“அப்படியே நம்ம பாப்பா மாதிரி இருக்கா ம்மா இவளும்… மூக்கு மட்டும் தான் மாமா மாதிரி இருக்கு மத்தபடி எல்லாமே நம்ம மணியை பார்க்கிறது போல இருக்குமா… ” என சௌந்தர்யாவிடம் கூறியபடியே குழந்தையின் கன்னத்தை மெல்ல மெல்லத் தொட்டுப் பார்த்தான் கலை….
இரண்டு நாட்களாக மருத்துவமனையில் குழந்தையுடன் தான் இருக்கிறான் என்றாலும்
குழந்தையை நன்றாகத் தொட்டுப் பார்க்கவே பயந்தான் கலை. விரல் பட்டு குழந்தையின் தேகம் சிவந்து விடுமோ என்று நினைத்தானோ என்னவோ
“ஆமா அழகு பொண்ணு அப்படியே தாத்தா மாதிரி டா …” என மகனின் பேச்சிற்குப் பதில் கூறிக் கொண்டே மேகலையின் அருகில் படுத்திருந்த குழந்தையைத் தூக்கி “செல்லமா தாத்தாவை பாருங்க…” எனக் கொஞ்சினார் தியாகு.
“ஆமா ஆமா அப்படி தான் சொல்லிட்டாங்க…” எனக் கணவரின் பேச்சிற்கு நெடித்துக் கொண்டார் சௌந்தர்யா…
சௌந்தர்யாவின் பேச்சில் நேராக மனைவியிடம் சென்றவர் “ஊழை மூக்கி பாட்டியை பாருங்க டா அழகி பொண்ணு…” என சௌந்தர்யாவை வம்பிழுக்க அவரோ கணவனை முறைத்தார்.
” தாத்தாவை இந்த பாட்டிக் கிழவி முறைக்கிறா பாருங்க டா செல்லம். அடிங்க பாட்டியை அடிங்க டிஷ்யூம்…” பேத்தியின் காலைப் பிடித்து சௌந்தர்யாவின் கன்னத்தில் வைக்க மெல்லிய சிரிப்பு தியாகுவின் மனைவியிடத்தில்.
குடும்பமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் காசி. கூடவே தன் திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே காலமான தாயின் நினைவுகளும் வராமல் இல்லை. காசியின் தாய் பார்வதிக்கு ஈழைநோய் பிரச்சனை அதிகமானதால் மகனின் திருமணத்தை விரைவில் செய்ய முடிவெடுத்தார்.
அந்த சமயம் நண்பனின் தங்கையைப் பிடித்திருக்கிறது பெண் கேளுங்கள் என்று கூற அப்போதைக்கு மனம் சுணங்கினாலும் மகனிற்குப் பிடித்த பெண்ணையே மணம் முடித்துவிட்டு இறைவனடி சேர்ந்தார் பார்வதி. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம் என்று நினைத்தவனுக்குப் பெருமூச்சு தான் வந்தது.
தன் நினைவில் அமர்ந்து கொண்டிருந்தவனின் அருகில் வந்த தியாகு பிள்ளையை அவனிடம் நீட்டினார். அவனோ பதறி எழுந்து “இல்லை இல்லைங்க மாமா நான் பாப்பாவை கிழ போட்டுட்டா? எனக்குப் பயமா இருக்குங் மாமா வேண்டாம்…” என அவசரமாக மறுத்தான் காசி..
“அட பிடிங்க நான் சொல்லி தரேன்…” என்றவர் அதைச் சொல்லிக் கொடுக்க அப்படியே செய்தான் காசி… பஞ்சு பொதிகையாய் கையில் மிதந்த மகளைப் பார்த்தவன் மனைவியைக் காதலாய் ஏறிட்டான். அவளோ அழகு காட்டிவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.
மனைவியின் கோபம் புரிந்தது காசிக்கு. இதற்கு மேலும் என்ன செய்து அவளை சாமதானம் செய்வதென்று தான் தெரியவில்லை அவனுக்கு. இத்தனைக்கும் மாமனாரிடமும், கலையிடமும் தனித்தனியாக மன்னிப்பும் கேட்டு விட்டான். இதற்கு மேல் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தவனுக்கு இன்று காலையில் நடந்த நிகழ்வுகளை கண்முன்னே மின்னி மறைந்தது.
“நானும் இரண்டு நாளா பார்க்கிறேன் நீங்களும், அண்ணாவும் சரியா பேசிக்கவே இல்லையே ஏன்?…” என்று கேட்ட மனைவியை மௌனமாகப் பார்த்தான் காசி.
அவனின் மௌனம் இவளுக்கு ஏதோ புரிவது போலிருந்தது சட்டென நினைவு வந்தவளாய் “அப்ப இருந்து இப்பவரைக்கும் அண்ணாவும் நீங்களும் பேசலையா?…” விழிகளை விரித்துக் கேட்ட மேகலையிடம் இல்லையெனத் தலையாட்டியவன்
“நான் பேசினேன் அவன் தான் பேசலை. பேசலைன்னும் சொல்ல முடியாது தங்கச்சி ஹஸ்பெண்ட்டை எப்படி மரியாதை கொடுத்து நடத்துவோமோ அப்படி தான் பேசுறான். இப்ப எல்லாம் நம்ம வீட்டுல சாப்பிடறது கூட இல்லை…” என்றதும் பலமாக முறைத்தாள் மனைவி.
அவளின் முறைப்பில் கடுப்பானவன் “நான் என்ன பண்ணேன். நான் பேசனதில என்ன தப்பிருக்கு. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம உங்கப்பாக்கு அட்டேக் வந்து இருக்குன்னு பொய் சொல்றான். உங்கம்மா ஃபீல் பண்ண மாட்டாங்களா?… அவன் இப்படி இருக்கான்னா அதுக்கு காரணம் உங்கப்பா தான். எப்படி எதுவுமே நடக்காதா மாதிரி நடிக்கிறாரு அவரு.. சின்ன வயசிலேயே உங்களைத் தனியா விட்டுட்டு போயிட்டாரு, பையனுக்கும் அவரோட பழக்கத்தைக் கத்துக் கொடுத்துட்டாரு சரியான…” என அடுத்துக் கூறும் சப்பென்று சத்தத்தோடு கன்னத்திலேயே ஒரு அறை விழுந்தது காசிக்கு…
மனைவியின் செயலில் காசிக்கு கோபம் வர “அடிங்க…” என்று கையை ஓங்கியவன் மனைவியின் பார்வையில் கையை கீழிறக்கினான்.
“இப்ப நீங்க கையை ஓங்கினதை மட்டுமே பார்த்திட்டு உங்களை யாராவது தப்புன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க…” எனக் கேட்டாள் கோபமாக..
அதற்குப் பதில் கூறாமல் மனைவியை முறைத்தான். அவளோ அவனின் முறைப்பைக் கண்டுகொள்ளாமல் மேலும் தொடர்ந்தாள் “இப்ப நீங்க பண்றதும் அப்படி தான் இருக்கு. என்ன நடந்துச்சுன்னு தெரியாம ஒரு பக்கம் மட்டும் பார்த்துட்டு ஈசியா ஒருத்தரை ஜட்ஜ் பண்ணிட வேண்டியது. என்கிட்டையே நீங்க இப்படி பேசறீங்க. என் அண்ணாகிட்ட என்னவெல்லாம் பேசினிங்களோ தெரியல. கண்டிப்பா ஹர்ட்டாகி இருப்பான்…” என்றவள் சிறிது நேர அமைதிக்குப் பிறகு
“அங்க என் வீடு இருந்தும் என் அண்ணன் யாரோ மாதிரி வெளியை சாப்பிட்டுட்டு இருந்திருக்கிறான். உங்களை நம்பி தானே நான் அவனை கண்டுக்காம விட்டேன்… நீங்க என்னடான்னா இங்க என்ன நடக்குதுண்ணு எதுவுமே தெரியாம அவனைத் திட்டி இருக்கீங்க…” என முகம் சிவக்கக் கத்தியவளை மௌனமாகப் பார்த்தான்.
மனைவியின் என் வீடு என்பதிலையே அவனின் கோபம் மாயமாய் மறைந்திருந்தது. ஆனால் மேகலையின் கோபம் தான் குறையவில்லை படபட பட்டாசாய் பொரிந்து தள்ளினாள்.
” இதுநாள் வரைக்கும் என் அப்பாகிட்ட பேசி இருக்கீங்களா?… இல்லை என்கிட்டியாவது அவரை பத்தி கேட்டு இருக்கீங்களா?…” எனப் புருவத்தை உயர்த்தி கேள்வியாகக் கேட்டவளிடம் இல்லையென தலையாட்டினான்.
“அப்பறம் எதை வைச்சு எங்கப்பா இப்படித்தான்னு முடிவு பண்ணீங்க நீங்க…” எனக் கேட்டதற்கும் பதிலில்லை காசியிடம்
“என் அப்பாகிட்ட கூட நீங்க பேசனது இல்லை சோ அவரை பத்தி உங்களுக்கு தெரியாது. ஆனா என் அண்ணனைப் பத்தி உங்களுக்குத் தெரியும் தானே அவனும், நீங்களும் பல வருஷமா ஃப்ரெண்ட்ஸ் தானே…” என ஏதோ சொல்ல வந்தவளிடம்
“புரிஞ்சுக்க தங்கம் நான் அவனை வேணும்னு பேசலை.அத்தையோட உணர்வை புரிஞ்சுக்காம பேசறான்னு கோவத்தில அப்படி பேசிட்டேன்.தப்பு தான் சின்ன விஷயத்துக்காக நிறையப் பேசி இருக்கக் கூடாது…” என்றான் மனதார
“”எங்கப்பாக்கு அட்டேக்குன்னு சொன்னதும் உடனே நம்பறதுக்கு எங்கம்மா என்ன லூசா? அவரு கூடையே இருக்கறவங்களுக்கு இதெல்லாம் தெரியாதா? கொஞ்சம் கூடவா இதெல்லாம் யோசிக்க மாட்டீங்க நீங்க… அது மட்டுமல்ல அன்னைக்கு அம்மா அவன்கிட்ட பேசும் போது நானும்,அப்பாவும் பக்கத்துல தான் இருந்தோம். லவுட் ஸ்பீக்கர்ல போட்டுத் தான் அம்மாவும் பேசிட்டு இருந்தாங்க…” என்றதும் இது புது செய்தி என்பதைப் போல் பார்த்தான்.
“என்ன பாக்குறீங்க நான் சொல்றது தான் உண்மை. இதுபோலத் தான் ஒவ்வொரு விஷயத்திலும் நடக்கும். எங்கம்மா கோபத்துல பேசறது வைச்சு நீங்க எங்கப்பாவையும், என் அண்ணாவையும் ஜட்ஜ் பண்ணிருக்கிறீங்க…” என்றதும் தலை குனிந்தான்.
“இப்பவும் சொல்றேன் என் ப்பா, அம்மா தனித்தனியா இருக்காங்கன்னா அது அவங்க ஈகோ பிரச்சனை. அதுல எங்களையே எங்கப்பாவும் அம்மாவும் விட்டதில்லை நீங்க அதுகுள்ள போகணும் நினைக்காதீங்க அண்ட் அவங்க பேசறத மனசுல வைச்சுட்டு என் அப்பா, அம்மாவைப் பத்தி இனிமே தப்பா பேசாதீங்க சொல்லிட்டேன்…” என்றவள்
“இவரா வந்து என் ஃபேமிலி பத்தி எதுவும் கேட்க மாட்டாறாமா… ஆனா இவரா ஒன்னு நினைச்சிட்டு தப்பா பேசுவாராம்? நாங்க எல்லாம் யாரோ தானே நான் என்ன இவரோட பொண்டாட்டியா? என் குடும்பத்தி பத்தி இவருக்கு என்ன அக்கறை இதெல்லாம் விசாரிக்க?…” என முனகியபடியே படுத்திருந்தவளின் கையை பிடித்தவன் “சாரி டி தங்கம். இனிமே இப்படி இருக்க மாட்டேன். உங்கண்ணன் பேசினதுக்கு அப்படி பேசிட்டேன்… அவன் மேல இருந்த கோபத்தில உங்கப்பாவையும் தப்பா பேசிட்டேன்…நான் அவருகிட்ட மன்னிப்பு கேட்கிறேன்…” என்றான் சமாதானமாக. வெறுப்பாய் கையை உதறிவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.
அதற்குள் இவர்கள் மூவரும் அங்கு வந்திருந்தனர்…மாமானிடமும், கலையிடமும் மனதார மன்னிப்பு கேட்டிருந்தான். கலை கூட சின்ன சிரிப்போடு கடந்துவிட்டான். ஆனால் தியாகு சொன்னது தான் இப்போது நினைத்தாலும் ஒரு போல இருந்தது காசிக்கு.
தனிமையில் தியாவிடம் நடந்த அனைத்தும் கூறி மன்னிப்பை வேண்டினான். “இதுல என்ன இருக்கு ப்பா… நம்ம அதிகம் பேசினது இல்லை சோ என்னை பத்தி கேட்கறத வைச்சு என் மேல தப்பு இருக்குன்னு நினைச்சு இருக்கீங்க… அண்ட் உங்க மேல மட்டுமில்லை என் மேலையும் தான் தப்பிருக்கு… ஒபனா சொல்லனுன்னா நானும் உங்களை தப்பா நினைச்சு தான் ஒதுங்கி இருந்தேன். மோஸ்ட்லி நான் தான் உங்களை அவாய்ட் பண்ணேன்…” என்றதும் புரியாமல் பார்த்தான்.
“எப்படி சொல்றது உங்க நட்பு மேலையும், உங்க மேலையும் என் பொண்டாட்டி ரொம்ப நம்பிக்கை வைச்சிருந்தா ஆனால் நீங்கப் பாப்பாவை லவ் பண்றேன் சொல்லும் போது ஒரு போல ஆயிடுச்சு…நம்பி வீட்டுக்கு விட்ட பையன் இப்படி துரோகம் பண்ணிட்டானேன்னு ஒரு எண்ணம். அதிலேயே உங்க மேல எனக்கு மரியாதை போயிடுச்சு. சௌந்தும்,தம்பியும் சொன்னாங்க நீங்க நல்ல மாதிரின்னு இருந்தாலும் என் மனசு கேட்கல சோ ஒதுங்கிட்டேன்…” என்றார். இதுநாள் வரையிலும் இவனே யோசிக்காத ஒன்று அல்லவா. மற்றொருவரின் செய்கையை வைத்து அவர்கள் இப்படி தான் என்று கணித்து விட முடியும் என்று நினைத்தவன் அதே போல தான் தன்னையும் பிறர் கணிக்க கூடும் என்று நினைக்க மறந்திருந்தான். தற்போது தியாகு கூறும் வரை அதைப்பற்றி நினைத்தது இல்லை..
‘சிங்கிள் பேரண்டா என் அம்மா என்னை நல்லபடியா வளர்த்து இருக்காங்க… அண்ட் என் அம்மா பேங்க்ல ஒர்க் பண்ணதுனால ஃப்னான்ஷியால எந்த கஷ்டமும் இல்லை சோ பொண்ணு கேட்டதும் உன் வீட்டுல என் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டிட்டாங்க…” எனப் பலமுறை கெத்தாக மனைவியிடம் கூறியிருக்கிறான். ஆனால் தன் மேல் வைத்திருந்த நட்பிற்காகவும், நம்பிக்கைக்காகவும் மட்டுமே இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தது இல்லை… கலை தன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் கூட நாம் அவன் மீது வைக்கவில்லையோ என்ற எண்ணம் காசிக்கு..
கையில் ஈரம் உணர்ந்து தன் நினைவிலிருந்து வெளிவந்தான். குழந்தை தான் ஈரம் செய்திருந்தாள் “அச்சோ ஈரம் பண்ணிட்டா தம்பி. கொடுங்க நான் க்ளீன் பண்றேன்…” என சௌந்தர்யா குழந்தையை வாங்கிக் கொண்டார்.
“சரி மா… எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்பறேன்…” எனக் கடிகாரத்தை பார்த்தபடி கூறினான் கலை
“ஒரு வாரம் லீவு கேட்டுட்டு வான்னு சொன்னா மூணு நாள் மட்டும் கேட்டுட்டு வந்துட்டு இன்னைக்கே கிளம்பறேன் சொல்ற…” எனக் குழந்தையின் ஈரத்துணியைக் கழட்டிக் கொண்டே கூறினார் சௌந்தர்யா.
“இல்லை மா நாளைக்கு மீட்டிங் இருக்கு போகணும்… மார்னிங் எழுந்து அவசரம் அவசரமா போகிறதுக்கு இப்பவே போயிட்டா சரியா இருக்குன்னு பார்க்கிறேன்…” என்றான்.
“என்னவோ பண்ணு… நான் சொல்றத எப்போ தான் அப்பனும், மகனும் கேட்டிருக்கீங்க? புதுசா இன்னைக்கு கேட்கிறதுக்கு…” என்ற தாயைப் பார்த்தது பார்த்தபடி நின்றான்.
“அவக்கிடக்கறா தம்பி நீ போ. வேலையை முடிச்சுட்டு சண்டே வா…” என தியாகு சொல்லவும்
“சரிப்பா கிளம்பறேன்…” என்றவன் உடனே அங்கிருந்து புறப்பட்டிருந்தான்.
அன்று போல இன்றும் காலையிலேயே பணிக்கு வந்திருக்கலாம் தான். ஆனால் அன்று போல அவதி யவதியாகச் செல்வது மட்டுமல்லாமல் அந்த மண்டமூக்கியிடம் திட்டும் வாங்க வேண்டுமே என்ற எண்ணத்திலேயே வந்துவிட்டான்.
மெல்லத் திட்டினால் கூட பரவாயில்லை மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்காக வெளியில் வரலாம். இவள் எடுத்ததும் கத்தத் தானே செய்கிறாள். அவளின் கத்தலுக்குப் பயந்தே நாளை பணிக்கு இன்றே கிளம்பி இருந்தான்.
மூன்று நாட்களுக்கு முன் இவன் எடுத்த முடிவு சரி என்று நிருப்பிக்க அவளின் மேல் வம்படியாக கோபத்தை வளர்த்துக் கொண்டான். அவளின் அதட்டல்,ஆளுமை,
திமிரான பார்வை, நீ எனக்குக் கீழ் தான் என நிரூபிக்கும் விதமாகப் பேசுவது என ஆரி செய்த அனைத்தும் மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தான். அதன் விளைவு அவளுக்கு மண்டமூக்கி என்ற பெயரையும் அவளுக்குச் சூட்டி இருந்தான். ஒருமுறைக்குப் பலமுறை ஆரி செய்த அனைத்தும் நினைத்துப் பார்த்தவனின் மனம் அப்போதும் “கொஞ்சம் சிரிச்சு எப்போதும் போல இருந்ததா என்னவாம் அவளுக்கு… ஒருநாள் கூட அவ சிரிச்சு நான் பார்த்ததே இல்லை… சிரிக்கவே மாட்டாளா? சாதாரணமா எல்லார் போலவும் இருந்தா தான் என்ன?…” எனக் காரணமே இல்லாமல் அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த மனதிற்கு எப்படிக் கடிவாளமிடுவதாம்.
அவன் நினைத்த நேரத்தை விட முன்னவே வீட்டை நெருங்கியிருந்தான். வீட்டுக்கு முன்னே பக்கத்துவீட்டு பிருந்தாவும், அவளின் மகனும் நின்றிருந்தனர். அவர்களைத் தாண்டி உள்ளே செல்ல நினைத்தாலும் பிள்ளையை வைத்து நின்றிருப்பவளைத் தாண்டி செல்ல மனம் ஒப்பவில்லை… அவளுக்கு முன் வாகனத்தை நிறுத்தி என்னவென விசாரித்தான்.
“அது தம்பியோட ஸ்கூல்ல இன்னைக்கு ஃபங்சன் அண்ணா.. இன்னும் அவரை காணோம் டைம் வேற ஆயிடுச்சு…” என்றாள் தவிப்பாக.
கீழே குனிந்து பிருந்தாவின் மகனைப் பார்த்தான் நான்கு வயது தான் இருக்கும் தேனீ வேசம் போட்டு நின்றிருந்தான். கலையைக் கண்டதும் தாயின் கால்களை இறுகக் கட்டிக் கொண்டு நின்றான். “ஹாய்…” என கைகாட்டத் துளியும் மதிக்கவில்லை அந்த சிறுவன். “நீ என்கிட்ட பேசினா நான் உன்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவேன்…” என்றான் அப்போதும் அவன் பேசவில்லை இன்னும் தாயின் முந்தானைக்குள் ஒளிந்தான். அதைப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது கலைக்கு எப்படியாவது சிறுவனை இன்று பேச வைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் எழ உடனே
“”உங்களுக்குச் சிரமம் இல்லைன்னா நானே உங்களை ஸ்கூல்ல கொண்டு போயி விடட்டுமா?…” என்றான் தன் அக்மார்க் சிரிப்போடு.
“தேங்க்ஸ் அண்ணா…” என்றவள் மகனைக் கலைக்கு பின்னால் அமர்த்தி அவளும் அமர்ந்து கொண்டாள். பத்து நிமிட பயணத்திற்குப் பிறகு
ஹனி ப்பீஸ் டெப் அண்ட் பிளே ஸ்கூல் என்ற ஆங்கில பெயர்ப் பலகையை படித்தபடியே வாகனத்தை உள்ளே ஒட்டி சென்றவன் கைகள் தன்னாலேயே வாகனத்தின் விசையை அவனையும் அறியாமல் அழுத்திப் பிடித்திருந்தது எதிரிலிருந்த மேடையில் சிரித்து ஆடிப்பாடிக் கொண்டிருந்த நின்றிருந்த ஆரியை பார்த்து.
அலுவலகத்தில் ரெங்கி நாயகி, ஆடல் நாயகி, உற்றான், காட்டுப் பூனை, எனப் பல பெயரில் வளம் வருவது இவள் தானா எனும் சந்தேகம் வருமளவிற்குச் சிறுவர்களோடு சிரித்துப் பேசி ஆடிக் கொண்டிருந்தாள். ஒருமுறைக்கு இருமுறை கண்களை மூடி திறந்து பார்த்தான் எதிரில் நிற்பது அவள் தானோ என்ற சந்தேகத்தில். எத்தனை முறை பார்த்தாலும் நிஜம் மாறப் போவதில்லையே
ஆரியாரெங்க நாயகி தான் மேடையில் நின்றிருந்தாள்.
“தேங்க்ஸ் அண்ணா…” பிருந்தாவின் குரலில் தன் நிலைக்கு வந்தவன் அவளைத் திரும்பிப் பார்த்து “பரவாயில்லை மா…” என்று சிரித்தவன் கண்கள் புலி வேசம் போட்டு சுத்திக் கொண்டிருந்த பூனைக் குட்டியைப் பார்த்தது…
அவர்கள் இருவரும் அங்கிருந்து விலக இவனோ உதட்டளவில் மட்டுமல்லாமல் முகம் முழுக்க புன்னகையைப் பூசி நிற்கும் பெண்ணை பார்த்தது பார்த்தபடி நின்றான். அவளை ரசிக்கவெல்லாம் இல்லை(?) யார் என்ன கேட்டாலும் வல் வல்லையென்று எரிந்து விழும் பெண்ணா? என்ற ஆச்சரியத்துடன் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக அங்கேயே தான் நின்றிருந்தான். எத்தனை எத்தனை புது பாடல்கள் போட்டாலும் எதிலும் சோர்வையாடைது தேனீக்களோடு தேனீயாய் வளம் வந்தவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறுவர்களோடு சிறுவர்களாக மாறி ஆடுவது என்ன? பாடுவது என்ன?
“இன்னைக்கு இவளை விடக் கூடாது…” எனப் பொருமிக் கொண்டே அவள் வரும் வரை நின்றிருந்தான்.
***
?? விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன… இதுவரையில் உடனிருந்து ஆதரவு அளித்து அனைவருக்கும் நன்றி.