நாம் 20 (1)
” அம்மா.. ம்மா.. “
வேந்தன்.. தான் முதலில் சென்று பார்த்த சமையல் அறையில் சித்ரா இல்லாது இருக்க.. அடுத்து இந்நேரம் அம்மா எங்கு இருக்க வாய்ப்பு அதிகம் என தெரிந்து வீட்டு தோட்டத்திற்கு சென்றான். நினைத்து போல சித்ரா அங்கு தான் இருந்தார். ” அம்மா ” அழைப்புடன் மெல்லிய புன்னகையுடன் அருகில் சென்றான்.
பூக்களை பறித்துக் கொண்டுயிருந்த சித்ரா.. வேந்தனின் அழைப்பில் திரும்பியவர்.. அதிகாலை 3மணிக்கு தான் வந்தான்.. சிறிது நேரம் உறங்காமல்.. பூமிபூஜைக்கு இப்போதே கிளம்புவது போல வந்தவனை ஆச்சரியத்துடன் பார்த்தார்.
” வேந்தா 5மணிக்கு போக இப்பவே எழுந்து கிளம்பி வந்துட்ட. இன்னும் கொஞ்சம் நேரம் தூக்கியிருக்கலாம் இல்ல. “
” ம்மா.. நான் காரில் வரும்போதே நல்லாவே தூங்கிட்டேன். அதான் உடனே கிளம்பி வந்துட்டேன். ”
‘ தானும் அம்மாவும் விருப்பி அமைத்த தோட்டத்தை பார்த்தான். அவன் வைத்த செடிகள் எல்லாம் தன்னவளுக்கு பிடித்த செடிகள் தான். அதில் அம்மாவின் விருப்பமும் ஒன்றாக இருந்தது. மல்லி, ஜாதிமல்லி, முல்லை, நாட்டுரோஜா. பலவண்ணரோஜா செடிகள் இருந்தன. அனைத்தும் நன்றாக பராமரிக்கப்பட்டு.. பூக்கள் பூத்துக்குலுங்கியது. ‘
” ம்மா.. ஏன் ரோஜா பூவெல்லாம் நிறைய இருக்கு?. வசுவும் வைத்துக் கொண்டு.. அவங்க பிரண்ட்ஸ்க்கு எல்லாம் கொண்டு போ வா. “
” இல்லப்பா. ஸ்கூல் படிக்கும் போது கொண்டு போனா.. இப்ப யாரும் கேட்பது இல்ல போல.. அவ மட்டும் வைத்து போவா. நான் சாமிக்கு மட்டும் வைப்பேன். இப்ப சொடி நல்லா வேற வளர்ந்திருச்சு இல்ல.. அதான் நிறைய பூ இருக்கு. ” அம்மாவுடன் வேந்தனும் பலவித கலரில் இருந்த செம்பருந்தி பூக்களை சாமிக்கு பறித்துக் கொடுத்தான்.
” சரி ம்மா. நான் காபி சாப்பிட்டவுடன் அரசி வீட்டுக்கு போய்.. அவள கூப்பிட்டு நான் நேரா கடைக்கு வரேன். நீங்க எல்லாம் அப்பாவுடன் வந்துடுங்க. “
” வேந்தா.. எழில் நேரா அங்க வரட்டும். இவ்வளவு சீக்கிரம் அவங்க வீட்டிற்கு போனா நல்லாயிருக்கும்மா?.. “
” ம்மா.. நான் அரசிய கூப்பிட வருவேனு அப்பாவை விட்டு.. மாமாவிடம் சொல்ல சொல்லிட்டேன். அரசி முதல்முறையா நம்ம கடைக்கு வரா. அதனால நான் போய் கூப்பிட்டு வருனும் நினைக்கிறேன். ” பேசியபடியே.. அவர்கள் தோட்டத்திலிருந்து நடந்து பூஜை அறையில் பூக்களை வைத்துவிட்டு.. சமையல் அறையின் மேடையில் வேந்தன் அமர.. சித்ரா காபி போட ஆரம்பித்தார்.
” அப்படியா.. சொல்லியாச்சால. அப்பா வந்ததும் பேசவே நேரம் இல்ல. அவரும் சொல்லவே இல்ல. சரி நீ காபி குடிச்சுட்டு.. இப்ப வினோ மாமனார், மாமியார் கீழ வந்து விடுவாங்க. அவங்கள பார்த்துட்டு.. பின்ன கிளம்பு. “
மணியை பார்த்தான்.. அரசியை பார்த்து.. பின் கடைக்கு செல்ல நேரம் குறைவாக இருப்பதுபோல இருக்க.. ” ம்மா.. கண்டிப்பா பார்க்க வேண்டும்மா?. “
” ம்.. அவங்க இப்ப கடை பூஜைக்கு வந்துட்டு நேரா.. அண்ணா வீட்டிற்கு போய்விட்டு.. வளைகாப்பு, நிச்சியம் முடிந்து திரும்பி.. இங்க வரமா திருச்சிக்கு போய்விடுவாங்க. நீ அவங்க இங்க இப்ப வீட்டில் இருக்கும்போது பார்க்கலைனா அது சரியா இருக்காது. இதுநாள் வரை ஒன்னும் இல்ல. கல்யாணம் ஆகப்போகுது.. இதுமாதிரி சில விஷயங்களில் இனிமேல் நீ இன்னும் கவனமா இருக்கனும். அதான். “
நாதன் மாமாவிற்காக.. சரி என்று கூறுவதை தவிர வேறுவழி இல்லை. தோட்டத்தின் பூக்கள் ஞாபகம் வர.. சரி இருக்கும் நேரத்தை தன்னவளிற்காக பயன்படுத்துவோம்.. ” சரி ம்மா. நான் வெளிய இருக்கேன். நீங்க காபிய அங்க எடுத்துவாங்க. “
‘ வேந்தன் தோட்டத்திற்கு வந்து கொஞ்சம் ரோஜா, மல்லிகை பூக்கள்.. அம்மா சாமிக்கு மாலை கோர்க்க வைத்துயிருக்கும் ஊசி, நூலை எடுத்துக்கொண்டு.. தான் நினைத்தை செய்ய ஆரம்பிக்க.. அம்மா அவன் அருகில் காபி வைக்க.. அம்மாவை புன்னகைத்து.. காபியை அருந்தியவாரே.. தன் பணியை தொடர்ந்தான். இவன் என்ன பண்ணுறான்?. எண்ணியவாறே.. சித்ரா பார்த்துவிட்டு பூஜை அறைக்கு சென்றுவிட்டார். ‘
சிலநிமிடம் கடந்துயிருக்க.. அவன் செய்துக் கொண்டுயிருந்த வேலை முடித்து.. தன் கையில் அதனை வைத்து பார்த்தான். ‘ சிவப்பு, மஞ்சள் வண்ணம் ரோஜா பெரிய இதழ்களை எடுத்து.. இதழ்களின் நடுவில் மல்லிகைபூவை வைத்து அழகான பூச்சரம் கோர்த்துயிருந்தான். ‘ அதில் அம்மாவிற்கு தேவையானதை வைத்துவிட்டு.. தன் முயல்குட்டிக்கு எடுத்துக்கொண்டான்.
” வேந்தா நீ இன்னும் அரசி வீட்டிற்கு போகாம.. இன்னும் இங்க இருக்க?.. நேரம் ஆச்சுல. ”
தீடிர் என்று கேட்ட குரலில் ஒரு நொடி அதிர்ந்து.. ” அதுவந்து ப்பா. அம்மா.. பங்ஷன் முடிந்து.. அத்த, மாமாவ திருச்சிக்கு போயி விடுவாங்கனு.. வீட்டல இருக்கும் போது அவங்கள பார்த்துட்டு போக சொன்னாங்க. அதான். “
” ஆமா.. பார்த்தா நல்லதுதான். ஆனா நான் பார்த்துக்கிறேன்.. நீ கிளம்பு.. எழிலரசிய பார்த்து பத்திரமா கூப்பிட்டுவா. “
‘ எப்ப டா ‘ என்று காத்திருந்தவன்.. ‘ தெய்வமே!. ‘ என எண்ணி.. ” ம்.. சரிங்கப்பா. நீங்க இதை அம்மாவிடம் கொடுத்துவிடுங்க. ” என கூறிவிட்டு தன்னவளை பார்க்க.. ஒட்டத்துடன் வெளிவந்து பைக்கை எடுத்து வேந்தன் கிளம்பவும்.. சித்ராவுடன் வினோ, குழந்தைகள், விஸ்வநாதன், அவரின் அம்மா பத்மா, அப்பா சுவாமிநாதன் வந்தனர்.
வாசலில் புன்னகை முகத்துடன் தன் மகனின் செய்கையை பார்த்து நின்றவரிடம்.. ” என்ன அப்பா இங்க நின்னு சிரிச்சுட்டு இருக்கிங்க?.. “
அவர் வினோ மற்றும் அங்கு இருந்தவர்களை பார்க்க.. ” நான் மருமக எழிலரசி முதல்முறையா கடைக்கு வரதால.. அவன கூப்பிட்டு வர.. போக சொல்லியிருந்தேன். வேந்தன் உங்களையெல்லாம் வீட்டல இருக்கும் போதே பார்த்து பேசனா நல்லாயிருக்கும் இவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்தான். நேரம் ஆச்சுனு போக சொன்னேன். உங்களிடம் சொல்ல சொன்னான். யாரும் இங்க இல்ல.. அதான் கிளம்பிய அண்ணாவ பார்த்துட்டு இருந்தேன். ” வேந்தனின் செயலை.. வந்தவர்கள் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.. ‘ சரி ‘ என்பது போல சிரித்துவிட்டு ஹாலிற்கு சென்றுவிட..
” ம்.. சரிப்பா. ” வினோவும் செல்ல.. சித்ரா புரியாது பார்க்க.. ” அவன் இருந்தாமா. நான் தான் போக சொன்னேன். இந்தாமா.. வேந்தன் உன்னிடம் கொடுக்கச் சொன்னான். “
பூ வாங்கிய சித்ரா.. ” வேந்தன் இதைதான் கோர்த்துக் கொண்டுயிருந்தானா. அழகாக இருக்குங்க. ” ம் என தலையாட்ட.. ” சரி சித்ரா எல்லோருக்கும் காபி கொண்டு வா. என்ன வசுவ காணனோம்?.. கூறியபடி அம்மா, அப்பா கிளம்பிவிட்டனரா?.. என்று பார்க்க அவர்களின் அறைக்கு சென்றார்.
வேந்தன் தன்னவளை மிக நீண்ட ஒருமாதத்திற்கு பிறகு நேரில் பார்க்க பைக்கில் பறந்துக் கொண்டுயிருந்தான். ஒரு மாதம் முன்பு.. இதே போலான மெல்லிய நிலவெளியில்.. குளிர்காற்று வீச!. தன் முயல்குட்டியை அவளின் வீட்டில் விட்டு வந்தான்.
இப்போதும் வீட்டின் முன் போய் நிற்க. அங்கு நின்றுயிருந்த.. இன்பா புன்னகை முகத்துடன் கட்டியணைத்து விடுவித்து.. ” அத்த, மாமா கிளம்பிட்டாங்களா?.. “
” ம்.. அரைமணி நேரம் இருக்கும் மாமா. “
” ம்.. சரி. அவங்க தான் சொல்ல சொல்ல கேட்காம பூஜை வேலைய முழுவதும்.. நாங்க தான் பார்ப்போமுனு சொல்லிட்டாங்க. “
புன்னகையுடன்.. ” ஆமாம் மாமா. நிச்சிய, வளைகாப்பு வேலை என்று அத்த, மாமாவுக்கு நிறைய வேலை இருக்கு. அதான் அப்பா பூமிபூஜையும் வேலைய பார்த்துக்கிறேன் சொன்னார். “
தன்னவளின் அறையை பார்த்துவிட்டு.. ” நீயும் கிளம்பிட்டியா?.. “
நான் போகனும் உங்களுக்கு.. ” ம்.. கிளம்பிட்டேன். போன் மேல போன் எனக்கு.. இன்பா வந்தான் அங்க வேலை நடக்குமாம். நீங்க வரதான் காத்திருந்தேன். இந்தாங்க சாவி. இரண்டு பேரும் பார்த்து பத்திரமா.. சீக்கிரமா வந்துவிடுங்க. தாத்தா, பாட்டியும்.. பெரியப்பா வீட்டில் இருந்து நேரா வந்து விடுவாங்க. ” மறைமுகமாக வீட்டில் யாரும் இல்லை.. இரண்டுபேர் மட்டுமே.. சீக்கிரம் வாங்க கூறிச் சென்றவனை..
‘ நாங்க பார்த்துப்போன்.. என எண்ணியவாறு.. அன்று வீடு முழுவதும் ஆட்கள் இருக்க தன்னவளை பார்க்க உள்நுழைந்தவன்.. இன்று தான் மட்டுமே இந்த வீட்டில் இருக்க.. தன்னவளை பார்க்க.. நடக்க பொறுமையின்றி வேகமாக இரண்டு படிக்கட்டுகளாக தாவிச் சென்றான். ‘
‘ வேந்தன் 15நாட்கள் முன்.. தன்னவளின் அழுகை மற்றும் வாடிய முகத்தை பார்த்தபின்.. தன் முயல்குட்டியை போனில் பார்த்தாலோ.. பேசினாலோ.. அவனின் மனதிற்கு தன்னவள் தன் கையணைப்பில் உடனே வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றாது. அதன்பின் அவனால் அங்கு கண்டிப்பாக இருக்க முடியாது.. வரவும் முடியாத சூழ்நிலை. அதனால் அவர்கள் இருவரும் போனில் மெசேஜ் மட்டும் உபயோகித்தனர். அதுவும் ஒருவாரம்.. இருநாட்களுக்கு.. ஒருமுறை மட்டுமே. பின் அதுவும் இல்லை. ஆனால் அவர்களின் எண்ணத்திற்கு அதுதான் சரி என்று தோன்றியது. தன்னவள் அனுப்பிய பொருட்களில் அவள் நினைவை சமம் செய்துக்கொண்டான். ‘
‘ வேந்தன் தன்னவள் அறையின் கதவை திறக்க அவள் கிளம்பிய நிலையில்.. தங்களின் பிடித்தமான ஊஞ்சலை பார்த்தவாறு நின்றிருந்தவளை.. மிக இறுக்கமாக அணைத்துக் கொண்ட பின்.. அவனின் வலதுகை எந்த தயக்கமும் இல்லாமல் தாயுமானவன் போல் தன்னவளின் அடி வயிற்றுப்பகுதியின் மேல் வைத்தான். ‘
” ஏன்டி அப்படி அழுத.. என்னால அங்க ஒருநிமிசம் கூட கண்ணமூட முடியல முயல்குட்டி. உன் அழுக சத்தம், உடனே வேண்டும் தனுமாமா!.. மட்டும்தான் கேட்குது. நான் ரொம்பவே பயந்துட்டேன் முயல்குட்டி. உன்னைய நான் அழக்கூடாது சொல்லியிருக்கேன் தானே. “
” இந்த 15 நாள்ள.. ஏன் டா நான் உன்னைய இத்தன வருடமாம.. உன்ன பார்க்காம, உன் உடல்நிலை பற்றிக்கூட தெரிந்துக் கொள்ளாம விட்டது.. எவ்வளவு பெரிய தவறுனும்.. அதுக்கான தண்டனைய நல்லாவே அனுபவித்து விட்டேன்டி. எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும், மனச சமாதப்படுத்தினாலும்.. சாரி சொன்னாலும் எனக்கு தீராது.. முயல்.. ” குட்டியை.. முடிக்க விடாமல் அவனின் செவ்விதழ்கள் அவனவளால் சிறையெடுக்கப்பட்டது.
‘ எழிலரசி தன்னவனின் வருகை எந்த நிமிடத்திலும் இருக்கும் என.. அவன் வாங்கி அனுப்பியிருந்த சேலையை உடுத்தி, அணிகலன்களை அணிந்து, மெல்லிய ஒப்பனையுடன்.. தன்னவனின் மடியில் உட்கார்ந்து பல நினைவுகளை பகிர்ந்த ஊஞ்சலை பார்த்திருந்த நேரத்தில்.. ‘
‘ அவளவன் கலங்கிய கண்களுடன், அன்று தான் அவனிடம் எதிர்பார்த்த ஒன்றை தான் அவனிடம் கூறாமலே.. வெதுவெதுப்பான தன் ஐந்துவிரல்கள் அடங்கிய கையை தன் அடிவயிற்றில் தடம்பதித்தான்!.. இது ஒன்றே போதுமே.. அன்று அவள் தனியாக அனுபவித்த வலியை ஒருநொடியில் போக்கியது. அவளின் அடிவயிற்றின் மேல் வைத்தவனின் மென்மையான அழுத்தம்.. நான் இனி உன்னை அழாமல் பார்த்துக் கொள்வேன்.. இனி வயிற்று வலியை.. இதமான வலியாக உணரவைப்பேன் முயல்குட்டி ‘ எனக் கூறிக் கொண்டுயிருந்தவன்..
‘ தன்னாக என் நலனின் மேல் அக்கறையினால் மட்டுமே தன்னவன்.. தன் காதல், வீடு, வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் விட்டு இருந்தவன்.. இயற்கையான ஒன்றுக்கு.. இவன் எப்படி பொறுப்பாவான்?.. அதற்கு ஏன் இவனுக்கு தண்டனை என்று கூறவேண்டும். அவனின் வருத்தம், கவலை, புலம்பல் தேவையற்றது. இவனிடம் வார்த்தையால் கூறினால் கண்டிப்பாக உணரும் நிலையில் இல்லை என்பது.. அவனின் இத்தனைநாள் மெளனம், தற்போதைய நடுக்கம் கூறியது. ‘
‘ அதனால் இதழ்மொழியில் கூற ஆரம்பித்தாள். ஆனால் ஆரம்பம் மட்டுமே அவள்.. ஆனால் முடிவு என்பது.. என் மனநிலை சாந்தம் அடைந்தால் மட்டுமே முயல்குட்டி என்பது போல மென்மையான முத்தம் நீள.. இறுக்கம் கூடி.. பின் ஒருநிலைக்கு வந்து தன்னவளை ஒருவழியாக விட்டு.. ” ஐ லவ் யூ முயல்குட்டி ” வார்த்தையின் குரலில் தன் காதலை சேர்த்து.. நெற்றி மீது நெற்றி மோதி நின்றான் அவளின் மன்னவன் தனு. ‘
கன்னத்தை பிடித்துயிழுத்து.. ” தனுமாமா.. அதான் இனிமேல் அதிகம் வேலையிருக்காது தானே.. நான் வேண்டும் நினைக்கும் போது கூட வந்து இருக்கப் போறிங்க. இத்தனை வருடம் விட்ட எல்லாத்தையும் ஈடுகட்டிவிடலாம். சரியா. “
” ம்.. ”
” தனு எவ்வளவு நேரம் இப்படியே இருப்பதா எண்ணம்?. பூஜைக்கு எல்லாம் வந்துட்டுயிருப்பாங்க. நாம்மளே லேட்டா போலாமா. “
” ம்ஹூம்.. “
” பின்ன.. இப்படியிருந்தா.. எப்ப போக?.. ”
” இந்த அணைப்புக்கு 15நாள் காத்துயிருக்க வேண்டியதா போச்சு. என் முயல்குட்டி என் கை அணைப்பில்தான் இருக்கானு. நான் முழுமையா அனுபவித்து உணரனும். இனிமேல் எத்தனை தடவ அணைப்பு கிடைத்தாலும்.. இதுமாதிரி இருக்காதுடி. 2மினிட்ஸ் முயல்குட்டி. “
“ம். ”
2நிமிடம் 5நிமிடங்களாக கடந்த நிலையில்.. ” நீங்க கிளம்புனு தனு. “
‘ அவளின் நெற்றியில் அழுத்த முத்தமிட்டு முகத்தை பார்த்தான். அன்று பார்த்த முகத்திற்கும்.. இப்போது இருக்கும் முகத்திற்கும் இடையே எவ்வளவு வித்தியாசம். அவள் கண், கன்னம் என முத்தமிட்டு.. அவளை தன் நெஞ்சில் சாய்ந்து அவள் தலைமீது தன் தலை வைத்து.. அவள் தலையை தடவிக் கொடுத்தான். ‘
” முயல்குட்டி.. உன் வயிறு ரொம்ப மென்மையா இருக்குடி. கைய எடுக்கவே மனசு வர மாட்டேன்ங்குது. ” அசராமல் ஒரு அதிர்ச்சியை தன்னவளுக்கு கொடுத்தான்.
என்ன!.. என்று அப்போதுதான் உணர்ந்தாள். அவனின் கை இன்னமும்.. தன்மீது பதிந்துயிருக்க இவ்வளவு நேரமும்!.. அவனை மேல்நோக்கி நிமிர்ந்து பார்க்க.. அவன் புன்னகைத்தான்.. ” ம்.. இவ்வளவு நேரமும் ஒருகை தான் உபயோகித்தேன். ”
அவள்.. ‘ நீயா எடேன்.. ‘ என்று பார்க்க.. ‘ எடுக்கவேண்டுமா?.. ‘ என அவன்பார்க்க.. ‘ ம்.. ‘ என அவள் தலையாட்ட.. அரசியின் கண்களை பார்த்தவாறு.. அவன் மென்மையாக ஒவ்வொரு விரலாக எடுத்து பழைய நிலைக்கு அவள் புடவையை ஏற்றி சரி செய்து அவளை சிவக்க வைத்து!… அதனை ரசனையுடன் பார்த்திருந்தான் அந்த கள்ளன்.
” முயல்குட்டி என் டிரஸ் எங்க?.. “
” ஆங்.. என்ன கேட்டிங்க?.. “ புன்னகையுடன்.. ” என் டிரஸ் ” அவன் அணைப்பில் இருந்தே.. கட்டிலின் மேல் இருந்ததை எடுத்துக் காண்பிக்க,
பார்த்தவுடன்.. ” என்ன முயல்குட்டி வேஷ்டி, சட்டை. ”
” ஏன்?. இதுக்கு என்ன இப்ப?.. ”
” நான் பைக்கல வந்துயிருக்கேன். எனக்கு வேஷ்டியோட வண்டி ஒட்ட பிடிக்காது. “
அவனை முறைத்து.. ” அதுதெல்லாம் பார்த்துக்கலாம்.. நீங்க மாத்திட்டு வாங்க. நேரம் ஆச்சு. இல்ல ”
சிரிப்புடன்.. ” நீயே மாத்தி விட்டுவிடுவியா?.. “
அடங்கப்பட்ட புன்னகையுடன்.. ” மாத்தி விடனும்மா?.. “
இவள.. ” நீ ரொம்ப பண்ணுற டி. எனக்கு ஒன்னும் இல்ல முயல்குட்டி.. ” கூறி தன் சட்டை இரு பட்டன்களை வேகமாக கழட்ட.. ” அவனின் நெருக்கத்தில் இருந்தவள்.. இதனை சற்றும் எதிர்பார்க்காததால் ஒருநொடி அதிர்ந்து!. வேகமாக விலகி நின்றாள்.
அவனும் புன்னகையுடன் அவளின் அருகே சென்றபடி மூன்றாவது பட்டைனில் கை வைத்தவனிடம்.. ” தனு நான் உனக்கு தண்ணி கொடுக்கவே மறந்துட்டேன் பாரேன். நான் நான் போய் எடுத்துட்டு வரேன். ” என கூறி ஒடிவிட்டாள்.
அவள் ஒடியதை பார்த்த பின்புதான்.. ‘ டேய் வேந்தா நீ தப்பிச்ச.. ‘ நிம்மதியாக முச்சுவிட்டான்.
‘ அவன் தன்னவளின் மென்மையான இடத்தின் தாக்கத்தில் இருந்து தன் கை இன்னும் மீளாமல் இருக்க இவள் அடுத்த அதிர்வை கொடுக்க இவள் இனிமேல் இதுபோல என்னிடம் கேட்கக்கூடாது. பின்ன நாம்ம தான் பாடுபட வேண்டியிருக்கும்.. என எண்ணியவாரே..’
அவள் தனக்காக எடுத்து வைத்த உடையை அணிந்து.. ஏதோ பல வருடங்கள் கழித்து தன்னவள் அறைக்கு வந்தது போல சுற்றிப்பார்த்தும்.. அவள் தலையணை அருகில் தன் பொருட்களை பார்த்து.. ” இன்னும் சிறிது நாள் தான் உங்களுக்கு இங்கு வேலை. அதன்பிறகு என் கண்ணில் பட்டிங்க. ம்ஹும்.. நான் சொல்லமாட்டேன் செய்யும் போது தெரியும். “
நேரத்தை கணித்து.. ” தனு கிளிம்பியாச்சா.. ” என்ற படி நுழைந்தவள்.. தன்னவன்.. தன் அறை கண்ணாடியில் தலைமுடியை சீவிய படி இருந்தான். அவனையே பார்த்துயிருந்தவள் ஏதோ திருமணம் முடிந்து வெளியில் கிளம்புவதை போல இருந்தது. ‘ ம்.. அதற்கு இன்னும் சில மாதங்கள் உள்ளனவே.. ‘ என்ற நீண்ட பெருமூச்சுடன் அவனின் அருகில் சென்று தண்ணீர் கொடுக்க..
‘ அவனும் அவளை போலவே.. தன்னவளையும், தன்னையும் பார்த்தான். அவனும் நீண்ட பெருமூச்சுடன் தண்ணீர் வாங்கி தாகத்தை தணித்துக் கொண்டான். ‘
” முயல்குட்டி என்ன பாரு.. ”
‘ முத்துகளும், பூக்கள், பொட்டு போன்ற வடிவங்களில் சிறிய வைர கற்களும் பதித்த.. என்று மூன்று அடுக்கு செயினின் இருபுறமும் நடுவில் வைரம், ரூபி, மரகத கற்கள் பதித்த பெரிய பூக்களின் வடிவில் இருந்த பதக்கத்தில் வந்து இணைந்திருந்த.. மார்ப்பு வரை இருப்பது போல ஆரத்தை அணிவித்தான். அவள் முன்பு அணிந்துயிருந்த நெக்ஸ்சை கழட்டி விட்டான். ‘
” தனு இது உறுதிக்கு வீட்டில் கொடுத்தது. இத ஏன் கழட்டினிங்க?. “
” வேற ஒருநாள் போடு. சரி தோட்டையும் கழட்டுட்டு.. இதோட சேர்ந்த ஜிமிங்கி. இத போடு. இரு பூவ வைத்து விட்டுறேன்.. பொறுமையா மாத்து. ”
‘ தான் கொண்டு வந்த இருபக்கம் கொண்ட ரோஜாஇதழ்,மல்லி சரத்தை.. ஒருமாதம் கழித்து தன் கையால் தன்னவளிற்கு வைத்துவிட்டான். பின் முத்தமிட்டு.. அவளை ரசிப்பதற்கு வசதியாக ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டான். ‘
‘ அரசி அவனை முறைத்துக் கொண்டே போட.. அவளவனோ எப்போதோ தன் முயல்குட்டியினுள் மூழ்கிவிட்டான். அடர்ஊதா, ரோஜா நிற பாடர் கொண்ட கோரா ஆக்னஸ் சேலை.. உடல்பகுதியில் தங்கநிற பெரிய பூக்கள்.. அதின் நடுவே பல வண்ணம் நிறம் கலந்திருந்தது. பச்சை வண்ண பிளவுஸ்.. அதில் ஊதா, ரோஜா நிற நூல்வேலைபாடு செய்யப்பட்டு இருந்தது. மெல்லிய அலங்காரம்.. ஆனால் அந்தஅந்த கண்களுக்கு!. மட்டும் கூடுதல் அலங்காரம்.’
‘ தான் போட்டு விட்ட நகை. இந்த நகையை எப்போ வாங்கினோம்?.. அவன் நினைவில் வர அடம்பிடிக்க.. ஆங்!.. ஞாபகம் வந்துருச்சு.. வினோ கல்யாணத்தின் போது. ‘
” தனு கிளம்பலாமா?.. ” கண்ணாடியில் தன்னவனை பார்த்துக் கேட்ட படியே தன் ஜிமிக்கியை தன் விரல்கொண்டு ஆட்டி.. எப்படி?.. என்று கண்களால் கேட்க..
எழுந்து பின்பக்கமாக கட்டிக்கொண்டு.. காதில் ” பூஜைக்கு போகனும்மா.. வேண்டாம்மா?.. முயல்குட்டி. “
கண்ணாடியில் அவன் கண்களை பார்த்து.. மெல்லிய குரலில்.. ” ம்.. “
ஒன்றும் கூறாமல்.. அவளை அள்ளி தூக்கிக் கொண்டான். பின் தான் அரசி சுயநினைவிற்கு வந்து.. ” தனு என்ன பண்ணுறிங்க?.. “
” யாருமே இல்ல.. அதை நான் பயன்படுத்திக்கிறேன். என்னடி கொஞ்சும் வெய்ட் குறைந்த மாதிரியிருக்க.. ஒழுங்கா சாப்பிடலையா?.. “
” ம்.. நல்லாதான் சாப்பிடேன். தனு.. பூஜை அறைக்கு போங்க. ”
அவனும் அவ்வாறே பூஜை அறையினுள் நிற்க.. அவள் அங்கு சாமியின் முன்னிருந்த சாவியை எடுத்தாள். ” போகலாம் தனு. ” அவனிற்கு ஒன்றும் புரியவில்லை. பின் வெளியில் வந்தவுடன் நெற்றியில் மென்முத்தம் பதித்து இறக்கிவிட்டான்.
” அரசி நான் வேணா.. திலகன் கார் எடுத்த வரச் சொல்லட்டா?.. “
” அதுக்கெல்லாம் அவசியம் இல்ல இந்தாங்க சாவி. நாம்ம இதுல போகலாம்.” புதிதாக வாங்கிய டூவிலரை!. கவர் எடுத்து காண்பித்தாள்.
அவளை முறைத்து.. என்ன இது?. என்பது போல கேட்க.. ” உங்களுக்கு வேஷ்டி கட்டிட்டு பைக் ஒட்டப்பிடிக்காது. எனக்கு நீங்க வேஷ்டி கட்டினா பிடிக்கும். நீங்க கட்டும் போது இதில போகலாம். “
இன்னும் முறைத்து.. ” எப்பயாவது போடுவதற்கு புதுசா வாங்குவாங்களா?.. ”
” சும்மா தேவையில்லாம பேசாதிங்க தனு. இப்ப இதுல போலாமா வேண்டாமா?.. இல்ல வாங்க உங்க பைக்கில் போகலாம். எனக்கு வேஷ்டி கட்டியிருக்கனும்., பைக்ல தான் போகனும். அவ்வளவுதான். “
அவளது பழைய வண்டியை மாற்றி.. முன்பு இருந்ததை விட பெரியபைக்.. இருவரும் ஒட்டுவதற்கு ஏற்றதாக புதுமாடலில் இருந்தது. ‘ உனக்காகதானே ஆசையா வாங்கியிருக்கா. ‘ தன்னை திட்டிக்கொண்டே வெளிச்சத்தை பார்த்தான்.
சற்று இருட்டாக இருக்க.. வேறு யோசனை தோன்றியது.. ” சரி முயல்குட்டி நாம்ம இந்த புதுபைக்கில் போகலாம். ஆனா நீ தான் ஒட்டனும். ” வெளியில்கொண்டு வந்தான்.
“என்ன நானா?. ” ஆமாம்.. என தலையாட்ட. அவனை மேலும் கீழும் பார்த்தாள். ஏதும் உள்குத்து இருக்குமோ!..
வாடி வா!. புன்னகையுடன்.. ” முயல்குட்டி மணியாச்சு.. சீக்கிரம். ” இவன் எனக்கு பின்னாடியா?..
” தனு எனக்கு வழி தெரியாதே. அதனால நீயே ஓட்டேன். ”
” என்ன!.. ஹோட்டல் எங்க இருக்குனு தெரியாதா?.. ”
” ம்.. ”
” நிஜமா தெரியாதா?.. ” அவளை நக்கலாக பார்த்து.. ” ஆனா உனக்கு ஒரு சந்து விடமா.. இங்க இருக்க ஸ்விட் கடை எல்லாம் தெரியும் தானே?. “
புன்னகையுடன்.. ” ம்.. எல்லாக்கடையிலும் நான் ரெகுலர்கஸ்டமர் தனு. நான் போனாலே எனக்கு பிடித்ததை எடுக்க ஆரம்பித்துவாங்க தெரியும்மா. ” இதனை கூறி அவனால் ஏமாற்றப் படப்போகிறோம் என தெரியாமல் கூறினாள்.
புன்னகையுடன்.. ” இவ்வளவு ஊர் சுற்றியிருக்க.. இதில மெயின் ரோட்டில் இருக்க நம்ம கடைய தெரியலேனு சொல்லுற. சரிவா.. உன்னைய அப்புறம் கவனித்துக் கொள்கிறேன். நான் வழிசொல்றேன். “
” அது தனு.. ”
” இப்ப நீ ஒட்டப்போறியா.. இல்ல நான் போய் டிரஸ் மாத்தி.. ”
அவள் அவசரமாக.. ” இதோ வண்டிய எடுக்குறேன். ” தன் சேலையை சரியாக வைத்து.. பின் நிதானமாக வண்டியில் ஏறியமர்ந்தவள்.. வேந்தனை பார்க்க.. அவன் அவளை நெற்றியில் மென்முத்தம் கொடுத்த பின் புன்னகையுடன் உட்கார்ந்தான்.
” முயல்குட்டி ரொம்ப வேகமா போற கொஞ்சம் மெதுவாதான் போயேன். “
” கொழுப்பா தனு. புது வண்டி அதனால மெதுவா போனா. நக்கல் பண்ணுற. ”
” இல்லலைனா மட்டும் நீ வேகமா போவ?. ”
” போவேன் போவேன்.. நீ முதல இடுப்பில் இருந்து கைய எடு. ”
” ஹேய் முயல்குட்டி.. நீ என்ன பிடித்தப்ப.. நான் ஏதாவது சொன்னனா?. என்னய எவ்வளவு இறுக்கமா பிடிச்சுட்டு வந்த.. நான் அதில் 10 சதவிதம்தான் பிடித்துயிருக்கேன். “
நான் பிடித்த இடமும்.. இதுவும் ஒன்னா. இவன.. போசாம டிரஸ்ச கடையில் வைத்து மாற்ற சொல்லியிறுக்கலாம். ” சரி சரி. தனு இன்னுமா கடை வரல?. நீ ஒன்னும் என்னைய சுற்ற விடல தானே?. “
இன்னும் நீ கண்டுபிடிக்கலையா முயல்குட்டி.. ” இல்ல முயல்குட்டி.. நீ ஒட்ட தடுமாறுற.. அதான் மெயின் ரோட்டில் வராம சந்துல வருறோம்.. அதான் தூரமா தெரியுது. ”
” ஓ.. “
புன்னகையுடன் பின்னால் வந்த வண்டியை பார்த்தவன் ஒரு நொடி அதிர்ந்து.. பின் உடனே திரும்பிக்கொண்டான். அவர்களுக்கு தங்களை தெரிய வாய்ப்பில்லை. அதுவும் இந்த வண்டியில் வருவோம் என நினைக்க மாட்டார்கள் என நினைத்து அரசியிடம் ஒன்றும் கூறாமல் மீண்டும் அவளை ஒரு சுற்று சுற்ற வைத்தான்.
யாருக்கு தெரியாது வாய்ப்பில்லை என நினைத்த.. அவர்களின் பின்னால் வந்த கார்த்திக் குடும்பத்தினர்களுக்கு தெரிந்துவிட்டது ஆனால் இதில் வேந்தனுக்கு ஒன்று தெரியாது.. ஏற்கனவே இளமதி, ஆர்த்தி வீட்டினர் பார்த்துவிட்டனர் என்று.