??பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.. போட்டி முடியும் தருவாயில் மாற்றிக் கொள்கிறேன்?
அத்தியாயம் 2
காலை ஒன்பது மணிக்கே வெயில் கொளுத்தி எடுக்க நண்பர்கள் இருவரும் சிக்னலில் மாட்டிக் கொண்டனர் “என்ன டா இது எரிச்சல்…” நண்பனின் காதில் கிசுகிசுத்தான் ஏகலைவன்.
“கொஞ்சம் நேரம் தான் மச்சி பக்கத்துல தான் ஆஃபீஸ் போயிடலாம்…” என்றான் காசிநாதன்.
“பேசாம இந்த டயலாக்கை ரெகார்ட் பண்ணி வைச்சிக்க மாமே அடிக்கடி உனக்கு யூஸ் ஆகும்…” என்றவன் காற்றில் பறக்கும் கேசத்தை கோதிக் கொண்டே வாகனத்தின் சைட் மிரரை தன் புறம் திருப்பி முகத்தைப் பார்த்தான். கலையின் முகம் மட்டுமல்ல அவனுக்கு பின்னால் காரில் அமர்ந்திருந்தவளின் முகமும் தெரிந்தது. கண்களை சிமிட்டி மீண்டுமொரு முறை பார்க்க காசி வாகனத்தைக் கிளப்பி இருந்தான்.
“ஏன் டா டேய்…” என நெற்றியில் அறைந்து கொண்டவன் பின்னால் திரும்பிப் பார்க்க அந்த கார் வேறொரு பாதையில் திரும்பியிருந்தது…
சில நிமிடங்கள் பார்த்த முகம் தான் என்றாலும் நன்றாகவே அவன் மனதில் பதிந்திருந்தாள். அதுவும் பாவையின் கன்னத்திற்கு மேலிருக்கும் சிறு மச்சம் அவளின் குங்குமம் கலந்த மஞ்சள் நிற தோலுக்கு பொருத்தமாய் இருந்தது…அதை இப்போது நினைத்தாலும் ஏதோ ஒரு குறுகுறுப்பு ஏகலைவனுக்கு.
அதை முழுவதும் ஆழ்ந்து அனுபவிக்கும் முன் கலையின் தாய், தந்தையின் முகம் கண்முன்னே வந்து மறைந்தது. தற்போது காரிகையை கண்டதும் தோன்றிய ஜில்லென்ற உணர்வு சட்டென்று காணாமல் போக முகம் பாறை போலானது.
மாயோனின் முக இறுக்கத்திற்கு காரணமானவளோ தன் நினைவுகளில் ஆழ்ந்திருந்தாள்.
“ஆரி பிளேயரை ஆப் பண்ணு… நைட்ல டிராவல் பண்ணிட்டு இருக்கோம். வெஹிகிள் சவுண்டெல்லாம் அப்பாக்கு கேட்காது…” என்ற தாயை பின்னால் திரும்பி பார்த்தவள்
“மாம்… வீட்டை தான் மியூசியம் மாதிரி வைச்சு இருக்கீங்கன்னு பார்த்தா காரையுமா… டாட் உங்களுக்கு ஏதாவது தொந்தரவா இருக்கா…” என தாயிடம் ஆரம்பித்து தந்தையிடம் தன் கேள்வியை முடித்தாள் ஆரி… அதற்கு ஆரியின் தந்தை பதில் கூறும் முன்பே
“எனக்கு டிஸ்ட்ரப்பா இருக்கு டி எருமை…” என பின்னாலிருந்து கத்தினான் ஆரியின் சாகோதரன். தன் தம்பியை பின்னால் திரும்பி முறைத்தவள் இன்னும் சத்தத்தை அதிகாமாக்க அந்த நொடி படார் என்ற சத்தத்தோடு கிழே உருண்டு விழுந்திருந்தது ஆரி பயணித்த கார்…
இடித்த வேகத்தில் ஆரி அமர்ந்திருந்த டோர் திறந்து கொண்டது அது பாவையின் விதியாலையோ இல்ல அவளின் தந்தையின் செயலாலையோ ஏதோ ஒன்று அவள் காரிலிருந்து சிலடி தூரம் உருண்டு சென்றிருந்தாள். “அம்மா…” என்ற குரலும் அதை தொடர்ந்து தந்தையின் குட்டிம்மாயென்ற குரலும் அவளின் காதை நிறைத்த அந்த நொடி நிசப்தம் முழுவதும் அவளை கொள்ள உடனே மயக்கத்தை தழுவியிருந்தாள் மாயோள்.
சட்டென்று போடப்பட்ட வாகனத்தின் விசையால் கார் மெல்லிய அதிர்வோடு நின்றது. அந்த சமயம் தன் நினைவிலிருந்து மீண்டவள் டிரைவரிடம் ” என்னாச்சு அங்கிள்…” எனக் கேட்டாள்.
“ஒன்னுமில்லை மா வீடு வந்துருச்சு…” என்றதும் ஆழ்ந்து மூச்செடுத்து தன்னை சமன் படுத்தி கொண்டவள் சகடத்திலிருந்து இறங்கினாள்.
சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தாள் தாய், தந்தை இருக்கும் போது எப்படி இருந்ததோ அப்படி தான் இருந்தது அவர்கள் வீடு.
கால்கள் நடுங்க ஒவ்வொரு அடியாக வீட்டை நோக்கி வைத்தாள். அவர்கள் இவளை விட்டு பிரிந்த இந்த இரண்டு வருடத்தில் பல தடவை இங்கு வந்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் இந்த நடுக்கமும்,காதை நிறைத்த தந்தையின் குரலும் கேட்டுக் கொண்டே இருக்கும்… அந்த பெரிய வீட்டிலிருந்த போர்டிகோவை கடந்து வீட்டிற்குள் சென்றாள்.
“ஆரி டிவி வால்யுமை கம்மி பண்ணு… டாடி ஆபிஸ் ரூம்ல இருக்காரு…” என கத்திக் கொண்டே சமையலறையிலிருந்து எட்டி பார்க்கும் தாயின் முகம் கண்முன்னே வந்தது. அதனைத் தொடர்ந்து அவள் கூறிய பதிலும் நினைவிற்கு வந்தது
“ம்ம்ம்மா நம்ம வீடு என்ன தியான மண்டபமா இல்லை மியூசியமா ரொம்ப சைலெண்ட்டா இருக்க…” எனக் கேட்டுக் கொண்டே தொலைக்காட்சி பெட்டியின் சத்தத்தை இன்னும் கூட்டினாள்.
“சொன்னா கேட்கறதே இல்லை…” என முனகிக் கொண்டே வெளியில் வந்த தாயிடம்
“ஐ ஹேட் சைலண்ட் மா, அதுவும் இப்படியொரு பெரிய வீடு சைலண்ட்டா இருந்தா நல்லவா இருக்கும்…” என்றவளின் தலையில் தட்டி “போதும் போதும் போயி ரெப்ரஷ் ஆயிட்டுவா. ஆபிஸ் விட்டு வந்தும் வராம வம்பு பண்ணிட்டு இருக்க…” என்ற தாயிடம் உதட்டை சுழித்து அழகு காட்டிவிட்டு சென்றது கண்முன்னே விரிந்தது.
கண்களை இறுக மூடி திறந்தவள் வீட்டிலிருந்த அலுவலக அறையை நோக்கி நடந்தாள். முக்கியமான கோப்புகள் அனைத்தும் இந்த வீட்டில் தான் வைத்திருந்தாள்.
அலுவலகத்தின் அறைக்குள் நுழைந்ததும் “குட்டிமா…” என்ற தந்தையின் கடைசி வார்த்தைகள் நினைவிற்கு வந்தது.
எப்போதும் போல கண்களை இறுக மூடி திறந்தவளுக்கு விழிகளின் ஓரம் கண்ணீர் தேங்கி நின்றது. அதனை சுண்டு விரலால் துடைத்தவள் தனக்கு தேவையானதை எடுத்து கொண்டு வெளியேறும் சமயம் மீண்டுமொரு முறை வீட்டை பார்த்தவள் “வீட்டை க்ளீனா வைச்சுக்கோங்க ஆன்டி. அம்மாக்கு வீடு தூசியா இருந்தா பிடிக்காது…” என ஆரியின் வீட்டில் பல வருடங்களாக வேலை செய்யும் ரத்னாவிடன் கூறினாள்.
“நீ இதெல்லாம் சொல்லனுமா பாப்பா… நான் பாத்துக்கிறேன்..” என்றதும் சரியென தலையாட்டிவிட்டு காரில் ஏறிக் கொண்டவள் அலுவலகத்தை நோக்கி பயணித்தாள்.
இவள் ஆர்யா வெங்கட்ராமன்… இருபத்தி ஆறு வயதான காரிகை. சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவுடனே தந்தையின் தொழிலை கற்க ஆரம்பித்திருந்தாள். ஒரே வருடத்தில் தந்தையின் அனைத்து தொழில்களும் அவளின் கைப்பிடுக்குள். இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் தாய், தந்தை, தம்பியென மூவரையும் ஒரே நேரத்தில் இழந்ததோடு அவள் துளியும் விரும்பாத நிசப்தத்தையும் நீங்காத இரைச்சலையும் பரிசாக பெற்றாள்.
தற்போது அந்த இரைச்சலும், நிசப்தமும் அவளின் வாழ்க்கையில் பழகிய ஒன்றாக மாறியிருந்தது.
****
இங்கு அதே சமயம் அலுவலகத்தை நெருங்கியிருந்தனர் நண்பர்கள் இருவரும்.
“டேய் மச்சான் இதுதான் நம்ம ஆபிஸ்…” என்ற காசியின் குரலில் முகத்தை அழுந்த துடைத்து கொண்டவன் காசி கைக் காட்டிய கட்டிடத்தைப் பார்த்தான். நான்கு தளங்களைக் கொண்டிருந்தது காசி பணிபுரியும் அலுவலகம். சிறு புருவ முடிச்சோடு உள்ளே சென்றான்.
உள்ளே நுழைந்ததும் காரிடாரில் ரிசப்ஷனிஷிட் டேபிளும் அதனை ஒட்டியே வெயிட்டிங் ஹாலும் இருந்தது.
“நீ வெயிட்டிங் ஹாலிலயே இரு மச்சி நான் எம்.டி இருக்காங்களான்னு பார்த்துட்டு வரேன்…” என்ற காசியிடம் சரியென தலையாட்டினான் கலை.
வெயிட்டிங் ஹாலின் வெளிப்புறமும் சரி உட்புறமும் சரி அந்த அலுவலகத்தின் திட்ட வடிவமைப்புகளும் அதனை பற்றிய தகவல்கள் மட்டுமே இருந்தது. வானை முட்டும் கட்டிடங்கள் மினி புராஜெக்ட்டாக செய்து வைத்திருந்தனர்… வெயிட்டிங் ஹாலின் ஒரு புறத்தில் அழகிய உள் கட்டமைப்புகளுடன் கூடிய புத்தக அலமாறியும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
சிறிது நேரத்திலயே காசி அங்கு வர “டேய் மச்சி எம்.டி இன்னும் வரல டா. மெசேஜ் பண்ணேன் வெயிட் பண்ண சொன்னாங்க. என் ரூம்ல வெயிட் பண்றயா? இல்லை ஆபிஸை சுத்தி பாக்கறயா?…” என கேள்வியாக கேட்டான் காசிநாதன்.
“செகண்ட் ஆப்ஷன் கூட ஒகே தான். என்ன இந்த ஆபிஸ் தாஜ்மகாலா இருந்திருந்தா சுத்திப் பார்க்க ஒரு ஒன் ஆர் டூ ஹார்ஸ் ஆயிருக்கும். ம்ப்ச் இப்ப ஒரு டென் ஆர் ஃபைவ் மினிட்ஸ்ல திரும்ப வந்துருவோம் அதான் கவலையா இருக்கு…” என சோகம் போலக் கூறியவனை முடிந்த மட்டும் முறைத்தான் காசி.
“உன்னை போயி கேட்டேன் பாரு என்னை…” என கூறிக் கொண்டே சுற்றும் முற்றும் ஏதோ தேடினான்.
“சாரி மாமே… இன்னைக்குன்னு பார்த்து செருப்பு இல்லை என் பூட்ஸ் தான் இருக்கு. அதுவும் கொஞ்சம்
“இரு டா எங்க ஆபிஸ் கல்வெட்டுல நீ சொன்ன இந்த எக்ஸ்பிரியான டயலாக்கை எழுதி வைச்சிட்டு வரேன்…” எனக் கூறி திரும்ப
“மச்சான் பென் போதுமா இல்ல உளி வேணுமா…” எனக் கேட்க பல்லைக் கடித்தபடி கலையை நெருங்கினான் காசி…
காசி தன்னை நெருங்கவும் ஒரே எட்டில் கார்டரில் நின்று “இப்ப வா டி மாமே…” மெல்லிய குரலில் குதுகலமாக அழைத்தான்.
“அடேய்…” என தலையில் அடித்துக் கொண்டவன் வெளியில் வந்து “போகலாம் ஏகலைவன்…” என்றான் விறைப்பாக. காசியின் விறைப்பு முகம் இவனுக்கு சிரிப்பை கொடுக்க இதழ் கடித்து அடக்கிக் கொண்டான்.
“இது ஃபர்ஸ்ட் பாத்தது ப்ராஜக்ட் மேனேஜர் ரூம். இதுக்கு பக்கத்துலயே ஒரு மிரர் டோர் இருந்துல அது எம்.டி ரூம். தென் இது அக்கவுண்ட் செக்சன். இதுக்கு ஆப்போசிட்ல (opposite) இருக்கறது ஃபுல் அண்ட் ஃபுல் டிசைனிங் டீம் மட்டும்…” என்றவன் மேலும் நடந்தான். காரிடரின் முடிவில் ஸ்டெப்ஷும் லிஃப்ட்டும் இருந்தது.
இருவரும் லிஃப்ட்டில் ஏறிக் கொண்ட அடுத்த நிமிடம் இதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பு பிறீட்டுக் கிளம்பியது கலைக்கு.
“டேய் என்னடா இப்படி மூஞ்சியை வைச்சிட்டிருக்க… இதுக்கு பேர் தான் ஸ்ட்ரிக்ட்டா…”எனக் கேட்டு மேலும் சிரித்தவனைப் பலமாக முறைத்தான் காசி.
“சாரி மாமே சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியல…”தன் நண்பனின் உண்மை முகம் தெரியும் என்பதாலயோ என்னவோ கலைக்கு சிரிப்பு வந்துவிட்டது.
அந்த அலுவலகத்தில் சீனியர் ப்ராஜக்ட் மேனேஜராக காசிநாதன் பணிபுரிந்து வருகிறான் அதற்கு ஏற்றார் போல் சிடு சிடு சிந்தாமணியாக வலம் வந்தான். உண்மையில் காசியின் குணம் இது அல்லவே… இடத்திற்கு இடம் முகமூடி அணிந்து கொள்ளும் மனிதர்களை போல் காசியும் இடத்திற்கு தகுந்தாற் போல் முகமூடி அணிந்து கொண்டான்.
“இதெல்லாம் வாழ்க்கையில சாதாரணமப்பா…” என காசி சிரித்து கொண்டே கூறினான்
“தப்பில்லை டா மாமே. இப்பெல்லாம் இடத்துக்கு தகுந்த மாதிரி முகத்தை மாத்திட்டு போயிட்டே இருக்காங்க. உனக்கு மட்டுமில்ல இங்க வேலைக்கு வர ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முகம் இருக்கும்…” என ஆழ்ந்த குரலில் கூறினான்.
“ஐய்ய பூமர் அங்கிள்…” என கூறி முகத்தை சுருக்கி ஒரு மாதிரி கலையை பார்த்து வைக்க இப்போது பல்லைக் கடிப்பது கலையின் முறையாகிற்று…
நண்பர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வாரிக் கொண்டே முதல் நான்கு தளங்களையும் பார்வையிட்டப்படி கிழே வந்தனர்… அந்த சமயம் ரிசப்ஷனிஷிட் காசியிடம் வந்து எம்.டி வந்துவிட்டாரென்று தகவல் கூறிட அடுத்த சில நிமிடங்களில் நண்பர்கள் இருவரும் எம்.டி அறையின் முன் நின்றிருந்தனர்.
“எக்ஸ்கியுஸ் மீ மேம்…” என்றப்படி காசி உள்ளே நுழைய அவன் பின்னாலயே சென்றவனின் நயனங்கள் இரண்டும் எம்.டி சீட்டில் அமர்ந்திருந்தவளை கண்டதும் விரிந்து கொண்டது.
‘போச்சு டா…’ என மனம் கதற காசியை பாவமாக பார்த்தான். அவனோ கலையைக் கவனிக்காது
“மேம் நான் சொன்னவரு இவர் தான் பேரு ஏகலைவன். அக்ரோ புரோடக்ட்ல மார்கெட்டிங் ஹெட்டா வொர்க் பண்ணிட்டு இருக்காரு…” என அறிமுக ப்படுத்தினான்.
காசிநாதன் கூறியதும் புருவங்களை சற்றே உயர்த்தி யோசிக்கும் முக பாவனை அவளிடத்தில். அது எதிரில் நின்றிருந்த காசிக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை ஆனால் ஏகலைவனுக்கு அவள் ஆட்டிட்யூட் காட்டுவது போல் தெரிந்தது.
‘என்னவொரு ஆட்டிட்யூட்…’ என்று நினைத்தவனுக்கு காலையில் அவன் திட்டியதும் பதிலுக்கு அவள் பேசி சென்றதும் நினைவு வர முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டவன் நுண்ணிடையாளைக் கண்டுகொள்ளாமல் அறையை வேடிக்கைப் பார்த்தான்…
இங்கு அவளோ காசியின் இதழசைவை தெளிவாக கவனித்துக் கொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவளுக்கு.
“ம்ம் ஒகே காசிநாதன் பட் உங்களுக்கு தெரிஞ்சவரா இருந்தாலும் இவருக்கும் இன்டர்வியூ இருக்கு. இன்டர்வியூ ஃபினிஷ் பண்ணிட்டு நெக்ஸ்ட் பார்ப்போம். பியூ மினிட்ஸ் வெளிய வெயிட் பண்ணுங்க. நானே கூப்படறேன்…” என பொறுமையாக அதே சமயம் அழுத்தமாகவும் கூறினாள்.
‘அடேங்கப்பா உங்க இன்டர்வியூ பாத்து தான் நாங்க பயந்துட்டோம். போ மா…’ என நினைத்தபடியே கோண சிரிப்பு சிரித்தவன் தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்று எதிரில் அமர்ந்திருந்தவளை பார்த்தான்.
தற்போது கூட காரிகையின் முக பாவனை அப்படியே தான் இருந்தது.. ஏனோ இப்போது அதனை ரசிக்க தோன்றியது கலைக்கு.. (Alprazolam) அதுவும் அவள் கன்னத்திலிருந்த ப்ரௌன் கலர் மச்சம் இன்னும் இன்னும் பிடித்தது அவனுக்கு… அவன் பார்வை அந்த மச்சத்தை விட்டு விலக வேண்டுமா என்று அடம் பிடித்தது… அதனையும் தாண்டி மாயோனின் நேத்திரங்கள் மாயோளின் விழிகளைப் பார்க்க குப்பென்று வியர்த்தது ஏகலைவனுக்கு.
‘இதுக்கு அந்த மச்சமே பரவாயில்ல டா…’ என நினைத்தவன் சட்டென அந்த அறையிலிருந்து வெளியேறி இருந்தான்.
இதயம் படபடவென அடித்துக் கொண்டது ‘ச்சைக் என்ன கன்றாவி இது…’ என நினைத்துக் கொண்டே பின்னந்தலை கேசத்தை அழுந்த கோதிக் கொண்டவன் காற்றை வாயில் நிரப்பி உப் என்ற சத்ததோடு வெளியே விட்டான்.
“மச்சி, ஜஸ்ட் ஃபர்மல் இன்டர்வியூ தான் டா. ஒர்க் எல்லாம் கன்பார்ம் தான். நீ எதுவும் நினைச்சுக்காத டா…” சோக ஸ்மைலியுடன் கூறிய காசியை பார்த்தவன் அவனின் தோள் மீது கையை போட்டப்படி “விடு டா பாத்துக்கலாம்…” என்றான்…
என்னதான் பெருந்தன்மையுடன் கலை கூறிவிட்டாலும் காசிக்கு வருத்தமாக இருந்தது. தன்னால் தான் அவன் செய்து கொண்டிருந்த வேலையை ரீசைன் செய்து விட்டு இங்கு வந்தான். இப்போது எம்.டி வேறு பார்க்கலாம் என்று கூற காசிக்கு ஒரு போலானது…
காசி தான் இதனை நினைத்து வருத்தப்பட்டானே ஒழிய ஏகலைவன் இதனை பற்றி துளியும் கவலைக் கொள்ளவில்லை. அவனின் அனுபவம் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும், கர்வத்தையும் கொடுத்திருந்தது. அதே சமயம் அப்படி என்ன இவள் கேட்டு விட போகிறாள் என்ற அலட்சியத்தையும் கொடுத்தது…
அந்த அலட்சியம் அடுத்த சில நிமிடங்களில் மங்கையின் கேள்விகளில் ஆட்டம் கண்டதும் உண்மை.
ஆம் அத்தனை முதிர்ச்சியான கேள்விகள் அவளிடத்தில். இப்படியான கேள்விகள் கூட கேட்க முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு தான் இருந்தது அவளின் ஒவ்வொரு கேள்விகளும். அதிலும் தற்போது காரிகை கேட்ட கேள்வியும் அதற்கான பதிலும் ஏகலைவனை பிரம்பிக்க வைத்தது என்பதே உண்மை.
“வாட் இஸ் தி பெஸ்ட் ட்ரடேர் இன் தி வேர்ல்ட்?…” என்ற கேள்விக்கு அவன் உலகின் சிறந்த ஆளுமையான மற்றும் மார்க்கெட்டிங் தொழில் சிறந்து நபரைக் கூறினான். மெல்ல சிரித்தபடி இல்லையென்று தலையாட்டியவள்
“அம்மா…” என்றாள் மென்மையாக.கலை புரியாமல் அவளை பார்க்க
“ஷீ மேட் டூ பிலீவ் யு அண்ட் ஷெல் ஹேர் லவ் அண்ட் சப்போர்ட் ஈவென் இப் யு ரெஃப்யூஸ் டூ அக்சப்ட் இட். ஷீ வில் சக்ஸீட் இட் ஒன் டே வித் அவுட் அக்சப்ட்டிங் மனி அந்த ஸ்டில் சேல் ஹேர் ப்ராடக்ட்…” (அவள் உன்னை நம்பி தன் அன்பையும் ஆதரவையும் விற்கச் செய்தாள், நீ ஏற்க மறுத்தாலும் அவள் ஒரு நாள் வெற்றி பெறுவாள் பணத்தை ஏற்காமல், தன் பொருட்களை விற்காமல்) என்றாள் ஆழ்ந்த குரலில்.. உண்மையாகவே இதனை அவன் இதனை எதிர்ப் பார்க்கவில்லை அப்படியே அமர்ந்து விட்டான் நுண்ணிடையாளின் விளக்கத்தை கேட்டு.
“ஒகே நௌவ் யூ கேன் கோ. நாளைக்கு வொர்க்ல ஜாயின் பண்ணிக்கோங்க…” என்றாள் அதே தோரணையில். இப்போது அந்த ஆட்டிட்யூட் இவனுக்கு எரிச்சலை கொடுக்கவில்லை மாறாக அவள் இப்படியிருப்பதில் தவறில்லை என்று தோன்றியது. மாயோளுடன் மாயோனிருந்த நிமிடங்கள் எத்தனைக்கு எத்தனை பிரம்மிக்க வைத்ததோ அத்தனைக்கு அத்தனை அவளின் கன்னத்து மச்சமும், மெளன மொழி பேசும் விழிகளும் அவனை ரசிக்கவும் வைத்தது.
****
உள்ளே சென்றவன் படப்படப்பாக இருந்தானோ இல்லையோ வெளியில் அமர்ந்திருந்த காசிக்கு படப்படப்பாக இருந்தது. எம்டியின் கேள்வி எப்படியிருக்கும் என்று அவன் அறிவான் அல்லவா…
காசியை விட சிறு பெண் என்றாலும் அவளின் திறமையும், நிர்வாகத்தை வழி நடத்தும் விதமும் இவனை பல முறை ஆச்சரியமடைய வைத்திருக்கிறது அது அவளின் தந்தை இருந்த போதும் சரி அவர் இல்லாத இந்த இரண்டு வருடங்களும் சரி.
காசியின் தவிப்பை மேலும் அதிகரிக்காமல் கால் மணி நேரத்தில் வெளிவந்த ஏகலைவன் கெத்தாகக் காலரைத் தூக்கிவிட்டு கண்ணடிக்க காசிக்கு தான் ஏகபோக குஷியானது.