ராதா வீடு திரும்பிய சந்தோஷத்தில் அடுத்த நாள் காலை, பர பரப்பாகவே விடிந்தது அனைவர்க்கும்
மகள் வந்த சந்தோஷத்தில்.. முன்பு போல ராதாவிற்கு பிடித்த அணைத்து தின் பண்டம்.. உணவு என்ன ஹோட்டல் மெனு போல் தயாரித்து கொண்டு இருந்தார் எழில்
மாணிக்கம் மறுபுறம்.. நேற்று மகளின் ஆடையையும், அவள் வந்து நின்ற கோலத்தையும் கண்டவர்… விடிந்தும் விடியாமலும் கடை தெருவிற்கு கிளம்பி விட.. மணி ஏழு இருக்கும் போது கிட்ட தட்ட பத்து பைகளை கையில் பிடித்த படி வந்தார் அவர்
அது அத்தனையும் புது ஆடைகள், ஆபரணங்கள்,அழகு சாதன பொருட்கள் என்று வித விதமாக குவித்து இருந்தார்…
அதை கண்டு எழில் பூரித்து போனாலும்.. ஜனாவிற்கு தான் இதில் உடன் பாடு இல்லாமல் இருந்தது..
“அப்பா இப்போ எதுக்கு இவ்வளவும் வாங்கிட்டு வந்து இருக்கீங்க? அவ என்ன கல்யாணம் முடிச்சி மறுவீடுக்கா வந்து இருக்கா.. இவ்ளோ சீர் செய்ய…அவ என்ன பிரெச்சனைல, எந்த நிலமைல வந்து இருக்கானே தெரியல.. மாப்ள வீட்டுல இவ இங்க வந்து இருக்கறது தெரியுமா இல்லையானு கூட தெரியாம..நீங்க எதுக்கு இதெல்லாம் பண்ணுறீங்க?” அவள் செய்த காரியத்திற்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா என்பதை போலவே இருந்தது அவனின் பேச்சு
“என்னடா பேசுற நீ…தங்கச்சிக்கு செய்யுறதுக்கு, இப்படியா பேசுவ” என்று மாணிக்கம் அதட்டினாரே தவிர, ஜனாவின் பேச்சில் இருக்கும் உண்மையை அவர் உணரவே இல்லை
அப்போது தான் மாடியில் இருந்து எழுத்து வந்து கொண்டு இருந்த ராதாவின் காதில் இது அனைத்தும் விழ…ஜனா தனக்கு சாதகமாக இல்லை என்பதை புரிந்து கொண்டாள் ராதா..
அதை கேட்டவள்…ஜனா தன்னை இங்கு இருந்து விரட்டி விடுவானோ..இங்கு கிடைக்கும் இந்த ஆடம்பரம்… செல்வம் எல்லாம் மறுபடியும் இழந்து விடுவோமோ என்ற பயமும் அவளுள் வர துவங்க… வந்த வழியே திரும்பி சென்று தன் அறையின் கட்டிலில் அமர்ந்தவளுக்கு, மனது முழுவதும் ஆதங்கமே நிறைந்து இருந்தது
“இந்த ஜனாக்கு என்ன வந்துது… அவன் எதுக்கு இப்டி குறுக்க வரான்..முதலில் அவனை தான் சரி கட்ட வேண்டும்” என்ற படி மனனத்துக்குள் கருமி கொண்டு இருந்தாள் ராதா
அந்த நேரம் பார்த்து கீழே தோட்டத்தில் உமா எதையோ கத்தி கொண்டு இருப்பது போன்ற சத்தம் வர.. அறையின் ஜன்னல் வழியே உமாவை கவனிக்க துவங்கினாள் ராதா
தினமும் தன்னை எழுப்ப கைபேசியில் அலாரம்..இருவர் வந்து எழுப்பி விடுவது என்று தினமும் அளப்பரையும்..சேட்டையும் இல்லாமல் எழும் பழக்கம் இல்லாத உமா.. இன்று கோழிக்கு முன்வே எழுந்து விட்டாள்..
தூங்கி இருந்தாள் தானே எழுவதற்கு..இரவு எல்லாம் கண்ணன் காலடியில் கழித்தவள்..விடியும் முன்பே எழுந்து குளித்து விட்டு.. தோட்டத்தில் இருக்கும் பூக்களை பறித்து படி அங்கு இருக்கும் தோட்ட காரருக்கு சில உத்தரவை போட்ட படி இருந்தாள் உமா
அப்போது தான் குளித்து விட்டு.. தலையில் ஈரம் தோல் மேல் சொட்ட,வேஷ்டி ஒன்றை கட்டிய படி, மேல் சட்டை இல்லாமல் வீட்டிற்குள் சென்று கொண்டு இருந்த சத்யன்.. உமாவின் குரல் கேட்டு நின்று.. அவளை தேட
நான்கு ஆள் உயரத்திற்கு ஓங்கி அடர்ந்து வளந்து இருக்கும் வெள்ளை செம்பருத்தி செடியின் அருகில் நின்று கொண்டு செம்பருத்தி மலர்களை பறித்தவள்… அதற்கு அருகில் இருக்கும் ரோஜா, மல்லி செடியின் மலர்களையும் பறித்து கொண்டு இருந்தாள்
செம்பருத்தி செடி அவளின் உருவத்தை கிட்ட தட்ட மறைத்து விட..அங்கு அவள் இருக்கிறாள் என்பதை மட்டும் தெரிய படுத்தியது.. அவள் அங்கு இருப்பதை உறுதி செய்தவன்.. அவளை நோக்கி செடியின் பின் புறம் செல்ல.. கிட்ட தட்ட பிரமிப்பில் அதிர்த்த படியே நின்று விட்டான்
சிவப்பு தாவணியில், பச்சை ரவிக்கையுடன்.. குளித்து ஈரமான தன்னுடைய நீல கேசத்தை அடியில் கட்டிய படி..மண் பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பாவாடையின் ஒரு புறத்தை இடையில் சொருகி..மறைந்தும் மறையாமலும் அவளின் இடை பகுதி ஒளிர..
அந்த காலை நேரத்து சூரிய சூரிய ஒளி அவளின் முகத்தில் பட்டு அவளை மேலும் பிரகாசிக்க…செடியில் இருந்த அந்த காலை பனி துளிகள் அவளின் முகத்தில் மேல் பட்டு அப்போது மலர்ந்த பண்ணீர் மலர்கள் போல அவள் மின்ன..
சில துளிகள் மட்டும் அவளின் கண் காது மூக்கு உதடு என்று அதன் வாழ்வின் முக்தியை தேடிய படி இருக்க…பேராசையில் சில துளிகள் மட்டும் அவளின் கழுத்தையும் தாண்டி சென்று மோட்சம் பெற்று கொண்டு இருந்தது
இதுவரை அவன் பார்த்திராத கோணத்தில் அவனின் பார்வை செல்ல…தொண்டை வரை வார்த்தையும் வந்து சிக்கி கொள்ள.. அவனின் கண்கள் அவளின் இடையில் சிறைப்பட.. ஏனோ இன்று ஒரு புது ஈர்ப்பும், சொல்ல முடியாத எதோ ஒரு உணர்வும் சத்யனை அவ்விடத்தில் நகராமல் கட்டி போட்டது
மலர்களை பறித்தவள். எதிர்ச்சியாக பார்வையை திருப்ப.. அங்கு மேல் சட்டை இல்லாமல்…மந்திரிக்க பட்ட நிலையில் சத்யன் நிற்க.. அவனை கண்டவள்
“ஹையோ” என்ற கூச்சலுடன் திரும்பி அவனுக்கு முதுகு காட்டி நிற்க..அப்போது தான் வெளியில் ஒளிரும் அவளின் இடையும், தன் கணுக்கால்களை பாதுகாக்க மறந்து தொங்கி கொண்டு இருக்கும் பாவாடையையும் கவனித்தவள்.. உடனே இரண்டையும் சரி செய்ய
அவளின் கூச்சலிலும்.. அவன் கண் ரசித்த பார்வை.. அவனை விட்டு அகலவும், மந்திரத்தில் இருந்து வெளியே வந்தவனுக்கு, உமாவை தான் ரசிப்பது தவறு என்ற உணர்வே வரவில்லை
கல்லூரி படிக்கும் போது கூட சத்யனின் பார்வை பெண்களின் கண்ணை மட்டுமே பார்த்து பேசும்.. அவனின் கவனம் வேறு எங்கும் சென்றதும் இல்லை..
இத்தனைக்கும் நிச்சயிக்க இருந்த ராதாவை கூட அவன் கணியமாகவே பார்த்து பழகி இருந்தான்.. அப்டி பட்ட அவனின் கண்ணியத்தை இன்று உமா அசைத்தே பார்த்து விட்டாள்…எதோ என்றும், யார்மேலும் உணராத ஒரு ஈர்ப்பு அவனுள் தோன்றி.. அவமாய் இம்சிக்கவே செய்தது
உடையை சரி செய்தவள்.. அவன் புறம் முழுதும் திரும்பாமல்..செடியில் கவனம் வைத்த படி
“இங்க என்ன பண்ணுறீங்க?அதுவும் இந்த கோலத்தில்..உங்களை யார் இங்கே வர சொன்னது” என்றும் இல்லாத ஒரு புது துவணியில் அவளின் குரல் ஒளிக்க..
“ஏன்.. நான் இங்க வர கூடாதா.. என்ன பச்சை மிளகா.. இன்னைக்கு காலைலயே இவ்ளோ காரமா இருக்க…சோறு போட மாட்டேன்னு சொல்லிட்டாங்களா?” சிரித்த படி குறும்புடன் அவன் கேட்க
“அதை பத்தி நீங்க கவலை பட வேணாம்..அதை பார்த்துக்க என் உறவுகள் இருக்கு.. அது இல்லாம என்னை இனொரு முறை பச்சை மிளகானு கூப்பிடாதீங்க” உத்தரவாய் ஒலித்தது அவளின் குரல்
அவளில் வார்த்தையை கேட்ட சத்யன் முகம் சுருங்க..மனமும் எதோ போல் பிசைய..அது என்ன உணர்வு என்பதை கூட புரிந்து கொள்ள இயலாமல் அவளிடம் மேலும் தொடர்ந்தவன்
“என் நான் உன் உறவு இல்லையா?இது என்ன புது பேச்சு..நீ இப்டி பேசு நான் எப்போதும் பார்த்ததே இல்லையே” என்றவனின் பேச்சில் இப்போது அதிகாரம் போய் ஆற்றாமையே அதிகம் வெளி பட்டது
“இங்க நின்னு இப்டி என் கிட்ட பேசாதீங்க.. யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க..ராதா அக்கா பார்த்தா கோவ பாடுவாங்க… இனி இப்டி தனியா சந்திச்சி எல்லாம் பேச வேணாம்” என்றவள் அவனின் பதிலுக்கும் காத்திருக்காமல் பூக்கூடையுடன் சென்று விட
செல்லும் அவளையே பார்த்தவனுக்கு, அவள் இடை தாண்டி ஆடி கொண்டு இருக்கும் அவளின் கூந்தலை போலவே மனதும் தறி கேட்டு தடம் மாற..ஏனோ தன்னை தள்ளி நிக்க வைத்து பேசுவதை போலவே உணர்ந்தான் சத்யன்.. அது அவனுள் எதோ ஒரு இனிமை அற்ற நிலையை உருவாக்க..மன அமைதியை சற்று இழந்தே இருந்தான் அவன்
இவை அனைத்தயும் தன் அறையில் இருந்து பார்த்து கொண்டு இருந்த ராதாவிற்கு அவர்களின் உரையாடல் காதில் விழாமல் போனாலும்..
இருவரின் முக பாவத்தை வைத்து.. இருவருக்குள் எதோ இருக்கிறது என்பதை மட்டும் அவளால் ஊர்ஜிதம் செய்ய முடிந்தது..அதில் தனக்கு பாதகமாக எதோ நடக்க போகிறது என்று உணர்ந்த ராதா..
குளித்து முடித்து கீழே ராதா வர..” ராதா சாப்பிட்டுட்டு ரெடி ஆகிடுமா..ஹாஸ்பிடல் வரைக்கும் போய் ஒரு செக்அப் பண்ணிக்கிட்டு வந்துடலாம்” என்ற படி மாணிக்கம் கூற
சரி என்ற படி தலை அசத்தாள் ராதா
சத்யன், விஸ்வநாதன், மாணிக்கம் அமர்ந்து உணவு உன்ன..ராதா டிவி பார்த்த படி சோபாவில் அமர்ந்து உணவு உன்ன
கால்களில் கொலுசுடன்…ரெக்கை கட்டி கொண்டு வீட்டில் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருந்தாள் உமா..
கண்ணை மூடி கொண்டு அவள் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருக்க.. எதிரில் வந்த ஜனாவை காணவிக்காமல்.. அவன் மேல் இடித்து தடுமாறிய படி அவள் நிற்க
“டேய் எரும மாடு அண்ணா.. கண்ணு தெரியலையா உனக்கு.. இப்டி மாடு மாதிரி வந்து இடிக்கிற” தவறு மொத்தம் அவன் மேல் தான் என்பது போல உமா எகிற
அதற்குள் உமாவின் காதை பிடித்து திருகிய மதி “ஏன்டி.. கண்ணு தெரியாம வந்து இடிச்சது நீ.. அவனை ஏன்டி திட்டுற..இப்டியே பண்ணிக்கிட்டு இரு.. அவனுக்கு கல்யாணம் ஆகி வரவ உன்னை வாயிலேயே மிதிக்க போற பாரு”
“அப்டியா அண்ணா.. உனக்கு கல்யாணம் ஆச்சுன்னா என் கூட இப்போ இருக்க மாதிரி இருக்க மாட்டியா?” இல்லை என்பது அவளுக்கே தெரிந்தாலும் அதை ஜனா வாயில் இருந்து கேட்க ஆசை கொண்ட உமா.. முகத்தை குழந்தை போல் வைத்து கொண்டு கேட்க
“இல்லடா தங்கம்.. எப்பவும் எனக்கு நீ தான் பிரஸ்ட்.. மத்தவங்க எல்லாம் நெஸ்ட் தான்” என்ற படி அவன் கூறி அவளை அணைத்து கொள்ள
அவர்களின் இந்த பாசம் மதியை மெய்சிலிர்க்க வைத்தாலும்..ராதாவை பொறாமை படவே செய்தது
ஜானவியும், சிவகாமி பாட்டியையும் சீண்டிய படி உமா உணவு உண்டு முடிக்க..வீட்டின் வாசலில் முடியை உலர்த்திய படி..சத்யனிடம் பேசி கொண்டு இருந்தாள் ராதா
“டமால்” என்று இரும்பு கதவை திறந்த படி துள்ளி குதித்து கொண்டு ஸ்ரீஜா வர..அதில் எரிச்சல் ஆனா ராதா.. அவளை அடையாளம் கண்டு கொள்ள முடுயாமல்.. யாரோ என்று எண்ணி
“ஏய்..யார் நீ.. இப்டி அடிச்சி ஒடச்சிகிட்டு உள்ள வர.. கேட்டுட்டு உள்ள வரணும்னு தெரியாதா உனக்கு.. அறிவில்லை.. திறந்த வீட்டுக்குள்ள எதோ மாதிரி வர” அவளின் வார்த்தைகள் எல்லை மீர
ஸ்ரீஜா கலங்கிய கண்களுடன் சத்யனை பார்க்க.. அவனோ
“இவ ஸ்ரீஜா.. எதிர் வீட்டு பொண்ணு.. நம்ப உமா கூட படிக்குறா.. காலேஜ் போக உமாவை கூப்பிட வந்து இருக்கா” என்று விவரம் சன உடன் தான் ராதாவிற்கு விவரம் புரிய
“நீயா..என்ன இவ்வளவு வளந்துட்ட..நான் பார்க்கும் போது பூசணிக்காய் மாதிரி குண்டா இருந்த.. இப்போ கொஞ்சம் ஒல்லியா ஆகிட்ட போல” வார்த்தை தவறியே வர.. அது ஸ்ரீஜாவிற்கு பிடிக்காமல் போக
“ஆமாம் ராதா அக்கா.. நீங்க ஓடி போறதுக்கு முன்னாடி பார்த்து இருப்பீங்க..இப்போ எத்தனை வருஷம் ஆகிடுச்சு..நீங்களே வீட்டுக்கு வந்துடீங்க.. நான் மாற கூடாதா?” பேசியவன் அவளின் பதிலை கூட எதிர் பாராமல் உள்ளே சென்று விட்டாள்
அவளின் பேச்சில் ஏளனம் மிகுதியாய் தெரிய.. பேசியதும் நிற்க கூட செய்யாமல்.. தன்னை மதிக்காமல் செல்பவள் மேல் கோபம் வர.. பல்லை படுத்தவளை கவனித்த சத்யன்
“இதுக்கு தான் ராதா.. நாம பேசுற வார்த்தையும்.. செய்யுற செயலையும் யோசிச்சி செய்யணும்னு சொல்லுவாங்க” என்ற படி அவன் பங்கிற்கு அவன் பேசி விட.. அது ராதாவிற்கு மேலும் எரிச்சலையே தந்தது
உமாவும், ஸ்ரீஜாவும் பேசிய படி வெளியே வர..அவர்களை கண்ட சத்யன்…
“வாங்க உமா நான் உங்களை கொண்டு போய் காலேஜ்ல இறக்கி விடுறேன்” என்ற படி முன் வர
“இல்ல..பரவாஇல்லைங்க..உங்களுக்கு நெறைய முக்கியமான வேலை இருக்கும்.. நீங்க பாருங்க.. எப்போதும் போல ஜனா அண்ணா எங்களை கொண்டு போய் விட்டுடுவான்” என்றவளின் பேச்சில் புதிதாக மரியாதையும், ஒதுக்கமும் நான்கு தெறிந்தது
உமா பேசிய படி.. உள் இருந்து வந்த ஜனாவை பார்க்க.. ராதாவுடன் மருத்துவமனை செல்ல விருப்பம் இல்லாதவன் உடனே சரி என்று ஒப்புதல் தர.. போகும் அவர்களை வெறித்த படி நின்றான் சத்யன்
செல்லும் முன் சிலையென நின்ற கண்ணனையும் பார்க்க வில்லை, வாசலில் கல் மனதோடு நிற்கும் தன் காதல் கண்ணனையும் ஒரு பார்வை பார்க்க வில்லை உமா…
சிறிது நேரத்தில் மாணிக்கம், எழில், ராதா மூவரும் கிளம்பி நின்று.. சத்யனை வருமாறு அழைக்க..செல்ல மனம் இல்லாதவன்
“மாமா தப்பா நெனச்சிக்காதீங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. அதனால என்னால வர முடியாது.. நீங்க டிரைவரை கூட்டிகிட்டு போய்ட்டு வாங்களேன்” என்றான் எதோ உண்மை போல
சத்யன் வார்த்தைகளில் உண்மை இல்லை என்று உணர்ந்தாலும்..அமைதியாகவே இருந்தாள் ராதா…
கல்லூரி சென்ற உமாவின் மனமும் முகமும் வாடியே இருக்க.. அதை உணர்ந்த ஸ்ரீஜா..
“என்னடி ஆச்சு.. இஞ்சி துன்ன குரங்கு மாதிரி உர்ர்ர்ர்னே இருக்க”
ராதா வந்தது முதல்.. அணைத்து நிகழ்வையும் உமா கூற..அவளின் கவலை அர்த்தம் அற்றது என்றே தோன்றியது ஸ்ரீஜாவிற்கு
“நீ ஏன்டி சத்யனை தப்பா நினைக்குறே..அவர் போன் எடுத்ததால தானே அவருக்கு விஷயம் தெரிஞ்சி அவர் போனாரு..இதே ஜனா அண்ணனுக்கு தெரிஞ்சி இருந்தா அவர் போய் இருப்பாரு.. மத்த படி சத்யன் பண்ணது எதுவும் தப்பா எனக்கு படல.. அவர் ஒரு உதவியா செஞ்ச மாதிரி தான் இருக்கு”
அதற்கு எந்த பதிலும் தராமல் மௌனமாகவே அவள் இருக்க..இம்முறை மறந்தும் கூட அவளின் கண்ணில் இருந்து கண்ணீர் வர வில்லை
உணவு உண்ணும் நேரத்தில் எங்கோ யோசித்த படி உமா அமர்ந்து இருக்க.. அவள் வருத்தத்தில் தான் வாடுகிறாள் என்ன நினைத்த ஸ்ரீஜா.. அவளை இலகுவாக்க நினைத்தவள்
“என்னடி சத்யனை பத்தி நெனச்சுக்கிட்டு இருக்கியா…கவலை படாதடி.. கார்மேக கண்ணன் இருக்க வரைக்கும் உன்னோட காதல் கண்ணை அவர் உன் கிட்ட இருந்து பிரிச்சிட மாட்டார்” உமாவின் கையை ஆறுதலாக பற்றிய படி ஸ்ரீஜா உருக்கமாக பேசி கொண்டு இருக்க
ஸ்ரீஜாவை ஒரு பார்வை பார்த்த உமா “அடச்சி கைய எடு.. சத்யனாம் சத்யன்.. அவன் சத்யன் இல்லடி.. என் வாழ்க்கைல வந்த சாத்தான்…குட்டி சாத்தான்.. குட்டி சாத்தான்.. இல்ல இல்ல பெரிய சாத்தான்..அந்த கண்ணனை பத்தி இனி பேசாத என்கிட்ட..அவரும் கோபியரியோட ஜாலியா இருந்தாரு..சத்யனுக்கு அவரோட பேரை வெச்சா..அவனும் ராதா பின்னாடி போறான்” ஆதங்கத்தில் கருமியவாளை பார்க்க ஸ்ரீஜாவிற்கு சிரிப்பு வர.. அடக்கிய படி உமா அருகில் அமர்ந்து இருந்தாள்
அவர்கள் அங்கு அமர்ந்து இருப்பதை வெகு நேரமாக கவனித்து கொண்டு இருந்த இளைஞன் ஒருவன், அவர்களை நெருங்கி வர..அதை கவனித்த ஸ்ரீஜா
“ஆடு அதுவா பிரியாணி ஆக வருது” என்று நினைத்த படி பம்மி கொண்டு அமர்ந்து இருக்க.. உமா மறுபுறம் கொதிப்பில் அமர்ந்து இருந்தாள்
வந்தவன் உமாவிடம் கடிதம் ஒன்றை நீட்டி.. வெட்க பட்டு கொண்டே நிற்க..அவனின் முகத்தை வைத்தே அது என்ன என்பதை புரிந்து கொண்ட உமா.. அவனை கேள்வியாய் பார்க்க
“நீங்க இங்க காலேஜ்ல சேர்ந்ததுல இருந்து உங்களை எனக்கு ரொம்பவே பிடிச்சி இருந்துதுங்க..உங்கள இத்தனை நாள் கவனிச்சிட்டு இப்போ தான் பேசலாம்னு வந்தேன்… உங்க அடாவடியும்.. தைரியமும் எனக்கு ரொம்பவே பிடிச்சி இருக்குங்க” வெட்க பட்டு கொண்டே அவன் பேச
அவன் பேச பேச உமாவிற்கு கோவம் பன்மடங்கு அதிகமாகி கொண்டே போக..ஸ்ரீஜா மட்டும்
“ரொம்ப நாளாவா.. நாங்க உங்களை பார்த்ததே இல்லையே.. உங்க பேர் என்ன.. எந்த குரூப்.. அத்தனாவது வருஷம்?” சந்தேகமாக ஸ்ரீஜா கேட்க
“என் பேரு கண்ணன்.. unga குரூப் தான்..உங்களுக்கு சீனியர்” என்றான் அதே வெட்கத்துடன்
அவனின் பெயரை கேட்ட உமா ருத்ர கோவத்தில் வந்து விட..
“செத்தான் சேகர்” என்று படி ஸ்ரீஜா வேடிக்கை மட்டுமே பார்க்க ஆர்வமாய் அமர்ந்து இருக்க
“கொய்யால டேய்.. எனக்குன்னே வருவீங்களாடா நீங்க.. எங்க இருந்துடா கெளம்புறீங்க?” என்ற படி உமா எகிற, எதற்கு என்றும் புரியாமல் போனாலும் இளித்த படியே அவன் நிற்க
“கண்ணனாம் கண்ணன்.. இனி கண்ணன்..பண்ணன்னு எவனாச்சும் என் கிட்ட வந்தீங்க.. அவ்வளவு தான் சொல்லிட்டே”
“ஏன் பேபி கோச்சுக்குற..பேர் பிடிக்கலனா மதிக்கலாம்” என்று அவன் மேலும் வழிய
“ஸ்ரீ.. இவனை இங்க இருந்து போக சொல்லுடி.. தேவை இல்லாம இங்க ஒரு கொலை விழும்… சொல்லிடேன்” என்று உமா ஸ்ரீஜாவிடம் பேச
“கொலை என்று அவள் பேச.. அவன் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடியே விட்டான்”
“அதன் பிறகு முகம் கழுவுகிறேன் என்று உமா செல்ல.. கண்ணன்னு பெயர் வெச்சதுக்கே இவ்வளவு கொலை வெறியில இருக்கானா… அவளோட காதல் கண்ணன் கையில மாட்டுனா உயிரோட விடுவானு நெனைக்குறீங்க”
ம்ம்ஹ்ம்ம்.. பாவம் சத்யன்.. இவ கைல மாட்டிகிட்டு என்ன என்ன அவஸ்தை பட போறானோ..கடவுளுக்கு தான் வெளிச்சம்.. என்ற படி அவள் புலம்பி கொண்டு இருக்க..
உமாவிடம் மாட்டிக்கொள்ள போகும் அந்த அப்பாவி ஜீவன்.. ஜீப்பில் வந்து இறங்கியது..கல்லூரி முன்…
காற்று வீசும்…..