” என்ன வேந்தா இவ்வளவு சீக்கிரம்?.. அதுவும் இந்த உடையிலேயே இருக்க?.. ”
வேந்தன் நேற்று இரவு.. உறுதி நிகழ்ச்சியில் உடையை மாற்றாமல் இருப்பதால்.. சித்ராவிற்கு வந்த கேள்வி. அவருடன் ரவிந்திரனும்.. அவனை மேலும் கீழும் பார்த்தபடிதான் இருந்தார்.
” அம்மா நைட் ஆபிஸ் வேல இருந்தது.. முடித்தவுடன் கொஞ்சும் நேரம் படுத்துட்டு.. பின்னமாத்தலாம் படுத்தேன்.. அப்படியே தூங்கிடேன். திலகன் வண்டியில் நான் கொஞ்சம் நேரத்தில் கிளம்பனும். தாகம்மா இருந்தது அதான் வந்தேன். “
” என்ன வேந்தா இப்பவே கிளம்புறிய?.. நைட்டுதான் கிளம்புவ.. சில விஷயங்கள் பேசனும் நினைத்தோம். ”
” அப்படிதான் முதலில் நினைச்சேன் அப்பா. ஆபிஸ் மீட்டிங் 12மணிக்கு நேற்றி மாத்திட்டேன். சரி வண்டில போன சீக்கரம் போய்விடலாம். லீவ் வேஸ்ட் ஆகாது. நான் முடிவு பண்ணி சொல்ல வந்தப்ப தூங்கிட்டிங்க. அதான் சொல்ல முடியல. என்னிடம் நேரடியா பேசனும் என்றால்.. நான் உங்களிடம் பேசிட்டே கிளம்புறேன். அங்க 11.30மணிக்கு இருந்தா போது. “
” சரிப்பா.. நீ கிளம்பிவா. சில முக்கியமானது மட்டும் பேசிடலாம். “
” சரிங்கப்பா. அரைமணி நேரத்தில் வந்துவிடுவேன். ”
‘ மிதமான நடையில் சென்றவன்.. தன்னவளை நினைத்துக் கொண்டே.. படிகளை மிகமிக மெதுவாக அடியெடுத்துச் சென்றான். தன் அறையில் நுழைந்தவுடன்.. ஒரு கணம் தன்னவள் தன் கைகளுக்குள் உடனே வரவேண்டும் என மனம் ஏங்கியது. இத்தனை வருடத்தில் தோன்றாத எண்ணங்கள், உணர்வுகள்.. தன்னவளை பார்த்த பின் ஒர்உணர்வு என்றால்.. அவளை தன் கைகளுக்குள் பாந்தமாய் அடக்கிய பின்.. அவளுக்கு மட்டுமேயான உணர்வுகள் தோன்றி.. அவனை ஆட்டுவித்தது என்றால்.. கூடவே அவளும் எல்லாவற்றிக்கும் பதிலடி கொடுத்து.. அவனின் பலகீனம் ஆகிவிட்டாள் அவனின் முயல்குட்டி. ‘
‘ ஒன்றே ஒன்று இப்போதைக்கு பாக்கி வைத்துயிருக்கிறாள். நான் மட்டும் முழுதாக அவளவன் ஆகிவிட்டேன் என்றால்.. அவள் என்னை விட்டு எங்கு செல்ல வேண்டும் என்றாலும்.. என்னை சுருட்டிஅவளின் இடையில் வைத்து கொண்டு சென்றுவிடு.. வேலை நேரம் போக மீதி நேரம்.. ஒருநிமிடம் கூட என்னால் தனித்திருக்க முடியாது முயல்குட்டி. என்று கூறும் நிலையில் இருந்தான். மூன்று நாளிலேயே.. இவ்வாறு நினைக்க, மாறியிருக்கிறேன் என்றால்.. எல்லாம் முயல்குட்டி மீது இத்தனை வருடங்கள் தான் அடக்கி வைத்த உணர்வுகள் எல்லாம்.. இந்த மூன்று நாளில் வெளிவந்து.. என்னை என்னகே அறிமுகம் செய்கிறாள்.. என் முயல்குட்டி!. ‘
‘ தன்னவளை பற்றிய நினைவுகளுடன்.. தன் வேலைகளை முடித்து.. அந்த அறையில் வேறு யாரும் வந்தால்.. அரசி வந்து சென்றதற்கான அடையாளம் இல்லையே.. என அங்கும் பார்த்து உறுதிபடுத்திவிட்டு.. தனக்கு தேவையான அனைத்தும் எடுத்து வைத்துவிட்டு.. அறையை ஒருநிமிடம் தன் முயல்குட்டி விட்டுச்சென்ற.. அவளின் வாசனை தன் உடல்முழுவதையும் நிறுத்தி நிதானமாக நிரப்பினான். ‘
‘ நேராக ஆபிஸ் செல்வதற்கு ஏற்றவாறு கடல்ஊதா வண்ண சட்டையும், லைட் பிரவுன் கலர்பேன்டும், அடர் பிரவுன் பெல்ட்டும்,. படிய சீவிய தலை, சேவ் செய்த முகம்.. அதில் ஏதோ விட்டுச்செல்ல முடியாத ஒன்றை.. கண்டிப்பாக வேறுவழியில்லை.. தனியாக போய்தான் ஆக வேண்டிய சூழ்நிலை தனக்கு என்று.. சற்று களையிழந்த முகத்துடன் கீழ்யிறங்கி வந்தான். ‘
வேந்தனை அப்போது தான் உள்நுழைத்த திலகன்.. முறைப்புடன் பார்த்து அப்படியே நிற்க.. அதனை பார்த்தவன்.. ‘ நானே எவ்வளவு வருத்தததில் இருக்கேன்.. இவன் ஏன் என்னைய முறைக்கிறான்?.. ‘ என எண்ணியபடி அவனின் அருகில் வர.. இன்னும் அவனின் முறைப்பு மாறிய பாடு இல்லை. இருவரும் பேச வரும் நேரம்..
அறையில் இருந்து ரவியும் கடைக்கு செல்வதற்கு ஏற்றவாறு வந்தவர் இருவரின் முகபாவத்தை ‘ என்ன இவனுங்க முழியே சரியில்ல. ‘அதற்கு மேல் யோசிக்க வரும்போது.. சித்ரா வர.. பின் அமர்ந்து நால்வருக்கும் கொண்டு வந்த காபியை குடித்தும், கேழ்வரகு பிஸ்கட் சாப்பிட்டும் முடித்தனர்.
வேந்தனை மூவரும் பார்த்தனர். அவனின் அம்மாவிற்கு அவனின் முகம் ‘ களையிழந்தது இருப்பது போலவும்.. ‘அப்பாவிற்கு.. ‘ களைப்புடன் இருப்பதுபோல.. ‘ நண்பனுக்கு ‘ நைட்டு வீட்டு மாடியில என்ன மாதிரி.. வேலை பண்ணிட்டு ஒன்னும் பண்ண தெரியாத அப்பாவி போல உட்கார்ந்து இருக்கான். ‘ ( டேய் தம்பி திலகா.. உனக்கு அவங்க மாடியில் இருந்ததற்கே இப்படி நினைக்கிற.. அவங்க ரூம்மில் இருந்தது தெரிந்தா?.. )
வேந்தன் யாரும் பேசமாட்டங்க போல.. ” அப்பா என்ன விஷயம் பேசனும்?.. “
ரவிந்திரன், சித்ராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. ” வேந்தா நீ ஆரம்பிக்க நினைக்கும் ஸ்விட் ஷாப்பை பக்கத்தில் இருக்கும் இடத்திலே ஆரம்பிக்கலாம் பா. நம்ம கடையின் உள்ளே வேண்டாம். கடையில் நிறைய மாற்றம் செய்ய வேண்டிவரும். இடமும் வசதியாவும் இருக்காது. அதவிட நீ ஆரம்பிக்கும் நினைக்கும் தொழில். பின்னாடி நீ முன்பு நினைத்தை தனியா ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்ல. ”
” அதனால கடையின் உள்ளே பற்றி நீ யோசிப்பதை விட்டுவிட்டு.. தனியா எந்த பிரச்சனையும் இல்லாம.. நல்ல வசதிகளோட, விசாலமா.. புதுகடையா ஆரம்பிப்பா. அது இன்னும் நல்லாயிருக்கும். ஆனா இப்படி ஆரம்பிக்க.. உன்கிட்ட தனிப்பட்ட தேவையான பணம் இருக்கா?.. ஏதாவது நாங்க உதவி பண்ண வேண்டும்மானு?.. நீ பார்த்து சொல்லு.. அதற்கு ஏற்றார்போல இப்பவே எடுத்து வச்சுட்டா.. கல்யாண செலவுக்கு பார்க்க சரியா இருக்கும். நீ என்ன நினைக்கிற?.. “
சிறிது யோசனைக்கு பின்.. ” எனக்கு கடை ஆரம்பிக்க பிரச்சனையில்லப்பா. இரண்டு வேலை பண்ணாம.. ஒரே வேலையா போயிடும் என நீங்க சொல்லுறிங்க. எனக்கு இது ஒகேதான் ப்பா. பணமும் எனக்கு பிரச்சனையில்ல.. இருந்தாலும் பார்த்துட்டு சொல்லுறேன் பா. “
” ம்…சரி வேந்தா. புது கடைனா?. பூமிபூஜை போடனும். ”
வேந்தன் யோசிக்க.. ” அப்பா நிச்சயத்திற்க்கு அன்னைக்கு பூமிபூஜை பண்ணா என்ன?.. நம்ம எப்படியும் தனியா பண்ணா?.. முக்கியமானவங்களை அழைக்கனும்.. இதுக்குனு தனியா வரனும். பூமிபூஜைய முடித்தவுடன்.. காலை உணவு நம்ம ஹோட்டலில் வைத்துவிட்டு.. அப்புறம் நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்களோ பண்ணலாம். “
வேந்தன் கூறியவுடன் இருவரும் அமைதியாக இருக்க.. வேந்தன் திருப்பி திலகனை பார்க்க.. ” வேந்தா நீ சொல்லுறது நல்லா யோசனைதான்.. ஆனா பூமிபூஜை, வளைகாப்பு, உங்க நிச்சயம் எல்லாம் ஒன்னா வைக்க வேண்டும்மா?.. “
” எனக்கும் அது தோன்றியது தான்.. ஆனா என்னால அதுக்கு முன்னாடி இங்கு வரமுடியாது டா. கொஞ்சநாள் பிறகு ஆரம்பித்தா.. எல்லாம் அவசரமா பண்ணும்.. கிளைமேட் எப்படி இருக்கும் என்று தெரியாது?.. மூன்றுமாதம் இருந்தாதான் சரியா இருக்கும். ”
இதனை கேட்டவுடன் வேந்தனை ஒருபார்வை பார்த்தான். அவனை பார்த்த வேந்தன்.. ” என்னடா?.. ஓன்பார்வையே தினுசா இருக்கு?.. “
” இல்ல நடுவில் வரமாட்டேன் சொன்னியே.. அதான் நம்பானுமானு பார்த்தேன். ஏன்னா நீ பண்ணற வேலை அப்படியிருக்கு. ”
” டேய் நம்புடா. சொன்னா சொன்னததான்டா செய்வேன். ” அடுத்து கூற வர.. அவனின் அப்பா..
” வேந்தா எங்களுக்கு ஒகே தான்.. இருந்தாலும் அந்த நாள் பூமிபூஜைக்கு சரியான நாளானும், அப்படி நிச்சய புடவை வாங்கும் நாளும், இன்னைக்கு காலையிலேயே பார்த்துட்டு சொல்லுறோம். உனக்கு முடிவு பண்ண சரியா இருக்கும். “
” ம்.. சரிங்கப்பா.. பார்த்து சொல்லுங்க. ” பின் வேந்தன் மணியை பார்க்க.. பிறகு அம்மாவை பார்த்தான்.
” ம்மா. தோசைமாவு இருக்காமா?.. “
சித்ரா அவன் கூறியதை கேட்டு முறைக்க.. ‘ நான் இப்ப என்ன கேட்டேன். ஆள்ளாளுக்கு என்னை முறைக்கிறாங்கப்பா. ‘ பின்.. அவன் அம்மாவை என்ன என்பது போல பார்க்க.. ” ஏன்ப்பா.. தோசை ஊற்றித்தாங்கனா தரப்போறேன். என்ன இருக்கானு கேள்வி. வா வந்து உட்காரு. எடுத்துட்டுவரேன். “என்று கூறி வேகமாக சமையல்அறை சென்றார்.
‘ அவன் பொதுவாக வீட்டில் இருக்கும்போது.. சாப்பிடும் நேரம் மட்டுமே கேட்டு வாங்கி சாப்பிடுவான். மற்ற நேரங்களில் அதிகம் சாப்பிடமாட்டான். ஹாலில் அமர்ந்து ஏதாவது வேலை செய்வான். இல்லை கடையில் இருப்பான். கேட்கும் கேள்விக்கு பதில்.. செய்யும், செய்யபோகும் செயலை பற்றி சொல்வது.. அதனை ஏற்கும் படியாகதான் இருக்கும். இதுநாள் வரை அதில் தவறு என்று ஒன்று சொல்லமுடியாது. மற்ற நேரங்களில் அமைதி மட்டுமே. ‘
‘ ஆனால் நேற்றில் இருந்தது.. சித்ராவிற்கு ஏதோ தன்மகன் புது வேந்தனாக தெரிகிறான். நேற்று முழுவதும் அவன் முகத்தில் தெரிந்த புன்னகை, மற்றவர்களை கவரும் பேச்சு, புரிதல், அதைவிட பிடிவாதம், அடங்கப்பட்ட கோபம், மற்றவர்களுக்கு எச்சரிக்கை பல முகங்களை பார்த்து போல இருந்தது. இன்று காலை கூட அவனின் உடை. எப்போதும் முதல் வேலையாக உடை மாற்றிவிடுவான். கூறிய காரணம் ஏற்புடையதாக இருந்ததுதான்.. ஆனாலும் நம்ப முடியவில்லை. ‘ என எண்ணியவாறே முட்டை தோசை ஊற்றி காத்திருந்த நேரம்.. அவருக்கு மேலும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக வேறு ஒன்றை செய்தான்.
சித்ரா வேந்தனை பற்றிய சிந்தனையில்.. அவன் விரும்பி சாப்பிடும் முட்டை தோசையை ஊற்றி.. அது வேக காத்திருந்த நேரம். தன் பக்கத்தில் வேந்தன் வருவது போல இருக்க.. திருப்பி பார்த்த நேரம்..
அவன் சட்டென்று அடுப்பின் அருகில் மேடையில் ஏறி அமர்ந்து…” அம்மா தோசை ரெடியா?.. ”
வேந்தனின் செயலால் அதிர்ச்சி அடைந்து.. சித்ரா ஒருநிமிடம் அவனையே பார்த்தபடி இருக்க.. அவரை பார்த்த வேந்தன்..
” அம்மா.. அம்மா.. ” தன் அம்மாவின் முன் கை ஆட்டினான். பின் தான் அவர் நிகழ்காலத்திற்கு வந்தார்.
” அம்மா தோசை ரெடியானு கேட்டேன்.. நீங்க என்னைய பார்த்துட்டு இருக்கிங்க?. “
” ஒன்னுல ப்பா. தோசை ரெடிதான். இந்தாப்பா. ” என்று அவனுக்கு பிடித்தமாதிரி வெங்காயம், மிளகு போட்டு தோசையை கொடுத்தார்.
” ம்.. ” தலையசைத்து.. அதன் பின் ஒன்றும் கூறாமல் வேந்தனும் அதனை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான்.
” டேய் வேந்தா.. வேந்தா இன்னும் என்னடா பண்ணுற?.. நீ சாப்பிடற ஒரு தோசைய எவ்வளவு நேரம் தான் சாப்பிடுவ?.. ” என்று கூறிய படி அவன் டைனிங் ஹாலில் பார்க்க.. அவன் அங்கு இல்லாததால்.. ” அம்மா வேந்தன் எங்குகு.. ” அவன் பார்க்க..
வேந்தன் மேடையில் அமர்ந்து சாப்பிடுவதை சித்ரா அவனை ஒரு பார்வையும்.. வேகும் தோசையை ஒரு பார்வையுமாக பார்த்துக் கொண்டுயிருந்தார். இருவரையும் பார்த்து ‘ என்ன நடக்குது இங்க?.. ஏன்?.. ‘ என்றவாறு சித்ராவின் அருகில் வந்தான்.
” அம்மா… என்ன?.. “
அவனின் காதருகில் மெல்லிய குரலில்.. ” திலகா இது இது என் பையன் வேந்தன் தானாப்பா?. “
‘ சித்ரா கேட்ட கேள்வியால் திலகன் ஒரு நொடி ஆடி தான் போனான். பின் வேந்தனை பார்த்து.. டேய் டேய் வேந்தா.. எங்கள தான் இது எங்க நண்பன் வேந்தனா?. என்று நினைக்க வைத்த!.. ஆனா பெத்த பிள்ளைய பார்த்து ஒரு அம்மாவே கேட்கும் அளவிற்கு.. உன்னோட மாற்றம்!.. ம்.. இது எங்க போய் முடியபோகுதோ?.. ‘
” ஏன் ம்மா?.. உங்க பையனானு கேட்கும் அளவிற்கு அப்படி என்ன சந்தேகம்?.. என்ன பண்ணான்?.. “
” தோசை சாப்பிடுறான் டா. “
என்ன?. இவங்க அவனுக்கு மேல.. இவங்களுக்கு நடுவில் காலையில் வந்து மாட்டிக்கிட்டேன். கடவுளே!.. ” ஏன் மா தோசை சாப்பிடுறதுக்கும்?. என் பையானா?. கேட்பதற்கும் என்ன சம்பந்தம்மா??.. புரியும்படியா சொல்லுங்க. “
” இல்ல திலகா. அவன் இதோட நாலுதோசை சாப்பிட்டு.. இப்ப ஐந்தாவது சாப்பிடுறான் டா. ”
” என்ன ஐந்தாவதா?.. “
” ம்ம்.. “
வேந்தன் சமையல்அறை வரும்போதே.. தன்னவள் நினைவில் வந்தவன் மேடையின் அருகில் வந்தவுடன்.. தன்னவள் அமர்ந்த இடத்தில் அமரும் ஆசை உண்டாகி.. சாதாரணமாக உட்காருவதுபோல உட்கார்ந்து.. பின் அம்மாவிடம் தோசை கேட்க.. பின் அவர் கொடுத்தை வாங்கி வாயின் அருகில் செல்லும் போது.. இது தன் முயல்குட்டிக்கும் மிகவும் பிடித்த உணவு என்பதும்..
இதே இடத்தில் அவள் தன்மேல் கோபம் கொண்டு.. அதனால் கலங்கும் கண்களால்.. தானும் கலங்கி.. அவள் கோபத்தை போக்க.. அவள் பின்பகுதி முழுவதும் தன் இடதுகரத்தில் தாங்கிபிடித்து.. வலதுகையில் அவளின் முகவடிவை அளந்து…பின் ஒவ்வொன்றிக்கும் முத்தம் வழங்கி.. இறுதியில் இதழில் கவிபாடியிருந்த தருணம் ஞாபகம் வந்து.. தன்னவள் முயல்குட்டியின் இதழ்சுவையை.. அவளுக்கு பிடித்த உணவில் உணர்வது போல.. தோசை முடிய.. வாங்க.. முடிய என ஐந்தாவது தோசை சாப்பிடுகிறான் வேந்தன்.
இந்நிலையில் இருந்து கேடி வேலை செய்யும் தன் மகனை பார்த்து அம்மா ஆச்சிரியத்துடன்!. பார்க்க.. ஆனால் அவனின் நண்பன் வேந்தனின் கண்களை பார்த்தான். ‘ இப்படியும் இருக்குமோ?.. எழிலரசி இந்த இடத்தில் அமர்ந்துயிருந்து.. அந்த ஞாபகம் வந்து!.. அதை நினைக்கிறேன் போல.. டேய் அதுக்கு நேரம் காலம் இல்லையாடா?.. நம்ம கூப்பிடா நம்மள கரடினு முறைப்பானே. ‘
” அம்மா.. நீங்க அவனை கூப்பிடுங்க. நான் நினைக்கிறேன்.. எழிலரசிக்கு முட்டைதோசை ரொம்ப பிடிக்குமுனு. அதான் வேந்தன் சார்.. அளவுக்கு அதிகமா சாப்பிடுகிறார். இன்னும் இரண்டு சாப்பிட்டான் அவ்வளவுதான். “
புன்னகையுடன்.. ” ம்.. அப்படியா நினைக்கிற!.. மருமகளுக்கு பிடிக்கும்மா?.. அப்ப இன்னும் சாப்பிட்டும்.. அவன் பொறுமையாதான் சாப்பிடுறான். இந்தா நீயும் சாப்பிடு. “
புன்னகையுடன்.. ” அவன் சாப்பிடுவதை நீ கண்ணு வைக்காத.. வயிறு வலிக்கும். நீயும் சாப்பிடுனு.. மறைமுகமாக சொல்லுறிங்க. “
திலகன் கூறியதை கேட்டு சித்ரா புன்னகைக்க.. திலகன் பின் ஒன்றும் கூறாமல் எதிர்பக்கத்தில் இருந்த மேடையில் சாய்ந்து வேந்தனை பார்த்துக் கொண்டே சாப்பிட..
திருமணம் உறுதி செய்யபட்ட மகன் வேந்தனை.. அடுத்தமாதம் தான் பார்க்க முடியும் என அவன் கிளம்பிய பின் கடைக்கு சொல்லலாம் என காத்திருந்த ரவிந்திரன்.. யாரும் இன்னும் வெளியில் வரவில்லை என பார்க்க வந்தவர்.. சித்ரா, திலகன் மெல்லிய புன்னகையுடன் வேந்தனை பார்க்க.. அவன் ஏதோ சித்தனையுடன் உட்கார்ந்து இருப்பது போல இருந்தது. அப்போது அவரின் போன் ஒலித்தது. அந்த ஒலியை கேட்டு இருவர் திரும்ப..
ஒருவன் கனவுலகில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தான். அவனை பார்த்திருந்தவர்கள்.. ரவி ஹாலிற்கு செல்ல.. சித்ரா தோசையை பார்க்க.. திலகன் சாப்பிட என தங்களின் பார்வை மாற்றிவிட்டார்கள். ஆனால் வேந்தன் தன்னை பார்த்திருந்திருப்பார்களோ?. என எண்ணி அவன் பார்க்க.. அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
” டேய் நீ எப்படா வந்த?. ”
முறைத்துவிட்டு ” ம்.. நீ ஐந்தாவது தோசை சாப்பிடும் போது வந்தேன். “
என்ன 5?.. அப்படினா தன் தட்டியில் இருந்ததை பார்த்துவிட்டு.. இது எத்தனையாவது?.. முயல்குட்டி உன்னால.. வெக்கம், தயக்கமும்மாக இருவரையும் பார்க்க.. அவனின் எண்ணம் புரிந்தார்போல்..
” நீ சாப்பிடுவது 5வது தான். ஆனா என்ன அதையே ஒரு பத்துநிமிடமா!.. சாப்பிடுற. ஏன்டா எழிலரசிக்கு தோசை ரொம்ப பிடிக்கும்மோ?.. ” புன்னகையுடன் கேட்க.
அவன் தன் அம்மாவை பார்த்தான். அவர் புன்னகையுடன் அவனை பார்த்தார்.. அவருக்கு.. ‘ தனக்கு பிடித்தது அவளுக்கு பிடிக்கும்.. இல்லையெனில் அவளுக்கு தானே ஊற்றி.. ஊட்டிவிடுவேன். ‘ என அவன் கூறியது ஞாபகம் வந்தது..
‘ அவருக்கு எங்கே தெரியப் போக்கிறது.. தன்னவளுக்கு பிடித்ததால் தான் அவள் ஞாபகமாக சாப்பிட ஆரம்பித்து.. தனக்கு பிடித்த உணவாக மாறியுள்ளது என்று. ஆனால் இது வேந்தனுக்கே தெரியாது. ‘
சித்ரா.. மகனின் தயக்கம் பிடிக்காமல்.. ” திலகா.. அப்படியே என் மருமகளுக்கு பிடித்தத அவன் சாப்பிட்டா என்ன இப்ப?.. சாப்பிடாமா இருந்தா தான் தப்பு.. ” என திலகனிடம் கூறி.. வேந்தனை பார்க்க.. அவனோ தன்னவளால் இவர்களிடம் மாட்டிக் கொண்டதை நினைத்து.. முகத்தில் நாணம் படர்ந்துயிருந்தது. அந்த அழகை அவனின் அம்மா ஆசையாக பார்த்து நினைவில் நிறுத்திக்கொண்டார்.
மகனின் மருமகள் மீதான நினைப்பில் ஆனந்தம் கொண்டு.. அவனுக்கு உதவி புரிய.. ” வேந்தா போகும் போது வேண்ணா.. எழிலரசிய பார்த்துட்டு போறியா?.. நான் அண்ணியிடம் கால் செய்து சொல்லுறேன். ”
கைகழுவும் போது…அம்மா என் முகத்தை பார்த்து அழகாக புரிந்து கேட்கிறிங்க. ம்.. ஆனா முடியாதே என எண்ணி.. செய்த வேலையை முடித்து.. அவரிடம்.. ” அடபோங்க மா. அரசிகிட்ட நேத்தே கேட்டேன்.. என்னைய வரக்கூடாது சொல்லிட்டா. ஏன் போன்கூட நான் சென்னை போய்தான் கால் பண்ணுமா. ” வருத்ததுடன் கூற..
” அப்படியா எழில் சொல்லுச்சு.. நீ எப்ப பேசுன?.. ”
” அது.. ” கூறி திலகனை பார்க்க.. என்ன பார்வை என்று தெரியல.. ஆனா ஒரு லுக்கா பார்க்குறான். ” அது ம்மா.. நான் காலையில் கிளம்புவதா.. நைட் மெசேஜ் பண்ணுனேன். பின்ன காலையில் பார்க்க முடியுமானு?.. கேட்டதில்.. அப்ப சொன்னா. இந்நேரம் மேடம் நல்லா தூங்கிட்டுயிருப்பா. நான் ஆபிஸ் போயே கால் பண்ணிக்கிறேன். ”
” சரி ப்பா. ஆனா எழில் அம்மா, அப்பா.. நீ நைட் கிளம்புவேனு நினைச்சுட்டு இருப்பாங்க. இப்ப சென்னைக்கு கிளம்புறேனு அண்ணா, அண்ணியிடமும் சொல்லிட்டு.. எழில் முழித்துயிருந்தா பேசு. அவங்களுக்கு நீ சொல்லிட்டு கிளம்பினா சந்தோஷமா இருக்கும். ”
மறந்தே போய்ட்ட வேந்தா.. நல்லவேளை அம்மா சொன்னாங்க. ” ம்.. சரிம்மா. ” அவர்கள் எழுந்துயிருப்பார்கள் என்று தெரியும் ஆகையால்.. மாமாவிற்கு அழைத்தான்.
காலை 5.30. அப்போது எழிலின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி எழுந்து காபி குடித்துக்கொண்டே நேற்றைய நிகழ்ச்சியில் மகிழ்ச்சியான தருணங்களை எண்ணி சில நிகழ்வுகளை பற்றி பேசிக் கொண்டுயிருக்கும் போது.. அருணாச்சலத்தின் போனில் அழைப்பு மணி ஓலிக்க.. போனின் அருகில் இருந்த தாத்தா யார்?. என்று பார்க்க. வேந்தனின் பெயர் இருக்கவும்… தன் மகனிடம் கூறிவிட்டு.. அவர் அழைப்பை ஏற்றார்.
” ஹலோ வேந்தன். எழிலரசியோட தாத்தா விநாயகம் பேசுறேன். நல்லாயிருக்கியா பா. “
வேந்தன் நேற்று அவருடன் அதிகம் பேசவில்லை.. அவரின் முகம் ஞாபகத்திற்கு கொண்டு வந்து.. ” ம்.. நல்லாயிருக்கேன் தாத்தா. நீங்க, பாட்டி, மாமா, அத்தை எல்லாம் நல்லாயிருக்காங்களா?.. “
” ம்.. எல்லாம் நல்லாயிருக்கோம். சென்னைக்கு கிளம்பிட்டிங்களா?.. ” காலையிலேயே வேந்தன் கால் செய்துயிருப்பதால்.. அனுபவ அறிவு சரியாக கணித்தது.
புன்னகையுடன்.. ” ஆமாம் தாத்தா ” என்று கூறியவுடன்.. ” ஒரு நிமிடம் வேந்தன்.. ” தன் மகனிடம் ஸ்பிக்கரில் போடச் சொல்லி.. ” இப்ப எழிலரசி இங்கு இல்ல. ஒரே வேலையா மற்ற எல்லாரிடமும் பேசிவிடு.. ஸ்பிக்கரில் இருக்கு. ” என்று அவனுக்கு எது முக்கியமோ.. அந்த பதிலை முதலில் கொடுக்க..
தாத்தா உங்க பேத்தி இப்படியிருக்க நீங்க தான் காரணம்போல!.. புன்னகையுடன்.. ” ம். நைட் கிளம்புவேன் நினைத்திருப்பிங்க.. லீவ் வேஸ்ட் பண்ணவேண்டாம் என்று.. நான் இப்பவே சென்னைக்கு கிளம்பிடேன். ”
” ம்.. சரி மாப்பிள்ள.. பார்த்து பத்திரமா போயிட்டுவாங்க. நல்லா சாப்பிடுங்க. உடம்பை பார்த்துக்கோங்க. அடிக்கடி கால் பண்ணு போரா.. எழில் தூங்குற…நான் போய் எழுப்படா?.. ” என அனைவரும் அடுத்தடுத்து பேச.. ” ம்ம் ம்.. ” என கூறியிருந்தவன். கடைசி கேள்வியில்.
” இன்னைக்கு மட்டும் என்னாக அரசிய.. அவளா எழுந்து வர வரைக்கும் விட்டுவிடுங்க. ” என மறைமுகமாக.. அவள் தன்னால் சற்றுநேரம் முன்தான் தூங்கியதால்.. தன்னவளை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என நினைத்து கூறிவிட்டான்.
புன்னகையுடன்.. ” சரிப்பா. எழிலா எழுந்து வந்த பிறகு.. நீங்க கால் பண்ணதா சொல்றோம். “
” ம்.. சரிங்க மாமா. நான் சென்னை போனபின்.. நைட் கால் பண்ணுறேன் நான் வைக்கிறேன் தாத்தா, பாட்டி. ” புன்னகையுடன் அனைவரிடமும் தோட்டத்தில் இருந்து பேசி திரும்பியவின் முன் திலகன் நின்றுயிருந்தான்.
” டேய்.. ஏன்டா?.. இப்படி பயமுறுத்துற!.. ”
” ஆமா.. ஆமா.. நீ ரொம்ப பயந்த பையன் தான்.. காலையில் அது நல்லாவே தெரிந்தது. சரி சரி.. எழிலரசி நீ சொன்னமாதிரி தான் சொன்னாங்களா?. “
” ஆமாம் டா. நான் சென்னை போகும் போது.. வந்து பார்த்துட்டு போறேனு கேட்டதுக்கு.. அரசிதான் வேண்டாம்னு சொன்னா. சரி நேரம் ஆச்சு. தாத்தா, பாட்டி, வசு பார்த்துட்டு கிளம்பனும். இப்பவே சொல்லிட்டேன் டா. இங்க கிளம்பினா சிக்னல், ரெஸ்ட்ரூம் தேவை தவிர.. வேற எங்கையும் நிக்க நேரம் இல்ல.. நேரா ஆபிஸ்தான். நான் அவங்கள பார்த்து பேசிட்டு வரதுக்குள்ள.. காபியும் வேற என்ன வேண்டுமோ?.. இங்கயே எடுத்து வைச்சுக்கோ. ” எனக் கூறிவிட.. திலகனும் முக்கியம் உணர்ந்து.. சித்ராவிடம் சொல்ல..
வேந்தன் தாத்தா, பாட்டி அறையினுள் நுழைந்தான். அங்கு இருவரும் உறங்குவதற்கு ஏதுவாக.. வயதின் காரணமாக தூங்கும் நேரம் யாருக்கேனும் தாமதமானால்… தூங்குபவற்கு தொந்தரவுஇருக்கக் கூடாது என்பதால் தனிதனிக்கட்டில் படுத்திருக்க. தங்கள் செல்ல பேரனின் திருமணம்.. கொண்டாத்துடன் துவங்கிவிட்டதை எண்ணி. அவர்களின் முகத்தில் நேற்றைய களைப்பு மீறிய நிம்மதியான தூக்கத்தில் இருந்தனர்.
அவர்களை ஆசையுடன் பார்த்தான். தானும், முயல்குட்டியும் பாசம் மற்றும் மிகவும் அன்யோன்யமான திருமண வாழ்க்கை.. இவர்களை விட இருக்க வேண்டும் என எண்ணி பார்த்திருந்தான். பின் பாட்டியின் அருகே கீழே மெத்தை விரித்து படுத்திருந்த தங்கை வசுவை பார்த்தான். அவளிடம் நேற்றைய மதியத்திற்கு பிறகு மனதில் சிறு வருத்ததை மறைத்துதான் பேசினான்.
எப்போதாவது வருவதால் அவள் விரும்பிக் கேட்கும் எதையும் நிறைவேற்றி விடுவேன். அதுபோலதான் அரசிக்கு வாங்கிக் கொடுத்ததை.. விரும்பி கேட்டாள் என்று அவளிடமிருந்து வாங்கித் தந்துவிடுவேன் என நினைத்து செய்து வருத்தத்தை உண்டாக்கிவிட்டாள்.
அவளின் தலை மென்மையாக தடவிக்கொண்டே.. ‘ சாரி வசு. நேற்று நடந்தது போல திருப்பி நடக்காத மாதிரி நான் பார்த்துக்கொள்வேன். நீயும் பார்த்துக்கோ. ” கூறியவுடன்.. தன் அம்மா, அப்பாவிடம் கூறிவிட்டு. திலகனை வண்டியை ரெடியாக வைத்திரு எனக் கூறி..
மாடி ஊஞ்சலிற்கு வந்தான். அங்கு சில ஜாதிபூவின் இதழ்கள் இருந்தனர். புன்னகையுடன் உட்கார்ந்து பூ இதழ்களை உள்ளங்கையில் எடுத்துப் பார்த்தான். இருவரும் அமைதியாக இருந்தபோது.. அவளின் தலையை தடவியபடி இருந்தவன்.. எப்போது இருவருமே உறங்கினோம் என்று தெரியவில்லை. அவளின் அழைப்பில் தான் கண்விழித்தான்.
கண்களை முடி.. புன்னகையுடன் ” ஐ லவ் யூ முயல்குட்டி!.. “
” ஐ லவ் யூ தனுமாமா. ” புன்னகையுடன் கூறி உறங்கிக் கொண்டுயிருந்தாள் அவனின் முயல்குட்டி.