வேந்தன் புன்னகையுடன் ” இது அப்படி இல்ல வசு. நீ கேட்கும் பொருட்களை உன்னாக மட்டுமே வாங்கி கொடுப்பேன். ஆனால் இதில் முதல் முன்னுரிமை என்று.. நான் யாருக்கும் கொடுக்கமாட்டேன். முதல் தேவை யாருக்கு?.. என்பதை மட்டும்தான் நான் பார்ப்பேன். “
” நீ முதல் முன்னுரிமை என்று சொல்வது.. எதிர்பார்ப்பது.. எப்படி இருக்கு என்றால்?.. நான்.. நீ.. நல்லது, தவறு என்று.. என்ன செய்தாலும், சொன்னாலும்.. உனக்குதான் எப்போதும்.. எதுக்கும்.. சப்போட் பண்ணுவேன்.. என்பது போல் இருக்கு. “
” எனக்கு.. ஒருவர்.. ஒரு செயல் செய்யும்போது அவற்றில் தவறு நடக்கும்போது.. அது யார் செய்தாலும்.. அவர்களிடம் எடுத்துக் கூறி.. அவர்களை.. அவற்றை சரி செய்ய வேண்டும். அவற்றினால் மற்றவர்களுக்கு பாதிப்பு வரமால் இருக்க வேண்டும். அப்படி பாதிப்பு வந்தால் அந்த செயலை யார் செய்தாலும் முழுபொறுப்பும்.. செய்யும் அவர்கள் மட்டுமே. நான் அவர்களை கண்டிப்பாக.. யாராக இருந்தாலும் அவர்களுக்கு சப்போட் பண்ணவேமாட்டேன். “
” அதுவே என்னால்.. என் செயல்களால் மற்றவர்களுக்கு பாதிப்பு வந்தால் முழுப்பொறுப்பையும் பாதிப்பையும் நானே ஏற்றுக் கொண்டு.. மற்றவர்களுக்கு எந்தவிதமான பாதிப்போ.. தீங்கோ வரவிடமாட்டேன். ”
” இதை மட்டும் நல்லா ஞாபகத்தில் வைத்துக் கொள் வசுமா. வீட்டில் உள்ள முக்கிய இரத்த உறவுகள் மற்றும் மனைவி.. வருங்காலத்தில் குழந்தைகள்.. இவர்களுக்கிடையே ஒவ்வொருவரிடமும்ஒரு சிறப்பு இருக்கும். இதில் எது சிறந்தது?.. என்று வகைபடுத்தவே முடியாது. என் எண்ணத்தின் படி யாரையும்.. யார்க்கூடவும்?.. ஒப்பிடமாட்டேன்.. யார் எனக்கு முதல்?.. என்றும் கூறவும் மாட்டேன். பொதுவாகவே யாருமே.. கூறவும் கூடாது என்பது என் எண்ணம். அதுதான் நாம் அவர்கள் மீது வைத்துயிருக்கும் அன்புக்கு மரியாதை. ” எனக் கூறி தங்கையின் முகத்தையே பார்த்துக்கொண்டுயிருந்தான்..
‘ எங்காவது.. எப்பொழுதாவது இதுபோலான எண்ணம் தோன்றுவதற்கு.. ஏற்றார் போல் நடந்து கொண்டோமா?.. வினோவிடம் இவள் மாதிரி தான் நான் நடந்துக் கொள்கிறேன்.. ஆனால் என்ன இருவரும் கேட்டும்போது.. வினோவை விட சிறிய பெண் என்பதால் வசு கேட்டதை முதலிலும்.. வினோவிற்கு சிறு காலம் கழித்து வாங்கிதருவேன். அதனால் இந்த எண்ணம் வந்துயிருக்மோ?.. அன்றே இருவருக்கும் சேர்ந்தே வாங்கியிருக்க வேண்டும் என தான் இங்கு தவறியிருக்கலாம். ‘
‘ வேந்தன் வேலைக்கு சேர்ந்தது முதல்.. அவனுடையது.. தங்கைகள் கேட்பது.. என அனைத்துவித தேவைக்கும்.. அவனின் சம்பள பணம் மட்டுமே. உணவகத்தின் தன் பொறுப்பு வேலைகளை செய்து அவன் பங்காக ஒரு பகுதி பணம் வந்தாலும்.. அதனை வேறு சில பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தினான். தனக்கு கூட தேவையின்றி எதுவும் செலவு செய்ய மாட்டான். ‘
வசு அண்ணா கூறிய விசயத்தை யோசித்துவிட்டு ” அண்ணா.. நீ சொன்னது ஓரளவிற்கு புரியுது.. இருந்தாலும் நீ சொல்லுற சிறப்ப.. உன்னோட பார்வையில் சொல்லேன். ”
வேந்தன் புன்னகையுடன்.. ” கண்டிப்பா சொல்ல வேண்டுமா?.. “
ஆமாம் ‘ என வசு ஆர்வத்தில் வேகமாக தலையை ஆட்டினாள். இவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டுயிருந்த அனைவருக்கும்.. அவன் என்ன கூறுவான்?. என்ற ஆர்வம் இருந்தது. தங்களுடைய சிறப்பு எதுவாகினும் பிறர் கூறும் போது.. அது தனி இன்பம் தானே.
வேந்தன் மிகவும் இதமான முகத்துடன் ” வசுந்தரா.. நம்ம அம்மா நம்மள தன் கருவறையில் நம்மை உயிராக நினைத்து.. நம் வளர்ச்சி ஒவ்வொன்றையும் உணர்ந்து.. தன் கருவறையில் பாதுகாத்து.. அவர்களின் உயிரையும் இரண்டாம் நிலையில் வைத்து.. நம்மை இந்த உலகத்திற்கு கொண்டு வருகிறார். பிறகு குழந்தைகள் தான் அவருக்கு முதலில்.. அம்மாவின் வளர்ச்சியும் கூட அவர்களை சுற்றி தான் இருக்கும். “
” அடுத்து அப்பா.. அம்மா கர்ப்பமாக இருக்கும் காலகட்டத்தில் தொடங்கி.. அம்மா மற்றும் பிள்ளை இருவரையும் பாதுகாத்து.. அவர்கள் விரும்பியவைகளை செய்தும்.. அம்மா உணர்ந்து கூறுவதை அவரும் உணர்ந்து.. என அம்மாவுடன் சேர்த்து அவரும் நம்மை உலகத்திற்கு கொண்டு வருகிறார். அடுத்து சகோதர.. சகோதரிகள்.. நம்ம எல்லாம் ஓரே தாயின் கருவறையில் பிறக்கிறோம். தாயால் நம்மளை உணரவும்.. தந்தையால் பார்த்து பாதுகாப்பை மட்டுமே தரமுடியும். இந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. நமக்கு மட்டுமே கிடைக்கிறது.
அடுத்து நமக்கு வரப்போகும் வாழ்க்கை துணை.. பெற்றோர்கள் நம்மை நல்ல ஆண்.. பெண் என்று வளர்க்கிறார்கள் என்றால்.. நம்முடைய வாழ்க்கை துணையால் மட்டுமே நம்முடைய வளர்ச்சியில்.. சரிவில்..நன்மை.. தீமைகளில் உறுதுணையாக இருந்தது.. நம் உயிர்.. உணர்வு என இணைந்துயிருந்து நம்மை முழுமையான பெண்ணாகவும்.. ஆண்மகனாகவும் உணரக்கூடிய தாய்.. தந்தை என்ற பட்டத்தை கொடுக்கக் கூடிய பிள்ளைகளை அவர்களால் மட்டுமே நமக்கு தரமுடியும். ”
” இதனை போன்றே அப்பா அம்மாவின் உடன்பிறந்தவர்கள்.. அவர்களின் பிள்ளைகள் நமக்குஉறவாவது.. இதுதான் என்னுடைய மனதில் உள்ள எண்ணம் மற்றும் கருத்து. அப்புறம் வசுமா சில விஷயங்கள்.. நான் சொன்னதை நீ கேட்டு புரிந்து நடந்துக் கொள்வதை விட உன்னுடைய அனுபவத்தில் இருந்து மட்டுமே உனக்கு புரியும். நான் சொன்னதை பற்றி உன்னால் புரிந்துகொள்வது இன்னும் சுலபாமாக இருக்கும். நீ இவ்வளவு நாள் புரிந்துக் கொண்டதோ.. அல்லது நான் உனக்கு சரியாக புரிய வைக்காமல் இருந்துயிருக்கலாம். நான் சொன்னதை மட்டும் மிக நன்றாக ஞாபகம் வைத்துக் கொள் சரியா?..” கூறி முடிக்கதான்.
வசுந்தரா வேந்தன் கூறிய அனைத்தையும் கேட்டும்.. அவன் முகம் காட்டும் பாவனையை ரசித்தும் இருந்தாள். பிறகு புன்னகையுடன் ” அண்ணா நீங்க சொன்னது நல்லவே புரிந்தது. நீங்க செய்ததை பார்த்து.. நான் தவறா கூட புரிந்து கொண்டு இருக்கலாம். இனி இவ்வாறு நினைக்க மாட்டேன். ” சட்டென்று அவன் காதின் அருகில் சென்று ” அண்ணா.. உனக்கு அண்ணிய ரொம்ப பிடிக்குமோ!.. வாழ்க்கை துணை என்று பேசும் போது.. ஒவ்வொன்றிக்கும் அப்பப்பா!.. என்னா முகப்பாவனை?.. உன் முகம் அப்படியே சிவந்து.. கியூட்டா இருந்திங்க. அண்ணிய பற்றி சொல்லும் போதே இப்படி.. நாளை பார்க்கும் போது.. நான் நாளை முகத்தை மட்டும்தான் பார்க்க போகிறேன்.” என்று புன்னகையுடன் கூறி சிரித்தாள்.
‘ வேந்தன் அய்யோ!.. வசு கிட்டையும் நான் மாட்டிக்கொண்டேனா. இந்த முயல்குட்டிய நினைத்தால் போதும்.. முன்னாடி இருப்பவர்கள் யாரை பற்றியும் நினைக்காம வேறு உலகத்தில் இருக்கிறேன் ‘
புன்னகையுடன் அவனும் வசுவின் காதில்.” ரொம்ப ரொம்ப பிடிக்கும். ”
இவர்களையும் இவர்களின் உரையாடல் அனைத்தையும் கேட்டவர்களுக்கு.. மிகுந்த மன நிறைவு மற்றும் வேந்தனின் எண்ணத்தை கூறும் போது அனைவருமே புரிந்துக் கொண்டனர். அவனின் எண்ணத்தை ரவிந்திரன்.. சித்ரா.. தங்களின் மகனையும்.. வினோ தன் அண்ணாவையும் பெருமிதமாகவும் நினைத்து உவகை கொண்டனர். பிறகு வேந்தனும் வசுவும்.. ரகசியமாக பேசி.. சிரித்ததை பார்த்தவுடன்.. நல்லவிதமாவே பேசி முடித்துக் கொண்டனர் என்ற மகிழ்ச்சியுடனே அனைவரும் ஹாலிற்கு வந்தார்கள்.
இருவரையும் பார்த்து யோகா ” வசு?.. வேந்தனிடம் நான் விளையாட்டுக்கு தான்மா அப்படி சொன்னேன். ஆனா நீ கேட்டது கூட உனக்கும், எங்களுக்கும்.. நல்லாத போச்சு.. ” கூறியபடி அவர்களின் அருகில் அமர.. மற்றவர்கள் நாளை நிகழ்ச்சிக்காக அவரவர் யாரை அழைக்க.. என்னவெல்லாம் செய்ய.. வாங்க வேண்டும் என அன்றைய நாளை திட்டமிட்டு.. அதனை செயல்படுத்த தொடங்கினர்.
வேந்தன் ‘ எனக்கும் இதற்கு சம்பந்தம் இல்லை என்பது போல அவர்கள் பேசுவதை மட்டும் கேட்டுவிட்டு.. அப்பாவிடம் நான் கடைக்கு செல்கிறேன் நீங்கள் சிறிதுநேரம் கழித்து வந்தால் போதும் ‘ எனக் கூறிவிட்டு.. அம்மாவிடம் கூறிச் செல்ல சமையலறை சென்றான்.
சித்ரா அங்கு இனிப்பு செய்துக் கொண்டுயிருந்தார். ” என்னம்மா?.. இந்த நேரத்தில் பால்பாசயம். ”
சித்ரா சிரித்துக் கொண்டே.. ” மனசு ரொம்ப சந்தோஷமாக இருக்குப்பா!.. வேந்தா.. வசு பேசிய போது.. என்ன இப்படி பேசுகிறாள்?.. இது நல்லதுக்கு இல்லை என்று தான் நினைச்சேன். பிறகு நீ வசு விடம் பேசி புரிய வைத்தும்.. நீ உன் எண்ணத்தை கேட்ட பின்பு.. நீ எங்களுக்கு மகனான.. உன் தங்கைகளுக்கு அண்ணாவா.. கிடைத்தற்கு கடவுளிடம் எவ்வளவு நன்றி சொன்னாலும் திருப்தியாகாது. ஆனா என் சந்தோஷத்தை இனிப்பு கொடுத்து பகிர்ந்து கொள்ளலாம் இல்லையா. அதனால் செய்கிறேன். இரு முடித்துவிட்டேன்.. சாமிக்கு வைத்துவிட்டு வருகிறேன். பிறகு சாப்பிட்டு கடைக்குச் செல். ” என்று கூறிக் கொண்டே சாமி அறை இருக்கும் இடத்திற்கு இன்முகத்துடன் சென்றார்.
வேந்தன் சித்ரா சென்றவுடன்.. சமையல் மேடையில் சாய்ந்து நின்று.. தன் போனில் இருந்த அரசியுடன் நேற்று மாலையில் எல்லோருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்திருந்தவன்.. ‘ முயல்குட்டி இனி உன் காதல், காதலன் , உன்னுடையவன்.. என அனைத்தும் நான் என்று நினைத்தாலே.. மகிழ்ச்சி.. காதல்.. கள்ளத்தனம்.. கனவு.. உரிமை உணர்வு.. என்று என் முகத்தில் தோன்றி.. அனைவரிடம் மாட்டிக் கொண்டு.. இப்போதே உன்மீது அனைவரையும் பொறாமை கொள்ள வைக்கிறாய் நீ!. இன்னும் என்னவெல்லாம் செய்யப் போறீயோ???. ‘
‘ யார்?.. யாரையும் ?.. ஒப்பிட்டும்.. யார் முதல்?.. என்று பார்க்கக்கூடாது என்பது பொதுவான என் மனதில் உள்ள எண்ணம். அரசிம்மா நீ தான் என் மனைவியாக வரப் போகிறவள் என்று கடவுள் கண்காண்பித்தவுடன் நான் இதை வெளியில் சொல்லும் சூழ்நிலை வருனு.. அதுவும் சின்ன பெண்ணான தங்கையிடம். ஆனால் அக்கா கூறியது போல இதுவும் நல்லதுக்கு தான் போல.. இந்தளவிற்கு நான்குடும்ப உறுப்பினர்கள் பற்றி தெளிவான எண்ணத்தில் இருக்கிறேன் என்றோ., வினோ, வசு இருவருக்கும் செய்துக் கொண்டுயிருந்த தவறு எனக்கு புரியாமல்.. இல்லை தெரியாமலே போயிருக்கும். ‘
யாரோ அவனின் தோள்பட்டையை தட்ட.. முயல்குட்டியுடனான இனிமையான உரையாடலை கலைத்த கடுப்பில் ‘ எவன்டா அது?.. ‘ நிமிர.. கமலேஷ் இடுப்பில் கைவைத்து நின்றுகொண்டுயிருந்தான். கூடவே அவனின் நண்பர்கள் வினோத்தும் திலகனும் அவனை முறைத்துக் கொண்டுயிருந்தார்கள். வேந்தன் போன்னை பாக்கெட்டில் வைத்துவிட்டு ‘ என்னடா?.. ‘ என்பது போல பார்த்து நின்றான்.
கமலேஷ் அவனின் அமைதியை பொறுக்கமாட்டாமல் ” ஏன்டா?.. எவ்வளவு நேரமா கூப்பிடுகிறோம்.. காதில் விழுந்ததா?.. இல்லையா?.. ”
” டேய்.. உங்க கடைக்கு போய்யிட்டு.. சிறிது நேரம் கழித்து துணி எடுக்க போகனும்.. எத்தனை மணிக்கு வரனும் என்று கால் பண்ணுகிறேன்.. பிறகு வாங்கனு நைட் மெசேஜ் பண்ணியிருந்த. சரிநாங்க எங்க வேலை மாற்றி கொடுத்துவிட்டு.. வினோத்தையும் காலேஜ் போகாம லீவ் போடவைத்து.. நாங்க உன் போன்கால் வருதானு பார்த்தா.. கால் வரவேல்ல. சரி வீட்டுக்கு வந்தாஆளகானும்.. கேட்டா இங்க இருப்பதாக சொன்னாங்க.. இங்க வந்தா நீ ஹாயா.. போட்டோ பார்த்துட்டு.. கனா கண்டுகிட்டு இருக்கற.. என்னடா?.. எங்கள கூப்பிட்டது ஞாபகம் இருக்கா?.. இல்லையா?.. “
வேந்தன் மெல்லிய புன்னகையுடன்.. முச்சு வாங்க கூற முடித்த திலகனிற்கு தண்ணிர் கொடுத்துவிட்டு.. பின் நால்வருக்கும் இனிப்பை கொடுக்க.. வெளி திண்ணைக்கு வந்தவர்கள் இன்னும் சிறு முறைப்புடனே.. பாயசம் சாப்பிட்டனர்.
” ஹேய்.. பாயசத்தை பாசம்மா சாப்பிடனும். இப்படி முறைச்சுகிட்டே சாப்பிட்டா செறிக்காது பார்த்துகோங்க. நான் ஒரு மணி நேரத்திற்கு முன்பே கிளம்பிட்டேன் டா.. வசுக்கு ஒரு விஷயம்தெளிவுப் படுத்த வேண்டிய சூழ்நிலை வந்துருச்சு. “ நடந்த நிகழ்வை மேலோட்டமாக கூறினான். ” வசு சின்ன பொண்ணு அதுக்கு இந்தமாதிரி நினைக்கும் அளவிற்கு நான் கொஞ்சம் கேர்லஸ்சாஇருந்துட்டேன். ” என நினைத்தையும் கூறினான்.
” அப்படியெல்லாம் நினைக்காத டா. இது உன் தவறுனு ஏன் சொல்லுற?.. இதெல்லாம் ஏதார்த்தமா நடப்பது தான். வசுந்தரா இந்த மாதிரி நினைக்கும் என உனக்கு தெரியும் மா? இனிமேல் நடக்காமையும், நடந்ததை நல்லதுக்குனு நினைச்சுக்கோ. ”
சிறிது சோந்த முகத்துடன் தலையைமட்டும் வேந்தன் அசைக்க.. அதனை பார்த்த கமலேஷ் அவனை மகிழ்ச்சி நிலைக்கு கொண்டுவர.. ” அது சரி. நடந்த நிகழ்வுக்கும், நாங்க கூப்பிட்டது கூடகேட்காத அளவிற்கு எழிலரசி புகைப்படத்தை சமையலறையில் பார்த்துக் கொண்டுயிருந்ததற்கும் என்னடா சம்பந்தம்?.. ” கமலேஷ் நினைத்து போல தன் அரசியை பற்றிக் கேட்டவுடனே.. அவன் முகம் பளப்பளப்பு ஆனாது.
” இல்லாடா.. இந்த நிகழ்வின் ஆரம்பம்மே அரசி தான்டா.. ” என்றுக் கூறி நேற்று இரவு பேச சென்றதையும்.. பாட்டி யோகா வினோவின் அம்மா என அனைவரும் கண்டுக்கொண்டது என புன்னகை முகமாக நடந்தை கூறினான்.
திலகன் அவன் கூறியதை கேட்டவுடன் அவனை ஒட்டும் விதமாக ” டேய்.. நீ சொல்வதை வைத்து பார்த்தாலும்.. இப்ப உன் முகத்தை பார்த்தும்.. நாங்களே எழில்லா?.. நாங்களா?.. என கேட்கும் காலம் வரும்போல் இருக்கு டா.. ” என அவனும்..
” ஆமா டா.. எழிலரசி பேர் சொன்னவுனே.. யார்டா இவன்னு?.. அப்படியே ஆளே மாற்றி காண்பிக்கும் அளவுக்கு.. உன் முகமும், உடல் மொழியும் இருக்கு. சரி இவ்வளவுதூரம் உன் நடவடிக்கைய வைத்து ஒரு படமே ஓட்டி.. பிறகு தாராவை சமாதானம் செய்து முடித்தவுடனே சமையலறையில் இருந்து எழிலரசிக்கு போன் போட்டு பேசியிருக்க. உனக்கு தைரியம் தான்டா. ”
முயல்குட்டியால் ஆள்ஆளுக்கு என்னய ஒட்டுறாங்க.. ” டேய்.. நான் எப்படா?.. அங்கு போன் பேசிக் கொண்டுயிருந்தேன். போன் பேச முடியாமதான்.. போன்ல இருந்த போட்டோவ தான்டா பார்த்துட்டு இருந்தேன்.”
” ஒஓ.. அப்படியா!. அந்த பயம் இருக்கனும். ”
” டேய்.. நான் யாருக்குடா பயப்படனும்?.. ” என புரியாமல் கேட்டான்.
” யாருக்கா?.. வீட்டல எல்லாரும் திரும்ப ஏதாவது சொல்லுவாங்கனு தானே?.. போட்டோ பார்த்திருந்த?.
வேந்தன் புன்னகையுடன் ” ஓ.. நீ இப்படி நினைச்சுகிட்டையா.. நான் யாருக்கும் பயந்து போய் போட்டோ பார்க்கல டா.. ”
” அப்புறம்?.. “
” அதுவந்து அரசி.. ” ஆரம்பிக்கவும் அவர்களின் அன்னபூரணி உணவகம் வந்துவிட்டது. ” சரி டா. வீட்டல ஆரம்பித்து.. கார்ல நாம்ம நாலுபேரும் பேசின வரைக்கும் போதும்.. அப்புறம் நேரம் கிடைத்தால் பேசலாம். ” என்று கூறி உணவகம் உள்ளே சென்றனர்.
வேந்தன் உள்ளே நுழையும் போதே சுற்றி பார்வை செலுத்தி.. மக்களின் வருகையும்.. அவர்களை இன்முகத்துடன் கவனித்துக் கொள்பவர்களை பார்த்தவாறே.. அவர்களின் அலுவலக அறைக்கு கமலேஷ், வினோத், திலகனும் உடன் சென்றான்.
‘ வேந்தனுக்கு மிகவும் பிடித்த இடத்தில் மிக முக்கியமானது.. அவனின் ஐந்து வயதில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவகம். அப்போதே காலத்திற்கு ஏற்ப உணவகத்தை விரிவுப்படுத்துவோம் என்ற நம்பிக்கையுடன் உணவகத்தை சுற்றி இடம் விட்டு.. உணவகத்தை ஆரம்பித்தனர்.. அவர்களின் நம்பிக்கை பொய்யாகாமல் 2மாடி கட்டிடமாக அவர்களின் உணவகம் நன்கு வளர்ச்சியடைந்து.. இப்போது அந்த ஊரின் பெயர் பெற்ற உணகவகத்தில்.. அன்னபூரணி உணவகமும் ஒன்றானது. ‘
அலுவலக பணிகளை சிலவற்றை சரிபார்த்து அதில் தனக்கு தேவையான சில தகவல்களையும் எடுத்துக் கொண்டான். வேந்தன் முவரையும் ஒரு பார்வை பார்த்து.. ” ஹேய்.. ஒரு அரைமணி நேரம்.. நான் உணவகம் முழுவதும் ஒரு முறை பார்வையிட்டு வரேன். பிறகு உடனே துணிக் கடைக்கு போகலாம். ” கூறிவிட்டு.. உணவகத்தின் முன்பக்கத்திற்கு வந்தான்.
‘ உணவகத்தில் ஆரம்பத்தில் இருந்த நுழைவாயிலை தான் இன்னமும் பயன்படுத்துகிறார்கள். அதன் அருகில் தான் வேந்தன் தன் அரசிக்காக.. ஆரம்பிக்க போகும்.. தனித்துவமான இனிப்பு வகைகளை செய்து விற்கும் கூடிய இடமாக நினைத்திருக்கிறான். அதனால் உணவகத்தின் முன்பக்கத்தை மிகவும் கவனமாக பார்வையிட்டான். அங்கு முடித்தவுடன் சமையலறை சென்று.. அங்கு உணவிற்காக இனிப்பு வகைகளை செய்யும் நபர்களிடம் நலம்!. மற்றும் அவனுக்கு வேண்டிய தகவல்களை பெற்றுக் கொண்டும்.. ஹோட்டலில் தற்போது உள்ள நிறை, குறைகளை விசாரித்ததும்.. மாடியில் a/c பகுதியை முழுவதையும் பார்த்தும், அங்குயிருந்த பெரியப்பா, அண்ணாவிடம் சில குறிப்புகளை பெற்றுக் கொண்டு.. துணி கடைக்கு செல்வதாக கூறி மதியஉணவை சிறிதளவு சாப்பிட்டு முடித்து நால்வரும் அங்குயிருந்து கிளம்பினர். ‘
‘ வேந்தன் எப்போது புதுக்கோட்டை வந்தாலும் தனக்கு தேவையானது.. வீட்டில் உள்ளவர்களுக்கு வாங்கி தரவும்.. நண்பர்களுடன் நேரத்தை பயன்படுத்தி கொள்ளவும்.. கமலேஷ் மற்றும் நண்பர்களுடன் துணிக்கடைக்கு வரும் வழக்கத்தை வைத்துயிருந்தான். சென்னையில் வாங்கலாம் என்றாலும் இங்கு வாங்கி அணிவது அவனிற்கு தனி இன்பம். ( காரணம்?. ) ‘
அரசியின் ஆசைப்படி.. நேற்று அக்கா, தங்கைகள், அண்ணி என அவர்கள் விரும்பியதை வாங்கிக்கொடுத்தான். இன்று பெரியவர்கள், நண்பர்கள், தனக்கும் வாங்க வந்தான். முதலில் தனக்கும் மற்றவர்களுக்கும் பருத்தி உடைகள் என்பதால் விரைவில் வாங்கி முடித்துவிட்டான். பிறகு பெண்களுக்கு காட்டன்,. சிலக் சேலை.. மைசூர் சிலக் என வாங்கி முடித்துவிட்டு.. இறுதியாக பாவாடை தாவணி பிரிவிற்கு வந்தனர்.
” வேந்தா உங்க வீட்டில் யாரும் பாவாடை தாவணி போட மாட்டாங்களே.. யாருக்கு டா வாங்க வந்த?.. ஆனாலும் பாவாடை தாவணியில் பொண்ணுங்களை பார்த்தாலும் ரொம்ப அழகாக தான் இருப்பாங்க. ஏன்டா வினோத் உன் காலேஜ் மாணவிகள் இந்த உடையில் வராங்க?. ”
” நான் சாதாரணமாக பார்த்து இல்ல.. ஆனா காலேஜ் விழா… பண்டிகை நாட்களில் போடுவாங்கடா. ”
வேந்தன் திலகனை முறைத்து விட்டு ” வசுக்கு வாங்க வந்தேன். ”
கமலேஷ் புன்னகையுடன் ” பேசாம நில்லுங்கடா.. இல்லையென்றால்.. பிறகு வேந்தன் ஒருபக்கத்து முச்சு விடாம அட்வைஸ் பண்ணுவான். ” என்று அவர்களை எச்சரிக்கை செய்ய
வினோத் ” ஏன்டா?.. எதுக்கு?. ”
புன்னகையுடன் ” அதுவந்து நேற்று வசு பக்கததில் நான் ஒரு பொண்ண பாவாடை தாவணியில் பார்த்தேன். அந்த உடை அந்த பொண்ணிற்கு நல்லாயிருக்கு.. அதே மாதிரி உன் தங்கச்சியை போட சொல்லுனு தான்டா சொன்னேன். அதுக்கு ஒரு பக்கத்துக்கு பேசுறான்டா. ”
திலகன் ஆர்வமாக ” யாருட அந்த பொண்ணு??.. ரொம்ப அழகாக இருந்துச்சோ.. வசுக்கு நல்ல தெரிந்த பொண்ணாடா.. ” ஆர்வத்துடன் கேட்க..
” ஏன்டா?. பொண்ணு நல்லா இருந்தா சும்மா நல்லாயிருக்காங்கனு சொல்லிவிட்டு மறந்துவிடுவோம். இவன் எதுக்குடா உன்னைய திட்டி.. அட்வைஸ் பண்ணணும்..”
வேந்தன் இவர்களை முறைத்துக் கொண்டே உடைகளை பார்த்துக் கொண்டுயிருந்தான்.
கமலேஷ் இவர்களின் பேச்சை கேட்டு புன்னகையுடன்.. ” டேய்.. யார் அந்த பொண்ணு நீங்க தெரிந்துக் கொண்டு.. அதன் பிறகு ஏன்?.. எதுக்கு ?. என்னை திட்டி.. அட்வைஸ் பண்ணினான் என்று கேளுங்க டா. “ என கூற
” ரொம்ப அந்த பொண்ணுக்கு பில்டப் கொடுக்காத.. யாருனு மட்டும் சொல்லு.. உனக்கான நியாயத்தை நான் வாங்கி தரறேன். உன்னை எப்படி திட்டலாம்?.. வருங்கால தங்கை கணவன் என்ற மரியாதை வேண்டாம். சொல்லு.. சொல்லு.. யார் அந்த பொண்ணு?.. நான் மட்டும் இல்ல வினோத்.. இவனும் சேர்ந்து கேட்பான்.. யாருனு மட்டும் சொல்லு..” என ஆவேசமாக அவனிடம் கேட்க.
” நீயும் கேட்பியாடா? ” என வினோத்திடமும் கேட்க
” கேட்கிறேன் டா..முதல்ல பேர்ரை சொல்லுடா. என் நண்பனுக்காக இதை கூட நாங்க பண்ணமாட்டோமா?.. ஆனா உன் மச்சானை நாங்க திரும்பி திட்டினாலோ.. அடித்தாலோ.. நீ கவலைபடக்கூடாது. மறந்தும் பக்கத்தில் வந்து எங்களை தடுக்க கூடாது. சரியா.”
” கண்டிப்பா டா.. அடிகிடி விழுந்தா.. பக்கத்தில் வர மாட்டேனே.. வரவே மாட்டேன். ” எனக் கூறி சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு.. ” அது வந்து.. அந்த பொண்ணு பேர் வந்து..” என ஆரம்பிக்க
” என்னடா?.. வந்து வந்துனு.. ஆனாலும் ஒரு பெயர் சொல்லுவதற்கு நீ கொடுக்கும் பில்டப் தாங்க முடியலடா!. சொல்லுடா முதல.. ”
” பெயர் எழிலரசி டா..”
இவர்கள் பேசுவதை இன்முகத்துடனே கேட்டுக் கொண்டே.. உடைகளை எடுத்து முடித்துவிட்டு.. திரும்பி வினோத் மற்றும் திலகனை பார்த்து நிற்கவும் கமலேஷ் பெயர் கூறவும் சரியாக இருந்தது.