சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்க..,,அவள் குடித்த விஷம் அவளுடைய இரத்தில் கலந்திருந்ததது நாளே அவளை காப்பாற்ற மருத்துவர்கள் எல்லாம் கடினப்பட்டு கொண்டு இருந்தனர்…
வெளியே நந்தினி அழுதுகொண்டே இருக்க அவளை தேற்ற வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர் இருவரும்…
செவிலியர்கள் வருவதும் போவதுமாக இருக்க நந்தினி தான் மேலும் பயந்து போனாள்…
ஜீவா தான் ஹரியையும் நந்தினியையும் சமாதான படுத்த முயன்று தோற்றுப் போனான்.
இரண்டு மணி நேரம் கழித்தும் மருத்துவர்கள் எதுவும் சொல்லாமல் இருக்க நந்தினிக்கு பயம் அதிகரிக்கவே செய்தது.
பயம் அதிகரிக்கவே மருத்துவமனையின் கீழ் வளாகத்தில் இருந்த பிள்ளையாரிடம் சென்றாள்…
” எனக்கு என்னோட அக்கா உயிரோட வேணும் பிள்ளையாரப்பா .உனக்கு மனசுன்னு ஒன்னு இருக்கா..?? என்னோட அக்காவ எவ்வளவு தான் கஷ்ட படுத்துவ சொல்லு..இது உனக்கே ஞாயமா இருக்கா இப்படி என் அக்காவ என்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறீயே உனக்கு என்ன தான் வேணும் சொல்லு எங்க அம்மா அப்பாவ என்கிட்ட இருந்து பிரிச்ச அப்புறம் என்னோட கிருஷ் என்கிட்ட இருந்து பிரிச்ச இப்போ என்ன என்னோட அக்காவ என்கிட்ட இருந்து பிரிக்க போறீயா சொல்லு …சொல்லு எதுக்கு இப்படி பண்ணுற பிள்ளையாரப்பா என்று கீழே அமர்ந்து கதற…
இவளது கதறலை கண்டும் அங்கிருந்த பிள்ளையார் எதுவும் செய்ய இயலாமல் அமைதியாக இந்ததது…
உதயும் மஹாலிங்கமும் மருத்துவமனைக்கு வேகமாக வந்து சேர்ந்தனர்.
இருவரும் ரிசப்ஷன் சென்று சுமியின் பெயர் சொல்லிக் கேட்டு அவளுக்கு சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு சென்றனர்…
அங்கே ஹரியும் ஜீவாவும் அமர்ந்திருக்க அவர்களிடம் வேகமாக வந்த உதய் இது எப்படி நடந்துச்சி எதுக்காக சுமி இப்படி பண்ணா..???இப்போ அவளுக்கு எப்படி இருக்கு ” என்று அவனுக்கே உரிய கடுமையுடன் கேட்டாலும் அவன் கண்கள் நந்தினியையே தேடியது…
” எனக்கு தெரியல அண்ணா ..தீடீருன்னு நந்து தான் சுமி அக்கான்னு சொல்லி கத்துன்னா அவளுக்கு என்னவோ ஏதோன்னு ஓடி வந்தோம் ஆனா வந்து பார்த்தா சுமி அக்கா வாயில நுரை தள்ளி இருந்துச்சி நந்து மா தான் உடனே ஹார்ட் பீட் செக் பண்ணி ஹாஸ்பிடல் சேர்த்தோம் அண்ணா ” என்றான் ஹரி அழுகையுடன்….
ஆமா இப்போ நந்தினி எங்க அவள காணோம் என்றே பதறியப்படி கேட்க…
கீழ தான் சார் போயிருக்கா என்று ஜீவா சொல்ல…
அதே நேரத்தில் மேலே வந்த நந்தினி உதயை கண்டு வேகமாக ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்…
அவளது அணைப்பே அவளது பயத்தை சொல்ல அவளது தலையை வருடி விட்ட படி சுமிக்கு ஒன்னும் ஆகாது நிதி மா நம்ம தைரியம் தான் அவள திரும்ப நம்ம கிட்ட கொண்டு வரும். நீயே இப்படி பயந்து இருந்தா சுமி எழுந்து வந்தோன்ன என்ன தான் திட்டு வா ” என்று அவளை சமாதானம் செய்ய மஹாலிங்கம் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தாலும் அப்போது சுமியை பற்றின கவலையே நிறைந்திருந்தது..
உதய் சார் என் சுமி அக்காக்கு ஒன்னும் ஆகாதுல என்று மூச்சை இழுத்துக் கொண்டு அவனை விட்டு பிரிந்து நின்று கேட்க…
” உன்னோட சுமி அக்காவுக்கு ஒன்னும் ஆகாது அவ சீக்கிரமா குணமாயிடுவா மா நீ நர்ஸ் தானே நீயே இப்படி இருந்தா எப்படி அவுங்க ரெண்டு பேரையும் பாரு எப்படி இருக்காங்க” என்றே கூறிக் கொண்டு இருக்கும்போதே நந்தினி மயங்கி சரிந்தாள்…
நந்தினியை உதய் பிடித்துக் கொண்டு நிதி நிதி மா என்று அவள் கண்ணத்தை தட்ட பயந்து போன ஜீவா அம்மு எந்திரி அம்மு மேடம்க்கு ஒன்னும் ஆகாது என்றே அழுக அவளை பக்கத்து பேட்டில் சேர்த்தனர்…
[the_ad id=”6605″]
அங்கே இருந்த அனைத்து ஆண் மகன்களும் மனதிலே கலங்கிக் கொண்டு இருந்தனர். அங்கே நிசப்த்த அமைதியே நிலவியது…
சிறிது நேரத்தில் மருத்துவர் வெளியே வர..,,
“டாக்டர் இப்போ சுமிக்கு எப்படி இருக்கு அவளுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே இப்போ அவ நல்லா இருக்கால டாக்டர் ” என்று உதய் பதற்றத்துடன் கேட்க…
அவுங்க டேஞ்சர்ஸ் கண்டிஷன்ள இருந்து வந்துட்டாங்க இனி அவுங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல சார். இப்போதைக்கு அவுங்க மயக்கத்துல இருக்காங்க ஒரு மணிநேரம் கழிச்சு அவுங்க கண்ணு முழிப்பாங்க அப்போ போய் எல்லாரும் பாத்துட்டு வாங்க ” என்க
ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் என் பொண்ண காப்பாத்தினதுக்கு என்று மஹாலிங்கம் கூற
இது எங்க கடமை சார் இனியாவது உங்க பொண்ண பத்திரமா பாத்துக்கோங்க என்றதுடன் அந்த இடத்தை விட்டு கிளம்பி சென்றார்.
சிறிது நேரத்திலே நந்தினி மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்க்க அவளுக்கு துணையாக ஜீவா கண்களில் கண்ணீரோடு அமர்ந்திருந்தான்…
ஜீவா என்று அழைக்க அம்மு உனக்கு ஒன்னும் இல்லல நல்லா தான இருக்க என்று பயத்துடனும் அக்கறையுடனும் கேட்க..
எனக்கு ஒன்னும் இல்ல அப்பு இப்போ சுமி அக்காவுக்கு எப்படி இருக்கு என்று கேட்க…
தெரியல அம்மு நீ மயக்கம் போடவும் நான் உன் கூட இருந்துட்டேன் என்று சொல்ல..
சரி அப்போ வா நாம போய் அக்காவ பாத்துட்டு வரலாம் என்று சொல்லி எந்திரிக்க முற்பட
அம்மு உனக்கு ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு நீ என்னன்னா போய் பாக்கலாம்னு சொல்லுற ஒழுங்கா அந்த ட்ரிப்ஸ் முடிஞ்சவுடனே உன்ன கூட்டிட்டு போறேன் என்றான்…
குழந்தை போல் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு ஜீவாவை பார்க்க ” இதெல்லாம் என்கிட்ட செட் ஆகாது அம்மு ட்ரை சம்திங் நீயூ என்று கூறிட வேறு வழியின்றி நந்தினி அந்த ட்ரிப்சையே பார்த்து கொண்டு இருந்தாள்….
ஒரு மணிநேரம் கழிச்சு சுமி மெதுவாக கண் விழித்து பார்த்தாள்.அதனை பார்த்த நர்ஸ் வெளியே வந்து ” பேஷன்ட் கண் முழிச்சிட்டாங்க இப்போ போய் நீங்க அவுங்கள பாக்கலாம் டிஸ்டர்ப் பண்ணாம” என்று விட்டு நகர்ந்தார்..
செவிலியர் சொன்னது போலவே அனைவரும் மெதுவாக சென்று பார்த்துவிட்டு அங்கேயே அமர்ந்தனர்..
உதய் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க மஹாலிங்கம் தான் சுமியின் அருகில் அமர்ந்து ” என்னாச்சி சுமி மா எதுக்கு இப்படி ஒரு காரியத்த பண்ண ..உனக்கு எங்கள விட்டு போக எப்படி மனசு வந்துச்சி சொல்லு மா ” கலங்கி போய் கேட்க…
“அப்பா ” என்று கண்ணீர் சிந்திட
” நீ என்ன அப்பான்னு சொல்லி மூனு வருஷம் ஆச்சு மா உங்க அம்மா நம்மள விட்டு போன மாதிரி நீயும் என்ன விட்டு போக பாத்துட்டியே மா “என்று சொல்ல..
” என்ன மன்னிச்சிடுங்க பா நான் பண்ணது தப்பு தான் .ஆனா எனக்கு வேற வழி தெரியல அப்பா ..மூனு வருஷமா நான் கஷ்டத்த பாத்துட்டு இருக்கேன் குழந்தையோட அப்பா யாருகின்ற கேள்வி என் காதுல கேட்டுட்டே இருக்கு பா என்னால முடியல பா ” என்று சொல்லி அழுக..
இதுவரை அமைதியாக இருந்த உதய் ” என்னோடோ குழந்தைன்னு சொல்ல வேண்டியது தான சுமி . நான் உனக்கு எத்தன தடவ சொல்லியிருக்கேன் ஜானு என்னோட பொண்ணுன்னு ” என்று சொல்ல..
“எதுவரைக்கும் உதய் ” என்று மஹாலிங்கம் கேட்க…
” எதுவரைக்கும்ன்னா என்ன சொல்லறது அங்கில் ” என்று வேகமாக கேட்க…
“உனக்குன்னு ஒரு கல்யாணம் நடக்கிற வரைக்கும் சொல்லுவ அப்புறம் எப்படி சொல்லுவ உதய் அப்பவும் என் பொண்ண பத்தி தான தப்பா பேசுவாங்க . என் பேத்திய என் பொண்ணுன்னு சொல்ல முடியுற உன்னால சுமி எல்லார் முன்னிலையிலும் இவ தான் என்னோட பொண்டாட்டின்னு சொல்ல முடியுமா சொல்லு .இத சொல்ற நீ ஏன் சுமியயையே கல்யாணம் பண்ணிக்க கூடாது சொல்லு பா இப்போ இதுக்கு பதில் சொல்லு ” என்றே கேள்வி கேட்க…
உதயால் எதுவும் பேச முடியவில்லை அமைதியாக தலை குனிந்த படி நிற்க “அப்பா ” என்று அந்த அறையே அதிரும் படி குரல் வர..
எல்லாரும் குரல் வந்த திசையினை நோக்க அங்கே ருத்திர காலனாய் கதவை திறந்த படி நின்றிருந்தான் வெங்கடேஷ்…
சுமியின் கண்ணில் இருந்து கண்ணீர் வர அவளது உதடுகள் தானாக அண்ணா என்று உச்சரித்தது…
” என்ன பா இப்படி பேசுறீங்க..??? ” என்று கோபமாக உள்ளே வந்து கேட்க….
“அப்பா சொல்றதுல என்ன தப்பு இருக்கு அண்ணா “என்றவள் உதயிடம் திரும்பி ” சொல்லு டா உன்னால என்ன கல்யாணம் பண்ணிக்க முடியுமா எனக்கு நிரந்திரமா நான் பெத்ததுக்கு உன்னோட வேணும்ன்னு நினைக்கிறேன் உன்னால அது செய்ய முடியுமா சொல்லு டா” என்றே அவனை பார்த்து கேள்வி கேட்க…
உடல் நிலை சரி இல்லாதவள் என்று கூட பார்க்காமல் வெங்கட் சுமியின் கண்ணத்தில் பளார் என்று அடித்தான்..
” டேய் என்ன டா பண்ணுற அறிவில்ல உனக்கு . இப்போ தான் அவ உயிர் பிழைச்சு வந்துருக்கா அவள போய் அப்படி அடிக்கிற ” என்றவன் ஒரு நிமிடம் கண்களை மூடி நந்தினியை மனதில் நினைத்து பார்த்தவன் கண்களை திறந்து ” நீங்க சொல்றது சரி தான் அங்கில் இப்போ சொல்ற என்னால கல்யாணத்துக்கு அப்புறம் நான் சொன்னாலும் எனக்கு மனைவியா வரப் போர பொண்ணு நம்புவாளா இல்லையான்னு தெரியாது அதுக்கப்புறம் நீங்க சொன்னது போல் தான் பிரச்சினை வரும் ” என்றான்..
“டேய் நீ என்னடா பேசிட்டு இருக்க உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா என்ன பேசுறோம்னு தெரிஞ்சு தான் பேசுறீயா டா ” என்று கோபமாக கேட்க..
[the_ad id=”6605″]
“நான் எல்லாம் தெரிஞ்சு தான் டா பேசுறேன் .கொஞ்ச நேரம் நீ அமைதியா இரு ” என்றவன் சுமியின் பக்கம் திரும்ப அந்த நேரம் பார்த்து கதவை திறந்து கொண்டு நந்தினியும் அவளுடன் ஜீவாவும் வந்தார்கள்..
ஒரு நொடி நந்தினியும் உதயும் பார்த்துக் கொள்ள அதன் பின் இருவருமே சுமியின் பக்கம் திரும்பினர்…
” சுமி சொன்னதும் கேட்டதும் சரி தான் மா.. அதுனால நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன் ” என்றவன் ஒரு நொடி இடைவெளி விட எல்லாரும் அவனது பதிலை எதிர்பார்த்து காத்திருக்க
” நான் யாரோ ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி நம்மல தப்பா நினைக்கிறதுக்கு நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறது நல்லதுன்னு தோணுது ” என்று அவனது பதிலை அனைவரிடமும் சொன்னான்…
இதனை கேட்ட நந்தினிக்கு அதிர்ச்சியாக இருந்தது..ஏனோ தன் உயிரே தன்னை விட்டு சென்றது போல் உணர்ந்தாள்…
சுமிக்கு சந்தோஷமாக இருந்தது இனி சூர்யாவின் வாழ்க்கைக்கு உதய் இடையூறாக இருக்க மாட்டான் என்று எண்ணி சந்தோஷப்பட்டாள் .
நீ என்னடா நினைச்சிட்டு இருக்க இப்படி லூசு மாதிரி பண்ணுற இவுங்க ரெண்டு பேர் தான் எண்ணமோ பேசுறாங்கன்னா நீயும் ஏன்டா அவுங்களுக்கு ஒத்து ஊதி பேசிட்டு இருக்க ” என்று கோபமாக பேச…
” நான் முடிவு எடுத்துட்டேன் டா இனி இத பத்தி பேச ஒன்னும் இல்ல .இனி நடக்க போறது மட்டும் தான் பாக்கனும் .நீ தான் உன் தங்கச்சி கல்யாணத்த நீ தான் முன்ன இருந்து நடத்தனும்.அது தான் என் ஆசை டா ” என்றான் உதய்…
வெங்கட் மௌனமாக இருக்க ஹரி தான் அய் ஜாலி அப்போ நம்ம வீட்டுல ரெண்டு கல்யாணம் நடக்க போகுதா சூப்பர் சூப்பர் ” என்று மகிழ்ச்சியில் பேசிட..
” இங்க எனக்கும் சுமிக்கும் தான் கல்யாணம் இன்னொரு கல்யாணம் யாருக்கு ” என்று கேள்வியாய் உதய் கேட்க
” இது தெரியாதா அண்ணா நம்ம நந்துவுக்கும் சூர்யா அண்ணாவுக்கும் தான் கல்யாணம் அதுவும் இன்னும் பத்து நாள்ல” என்றான் சந்தோஷமாக….
இதை கேட்ட உதய்க்கு அதிர்ச்சி தாளவில்லை.. ஆனாலும் அவன் அமைதியாக இருக்க அவனது பார்வை சுமியின் மீதே இருந்தது..
” சரி அப்போ கல்யாணத்த வர மூகூர்த்ததுல வச்சிக்கலாம் . நான் போய் மூகூர்த்ததுக்கு நேரம் பாக்குறேன் ” என்று சொல்லி மஹாலிங்கம் வெளியே சென்றார்..
[the_ad id=”6605″]
சிறியவர்கள் எல்லாம் இருக்க ஜீவா கேளுங்க என்று கண்ணால் சொல்ல அவனும் கேட்கிறேன் என்பது போல் சொல்லிவிட்டு
சுமியிடம் “நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேக்கணும் அதுக்கு நீ உண்மைய மட்டும் தான் சொல்லனும் சுமி ” என்று உதய் சொல்ல..
“சரி கேளு டா நான் சொல்றேன்” என்று விபரீதம் தெரியாமல் பேச
“சரி அப்போ எனக்கு சத்தியம் பண்ணு அப்போ தான் கேள்வி கேப்பேன் ” என்றிட அவளும் சத்தியம் செய்தாள்..
ஜீவா அத குடு என்று சொல்ல அவனும் பத்திரமாக வைத்திருந்த அந்த பொருளை அவனிடம் தர அதை பார்த்த சுமிக்கு பயமாக இருந்தது….
உதய் சூர்யாவின் புகைப்படத்தை காட்டி ” உனக்கும் சூர்யாவுக்கும் என்ன சம்பந்தம்..??உனக்கு எப்படி சூர்யாவ தெரியும் “என்று கேள்வி கனல்களை கேட்க..
நந்தினிக்கு அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாக இருந்தது…
சுமி அமைதியாக இருக்கவே உதய் சற்று குரல் உயர்த்தி இப்போ சொல்ல போறியா இல்லையா என்று கடுமையாக பேசிட…
அதில் பயந்த சுமி ” நான் சொல்றேன் ” என்று கூற தொடங்கினாள்…
தேடல் தொடரும்…???
?????????????????????
Stay tuned….✌️✌️✌️✌️