எந்தன் உயிராய்
மலர்ந்த உந்தன்
புன்னகையை
நிமிடத்தில்
கானல் கண்ணீராய்
போனதே கண்மணி?
ஆதியும் சிந்துவும் மருத்துவமனையில் இருந்தனர். சிறிது நேரத்திலே உதய் சரவணனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.
மருத்துவமனைக்கு வந்த சரவணன் ஐசியூவில் உறங்கிக் கொண்டிருந்த ஸ்ருதிக்காவை காணச் சென்றான்.
உள்ளே வந்த சரவணன் ” உனக்கு எப்படி டி என்ன விட்டுட்டு இப்படி தூங்க உனக்கு மனசு வந்துச்சி சொல்லு ” என்று அவளின் முகத்தை பார்த்து கேட்க உறங்கிக் கொண்டிருந்த அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
” நான் எப்போதும் உன்ன விட்டு போக மாட்டேன்னு சொல்லுவியே டி .இப்போ மட்டும் என்ன தனியா தவிக்க விட்டு நீ பாட்டுக்கு நிம்மதியா தூங்கிட்டு இருக்க எழுந்து வா ஸ்ருதி நான் உன்கூட சட்ட போடனும் டி ” என்றவன் கதறி அழுதான்.
” மிஸ்டர் ஆதி நீங்க ரொம்ப டையர்டா இருப்பீங்க நான் எங்க வீட்டு அட்ரஸ் சொல்றேன் .நீங்க ரெண்டு பேரும் போய் அங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க “என்று கூற
” மிஸ்டர் உதய் எங்க ரெண்டு பேரோட நேட்டிவ் இது தான் எனக்கு ஒர்க் மாதினதுனால தான் நாங்க அங்க இருக்கோம். அதுவும் இல்லாம என்னோட மச்சான் என்ன பிக்கப் பண்ண இப்ப இங்க வந்துடுவான் ” என்று சொல்ல
” சரி ஆதி ” என்று நகர பார்க்க
” ஹே உதய் ” என்ற குரலில் அப்படியே நின்றான்.
” டேய் உதய் எப்படி டா இருக்க பாத்து எவ்வளவு வருஷமாச்சி ” என்று அவனை அணைத்து விடுவித்தான்.
” ஹே மச்சி..!!! நான் நல்லா இருக்கேன் செல்வா .நீ எப்படி இருக்க அப்புறம் சிஸ்டர் குழந்தைங்க எல்லாம் எப்படி இருக்காங்க ” என்று கேட்க
” எல்லாரும் நல்லா இருக்காங்க மச்சி ” என்றான் நம் முன்னால் கதை நினைவினில் நிறைந்தவளே நாயகன் செல்வராகவன்.
” இங்க என்னடா பண்ணிட்டு இருக்க ” என்று கேட்க
” ஹலோ ஹலோ நாங்களும் இங்க இருக்கோம் அத்தான் எங்களையும் கொஞ்சம் ஞாபகம் வச்சிக்கிட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் ” என்று சிந்து கூற
” ஹே சிந்து மா இந்த அத்தான் எப்படி உன்ன மறப்பேன் சொல்லு . இவன் என்னோட ஸ்கூல் ஃப்ரேண்டு உதய் கிருஷ்ணன் டா ” என்று அறிமுக படுத்த முயல
” அய்யோ அத்தான் எங்களுக்கு ப்ரோவ ஆல்ரெடி தெரியும். நாங்க இவுங்க கூட இருக்கோம் ” என்றாள்.
ஆதியும் ” ஆமா மச்சி நான் கூட சொன்னேன்ல ஒரு பொண்ணு மிஸ்ஸிங் கேஸ் அது இவுங்களோட இல்லத்துல தான் ” என்றான்.
” ஹோ இப்போ அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சி பரவால்லையா ” என்று கேட்க
“கோமா ஸ்டேஜ்க்கு பொய்டாங்க .இவுங்க எந்திரிச்சா தான் எங்களால நெக்ஸ்ட் ஸ்டேப் மூவ் பண்ண முடியும் ” என்றான்.
ஆதி இவ்வாறு கூறவும் அவனுக்கு இன்று காலையில் நந்தினி கூறியது ஞாபகத்தில் வந்து போனது.
” அப்புறம் உதய் மேரேஜ்லாம் ஆயிடுச்சா உன்னோட நிதி கூட சேந்துட்டியா டா ” என்று கேட்க
” மேரேஜ் முடிஞ்சு ஒரு வாரம் தான் ஆகுது டா ” என்றான் புன்னகையோடு…
” கங்ராட்ஸ் டா அப்புறம் ஏன் டா என்ன உன்னோட கல்யாணத்துக்கு கூப்பிடல ” என்று சிறு கோபத்துடன் கேட்க..
” அட ஏன் டா நீ வேற இந்த கல்யாணத்துல ஒரே பிரச்சனை யார் யாரு கூட சேருவான்னு கடை நிமிஷம் வரைக்கும் இருந்துச்சி. இந்த ஆத்தர் எங்கள ரொம்ப கஷ்ட படுத்தி பாத்துட்டா டா . இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு ” என்றவன் அனைத்தையும் கூறி முடித்தான்.
” சரி டா அதான் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிருச்சில . இனி ஒரு பிரச்சனையும் வராது டா ” என்று ஆறுதல் கூறினான்.
உதய் புன்னகைக்க ” மச்சி நாளைக்கு கண்டிப்பா சிஸ்டர கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வா டா விருந்து வக்கிறோம் ” என்று சொல்ல
” சரி கண்டிப்பா கூட்டிகிட்டு வரேன் ” என்று இருவரும் நம்பர் மாத்திக் கொண்டு விடைப் பெற்று சென்றனர்.
உதயும் மருத்துவரை பார்த்து விட்டு ஸ்ருத்திக்காவை ஊட்டிக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்ய சொல்லிவிட்டு கிளம்பினான்.
மாலை நேரம் வீட்டிற்கு வந்த உதய் அனைவரையும் கிளம்பச் சொல்லி துரித படுத்த ” எங்க கிளம்பனும் “என்று நந்தினி மாடியில் இருந்து கீழே வந்த படி கேட்க
” அத அப்புறம் சொல்றேன் முதல எல்லாம் கிளம்புங்க ” என்றுவிட்டு நந்தினியை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றுவிட்டான்.
” இப்போ நாம எங்க போறோம்னு கொஞ்சம் சொல்லுங்க ” என்று நந்தினி அவனின் கையை பிடித்து நிறுத்தி கேட்க
” எல்லாம் ஒரு நல்ல விஷியத்துக்காக தான் ” என்றவன் அவளை நெருங்கி இருந்தான்.
அதனை உணராத நந்தினி ” நல்ல விஷியம்னா என்னது கொஞ்சம் தெளிவா தான் சொல்லுங்களேன் ” என்றே கேட்க
” அது இப்ப உடனே தெரிஞ்சுக்கனுமா என்ன ” என்றான் சிரிப்புடன்.
இப்போது நந்தினிக்கு இதயம் தாறுமாறாக துடிக்க தொடங்கியது .
” இல்ல வேணாம்” என்று அவனை தள்ளி விட்டு உடை மாற்ற சென்று விட்டாள்.
அவனும் புன்னகையுடன் ஆடை மாற்றி விட்டு வந்து அவளுக்காக காத்திருக்க தொடங்கினான்.அதற்கு வெங்கட்டிடமிருந்து அழைப்பு வரவே அதை எடுத்தான்..
” ஹலோ ” என்று வெங்கட் சொல்லி முடிப்பதற்குள் ” டேய் மச்சி உடனே கிளம்பி வீட்டுக்கு வா டா கொஞ்சம் சீக்கிரமா வா ” என்று வெங்கட்டை பேசவே விடாமல் அழைப்பை துண்டித்தான்.அதன் பின் உதய் கீழே சென்றுவிட்டான்.
” எல்லாரும் வந்தாச்சா ” என்று உதய் கேட்க
” உன் அருமை பொண்டாட்டி மட்டும் தான் இன்னும் பேலன்ஸ் ” என்று சுமி நக்கலடிக்கும் தோரணையில் கூற
” அதோ என் தங்கேமே வந்துரிச்சே ” என்று மேலே பார்த்தவாறு சிவசங்கரன் கூறிய நொடி உதயின் கண்கள் தன் மனைவியை தீண்டியது. அவன் அவளை ஆவென பார்த்துக் கொண்டிருந்தான்.
ஊதா கலர் நிறத்தில் ஆனா டிசைனர் சேரி கட்டி இருந்தாள் அதுக்கு தகுந்தாற் போல் அவளது தோடு கழுத்தில் தொங்கிய புது மஞ்சள் தாலி நெற்றி வகுட்டில் குங்குமம் என அனைத்தையும் கண்டவன் கொஞ்சம் கீழே இறங்கி அவளின் தேன் போல் இருந்த இதழை கண்டான். அதை சுவைக்க தோன்றிய மனதை கட்டுப் படுத்த பெறும் பாடுபட்டான்.
நந்தினியோ அந்த புடவையில் நடக்க முடியாம படி இறங்கி கீழே வர தீடிரென அவளது புடவையில் கால் மாட்டி வில போக அவளின் இடையினை இறுக பிடித்து அவளை கீழே விழாமல் பிடித்துக் கொண்டான்.
அவனின் மீது அவள் பாதியாக நின்றுக் கொண்டிருக்க அவளது நெற்றி அவனின் இதயதினுள் சாய்ந்து மீண்டது . இருவரது கண்களும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்து கொண்டது. இருவரும் இமைக்க மறந்து ஒருவரையொருவர் பார்வையால் காதலை வெளிப்படுத்திக் கொள்ள
” ம்ஷூம் ” என்று இருமல் சத்தம் வரவே இருவரும் சுயநினைவு அடைந்தனர்.
அவளை விலக்கி விட்டவன் ” சரி சரி வாங்க கிளம்பலாம் ” என்று துரித படுத்த சூர்யா இதை பார்த்து விட்டு அமைதியாக சென்று விட்டான்.
உதய் பக்கத்தில் வந்த சுமி ” இப்படியே தான் வர போறியா டா ” என்று அவனை பார்த்து சிரிப்பை அடக்கிய படி கேட்க
” ஏன் இதுக்கு என்ன ” என்று கேட்டு நந்தினியை பார்க்க அவளோ முகச்சிவப்பை கட்டு படுத்த முயன்றுக் கொண்டிருந்தாள்.
” அடேய் இங்க ஃபர்ஸ்ட் நைட்டு ஃபர்ஸ்ட் டே கூட கேள்வி பட்டுறுப்பாங்க டா . ஆனா நீ இப்படியே வெளிய வந்தா ஃபர்ஸ்ட் இவுனிங் இருக்குன்னு தெரிஞ்சுக்குவாங்க ” என்று சொல்லி சிரித்து விட்டு செல்ல
அவனோ சுமியை பேயை பார்ப்பது போல் பார்க்க நந்தினி அவன் சட்டையில் இருந்த குங்குமத்தை பார்த்தாள்.
இப்போது அவளுக்கு சுமி கூறியதன் அர்த்தம் புரிபட சங்கோஜமாக ஃபீல் பண்ணாள்.
” உதய் சார் உங்க சேர்ட்ல ” என்று சொல்ல முடியாமல் சொல்ல
அவளை பார்த்த உதய் ” சட்டைல என்ன ” என்று கேட்க அவனை நெருங்கியவள் குங்குமம் இருந்த இடத்தை தொட்டு காட்டி ” போங்க சார் போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க ” என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டாள் அவளின் நாணத்தை மறைக்க…
சிரித்துக் கொண்டே சென்றவன் ஆடையை மாற்றி விட்டு வந்தான். அதற்குள் வெங்கட் அவனின் வீட்டிற்கு வந்திருக்க பதறி போய் அவனை தேடி உள்ளே வந்தான்.
அங்கே மஹாலிங்கம் அமர்ந்திருக்க அனைவரும் ஏதோ விழாவிற்கு செல்வது போல் கிளம்பி தயராக இருக்க உதயும் வெளியே வந்தான்.
“டேய் மச்சி இங்க என்ன டா நடக்குது எதுக்கு அவ்வளவு அவசரமா என்ன வர சொன்ன ” என்று கேட்க
” இப்போ சொல்ல எனக்கு நேரம் இல்ல டா போர வழில எல்லாத்தையும் சொல்றேன் ” என்றவன் அவனை இழுத்துக் கொண்டு வெளியேறினான். அவன் பின்னே அனைவரும் சென்றனர்.
கார் வேகமாக சென்றது. அனைவரும் எங்கு போகிறோம் என்று தெரியாமலே சென்றார்கள்.
வண்டியை ஓரிடத்தில் நிறுத்தியவன் ” எல்லாரும் இறங்குங்க ” என்று சொல்ல அனைவரும் இறங்கினார்கள்.
இறங்கிய உதய் நந்தினியின் பக்கத்தில் நின்றுக் கொள்ள வெங்கட் அவன் இருந்த வீட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
” வாங்க வாங்க மாப்பிள்ளை ” என்று ராஜதுரையின் குரல் கேட்கவே சுயநினைவு பெற்றான் வெங்கட்.
” ஹான் ” என்று வெங்கட் முழிக்க
” வா மச்சி ” என்று உதய் அவனை அழைத்துச் சென்றான்.
உள்ளே வந்தவர்கள் எல்லாரும் என்னவென்று தெரியவில்லை அமர்ந்திருக்க நந்தினி உதயின் காதில் ” நாம எதுக்கு இப்போ கீர்த்தி வீட்டுக்கு வந்துருக்கோம் உதய் சார் ” என்று கடிக்க
அவளின் வாசனை அவனின் மனதை இழுக்க அந்த காதில் ஆடிய தோடினை ஆட்ட அவனுக்கு ஆசை வந்தது. அவன் அப்படியே அமைதியாக அமர்ந்திருக்க
” சார் ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க ” என்று அவனை உழுக்க சுயநினைவு அடைந்தவன் ” வெங்கிக்கு பொண்ணு பாக்க வந்துருக்கோம் ” என்றான்.
” என்னது ” என்பதுபோல் அனைவரும் அவனை பார்க்க அதை கண்டு கொள்ளாதவன் ” அங்கில் பொண்ண வர சொல்லுங்க ” என்றான் .
” இவன் எதுக்கு இப்படி பண்ணான்னு தெரியலையே . இதுனால தான் அவ என்ன அடிச்சாலா நீ போதும் எனக்கு என்னோட சீக்கிரமாவே எடுக்கிறதுக்கு ” என்று மனதில் கருவிக்கொண்டே அமைதியாக அமர்ந்திருந்தான்.
கீர்த்தி அழகிய பட்டு உடுத்தி கலை இழந்த முகத்துடன் வெற்று புன்னகையுடன் வந்தவள் வந்தவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.
” பொண்ணு நல்லா இருக்கு. இவுங்கள எங்கேயோ பார்த்த ஞாபகம் ” என்று சூர்யாவிடம் கூற
” கீர்த்தி நந்தினியோட தோழி ரெண்டு பேரும் உங்க ஹாஸ்பிடல்ல தான் ஒர்க் பண்ணாங்க ” என்றான்.
ராஜதுரை மாப்பிள்ளையிடன் திரும்பி ” உங்களுக்கு என் பொண்ண புடிச்சிருக்கா தம்பி ” எனக் கேட்க
” அவனுக்கு பிடிச்சு போய் தானே நாங்க உங்க பொண்ண பொண்ணு பாக்கவே வந்தோம் ஆங்கில் ” என உதய் வெங்கட்டை கலாய்க்க கீர்த்தி அவனை முறைத்து வைத்தாள்.
” எல்லாம் என் நேரம்” என்று மனதில் நினைத்து கொண்டான்.
” கீர்த்தி மா உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா ” என்று மரகதம் கேட்க தன் தந்தையையும் தாயையும் ஒரு ஆழ்ந்த பார்வையை பார்த்தவள் ” சம்மதம் ” என்றாள்.
பின்னர் இரு குடும்பமும் தட்டு மாற்றிக் கொண்டு விடைப் பெற்றனர்.
வீட்டிற்கு வந்த அனைவரும் அசதியில் ரெஸ்ட் எடுக்க சென்று விட வெங்கி உதயை இழுத்துக் கொண்டு சென்றான்.
” நீ என்ன பண்ணுறன்னு தெரிஞ்சு தான் பண்றியா டா . ஏற்கனவே கீர்த்தி என்ன ஒரு மாதிரி பாத்துட்டு போ வா இதுல இது வேரையா ” என்று வெங்கட் சொல்ல
” இது தான் உனக்கு பிரச்சினையா மேரேஜ் அப்புறம் உன் கேடக்டர புரிய வை டா” என்றான் உதய் ஹாயாக
” டேய் அது மட்டும் இல்ல கீர்த்தி ஆல்ரெடி ராஜிவ்ன்னு ஒரு பையன லவ் பண்றா அதான் அன்னைக்கு கூட உனக்கு காட்டுனேன்னே ” என்று சொல்ல
” நான் இது எல்லா உன்னோட காதலுக்காக தான் டா பண்றேன் ” என்று விட்டு உதய் செல்ல
” நீ எப்படி உன் காதல்ல இளந்தியோ அந்த மாதிரி அவளோட காதலையும் இழக்க சொல்றியா டா “என்று வெங்கட் கோபமாக கேட்க அதேநேரம் உதயை அழைக்க வந்த அவனின் மனையாள் கேட்க நேர்ந்தது.
உதய் சிரித்து விட்டு சென்றான். நந்தினி அவன் பார்க்கா வண்ணம் மறைந்துக் கொண்டாள்.
இரவு நேரமாகவும் நந்தினியும் சுமியும் இரவு உணவை தயாரித்தனர்.
அனைவரும் சாப்பிட அமர ,,சுமியும் உதயும் பரிமாறினார்கள்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த உதய் நந்தினியை எதார்த்தமாக பார்க்க அவளது முகம் வாட்டமாக இருப்பதை அறிந்துக் கொண்டான்.
” நானும் நந்தினியும் நாளைக்கு நைட்டு ஊருக்கு போலாம்னு இருக்கோம் மானிங் என்னோட ஃப்ரண்டோட வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டுருக்காங்க அந்த பொய்ட்டு வந்தறோம் ” என்று கை கழுவி விட்டு சென்றான்.
உதய் சொன்னதில் வருத்தம் இருந்தாலும் எப்படி இருந்தாலும் போய் தானே ஆக வேண்டும் என்று விட்டு விட்டனர்.
நந்தினிக்கு ஏனோ போல் இருந்தது. சிறிது திங்கள் ஊட்டியில் இருந்தவள் தான். ஆனா இப்போது அப்படி இல்லையே என்று அவள் மனது கடந்து அடித்துக் கொண்டது.
அடுத்தநாள் காலை நந்தினியும் உதயும் செல்வாவின் வீட்டிற்கு சென்று வந்தனர்.
இரவு வேலை வரவும் ” எல்லாத்தையும் பேக் பண்ணிக்கோ தினு மா ” என்றவன் அவனது உடையையும் பேக் செய்தான்.
பின்னர் இருவரும் கிளம்பி வெளியே வந்தனர்.
” அப்புறம் நாங்க கிளம்புறோம் ” என்று சொல்லிவிட்டு கிளம்ப ” டாடி நந்து மா என்ன விட்டுட்டு எங்க போறீங்க ” என்றபடி அறையில் இருந்து வந்தாள் ஜான்வி.
அவளது குரலை கேட்ட இருவரும் அப்படியே நிற்க ” டாடி ” என்றபடி உதயின் கால்லை கட்டிக் கொண்டாள் ஜான்வி.
” டாடியும் மம்மியும் ஊருக்கு பொய்ட்டு வந்தறோம் டா ” என்று அவளை தூக்கி கொஞ்சிய படி சொல்ல
” நானும் வரேன் என்னையும் கூட்டிட்டு போங்க ” என்று அழுக
” நானும் அம்மாவும் கண்டிப்பா உன்ன கூட்டிட்டு போக வரோம் பா ” என்று சொல்லி முடிப்பதற்குள் ” யார் குழந்தைய யார் கூட்டிட்டு போறது ” என்றபடி கங்கா குழந்தையை அவனிடமிருந்து பறித்துக் கொண்டார்.
” அம்மா என்ன பண்றீங்க ” என்று சூர்யா முன்னே வர
” நீ அமைதியா இரு டா ” என்று அவனை அதட்டி வைத்தார் கங்கா.
” இது நீ பெத்த புள்ள உன்கிட்ட இருக்கனும் உன்னையும் சுமியையும் தான் அம்மா அப்பான்னு கூப்பிடனும். ஆனா இங்க எல்லாம் தலை கீழா இருக்கு. யார் யாரையோ அம்மா அப்பான்னு சொல்றதா ” என்று வார்த்தை துப்ப
உதய்க்கு தான் கஷ்டமாக போனது. அதுவரை அமைதியாக இருந்த நந்தினி பொங்கி எழுந்தாள்.
” உங்க பையன் பண்ண தப்புக்கு மூணு வருஷமா என் புருஷன் தான் கஷ்ட பட்டாரு. அப்ப எங்க போனாறு உங்க பையன். தனக்கு மூணு வயசுல பொண்ணு இருக்கு கூட இத்தனை வருஷம் தெரியல. இப்போ சொல்லிக்கிறீங்களே இவரு தான் அப்பான்னு அதவே என் புருஷனும் அப்புவும் தான் கண்டு புடிச்சது. உங்களுக்கு இவர பத்தி ஒரு வார்த்த கூட பேச தகுதி இல்லை ” என்றவள் அவனின் கை பிடித்து காரில் ஏறி வண்டியை எடுக்கச் சொன்னாள்.
குழந்தை அவர்கள் போகும் வழியை பார்த்து அழுதுகொண்டே இருந்தது.
தேடல் தொடரும்…??