” அது வந்து அக்கா.. அரசிய நான் தான் பெரியவங்க முடிவு தெரியாம எதுவும் உங்க எல்லோரிடமும் சொல்ல வேண்டாம் என சொன்னேன். அதுவும் இல்லாம நீங்க.. ஆர்த்தி அண்ணி பல வருட பள்ளித் தோழிகள் அந்த நாள் ஞாபகம் வந்ததேனு பாடிட்டு.. இல்ல இல்ல .. பேசிட்டு இருந்திங்களா.. அதான் அரசி இருக்க போறதை சொல்லி.. பின் இல்லை என்று கூறினால் நீங்க வருத்தப்படுவிங்க இல்ல.. அதான் நான் முடிவு தெரிந்தவுடன் சொல்லாம் சொன்னேன். “
‘ வேந்தனை அந்த மூவரும் அவனை மேலும் கீழும் பார்க்க.. இதனை பார்த்த வேந்தன் என்ன இவங்க நம்மளை பார்க்கும் பார்வையே சரியில்லையே.. ‘
” என்ன வேந்தா?.. இங்கு இருக்கும் முடிவை எங்களுக்காக மட்டும் தான் எடுத்தியா?.. ” எனபாசமாக கேட்க.
‘ இதனை கேட்ட எழிலரசிக்கு.. யோகா அண்ணி பாசமாக கேட்டதிலே.. ஏதோ அவர்கள்வேந்தனிடம் கேட்கும் கேள்வியில் உள்குத்து உள்ளதோ?.. ‘
‘ அரசி வேந்தனுடன் பேசிவிட்டு வந்த இவ்வளவு நேரமும்..அவனுடன் இன்னும் சில மணி நேரம்கூட இருக்கும் வாய்ப்பு அமைந்து இருக்குகிறது என்று எண்ணிக் கொண்டுயிருந்ததாள். அவன்வந்து கூறியவுடன்.. அவளே தன்னை மீறி தன் மகிழ்ச்சியை அவனிடம் கண்ணடித்து வெளிப்படுத்திவிட்டாள். ‘ இப்போது இவர் ஏதாவது சொதப்பட்டும்.. அப்புறம் இருக்கு இவருக்கு ‘ என்று நினைத்து அவனை பார்த்தாள்.
” ஆமாம் அக்கா.. உங்களுக்காக தான்.. இன்னும் அதிக நேரம் இருக்கலாம்.. நல்லா பேசலாம் என நினைத்து தான் அக்கா. ”
இதனை கேட்ட சுரபி.. அண்ணா.. என்னை கோயிலில் எவ்வளவு பயப்பட வைச்சிங்க..இப்பபாருங்க… ” அப்படியா அண்ணா.. அப்ப சரி.. யோகா அக்கா.. மத்த பொண்ணுங்க.. நாங்க எல்லாம் இங்க இருக்கோம். நீங்க உங்க நண்பர்களுடன் இப்ப வீட்டுக்கு போங்க.. மாலை வாங்க.” என்றுகூறி அவனை கலங்கடிக்க.
இதனை கூறிய பின் சுரபியை இருவரின் வழிகள் புன்னகைத்தது.
” சுரபி.. அண்ணி.. ” என்று வேந்தனும்.. அரசியும் இருவரும் ஒரு சேர சுரபியை அழைக்க..
‘ இருவரும் பார்க்க.. அப்போது அரசி.. தன்னவனை பார்த்தாலே ஒரு பார்வை.. அவளின் அருகில்அவன் இருந்து இருந்தால் அவளிடம் அடி, உதை, பிறகு என்னவெல்லாம்மோ அவனுக்கு பரிசாக கிடைத்துயிருக்குமோ?.. வேந்தன் அவளின் பார்வை உணர்ந்து.. இப்படி பண்ணிட்டியே வேந்தா..போச்சு.. போச்சு.. இந்த முயல்குட்டி வேற நம்மளை கொலை வெறியா பார்க்குறாளே.. எப்படியாவது சமாளி வேந்தா.. இப்படி மாட்டிக்கிட்டியே.. எப்படி தப்பிக்க?. அப்போது தான் தன்அருகில் இருந்த நபரை பார்த்தான்.
” சரியா அண்ணா.. ” என திரும்ப கேட்க..
வேந்தன் புன்னகையுடன்.. ” ஏன்?.. சுரபி யோகா அக்கா.. ஆர்த்தி அண்ணி மட்டும் இங்கு ஸ்கூல் பிரண்ட்ஸா.. இளமதி.. நானும் கூட தான் ஸ்கூல் பிரண்ட்ஸ்.. நாங்க எல்லாம் பேசமாட்டோமா சொல்லு. ”
‘ இளமதி அவனை பார்க்க.. அவனும் இளமதியை பார்த்தான்.. அவன் கண் அவளிடம் ஆம் என்று கூறேன்.. என்று கெஞ்சல் இருந்தது. வேந்தனும், இளமதி பள்ளியில் நன்கு தெரிந்தவர்கள் அவ்வளவே. அதனால் தான் இந்த பார்வை. இளமதியும் வேந்தன் இப்போது இப்படி கூறுவான் என்று எதிர்பார்க்கவில்லை. பின் தான் ஞாபகம் வந்தது.. சற்றுமுன் தன் தங்கை வேந்தனை பார்த்த பார்வையில் இருந்த அக்னியை. ‘
” ஆமா அண்ணி.. நாங்களும் பிரண்டஸ் தான். நாங்க பேச வேண்டியதும் நிறைய இருக்கு.. அதனால வேந்தன்.. நீங்க வீட்டுக்கு போக வேண்டாம் இங்கேயே இருங்க. “
சுரபி.. ஓ.. அண்ணா நீங்க இப்படி வரிங்களா.. ” ஓ.. அப்படியா அண்ணி.. அப்ப சரி அண்ணி.. நீங்க பேசுங்க.. அப்ப எழில் நீ கிளம்பு.. உங்க பெரியப்பா வீட்டில் போய் இரு. ”
‘ வேந்தனுக்கு சுரபி.. எழிலை அவளின் பெரியப்பா வீட்டிற்கு போக சொன்னவுடன்.. எதுக்கு இவங்க இப்படி பண்ணுறாங்க?.. என யோசிக்க அப்போது தான் புரிந்தது.. அவர்கள் தன்னிடமிருந்து வேறுஒன்றை எதிர்பார்க்கிறார்கள் என்று. ‘
வேந்தன் புன்னகையுடன்.. ” என்ன சுரபி?.. என் வாயிலிருந்து வேறு ஏதோ எதிர்பார்க்கிறிங்க போல?. சரி உங்க ஆசைய கெடுப்பானேன். நான் இங்க இருக்கலாம் என்று கூறியதில்.. நான் அரசியோட இருக்க வேண்டும் என்ற காரணமும் அதில் இருக்கு. போதுமா. நீங்க எதிர்பார்த்தவார்த்தை வரியை.. என் வாயால் கூறியாச்சு.. நீங்க கேட்டாச்சு.. மகிழ்ச்சியா?.. ”
யோகா, ஆர்த்தி, சுரபி மூவரும் சிரிப்புடன் ஹய்பைய் அடித்துக் கொண்டனர். ” இதை இதைதான்நான் எதிர்ப்பார்த்தேன்.. அண்ணா. ”
” ம்.. ஸ்கூல் பிரண்ட்ஸ் எல்லாம் ரொம்ப வருடம் கழித்து எதிர்பாராம்ம.. எதிர்பாராத இடத்தில் பார்த்துயிருக்கோம்.. மாலை நிகழ்ச்சிய காரணமாக வைத்து.. நாம்ம எல்லாம் ஒன்னாயிருக்கலாம் நினைச்சா.. நீங்க எல்லாம் என்னை வைத்து காமெடி பண்ணியிருக்கிங்க. அதனால நீங்கயெல்லாம் பேசுங்க.. இந்த வேந்தன் உங்க கூட இப்ப பேச போவதுயில்ல.. வா அரசி நாம்ம.. தனியா போய் பேசலாம். ”
‘ அனைவரின் முன்னும்.. இமைக்கும் நொடிப் பொழுதில் தன்னவளை தன் அருகில் இழுத்து.. தன் தோள் வளைவில் நிறுத்திக் கொண்டான். தன்னவனின் அதிரடியாக செய்த செயலை பார்த்து.. அவனின் தோள் வளைவில் நின்றவளோ.. சிலையாக நின்றாள். ‘
மற்றவர்கள் அவனின் இந்த செயலை.. அதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்படியே பார்த்துநின்றனர் ஒரு நொடி.. முதலில் சுதாரித்த திலகன் ” டேய்.. டேய் வேந்தா.. நாங்க எல்லாம்இருக்கோம்.. ஞாபகம் இருக்கா.. இல்ல இது வீட்டோட ஹால் பக்கத்தில் இருக்க.. ” எனக் கூறியபின் அவனிடம் குனிந்து.. ” டேய் இவ்வளவு நேரம் ரூம்மினுள் தனியா உட்கார்ந்து பேசியது போதாதுனு.. இப்ப திருப்ப தனியா போய்.. பேசுவதற்கு பிளான் பண்ணுறியா?.. இல்லவேற.. ” என இழுக்கும் போது.. வேந்தன் திலகனை முறைக்க.. ” டேய் என்னைய முறைப்பதை விட்டுவிட்டு.. அங்கு பாரு.” என மற்றவர்களை காண்பிக்க அவர்கள் இவனை.. வாயில் கைவைத்தப்படி இருக்க..
” என்ன?.. நான் இங்க உங்க கூட இருக்கவா?.. வேண்டாமா?. ”
சுரபி புன்னகையுடன் ” தாராளமா இங்க இருங்க அண்ணா.. இருங்க. ஆனா கொஞ்சம் அந்த கைகைய எழில் மேலயிருந்து எடுத்துட்டு இருக்கலாம் அண்ணா. ”
” ம்.. இது ஓகே வா. நீங்க பண்ணியதற்கு இதுக்கு மேலே என்னால முடியாது ப்பா.” அவன் கையை தோளின் மீதுயிருந்து எடுத்துவிட்டு.. அரசியின் கையை பிடித்துக் கொண்டான்.
” ம்.. பரவாயில்ல. பரவாயில்ல.” என்றாள் சிரிப்புடன்..
” ம்.. “
“ஆர்த்தி” என அழைப்புடன் உள்நுழைந்தார் அருட்செல்வம். அவருடன் அமுதன், அருள்நிதி, கதிரவன், சுரேந்தர் ஆகியோர் வந்தார்கள்.
” வாங்க.. வாங்க மாமா. நீங்க மட்டும் தான் வருவீங்கனு நினைத்தேன்.. கூடவே எல்லோரையும் எதிர்பார்க்கல.”
” ஆர்த்தி.. நீ.. இங்க வாங்கனு மெசேஞ் பண்ணப்ப.. வேந்தனும் இங்க இருக்காங்கனு சொன்னியா.. அதான் அவங்களிடம் பேசலாம் என வந்தோம். ”
” ம்.. நல்ல காரியம் பண்ணிங்க மாமா. எல்லோரையும் உங்க கூட அழைத்து வரச் சொல்லவேண்டும் என நினைத்தேன்.. நீங்களே அழைச்சுட்டு வந்திட்டுங்க. சரி.. நான் எதுக்கு வரச்சொன்னேன்னா. ”
யோகாவிடம் திருப்பி.. ” யோகா.. இவர் தான் என் கணவர் அருட்செல்வம் ” என செல்வத்தை அறிமுகம் செய்ய.. செல்வத்திடம் ” என்னங்க இவ யோகா என்னோட ஸ்கூல் பிரண்ட்.. இப்ப வேந்தனோட அக்கா. ” எனக் கூறி இருவருக்கும் அறிமுகம் செய்துவைக்க.. இருவரும் அறிமுக புன்னகை புரிந்தனர்.
பின் வேந்தனிடம் திரும்பி புன்னகையுடன்.. ” வேந்தன் இவர் என் கணவர் அருட்செல்வம்.. இவர்தான் இளமதியோட கணவர் அருள்நிதி.. இவர் என் அண்ணா.. சுரபியோட கணவர் அமுதன். இவர் எழிலரசி.. எங்க தாய்மாமா பையன் சுரேந்தர்.. சுரபி அண்ணியோட அண்ணா. இவர் இளமதி கணவர் தம்பி கதிரவன். ” என வந்தவர்களை அறிமுகம் செய்ய.. அனைவரும் தங்களை கைகுலுக்கலுடன் அறிமுகம் புன்னகை செய்துக் கொண்டனர்.
வேந்தன் தன் அருகில் இருந்த அரசியிடம்… ” முயல்குட்டி.. உனக்கு 7,8 அண்ணாயிருக்குனு நீ சொன்னதா ஞாபகம் இருக்கு. 2 பேர் இங்கயிருக்காங்க.. மத்தவங்க எல்லாம் எங்க?.. ”
இப்போது என்னவென்று கூற என்று.. ” அப்புறம் சொல்கிறேன் தனு.. கொஞ்சம் தள்ளி நில்லுங்க. ” என்றாள் படபடப்புடன்..
‘ அவளுக்கு அண்ணா.. மாமா எல்லாம் இங்கு இருக்கிறார்கள்.. தனுவை தவறாக நினைத்து விடுவார்களோ என்ற பயம். அவர்கள் வந்தவுடனே தன் அக்கா பக்கம் செல்ல நினைத்தாள்.. ஆனால் தன்னவன் கண்டிப்பாக வருத்தம் கொள்வான் என எண்ணி.. சற்று தள்ளி நின்றுயிருந்தாள். இவன் என்னவென்றால் தன்னிடம் நெருக்கமாக நின்று கேள்வி.. அதுவும் நான் ஒரு காலத்தில்.. எனக்கு ஞாபகமே இல்லாத கேள்வி வேற.. அதான் பிறகு சொல்வதாக கூறினாள். ‘
ஆனால் இதனை எழிலின் மாமா அருள்நிதி பார்த்துவிட்டார். வேந்தனுக்கு ஏதாவது வேண்டும்மோ என்று.. ” என்ன வேந்தன் உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?.. கூச்சம்படாதிங்க. “
” இல்ல அண்ணா.. எனக்கு ஒன்னும் வேண்டாம்.”
” இல்ல எழிலிடம் ஏதோ கேட்டிங்களே.. அதான்.”
இதனை பார்த்த இளமதி ” எழில்.. வேந்தன் என்ன கேட்டார்?.. ” தன் தங்கையின் கணவராக வரப்போகிறவர்.. ஏதோ கேட்கிறார் அவர் விருப்பம் அறிந்து செய்ய வேண்டும் என நினைத்து கேட்க..
” அக்கா.. அவர் ஏதும் கேட்கல?.. ”
இவ கூறமாட்ட என நினைத்து.. ” வேந்தன் என்ன கேட்டிங்க?.. ”
உடனே வேந்தனிடம் கேட்க.. அவன் அரசியிடம் கேட்டது அவனை பொறுத்தவரை சாதாரண கேள்வி என்பதால் அரசியிடம் இருவரும் திரும்ப திரும்ப தன்னால் தானே அவளிடம் கேட்கிறார்கள்.. என நினைத்து..
” அது வந்து இளமதி.. ” என அவன் கூறவரும் போது “அம்மா ” என மெதுவாக கத்த..
மற்றவர்களில் இவர்களின் பேச்சை சிலர் கவனிக்கவில்லை.. அவர்களுக்கு உள்ளே பேசிக் கொண்டுயிருந்தனர். அம்மா.. என்ற அலறலில்.. அனைவரும் வேந்தனை பார்க்க.. வேந்தன் முழித்துக் கொண்டுயிருந்தான்.
ஏனெனில் அரசி அவனின் கையை கிள்ளியிருந்தாள். அவன் ‘ ஏன் முயல்குட்டி?..ஏன்?.. ‘ என்பது போல அரசியை பார்த்தான்.. அவள் ‘ ம்ஹூம்.. ‘என தலையை ஆட்டினாள்.. இவர்களை பார்த்தவர்கள் என்ன?.. என ஆர்வமானார்கள்.
” வேந்தன் என்னாச்சு?.. என்ன கேட்டிங்கனு நான் கேட்டது தப்பா?.. அவ வேற உங்களை கிள்ளுறா.. இப்ப சொல்லப் போறிங்களா இல்லையா?.. ” அரசி கிள்ளியதை பார்த்துக் கேட்க..
‘ முயல்குட்டியிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டேன்.. அந்த ஒரு கேள்விக்கு இவ்வளவு அக்கப்போரா. சொல்லுட வேந்தா.. இந்த முயல்குட்டி என்ன பண்ணிவிடுவா ‘ அவளைமாட்டிவிட நினைக்க.
அவளை ஒரு பார்வை பார்த்து.. ” அது ஒன்னும் இல்ல இளமதி.. அரசி என்கிட்ட எனக்கு 7,8 அண்ணா இருக்காங்கனு சொன்னா. அதான் 2 பேர் இங்க இருக்காங்க.. மீதிபேர் எங்குனு மட்டும்தான் தாங்க கேட்டேன். ” என அவன் கூறி முடிக்கவும்..
‘ அந்த அறையில் இந்த எழிலரசியின் உறவினர்களில் ஆர்த்தி, இளமதி தவிர மற்றவர்கள் எல்லாம் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். அதிலும் எழிலின் தோழி சத்யா, தர்ஷினி, சுரபி அவர்களின் சிரிப்பு சத்தம் சற்று அதிகமாக கேட்டது. ‘
‘ வேந்தனுக்கும்.. மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.. இதில் என்ன இருக்கிறது?.. என்று பார்க்க.. வேந்தன் அரசியை பார்க்க.. அவனை எரித்துவிடுவது போல முறைத்துக்கொண்டுயிருந்தாள்.. ஆனாலும் அவள் வேந்தனின் அருகில் இன்னும் சற்று நெருக்கமாக நின்றாள்.. இளமதி, ஆர்த்தியை பார்க்கவே இல்லை அவள். ‘
” என்ன முயல்குட்டி?.. நான் நீ சொன்னதான் கேட்டேன்.. அவங்க வேற சிரிக்கிறாங்க?.. அதுக்கு ஏன் நீ என்னை முறைக்கிற?.. ஆனாலும்.. உன் முகமே வேற சரியல்ல.. ஏன் அரசிம்மா?.. ”
” நான் வேண்டாம் என கூறியும்.. அதான் நீங்க என்னிடம் கேட்டத அவங்களிடம் சொல்லிவிட்டிங்க தானே.. அவங்களிடமே கேளுங்க. ” கண்கள் சிறிது கலங்கியிருக்க..
அவளின் கலங்கிய கண்களை பார்த்தவன்.. ” என்ன இளமதி?.. நீங்க கேட்டிங்க.. நான் சொன்னேன். எதுக்கு இப்ப நீங்க அரசிய முறைக்கிறிங்க?.. ஏன் அவங்க சிரிக்கிறாங்க?.. ” சற்றுஅழுத்தமாக இளமதியை கேட்க..
இளமதி அவனின் அழுத்தத்தை கவனிக்கவில்லை.. அவள்.. அரசியை பார்த்து.. ” ஏன்டி?.. எங்க கல்யாணத்திற்கு முன் தான் சின்னபிள்ளை.. மாமாவ அண்ணானு கூப்பிட்ட.. இப்பவும்.. அதுவும் வேந்தனிடம் மாமா எல்லாரையும் அண்ணானு சொல்லியிறுக்க. ”
‘ வேந்தனுக்கு அப்போதுதான் புரிந்தது.. அய்யோ.. முயல்குட்டி சின்ன பொண்ணா இருந்தப்ப சொன்னது.. ஏன் இப்ப ஞாபகத்திற்கு வரனும்.. இதுக்குதான் முயல்குட்டி முறைச்சா போல.. முயல்குட்டி என்னால திட்டு வாங்குறா?.. ஆனா ஏன்?.. கண்ணு கலங்குறா?.. ஏதோ சரியில. ‘
” இளமதி.. அவங்க முன்னாடினு சொன்னத நான் சரியா புரிஞ்சுக்கல போல.. இதுக்கு எதுக்குநீங்க அரசிய முறைக்கிறிங்க?.. சரி அப்படியோ அண்ணானு கூப்பிட்டாலும் இதில என்னங்க இருக்கு?. அரசி.. அவங்க மாமாவ எல்லாம் அண்ணா மாதிரி உணர்ந்தா அது மாதிரியே கூப்பிட்டும் என்று விடவேண்டிதானே. ” சற்று கோபத்துடன் கேட்க.
இப்போது தான் இளமதி அவனின் குரலில் உள்ள மாற்றம் உணர்ந்து.. சற்று தன்மையாக.. ” அதுஎப்படி வேந்தன்?. இப்ப அவ கூப்பிட்டா.. பார்ப்பவர்களும் திட்டுவாங்க.. உறவுமுறை மாறி.. பிறகு அடுத்த தலைமுறையில் குழப்பம் வரும். இதுதேவையா சொல்லுங்க?.. ”
எங்களின் அடுத்ததலைமுறையா!.. நினைத்தவுடனே இனித்தது. புன்னகையுடன்.. ” இளமதி முதலில் இப்ப இருக்க அரசி பாருங்க.. அடுத்த தலைமுறைய பற்றி கவலைப்படாதிங்க. நீங்க என்ன மறைமுக உறவுமுறை சொல்ல வரிங்களோ.. அந்த மாமா, அத்தை முறைகள் எல்லாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லங்க.. உறவுமுறையில் திருமணம் வேண்டும் என்றால்.. அவங்கதானாகவே என்ன முறை?.. என்று தெரிந்துக் கொண்டு.. பிறகுதான் அடுத்த கட்டத்திற்குகே போவாங்க. ”
” உதாரணத்திற்கு நீங்களும் அருள் அண்ணாவுமே சொல்லுங்க.. உங்கள் இருவரிடமும் தனித்தனியா உங்க உறவுமுறை கூறி.. அறிமுகப்படுத்தி வைத்தார்களா என்ன?.. இல்ல வேறுஉறவுமுறையில் யோசித்து இருங்கிங்களா?.. என்ன?.. ”
‘ இளமதி, அருள்நிதி தங்களின் சிறுவயது, இளம் பருவம், கல்யாண பருவம் என நினைத்து.. இல்லை என இருவரும் தலைஆட்ட..’
” ம்.. அப்படி தாங்க.. சிலது எல்லாம் சொல்லாமலே புரியும்.. அரசி இவங்க எல்லோரிடமும் சகஜம்மா.. நல்லா பேசுவாங்களா?.. ”
” இல்லை வேந்தன்.. அவ இவங்கள பார்த்தாளே.. அந்த இடத்திலேயே இருக்க மாட்டா. ஆனா அமுதன், பார்த்திபன் வந்தா.. அவளா?.. இவனு?.. இருப்பா. அவ்வளவு ஜாலியா இருப்பா.”
“ ம்.. இதில் இருந்து நீங்க ஒன்னு கொஞ்சம் புரிந்துயிருக்கனும். நீங்க சொல்வதற்காக.. அவங்க. எல்லோரையுமோ.. இல்ல உங்க இரண்டு பேரோட கணவர்களையோ கூப்பிட்டாங்கனு வைங்க.. உடனே பெரியவர்களுக்கோ.. இல்ல கல்யாணம் ஆகாதவர்களுக்கு திருமணம் எண்ணம் வந்துட்டா?. அண்ணனா நினைப்பவங்க என்ன பண்ணுவாங்க?.. இவங்களிடம் வந்து கேட்பர்களிடம்.. எண்ணம் இல்லை.. என்று சொல்லிவிடலாம். ஆனா அதன் பிறகு அவங்க இரண்டுபேர்களாலும் சகஜம்மாக இருக்க முடியுமா சொல்லுங்க. ”
” நானும் இந்த மாதிரி சூழ்நிலையை எங்க வீட்டில் சந்தித்து இருக்கேன். எனக்கு எங்க வீட்டில்.. மாமா பொண்ணு என்பதை தாண்டி வேறு யோசித்தது இல்ல.. வீட்டில் அவங்களோட அதிக பேசாம விலகிதான் போவேன்.. அப்படியிருந்தும் பெரியவங்க கேட்டாங்க.. அப்பதான் நான் உறுதியா என்னோட எண்ணத்தை கூறினேன். அதன் பிறகுதான் என்னால சாதாரணமாகவே பழக பேசமுடிந்தது. ”
” அதனால் அரசியோட உணர்வுகளை புரிந்துக் கொண்ட வரையில் சொல்றேன்.. அரசி சோஸ்மாட் இளமதி.. சின்ன பொண்ணா இருந்த அப்பவே.. அவங்க மனசில் இருந்ததை.. எதை பற்றியும் கவலைப்படாம எல்லாருக்கும் தெரியப்படுத்தி இருக்காங்க. “
” நீங்க மட்டும் அரசியிடம் அவங்கள அண்ணாவ நினைப்பத்தில் தப்பு இல்லனு சொல்லியிருந்தால். இந்நேரம் அரசி.. கொஞ்சம் மெச்சூரிட்டி வந்தவுடனே அமுதன், பார்த்திபன் கூட பழகுவதை போலவே பழகியிருப்பாங்க. உங்க விருப்ப அழைப்பையும் அவங்க கூப்பிட்டுயிருப்பாங்க. அதே சமயம் எந்த பிரச்சனையும் வந்துயிருக்காது.. வந்தாலும் அதனைஅவங்க நிலைமையை சமாளித்து.. அதன்பிறகு எல்லோரிடமும் சாதாரணமாக பழகும் மனநிலை வந்துயிருக்கும். அதனால இனிமேல் அரசி மனசுல இருப்பதை கூப்பிட்டா முறைக்காதிங்க.. இப்படி சிரிக்காதிங்க. அப்புறம் அரசி எப்பவும் அவங்களிடம் சாதாரணமா கூட பேசவே மாட்டாங்க. உங்களுக்கு அரசி உங்க கணவரிடம் பேசாம இருப்பது.. நல்லாயிருக்கா?.. ”
” இல்ல வேந்தன். ஆரம்பத்தில் வருத்தம், கோபம் வந்தது.. அப்புறம் பழகியிருச்சு.. “
” ம்.. காரணம் இதுதான்.. நீங்க அரசிய திட்டியிருப்பிங்க அதனால அரசி பேசினா தானே பிரச்சனை என்று.. பேசாமாலே இருந்துயிருப்பாங்க. இனிமேலாவது அவ மனசுல என்ன நினைத்து அவங்களிடம் பேச வேண்டும் தோணுதோ பேசவிடுங்க. அதனால அரசிய பீரியா விடுங்க.. சரியா. ” என்று கூறியவுடன் அரசியின் மாமாக்களை பார்த்து..
” அண்ணா உங்களுக்கு எல்லாம் நான் சொன்னதில் ஏதும் தவற தெரியுதா?.. இல்லை என்றால் எனக்காக அரசியிடம்.. சொல்லிருங்க மற்றவர்கள் இல்லாத போது அண்ணாவென்று கூப்பிட்டுக்கொள் என்று ”
அருள்நிதி மற்றவர்களை பார்த்தான் அவர்கள் புன்னகைமுகமாக இருக்கவும்.. பிறகு அவனும் புன்னகையுடன் “ எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல வேந்தன்.. தெரியாம கூப்பிட வேண்டும் அவசியம் இல்ல. எழில் எங்களை அண்ணா என்று தான் நினைக்கிறாள் என்று.. வீட்டல எல்லோருக்கும் தெரியும். அதனால தாராளமா எல்லோர் முன்பு கூப்பிட்டாலும் எங்களுக்கு ஒன்னும் இல்ல. ” என்று கூறி தன் சகோதர்களை பார்க்க.. அவர்களும் சரி என்று என்னும் விதமாக புன்னகைத்தனர்.
‘ வேந்தன் அவர்களை பார்த்துவிட்டு.. தன்னவளை பார்க்க அரசி முகம்கொள்ள மகிழ்ச்சியுடன்.. கண்களில் இப்பவோ.. அப்பவோ விழும் விழிநீருடன் தன்னவனை பார்த்தாள். ‘
‘ அவனுக்கும் புரிந்தது.. அரசியின் தற்போதைய நிலை இவ்வளவு நாள் தன் மனதில் இருந்தை சிலநிமிடத்தில் உணர்ந்ததும்.. அதை தனது எண்ண உணர்வுகளை மற்றவர்களுக்கு புரியவைத்து.. அதற்கான விடையையும் உடனே தந்துவிட்டதினால் மகிழ்ச்சியினால் வந்த விழிநீர் என்று. ‘
‘ அவனுக்கு சிறிது வருத்தமும் கூட.. இவ்வளவு நாள் அவள் மனதளவில் சில பிரச்சனைகளை சந்தித்து உள்ளாள் என.. அதேநேரம் அவளின் மனக்குறையை தன்னால் போக்க முடிந்தது.. என்று மகிழ்ச்சியில் ஒன்றை செய்ய நினைக்கையில்.. ‘
” அண்ணா.. ” என்று அழைப்பில்.. தன்னுணர்விற்கு வந்தான். யாருட அது?.. என திரும்ப.. அங்கு சுரபி.. நான் உங்களை கண்டுக்கொண்டேன்.. புன்னகையுடன் அவனை பார்த்தாள். அவனும் திருப்பி அசடுவழியும் முகமாக புன்னகைத்தான்.
” இளமதி.. உங்களுக்கு என்மேல வருத்தம் இல்லையே.. ”
இளமதி புன்னகையுடன் ” இதுக்கு மேல நான் சொல்வதற்கு என்னயிருக்கு?.. உங்க மேல வருத்தம் இல்லங்க.. சந்தோஷம் தான். நான் எழிலரசிக்கிட்ட கேட்ட ஒரே வரில எல்லாத்தையும் புரிந்துக் கொண்டு.. எழில்லோட மனவிருப்பத்தை நிறைவேற்றி இருக்கிங்க. அதவிட உங்கள் மேல இப்ப கோபப்பட்டேன்.. அவ்வளவுதான். என்ன வேந்தன் நான் முழுசா வீடுபோய் சேர வேண்டாமா?.. சொல்லுங்க. ” என தன் தங்கையை பார்த்துக் கொண்டே கூற.. திரும்பி அவள் முறைக்க எனஅவ்விடம் இருந்தது.
‘ பின் வேந்தன் இன்னும் தன்னவளை குளிர்விக்க.. அந்த நிமிடமே.. அரசியை அவர்களின் மாமாக்களின் நடுவில் அவளை மட்டும் நிற்கவைத்து பல புகைபடங்களை தன் போன் காமிராவிலும்.. தன் விழி என்ற காமிராவிலும் எடுத்துத் தள்ளினான். ஆனால் இதனை எடுக்கும் போது வேந்தனின் முகத்தில்.. அவன் இதுநாள் வரை உணராத உணர்ச்சி வெள்ளத்தில் இருந்தான். ‘
‘ ஏனெனில் தன்னவளோ.. முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள். வேந்தன் மட்டும் அல்ல.. கூட இருந்தவர்கள் கூற எழிலரசியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்து பிரமித்தனர். அதைவிட எழிலின் மகிழ்ச்சியை ஆனந்த கண்ணீரால் கண்குளிர பார்த்து ரசிப்பனை பார்த்து அதிசயத்தினர். ‘
” டேய் வேந்தா.. போதும் டா.. நீ இதோட 25 போட்டோ எடுத்துயிருப்ப.. பாவம் டா.. அவங்க.. ஒன்னும் சொல்ல முடியாம உன்னோட போட்டோக்கு போஸ் கொடுக்குறாங்க.” எனக்கூறி எதிர் உள்ளவர்களை காண்பிக்க..
‘ எதிரில் இருப்பர்களை அவன் பார்க்க.. அக்கா சொல்வதை போலத்தான் இருத்தனர்.. தன்னவளை தவிர. பின் சாரி என சத்தமில்லாமல் சொல்லி.. அவனும் தன்னவளின் அருகில் நின்று அவர்களுடன்.. ஒரே ஒரு போட்டோவை மட்டும் எடுத்துக் கொண்டான். தன் அரசியின் மகிழ்ச்சியான தருணத்தில் அவளுடன் தானும் உடன் இருந்துயிருக்கிறோம் என்று.. தன் புகைபடநினைவு புத்தகத்தில் பதிய நினைத்தான். அவ்வளவே.. ‘
பின் வேந்தனும் தன் நண்பர்கள், தங்கைகள், அண்ணிகள் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தான். அறிமுக படலம் முடியவும் வேந்தனின் அம்மா சித்ராவும்.. எழிலின் அம்மா லட்சுமியும்அங்கு வந்தார்கள்.
” எல்லோரும் இங்குதான் இருக்கிங்களா?.. ம்.. அதுவும் நல்லதுதான்.. நாங்க பெரியவங்க எல்லோரும் சிவநேசன் அண்ணா வீட்டுக்கு போறோம்.. நீங்க எல்லாம் இங்க இருங்க.. தேவையானது ஏதாவது வேண்டும் என்றால் ஈஸ்வர் கூட வீட்டிற்கு போயி எடுத்து விட்டுவாங்க. சரியா?.. ”
” சரிங்க சித்தி.. நாங்க பார்த்துக் கொள்கிறோம். ”
” வேந்தா நீ வீட்டுக்கு போக வேண்டும் என யோசனை இருந்தா.. வேண்டாம்.. இங்கேயே இரு.. உனக்கும் தேவையானதையும் எடுத்துட்டு வரச்சொல்லு. ” எனக் கூறியவுடன் வேந்தனை பார்த்து அந்த இடத்தில் மெல்லிய சிரிப்பொலி ஒலித்தது.
வினோ புன்னகையுடன் ” ஆமா அண்ணா.. நீ வீட்டுக்கு போயிட்டு வரவேண்டும் என யோசனையிருந்தா?.. வேண்டா ண்ணா. ”
” ம்.. போக வேண்டாம்மா?.. சரி நீ.. நீங்க சொல்வதால் நான் இங்கு இங்கேயே இருக்கேன். மகிழ்ச்சிதானே.”
” ம்.. சரி வேந்தா.. நாங்க எல்லாம் சாப்பிட்டோம்.. தாத்தா, பாட்டி கூப்பிட்டு நாங்க அங்கு செல்கிறோம்.. நீங்க எல்லாம் வந்து சாப்பிடுங்க. “
லட்சுமி இளமதியின் அருகில் வந்து.. ” இளமதி.. எல்லோருக்கும் இப்ப தேவையானது மாடில இருக்கு.. பார்த்துக்கோ. நான் உங்க அத்தை மாமா சாப்பிட வைத்து.. நானும் அப்பாவும் மாமாவீட்டில கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு வந்துவிடுவோம்.. அதுவரைக்கும் நீயும்.. ஆர்த்தியும் தான் அவங்களுக்கு தேவையானதை பார்த்துக் கொள்ளனும்.. பாப்பாவ எழிலிடம் கொடுத்து பார்த்துக்க.. சரியா மதி. “
” சரிங்க ம்மா.. நான் பார்த்துக்கிறேன்.. நீங்க சீக்கிரம் வாங்க.”
பின் அனைவரும் சென்று சாப்பிட்டு முடித்தவுடன்.. சிறிது ஓய்விற்காக எழிலரசியின் வீட்டில் தீபா கருவுற்றுயிருப்பதால் யோகாவின் குழந்தைகளுடன்.. கண்ணன் கீழ் உள்ள ஒருஅறையில்இருந்தனர். மேல் உள்ள எழில் அறையில் சத்யா, தர்ஷினி, மேகா, வசுந்தரா, சாருலதா. இன்பாவின்அறையில் வேந்தன், இளங்கோ, திலகன், வினோத், கதிரவன் இருந்தனர். இளமதியின் அறையில்ஆர்த்தி, சுரபி, யோகா, காவ்யா,வினோவும்.. ‘
மற்றொரு அறையில் குழந்தைகள் மட்டும் உறங்கிக் கொண்டுயிருந்தனர். இரண்டாம் மாடி அறையில் மற்ற ஆண்கள் இருந்தனர். எல்லோரும் தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு.. வேந்தனின் குடும்பத்தினர் வீட்டில் உடுத்தும் உடைகள் சில புதிதாக இருந்தன.. அவற்றை சிலர்உடுத்தினர்.. சிலர் அதே உடையில் இருக்க.. மாலை வேறு மாற்றிக் கொள்ளலாம் என நினைத்துயிருந்தனர். இவ்வாறாக இரு குடும்பத்தில் உள்ளவர்களும் தங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
பின் சிறிது நேரத்திலேயே சிலர்.. அங்கு இருக்கும் சிறு ஹாலில் அமர்ந்துவிட்டனர். அப்போது ” தனு ” என்ற அழைப்புடன் அங்கு வந்த எழிலரசியின் மீது அனைவரின் பார்வையையும் திரும்பியது.