்” முறைத்து நின்றாள் ஷெர்லின்.
“உன் கூட என்னைக்கு சேந்தேனோ அன்னைக்கே நான் கெட்டு போய்ட்டேன் முருகேசா” – வைஷ்ணவி.
“நடிக்காத. நீ கார்த்தி அண்ணனுக்காக தானே மழையை தேடுற தட்டா கணக்கா பாத்துட்டு நிக்கிற?” – ஷெர்லின்
“அந்த கொடைமொளகா மூக்கனுக்காக எல்லாம் இங்க யாரும் வெயிட் பண்ணல” – வைஷ்ணவி
“ஓ அப்ப அந்த வாட்ச் மேன் கெழவனையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா?” – ஷெர்லின்
“ச்சீ உனக்கெல்லாம் நான் துரோகம் பண்ண மாட்டேன். அந்த ஆளுக்கு உன் மேல ஒரு கண்ணு. அதான் உனக்கு பேசி முடிக்கணும் இன்னும் ஒரு மணி நேரம் தான் நல்ல நேரம் இருக்காம். போன் நம்பர் எதுவும் வச்சிருக்கியா?” – வைஷ்ணவி
“நீ பாத்த அந்த வக்கீலுக்கு இந்த கிழவன் எவ்வளவோ தேவலடி” – ஷெர்லின்
“அப்ப பேசி இன்னைக்கே தட்ட மாத்திட வேண்டியது தான்” – வைஷ்ணவி
“ம்ம்ம் மாத்துவ மாத்துவ அந்த கெழவனோட பையனுக்கு உன்ன கல்யாணம் பண்ணி வச்சு மாமியார் கொடும பண்ணாம வி…” இருவரின் வாக்குவாதத்தை தடுத்து நிறுத்தியது ஓங்கி ஒலித்த ஷெர்லினின் கைபேசி.
“ச்சீ வக்கிரா பாரு இங்கிலிஷ் பட்டு. ஏண்டி உனக்கு ரிங்டோன்-கு வேற பாட்டே கிடைக்கலையா? எழவு பாட்டு மாதிரி இருக்கு” தோழியை திட்ட வந்த ஷெர்லின்க்கு அப்பொழுது தான் வந்த காரணமே நினைவில் வந்தது.
தலையில் கை வைத்தவள், “வந்ததையே மறந்துட்டேன்டி. என்னோட ஆச்சி போய் சேந்துடுச்சாம். அம்மா ஒடனே கெளம்பி வர சொல்லுச்சு ஒரு மணி ட்ரைன்க்கு கெளம்பணுமாம்” வைஷ்ணவி சுற்றி கிடந்த தின்படங்கள் அடங்கிய டப்பாவை பையினுள் அவசர அவசரமாக எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.
மணி இப்பொழுதே பதினொன்றரைக்கு மேல் ஆகியிருக்க உடனே கிளம்ப வேண்டி சுந்தரிடம் கூறிவிட்டு தான் வைஷ்ணவியை பார்த்தாள்.
“நாம பைனல் இயர் இன்டெர்னல் எக்ஸாம் அப்ப செத்து போச்சுன்னு சொன்னோமே அந்த கெழவியா?” – வைஷ்ணவி
“ஆமா” – ஷெர்லின்
“பரவால்லயே இவ்ளோ நாள் தப்பிச்சிடுச்சா?” – வைஷ்ணவி
“ஆமாடி நான் கிளம்புறேன். போற வழில பஸ் புடிச்சிட்டு போயிடுறேன்”
தோழி கை பிடித்து தன்னுடைய வண்டி சாவியை திணித்தாள் வைஷ்ணவி, “பஸ்ல போனா நேரம் ஆகிடும். வண்டில போ”
அதுவும் சரியென பட சாவியை வாங்கி செல்லும் தோழியிடம் மேலும், “ஆச்சிக்கு துணைக்கு போயிடாதடி”
வைஷ்ணவியை முறைத்தவள், “பூனையை எல்லாம் கூடவே வச்சிருக்கேன் பாரு என்ன செருப்பாலேயே அடிக்கணும்” தலையில் கை கொண்டு அடித்தாள் ஷெர்லின்.
“சரிங்க தோழி போங்க போங்க…” சமாதானம் பேசி தோழியை அனுப்பி வைத்தவள் வாசலில் ஒரு கண்ணும் தோழி வீடு சென்று சேர்ந்ததை உறுதிசெய்ய கைபேசியில் ஒரு கண்ணுமாய் இருந்தாள்.
தோழி வீடு சென்று சேர்ந்தது உறுதிப்படுத்திக்கொண்டு டிபன் பாக்சை திறந்து கைபேசியை பார்த்துக்கொண்டே உணவை மறந்திருந்த வைஷ்ணவி முன்னே ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தான் சார்லஸ். கடையில் வாங்கிய பார்சலை திறந்து வைத்தவன் எட்டி சென்று வைஷ்ணவி டிபன் பாக்ஸை பார்க்க அதற்குள் சுதாரித்தவள் தன் கை கொண்டு சட்டென மூடினாள்.
“காத்தாடி எதுக்குடா இங்க வர்ற?” முறைத்தாள் அவனை.
“நல்ல ஸ்மெல் வருதே அதான் பாத்தேன்”
“சான்ட்விச் டா” – வைஷ்ணவி
“அப்டி என்ன சான்ட்விச்?”
“சப்பாத்தி வித் ஜீனி அண்ட் தேங்காய் துருவல்” – வைஷ்ணவி
“கருமம் இதுக்கா இந்த பில்டப்?” அலுத்துக்கொண்டு தான் வாங்கிய அந்த ஊசி போன சால்னாவை பரோட்டாவில் ஊற்றினான் சார்லஸ்.
“உண்மையான 90s கிட்ஸ்-கு தான்டா இந்த ஜீனி சப்பாத்தி அருமை தெரியும்”
“நானும் 90s கிட்ஸ் தான்” முறுக்கிக்கொண்டு நின்றான்.
“சார்லஸ் என்ஜினீயர் எங்க?” சாந்தமாய் குரல் இருந்தாலும் அந்த குரலில் இருந்த காந்த தன்மை வைஷ்ணவியின் கழுத்தை சுழுக்கிவிடும் அளவிற்கு அவன் பக்கம் வேகமாக திருப்பியது.
“பின்னாடி காட்டேஜ்-கு இடத்தை அளக்க போயிருக்காரு கார்த்தி ண்ணா. இருங்க கூப்புடவா?”
“வேணாம்டா இந்த பைலை அவர்கிட்ட குடுத்து வை நான் ஒரு வேலையா வெளிய போறேன். வந்து பேசுறேன்”
சார்லஸ் கையில் தான் கொண்டு வந்த ஒரு கோப்புகளை சார்லஸ் முன்னே வைத்து செல்ல, தன்னை பார்க்காத கார்த்தியின் கவனத்தை ஈர்க்க, “சமையல் காரரே சாப்புடுறீங்களா?” காரணமே இல்லாமல் அவனுடைய ஒரு பார்வைக்காக ஆசைப்பட்டு அவனை தன் பக்கம் திருப்பினாள்.
நடந்தவன் நடையை நிறுத்தாமல் அப்படியே அவள் பக்கம் தலையை திருப்பி வேண்டாம் என்று தலையை மட்டும் ஆட்டி தொடர்ந்து நடந்தான்.
“அப்டி என்ன தலை போற வேலை இவ்ளோ அவசரமா போறீங்க?”
தலை அசைத்து மட்டும் போதும் என விட்டுவிட முடியுமா அவனை?
“பேங்க் போகணும்ங்க” இவளிடம் எதற்கு தன்னுடைய வேலை பற்றி எல்லாம் கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எரிச்சல் கார்த்திக்கின் மனதில்.
“பேங்க் இந்த நேரம் யாரும் ஓபன் பண்ணி வச்சிருக்க மாட்டாங்க. இது எல்லாருக்கும் லஞ்ச் டைம்” தெரியாதா அவனுக்கு என்ற சிறு நக்கலும் அவளிடம்.
“சமையல் காரனுக்கும் மணி பாக்க தெரியும்” திரும்பி அவளை சிறிது எரிச்சலோடு பார்த்தவன் பார்வை வைஷ்ணவியின் மனதிற்கு ஒப்பவில்லை. அதை கேட்ட சார்லஸ் வாய் விட்டு சிரித்துவிட அவனிடம் சென்றது அவள் கோவப் பார்வை.
“தேவையா உனக்கு இது?” – சார்லஸ்
“ஒருத்தர சாப்புட கூப்புடுறது தப்பா?”
“சாப்புட கூப்புடுறது தப்பில்ல ஆனா நீ இப்ப கூப்புட்டுருக்க கூடாது”
“ஏன் இது தானே சாப்பாடு நேரம் இப்ப கூப்புடாம பின்ன சாமத்துலையா பந்தி போடணும்” – வைஷ்ணவி
“அவர் ஏதோ டென்ஷன்ல இருக்கார் வைஷ்ணவி, தெரியலையா உனக்கு?” கார்த்தி வந்ததிலிருந்து வைஷ்ணவி உண்பதை நிறுத்தியிருந்தால் ஆனால் சார்லஸோ பாதி பரோட்டாவை முடித்திருந்தான்.
“ஓ” என்றவள், “அத சொல்ல வேண்டியது தானே யார் அவர் கழுத்துல கத்தி வச்சி நிக்கிறாங்க?”
உண்பதை நிறுத்திவிட்டு, “பசங்க பெத்த அம்மா அப்பாக்கிடையே தன்னோட கஷ்டத்தை ஷேர் பண்ணிக்க மாட்டாங்க. பிரன்ட்ஸ் கிட்ட மட்டும் தான் மனசுல இருக்குறத சொல்லுவாங்க. நீ யாரு வைஷ்ணவி அவருக்கு? உன்கிட்ட இதெல்லாம் சொல்ற அளவுக்கு அவரோட லைப்ல நீ இல்ல”
பட பட என உணவை முடித்தவன் பொட்டலத்தை மடித்து வைத்து கொண்டே சப்பாத்தியை காய வைத்திருந்த வைஷ்ணவியின் செயல் அவன் கண்களுக்கு வேறு செய்தியை கூறியது.
“அதையும் மீறி அவர்கிட்ட நீ பேசணும்னு நெனச்சா அவரை ஹர்ட் பண்ணாம பேச பழகு”
“நான் எதுக்கு அவர்கிட்ட பேச நினைக்கணும்?” அவசர அவசரமாக உணவை விழுங்க துவங்கினாள், “அவர் ஆட்டிட்யூட் காட்டுனா நானும் காட்டுவேன் எனக்கும் தெரியும்”
எப்பொழுதும் இனிக்கும் அந்த உணவு இன்று கடமைக்காக உள்ளே சென்றது. உணர்வை ஏற்க மறுக்கிறாள் என்று புரிந்தவன், “அவர் ஆட்டிட்யூட் காட்டல வைஷ்ணவி கோவப்பட்டுட்டார் அவ்வளவு தான்”
எதுவும் பேசாமல் எழுந்து கையை கழுவி வந்தவள் பாக்ஸை எடுத்து பைக்குள் பாதி வைத்த பொழுது தான் அவன் பேசும் அர்த்தம் புரிந்தது.
“டேய் எதுக்குடா அவருக்கு கேன்வாஸ் பண்ற?”
மர்ம சிரிப்போடு தோளை உலுக்கியவன் எதுவும் பேசாமல் நகர, “காத்தாடி சொல்லிடு போடா டேய்” அவன் தான் பதில் கூற அங்கு இல்லையே.
அடுத்த இரண்டு மணி நேரம் வைஷ்ணவிக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. ‘நீ யாரு அவருக்கு?’ இந்த ஒரு கேள்வி தான் அவளது சிந்தனைகள் மொத்தத்தையும் ஆட்டி படைத்தது.
Structural டிசைன் போட்டு சுண்டரிடம் நீட்ட அவனோ அவள் செய்த தவறை சுட்டி கட்டி உடன் இரண்டு திட்டையும் கொடுத்து அனுப்புவான். இதுவே பல முறை நீடிக்க எரிச்சலுற்றவள் மொத்தமாய் வேலையில் மூழ்கிப்போக சுற்றமும் மறந்தாள். பாதி முடிந்திருந்தது வேலை. எடுத்து சுந்தரிடம் காட்ட சென்றாள்.
இவளுக்கு முன்பே சுந்தரிடம் ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான் கார்த்தி. தூரத்திலிருந்தே அவனை மட்டுமே பார்த்தவள், கார்த்தி அருகில் வந்ததும் அவனை பார்க்க ஏதுவாக அவன் எதிரில் நின்றாள். அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் ஏது பேசினார்கள் என்றெல்லாம் அவள் செவிகளில் பதியவில்லை.
“ஆளுங்க அதிகமானாலும் பரவால்ல சார், வேலைய மட்டும் வேகமா பண்ண சொல்றாங்க பசங்க. நாளைக்கே ஒன் சி உங்க வீட்டுல வந்து குடுத்தர்றேன்” – கார்த்தி
“அவசரம் இல்ல கார்த்தி நீங்க முதல குடுத்த அமௌன்ட் இன்னும் முழுசா நான் யூஸ் பண்ணல” – சுந்தர்
“பரவால்ல சார், லோன் அப்ளை பண்ணது அப்றம் பசங்க கொஞ்சம் அமௌன்ட் தந்தாங்க அதான், குடுத்தா வேலை கொஞ்சம் வேகமா நடக்கும்னு யோசிச்சேன்” – கார்த்தி
“சரிங்க கார்த்தி. நான் சொன்ன நேரத்துக்கு முன்னாடி பண்ணி குடுப்பேன் தவற லேட்டா மட்டும் ஆகாது”
“அந்த நம்பிக்கைல தான் சார் உங்கள பேசிருக்கேன்” சிரித்தான் சுந்தர்,
“நல்லா பேசுறீங்க கார்த்தி. அப்றம் இன்னும் ஒன்னு சொல்ல வந்தேன் உங்ககிட்ட. நாம இங்க காட்டேஜ் சுவரை எல்லாம் முக்கால் அடி சுவர் எல்லாம் வைக்க வேணாம். அரை அடி சுவர் மட்டும் வைக்கலாம். குத்தகைக்கு தானே போதும். செலவும் கம்மியாகும்”
“செலவு பத்தி எல்லாம் பிரச்சனை இல்ல சார். தரமா இருந்தா போதும்” – கார்த்தி