ஒரு வருடம் கழித்து….
வீடே சோகத்தில் மூழ்கி இருக்க பெரியவர்கள் அனைவரும் மௌனமாக அழுதுகொண்டு இருந்தனர்…
தேவகி மட்டும் தன் கணவனின் புகைப்படத்தை பார்த்து அழுதுகொண்டு இருந்தார்…
யுகி ஒரு ஓரமாக நின்று வேலைகளை கவனித்து கொண்டு இருந்தான்..இதோ இது வேலனின் முதலாம் நினைவு நாள்…
அனைவரும் இருந்தும் தஷூ மட்டும் இருட்டு அறையில் இருந்தாள்.
தஷூ மட்டும் அன்று நடந்த சம்பவத்திலிருந்து பைத்தியம் பிடித்தது போல் நடக்க துவங்கினாள்…
இதை கண்டு யுகியும் தேவகியும் தான் நொந்து போனார்கள். தந்தையை இழந்த சோகம் ஒரு புறம் என்றால் தக்ஷுவின் நிலமை அவர்களுக்கு கவலை கிடமாக இருந்தது…
ஐயர் செய்ய வேண்டிய செய் முறை எல்லாம் செய்து தீட்டு கழித்து கொண்டு இருக்க மகன் என்ற கடமையில் எல்லா காரியத்தையும் தந்தைக்கு செய்து கொண்டு இருந்தான்…
இறுதியில் எல்லாம் முடிவு பெற ஐயர் எழுந்து வீடு முழுவதும் தீர்த்தம் தெளித்து கொண்டே வர அவர்களுக்கு பின்னாடியே யுகியும் தேவகியும் வந்து கொண்டிருந்தனர்…
ஐயர் தக்ஷூவின் அறையை திறக்க போக “சாமி அந்த ரூம்ம ஓபன் பண்ண வேணாம் ” என்று யுகி கூற..
“இந்த ரூம்க்கு தெளிக்கிலினா அப்புறம் எப்படி தீட்டு கழிப்பது ” என்று ஐயர் கேட்க…
” இல்ல சாமி அந்த ரூம்ம தொர்க்க வேணாமே ப்ளிஸ் சாமி மத்த ரூமுக்கு போய் தெளிக்கலாம்” என்று யுகி கூற…
“அதெல்லாம் நன்னா இருக்காது . எங்க வேலைய ஒழுங்கா செய்ய விடுங்கோ ” என்றே விடாபுடியாக நிற்க..
” அப்போ சரிங்க சாமி நீங்க போக வேணாம் நான் போய் உள்ள தெளிச்சிட்டு வரேன் ” என்று கூறி அந்த தீர்த்தத்தை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று கதவை சாற்றிக் கொண்டான்….
அறை முழுவதும் இருட்டாக இருக்க லைட் லேம்ப் மட்டும் எறிந்து கொண்டு இருந்தது..
உள்ளே வந்த யுகி கண்களுக்கு முதலில் தெரிந்தது தனக்கு தானே பேசிக்கொண்டு இருந்த தக்ஷன்யவர்ஷினி தான்…
” அப்பா அப்பா நான் இன்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கேன் பா ” என்று தரையில் அமர்ந்த படி மேலே பார்த்து பேசிக் கொண்டு இருந்தாள்…
##############
” ஏன்னு கேக்குறீங்களா..???எங்க நீங்களே கொஞ்சம் கெஸ் பண்ணுங்க பாப்போம் ” என்றிட..
################
” என்ன பா நீங்க இத கூட உங்களுக்கு கண்டு பிடிக்க தெரியல போங்க பா நான் உங்க கூட டூ ” என்று கோபித்துக் கொள்ள…
யுகியால் இதை தாங்கிக் கொள்ள முடியாமல் போக தக்ஷூ மா என்று அழைத்தான்..
“வா அண்ணா எப்போ வந்த ஏன் அங்கேயே நிக்கிற உள்ள வா ” என்று கை பிடித்து கூப்பிட்டு வந்து அவளுக்கு அருகே நிற்க வைத்துக் கொண்டாள்.
“அண்ணா இங்க பாரு இந்த அப்பாவ நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்னு சொல்லி அது ஏன்னு கேட்டேன் அவரு எனக்கு தெரியலன்னு சொல்றாரு அண்ணா ” என்று இல்லாத தந்தையை போட்டு கொடுக்க..
இதற்கு எவ்வாறு ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் முழிக்க தக்ஷூவே பேச தொடங்கினாள்…
“சரி அண்ணா அப்பாவுக்கு தான் பதில் தெரியல நீயாவது கரக்டா சொல்லு நான் எதுக்கு இவ்வளோ ஹாப்பியா இருக்கேன்னு ” என்று கேட்டு விட்டு யுகியின் பதிலுக்காக அவனையே பார்த்திருக்க..
வழிந்த கண்ணீரை தன் தங்கை அறியாமல் துடைத்தவன் அவள் முன் புன்னகையோடு ” அப்பாக்கே தெரியாதப்ப எப்படி மா இந்த அண்ணாவுக்கு மட்டும் தெரியும் சொல்லு . எனக்கும் இதுக்கான பதில் தெரியல டா ” என்று கை விரித்து காட்ட…
அதை பார்த்து சிணுங்கியவள் ” உங்க ரெண்டு பேருக்கும் என் மேல பாசமே இல்ல போங்க பா நான் உங்க ரெண்டு பேர் கூடயும் டூ .இனி ரெண்டு பேரும் என்கிட்ட பேசாதீங்க ” என்று சொல்லி முகத்தை திருப்பி கொள்ள..
இதை கண்ட யுகிநேத்திரன் சிரிப்பையும் கண்ணீரையும் அடக்கிக் கொண்டு “சாரி டா நீயே சொல்லு எனக்கும் அப்பாக்கும் சேர்த்து ” என்றான்…
“சரி சொல்றேன் அப்போ எனக்கு சாக்கி வாங்கி தரனும் ரெண்டு பேரும் ” என்று கையினை அவன் முன் நீட்ட
அப்போதே தீர்த்தம் வைத்திருப்பது ஞாபகத்திற்கு வர “ஒரு நிமிஷம் டா குட்டிமா ” என்றவன் ரூம் முழுவதும் தீர்த்தத்தை தெளித்து விட்டு வந்தான்.
” என்ன அண்ணா இது என்னத்த இப்படி ரூம் பூரா தெளிக்கிற ” என்று கேட்க
” இது சும்மா தண்ணி தான் டா ” என்றவன் இந்த பேச்சை மாற்றும் படியாக ” சரி நீ ஏதோ சொல்ல வந்தியே மா அத சொல்லவே இல்லையே ” என்க..
“அட பாரு அண்ணா நான் மறந்தே பொயிட்டேன் ” என்றவள் “அது ஒன்னும் இல்ல அண்ணா நாளைக்கு நான் என்னோட தேவ்வ பாக்க போறேன் அண்ணா ” என்றாள் மகிழ்ச்சியாக…
” உலகில் இல்லாத ஒருவனை பாக்க போறேன்னு சொல்றாலே ஏன் பா நம்ம குடும்பத்துக்கு இப்படி நடக்குது .என் தங்கச்சிய இப்படி பாக்கவே முடியலை . இதுக்கு காரணமானவுங்கள நான் சும்மாவே விடமாட்டேன் ” என்று மனதில் கவலையுடனும் அதே நேரத்தில் கோபமாக நினைக்க அதை கலைக்கும் விதமாக தக்ஷூ அவனை உழுக்கினாள்.
“என்னடா மா ” என்று வாஞ்சையாக அவளது தலையை தடவிய படி கேட்க
” நீ தான் டா அண்ணா சொல்லனும் . நான் தேவ்வ பாக்க போற விஷயத்த சொன்னவுடன் நீ சந்தோஷமா இருப்பன்னு பார்த்தா நீ ஏதோ இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முகத்த வச்சிருக்க ” என்று சொல்ல..
” அது ஆனந்த அதிர்ச்சி டா மா . சரி நீ ரெஸ்ட் எடு மா நாம அப்பறமா பேசலாம் ” என்று அறையை விட்டு வெளியே வந்தவனின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வந்தது…
அதன்பின் அனைத்து பூஜையையும் முடித்து விட்டு ஐயர்கள் செல்ல வீட்டிற்கு வந்த சொந்தம் பலர் வீட்டில் ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் வெந்த புண்ணில் வேவு காய்ச்ச ஆரம்பித்தனர்…
இதை எதையும் பொறுத்துக்க முடியாத யுகி தனக்கு தெரிந்த டாக்டரிடம் தொடர்பு கொண்டு தக்ஷூவின் நிலைமை பற்றி கூறி சிறந்த மருத்துவரை அனுப்பும் மாறு வேண்டிக் கொண்டான்..
அந்த டாக்டரும் ” எனக்கு தெரிந்த ஒரு டாக்டர் இருக்காரு ஆனா அந்த டாக்டர் இப்போ தான் அவரோட ஜாப்க்கு வந்திருக்காரு பட் ஹீஸ் வெரி டேலன்டடு ” என்றான்…
” எப்படியாவது அவர இங்க கூட்டிட்டு வா டா எனக்கு என் தங்கச்சி வாழ்க்கை ரொம்ப முக்கியம் அவள பத்தி இப்படி எல்லாரும் தப்பா பேசுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ” என்று வருத்தப்பட…
“கவல படாதீங்க எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தார்..
?????????????
மும்பையில்…
” என்ன மச்சான் ரொம்ப சந்தோஷமா இருக்க போலயே ” என்று அவன் முதுகை தட்டிய படி ரிஸ்வான் கேட்க
“ஆமா மச்சான் என் வாழ்க்கையே திரும்ப பாக்க போறேன் டா .இந்த ஒரு எப்படி வாழ்ந்தேனே தெரியல எல்லாமே என்ன உயிரா நினைச்ச அந்த ரெண்டு பேருக்காக தான் டா ” என்றான் வேதமித்ரன் சந்தோஷம் பாதியாகவும் வருத்தம் பாதியாகவும்…
” நீ இங்க பட்ட கஷ்டம் எனக்கு தெரியாதா டா .இதோ நாளையோட நம்மளோட பீஜி படிப்பு முடியுது . நீ ஆச பட்ட மாதிரி ஒரு பைத்தியக்கார டாக்டராவும் ஆக போற இல்ல இல்ல ஆகிட்டன்னு தான் சொல்லனும் . இது எல்லாம் எதுக்காக பண்ணுறன்னு தான் எனக்கு தெரியுமே டா ” என்றான்…
“இந்த ஒரு வருஷத்துல எவ்வளவோ விஷயம் மாறி போச்சி டா நான் உயிரா நினைக்கிறவுங்களும் இப்போ என்கூட இல்ல நான் இப்படி ஆகனும்னு ஆச பட்டது என்னோட விஷ்ணு தேவன்னுக்காக தான் . அவன் இப்போ என்கூட இல்லைன்னாலும் கடைசியா அவன் சாகுறதுக்கு முன்னாடி என்கிட்ட கேட்டுக்கிட்ட ரெண்டு விஷயத்த நான் செஞ்சு ஆகனும் டா ” என்றான் கண் கலங்க…
” விடு மச்சி நம்ம விஷ்ணு எப்போதும் நம்ம கூட தான் இருப்பான் . நீ கவல படாம இரு டா ” என்று ரிஸ்வான் வேதாவை தேற்ற முயற்சி செய்ய
” அவன் என் உயிர காப்பாத்த போய் அவன் அவனோட உயிர விட்டுருகான் டா . அந்த ஆக்சிடன்ட் காரணமானவுங்கள நான் சும்மாவே விட மாட்டேன் டா ” என்று ஆத்திரத்தில் பக்கத்தில் இருந்த டேபிளில் ஓங்கி குத்த அவன் குத்திய வேகத்தில் கையில் இருந்து உதிரம் வடிய தொடங்கியது..
இதை கண்ட ரிஸ்வான் ” ஏன் டா இப்படி லூசு மாதிரி பண்ணிட்டு இருக்கிற அறிவில்ல உனக்கு ” என்று திட்டிய படி அவன் கைகளுக்கு ஃப்ர்ஸ்ட் எய்ட் செய்து விட்டான்…
அந்த நேரம் பார்த்து சீஃப் டாக்டர் வந்து இருவரையும் அழைக்க இருவரும் அவரை காணச் சென்றனர்…
” எக்ஸ் க்யூஸ் மீ சார் ” என்று கேட்டு கதவை தட்ட இருவரையும் பார்த்து” எஸ் கம் இன் அண்ட் டேக் யுர் சீட்ஸ் ” என்று விட்டு ஃபோனில் சில மணி துளிகள் பேசிக்கொண்டு இருந்தார்…
இருவரும் முகத்தை முகத்தை பார்த்துக் கொள்ள..
” என்னடா இது எதுக்கு இப்படி சார் நம்மல கூப்பிட்டு இங்க உக்கார வச்சிட்டு அவர் பாட்டுக்கு போன் பேசிட்டு இருக்காரு ” என்று வேதா காதில் ஓத..
” டேய் கொஞ்சம் அமைதியா இரு டா .அவரு வந்துற போராரு ” என்று மெல்லிய குரலில் சொல்ல….
” அப்படியே கேட்டுட்டாலாம் ..இல்ல மச்சி கேட்டாலும் கேக்கும் நாம எதாவது டௌட்ன்னு தான் அந்த ஆளுக்கு காது கேக்காம பொயிடும் . இதெல்லாம் நல்லா கேக்கும் டா அவருக்கு . இவரெல்லாம் எப்படி தான் டாக்டர் ஆனாரோ தெரியல இதுல இந்த டிபார்ட்மெண்ட்ல இவரு தான் சீனியராமா ” என்று ரிஸ்வான் சொல்லி சிரிக்க…
” டேய் கொஞ்சம் வாய மூடிக்கிட்டு இரு டா அவருக்கு கேட்டுடிட போகுது ” என்று சொல்லி வாயை மூடும் படி செய்கை செய்ய அதற்குள் போன் பேசி முடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்து அவர் ” ரிஸ்வான் என்ன பத்தின கம்மென்ட்ரிய இந்த சின்ன கேப்புல நல்லா ஓட்டியாச்சா ” என்று கேட்க…
“அப்படிலாம் இல்ல சார் சும்மா பேசிட்டு இருந்தோம் அவ்வளவு தான் சார் ” என்றான் ரிஸ்வான்.
அவன் சொல்லிய விதத்தில் வேதாவிற்கு சிரிப்பு வர அதை பார்த்த ரிஸ்வான் அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தான்..
“போதும் உங்க விளையாட்ட கொஞ்சம் நிப்பாட்டிட்டு நான் சொல்ல வரத கொஞ்சம் கேளுங்க ” என்று சீஃப் கூற..
இருவரும் அவர் கூற வருவதை கவனிக்க தொடங்கினர்..
” எனக்கு இப்போ சென்னைல இருந்து கால் வந்துச்சி. அங்க ஏதோ ஒரு பேஷன்ட்க்கு நம்மலோட உதவி தேவை படுது . அங்கிருந்த பல டாக்டர்ஸ் அந்த ஃபேஷன்ட்ட பாத்துக்கிறாங்க ஆனாலும் அவுங்களுக்கு எந்த ஒரு இம்புருமெண்டும் இல்லையாம் .சோ அங்க இருந்த ஒரு டாக்டர் நம்ம ஹாஸ்பிடல்க்கு கான்பிரன்ஸ் வந்த அப்ப உங்களோட பர்ஃபாமன்ஸ் பாத்து உங்கள சஜஸ் பண்ணி இருக்காங்க.. சோ நீங்க ரெண்டு பேரும் நாளைக்கே சென்னைக்கு கிளம்புறீங்க ” என்றார்…
” ஓகே சார் ” என்றனர் இருவரும் ஒரே போல்…
” சரி அப்போ உங்க மெயிலுக்கு அந்த ஃபேஷன்ட் டிடெய்ல்ஸ் அனுப்பிடுறேன் நீங்க பாத்துக்கோங்க. இனி உங்களோட கன்ஸ்சல்ட்லா தான் இருக்கு ” என்று கூறி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தார்…
இருவரும் வந்து மெயில் செக் செய்ய அதில் வந்த பெயரை கண்டு இருவரும் அதிர்ச்சியுற்றாலும் வேதமித்ரனுக்கு இடி விழுந்து அந்த இதயத்தை பிளந்தது போல் இருக்க அவனது இதழ்கள் வர்ஷூ என்று இருந்த பெயரை உச்சரித்தது…
???????????
அதே நேரம் சென்னையில்
“அப்பா எனக்கு கண்டிப்பா தக்ஷூ வேணும் பா. அவ இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சி கூட பாக்க முடியாது” என்று ரகுராம் தன் தந்தையிடம் சண்டையிட ..
” டேய் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா டா .அவளே எப்போ நார்மலா இருக்கா எப்போ லூசா இருக்கான்னு தெரிய மாட்டேங்குது. இதுல நீ அவள இந்த வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வர நினைக்கிற ” என்று கோபப் பட…
” அப்பா எனக்கு தக்ஷூ வேணும் .அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன் ” என்று கத்த…
” டேய் வேணாம் டா அந்த பொண்ணு. உனக்கு வேற நல்ல பொண்ணா பாக்கலாம் டா ” என்று பொறுமையாக அவன் தந்தை விஸ்வநாதன் கூற…
” இங்க பாரு பா எனக்கு சின்ன வயசுல இருந்தே எல்லாமே தக்ஷூ தான் அவ இல்லாத வாழ்க்கை எனக்கு தேவையே இல்லை. நீ போய் அத்த கிட்ட பேசுற இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது ” என்று கோப பட..
” என்னால முடியாது டா. ஒரு பைத்தியத்த என்னால இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வர முடியாது ” என்று அவரும் அவனுக்கு கூட சேர்ந்து கோப பட…
” முடியாது முடியாது முடியாதா பா உன்னால ” என்று தொடர்ந்து சொன்னவன் பக்கத்தில் இருந்த கத்தியை கொண்டு தந்தையின் கையில் வெட்டி விட்டு அவன் கையையும் வெட்டிக் கொண்டான்…
” இனி முடியாதுன்னு சொல்லுவியா பா ” என்று கோரமாக பேசிவிட்டு அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான்….
தக்ஷூ என்ற ஒளிவற்ற அவளின் வாழ்வின் ஒளி கொண்டு நுழைகிறார்களா அல்லது அது இருக்கும் இடம் தெரியாமல் அதை அழிக்க போகிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம். காலமே அதன் பதிலை கூறும்….
~ஒளி பெருகும்