அத்தியாயம்:5
அந்த பெரிய போட்டோவிற்கு மாலை போடப்பட்டிருந்தது..அந்த போட்டோவை வெறித்து பார்த்தபடியே அமர்ந்திருந்தார் பத்மாவதி…அழுது அழுது கண்களில் உள்ள கண்ணீர் வழிந்து காய்ந்து போயிருந்தது…
அவருக்கு அருகில் கையில் உணவு தட்டுடன் அமர்ந்திருந்தான் ப்ரனேஷ்..
அம்மா கொஞ்சம் சாப்பிடுங்க என்று உணவை எடுத்து அவரின் வாயருகே கொண்டு செல்ல..வேண்டாம் என்று மறுத்து விட்டார்…
அப்பா இறந்து ஒரு வாரம் ஆகியிருந்தது….இதுவரை அவரை கொலை செய்தது யார் என்று தெரியவில்லை…கவிலாஷ் இறுகி போய் அமர்ந்திருந்தான்..அவனை எப்படி சமாதானம் படுத்துவது என்று தெரியாமல் பிரனேஷ் முழித்து கொண்டிருந்தான்….
டேய் கவி …நடந்தது நடந்து போச்சு..அதையே நினச்சு கவல படாம மேற்கொண்டு என்ன பண்ணனுமோ அத பண்ணுடா…நீயே இப்படி சோர்ந்து போயிட்டா அம்மாவுக்கு யாருடா ஆறுதல் சொல்லுவா…அவுங்க சாப்பிட்டு ரெண்டு நாள் ஆகுது..நான் குடுத்தா சாப்பிட மாட்றாங்க…இந்தாடா..சாப்பாடு..நீயே போய் ஊட்டிவிடு …..
கவிலாஷ் எதுவும் கூறாமல் விட்டத்தை வெறித்து கொண்டு அமர்ந்திருந்தான்….
டேய்..நான் உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்…இப்படியே போச்சுனா அப்பாவ இழந்த நீ அம்மாவையும் இழக்க போற, என்று ஆதங்கத்தில் பேசி ஆத்திரத்தில் முடித்தான்…
அவனது கையிலிருந்த தட்டை பிடிங்கியவன் அதை எடுத்து கொண்டு தன் அன்னையிடம் சென்றான்…அவர் மகனை ஒரு வெற்று பார்வை பார்த்தார்..கவிலாஷ்க்கு துக்கம் தொண்டையை அடைத்தது…தன்னை கட்டுபடுத்தியவன் ,உணவை எடுத்து தாயிற்கு ஊட்ட ,அவர் வேண்டாமென மறுத்தார்..
[the_ad id=”6605″]
அம்மா கொஞ்சம் சாப்பிடுங்க….உங்க மகன் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல…என் அப்பாவ கொன்னவன உங்க கண்ணு முன்னாடி கொண்டாந்து நிறுத்துறேன். .இது இறந்து போன அப்பா மேல சத்தியம்..இப்போ நீங்க சாப்பிடுங்க..அப்பாவ கொல பன்னுனவன உங்க கையால தண்டிக்க உங்களுக்கு சக்தி வேனுமே…அதுக்காகவாது சாப்பிடுங்க என்று கூறி வலுக்கட்டாயமாய் ஊட்டி விட்டான்…
தூங்கி எழுந்த சுகன்யாவின் கண்முன்னே இருந்த காபி கோப்பையை கண்ட சுகன்யா அதை எடுத்து சுவைத்து கொண்டே மித்ரா….. மித்ரா என்று அழைத்தாள்…
ஆனால் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை..சமையல் அறையை சென்று பார்க்க அங்கும் அவள் இல்லை .காலையிலயே எங்க போயிருப்பா…என்று யோசித்தவள்..எங்கிட்ட சொல்லாம எங்கயும் போக மாட்டாளே! என்று நினைத்தவள் மனதில் பயம் வந்து அமர…மித்ரா
நீ எங்க இருக்க…என்று கேட்டுக் கொண்டே அந்த வீடு முழுதும் அலசிவிட்டாள் சுகன்யா…ஆனால் அவளை காணவில்லை..மொபைலை எடுத்து அவளுக்கு அழைக்க போக, மித்ராவின் மொபைல் அங்கு இருந்த மேசையின் மீது கிடந்தது ..
போன கூட எடுக்காம காலங்காத்தால எங்க போனா . என்று திட்டிக் கொண்டே அவளை தேடுவதற்காக வெளியே செல்ல எத்தனித்த நேரம்..
ஹேய் சுகு எழுந்துட்டியா.!..என்று கேட்டு கொண்டே வந்த மித்ராவை அதிசயமாய் பார்த்தாள்…
அழகாய் படவை உடுத்தி தலையில் மல்லிகை இட்டு,நெற்றியில் குங்குமமும்,திருநீறுமாய் நின்றவளை கண்ட சுகன்யாவின் கண்களில் கண்ணீர்…இவளை இப்படி பார்த்து எத்தனை வருடம் ஆகிறது…என்று நினைக்க..
ஏய் சுகு எதுக்கு இப்போ அழற?…
எங்கிட்ட சொல்லாம எங்கடி போன..உன்ன காணாம பயந்துட்டேன் தெரியுமா? …
நான் என்ன சின்னக் கொழந்தையா ..காணாம போக…கோயிலுக்கு போயிருந்தேன்…நீ தூங்கிட்டு இருந்த ..அதான் உன்கிட்ட சொல்லாம போயிட்டேன்….
தூங்குனா என்ன..எழுப்பி சொல்லிருக்கலாமே!…என்று மூஞ்சை தூக்கி கொள்ள…
சாரி சுகு… நீயே நேத்து வேலை முடிச்சு லேட்டா தான் வந்த..அதனால தான் உன்ன தொல்ல பண்ணாம நானே போய்டு வந்தேன்…என்றாள் தப்பு செய்த குழந்தையை போல்…
சரி சரி இனிமே எங்க போணாலும் சொல்லிட்டு போ…என்றவள் அவளை மேலிந்து கீழாக ஒரு பார்வை பார்த்துவிட்டு,என்ன புதுசா கோயிலுக்கெல்லாம் போயிருக்க…நான் கூப்டாலே வர மாட்டேனு அடம்பிடிப்ப..இப்போ என்னன்னா தனியா போய்ட்டு வந்துருக்க…
அது இல்ல சுகு கடவுளுக்கு நன்றி சொல்லனு தோனுச்சு ..அதான்….
திடீர்னு கடவுளுக்கு எதுக்கு நன்றி… புரியாமல் அவளை பார்க்க…
அது…அது..வந்து என்று அவள் வார்த்தைகளை தேட…
அவளது முகத்தை உற்று பார்த்தாள் சுகன்யா…எப்போதும் இருக்கும் அந்த வெறுமை அவள் முகத்தில் இல்லை…முகம் பிரகாசமாய் இருந்தது…அதுவே அவளுக்கு எதையோ உணர்த்த…
சரி சரி..ரொம்ப இழுக்காத..நீ எதுவும் சொல்ல வேண்டாம்..என்றவள்,மிது உன்ன இப்படி பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு டி…இதேபோல எப்பவும் நீ சந்தோசமா இருக்கனும் என்று கூறி அவளை அணைத்துக் கொண்டாள்….
ஏய் சுகு எனக்கு ஒரு உதவி பண்றியா?
என்ன மிது உதவினு பெரிய வார்த்தையெல்லாம் சொல்ற…இத செஞ்சி குடுனு சொன்னா செய்ய போறேன்…என்ன வேணும் சொல்லு…
இல்ல எவ்வளவு நாள் தான் வீட்டிலயே சும்மா இருக்குறது..எனக்கு ஏதாவது வேலை ரெடி பண்ண முடியுமா!
இவ்வளவு தான..கண்டிப்பா செய்யிறேன்..ஆனா நமக்கு இந்த ஊரு புதுசு இல்லயா?…அதனால என் பிரண்ட் ஷாரிகா கிட்ட கேட்டு பாக்குறேன்..சரியா..
அவள் ‘ம்’ என்று தலையாட்டினாள்…
ஷாரிகாவின் போன் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருக்க, அதில் வந்த எண்ணை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் …கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது..இப்படித்தான்,இரண்டு நாட்களாய் தூங்காமல் ,கொள்ளாமல் அழுது கொண்டிருந்தாள் ஷாரிகா…அவளால் ப்ரனேஷ் அவளை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை…அந்த சம்பவத்திற்கு பிறது அவள் அவனோடு பேசவேயில்லை..எத்தனையோ முறை அவன் அழைத்து பார்த்தும் அவள் போனை எடுக்கவில்லை..இவ்வளவு ஏன் கவிலாஷின் தந்தை இறுதி காரியத்திற்கு கூட செல்லவில்லை…நான் அவனை எவ்வளவு காதலித்தேன்..அவன் தான் என் உயிர் என்றல்லவா நினைத்திருந்தேன்..ஆனால் இப்போது?அதனை நினைக்கவே அவள் மனது கசந்தது..முடியாது..என்னால் முடியாது..அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று நினைத்தவள் ஒரு முடிவு எடுப்பதற்காக ப்ரனேஷின் அலுவலகத்திற்கு சென்றாள்…அங்கே அவனுடைய அறைகதவை திறந்தவளுக்கு,அங்கே பிரனேஷ் இருந்த கோலத்தை பார்த்து ஷாக் அடித்தது போல் நின்றாள்….
[the_ad id=”6605″]
தனது அலுவலகத்தில் அமர்ந்து நடந்த சம்பவங்களை பற்றி யோசித்து கொண்டிருந்தான் ப்ரனேஷ்…அவனால் இன்னும் நம்ப முடியவில்லை?ஷாரிகா அவனை விரும்பினால் என்று கூறியதை!!!..அவன் மறுபடியும் அவளுக்கு அழைக்க, எதிர்புறம் போன் எடுக்கபடவில்லை…அவனுக்கு “அய்யோ”என்றிருந்தது..தலை வலிக்க ஆரம்பிக்க சேரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டிருந்தான்…திடிரென நெற்றியில் எதோ மென்மையாய் தீண்டுவதை உணர்ந்தவன் சட்டென விழிக்க, அவனுடைய குல்பி தான் தலையை பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள்.
பாசு நீ அப்படியே குந்திக்கோ..கொஞ்ச நேரம் தல புடிச்சி வுட்டா தலவலி காணாம போயிடும்…
அவன் அதிர்ந்தான்..எனக்கு தலைவலி என்று இவளுக்கு எப்படி தெரியும்!..அவன் வாயை திறந்து கேட்டே விட்டான்…
இது பெரிய ரகசியமா பாசு..நீ தான் தலல கை வச்சிகினு குந்திருக்கியே…என்றவன் மீண்டும் அவனது இரண்டு புறமும் நீவி விட்டாள்…மிக அருகில் அவளது முகத்தை கண்டவன் மனதோ தாறுமாறாய் எகிறி குதித்தது..
தறிக்கெட்டு துடிக்கும் இதயத்தை அடக்க முயற்சித்தான் ப்ரனேஷ். வலது கையை மார்பில் வைத்துக் கொண்டு,
“ராஜா புரியுது! நிற்கிறது நம்ம ஆளுதான்.. அதுக்காக இவ்வளவு வேகமா துடிக்காத.. நீ துடிக்கிற சத்தத்துல, இடி இடிக்கிதுன்னு ஆபீஸ்ல நினைச்சிட போறாங்க” என்று வசனம் பேசியவன் அவளது கைகளை மெதுவாய் பிடித்தான்..எங்கே அவளுக்கு வலிக்குமோ என்று…திடிரென அவள் கையை பிடித்ததும் அவள் திருதிருவென விழிக்க, அவளது கையை பிடித்து மெதுவாய் இழுக்க,இதனை சற்றும் எதிர்பார்க்காத அவள்,திடிரென அவனுடைய முரட்டு இதழில் தன் இதழ் மோதி நின்றாள்…இதை எதிர்பாக்காத ப்ரனேஷின் மனமோ தாறுமாறாய் துடிக்க, ஒரு நூலளவு வித்தியாசத்தில் இமைகள் நான்கும் மோதிக் கொண்டன..பயத்தில் படபடவென துடிக்கும் அவள் இமைகள்,அவனை ஏதோ செய்ய சட்டென அவளை இழுத்து தனது மடியில் போட்டான்..இதனை கொஞ்சமும் எதிர்பார்காதவள் அரண்டு விழிக்க, அவளது மடியில் கிடத்தவளின் கண்களின் அழகாய் முத்தமிட்டான்..ஏனோ அவள் அவனிடம் எதிர்ப்பு காட்டாமல் அமைதியாய் இருக்க, அதையே அவளுடைய சம்மதமாய் எடுத்து கொண்டு மேலும் அவளது செவ்விதழை தனதாக்கி கொண்டான்…. அவன் தன் காதல் முழுவதையும் ஒற்றை முத்தத்தில் உணர்திட, அவளோட சட்டென அவனை தள்ளிவிட்டு எழுந்தாள்…அவளது முகம் ரத்தமென சிவந்திருந்தது..
அவள் சடாரென எழுந்ததும் தான்,தான் செய்த தவறின் வீரியம் புரிய, “ஏன்டா படுபாவி உனக்கு இவ்வளவு அவசரம்” என்று தன்னையே திட்டிக் கொண்டவன்,குல்பி அ..து..வ..ந்து….என்று இழுக்க…
போதும் பாசு என்று கை நீட்டி தடுத்தவள்… நீயும் மத்தவனுங்க மாதிரி தான பாசு…உன்ன எம்மாம் பெரிய எடத்துல வச்சினுருந்தேன்…என்னும் போதே அவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது…
குல்பி. ப்ளீஸ் எதோ தெரியாம..நடந்…
என்னது தெரியாம நடந்துகினியா…இன்னா பேசுற நீயி..ஒரு பொண்ணான்ட எப்படி நடந்துக்கனுனு கூடவா ஒனக்கு தெரியாது…உம்மேல மரியாத இருந்துச்சி பாசு..அதெல்லாம் பொய்யினு ஆக்கிட்ட..போதும் பாசு இனிமே உன்னான்ட் வேலை செய்ய எனக்கு இஷ்டம் இல்ல..இனிமே நாம எப்பவும் பாத்துக்க கூடாதுனு நெனக்கிறேன்”என்றாள் அவள்..
அதிர்ந்து விட்டான் ப்ரனேஷ். தன்னவளின் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வருமென்று அவன் கனவில் கூட நினைக்கவில்லையே! அவள் குரலில் வேதனை மட்டுமே இருந்தது. அவன் அவளிடம் தன் காதலை இன்னும் சொல்லவில்லை. தான்.ஆனால் அவள் தான் தன் உயிர்..அவள் இல்லாமல் தனக்கு வாழ்க்கையே இல்லை என்று அவன் நினைத்திருக்க, அவளோ இவனை விட்டு பிரிந்து செல்ல போகிறேன் என்றல்லவா கூறுகிறாள்…?முடியாது..இவள் என்னை விட்டு எங்கும் செல்ல முடியாது..செல்லவும் நான் விடமாட்டேன்..என்று தனக்குள்ளே கூறியவன் … அவளருகில் சென்றான்..
அவன் தன் அருகில் வருவதை கண்டு பயந்தவள் பின்னோக்கி நகர..அவன் அவளை நெருங்கினான்..
வேண்டாம் பாசு எதா இருந்தாலும் அங்கயே நின்னு சொல்லு..கிட்ட வராத…என்று கூறிக்கொண்டே அடுத்த அடி எடுத்து வைக்க,சுவர் தடுத்து அப்படியே நின்றாள்..
அவன் சிரித்து கொண்டே அவளை நெருங்க.தன் முட்டைகண்ணை வைத்து உருட்டி உருட்டி பார்த்தாள்…
ஏய் குல்பி அப்படி பாக்காதடி..மாமனுக்கு ஒரு மாதிரியா இருக்கு என்று கூறிக் கொண்டே அவளது கொடி இடையை தனது கரங்களால் வளைத்தான்..அவன் மாமன் என்று கூறியதுமே அதிர்ந்தவள் அவன் அடுத்து செய்த காரியத்தில் அவளது உடம்பு நடுங்க தொடங்கியது…,
[the_ad id=”6605″]
ஏய் குல்பி “நீ எனக்கானவள் டீ !நான் சாகும் வரைக்கும் என் கூடவே ஒரு நல்ல மனைவியா,நல்ல தோழியா இருக்க போறவடி,,… என்னை விட்டு நீ போக முடியுமா? போகத்தான் விட்டுருவேனா? ” என்றவன் அவளது பட்டு கன்னத்தில் கோலமிட்டான்…அவள் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்…
பாசு நீ தப்ப பண்ற..வேணாம் என்ன வுடு என்று அவனது பிடியிலிருந்து அவள் விலக, அவள் விலக முடியாதவாறு இருக்கி அணைத்திருந்தான்…
ஏய் விடலனா என்னாடி பண்ணுவ..?என்றவன் இப்போ என்ன பண்ணிட்டேன்…கோவபழம் மாதிரி இருந்த இந்த உதட்டுல லேசா முத்தம் குடுத்தேன்..அதுக்கு போய் தையா தக்கனு குதிக்கிற… என்றவன் சட்டென அவளது இதழை தன் இதழோடு பொருத்த மொத்தமாய் செயலிழந்து போனாள் அவள்..அவன் தந்த முத்தத்தில் மயங்கியவள் அவனுடைய சட்டையை இறுக பற்றி கொண்டாள்…எவ்வளவு நேரம் இந்த முத்த யுத்தம் தொடர்ந்ததோ,முதலில் சுதாரித்தது அவள் தான்..தன் பலம் அனைத்தையும் திரட்டி அவனை தள்ளிவிட்டாள்.
இவ்வளவு நேரம் முத்தத்தில் லயித்து இருந்தவள் திடீரென தள்ளிவிடவும் புரியாமல் அவளை பார்க்க..அவள் அதற்கு மேல் அங்கு நிற்காமல் அறையை விட்டு வெளியேறினாள்…
சிரித்து கொண்டே அவன் தன் தலையை கோதினான்..ஏனோ இந்த நிமிடம் அவன் அவ்வளவு மகிழ்சியாக இருந்தான்…அப்போது அவனுடைய மொபைல் ஒலிக்க எடுத்தவன் எதிர் முனையில் கூறப்பட்ட செய்தியை கேட்டு அதிர்ந்து போய் நின்றான்….