திலகன் என்ன பெயர் சொன்னான் இந்த நபர் ” டேய்.. என்ன பெயர் சொன்ன?.. திரும்ப சொல்லு..”
‘ என்ன எழிலரசியா??.. ஏன்டா கமலேஷ் நான் என்னடா பண்ணுனேன்?. மாமன் மச்சான் விளையாடுவதற்கு.. நாங்க தான் இன்னைக்கு உனக்கு கிடைத்தமா?.. வேந்தன் தங்களை பார்ப்பதை பார்த்து.. இவன் இவ்வளவு நேரம் எடுத்துட்டு தானே இருந்தான் எப்ப திரும்பினான். நம்மள பார்க்கிறான் வேற.. இவங்க இரண்டு பேருக்கும் நடுவில் மாட்டிக்கிட்டோம். நான் கேட்கிறேன்.. அடிகூட கொடுக்கிறேன்.. சொல்லி இருக்கேன். ஆஹான்.. அவன் அடிக் கொடுக்கும் போது பக்கத்தில் வரவே மாட்டேன் சொன்னான்.. நம்ம அடிவாங்க போறதை தான் சொன்னானா?.. ‘ என்றுவினோத் நினைத்துக் கொண்டுயிருக்க..
கமலேஷ் திருப்ப திலகனிடம் கூறினான் ” எழிலரசி என்ற அரசி ” என்றுக் கூறி ” டேய்.. என்னடா.. பெயர் சொல்லுனு கேட்டிங்க.. சொல்லிவிட்டேன்.. ஏன்னு? அவனிடம் கேளுடா. ”
திலகன் திரும்ப பெயர் கேட்டவுடன் இவ்வளவு நேரம் நம்மள வைத்து விளையாடினானா?. உண்மையா தான் சொல்லுறானா?.. ” டேய்.. நீ வேந்தனுக்கு பார்த்துயிருக்கும் எழிலரசிய தான் சொல்லுறியா?.. ” எனக் கேட்டுக் கொண்டே வேந்தனை பார்க்க அவனும் இவனை பார்க்க. ‘ இவன் என்ன லுக்டா விடுறான்?..’
கமலேஷ் ” ஆமாம் டா.. இந்த போட்டோவ பாருட ” என தன் போனில் இருந்த குருப்போட்டோவில் எழிலரசியை காண்பித்தான்.
அவன் காண்பித்த போட்டோவில் எழிலரசியை பார்த்தான்.. சிறிது நேரம் பார்த்துவிட்டு.. எழிலரசி பக்கத்தில் இருந்த பொண்ணையும் அவனின் கண்கள் தானாக பார்த்தது. பிறகு டேய் கமலேஷ் என்னிடமே வா.. இருடா வரரேன். திலகன் சட்டை கையை மடித்துவிட்டுக் கொண்டே கமலேஷ் அருகில் வந்தான்.
” எவ்வளவு தைரியம் இருந்தால் இவன் தங்கச்சியை பக்கத்தில் இருக்கும் போதே.. நீ வேற ஒரு பொண்ண பார்த்துயிருப்ப.. அதுவும் உன் தங்கச்சியவே என்னிடம் சொல்லி.. என்னையே எழிலதிட்ட வச்சு.. எனக்கும் என் நண்பனுக்கும் சண்டைய உண்டாக்கலாம் பார்த்தியா?.. ” என திலகன் வேந்தனின் அருகில் நின்று அவனின் தோள் மீது கையை வைத்துக் கொண்டு கேட்டான்.
வினோத்தும்.. இளங்கோவும் ஒரு சேர ” டேய்.. எப்படி டா?.. ”
” சூப்பர்டா!.. போட்டோவ பார்த்தவுடனே இவன் நம்மள வைத்து காமெடி பண்ணுகிறான் புரிந்துக்கொண்டு.. அவனையே திரும்ப கேட்குற.. நான் வேந்தன் என்ன சொல்ல போறானோனு முழிக்கிறேன். ” என புன்னகையுடன் வேந்தனின் அருகில் நின்றுக் கொண்டு கூறினான்.
” ஹேய்.. திலகா.. டக்குனு மாற்றி பேசுவேனு நினைக்கல டா.. அதுவும் இவன் கேட்டமாதிரி அப்படியே கேட்கற டா. நான் நினைத்தேன்.. நான் யாருனு தெரியமா.. இந்த மாதிரி சொல்லி.. இவனிடம் அட்வைஸ் கேட்டது போல நீங்க கேட்பிங்க. கொஞ்சம் டைம்பாஸ் பண்ணலாம் நினைத்தேன். மிஸ் ஆகி விட்டது. “
வேந்தன் கமலேஷ் கையை விளையாட்டாக வளைத்து.. ” என்ன?.. அரசியை வைத்து டைம்பாஸ் பண்ணுறியா. அவளிடம் நீ பண்ணத சொன்னே.. அவ இரண்டு பக்கத்துக்கு உன்னைய கேள்விகேட்பா.. சொல்லட்டா?.. ” என அவன் போன் எடுக்க போக..
கமலேஷ் அவனிடமிருந்து கையை விடுவித்து.. அவன் கையை விடுவித்து.. ” டேய்.. டேய்.. ஏன்டா?.. நேற்று என் பெயர் சொன்னவுனே.. அண்ணா என்று அழைத்தாங்க.. நான் சும்மா இவன்னுங்களோட பேசியதை சொல்ல போறியா.. நான் பாவம் இல்லையா?.. ” கமலேஷ் பார்வை வேந்தன் வாங்கிய உடைகளை பதிந்தது. ” என்ன மச்சான்.. ஏன் உடையை இரண்டா பிரித்துவைத்திருக்க?.. ”
திலகன் புன்னகையுடன் ” நீயெல்லாம் எப்படிதான் இவன் தங்கையை கல்யாணம் பண்ணிக்போறியோ தெரியல.. வேந்தா.. இந்த மச்சான் தான் உனக்கு வேண்டுமா?.. “
” வேறு என்ன பண்ணடா?.. இவனே வேண்டாம் என கூறினாலும் என் தங்கச்சி இவனை விடமாட்டாலே.. அந்த அளவிற்கு ஐயாவ பிடிக்கும்.. ”
‘ இன்று தன் தங்கை கமலேஷ் மேல் வைத்திருக்கும் அன்பை ஆசையுடன் கூறியவன்.. பின்வரும் காலங்களிலும் இதுபோல பெருமிதமாக கூறுவானா??? ‘
இதனை கேட்ட கமலேஷ் தன் காலரை தூக்கி காண்பித்து.. பார்த்தாயா!. என பெருமிதமாக திலகனை பார்த்தான்.. அவனோ.. ” சரிடா.. நீ கேட்ட கேள்விக்கு நீயே பதில் சொல்லிவிடு பார்க்கலாம். ”
ஒரு பகுதியில் இன்றைய காலத்திற்கு ஏற்பவும் பாவாடை தாவணியும்.. மற்றொரு பக்கம் மஞ்சள், கிளிபச்சையும்.. அடர்ஊதா, சிவப்பும். ரோஜா, ஊதா.. என கிளாசிக் கலர்களில் உடைகள் இருந்தன. கமலேஷ் சரி என தலையசைத்து.. உடைகளை பார்த்தான்.
” திலகா.. இது வசு காலேஜ் இல்ல ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு போகும்போது போட.. இது கோயில்களுக்கு போகும்போது போட.. சரியா?.. ” என்று வேந்தனை பார்த்துக் கேட்டான்.
” வாய்ப்பே இல்லடா கமலேஷ்.. பாவம்தான் வசு. ”
” ஏன்டா?. நான் என்ன தப்பாவா சொன்னேன். ”
திலகன் ‘ ஆமாம் ‘ என தலை அசைக்க..
” ஓ.. அப்ப நீ சொல்லேன் பார்க்கலாம். ”
இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு இருந்ததை காண்பித்து ” கமலேஷ்.. இது வசுக்கு.. ” கிளாசிக்கலரில் இருப்பதை காண்பித்து ” இது எழிலரசிக்கு டா. ”
உடனே கமலேஷ் வேந்தனை பார்த்து ‘ ஆமாவா?.. ‘ என தலை ஆட்ட.. வேந்தன் இன்முகத்துடன் ” ஆமாம் ”
அதன்பிறகு தான் கமலேஷிற்கு.. நேற்று எழிலரசி கூறியது ஞாபகம் வர ” டேய்.. எழிலரசி உன்னைய வாங்கி தரவேண்டாம்.. என்னைய தான்டா வாங்கி தர சொன்னாங்க. நீ ஏன்டா வாங்கின?..”
” உன்னைய சொன்னா.. நீங்க வாங்கி கொடுத்து விடுவிங்களோ.. பிச்சுவிடுவேன் பிச்சு. அவசொன்ன இந்த விசயத்தை என்னால கேட்க முடியாது.. கேட்க வேண்டியதை கேட்போம். திலகன் சொன்ன மாதிரி நீ என் தங்கைக்கு வேண்டுமா என்று?.. யோசிக்கனும் போலடா. திலகன் அரசிய போட்டோல பார்த்தும்.. சொன்னத வைத்தும் கண்டுபிடித்து விட்டான். நீ அரசிய பார்த்தும் உனக்கு தெரியல.. பாவம்தான் வசு.. ” புன்னகையுடன் கூறிக் கொண்டே அனைத்து வேலையை முடித்துவிட்டு.. வாங்கிய துணிகளை சரி பார்த்த போது.. சேலை ஒன்று மிஸ்சாக.. அதனை வாங்க திருப்ப அந்த பகுதிக்கு வந்தனர்..
அங்கு வந்த போது வேந்தனின் காதில் தன்னவளின் குரல் கேட்டது.. அவளை பார்க்கும் ஆர்வத்தில் அவளை தேட.. அவளை அருகில் காணவில்லை.. ஆனால் குரல் மட்டும் கேட்டது. குரல் வந்த திசையை உன்னிப்பாக கவனிக்க.. அது அவர்களின் சற்று தள்ளி கேட்டது. அங்கே ஒரு பெண் திருப்பி நின்று போனில் பேசிக் கொண்டுயிருந்தாள்.
” ஏன்டி எழில.. இது உனக்கே ரொம்ப ஓவரா தெரியல?.. நீ வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு அந்த கலர் வேண்டாம்.. இந்த கலர் வேண்டானு சொல்லி.. இந்த வெயிலில் இதோட சோர்த்து நாலு கடை ஏறி இறங்கிட்டேன் டி.. நான் மதியம் சாப்பிட்டது செரிச்சு.. பிறகு ஒரு ஜுஸ் குடித்தது கூட செரிச்சு போச்சு டி.. நீ இன்னும் ஒரு முடிவுக்கு வரல. இந்த கலர் சரினு சொல்லுற.. இல்ல.. ஓ கடவுளே!.. நான் ஒன்னும் பண்ண முடியாது. இதையாவது சரினு சொல்லேன்டி. ”
மெல்லிய புன்னகையுடன்.. ” சத்யா நீ என் செல்லம் தானே?. இன்னும் ஒரு தடவை நல்லா பார்த்து சொல்லுடி.. இது தான்கடைசி. நீ எனக்கு பிடித்த மாதிரி வாங்கிட்டு வருவியா.. நான் என்னோட ஸ்விட்ல உனக்கு ஒரு பாக்ஸ் தருவான.. சரியா. ”
” ஹேய் எழில்.. இந்த செல்லம் என்று கொஞ்சற வேலைய செய்ய.. உனக்குனு வந்து தானா உன்கிட்ட மாட்டியிருக்க.. எழில்மானு ஒரு ஆளும்.. அரசிம்மானு இப்ப புதுச ஒரு ஆளும்.. என்று இரண்டு ஆள் சேர்ந்துயிருக்காங்க. இத்தனைநாளா ஒன்னே என்னல தாங்க முடியவில்லை. இப்ப இரண்டு இளிச்சவாயனுங்க. அவங்களிடம் போய் கொஞ்சு. அவங்க தான் ஒன்னுக்கு பத்து கடை கூட ஏறுவாங்க. ” சத்யா தன்னிடம் கூறி கொண்டுயிருக்கும் போதே.. பாதியில் அதிர்ந்த எழிலரசி..
” ஹேய்.. இரண்டு ஆளுனு.. சத்தம்மா சொல்லாதடி. நீ சொல்லுறதை கேட்கறவங்க.. என்னைய தப்பா எடுத்துப்பாங்க டி. அண்ணாவும்.. தனு செல்லமும்.. என்னை கொஞ்சுவது என்ன!. மடியில வைச்சு தாலாட்டு கூட பாடுவாங்க. உனக்கு என்ன டி. அதுக்குனு அவங்கள இளிச்சவாயனுங்க.. லூசு.. அடிமைகளுனு சொல்லுற. பிச்சுவிடுவேன் உன்னை. இப்ப சொன்னதுக்குக்காவே.. உனக்கு ஸ்விட் பாக்ஸ் கிடையாது. ”
” ம்.. நான் சொன்னதையே ஒரு காரணமா வச்சு ஸ்விட் தரமாட்டேன் சொல்லுற. இல்லைனா மட்டும்.. நீ அப்படியே ஸ்விட் பாக்ஸ் கொடுத்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பபாரு.. போடி. ஆமா நான் இளிச்சவாயனுங்கனு.. மட்டும்தானே சொன்னேன்..நீ என்ன லூசு.. அடிமைகளுனு சேர்த்து சொல்லுற.. என்ன?.. உன் மனசுல இருப்பது வருது போல. ” என சிரிப்புடன் கேட்க
” ரொம்ப சிரிக்காதடி.. ஆமாம்.. என் மனசுல இருப்பதுதான் வருது. நான் இரண்டு பேரையும் என்னவேனாலும் சொல்லுவேன். ஏன் அவங்க முன்னாடியே.. நான் திட்ட கூட செய்வேன். ஆனா.. உன்னைய தான் சொல்ல கூடாது சொன்னேன். அதவிடு ரூம்ல உட்கார்ந்து நாம்ம பேசிக்கலாம். ஆனா இப்ப பேசிக்கிட்டே இருக்காதடி நேரம் ஆகுது. உண்மையா சொல்லுடி.. எனக்கு சேலை பார்த்த நேரத்தைவிட.. நீ வீடியோ காலில் என்கூட பேசிய நேரம்தான் அதிகம். என் செல்லம் இல்ல நீ.. ”
” கடவுளே நிறுத்துடி.. திருப்ப முதலில் இருந்து ஆரம்பிக்காத.. ” எனக் கூறும் போது.. தனக்கு பின்னால் சிலர் சிரிக்கும் சத்தம் அவள் காதில் விழிந்தது.. ‘ யாருடா அது ‘ இப்படி சிரிப்பது என்று அந்த இடத்தை பார்க்க.. பார்த்தவள் என்ன!.. ‘ இந்த அண்ணாவா?.. ‘ எழிலிடம் ” சரி எழில்.. திரும்ப பார்த்துவிட்டு கூப்பிடுகிறேன். ” கூறிவிட்டு வீடியோகால்லை கட் செய்தாள்.
இவ்வளவு நேரம் சிரிப்பை கட்டுபடுத்திக் கொண்டுயிருந்தவர்கள்.. திரும்ப முதலில் இருந்தா எனக் அவள் கூறவும் அந்த நால்வரும் சிரித்து விட்டார்கள். சத்யாவும்.. நால்வரும் ஒரே பிரிவில் தான் இருந்தார்கள். வேந்தன் சத்யாவை கவனிக்கவில்லை.. இவள் பக்கத்தில் சேலை பார்க்க ஆரம்பிக்கும் போது..
‘ ஹேய் எழில்.. என தன் காதில் கேட்ட போது தன்னவளோ என்று திரும்பி பார்த்தான். தன்னவள் அங்கு இல்லை.. ஆனால் குரல் மட்டும் கேட்டது. குரல் வந்த திசையை கவனிக்க.. ஒரு பெண் வீடியோ காலில் பேசிக் கொண்டுயிருந்தார். அந்த பெண்ணை பார்த்தவுடன் தெரிந்தது. அது அரசியின் தோழி சத்யா என்பதும்.. அவள் தன் அரசியுடன் தான் வீடியோ காலில் பேசுகிறாள் என்றும் தெரிந்தது. உடன்வந்தவர்கள் வேந்தன் இவ்வாறு கவனிப்பதை பார்த்து.. அவர்களும் அந்தபெண்ணின் உரையாடலை கேட்க ஆரம்பித்தனர். உரையாடலை கேட்கவும் அதனை பார்க்கவும் ஆசையாகவும்.. சிரிப்பாகவும் இருந்தது. ‘
‘ அதில் வேந்தனுக்கு தன்னவளின் குரலை கேட்டதிலும்.. அவளின் தனக்கான உரிமையான பேச்சு.. அவள் தன் தோழியுடன் பேசும் விதத்தையும் ஆசையாக கேட்டான். திலகன் என்பவனோ.. ஆசை மற்றும் சிரிப்புடன் பார்த்தான்.. போட்டோவில் சத்யாவை பார்த்தவுடன் கண்கள் ஒரு நொடி.. அவளை பார்த்து ரசித்தது. அவளையே இப்போது நேரில் பார்ப்போம் என நினைத்திருக்க மாட்டான். அவளை போட்டோவில் பார்த்தவுடனே சிறு ஆர்வம்.. நேரில் பார்த்ததும்.. பேச்சை கேட்டவுடனும்.. அவளின் மீது இன்னும் ஆர்வம் அதிகமானது. அவனின் இந்த என்னவாக மாறும் என்று போக போகதான் தெரியும். ‘
வேந்தன் சத்யாவின் அருகில் வந்து புன்னகையுடன் ” ஹாய் சத்யா.. அரசிக்கு சேலை வாங்க வந்திருக்கிங்களா?..”
‘ வேந்தன் வருவதை பார்த்ததும்.. சத்யாவிற்கு தான் பேசியதை அனைத்தும் கேட்டு இருப்பாங்களா?. என நினைத்துக் கொண்டுயிருக்க.. வந்தவர் ஹாய் கூறி தான் வந்ததன் காரணத்தை சரியாக கூறியவுடன்.. என்ன சொல்வது?. என்று தெரியவில்லை?. ஏனெனில் எழில் ரகசியமாக ஒன்றை செய்வதற்காக தான்.. அவள் சேலை வாங்குவது யாருக்கும் தெரியாமல் தன்னை வாங்க அனுப்பினாள். இவரிடம் என்ன கூறுவது எனவும்.. தான் பேசியதை கேட்டுவிட்டு .. அவர்ஏதாவது கேட்டால்.. என்ன கூறுவது.. என யோசித்து அதிர்ச்சியில் இருக்க. ‘
வேந்தன் சத்யாவின் யோசிக்கும் முகத்தை பார்த்து.. புன்னகையுடன் ” நான் ஏதும் உங்கள கேள்வி கேட்கமாட்டேங்க.. ஆனா அரசிய பற்றி கேட்டதுக்கு பதில் சொன்னா நல்லாயிருக்கும். ” மெல்லிய புன்னகையுடன் கேட்க.
” அது.. அதுவந்து ” அவள் சொல்வதற்கு தடுமாற
” என்ன அரசி யாருக்கும் தெரியாம இருக்கனும் என்று கூறினாளா?.. ”
‘ ஆம் எனவும் உடனே இல்லை என்னவும் தலையை ஆட்ட.. ‘
” அப்படினா நான் சொன்னதுதான். பரவாயில்லை தெரிந்துவிட்டால் என்னைய சொல்லிவிடுங்க. அவளை நான் சமாளித்துக் கொள்கிறேன்.” முதலில் தன் நண்பர்களை அருகில் அழைத்து.. ” ஒரு பத்து நிமிடம் டா.. அரசிக்கு சேலை வாங்க வந்துயிருக்காங்க.. நான் பார்த்து வாங்கி கொடுத்தபின் கிளம்பிவிடலாம்.. ” என அவர்களிடம் கூறி
” எந்த மாதிரி கலர்களில் பார்த்து வாங்க சொல்லி.. உங்கள மதியத்தில் இருந்து கடைகடையா ஏறியிறங்க விடுறா?.. ”
நல்லாவே நாம்ம பேசியதை கேட்டுயிருக்காங்க என அசட்டு புன்னகையுடன் சத்யா தன் மொபைலை வேந்தனிடம் காண்பித்து.. ” இந்த கலர்கள் தான் அண்ணா. ”
‘ வேந்தன் கலரை பார்த்து அவளுக்கு ஏற்ற அழகான கலர்கள்!. என நினைத்து.. அதே கலரில் பல புடவைகளை அலசி ஆராய்ந்து.. ஒரு புடவையை தன் அரசிக்காக முடிவு செய்து பில் போட கொடுத்தான். ‘
சத்யா அதன் விலையை பார்த்து ” அண்ணா விலை அதிகமா இருக்கு?.. எழில் இவ்வளவு பணம் கொடுத்து விடவில்லையே. ”
வேந்தன் ஒரு பார்வை பார்த்து ” நான் எப்ப உங்கள பில் கட்ட சொன்னேன்?.. நான் கொடுத்துக்கிறேன். ”
சத்யா பதற்றதுடன் ” வேண்டாம் ண்ணா.. தப்பா எடுத்துக்காதிங்க.. எழில் நீங்க நாளை பார்க்கவரும் போது கட்டுற சேலைய.. அவ சேமிப்பில் வாங்க வேண்டும் என நினைச்சா.. எழில் வந்தா வீட்டில் தெரிந்துவிடும் தான்.. என்னைய வாங்கிட்டு வரச் சொன்னா. அதனால.. ” என்ன கூறுவது என யோசித்த நேரம்..
வேந்தன் உடனே ” சரிங்க.. வேறு பார்க்கலாம்..” என சிறு குரல் இறக்கதுடனும் சேலையை ஒருபார்வை பார்த்தும் கூறினான். பிறகு ” எனக்கு உன்னும் இல்லங்க.. அரசி எனக்காக யோசித்து அவளா வாங்கனும் என நினைக்கிறா.. நாம வேறு பார்க்கலாம்.. இத நான் வாங்கி பிறகு கொடுத்துக் கொள்கிறேன். “
‘ சத்யாவிற்கு அவள் கூறியிருக்க வேண்டாம் தான். ஆனா எழிலின் அவ சேமிப்பு பணம்.. என்பது மாறிவிடுமே.. இருந்தாலும் அண்ணாவ பார்க்கவும் வருத்தமாக இருந்தது. இருவரின் ஆசையும் நிறைவேற வேண்டுமே என்ன பண்ணலாம்?. என்ன பண்ணலாம்?. என யோசிக்க.. சட்டென்று வேந்தன் மற்றும் அவருடன் இருந்தவர்களையும் அவர்களின் கைகளில் இருந்த துணி பைகளைகவனித்தாள். ‘
‘ வேந்தனுக்கு சிறிது வருத்தமாகதான் இருந்தது.. முயல்குட்டி தான் வாங்கி கொடுக்கும் புடவையை உடுத்தினால்.. நன்றாக இருக்கும் என நினைத்து.. இந்த புடவையில் அவள் எப்படி இருப்பாள்? என்ற கற்பனையில் முழ்கியிருந்தான். இந்த புடவையில் அவள் இருக்கும் அழகை நாளை உடனே பார்க்க முடியாதே என்று நினைத்தானே தவிர.. மற்றபடி ஒன்னும் இல்லை. சத்யா அவனையும் தன் நண்பர்களின் கைகளையும் பார்ப்பதை பார்த்தான். ‘
” என்ன சத்யா?.. ஏதாவது எங்களிடம் கேட்கனுமா?..”
” ஆமாம் அண்ணா.. நீங்க வாங்கியிருக்க துணிகள் மொத்த விலை அதிகமாக இருக்கும் இல்ல?. ”
” ஆமாம் ”
” இல்ல அண்ணா இந்த கடையில் பார்த்தேன்..ஒரு குறிப்பிட்ட அதிக விலைக்கு மேல துணிவாங்கினா?.. குறிப்பிட்ட சதவிதம் தள்ளுபடி ஆகும் என பார்த்தேன். நாம்ம உங்க பில்.. இந்த சாரியோட பில் இரண்டையும் சேர்த்து பில் பிரிவில் கேட்டு பாருங்களே.. பிறகு என்னவென்று முடிவு பண்ணலாம். ” என அவள் சிறு தயக்கத்துடனே கூற..
வேந்தன் புன்னகையுடன் ” ஏன் தயக்கத்தோட சொல்லுறிங்க.. நல்ல நேரத்தில் ஞாபகம் வந்து சொல்லியிருக்கிறிங்க.. இங்கே இருங்க.. நான் பில் செக்ஷன் சென்று செக் செய்து வருகிறேன். ” பார்த்து வர சென்றான்.
திலகனை சத்யாவுடன் இருக்க கூறிவிட்டு.. வேந்தனுடன் கமலேஷ் வினோத்தும் உடன்சென்றனர். ஒன்றில் இரண்டாக.. திலகன் தனக்கு கிடைத்த நேரத்தை நன்கு பயன்படுத்தி கொள்ள நினைத்து.. ” தியா..” என அவளை அழைக்க
சத்யா தன்னை யாரோ கூப்பிடுகிறார்கள் என நினைத்து திலகனை நோக்கி திரும்ப.. ஆனால்அவளை அழைத்த பெயரை கவனிக்கவில்லை.. ” ம்.. என்ன சொல்லுங்க?.. “
‘ திலகனோ அவன் அழைத்த பெயரில் ஒரு நொடி அதிர்ந்து நின்றான். என்ன கூறி அழைத்தேன். தியா என்றா?.. திலகன்!.. அவள் கூப்பிட்டதற்கு பதில் அளித்ததும்.. மனதில் மகிழ்ச்சி பரவியது. ‘
அந்நிலையிலேயே அவளிடம் பேச ஆரம்பமானான்.. ” தியா.. நீங்களும் எழிலரசியும் எப்போ இருந்து பிரண்ட்ஸ்?.. ஸ்கூல் இருந்துனா.. எந்த ஸ்கூல் படிச்சிங்க?.. ”
சத்யா என்ன பெயர் கூறி கூப்பிட்டாங்க?.. தியாவா!.. நானும் உடனே ம்.. சொல்லுகிறேன்.. லூசுசத்யா நீ.. என அவளை திட்டுக் கொண்டு.. ” ஹலோ.. என் பெயர் தியா இல்ல சத்யா. என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்?.. யார் நீங்க?.. நான் எதுக்கு உங்களுக்கு பதில் சொல்லனும். ”
திலகன் புன்னகையுடன்.. ” ஏங்க.. உங்க பெயர் சத்யா தானே.. அதை கூப்பிட்டா தியா பேரும்வருது.. எனக்கு தியானுதான் கூப்பிட வருது. அப்புறம் உங்க பேரை இந்த பிரிவில் இருக்க எல்லோருக்கும் தெரிய வாய்ப்புயிருக்கு.. ஏன்னா?. அவ்வளவு சத்தம்.. நீங்களும் எழிலரசியும் பேசியதில். ”
சத்யா என் பெயரை இப்படியும் மா கூப்பிடலாம்.. இதுவும் நல்லாதான் இருக்கு.. ஆனா இவர் எதுக்கு இப்படி கூப்பிடனும்.. அத பிறகு பார்த்துக் கொள்ளலாம்.. இப்ப என்னவென்று கேட்போம்.. ” என்ன கொழுப்பா?.. நாங்க ஒன்னும் சத்தமா பேசல.. இந்த ஏரியா காலியா இருப்பதால் சத்தம் அதிகமாக இருந்துயிருக்கலாம்.. முதல் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க. “
” சரிங்க.. நீங்க சொல்வது போலவும் இருக்கலாம். என் பெயர் திலகன்.. இங்கு டிராவல்ஸ் நடத்திவருகிறேன். நான் வேந்தனும் எல்கேஜி யில் இருந்து பிரண்ட்ஸ். எனக்கு வேந்தனின் நடவடிக்கையில் ஒரு சில சந்தேகம்!.. அதை நான் தெளிவுப்படுத்திக்க தான் கேட்டேன். சீக்கிரம் பதில்சொல்லுங்க. வேந்தன் வந்துவிட போறான். ”
அவளிற்கும் இதேதானே தோன்றியது. ” ஆமாங்க எனக்கும் தாங்க.. நேற்று மாலை அவரை நான் எழிலுடன்.. வேந்தன் வீட்டு ஆட்களுடன் பார்த்தேன். அவர் எழிலிடம் பேசுவதில்.. நடந்துக்கொள்வதை பார்த்தால் நேற்று காலைதான் தெரிந்தவர் போலவே தோனமாட்டேங்குது.. ” என்று தன் சந்தேகத்தையும் கூறி அவள் படித்த பள்ளியின் பெயரையும் கூறினாள்.