உனக்கும் சூர்யாவுக்கும் என்ன சம்பந்தம் சூர்யாவ உனக்கு எப்படி தெரியும் சொல்லு சுமி என்று உதய் சற்று கோபமாக கேட்க..
” நான் சூர்யா முதல பார்த்தது லண்டன்ல தான் ” என்று சொல்லி மூன்று வருடத்திற்கு முன் நடந்ததை கூற தொடங்கினாள்…
மூன்று வருடத்திற்கு முன்பு..,,,
” ஹே சீக்கிரம் எல்லாரும் வாங்க டி நாளைக்கு போடுறதுக்கு ட்ரெஸ் எடுக்கனும் ல நீங்க இப்படி லேட் பண்ணா என்ன தான் பண்றதோ ” என்று சைந்தவி கத்திக் கொண்டு இருக்க…
” நான்லாம் ரெடியா தான் இருக்கேன் பா உன்னோட பெஸ்டி தான் இன்னும் கிளம்பிட்டு இருக்காங்க .அவகிட்ட போய் கத்து என்கிட்ட கத்தாத ” என்றபடி வந்து நின்றாள் மெர்லின்.
“சரி சரி கொச்சிக்காத இரு அவள போய் கூட்டிட்டு வந்தறேன் ” என்று சொல்ல அதற்குள் ” அதுக்கெல்லாம் அவசியமே இல்லை டி நானே வந்துட்டேன் ” என்றபடி சுமி வெளியே வந்தாள்..
” ஏன் டி இவ்வளோ நேரம் பண்ற ஒரு இடத்துக்கு கிளம்புறதுக்கு ” என்று சைந்தவி அவளை திட்ட சுமி ஈஈஈஈ என இழித்து வைத்து அதுவா தூங்கிட்டேன் டி என்றாள்..
” சரி இப்பவாச்சும் கிளம்பி வருவீங்களா மேடம் ” என்று மெர்லின் கேட்க ” அச்சோ நான் இன்னும் சாப்பிடலேயே டி. அப்புறம் என்னோட ஸ்டோமக்கு பசிக்குமே என்று குழந்தை போல் சொல்ல
” ஒழுங்கா வந்துடு டி ” என்று மெர்லின் கத்த
“வாடி உனக்கு அந்த மால்ல எதாவது வாங்கி தரேன் ” என்று சைந்தவி கூற “அப்போ ஓகே டி நான் வரேன் ” என்று கிளம்ப
மூவரும் சேர்ந்து வெஸ்ட் ஃபீல்ட் சென்றனர். நாளை நடக்க போகும் அவர்களது ஆர்க்கிடெக்ட் அண்ட் டிசைனிங் லெவல் இன்டர்நேஷனல் காம்பெட்டிஷன் நடக்க போகிறது. இதில் பல்வேறு கம்பெனிகள் கலந்துக் கொள்ள உள்ளனர்.. சுமி படிக்கும் கல்லூரியில் நடக்க போவதால் அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவ மாணவிகளுக்கும் இதில் வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் வெள்பவர்களுக்கு அந்த கல்லூரி மாணவர்களுக்கு ஒருவாரம் வகுப்பு எடுக்கவும் அந்த கல்லூரியுடன் டையப் வைத்துக் கொள்ள வாய்ப்புண்டு என்று அறிவுறித்தயது…
மூவரும் அங்கே உள்ள பல கடைகளுக்கு சென்று ஆடைகள் பார்க்க எதுவும் அவர்களுக்கு பிடித்தமானவையாக இல்லை..
சுமி ஒவ்வொரு கடையாக பார்த்துக் கொண்டு வர ஒரு கடையில் பொம்மைக்கு மாட்டி விட பட்ட ஆடை அவள் கண்களை பறிக்க அதை பார்த்த படியே அந்த கடையினுள் சென்றாள்..
அதே நேரம் அந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் அதை எடுத்துக்கொண்டு செல்ல எத்தனிக்கையில் ” எக்ஸ் க்யூஸ் மீ ” என்று சுமி அழைக்க அந்த ஊழியரும் திரும்பி பார்த்தான்..
” எஸ் மேம் வாட் டூ யூ வாண்ட் ” என்று கேட்க ” ஐ நீட் திஸ் ப்யூட்டி ஃபுல் ட்ரெஸ் ப்ளிஸ் பேக் திஸ் ” என்று சுமி கூற சைந்தவியும் மெர்லினும் அந்த கடையிலே வேறு பக்கம் சென்று ஆடைகளை பார்க்க தொடங்கினர்…
” சாரி மேம் இந்த சேரிய ஆல்ரெடி ஒருத்தர் வேணும்னு சொல்லிட்டு பொய்ட்டாங்க ” என்று கூற சுமியோ ” உங்க கிட்ட இதே மாதிரி வேற பீஸ் இருக்கா ” என்று ஒரு எதிர்ப்பார்ப்புடன் கேட்க
“இல்ல மேடம் இந்த ட்ரெஸ் ஓரே பீஸ் தான் வந்துச்சி இட்ஸ் எ வெறி ஸ்பெஷல் ட்ரெஸ் இட் வாஸ் டிசைன்ட் பை எ வெறி ஃபேமஸ் டிசைனர் ஜோஸ்மான் ” என்க…
“இது ஜோஸ்மான் டிசைன் பண்ண ட்ரெஸா வாவ் அப்போ இந்த ட்ரெஸ் எனக்கு வேணுமே ” என்று சுமி பிடிவாதம் பிடிக்க…
“சாரி மேம் எங்களால இத உங்களுக்கு தர முடியாது .இன்கேஸ் இத வேணும்னு சொன்னவுங்களே வேணாம்னு சொன்னா தான் உண்டு தான் மேம் இல்லன்னு சொன்னா ஒன்னும் பண்ண முடியாது ” என்க…
“யாரு இந்த ட்ரெஸ் வேணும்ன்னு சொன்னாங்க ” என்றே அவள் கேட்க அதோ அங்க ஃபோன் பேசிட்டு இருக்காருல மேம் அவரு தான் என்று ஒருவரை கைக் காட்டி விட்டு சென்றான் அவன்…
அவன் அருகில் செல்ல செல்ல அவளுக்கு இதயத்தின் துடிப்பு அதிகமானது.
“என்னடா இது இப்படி இதயம் துடிக்கிது . அச்சோ நான் சாக போறேன்னா என்ன “என்று இதயத்தை கை வைத்த படியே அவனிடம் சென்றாள்..
அவன் யாருடனோ மொபைலில் தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தான் .அதை அவனுக்கு தெரியாமலே கவனிக்க தொடங்கினாள்…
“டேய் ஏன் டா இப்படி பண்றீங்க..???நானே இப்ப தான் அவளுக்காக ஒரு ட்ரெஸ் வாங்க வந்துருக்கேன்.அது பொருக்களையா டா உனக்கு உடனே எனக்கு கால் பண்ணி வர சொல்ற ” என்று திட்ட…
” டேய் நாயே உன்ன யாரு டா எங்களுக்கு சமச்சி வைக்காம வர சொன்னது. இங்க இருக்கிற சாப்பாட்ட சாஃப்ட் சாஃப்ட் நாக்கெல்லாம் செத்து போச்சி டா ” என்று அந்த பக்கத்தில் இருந்து விக்ராந்த் கத்த..
“மனுஷன நிம்மதியாவே விட மாட்டிங்க டா இருங்க வந்து தொலையிறேன் . அவளுக்கு ஒரு ட்ரெஸ நிம்மதியா வாங்க விடுறீங்களா எருமைங்களா உங்கள யாரு டா நம்ம ஊர விட்டு இங்க வந்து இருக்க சொன்னது ” என்று திட்ட..
“சீக்கிரமா வா மச்சி உனக்காக காத்திருப்பேன் ” என்று சொல்லிவிட்டு வைத்தான்…
“ச்சை ” என்று திரும்ப அவனுக்கு பின்னாடி இருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுமி அவன் தீடிரென்று திரும்பியதில் பேலன்ஸ் மிஸ் ஆகி கீழே விழ போக அவளது இடையை பிடித்து காத்தது அந்த வலக் கரம்….
சுமி அவனது கண்களையே பார்த்துக் கொண்டிருக்க அவளை தாங்கி நின்றவனோ அவளை முறைத்துக் கொண்டே அவளை நிமிர்த்தி நிறுத்தினான்.
தன் நண்பனின் மேல் இருந்த கோபத்தை சுமியின் மீது காட்ட தொடங்கினான் ..
“அறிவில்ல உனக்கு இப்படி தான் வந்து பின்னாடி நிப்பியா எதுக்காக இப்போ வந்து இப்படி பின்னாடி நிக்கிற அசிங்கமா இல்ல இப்படியா ஒரு ஆம்பல பின்னாடி வந்து நிப்ப ” என்று அவளை திட்ட..
அவன் திட்டியது சுமிக்கு கஷ்டமாக இருக்க அவளது கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது..
இப்போ எதுக்கு இப்படி தேவையில்லாம அழுது சீன் போடுற என்று திட்டியவன் இப்போ உனக்கு என்ன தான் வேணும் சொல்லித்தொல இப்படி என் கண்ணு முன்னாடியே நின்னு இரிடேட் பண்ணிட்டு இருக்காத ” என்று கோபத்தின் உச்சியில் கத்த..
அந்த நேரம் அவளுக்கு பேச தோன்றாமல் போக அதனால் அவனுக்கு சைகையில் மன்னிப்பு கூறிவிட்டு எதற்காக அவனுக்கு பின்னாடி நின்றோம் என்றதற்காக காரணத்தையும் சைகையிலே சொன்னாள்…
இதனை பாராத்த அவனுக்கு கஷ்டமாக போனது இப்படி வாய் பேசாமல் இருப்பவளை திட்டிவிட்டோம் என்று மனதினுளே தன்னை தானே திட்டிக் கொண்டான்…
” சரி உனக்கு என்ன அந்த ட்ரெஸ் தான வேணும் ” என்று இப்போது பொறுமையாக கேட்க அதற்கு சுமி ஆமாம் என்று தலையாட்டினாள்…
“ஓகே அப்போ அந்த ட்ரெஸ நீங்களே வாங்கிக்கோங்க ” என்றவன் அந்த ஊழியரை அழைத்து ” இந்த ட்ரெஸ இவுங்களுக்கு கொடுத்திடுங்க சார் ” என்று கூறி அந்த இடத்தை விட்டு சென்றான்..
பின் சுமி அந்த ட்ரெஸிற்கு பில் போட்டு விட்டு சைந்தவி மெர்லின்க்காக காத்திருக்க அவர்களும் வர மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்…
வீட்டிற்கு வந்தவன் தாறுமாறாக விக்ராந்தை திட்ட “டேய் போதும் டா சூர்யா கொஞ்சம் கேப் விடு .. நீ மொதல சமச்சி கொடு எனக்கு அத நான் சாப்பிட்டுக்கிட்டே பேலன்ஸ் திட்ட வாங்கிகுறேன் ” என்று சொல்ல…
” சோத்து மூட்ட சோத்து மூட்ட ” என்று திட்டிய படியே சமையலறைக்கு சென்று சமைக்க தொடங்கினான் சூர்யா…
அரைமணி நேரத்திலே சமைத்து முடிக்க இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர்…
சாப்பிடும் போது மாலில் நடந்த நிகழ்வுகளை விக்ராந்திடம் சூர்யா கூற “ஏன் டா இப்படியா தெரியாத ஒரு பொண்ண திட்டுவ ஏதோ அந்த பொண்ணு நல்ல பொண்ணா இருக்க போய் உன்ன சும்மா விட்டுறுக்கா இல்லன்னா இன்னைக்கு நீ கம்பி எண்ணிட்டு இருக்க வேண்டியது தான் ” என்று திட்ட…
“நான் என்ன டா பண்றது உன்மேல இருந்த கோபத்த அந்த பொண்ணு மேல காட்டிட்டேன். அட்லீஸ்ட் நான் ஒரு சாரியாவது சொல்லிருக்கனும் ” என்று வருத்தப்பட “சரி விடு மச்சி பாத்துக்கலாம் ” என்று விட்டு சென்றான்…
சூர்யா அடுத்த நாள் தேவைக்கான வேலையை கவணிக்க தொடங்கினான்…
இங்கே சுமியோ வீட்டிற்கு வந்தவுடன் வேகமாக அவளது அறைக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டாள்…
” இவளுக்கு இப்போ என்ன ஆச்சி டி ” என்று மெர்லின் சைந்தவி காதினுள் கேட்க
” தெரியல டி நல்லா தான் இருந்தா இப்போ என்ன ஆச்சின்னு தெரியல ” என்றாள்..
அறைக்குள் வந்த சுமி படுக்கையில் அமர்ந்துக் கொண்டு காலை மடக்கிய படி அதில் தலையை மறைத்து வைத்து அழுகத் தொடங்கினாள்..
இரவு நேரம் வர சமையல் ஆள் வந்து சமைத்து விட்டு சென்றனர்.. இருப் பெண்களும் சுமிக்காக காத்திருக்க அவள் அறை கதவை திறக்கவே இல்லை…
சைந்தவி எழுந்து “இரு டி நான் போய் பாத்துட்டு வரேன் ” என்று சொல்ல அதற்குள் சைந்தவிக்கு அழைப்பு வர அதை பார்த்தவளின் கண்களில் புன்னகை பூக்க “என்ன விக்கி அண்ணாவா ” என்று அவளை பார்த்து கேட்க ” ஆமா டி ” என்றாள்..
சரி அப்போ நீ அண்ணா கிட்ட பேசு நான் போய் அவள கூட்டிட்டு வரேன் என்று சுமியின் அறை நோக்கி சென்றாள்…
சுமியின் அறை கதவை மெர்லின் தட்ட சுமி வந்து கதவை திறந்து விட்டு போய் அமர்ந்துக் கொண்டாள்…
அவள் முகத்தை பார்த்த மெர்லின்க்கு தெரிந்தது அவள் அழுதிருக்கிறாள் என்று..
இப்போ எதுக்கு இப்படி அழுதிருக்கிற சுமி என்ன ஆச்சி உனக்கு என்று அக்கறையாக கேட்க மெர்லின் தோளில் சாய்ந்து அழுகத் தொடங்கினாள்..
அவள் அழுது முடிக்கட்டும் என்று பொறுமையாக இருந்தவள் அவள் அழுகை குறைந்தவுடன் ” என்ன ஆச்சி டி ” என்று கேட்க
சுமி அவளிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினாள்..
” இதுக்கெல்லாம் நீ இவ்வளவு ஃபீல் பண்ற ஆல் இல்லையே டி” என்க ” அதான் தெரில டி ஆனா அவன் திட்னது எனக்கு ரொம்பவே காய படுத்திடுச்சி டி ” என்றே அழுக
அவளை சமாதானம் பண்ணி சாப்பிட அழைத்து வந்தாள் மெர்லின் அதற்குள் சைந்தவியும் போன் பேசிவிட்டு வர மூவரும் சாப்பிட்டு விட்டு உறங்க சென்றனர்..
அடுத்த நாள் காலை விடியல் அருமையாக இருக்க..,, மூவரும் கல்லூரியில் நடக்க இருக்கும் போட்டிக்கு கிளம்பி கொண்டு இருந்தனர்…
காலை ப்ரேக் ஃபாஸ்ட்டிற்கு மூவரும் பிரட் டோஸ்ட் ஆம் ஆம்ளெட் சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு கிளம்பினர்…
கல்லூரிக்கு வந்த சுமி நேற்று நடந்த அனைத்தையும் மறந்து சந்தோஷமாக இருந்தாள் அவளது தோழிகளுடன்…
காம்பெட்டிஷன் தொடங்க ஒரு புறம் டிசைனிங் காம்பெட்டிஷன் நடக்க அதற்கு எதிர் புறம் ஆர்கிடெக்ட் சம்மந்தமான காம்பெட்டிஷன் நடந்தது..
சுமி மகிழ்ச்சியாக அவள் டிசைன் செய்த ஆடைகளை எல்லாம் வரிசை படுத்தி வைத்தாள்….
அவளது மகிழ்ச்சி எல்லாவற்றையும் போக்கும் வகையில் அவளுக்கு எதிர் புரத்தில் சூர்யா அவனது டிசைனை அனைவரது முன்பிலும் வைத்திருந்தான்…
சுமி பயத்தில் மெர்லின் கைகளை இறுக்க பற்றிக் கொண்டாள்.
~தேடல் தொடரும்…???
?????????????????????
Stay tuned….✌️✌️✌️✌️