டேய்..யாருடா உன்ன உள்ள விட்டது…முதல்ல வீட்டைவ விட்டு வெளிய போடா..கத்தினார் தாமோதர்….
அங்கிள் பிளீஸ்…அவளுக்கு என்னாச்சு ..என்றான் பதட்டத்துடன்…
அவளுக்கு என்ன ஆனா உனக்கு என்னடா…அவ எனக்கு ஒரே பொண்ணுடா..அவ ஆசைபட்டு கேட்ட எதையுமே நான் இல்லைனு சொன்னது இல்ல..அப்படி வளர்த்த பொண்ண இப்படி கைய அறுத்துகிற அளவுக்கு போயிருக்கா..இதுக்கெல்லாம் காரணம் நீ தான்..உன்ன சும்மா விடமாட்டேன்..என்று அவனது சட்டையை பிடித்து கத்தினார்….
என்னது கைய அறுத்துகிட்டாளா?,என்று அதிர்ந்தவன் “அவ எங்க இப்போ”… என்று கேட்டுக் கொண்டே அவளது அறையை நோக்கி ஒடினான்…
டேய் கண்ணா கொஞ்சம் சாப்பிடும்மா..மாத்திரை போடனும் என்று உணவு தட்டை கையில் வைத்து கொண்டு கெஞ்சி கொண்டிருந்தார் சுபத்ரா…
அம்மா ப்ளீஸ்..எனக்கு வேண்டானு சொன்னா விடேன் என்றாள் கோபமாய்…
ஏய் ஷாரிக்கா, என்னடி பண்ணி வச்சிருக்க என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தவன் அவளது வலது கையில் போடப்பட்டிருந்த கட்டை பார்த்து,அவளது கன்னத்தில் ஒரு அறை விட்டான்…
ப்ரனா…என்று அதட்டினார் சுபத்ரா…
ஆண்ட்டி பீளீஸ்.. நீங்க கொஞ்சம் வெளில போங்க..நான் இவகிட்ட தனியா பேசனும் என்றான்,முகத்தை இருக்கமாய் வைத்து கொண்டு….
டேய் அது..வந்து….
பிளீஸ்…ஆன்ட்டி
சரி என்றவர்,டேய் எப்படியாவது இந்த சாப்பாட்ட அவளுக்கு குடுத்துடு என்று கூறிவிட்டு வெளியேறினார். .
ஷாரிகா எதுவும் கூறாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள்..அவளது கண்களோ கண்ணீரை சுரக்க, அவளது மனமோ ஊமையாய் கதறியது..அவளது மனமோ இன்று நடந்ததை நினைத்து பார்த்தது..”இப்படியே இருந்தால் ஒன்றும் ஆகாது..இந்த பிரச்சனைக்கு ஒரே முடிவு ப்ரனேஷிடம் பேசி ஒரு முடிவு எடுப்பது, என்று நினைத்தவள்,அவனது அலுவலகத்திற்கு செல்ல, அங்கிருந்த பியூனிடம் ப்ரனேஷ் இருப்பதை உறுதி செய்து கொண்டவள்,அவனது கேபின் கதவை திறக்க, அங்கே பிரனேஷ் இருந்த கோலத்தை கண்டு அதிர்ச்சியானாள்..
இவள் வந்து கதவை திறப்பதை கூட கவனியாது அவன் தன் மடியில் ஒரு பெண்ணை அமர்த்தி கொண்டு,அவளுக்கு முத்தம் கொடுத்து கொண்டிருந்தான்..இதனை சற்றும் எதிர்பார்க்காதவள்,எதுவும் கூறாமல் அமைதியாய் வீடு திரும்பி விட்டாள்..அவளது காதல் மனமோ நடந்ததை நம்ப மறுத்தது..ஆனால் அவள் கண்ட காட்சியோ அது உண்மை என்று அடித்து கூறியது..எப்படியோ அவளால் நம்ப முடியவில்லை..அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை..அவளது மனமோ ஆற்றாமையில் கதறி துடித்தது..அவள் இதுவரை ஆசைப்பட்ட அனைத்தும் அவளுக்கு கிடைத்திருக்கிறது…அதனால் ப்ரனேஷ் இல்லை என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. இதற்கு மேல் நான் உயிரோடு இருந்து என்ன பயன் என்று முடிவெடுத்தவள் அருகில் இருந்த கத்தியை எடுத்து தனது வலது மணிகட்டை அறுத்துக் கொண்டாள்..அதன் பிறகு அவள் அன்னை வந்ததோ,டாக்டர் வந்து கட்டு போட்டு சென்ற எதுவுமே அவளுக்கு தெரியாது..இவன் வருவதற்கு சில நிமிடத்திற்க்கு முன்பு தான் அவள் விழித்திருந்தாள்…இவனுக்கு யார் சொல்லிருப்பா!என்று யோசித்தவளுக்கு, அவளது அன்னையே என்று பதில் கிடைத்தது…
ஏன்டி..நீ என்ன பைத்தியமா?எதுக்காக இப்படி எல்லாம் பண்ற…கத்தினான்…
அவள் எதுவும் கூறாமல் அமைதியாய் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்..
உன்கிட்ட தான் கேக்குறேன்..என்றான் அதட்டலாய்…?
அந்த பொண்ணு யாரு?
எந்த பொண்ணு?
அதான் ஆபீஸ்ல மடில…அதற்கு மேல் அவளால் கூற முடியவில்லை…கண்கள் கலங்கியது..
நீ ஆபீஸ் வந்தியா?அதிர்ச்சியாய் கேட்டான்…
வந்ததுனால தான நீ யாரு!எப்படிபட்டவனு தெரிஞ்சது…
வாட் யூ மீன்?
நடிக்காத..பட்டப்பகல்ல அதுவும் ஆபீஸ்ல ஒரு பொண்ண கட்டிபுடிச்சு..முத்தம் கொடு….
போதும் நிறுத்து..நான் யாரோ ரோட்ல போறவள கட்டி புடிக்கல..என் மனசுக்கு புடிச்ச ஒருத்தி,எனக்கு மனைவியாக போற ஒருத்தி கூட தான் நான் அப்படி இருந்தேன்..கோவமாய் கூறினான்…
அவன் கூறியதை கேட்டு அதிர்ந்து விட்டாள்..இவள் ஒரு நல்ல தோழி என்பதால் தான் இவன் தன்னை வேண்டாம் என்று கூறியதாக நினைத்தாள்..ஆனால் அவன் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறான் என்று சத்தியமாய் அவள் நினைக்கவில்லை..
நீ..நீ.என்ன சொ.. சொ..ல்ற?நீ லவ் பண்றியா?
எஸ்..
யாரு அந்த பொண்ணு!..யாரோ ஒரு பெண்ணை எப்படி காதலிச்சு கல்யாணம் பண்ணுவ ?”
அவ யார ஒருத்தி இல்ல ? என்னோட உயிர்..கூடிய சீக்கிரம் எனக்கு மனைவி ஆக போறவ ..என்றவன் வாடியிருந்த அவள் முகத்தை பார்த்தான் .. முகம் பார்த்தே அகம் படிக்கும் வித்தையில் அவன் கில்லாடி ? அவள் பாவனையில் ஓரளவு அவனுக்கு நடந்தது புரியவும் , நேரடியாகவே அவளிடம் கூறினான்..
இதோ பாரு ஷாரிக் நான் உன் மேல தப்பு சொல்லல.. நம்ம மனசு எல்லாரையும் நட்பாகிக்கும் .. ஆனா காதல் ஒருத்தர் மேல மட்டும்தான் வரும் .. அது அவ மேல எனக்கு வந்துருக்கு.. அதுக்காக உன்ன பிடிக்காதுனு இல்ல…எனக்கு உன்ன பிடிக்கும்.ஒரு தோழியா ரொம்ப பிடிக்கும்.ஆனா காதலியானா சத்யமா ஏத்துக்க முடியாது..நம்ம சின்ன வயசிலிருந்து ஒன்னாவே இருந்துருக்கோம்..ஒன்னா சாப்பிட்டுருக்கோம்.அதெல்லாம் உன்ன ஒரு நல்ல ப்ரண்டா நெனச்சு தான்..இன்னும் சொல்ல போனா நீயும்,நவீனாவும் எனக்கு ஒன்னு தான்..அத தவிர என் மனசுல உன்ன பத்தி வேற எந்த எண்ணமும் இல்ல.ஆனா உனக்கு என்மேல காதல் வந்துருக்கலாம்..அதுக்கு காரணம்..ரொம்ப சிம்பல், நான் உன்னோட நல்ல ப்ரண்ட் .. எனக்கு உன்னை நல்லா தெரியும் ,.. உனக்கும் என்னை நல்லா தெரியும் .. நாம ஒருத்தரை பற்றி இன்னொருத்தர் நிறைய தெரிஞ்சு வைச்சிருக்கோம் . நாம கல்யாணம் பண்ணிகிட்டா நல்லா இருக்கும்னு நீ யோசிச்சிருப்ப.. “ஆனா அதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது? என்றவன் உனக்கு புரியுனு நெனைக்கிறேன்..இனிமேலாவது தயவு செய்து இந்த மாதிரி தப்பான முடிவு எதுவும் எடுக்காத!
அவள் எதுவும் கூறாமல் அமைதியாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்…
இதோ பார் டி .. இதெல்லாம் என்மேல உள்ள ஒரு அபெக்சன் டி…நாளைக்கு யாருன்னே தெரியாமல் ஒரு ஹீரோ உன் லைப் ல வருவான் .. அன்னைக்கு உலகமே ஜெயிச்ச மாதிரி நீ பீல் பண்ணி அவனோடு கை கோர்த்துப்ப .. அன்னைக்கு நான் சொன்னதோட அர்த்தம் உனக்கு நன்றாக புரியும் .. இந்த மேஜிக் எல்லாம் எப்போ நடக்கும்ன்னு எனக்கு தெரியாது .. ஆனா கண்டிப்பா எல்லாரு லைப்லயும் இது நடக்கும் .. எனக்கு நடந்த மாதிரி..ஆறு பருவ காலங்களில் வசந்தகாலம் மாதிரி , மனிதன் வாழ்க்கையில் அந்த மேஜிக் தான் வசந்த காலம் .. உன் வசந்தகாலம் நிச்சயமா நான் இல்லை .. அப்படி இருக்கும்போது நிச்சயமா என்னால் உனக்கு நிறைவான எதிர்காலத்தை தர முடியாது ” என்று தெளிவாய் தீர்மானமாய் கூறினான் அவன் ..
அவள் அவனையே பார்த்து கொண்டிருக்க…
சரிடி இதுக்கு மேல பேசி உன்ன குழப்பல..ஒழுங்கா சாப்பிடு என்று கண்டிப்புடன் கூறி அவளுக்கு ஊட்டி விட்டவன், “இனிமே இப்படி பண்ணாத” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் …
மித்ரா தனது மொபைலில் இருந்த நம்பரையே பார்த்து கொண்டிருந்தாள்..கால் பண்ணலமா!வேணாம என்று யோசித்தவள்,கால் பண்ணலாம் என்று முடிவெடுத்து அந்த நம்பரை அழுத்த, அந்தபக்கம் ரிங் செல்ல சட்டென கட் செய்தாள்..அவளது மனமோ வழக்கத்தை விட அதிகமாய் துடித்தது…
ச்ச கால் போயிருக்குமா?இல்ல இல்ல போயிருக்காது…என்று யோசிக்கும் போதே அந்த நம்பரிலிருந்து கால் வர எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்..அவளது கைகளோ லேசாய் நடுங்க எடுத்தவள்,மிது என்ற கவிலாஷின் குரலை கேட்டு அதிர்ந்து போனாள்..எத்தனை வருடம் ஆகிறது..இன்னும் என்னுடைய நம்பரை மறக்காமல் இருக்கிறானே?என்ற நினைப்பே அவள் தொண்டையை அடைத்தது….
மிது ……
லாஷ்…..
சொல்லு மிது ..கால் பண்ணிருக்க….
என்ன கூறுவாள்..அப்படியே அமைதியாய் இருந்தாள்…
மிது எனக்கு இப்பவே உன்ன பாக்கனும் போல இருக்கு..பீளீஸ் நீ எங்க இருக்க..என்றான் குரல் கரகரக்க…
அவனது பேச்சில் தெரிந்த மாற்றத்தை கண்டவள் என்ன நினைத்தாளோ தான் இருக்கும் வீட்டின் அட்ரசை கொடுத்தாள்…
ச்ச… நான் என்ன பண்ணி வச்சிருக்கேன். அவன் கேட்ட உடனே நான் அட்ரச குடுத்துட்டேன்..சுகுக்கு தெரிஞ்சா நான் அவ்ளோ தான்?..அவன் வந்தா என்ன பண்றது…என்று யோசிக்கும் போதே கதவு தட்டும் சப்தம் கேட்க…
தயங்கி தயங்கி தயங்கி கதவை திறக்க, அங்கு நின்றவனை பார்த்து அதிர்ந்து போனாள் மித்ரா..இரண்டு நாட்கள் முன்பு பார்க்கும் போது மயக்கும் விழிகளால் இவளை ரசித்தவனா இவன்..இல்லை ..சத்தியமாக இது அவன் இல்லை..கண்கள் சோர்ந்து போய்,முடிகள் எல்லாம் கலைந்து போய்,பார்பதற்கே பாவமாய் இருந்தவனை ஒன்றும் புரியாமல் அவள் பார்க்க…சட்டென மிது….என்று அவளை அணைத்திருந்தான்…
இதை சற்றும் எதிர்பார்க்காதவள் ஒரு நிமிடம் திகைத்து நின்றாள்…லாஷ். என்ன பண்றீங்க என்று கேட்டு அவனை விலக முயல, அவனது சூடான கண்ணீர் அவளது தோள்பட்டையை நனைத்தது…
லாஷ்..லாஷ்..அழறீங்களா? என்று அவனை கேட்க..அவன் எதுவும் கூறாமல் அமைதியாய் இருந்தான்..
அவனை விலக்கி அங்கிருந்த சோபாவில் அமர வைத்தவள் அவனுக்கு குடிக்க தண்ணீர் குடுத்தாள்…
லாஷ் என்னாச்சு…!நான் இப்படி உங்கள பாத்ததே இல்ல…எதாவது பிரச்சனையா?
அவன் அமைதியாகவே இருக்க, அவனது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது…
அவன் அழுவதை பொறுக்க மாட்டாமல் நாற்காலியை இழுத்து அவனுக்கு எதிரே போட்டு கொண்டு அவனது இரண்டு கைகளையும் எடுத்து அவள் கைக்குள் பொத்தி கொண்டு,….லாஷ் என்னாச்சு…சொன்னா தான தெரியும் என்று கூற…
அ..ப்..பா. இறந்து போயி….அதற்கு மேல் அவனால் எதுவும் கூற முடியவில்லை…இதனை கொஞ்சமும் எதிர் பாக்காதவள் அதிர்ந்து போய் எ..ப்போ?என்றாள்…
அவன் எதுவும் கூறாமல் இறுகி போய் அமர்ந்திருந்தான்..அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது..அவனை எப்படி சமாதானம் படுத்துவது என்று தெரியாமல்’அழுது முடிக்கட்டும் என்று அமைதியாய் இருந்தாள்..அந்தோ பரிதாபம் அவன் அழுகையை நிறுத்துவதாய் இல்லை…
இதற்கு மேல் அவனிடம் எதுவும் கேட்டு அவனை மேலும் சங்கபடுத்த விரும்பாதவள்,அவனை அணைத்து ஆறுதல் கூறினாள்…தந்தை இறந்த பிறகு அழ கூட தோன்றாமல் இருக்கமாய் இருந்தவன் தன் காதலியின் முன்பு கோழையாகி போனான்…வாய்விட்டு கதறினான்…அவள் எவ்ளோ கூறியும் அவன் சமாதானம் அடையாமல் அழுதான்..அவனது அழுகையை எப்படி நிறுத்துவது என்று மட்டுமே யோசித்தவள்,அவளது கடந்த காலத்தை மறந்தாள்..அவள் வாழ்க்கையில் இதுவரை போட்டு வைத்திருந்த கோட்பாடுகளை மறந்தாள்,அவளுக்கு இப்போது அவனுடைய அழுகையை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பது மட்டுமே குறியாய் இருக்க, அவனது இரண்டு கன்னத்திலும் கையை வைக்க அவனுடைய சூடான கண்ணீர் அவளது கையில் வழிந்தது..அதற்கு மேலும் தாமதிக்காமல் சட்டென அவனது இதழில் தன் இதழை பொறுத்தினாள்…இதை சற்றும் எதிர்பார்க்காத கவிலாஷ் அதிர்ந்து போய் நின்றது ஒரு நிமிடமே…அடுத்த நிமிடம் அவள் ஆரம்பித்த வேலையை தனதாக்கி கொண்டான்…அவன் மனதில் உள்ள பாரம் அவனை அழுத்த, அவளின் இதழில் தனது பாரத்தை இறக்கினான்..அவளது இதயம் அதிவேகயாய் துடித்தது..அவனது அழுகையை நிறுத்த அவள் செய்த செயல் அவளுக்கே வினையாகி போனது..அவனின் அதிரடி முத்தத்தில் அவளுக்குள் தீ மூண்டது..
அவனின் முத்தத்தில் மீசையின் உராய்வில் உடல் நடுங்க, மெதுவாக தன் முகத்தை அவனின் பிடியில் இருந்து இழுத்து கொள்ள முயன்றாள்..
ஆனால் அவனோ விடாமல் இறுக பற்றிகொண்டு . தன் இதழ் என்னும் தூரிகையால் அவள் இதழில் கோலம் வரைந்தான்.. மேலும் அவளை நெருங்கி அமர்ந்து அவள் கழுத்து வளைவை அடைந்தான். அவனின் இச்செயளில் அவளுக்கு குப்பென்று வியர்க்க, அவனிடமிருந்து நகர்ந்து அமர்ந்தாள்..
ஆனால் அவளை நகர முடியாதபடி அவளது இடையில் கையிட்டு தன் புறம் இழுத்தான்..அவனது இந்த செய்கை அவளுக்குள் மின்சாரத்தை பாய்ச்ச,
அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்தாள்..
தன்னை தடுத்த அவளிரு கைகளையும் தன் ஒரு கையால் பற்றி அவளை கீழே சாய்த்தான் அவன்..
அவளது இதயம் அதி வேகத்தில் துடித்து கொண்டிருந்தது.. அவனின் மூச்சுகாற்றின் வெப்பம் அவளின் முகத்தில் பட்டு அவளது பூவுடலை நடுங்க செய்தது…
அவனின் இதழ் சூட்டில் அவள் இதயம் கரைய, அவளது மூளையோ விலகச் சொன்னாலும். காதல் மனமோ தாபமாய் தீ மூட்டி அவளை மோகத் தீயில் தள்ள. விலகவும் முடியாமல் அவனை நெருங்கவும் முடியாமல் இரு தலைக் கொல்லி எறும்பாய் தவித்தாள் …
அவளின் இதய துடிப்பின் வேகத்துக்கு அவளிதழ்கள் துடிக்க மோகத் தீயை முத்தப் போர்வையால் தன் இதழ்கொண்டு மூடினான்…
மோகத்தீ சிறு காட்டுத்தீயாய் மாற, அத்தீயில் இருவரும் தகிக்க, அவன் விலக முடியாமலும் அவள் விலக்க முடியாமலும் தவித்தாள்.. அவள் மேனியில் அவன் கைகள் அத்து மீற அவளின் தண்டுவடம் சில்லிட்டுப் போனது..
கைகளின் வேலையை இதழ்கள் தன் கையிலெடுத்ததில் கூச்சத்திலும் தவிப்பிலும் உறைந்தே போனாள் அவள்..
அத்து மீறும் அவனை அவள் முடிந்த மட்டிலும் தடுக்க,.. ஆனால் அவளால் முடியவில்லை… தடுப்புகளை தகர்க்கும் வேங்கையாய் இருந்தான்…
அதற்கு மேல் தளமாட்டாதவன் எழுந்து அவளையும் கைகளில் அள்ளிக் கொள்ள அடுத்து அவனின் செயலை அறிந்து கொண்டவள் அதிர்ந்தே போனாள்….
லாஷ்..பிளீஸ்.வேண்டாம் என்று அவள் கெஞ்சியது பாவம் அவளுக்கே கேட்கவில்லை…
மிது பேபி பீளீஸ்.. பிளீஸ். என்று மட்டுமே அவன் ஜெபிக்க…காதல் கொண்ட இதயம் அவனை தடுக்க தடை செய்தது…அதற்கு மேல் அவள் தடை சொல்லாது தன்னவனின் பாரத்தை சுமக்கும் சேயாய் மாறிப்போனாள்..கவிலாஷ் தனது மனப்பாரம் நீங்க தன்னவளின் காதலில் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பித்தான்…அவன் தன் பாரம் நீங்க அவளுடன் இணைந்தாலும்,அவனை அதிகமாய் நாடியது அவள் தான்…இருவரும் மறந்து போன காதலை மீட்டெடுக்க போராடினர்…அங்கு நடந்த கட்டில் யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது..கவிலாஷ் தன் மீது கிடந்தவளின் நெற்றியில் அழகாய் முத்தமிட்டு”தாங்க்ஸ் பேபி”என்றாள்…
என்னது “தாங்க்ஸா”என்றவள் எம்பி அவனது காதை கடிக்க..
அடியேய் ராட்சசி வழிக்குதுடி என்று கத்தியவன் அவளை இழுத்து அணைத்து கொண்டான்..
லாஷ் இப்போ நடந்தது தப்பில்லையா?..என்றாள் தயங்கியபடி…
கண்டிப்பா இல்லடா..நீ தான் என்னோட மனைவினு நான் முடிவு பண்ணி பல வருஷம் ஆச்சு…நீ எதுக்கும் பயப்பட வேண்டாம்..நான் கூடிய சீக்கிரம் அம்மாவ கூட்டிவந்து பேசுறேன்…
லாஷ் அதுக்கு முன்னாடி நான் உங்க கிட்ட ஒரு விசயம் பேசனும்..
என்னடா சொல்லு…
என்னோட கடந்த காலத்த பத்தி…
அதான் எனக்கு தெரியுமே..!
இல்ல லாஷ் உங்களுக்கு தெரியாதது இன்னும் நிறைய இருக்க…ஒருவேளை அதெல்லாம் தெரிஞ்சா நீங்க என்ன ஏத்துப்பீங்களானு கூட தெரியாது என்று கூறி கண்ணீர் வடித்தாள்…
ஏய் லூசு மிது..உன்னோட பாஸ்ட்ல எது வேணா நடந்துருக்கலாம்..அத பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல..நீ எப்பவுமே எனக்கு சொந்தமானவ..சோ நீ எதையும் நெனச்சி குழப்பிக்காத…
இல்ல லாஷ் அத பத்தி நான் உங்கிட்ட சொல்லியே ஆகனும்…என்றாள் பிடிவாதமாய்…
சொல்லாம விடமாட்ட…சரி சொல்லு என்றான்..அவளை மேலும் இறுக்கியனைத்து…
லாஷ் நான்..ஏற்கனவே..என்னும் போதேஅவனது போன் அடிக்க …எடுத்தவன் “ஓகே”நான் இப்பவே அங்க வரேன் என்று கூறி போனை வைத்தவன் ,அவளின் நெற்றியில் இதமாய் முத்தமிட்டு,நீ எத நெனச்சும் கவலை படாத மிது..எல்லாத்தையும் நான் பாத்துகிறேன்..இப்போ எனக்கு அவசரமா போக வேண்டி இருக்கு..நான் போய்டு வந்துடுறேன் என்றவன் அவளிடம் விடைபெற்று கொண்டு அங்கிருந்து கிளம்பினான்…
மித்ரா சிறிது நேரத்திற்கு முன்பு நடந்த ஊடலை நினைக்க, அவளது முகம் செவ்வானமாய் சிவந்து போனது..தன் வாழ்க்கையில் எது நடக்கவே நடக்காது,யாருடன் இறுதி வரை சேரவே முடியாது என்று நினைத்திருந்தாலோ,அது ஓரே நாளில் மாறிப் போனதை நினைத்து மனம் மகிழ்ந்தாலும்,தான் மறைத்த உண்மைகள் அவனுக்கு தெரியும் போது என்ன நடக்கும் என்று நினைத்தவளுக்கு சிறிது கலக்கமாகவும் இருந்தது…