ஆருயிரே மன்னிப்பாயா !
எபிசொட் -2
அவன் அவனது அப்பா சொல்வதை கேட்டு தலையில் இடி விழுவது போல் ஆனது , அவன் இதை எதிர் பார்க்கவில்லை , அவன் இத்தனை நாள் கண்ட கனவு இப்படி ஒன்றும் இல்லாத விஷயத்திற்காக வீணாக போவதை அவன் விரும்பவில்லை , இருந்தும் அவனுக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை . கல்யாணம் பண்ண கண்டிப்பாக அவள் இவனை ஒன்றும் செய்ய விடமாட்டாள் , எந்த பெண்ணாக இருந்தாலும் குழந்தை வந்த பிறகு இப்படி தான் யோசிப்பாள் , என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போனான் . இருந்தாலும் என்ன செய்வது , திடீர் என்று அவன் அப்பாவிடம் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவளும் தன்னை காதலிப்பதாகவும் நான் இந்த எனது ஆசையை நிறைவேத்தி கொண்டு அவளை கல்யாணம் செய்வான் என்றும் அதற்கு அவளிடம் ஒப்புதல் வாங்கி கொண்டதாகவும் கூறினான் . அவனது பெற்றோருக்கு அதிர்ச்சி , இவன் சொல்வது பொய் மாதிரி தான் அவர்களுக்கு தோன்றியது , அவர்கள் அவனிடம் நீ பொய் சொல்கிறாய் , இதை நாங்கள் நம்ப மாட்டோம் என்றார்கள் , அவன் அவனது காதல் கதை என்று கற்பனையாக ஒரு கதை சொன்னான் ,” அவள் பெயர் அகல்யா , நான் அவளை இரண்டு வருடங்கள் முன் சந்தித்தேன், அவள் ரொம்ப அழகா இருப்பாள் , அவள் ஒரு கம்பெனியில் CEO வாக இருக்கிறாள் , அதனால் நான் இப்படி செலவு செய்வது அவள் ஒன்றும் சொல்ல மாட்டாள் , நான் எனக்கு என்னுடைய கனவான இந்த இலவச பல்கலைக்கழகம் , மருத்துவமனை எல்லாம் கட்டிவிட்டு அவளை திருமணம் செய்து கொல்வேன் என்று கூறினான் , அதுவரை நீங்கள் பொறுமையாக இருங்கள் என்று கூறினான் ” அவனது பெற்றோரோ மனதில் ( இவன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருந்தான் , இப்போது ஒரு காதலி இருப்பதாகவும் அவளை திருமணம் செய்வான் என்று சொல்வதே பரவாயில்லை ) என்று ஆறுதல் படுத்தி கொண்டார்கள் . அவனும் அவன் சொன்ன பொய்யை நம்பி விட்டார்கள் என்று நிம்மதி அடைந்தான் . அவன் இதுபோல் இதுவரை பொய் சொன்னது இல்லை ஆனால் அவனுக்கு இப்போது வழியும் இல்லை என்ன செய்வது எல்லாம் விதி படி நடக்கட்டும் என்று இருந்தான் , அவனது இலவச பல்கலைகழகம் வேலைகள் சிறப்பாக நடந்தது , அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான் . அவனது பெற்றோர்களும் மகிழ்ச்சியில் இருந்தார்கள் , அவன் கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டான் என்று அப்படியே ஒரு 6 மாதம் கழிந்தது . அவன் கட்டிடம் நன்கு அமைந்தது , இறுதி வேலை மட்டும் தான் மிச்சம் , கூடிய சீக்கிரம் எல்லாமே முடித்து விடுவான் , அப்போது அவனது அம்மா அவனிடம் , ” அரவிந்த் , நீ உன் காதலியை வீட்டுக்கு கூட்டிட்டு வா நான் பார்க்கணும்” என்றாள். அவனது அம்மா அவள் மருமகள் மீது எவ்ளோ பாசம் வைப்பாள் என்று அவனிடம் கூறி கொண்டிருந்தாள் , அவனுக்கு மனது தாங்க வில்லை , உண்மையை கூறினான் ,” அம்மா ! எனக்கு காதலி என்று யாரும் இல்லை , அப்பா வை சமாளிக்க தான் பொய் சொன்னேன் என்னை மன்னித்து விடுங்கள் ” என்றான் . அவனது அம்மா அதிர்ச்சியில் உறைந்தாள், அவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வந்தது , அவன் பின்னாடி பார்த்தால் இதை எல்லாம் கேட்டு கொண்டு அவனது அப்பா இருந்தார் , அவர் உடைந்து போனார் , இவன் இப்படி பொய் சொன்னதை அவரால் தாங்க முடியவில்லை . அவனருகே வந்தார் , அவனது கன்னத்தில் அறைந்தார் , ” அரவிந்த் , என்ன இது , இப்படி பொய் சொல்லிருக்க , உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று நினைத்ததற்கு நல்ல பாடம் கற்பித்து விட்டாய். இப்படி ஒரு நாள் என் வாழ்வில் வரும் என்று நினைக்க வில்லை , உனக்கு எல்லாம் கல்யாணம் செய்ய என்ன தகுதி இருக்கு நீ காதலை உன் பொய்க்காக ஏளனம் செய்து விட்டாய் , நீ எந்த குடும்பத்து பையன் , காதலுக்காக எதையும் செய்யும் அப்பா அம்மா நாங்கள் அனுபவித்த காதலை நீயும் அனுபவிக்க வேண்டும் என்று உன்னை கல்யாணம் செய்ய சொன்னால் நீ காதலையே இப்படி கொச்சை படுத்தி விட்டாய் , எங்கள் கனவில் மண் விழுந்து விட்டது , “. அவன் மனம் கஷ்ட பட்டது , ” அப்பா ! என்னை மன்னித்து விடுங்கள் உங்களை ஏமாற்றுவது என்னுடைய எண்ணம் இல்லை ஆனால் எனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை ” என்றான் . அவனது அப்பா , ” உன்னுடைய கனவு இறுதியில் உடைந்தால் உனக்கு எப்படி இருக்கும் , நீ உடனே கல்யாணம் பண்ணவில்லை என்றால் உனக்கு இனி பணமே கிடையாது இனி முடிவு உன் கையில் ” என்றான் . அரவிந்த் உறைந்தான் , அவனுக்கு வேறு வழி இல்லை கல்யாணம் செய்து தான் அகா வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தான் , அவன் அப்பாவிடம் , ” அப்பா ! நீங்க எந்த பொண்ண சொன்னாலும் நான் உடனே கல்யாணம் பண்ணிக்கிறேன் ” என்றான் . அவருக்கு சந்தோசம் உடனே பொண்ணுக்கு எங்க போக என்று யோசித்தான் , இருந்தும் உன் முடிவுக்கு மகிழ்ச்சி பொண்ணு நானே சொல்கிறான் என்றான் . அப்போது அரவிந்தை பார்க்க ஒரு பெண் காத்துக்கொண்டிருப்பதாக வேலையாள் சொன்னான் . அரவிந்த் அந்த பெண்ணை போக சொல்லுங்கள் என்றான் , அவனது அப்பா , ” அந்த பொண்ணை உள்ள வர சொல்லுங்கள் அரவிந்த் பேசுவான் ” என்றார் .
அந்த பெண் உள்லே வந்தாள், அவள் ரொம்ப அழகாக இருந்தாள் , அவள் புடவை அணிந்து வந்திருந்தாள் , அவள் பீச் கலர் புடவையும் பிங்க் கலர் பார்டரும் அமைந்த புடவை அவள் ஒரு தேவதை போல் இருந்தாள் . அவள் யாரென்று அவனுக்கு தெரிய வில்லை , அவன் முழித்தான் . அவனது அம்மாவுக்கு அவளை பிடித்தது . அந்த பெண்ணை அரவிந்த் கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைபட்டாள் .