திலகன்.. சத்யா பள்ளியின் பெயரை கூறியவுடன் அவனின் சிறு சந்தேகம்!.. பெரும் சந்தேகமாக மாறியது. எப்படி தெரியும்?.. வாய்ப்பு கம்மிதானே.. எங்கயோ இடிக்குதே?.. சரி அவனை பிறகு பார்த்துக் கொள்ளலாம். தியாவுடன் பேசலாம்.. தனியா நமக்கு இதுபோல் வாய்ப்பு கிடைக்காது என்று எண்ணி..
” சரி தியா.. அவனிடம்.. ஏதோ இருக்கு!.. அது என்னவென்று நாளைக்கு தெரிந்துவிடும் என்று நினைக்கிறேன்.. சரி நீங்க என்ன பண்ணுறிங்க?..”
சத்யா திலகன் கூறியதை கேட்டவள் ” ம்.. சரிங்க. ” என்று மட்டும் கூறிவிட்டு.. கடையை சுற்றிப்பார்த்தாள்.
திலகன் சத்யாவிடமிருந்து பதில்வராததால்.. ” என்ன பண்ணுறிங்க என் கேட்டேன்?.. ”
” ம்.. அதான் செஞ்சு காண்பித்தேன்.. பார்க்கலையா?.. ”
” என்ன சும்மா கடையை சுற்றி பார்த்துக் கொண்டுயிருக்கும் வேலையை சொல்லுறிங்களா?.. பரவாயில்ல நல்லவேலை தான்.. ஆனா நீங்க படித்ததற்கு.. இல்ல உங்க விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏதாவது பண்ணுவிங்கள?.. அது என்னவென்று கேட்டேன்?.. ”
சத்யா.. திலகன் தான் கூறியதை சமாளித்து ‘ பதில் வேண்டும் ‘ என்பது போல திரும்ப கேட்கவும்..” நானும் எழிலும் பிளவுஸ் டிசைனிங் கிளாஸ் போறோம். எங்க பைக் ஷோரூமில் நினைத்த நேரம் வேலை பார்த்துடே.. பேங்க் எக்ஸாம் தயாராகிக் கொண்டுயிருக்கேன்.. அவ்வளவு தான் மற்றபடி சும்மாதான் இருக்கேங்க. ”
திலகன் அவள் கூறியதும் சும்மா ஒரு வேலையை மட்டும் செய்யமாட்டா போல.. வாய் ஒய்யாமல் பேசுவதை போல.. கையும் காலும் அமைதியாகுவதும் கஷ்டம்தான்.. ” ம்ம்.. எப்படிங்க இப்படி உங்களால சும்மா இருக்க முடியுது.. ஆனா அதுவும் கஷ்டம் என நான் கேள்வி பட்டுயிருக்கிறேன். சரிங்க நான் உங்களுக்கு ஒரு வேலை வைத்துயிருக்கிறேன்.. ஆனா அதைபற்றி தெளிவா நான் யோசிக்கனும். ஆனா சிக்கிரமா சொல்லிவிடுவேன். ” புன்னகையுடன் கூறியவன்.
சத்யா அவன் பேசியதில் ஏதோ புரிந்தும் புரியாமலும் இருந்தது.. அவன் முடிவில் புன்னகைக்கவும் ” ம்ம் ” என்று கூறி அவனை பார்த்தாள்.. அவனும் அவளைத்தான் பார்த்தான்.
‘ ஒரு நிமிடம் இருவரும் மற்றொருவரை கவனித்து பார்த்தார்கள். சத்யா 5.5யும் திலகன் 6அடியும்.. இருவரும் மாநிறமாகவும் இருப்பார்கள். இருவரின் குணம் கூட ஒன்றாக தான் இருக்கும் என நினைத்தார்கள்.. ஏன்?.. தெரியல.. போக போக பார்த்துப்பாங்க.. பிறகு இருவரும் அவர்கள் சென்றவழியை பார்க்கவும்.. கேட்க சென்றவர்கள் வரவும்.. அதுவும் வேந்தன் முகம் கொள்ளாபுன்னகையுடன் வந்தான். அவர்கள் சென்ற காரியம் நிறைவேறியது போல. ‘
வேந்தன் புன்னகையுடன் சத்யாவிடம் ” ரொம்ப நன்றி சத்யா.. நீங்க ஞாபகம்படுத்தி சொன்னமாதிரி.. இங்கு சில சலுகைகள் இருந்தது.. அதுவும் இந்த சேலையிலும் தள்ளுபடி நாளையில் இருந்துதான் வரபோகுதா.. ஆனா நமக்கு இன்னைக்கே தருகிறேன் சொன்னாங்க.. அது அரசியோட விலையில் தான் இருந்து. எனக்கு ரொம்ப சந்தோஷம்.. இரண்டு பேரின் ஆசையும் நிறைவேறிவிட்டது. ”
மற்ற நால்வருக்கும் அவனின் சந்தோஷ முகம் அவர்களையும் மகிழ்ச்சி அடைய செய்தது. திலகனும் தியாவின் செயலில் சிறிது கூடுதலாக மகிழ்ந்தான். அவனின் முகத்தை சத்யாவும் கவனித்தாள். வேந்தன் இருவரையும் கவனித்தான்.
வேந்தன் தன் முயல்குட்டியின் விருப்பத்தை அவளிடம் நேரடியாக கேட்கா விட்டாலும்.. தன் காதில்.. உடனே கேட்க மனம் ஏங்கியது.. ” சத்யா.. அரசிக்கிட்ட பிடிச்சயிருக்கானு கேளுங்கலே?..”
சத்யா சிறுபுன்னகையுடன் “ ம்.. சரி அண்ணா.. ” எனக் கூறி எழிலுக்கு வீடியோகால் செய்தாள்..
சத்யாவிற்கு சற்றே தள்ளி.. வேந்தன் சிறு புன்னகையுடன் நின்றுயிருந்தான். எழில் முதலில் சேலையைதான் பார்த்தாள்.. அவள் எதுவும் பேசாமல்.. சிறிது நேரம் அதையே பார்த்தாள்.
” சத்யா.. சத்யா செல்லம்.. நீ தான் இதை தேர்ந்தெடுத்தாயா?.. இப்படியொல்லாம் நீ பார்க்கமாட்டியே?.. விலை கூட அதிகமாக இருக்க மாதிரியிருக்கு?.. ”
சத்யா எப்படி கண்டுபிடித்தாள்?.. தான் என்ன செல்ல வேண்டும் என நினைத்து.. ” ஏன்.. நாங்களெல்லாம் இப்படி எடுக்க மாட்டேமா?.. விலை கொஞ்சம் அதிகம் தான்.. அது சேலைக்கு தள்ளுபடி இருந்ததுடி.. அதனால் வாங்கலாம் என நினைச்சேன்.. சரி சேலை ஓகேயா?.. ” எனக் கேட்டு அதனை நன்றாக விரித்த சேலையை காண்பித்தாள்.
எழில் அதனை பார்த்துக் கொண்டுயிருந்தவள்.. ஒரு இடத்தில் நன்றாக ஒன்றை கவனித்தாள்.. ” சேலை ஒகே தான்.. ஆனா தேர்ந்தெடுத்த ஆளுக்காக தான்.. இந்த சேலையை வாங்கலாம்மா?.. வேண்டாம்மா?. என யோசிக்கனும். “
” ஏன்டி.. நான் தேர்ந்தெடுத்தா எடுக்க மாட்டியா?..”
எழில் புன்னகையுடன் ” நீ எடுத்துயிருந்தா பரவாயில்ல.. ஆனா நீ தேர்ந்தெடுக்கவில்லையே.. தனு தானே எடுத்தாங்க?.. சரியா?… ”
ஐவரும் எப்படி கண்டுபிடித்தாள்?. என யோசிக்க.. எழில் ” சத்யா.. ரொம்ப யோசிக்காத.. சேலை காண்பித்த போது.. ஒரு கை தெரிந்ததே.. அது தனுவின் கைதானே?.. அதை வைத்துதான் கண்டுபிடித்தேன். அப்புறம் சேலையை பற்றி தேர்ந்தெடுத்தவரிடம் நாளை சொல்கிறேன். தனு.. சத்யாவுக்கு நம்ம சார்பா ஒரு சேலை ஐந்தே நிமிடத்தில் எடுத்து கொடுங்க சரியா. “
” அப்புறம் தனு நீங்க இந்த சேலைக்கு மேஞ்சிங்கா.. ஒன்னா இருப்பதுபோல இருக்கனும்..ஆனா நாம்ம ஒரேமாதிரிதான் போட்டுயிருக்கோம் என்பது யாருக்கும் வெளிப்படையா தெரியக்கூடாது என்பது போல.. டிரஸ் உங்களிடம் இருந்தா சரி.. இல்லையென்றால் வாங்கிக்கோங்க. ஓகேயா தனு?..”
” ஏன்டி.. அதான் வேந்தன் அண்ணானு.. தெரிந்துவிட்டது தானே?. நேரடியா அவங்களை பார்த்து.. இதெல்லாம் செல்லவேண்டியது தானே.?. அண்ணா..” என்று போன்னை திருப்ப முயன்றபோது.
” திருப்பின.. பிச்சுவிடுவேன்டி..”
சத்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை.. வேந்தனும் எழிலரசியிடம் இவ்வளவு நேரம் பேசாமலும்.. எதுவும் கேட்காமல்.. அமைதியாக புன்னகையுடன் நின்றுக் கொண்டுயிருப்பதை பார்த்தாள்.
” ஏன்டி?.. ”
” ஏன்னா?. இரண்டுபேரும் இன்னைக்கு மெளனவிரதம்.. போதுமா. ”
‘ இதை கேட்டவனின் மனதிலோ.. முயல்குட்டி இந்த மெளனவிரதம் எனக்கு எப்படா முடியும்இருக்கு. ஏன்டா உன்கிட்ட சம்மதம் சொன்னேன் இருந்தேன். இப்ப என்னடானா.. நாளைக்கு எப்ப உன்னைய நான் தேர்ந்தெடுத்த சேலையில் பார்ப்போம்.. உன்கிட்ட பேசுவோம்.. என அந்த நேரத்திற்காக காத்துயிருக்க போகும் நேரத்தை நினைத்தால்.. இன்பமாகவும் கஷ்டமாகவும்.. தன்னை நினைத்தே வியப்பாகவும் இருக்கு முயல்குட்டி. ‘
” என்ன?.. மெளனவிரதம்மா?..”
” ஆமாம்டி.. நீ பேசுனது போதும்டி.. நீ வீட்டுக்கு சீக்கிரம் வா செல்லம்.. இங்கு வந்ததன் பிறகுதான் உங்க வீட்டுக்கு போகனும். நேரம் ஆச்சுடி சத்யா. அப்புறம் வேந்தன் கூட யார் யார் இருக்காங்களோ.. அவங்களுக்கு எல்லாம் ஹாய்.. நாளைக்கு பார்த்து பேசலாம். நான் இப்ப வைக்கிறேன் தனு.. எல்லோருக்கும் பாய்.. ” எனவும்.. சத்யாவிடம் கையை மட்டும் அசைத்துவிட்டு.. வீடியோ கால்லை கட் செய்தாள்.
” என்ன அண்ணா இப்படி இரண்டு நிமிடத்தில் உங்களை கண்டுபிடித்து விட்டாள். வீட்டல போய் என்ன சொல்ல போறாலே தெரியல?.. அப்புறம் நீங்க இரண்டு பேரும் மெளனவிரதம் என்று கூறுகிறாள்.. எனக்கு உன்னும் புரியல.. ” என பேசிக் கொண்டே வேந்தனை பார்க்க ” நான்பாட்டுக்கு பேசிக்கிட்டுயிருக்கேன்.. நீங்க என்ன பண்ணுறிங்க?.. ”
” அரசி சொன்னது கேட்கவில்லையா?.. உனக்கு சேலைப் பார்க்கிறேன். ஐந்து நிமிடம் தான் மேடம் டைம் கொடுத்துயிருக்காங்க.. டேய் திலகா.. நீயும் செலக்ட் பண்ணு. ” அர்த்ததுடன் பார்த்துகூறிவிட்டு.. பேருக்கு அவன்.. திலகன் தேர்ந்தெடுத்த சேலையை தான் சத்யாவிற்கு வாங்கி கொடுத்தான்.
” அண்ணா.. நீங்க இன்பா அண்ணாவை முந்தி விடுவிங்க போல.. எழில் யாரிடமும் சீக்கிரம் பேசமாட்டா. ஏன் என் கூடவே தான் இருப்பா.. ஆனா பேச காசு கேட்பா.. அவளை பேச வைக்கபோய் நான் அதிகம் பேச ஆரம்பித்தேன். ஆனா இந்த உலகம் என்னையபோய்.. இந்த அமைதியான பொண்ணுக்கு.. இப்படி வாயாடி எப்படி தோழியா ஆனா?. என்று நாங்க ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்தே எல்லோருக்கும் சந்தேகம். ஆனா உங்களிடம் அவ சீக்கிரமே.. அதுவும் அதிகபேசுவதுபோல இருக்கு. அது எப்படி ண்ணா?.. ”
புன்னகையுடன்.. ” அதுவா.. இப்பவே தெரியவேண்டுமா?.. ”
‘ சத்யா ஆமாம் என தலையை ஆட்டினாள். சத்யாவுடன் திலகனுக்குமே ஆர்வம்.. சற்று முன்னால் எழில் பேசியது.. எழில் பற்றியும்.. சத்யா கூறியது என.. எப்படி இருவரின் நடவடிக்கையிலும் உரிமையான.. பழக்கப்பட்டவர்களை போல பேச்சுக்கள்.. செயல்கள் என இருந்தது. அதனால் அவனும் என்னவென்று தெரிந்துக்கொள்ள விரும்பினான். ‘
சிரிப்புடனே.. ” அது எனக்கும்.. அரசிக்கும் மட்டுமேயான ரகசியம். ”
சத்யா அவர் கூறவில்லை என்பதால் முறைப்புடனே ” ரகசியமா.. அப்ப உங்க இரண்டு பேருக்கும்.. ஏதோ இருக்கு.. கண்டுபிடிக்கிறேன்.. இல்ல கண்டுபிடிக்கிறோம். ” எனக் கூறி திலகனைபார்த்து ” திலகன் எனக்கு உதவி செய்விங்கதானே?.. ” எனக் கேட்டாள்.
‘ சத்யாவிற்கு திலகன்.. இப்போது தன்னை போலவே.. இருவரின் நடவடிக்கையில் ஏதோ இருக்கிறது என்று எண்ணுபவர்.. மற்றும் வேந்தனின் நெருங்கிய நண்பர் என்ற முறையில் இவ்வாறு அவனிடம் கேட்டாள். ‘
திலகன் புன்னகையுடன்.. ” கண்டிப்பாங்க.. ”
வேந்தனுக்கு திலகனின் புன்னகையில் ஏதோ புரிந்தது அவனும் இவர்களை சிரிப்புடன்.. ” முடிஞ்சா கண்டுபிடித்துக் கொள்ளுங்க.. இந்தாங்க உங்களுக்கான சேலை. சரி சத்யா நேரம் ஆச்சு.. பார்த்து வண்டில போங்க?.. “
” முடியல அண்ணா. உங்க அரசிம்மா கிட்ட சீக்கிரம் போய் கொடுக்கனும்.. அதுக்கு சீக்கிரம் கிளம்புனு என்னைய தூரத்துறிங்க.. சரி சரி. ஆனா நான் வண்டில வரல.. ஆட்டோல தான் வந்தேன்ண்ணா.. நான் கிளம்புறேன். ”
” ஆட்டோவிலா.. அரசிக்கூட பேசுறப்ப வெயிலில் அழைத்தேன் சொன்னிங்களே.. அதனால வண்டியில வந்திங்களோ என நினைச்சேன். ஆனா அதுல வரலையா?.. கொஞ்சம் நேரம் இருங்க.. நாங்க வந்து விடுறோம். “
” அண்ணா நீங்க வர வேண்டிய தேவை இல்லை. நேத்து சாய்ந்திரம் நாங்க வீட்டுக்கு போனோம் இல்ல.. அதே ஆட்டோவில் தான் எழில் என்னைய கடைக்கு அனுப்பினாள். மதியத்திலிருந்து அதே ஆட்டோவில் தான் எல்லா கடைக்கு போனேன். அவகிட்ட சும்மா சொன்னது.. எழில் ஆட்டோ.. குடிக்க ஜூஸ்.. சாப்பிட ஸ்னாக்ஸ் எல்லாம் ரெடி பண்ணித்தான் என்னை அனுப்பியது. சேலை வாங்குவது மட்டும்தான் என் வேலை.. அதையும் நீங்க பண்ணிட்டிங்க.” புன்னகையுடன் கூறினாள்.
திலகன் வேந்தனிடம் ” டேய் மதியம் ஹோட்டலில் சாப்பிட்டது டா. ப்ரண்ஸ்சை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்று. நீ எழிலரசியிடம் இருந்து இதெல்லாம் பார்த்து கத்துக்கோ.”
” டேய்.. எனக்கு தேவைதான் டா. நான் ஒன்னும் சொல்லாத மாதிரி பேசுற.. எத்தனை தடவை சொன்னேன். அதுக்கு நீதான சொன்ன.. நாம்ம வேலை முடிச்சிட்டுவிட்டு.. சேர்ந்து போய்களாம் என்று சொல்லிட்டு.. இப்ப என்னை குறை சொல்லுற. சரிடா.. நம்ம அப்புறம் பேசலாம். சத்யா முதல்ல கிளம்பட்டும்.”
கமலேஷ் வினோத்தும் அவர்கள் தனியாக சில துணிகள் வாங்க சென்ற வேலையை முடித்துவிட்டும் வந்தனர். பிறகு ஒர் பிரிவை கூறி மற்றவர்களை அங்கு செல்லக் கூறிவிட்டு.. வேந்தனும் சத்யாவும் கடைக்கு வெளியே வந்தனர்.
வேந்தன் முக்கிய பொருள் ஒன்றை வாங்கி.. ” சத்யா இதை அரசியிடம் கொடுத்துவிடுங்க. நீங்க உங்க வீட்டுக்கு போனவுடன் அரசியின் எண்ணிலிருந்து எனக்கு மெசேஜ் பண்ண சொல்லுங்க. பார்த்து போங்க.. ”
சத்யா.. வேந்தன் வாங்கிக் கொடுத்த பொருளை பார்த்து புன்னகையுடன் நின்றுக்கொண்டே.. அவன் கூறி அனைத்திற்கும் ம்.. ம்.. என தலையை ஆட்டிக் கொண்டு இருந்தாள். பிறகு ஆட்டோவில் ஏறி அரசியின் வீட்டை நோக்கி சென்றாள்.
பிறகு வேந்தனும் இன்னும் சில வேலைகளை முடித்துக் கொண்டு.. துணிக்கடை அருகிலேயே சாப்பிட்டுவிட்டு கிளம்பி.. வேந்தனின் வீட்டினுள் நுழைந்த நேரம் அனைவருமே தங்களின் பணிகளை முடித்துவிட்டு ஹாலில் அமர்ந்துயிருந்தனர். அவர்கள் வேந்தனையும் உடன் வந்தவர்களை வரவேற்று அமரச் செய்தனர்.
யோகா ” என்ன வேந்தா பர்சேஸ்சிங் எல்லாம் பலமோ.. பெரியவங்களுக்கும்.. உனக்கும் எடுக்க இவ்வளவு நேரம்மா டா.. ”
கமலேஷ், நண்பர்களும் வேந்தன் என்ன சொல்லுவான்?.. என அவனை பார்க்க.. ” ஆமாம் க்கா.. ” என்று மட்டும் கூறி வாங்கி வந்த டிரஸ்களை பெரியவர்களுக்கு கொடுத்தான். பின் கமலேஷ், நண்பர்களும் கிளம்ப.. காலை சீக்கிரமே வரக்கூறி அழைப்புவிடுத்து.. அவர்களை வாசல் வரை வந்துஅனுப்பி வைத்தான்.
அப்படியே தோட்டத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு.. பின் உள்ளே வர அனைவரும் உறங்க சென்றுயிருந்தனர். இவனும் தன்னுடைய அறைக்கு வந்து.. தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு.. இரவு உடை மாற்றி படுகையில் படுக்க.. கண்களை முடி இன்றைய நாளில் நடந்தவகளை எண்ணியும்.. நாளை தன் அரசியுடன் நடக்கப் போகும் நிகழ்ச்சியை ஆவலாகவும் நினைத்துக் கொண்டே உறங்கிப்போனான்.
இதேநேரத்தில் அதே ஊரின் மற்றோரு பகுதியான எழிலின் வீட்டிலும் அனைத்து ஏற்பாடுகளை செய்து முடித்திருந்தனர். எழில் தன்னவனை தன் வீட்டில் பார்க்க போகும் அந்த அற்புத தருணத்தை.. ஆசையுடன் எதிர்நோக்கி அவனை நினைத்துக் கொண்டே அவளும் உறங்கியிருந்தாள்.
வெண்ணிலவு தன் குளிர்ச்சியை உலகத்திற்கும்.. இந்த இருவருக்கு கூடுதலாக தங்களின் துணைகளுடன் இணைந்த கனவுகளை தந்துவிட்டு.. தன் இரவின் பணியை தொடர்ந்தது.