?உண்மையில்
என் உயிர்
நீதான்
என்றாய்..
கண்ணீருக்கு
காரணமும்
நீயாகவே
இருந்தாய் ?
உதய் மற்றும் சூர்யா என இருவரின் முகத்திலும் இருக்கமே இருக்க பெண்கள் இருவரும் முகத்தில் எந்த ஒரு உணர்வையும் வெளிக்காட்டாமல் நின்றிருந்தனர்..
கங்காவின் அதிர்வை கண்டு அனைவரும் அவரின் பார்வை செல்லும் இடத்தை நோக்க அங்கே மண மேடையில் மணமக்களாய் உதய் மற்றும் நந்தினி நிற்க அதற்கு பக்கத்தில் சூர்யா மற்றும் சுமித்ரா நின்று கொண்டிருந்தனர்..
அனைவருக்கும் அதிர்சசியே எப்படி பெண்கள் மாறியது என்று ஆனால் சிறியவர்கள் அனைவருக்கும் இது தெரியும் என்பதால் அமைதியாக இருக்க மணப்பெண்களை தவிர அனைவருக்கும் குழப்பமே நிறைந்தது. கல்யாணத்திற்கு வந்த அனைவரையும் வெளியே அனுப்பி வைத்தனர்..
கொதித்தெழுந்த கங்கா வேகமாக மண மேடைக்கு வந்தவர் சுமியின் புஜத்தை பிடித்து ” எவனோ ஒருத்தனுக்கு புள்ளைய பெத்துட்டு எப்படி உன்னால என் பையன கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சது” என்று கோபத்துடன் கேட்க…
விழிகளை விரித்த சுமி பக்கத்தில் இருக்கும் தன்னவன்னை நோக்க அங்கே இறுகிய முகத்துடன் சூர்யா நின்றிருந்தான். நந்தினிக்கோ மயக்கம் வராத குறை தான்.
லேசாக தல்லாடா அவளை தாங்கி பிடித்த உதய் ” நிதி மா பாத்து நில்லு ” என்றவன் அவளின் கரத்தோடு அவன் கரத்தை சேர்த்து பிடித்துக் கொண்டான்…
சுமி அமைதியாக இருக்கவே கோபம் வரவே இதற்கான காரணம் எல்லாம் நந்தினியாக தான் இருக்கும் என்று தவறாக எண்ணி அவளிடம் சென்றார்…
“இப்போ உனக்கு சந்தோஷமா டி நான் உனக்கு செஞ்சதுக்கு இப்படி என் பையன் வாழ்க்கையோட விளையாடிட்டல அவனுக்கு போய் இப்படி பட்டவள கட்டி வச்சி என் குடும்பத்த அசிங்க படுத்திட்டல ” என்று திட்டி நந்தினியான உதயின் நிதியை கை நீட்டி அடிக்க கையை ஓங்க நந்தினியோ பயத்தில் உதய் பற்றி இருந்த கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்…
அடி வில்லாமல் இருக்கவே மெதுவாக கண்ணை திறந்து பார்க்க அங்கே உதய் கங்காவின் கையை பிடித்த படி நின்றான் .
” இங்க பாருங்க இவ ஒன்னும் இப்போ வெறும் நந்தினி இல்ல இப்போ அவ மிஸஸ் .நந்தினி உதய் கிருஷ்ணன் அத ஞாபகம் வச்சிக்கோங்க . யார கை நீட்டி அடிக்கிறோம்னு இருக்கு .இவள அடிக்கனும் நினைச்ச உங்கள அழிச்சிட்டு போக ரொம்ப நேரம் ஆகாது ஆனா நீங்க என் சுமியோ மாமியார் அதுவும் இல்லாமல் என் மனைவியோடு அத்தையா பொய்ட்டிங்கன்னு விடுறேன் ” என்று அழுத்தம் திருத்தமாக கூறி அவரின் கையை விடுவித்தான். நந்தினியோ அவனையே பார்த்துக் கொண்டு அப்படியே சிலை போல் நின்றிருந்தாள்.
கங்காவிற்கு கோபம் ஆற்றாமை என அனைத்தும் சுமி மீதே திரும்பிட அனைவரும் தன்னை பார்த்து சிரிப்பது போல் உருவக படுத்திக் கொண்ட கங்கா சுமியை நோக்கி அடி எடுத்து வைத்தார் .அவள் கழுத்தில் மஞ்சள் நிறத்தில் மின்னிய அந்த பொன்தாலியின் மேல் கையை வைக்க திடுக்கிட்ட சுமி ” அத்த என்ன பண்றீங்க ” என்று பதறிட
“யாருக்கு யார் அத்தை உன்னை போல எவனோ ஒருத்தனுக்கு புள்ளைய பெத்தவளாம் எனக்கு மருமகளா ஆக முடியாது ஒழுங்கு மரியாதையா இத கழட்டு டி” என்று கத்த
அதுவரை இறுக்கத்துடன் அமைதியாக இருந்த சூர்யா ” அந்த எவனோ ஒருத்தன் வேற யாரும் இல்லை அது இந்த சூர்யா தான் போதுமா ” என்று மண்டபமே அதிரும் படி கத்தினான்..
அதனை கேட்ட அனைவரும் அதிர்ந்து நிற்க அதற்குள் உதய்க்கு போன் வர நந்தினியிடமிருந்து பிரிந்து சூர்யாவிடம் வந்தவன் அவன் காதில் ஏதோ சொல்ல இறுக்கத்துடன் இருந்த முகம் இப்போது கொஞ்சம் தெளிவாக மாறியது…
உடனே இருவரும் கிளம்ப எத்தனிக்க சூர்யா சுமியையும் உதய் நந்தினியையும் பார்க்க அவர்கள் எதுவும் அறியா பிள்ளை போல் முகத்தை வைத்தபடி இருவரையும் பார்த்து அதிர்ச்சியுடன் நிற்க
அவர்களிடன் வந்த இருவரும் அவர் அவர்களது மனைவியை அழைத்துக்கொண்டு வேகமாக மருத்துவமனைக்கு சென்றனர்..
சிலையென இருந்த இரு பெண்களும் அவர்களை அழைத்த அழைப்புக்கு வந்த பின்பும் அமைதியாக இருக்க உதய் இரு பெண்களையும் பார்த்து ” ரெண்டு பேரும் கொஞ்சம் இறங்குறீங்களா ” என்று அத்தடலாக கூறி இறங்க இருவரும் அப்போதே சுயநினைவு பெற்று எங்கிருக்கிறோம் என்று பார்வையை சுற்றி முற்றி பதிவிட அது மருத்துவமனை என்றதும் இருவரும் ஒன்னும் புரியாமல் இறங்கி உதய் சூர்யா பின்பு சென்றனர்.
சூர்யா நேராக ஆப்ரேஷன் தேட்டர் அருகே செல்ல அவன் பின்னே உதயும் சென்றான். சுமியும் நந்தினியும் பயத்துடனே சென்றனர்.
நால்வரும் அங்கே செல்ல அவர்களுக்கு முன்பு ஜீவா வெங்கடேஷ் கார்த்திக் என மூவரும் நின்று தீவிரமாக பேசிக் கொண்டு இருக்க சூர்யாவும் உதய்யும் அவர்களுடன் சேர்ந்துக் கொள்ள சுமி நந்தினி அமைதியாக நிற்க ஆப்ரேஷன் தேட்டரில் இருந்து ஸ்ட்ரச்சர் மூலம் ஆக்ஸிஜன் அணிந்து தலையில் கட்டுடன் படுத்தப்படி வெளியே செவிலியர்கள் அழைத்து வர அதனை கண்ட இருவரும் அதிர்ச்சிக் கொண்டு கதற தொடங்கினர்…
மண்டபத்தில் கங்கா சிலைப் போல் நிற்க சிவசங்கரன் அவரின் தோல் மேல் கைப் வைக்க அவரோ உடைந்து அழுகத் தொடங்கினார்..
” என்னங்க நம்ம பையன் என்ன சொல்லிட்டு போறாங்க. அவன் ஒன்னும் நம்ம கிட்ட பொய் சொல்லையே ” என்று இதெல்லாம் பொய்யாக இருக்க கூடாதா என்று மனதில் வேண்டியபடி கங்கா கேட்க சிவசங்கரன் அமைதியாக நிற்கவே ” அக்கா “என்ற படி மரகதம் கூற சுஜி அவரது வீல் சாரை இழுத்துக் கொண்டு அவரிடம் வந்தாள்..
“அக்கா நீங்க இப்படி இருக்காதீங்க கா எதுவா இருந்தாலும் தம்பிக்கிட்ட கேக்கலாம் அக்கா ” என்று சமாதானம் படுத்த முயல கண்களை துடைத்த கங்கா எழுந்து “இப்போ சூர்யா எங்க..??” என்று கடுமையான குரலில் கேட்க..
” அத்தான் எங்க போனாங்கன்னு தெரியல அத்த ” என்று சுஜி மெதுவாக பயத்தில் கூற
“இப்போ அவன் இங்க வரனும் ” என்று அழுத்தம் திருத்தமாக கூற ஹரி முன் வந்து ” அண்ணா இப்போ எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியும் வாங்க ஆண்டி நான் கூட்டிட்டு போறேன்” என்று சொல்ல அனைவரையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றான்..
இங்கே சுமியும் நந்தினியும் படுக்கையில் தலையில் கட்டுடன் இருந்த ஜான்வியை கண்டு பதறி போய் அவளிடம் சென்றனர்.
பெற்ற மனமோ முதன் முதலில் அவளுக்காக தவித்து களங்கியது. வளர்த்த மனமோ துடி துடித்து போனது..
ஜான்வியை செவிலியர்கள் இருவரும் ஜென்ரல் வார்டிற்கு மாற்ற அதற்குள் பெரியவர்கள் கீர்த்தி சுஜி கவி என அனைவரையும் அழைத்து வந்திருந்தான் ஹரி..
“இங்க என்ன நடக்குது ஜானு குட்டிக்கு என்ன ஆச்சி அவளுக்கு எப்படி இப்படி நடந்துச்சி சொல்லுங்க ” என்று நந்தினி கேட்டு அவர்களை நோக்க
அவர்களோ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவே ” இப்போ சொல்ல போறீங்களா இல்லையா ” என்று நந்தினி கத்த சுமி அமைதியாக எதுவும் பேசாமல் வெறித்த படி நின்றிருந்தாள்..
” சொல்லுங்க அத்தான் என் பொண்ணுக்கு என்ன ஆச்சி அப்பு நீயாவது சொல்லு குட்டிக்கு என்ன ஆச்சின்னு ” என்றவள் உதயிடம் திரும்பி ” சார் என் பொண்ணு என் பொண்ணுன்னு சொல்லுவீங்களே சார் அவளுக்கு எப்படி இப்படி அடி பட்டுச்சி சொல்லுங்க ” என்று அவன் சட்டை காலரை பிடித்து அழுத படி கேட்க சூர்யாவே இதை கூறட்டும் என்று உதய் அமைதி காத்தான்…
” எதுக்கு எல்லாரும் அமைதியா இருக்கீங்க நான் தான் கேடு கெட்டவ அதுக்காக என் பொண்ணுக்கு என்ன ஆச்சின்னு கூட சொல்ல மாட்டிங்களா ” என்று இதுவரை அமைதியாக இருந்த சுமி பத்ரகாளியாய் மாறி கத்த அதில் கவி பயந்து போக அதை கண்ட ஜீவா அவளிடம் சென்று அவளின் கையினை கெட்டியாக பிடித்துக் கொண்டான்..
” உங்க ரெண்டு பேரோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்” என்று சொல்லி சூர்யா அழுகத் தொடங்க யாரும் அவனை சமாதானம் படுத்த முயலவில்லை எல்லாம் அவனின் பாரத்தை இறக்கட்டும் என்று அமைதி காத்தனர். கங்காவோ அவனின் பதிலுக்காக அமைதியாக நின்றிருந்தார்..
நேராக சுமியை நோக்கி சென்ற சூர்யா அவளின் கையினை பிடித்து தன் கைகளுக்குள் கோர்த்தவன் ” என்ன மன்னிச்சிடு மித்ரா உன்னோட நிலைமைக்கும் நம்ம பொண்ணு நிலைக்கும் நான் தான் நான் மட்டும் தான் காரணம் ” என்று சொல்ல சுமியோ அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள்..
” நீங்க எப்படி காரணம் ஆவீங்க சூர்யா இது எல்லாம் நான் பண்ண பாவத்துக்கு கிடைச்சது . யாரோடோ குழந்தையை நீங்க ஏன் உங்க தலை மேல தூக்கி போட்டுக்கணும் சொல்லுங்க ஆல்ரெடி நான் என் உயிர் நண்பன் உதய் வாழ்க்கை கெடுத்தேன் இப்போ நீங்களா ” என்று அமைதியாக அதே நேரம் அழுத்தம் திருத்தமாக கூறி அவனை பார்த்தாள்…
” நீ சொல்ற மாதிரி ஜான்வி ஒன்னும் யாரோ பெத்த குழந்தை இல்ல நமக்கு பிறந்த குழந்தை தான் அவ எனக்கே அது நேத்து தான் தெரிய வந்துச்சி அதுவும் உதய் ஜீவா மூலம் தான். உன்ன இந்த நிலைமைக்கு காரணம் நான் தான் ” என்றவன் கண்ணீர் சிந்த…
“சூர்யா ” என்று அழுகையுடன் அணைத்துக் கொள்ள அங்கே பெரித்த மௌனம் நிலவியது..
சுமியை தன்னிடம் இருந்து பிரித்தவன் நேற்று நடந்ததை கூறத் தொடங்கினான். உதய் அவன் தோல் பட்டையை பிடித்தான் ஆதர்வாக …
இரவு பதினொரு மணி இருக்கையில் ஜான்வி அறையில் அழுதுக்கு கொண்டு இருக்க இதனை அந்த வழியே சென்ற சூர்யா காண நேர்ந்தது…
அறையினுள் வந்தவன் அழுதுக்கு கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தான்…
” என்ன ஆச்சி குட்டிக்கு ” என்று அவளது தாடையை பிடித்து கெஞ்ச
” எனக்கு சாக்கி வேணும் என்னோட சாக்கிய காணோம்” என்று கூறி அழுக..
” இதுக்கு தான் குட்டிமா அழுகுறீங்களா . நான் உங்களுக்கு நாளைக்கு வாங்கி தருவேணாம் நீங்க அமைதியா இப்போ போய் தூங்குவீங்கலாம் ” என்று சொல்லி சமாதானம் படுத்த முயல குழந்தையோ ” எனக்கு இப்போ வேணும் ” அழுதிட
” சரி சரி குட்டிமாக்கு இப்ப சாக்கி வேணும் அவ்ளோ தானே இரு ” என்றவன் அந்த வழியே சென்ற ஜீவாவை அழைத்து ” ஜானு குட்டிக்கு எங்க இருந்தாவது சாக்லேட் வாங்கிட்டு வா ” என்றவன் எங்கிருந்தாவது என்றதில் அழுத்தம் திருத்தமாக கூறி அனுப்பி வைத்தான்…
ஜானு வின் அழுகை அப்போதே நின்று அவளின் இதழில் புன்னகை தழுவியது. நேரம் ஆகுவதால் ஜானு அடம்பிடிக்கவே அவளை வெளியே அழைத்து வந்தான் சூர்யா..
இருவரும் ஓடி பிடித்து விளையாண்டுக் கொண்டு இருக்க அங்கே உதய் வந்து நின்றான்..
“அப்பா ” என்று ஓடிச் சென்று அவனின் கால்களை பிடித்துக் கொள்ள “ஜானு குட்டி இங்க என்ன பண்றீங்க ” என்று அவளின் உயரத்திற்கு ஏற்ப குனிந்து படி கேட்க
” அப்பா நானும் சூர்யா அங்கிலும் விளையாட்டிட்டு இருக்கோம் பா ” என்றாள் .
” அங்கில் இல்ல டா அப்பான்னு சொல்லனும் சரியா ” என்று மனதில் எதையோ நினைத்த படி சொல்ல ஜானுவும் ” சூர்யா அப்பா ” என்று கூறியது…
” சரி டா நீங்க விளையாடுங்க நான் கொஞ்சம் சூர்யா அப்பா கிட்ட பேசிட்டு வரேன் ” என்று அவளை அனுப்பி வைத்தவன் ” சூர்யா நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ” என்று சற்று தயங்கியவாறே கூற
” பேசலாமே உதய் ” என்று அவனை தனியே அழைத்து வந்து ” இப்போ சொல்லுங்க உதய் என்கிட்ட பேசணும் ” என்று கைகளை கட்டியவாறு கேட்க
” இந்த விஷியம் உங்களுக்கு ஷாக்கிங்கா இருக்கும் சூர்யா பட் நான் சொல்ல போறது ரொம்பவே இம்பார்டன்ட் நீயுஸ் அது நம்ம வாழ்க்கையையே மாத்தி போட போகுது ” என்று சொல்லி அவனை பார்க்க அவனோ விழிவிரித்து நின்றிருந்தான் எங்கோ பார்த்த படி
அவனின் பார்வை சென்ற இடத்தை நோக்க அங்கே ஜானு எதிரில் வந்துகொண்டிருந்த ஜீவாவை நோக்கி ஓடி வர அதே நேரத்தில் ஒரு லாரி வேகமாக வரவும் அந்த வண்டி அவளை ஏத்தி செலவும் சரியாக இருந்தது.
இருவருமே ” ஜானு குட்டி ” என்று கத்தியவாறு அவளை நோக்கி ஓடி வந்து தரையில் இரத்தத்தில் மிதந்த ஜானுவை அளிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர்…
கார்த்திக்கிற்கு அன்று நைட்டு டுயூடி என்பதால் அவன் மருத்துவமனையில் இருக்க ஜானுவை உடனே அட்மிட் பண்ணி ஆப்ரேஷன் தேட்டர் அழைத்துச் சென்றனர்..
சிறிது நொடிகளிலேயே வெளியே வந்த செவிலியர் ” பாப்பாவுக்கு O நெகட்டிவ் பிளட் அது இப்போ எங்க கிட்ட ஸ்டாக் இல்ல . சோ நீங்க கொஞ்சம் தெரிஞ்சவுங்க யாராவது இருந்தா ப்ளிஸ் ஹெல்ப் பண்ண சொல்லி கேளுங்க இட்ஸ் அர்ஜன்ட் ” என்று சொல்லி துரித படுத்த விரும்பி முடிக்க “சூர்யா உங்களால ப்ளட் கொடுக்க முடியும் நீங்க தானே அவளோட அப்பா அப்போ கண்டிப்பா ஒரே ப்ளடா தான் இருக்கும் ” என்று வேகமாக உதய் கூற சூர்யா அதிர்ச்சி அடைந்தான் .
” என்ன சொல்றீங்க உதய் நான் எப்படி ஜானுக்கு அப்பா ஆவேன் ” என்று அதே அதிர்வுடன் கேட்க
“இப்போ இது கேட்க டைம் இல்ல சூர்யா நீங்க போய் ப்ளட் கொடுத்துட்டு வாங்க ” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தான்.
சூர்யாவும் சிறிது நேரத்திலே ப்ளட் கொடுத்துவிட்டு வெளியே வர ஜான்விக்கான ஆப்ரேஷன் கார்த்திக் முலமாக நடக்கத் தொடங்கியது…
வெளியே வந்த சூர்யா உதயிடம் வந்து ” இப்போ சொல்லுங்க உதய் நீங்க அப்போ என்ன சொன்னீங்க” என்று அந்த நேரத்திலும் தன்னை திட படுத்திக் கொண்டு கேட்க…
உதய் ஜீவாவை பார்த்து ” போய் அவுங்கள கூட்டிட்டு வா ” என்று சைகை செய்ய அவனும் உதயினது மனதை அறிந்த படி அவர்களை அழைத்து வந்தான்.
வந்தவர்களை கண்ட சூர்யாவிற்கு அதிர்ச்சியாகவும் அதே நேரத்தில் சந்தோஷமாகவும் இருந்தது.
” விக்கி சைந்து ” என்று அவன் உதடுகள் தன்னிச்சையாக உதிர்க்க விக்கி அவனை ஓடிச் சென்று அனைத்துக் கொண்டான்.
“நீங்க எப்படி டா இங்க ” என்று வினவ ” உங்களோட கேள்விக்கான பதில் இவுங்க கிட்ட தான் இருக்கு ” என்றான் உதய்..
உதய் கூறியதை கேட்டு சூர்யா இருவரையும் பார்க்க அவர்களுக்கு பின்பு பயத்துடன் மெர்லினும் காயத்தின் சுவடுகளோடு ஜோமனும் வந்திருந்தனர்..
ஜோமனை கண்டவனின் முகம் அஷ்ட கோனலாக மாற ஜோஸ் அவன் காலில் விழுந்து மன்னித்து விடும் கேட்டான்.
” இங்க என்ன தான் நடக்குது ” என்று தள்ளி நின்று கேட்க ” வினர்ஸ்காக ஒரு பார்ட்டி வச்சிருந்தாங்களே நீ கூட அன்னைக்கு ரொம்ப அதிகமா குடிச்சிருந்தியே டா ” என்று விக்ராந்த் சொல்ல ” ஆமாம் இப்போ அதுக்கு என்ன ” கேள்வியுடன் அவனை நோக்க…
அன்னைக்கு என்ன நடந்துச்சி தெரியுமா நீ ரொம்ப குடிச்சிருந்த அதுனால அந்த ஹோட்டலையே ஒரு ரூம் புக் பண்ணி உன்ன அங்க படுக்க வச்சிட்டு கீழ வந்து பார்க்க சுமிய காணோம் அப்ப தான் மெர்லின் சொன்ன அவ வீட்டுக்கு போய்டான்னு அதுனால நாங்க அத சும்மா விட்டுட்டோம் . ஆனா அங்க என்ன நடந்துச்சின்னா உனக்கு பக்கத்து ரூம்ல தான் சுமி மயக்கத்துல இருந்திருக்கா இத கொடுத்ததே மெர்லின் தான். இவனும் மெர்லினும் சேர்ந்து போட்ட ப்லேன் இது . ரெண்டு பேருக்குமே சுமிய பழிவாங்கனும் அதுக்காக சுமியோட பெண்மைய அழிக்கனும் நினைச்சி இப்படி பண்ணிருக்காங்க டா . அதே மாதிரி ஜோஸூம் அவளது அறைக்குள் நுழைஞ்சிட்டான் ஆனா நல்லா விஷியமா அவன் உள்ள போன அடுத்த நொடியே கோபமா ஃபோன் பேசிட்டே வெளியே பொயிருக்கான். ” என்று நிறுத்தியன் உதயிடமிருந்த மொபைலை வாங்கி அதில் இருந்த வீடியோவை ப்ளே பண்ணி காட்டினான்.
சூர்யா கைகள் நடுங்க அதை வாங்கி பார்க்க அதில் சூர்யா அறை போதையில் கதவை திறந்து வெளியே வந்து அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருக்க சிறிது நேரம் கழித்து அவனது அறை எது என்று தெரியாமல் சுமி இருந்த அறையினுள் புகுத்துக் கொண்டான் . இதை அனைத்தையும் பார்த்த சூர்யாவின் கைகள் நடுங்க உதயின் மொபைல் கீழே விழுந்து தெரிந்தது.
“அப்ப அப்ப சுமியோட வாழ்க்கை நாசாமா போனதுக்கு நான் தான் காரணமா ” என்றவன் கதறி அழுக அவனை விக்கியும் உதயும் அனைத்துக் கொண்டனர்.
எதையோ யோசித்தவனாக இருவரையும் விலக்கி விட்டு நிற்க அவன் முன்பு வந்த மெர்லின் மன்னிப்பு கோர அதை துட்சமென பார்த்தவன் ” உன்ன நம்பின அவளுக்கு நீ நல்ல விஷியத்த செஞ்சிருக்க நல்லா இரு மா ” என்று கூறிவிட்டு மணியை பார்த்தவன் மூன்று என காட்ட இன்னும் இரண்டு மணி நேரமே இருந்தது கல்யாணத்திற்கு…
உதயிடம் நெருங்கியவன் ” எனக்கும் சுமிக்கும் கல்யாணம் நடக்கனும் நீ நந்தினிய கல்யாணம் பண்ணிக்கோ தெரிஞ்சோ தெரியாமலோ இந்த மூணு வருஷம் மித்ரா என்னால ரொம்பவே கஷ்ட பட்டுட்டா இனி அவளோட காயத்துக்கு மருந்தா இருக்க போறேன். நமக்கு இப்ப டைம் இல்ல வா போகலாம் ” என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றான்.
இருவரும் மண்டபத்திற்கு வந்த பின் வென்கட்டிடம் அனைத்தையும் கூறி அவனை அனுப்பி வைத்தார்கள் இருவரும் என்று நடந்ததை கூறி முடிக்க அனைவரும் அதிர்ச்சியில் நிற்க சுமியோ உண்மை அறிந்து செய்வதறியாது இருந்தாள்.
அதற்குள் செவிலியர் ஒருவர் வெளியே வந்து “பாப்பாவுக்கு மயக்கம் தெளிஞ்சுடுச்சி ஒருத்தர் ஒருத்தரா வந்து பாப்பாவ பாத்துட்டு போங்க ” என்று சொல்லி செல்ல
ஒரேநேரத்தில் சுமியும் நந்தினியும் ஜான்வியை காண செல்ல இருவருமே கதவின் அருகே சென்றவர்கள் தயங்கி நின்றனர் யார் முதலில் செல்வது என்று..
~தேடல் தொடரும்…