எழிலின் போன் 3 முறை முழுவதும் அழைத்து ஓய்ந்தது.. 4ஆம் முறை அழைக்கும் போது.. ‘ அம்மா தன்னை எழுப்ப.. போனை யூஸ் செய்யும் புது வழிய கண்டுபிடித்து விட்டாங்களா?. ‘ எண்ணிக் கொண்டே போன்னை எடுத்து பார்த்தாள் ” சுரபி அண்ணி” அவரின் அழைப்பு நின்று..
உடனே ” 15நிமிடங்களுக்குள் போன் செய்” என குறுங்செய்தியும் வந்தது.
‘ எதுக்கு இப்ப கூப்பிடுறாங்க? என்னவாக இருக்கும்?. சாய்ந்திரம் தானே கோயிலுக்கு போகலானு நேற்று இரவு சொன்னாங்க. ‘ யோசித்துக் கொண்டே தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு திரும்ப அண்ணிக்கு அழைத்தாள்.
சுரபி எழிலரசியின் அக்கா இளமதியை விட 2 வயது சிறியவர். அவளுடன் தோழி போல பழுகுவார். ” சொல்லுங்க சுரபி அண்ணி. இன்னைக்கு என்னை எழுப்புகிற வேலைய அம்மா உங்ககிட்ட கொடுத்து விட்டாங்களா என்ன??.. நேத்து நைட்டு தானே பேசினோம். எதுக்கு இத்தனகால்??..” சின்ன கோபத்துடன் அந்தபக்கம் இருப்பவர்களை பேச விடமால் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தாள்.( தன்னை தூங்கவிடாமல் செய்தற்கு இந்த சின்ன கோபம்)
” வாவ்!! உன்னைய எழுப்பி அந்த நல்ல காரியத்த செய்து என் அத்தையோட எனர்ஜிய காப்பாற்றி இருக்கனா. சூப்பர்!. இன்னைக்கு ஏதாவது ஸ்பெஷல் கேட்டு வாங்கிப்பேன். சரி… இப்ப எதுக்கு கால் பண்ணுனேனா? சாய்ந்திரம் போலாம் சொன்ன கோயிலுக்கு.. காலையிலேயே போய்விட்டு வந்துவிடலாம். அத்தை சாய்ந்திரம் மருத்துவமனைக்கு அமுதன் மாமா உடன் போவதாக இருந்தது. மாமாவுக்கு சாய்ந்திரம் நாளை ஆடர் எடுக்க வர வேண்டியவங்க இன்னைக்கே வராங்களா. அதனால நான்தான் அத்தை கூட போகனும். 10மணிக்கு கிளம்பி ரெடியா இரு.. சரியா?..” என முச்சு விடாமல் கூறி முடித்தார்.
” ம்ம் சரி”
” என்ன? சத்தமே காணோம். ஓய் எழில்.. நான் பேசரத கேட்டுக் கொண்டே திரும்ப தூங்க ஆரம்பித்து விட்டாயா? மாமாவ வேணா கூப்பிட சொல்லவா?..”
சுரபி கூறியது போலவே மீண்டும் தூங்கலாம் என்று போர்வைக்குள் குறுக்கி படுத்திருந்தவள்.. ‘ அப்பாவா??.. ‘ வேகமாக எழுந்து.. ” தூங்கவெல்லாம் இல்ல அண்ணி. 10மணிக்கு தானே வருவிங்க? நான் 9.45 ரெடியாக இருப்பேன்.. வைக்கிறேன் அண்ணி..” இந்த எழில்ல எல்லோரும்.. இந்த அப்பா பேர் சொல்லி பயப்பட வைப்பதே.. குறியா இருங்காகப்பா.. புலம்பியபடி கோயிலுக்கு கிளம்பசென்றாள். ‘ எப்படி.. நீ பாட்டிய.. தன் மகன் பேர் சொல்லி பயப்பட வைத்த மாதிரியா?.’
” வாங்க வேந்தன் மாப்பிள்ளை.. வாங்க. “
புன்னகையுடன் அழைத்தவர் முதல் தாய்மாமன் மகன் கார்த்திக்கேயன்.. மற்றும் மாணிக்கம் பெரியப்பாவின் மகள் வேந்தனின் பாசமான அக்கா யோகலட்சுமியின் கணவர். அவருடன் அங்கு ராகவன் மாமாவும்.. ராஜேஸ்வரி அத்தையும் இருந்தார்.
வேந்தனும் புன்னகையுடன் வரவேற்பை ஏற்று.. ” நல்லாயிருக்கிங்களா?. ” அங்கு இருந்தவர்களிடம் கண்களை பார்த்தவாறே பொதுவாய் விசாரித்து.. ” ராஜி அத்தை.. எங்க அக்கா?. பசங்க எல்லாம்?..”
” கண்ணன், தீபா, பசங்க எல்லாம்.. அவங்க தாத்தா ( அவருடைய அண்ணா) வீட்டிற்கு போயிருக்காங்க. யோகா சில பொருட்களை வாங்க வெளிய போயிருக்கா. காபி எடுத்துட்டு வறேன்.. பேசிட்டு இருங்க. ” என கூறி சமையலறை சென்றார்
மூவரும் அவர்களின் வியாபாரத்தை பற்றிப் பேசிக்கொண்டு இருக்க.. பின் அவர்கள் காபி குடித்துக்கொண்டு இருந்தபோது கார்த்திக்கின் பேசி அழைக்க.. ” யோகா. ம்.. சரிம்மா. “ போனை வைத்தவன்.. பிறகு யோகா கூறியதை கூறி கிளம்ப எழுந்தான்.
” மாமா.. அக்கா எங்க வீட்டிற்கு தானே மதியம் வரதா சொன்னீங்க. அப்ப நானே அங்க போய் கூப்பிட்டு.. அப்படியே வீட்டிற்கு அழைச்சுட்டு போகிறேன். “
” ம்… சரி வேந்தா. நீங்க வீட்டிற்கு போனவுடன் போன்கால் பண்ணு. ” சரி என தலையசைப்புடன்.. மாமா, அத்தையிடம் விடைபெற்று.. அக்கா இருக்கும் சென்றான்.
” அக்கா கிளம்பலாமா?? ”
மெல்லிய புன்னகையுடன் ‘ சரி ‘ என எழுந்த யோகா.. ஒரு நிமிடம் நின்று ” வேந்தா அந்த பொண்ண பாரேன். ”
” நான் எதுக்கு அக்கா அந்த பொண்ண பார்க்க வேண்டும்?.. “
புன்னகையுடன்.. ” ஏன்னா? உனக்காக கல்யாணத்திற்கு பார்த்து இருக்கும் பொண்ணை.. கல்யாண மாப்பிள்ளை நீ தான பார்க்கனும். அதுக்காக தான். ” என கூறிக் கொண்டே..
அவன் பதில் அளிக்க வரும்முன்.. அவனை கழுத்தை மெதுவாக திருப்பி.. அவனிற்கு வரன் பார்த்து இருக்கும் பெண்ணை காண்பித்தார்.
வேந்தனின் அப்பா.. யோகா மற்றும் அனைவருக்கும் அழைப்பு விடும்போதே பெண்ணைப் பற்றி கூறி வேந்தனை சம்மதிக்க வைக்க முடியும் என்ற காரணத்திற்காக அவர்களின் தொலைபேசிக்கு பெண்ணின் படம் மற்றும் முக்கிய விவரங்களையும் அனுப்பி வைத்தார். அதனால் தான் யோகாவிற்கு வரன் பார்த்து இருக்கும் அந்த பெண்ணை அடையாளம் காண முடிந்தது. அந்த பெண்ணை அங்கு பார்த்த போது யோகாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
‘ நம் வேந்தனுக்கு.. அதிர்ச்சி, ஆனந்தம், ஆச்சரியம், அதிசயம்!. என பல சொல்ல தெரியாத பல உணர்வுக் குவியலுள் முழ்கி.. தன்முன் வந்துக் கொண்டுயிருக்கும் அவனிற்கு வரன் பார்த்து இருக்கும் பெண்ணான ” அவனின் எழிலரசி ” யை இமைக்காமல்.. சுற்றுபுறம் மறந்து பார்த்தான்!. பார்த்துக் கொண்டே இருந்தான். ‘
‘ அதேநேரத்தில் ‘ எழிலரசி ‘ –யும் ‘ வேந்தன் ‘ – னை தான் பார்த்திருந்தாள். ‘
‘ வேந்தனிற்கு எப்படி?. அவனுடைய அக்கா கூறினாரோ.. அதேபோல எழிலின் அண்ணி சுரபியும்.. வேந்தனை அங்கு பார்த்து.. அவனை அடையாளம் கண்டுகொண்டு.. உற்சாகமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வில்.. வேந்தனைப் பற்றி எழிலிடம் உனக்கு வரன் பார்த்து இருக்கும் மாப்பிள்ளை எனக் கூறி பார்க்க வைத்தார். ‘
‘ அவளின் வேந்தனை தன் எதிரே சில அடிகளுக்கு முன் தன்னையே இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பவனின்.. விழி பார்வைக்கு கட்டுபட்டவள் போல் அவளும்.. அவனை பார்த்துக்கொண்டே அவ்விடத்தை கடந்துச் சென்றாள். ‘
வேந்தனும், எழிலரசியும் பார்த்துக் கொண்ட இடம் கோயில். அவளின் அண்ணி போகலாம் என கூறிய இடமும்.. அக்கா இருப்பதாக கூறிய இடமும்.. பிரகதாம்பாள் கோயில், புதுக்கோட்டை.
நாயகி.. நாயகன் இருவரின் சொந்த ஊர் ஒன்றே.. புதுக்கோட்டை. வரனின் மாப்பிள்ளை– பெண்.. நம்ம வேந்தன்– எழிலரசி. வேந்தனின் வாழ்கையை மாற்றும் வல்லமை படைத்த அவன்அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்த நபரும்.. எழிலரசி என்பவள் தான்.
இரு வீட்டினரும் வியாபாரம் முறையில் முன்பை அறிமுகம் உண்டு. இருவருக்கும் பொதுவான நண்பரால் ஒருவரால்தான் வேந்தன்– எழிலரசி வரன்பொருத்தம் வந்தது.
இருவரின் நிபந்தனையும், விருப்பத்தையும் நிறைவேற்றிய முழுதிருப்தியும்!. ஓரே ஊர் என்பததால் இரு வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும்.. இந்த வரன் வந்தபோது மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் குடும்பம், ஒரேஊர், இருவரின் குணங்கள், பொருத்தம், மற்றும் இன்னும் பலபல.. இவை அனைத்தும் இரு வீட்டில் உள்ளவர்களுக்கு மேலும் சந்தோஷத்தை அள்ளிக்கொடுத்தது.
இருவீட்டு பெரியவர்கள் முதலில் சம்மதம் தெரிவித்து. வேந்தன் ஊரில் இருப்பதால் அவனிடமும், எழிலிடமும் இன்று வரன் பற்றிக் கூறி.. விருப்பத்தை கேட்பதாக இருந்தது. ஆனால் இருவரும் எதிர்பாராமல் இப்போது பார்த்துக் கொண்டனர்.
வேந்தன் எழிலரசி தன்னை கடந்துச் சென்ற பின்பும் மீள முடியாத அதிர்ச்சியிலேயே நின்றுக் கொண்டு இருந்தான். அவனை பார்த்திருந்த யோகா.. அவனின் முகத்தின் முன் கையை வேகமா ஆட்ட.. ஒருநொடி முகம் பின்சென்று பிறகு தான் நிகழ்காலத்திற்கு தன் உடல் மனதை கொண்டுவந்தான்.
” என்ன வேந்தா?.. பொண்ணு உனக்கு பிடிச்சு இருக்கா?.. இப்ப, இங்கு நான் பொண்ண பார்த்தவுடன் நீயும் இங்க இருந்தியா.. அப்படியே இரண்டு பேரையும் பக்கத்தில் பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஏதோ இரண்டு பேரையும் பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதான் உடனே உன்ன பார்க்க சொல்லிட்டேன். ஆனா வீட்டில் உள்ளவர்களிடம் எனக்கு இருக்கு.. நல்லா பாட்டு ( அதாங்க திட்டு) கிடைக்க போகுது. “
நிகழ்காலத்திற்கு வந்தவனோ சற்று தெளிந்து.. அக்கா கூறியதை ஒருவித மகிழ்ச்சியில் கேட்டுக் கொண்டுயிருந்தவன்.. கடைசி வரி புரியவில்லை. ” உங்களை யாரு? எதுக்கு திட்டப்போறாங்க?. ”
” இன்னைக்கு மதியம்.. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, ஈஸ்வர் அண்ணா, நானு, கார்த்திக் மாமா, வினோதினி, வினோதினி கணவர் விஸ்வநாதன் எல்லோரையும் சித்தப்பா வர சொல்லி இருக்காரு.”
குழப்ப முகத்துடன்.. ” எதுக்கு இவங்களை எல்லாம் வரச் சொல்லி இருக்காரு?.. என்ன?.. பண்ண இருந்திங்க?. ”
“ அது ஒன்னும் இல்ல டா.. நம்ம வீட்டுலையும்.. பொண்ணு வீட்டுல இருப்பவர்களுக்கும் உங்க இரண்டு பேர் பொருத்தமும் ரொம்ப பிடிச்சுயிருக்கு. இப்ப நீ இங்க இருக்கும் போதே உங்க இரண்டு பேரிடமும் வரன்பொருத்தம், ஜோடிப்பொருத்தம்.. பற்றி விளக்கமாக , விரிவாக பேசி உங்கள் இருவருக்கும் இந்த வரன் பார்க்க சம்மதம் என்றால் வர ஞாயிறு உனக்கு பொண்ணு பார்க்க போலாம் என்று சித்தி சொன்னாங்க டா.
நீ ஏதாவது வரன் பற்றி கூறும்போது.. அது சரியில்ல இது சரியில்லனு .. ஏதாவது சொல்லி குழப்பம் செய்தா?. அந்த நேரத்தில் சித்தி, சித்தப்பாவால சமளிக்க முடியாதுனு எங்கள வரச்சொன்னாங்க டா. ”
ஓ.. ” ப்ளான் எல்லாம் செம்மையாக இருக்கு.. யார் கொடுத்த ஐடியா இது??..எத்தனை நாளா இது நடக்குது??..” நக்கலா?. கேள்வியா?. என்ற தோரணையில் இடுப்பில் கைவைத்து கேட்க..
அவன் தோரணை புரியாமலையே.. ” சித்தியோடது தான் இந்த ஐடியா, ப்ளான் எல்லாம். டேய் நேற்று காலையில்தான் டா.. பொண்ணு வீட்லே சம்மதம் சொன்னாங்க..” பதில் அளிக்க..
‘ நேற்று காலையா??… ஒஓ!! நான் தூங்கிட்டு இருக்கும் போது இதெல்லாம் நடந்து இருக்கு. ம்ம்..அதான் அம்மா.. இந்த நல்ல செய்திய கேட்டு.. ப்ளான் பண்ணிவிட்டு என சேலை, நகையெல்லாம் போடலானு இருந்தாங்களா!!.. சூப்பரா சமாளிச்சிங்க மா. என்னை எல்லாரும் சமாளிக்க வந்திங்களா.. அப்படினா நான் இப்ப என்ன பண்ணப்போறதையும் பாருங்க. ‘
” அக்கா.. நான் இப்ப உடனே!. இங்கயே!. பொண்ணுகிட்ட பேச வேண்டும். ” சாதாரணமாக வேந்தன் கூற..
அவன் கூறியதை கேட்டு.. கண்கள் திறந்துமூடி கிரகித்து.. அதிர்ந்து.. ” என்ன??.. என்ன சொன்ன?? விளையாடுகிறாயா??. நான் உனக்கு அந்த பொண்ண இங்கு இப்ப காண்பித்தற்கே.. என்ன சொல்லி சமாளிக்க என யோசித்து இருந்தா!. நீ..நீ போய் பேசனு சொல்லுற. நான் நம்ம வீட்டல திட்டுவாங்க போவது பத்தாதுனு.. அவங்க வீட்டுலையும் சேர்த்து வாங்க வேண்டுமா டா?? நல்ல எண்ணம் டா தம்பி உனக்கு.. என்னாலெல்லாம் முடியாதுப்பா இப்ப கிளம்பலாம் வா. வீட்டல பேசிவிட்டு பிறகு முடிவு பண்ணிக்கொள்ளாம். வா டா வேந்தா. “
” இப்ப என்ன அக்கா சொன்ன?.”
” நான் என்ன டா சொன்னேன்?? “
யோகா கூறியதை நன்கு யோசித்தவன்.. ” அக்கா வீட்டுல கேட்டுவிட்டு பேசலாம் என சொன்னக்கா..”
” சரி.. அதுக்கு என்ன இப்போ?. ”
சட்டென்று யோசனை தோன்றி.. ” அக்கா.. இப்ப அப்பாக்கு கால் செய்து.. சித்தப்பா.. நான் இந்த கோயில்ல இருக்கோம். நான் இல்ல இல்ல.. நாங்க இப்ப இங்கு வேந்தாக்கு பார்த்த பொண்ண பார்த்தோம். வேந்தாவ இப்ப இங்கு பேச சொன்னா நல்லா இருக்கும் என நினைக்கிறேன். அதனால இந்த பொண்ணேட அப்பாவிடம் நீங்க பேசி அந்த பொண்ணுடன் பேசுவதற்கு அனுமதி வாங்கிதாங்கப்பா. அப்படியே அந்த பொண்ணு விடமும், கூட வந்தவர்களிடம் இந்த மாதிரி வேந்தன் இப்ப இங்கு பேச நினைப்பதாக கூறி உடனே அவங்களிடம் தெரிவிக்க கூறிவிடுங்க. நாங்க போய் சிறிது பேசிவிட்டு வேந்தனும் அந்த பொண்ணும் பேசுவாங்கப்பா. என நீங்க இப்ப அப்பாவிடம் எனக்கு அனுமதி வாங்கித்தாங்க அக்கா.. பீளிஸ்க்கா.. என் செல்ல அக்கால்லல..”
” டேய் தம்பி.. நான் உன்னைய இங்கு கூப்பிட்டனா? என் புருஷனதான கூப்பிட்டேன். நீ இங்குவந்து என்னோட BP- ய அதிகமாக்குற டா. நான் போன் பண்ணி இதெல்லாம் சித்தப்பாவிடம் கேட்டு அனுமதி வாங்கிக் கொடுக்கனும். “
” ஆமா அக்கா. இத கூட சமாளிக்க முடியலேனா எப்படி க்கா??.. என்ன சமாளிக்க, என்ன ஒத்துக்க வைக்க தானே உங்கள அப்பா கூப்பிட்டு இருக்கார். நான் கேட்டேன் , சொன்னேன்., சொல்லுங்க.. அதெல்லாம் ஒன்னும் சொல்லாம அந்த பொண்ணு அப்பாவிடம் அனுமதி வாங்கி கொடுத்துடுவார். ”
” தம்பி.. இதை நீ ரொம்ப சாதாரணமா சொல்ற டா. அதிலும் இரண்டு பேருக்குமே முதல் வரன்டா.. நாள், கிழமை, நேரம் பார்க்காம நீங்க இரண்டு பேரும் பேசி எல்லாம் நல்ல படியா நடந்தா.. ஒன்னும் இல்லடா. இல்லனா ரொம்ப சடங்கடமா போய்விடும். பெரியவங்களுக்கு பதில் சொல்ல முடியாது. வீட்டுக்கு போய் பேசிவிட்டு அப்புறம் முடிவு பண்ணலாம் தம்பி.”
அக்கா கூறுவதில் இருப்பதை.. வேந்தன் சிறிது நேரம் யோசித்துவிட்டு.. தன் போன்னை பார்த்துக்கொண்டுடே.. ” அக்கா நீங்க அவங்க வந்தா.. அவங்களிடம் சாதாரணமா பேசிட்டு இருங்க. ஆனா நான் இப்ப பார்த்து பேசனும் என்று.. சொன்னதை மட்டும் அவங்களிடம் சொல்லிடாதிங்க சரியா. நானே அப்பாவிடம் போன்ல பேசிவிட்டு வரேன். அக்கா நார்மலா இருங்க. கோயில்ல புதுசா பார்த்த ப்ரண்ட்ஸ் பார்த்து பேசுர மாதிரி பேசுங்க. எப்படி பேசனு உனக்கு சொல்லி கொடுக்க தேவையில்ல. இதோ பேசிட்டு வந்துவிடுறேன் கா.. பீளிஸ்க்கா..” என வேந்தன் யோகாவிடம் கோரிக்கை வைத்துவிட்டு.. செல்லம் கொஞ்சி அப்பாவிடம் பேச சற்று தள்ளி ஓரமாக சென்றான்.
அவனையே பார்த்திருந்த யோகாவிற்கு.. செல்லம் கொஞ்சி சொல்லும் தன் தம்பி வேந்தனிடம்.. அவனின் வாலிப பருவத்தில் துள்ளளுடன் இருந்தவனை.. இப்போது முழு ஆண்மகனாய் இருப்பவனிடத்தில் மீண்டும் பார்த்தது போல இருந்தது.
செல்லும் வேந்தனின் எண்ணம் முழுவதும்.. ‘ எழிலரசியிடம் உடனே பேச வேண்டும்.. அதுவும் அவர்களின் பெற்றோர்களின் முறையான அனுமதியுடன். அது தான் அனைவருக்கும் மகிழ்ச்சி, திருப்தியான மனநிலையை கொடுக்கும். அனைத்திலும் மேலாக தன்னவளுக்கு நான் கொடுக்கும் மதிப்பு , மரியாதையும் கூட. மற்றவர்கள் எதுவும் அவளை சொல்லக்கூடாது. அதுவே அவனது தற்போதைய எண்ணம்மாகும். ‘ அதனால் தன் அக்கா கூறியவுடன் தானே அப்பாவிடம் பேச சென்றான்.
வேந்தனை கடந்து சென்ற எழிலரசியின் மனநிலையோ வேறாக இருந்தது. ‘ இதுநாள் வரை தனக்கு திருமணம், வரப்போகும் கணவன், குடும்பம் என அதிகம் யோசித்தது இல்லை. சென்றவாரம் தான் அப்பா வரன் பார்க்க ஆரம்பிக்க போவதாக கூறினார். சரி என்று நினைத்து.. எல்லாம் ஆரம்பிக்க வரன்களை அலசி ஆராய்ந்து பொருத்தமான மாப்பிள்ளை அமைய.. அதற்கு அதிகம் நாள் எடுக்கும் என நினைத்தாள். ஏனெனில் மற்ற அனைவருக்கும் சொந்தம் என்பதால் திருமண ஏற்பாடுகள் உடனே ஆரம்பித்தது பிறகு நடந்தது. நமக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற சற்று காலம் எடுக்கும். அதற்குள்ளாக தன் மனநிலையை அதற்கு ஏற்றவாறு நிலைப்படுத்திக் கொள்ளலாம் என நினைத்துயிருக்க..
இப்போது தன் கண் முன்னால் தனக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை என்றும், அதுவும் இதே ஊர் என்ற மகிழ்ச்சி ஒருபக்கம், குழப்பம் மறுபக்கம் என்ற மனநிலையில் இருந்தவள்.. விநாயகா.. என கடவுளின் முன் கண்களை முடி நடப்பது எல்லாம் நல்லபடியாக இருக்க வேண்டும். ‘ கடவுளிடம் கோரிக்கையும் வைத்தாள் எழிலரசி.
எழிலரசியின் அண்ணி சுரபிக்கு பதட்டமாக இருந்தது. கோயிலின் உள்ளே அவர்கள் இருவரும்.. எழிலை பார்ப்பதை பார்த்து விட்டாள்.. பிறகு அவர்களைப் பற்றி தெரிந்தால்.. உடனே அடையாளம் கண்டு கொண்டவள்.. முதன்முதல் வெளிக்குடும்பத்தில் இருந்து பார்க்கும் மாப்பிள்ளை!. என்ற ஆர்வத்தில் எழிலரசியிடம் கூறிவிட்டாள். ஆனால் அதன் பிறகுதான் தோன்றியது.. எழிலிடம் அத்தை, மாமா சொல்லாமல் இருக்கும் போது தான் இப்போது கூறியது.. சரியா?. தவறா?.. என குழப்பத்தில் இருந்தாள். அதனை விட இப்போது அவர்களை திருப்ப பார்க்க நேர்ந்தால்!. என்ன செய்வது?.. இல்ல வீட்டுக்கு கால் செய்து நடந்ததை கூறி என்ன பண்ணலாம் என்று கேட்டுவிடலாமா??.. என எழிலை ஒரு பார்வை பார்த்து விட்டு.. கோயில் பரிகாரத்தை சுற்றிவர வந்தார்கள்.
எழிலும், சுரபியும் நடந்து வரும்போதே சுரபி.. யோகா மட்டும் தனியாக நின்று கொண்டு தங்களை பார்ப்தை பார்த்தவள்.. ‘ கடவுளே இவங்க நம்மள தான் பார்க்கிறார்கள். இப்ப நாமா பேசனுமா? கூடாதா? ‘ சுரபி யோசித்து கொண்டு இருக்கும் போதே.. யோகா அவர்களை நோக்கி புன்னகையுடன் சென்றார்.
யோகா அவர்களை நோக்கி புன்னகையுடன் வருவதை பார்த்த சுரபி.. ‘ அப்பாடா.. இவங்க மட்டும்தான் வராங்க. இவங்களிடம் பேசுவது ஒரு பிரச்சனையும் இல்ல.. வீட்டில் போய் நடந்ததை கூறி அவர்களை சமாளித்துக் கொள்ளலாம். ‘ பதிலுக்கு அவளும் புன்னகைத்தால்.
எழில்.. யோகாவை மட்டும் பார்க்கும்போது.. ‘ அப்பாடா!!.. இவங்க மட்டும்தான் இருக்காங்க என்றா… என்ன?? .. இவங்க மட்டும்தான் இருக்காங்க.. எங்க?? அவங்கள காணல.. கிளம்பிட்டாங்களா??..’ இரு வேறு மனநிலையில் இருந்தாள்.
ஒரு நொடி அவளிற்கு அவளவனின் உருவம் கண்முன் தோன்றியது.. ‘ மாநிறத்திற்கு கொஞ்சம் அதிகமா கலர்.. அடர்த்தியான கேசம்.. அளவான மீசை.. கொஞ்சம் தாடி, முகம் பார்த்துடன் நன்கு பதியும் கலையான முகம் தான். ஆனா அந்த கண்ணு!. என்னை என்ன மாதிரி பார்த்தது என அதிர்ச்சியா??.. ஆனந்தம்மா??.. ஆவர்வமாக வா??. புரியலைலேயே.
அவர் உடை வந்து?.. ஜீன்ஸ், லைட்பச்சை கலர் டீ–ஷாட் போட்டு இருந்தாங்க.. நம்மள கம்பேர் பண்ணி பார்க்கும் போது.. உயரம் கொஞ்சமே கொஞ்சம் ஜாஸ்தியோ?. எடை வந்து கூடவா? ஜாஸ்தியா?? எனக்கு தெரியலப்பா?? மொத்தமா.. பார்க்க நல்லாதான் இருக்காங்க. மற்றது பற்றி கவலை இல்ல.. வீட்டல அதை பார்க்காம.. முடிவு எடுத்து இருக்கமாட்டாங்க.. ஆனா.. அவங்க நம்மகிட்ட எப்படி பழகுவாங்க?. ”