” முயல்குட்டி கோயில் பக்கத்தில் நிறுத்து. சாமிய பார்த்துட்டு போகலாம். “
யோசனையுடன் தலையசைத்து நின்றவள்.. ” என்ன தனு இந்த கோயில அப்பவே பார்த்தேன். நீங்க பார்க்கலையா?.. “
புன்னகையை கட்டுப்படுத்திக் கொண்டு.. ” இல்ல முயல்குட்டி.. உன் அளவிற்கு நான் இந்த ஊரை சுற்றியது இல்லையா. அதான் சீக்கிரம் கண்டுபிடிக்க முடியல. ” எனகூறியபடி இறங்கி வண்டியை பிடித்துக் கொண்டு தன்னவளை இறங்க கூற.. அவனை முறைத்துக் கொண்டே இறங்கியவள்.. அவனிடம் ஏதோ கூற வந்தவள்..
” என்ன இரண்டுபேரும் வண்டியிலேயே ஜாங்கிங் போயிட்டுவரீங்ளோ?.. ” என கூறியபடி இளமதி, சுரபி, ஆர்த்தி வர..
வேந்தன்.. வண்டியில் அரசியை ஏமாற்றி பலதடவை சுற்றி வந்ததை பார்த்துயிருப்பாங்களோ!. எண்ணியவாறே.. அவர்களை பார்த்து புன்னகைக்க.. அரசிக்கு ஒன்றும் புரியாமல்.. ” அக்கா, அண்ணி, நீங்களும் கோயிலுக்கு வந்திங்களா?.. ”
வேந்தனிடம் திருப்பி.. ” இவங்க நடந்ததே இங்க வந்துயிருக்காங்க. அப்ப இங்க இருந்து கடை பக்கமா.?.. தனு. ” அவனை பார்க்க..
அவன் என்ன சொல்வான்?. முழிக்க.. ” அது அது அரசி.. ”
புன்னகையுடன்…” எழில் உனக்கு கடை எங்க இருக்குனு தெரியாதா?. “
” முன்னாடி தெரியாது அண்ணி. இப்ப தனு கூட்டிட்டு வரப்ப தெரிஞ்சுக்கலாம் என்று விட்டேன். அதனால இப்ப என்ன?.. “
” எங்களுக்கு ஒன்னும் இல்ல. ஆனா சில பேருக்கு அது சாதகமா போச்சு. அதான். “
” யாருக்கு?.. என்ன சாதகம்?.. ” சுரபி.. வேந்தனை கண் காட்ட.. ” தனு.. அப்ப இங்க பக்கத்தில்தான் கடையிருக்கா?.. ” என கூறிய படி சுற்றிப்பார்க்க எங்கும் அன்னபூரணி உணவகம் தெரியவில்லை.
இன்னும் நன்றாக பார்த்தவள். ஒரு பெரிய அரசமரம். அதன் பக்கத்தில் ஒருகடை இருப்பதும்.. கார்கள் சில நிற்க.. கடையினுள் ஆட்கள் வருவதும்.. போவதுமாக இருந்தார்கள். ஆனால் பேர் தெரியவில்லை. கிளைகள் மறைத்துயிருந்தன. ஆனால் அதில் பூ.. என்ற எழுத்து தெரிந்தது.
” தனு அரசமரம் பக்கத்திலா இருக்கு?.. ” சிரிப்புடன் ஆம் என தலையாட்ட.. இவனை என்ன பண்ணலாம்?. என சுற்றி பார்க்க.. ” என்ன தேடுற அரசி?.. ”
” ம்.. ஏதாவது குச்சி இருக்குமானு பார்க்கிறேன். எவ்வளவு கொழுப்பு உங்களுக்கு?.. ” தன் அக்காவிடம்.. ” அக்கா என்னைய இந்த வழியாவே ஒரு ஐந்து தடவையாவது சுற்ற வைத்துயிருப்பாங்க. ”
புன்னகையுடன்.. ” உனக்கு தெரியாத ஸ்விட் கடை ஏதாவது இருக்கா. இந்த ரோட்டில் எத்தனை தடவ வந்துயிருப்ப.. நீ வேந்தனிடம் கடை தெரியலைனு சொல்லி இருப்ப. அதான் சும்மா வண்டில சுற்ற விட்டுயிருக்காங்க. “
‘ அப்படியா? ‘ என்பது போல தன்னவனை பார்க்க.. அவன் ‘ ஆமாம், இல்லையென ‘ அவள் போல்ஆட்ட.. அவள் முறைத்தாள். அவளவன் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவன்.. மற்றவர்களை பார்த்து.. ” சரி வாங்க. சாமிய கும்பிட்டு கடைக்கு போகலாம். ”
வீட்டால் தனக்கு இங்கேயே அடிவிழ வாய்ப்பு இருக்கு என எண்ணி சமாளிக்க.. மற்ற மூவரும் புரிந்து.. பின் தலையசைப்புடன் கோயிலினுள் சென்றுவிட்டு.. பின் வேந்தன் வண்டியை எடுத்துக்கொள்ள அனைவரும் கடையை நோக்கி சென்றனர்.
அருகில் சென்றவுடன் அரசி ஏதோ யோசனையுடன் வந்தாள். வேந்தன் அவள் முகத்தை தான் கவனித்துயிருந்தான். ‘ பிறகு கேட்கலாம் ‘ என நினைத்து.. தன்னவள் முதல்முறை வருவதால் தன் போனில் படம் எடுத்துக்கொண்டான்.
‘ வேந்தன்.. உணவகம் தான் தங்களின் வியாபார ஆரம்பம் என்பதால்.. இருவரும் முதலில் உணவகத்திற்கு வந்து.. பின் தங்கள் இருவரின் எதிர்கால முன்னேற்றம் ஆரம்பிக்க போகும் இடத்திற்கு செல்ல வேண்டும் என நினைத்தான். அதனால் தன் அரசியை முதலில் உணவகத்திற்கு அழைத்து வந்தான். ‘
‘ அரசி நுழைவாயிலில் நுழையும் தருவாயில்.. வேந்தன் தன்னவளின் கையை பிடித்துக் கொண்டு இருவரும் ஒன்றாக நுழைய.. அவர்களின் காதுகளில் கில்டர் பாம்., பலூன் வெடிக்கும் சத்தமும் கேட்க.. அவர்கள் மேல் கில்டர் பேப்பர் விழ.. என இருவரும் ஒருநிமிடம் அதிர்ந்து.. பின் அங்கு இருப்பர்களை பார்த்தார்கள். ‘
‘ இளையவர்கள் அனைவரும் வேந்தன்– எழிலரசியை வரவேற்றார்கள். இவர்களுக்கு இந்த வரவேற்பு கொடுத்தவர்கள்.. இருவரின் நண்பர்கள், கமலேஷ், இன்பா மட்டுமே. மற்றவர்களுக்கு தெரியாது. பெரியவர்கள் கல்யாணத்திற்கு முன் வேண்டாம் என கூற வாய்ப்பு இருக்கு என்பதால்.. அவர்களுக்கு தெரிவிக்காமல் மிக எளிமையாக பிளான் செய்தார்கள். ‘
இளையவர்களை ஒருவரை அழைத்தால் எல்லோரையும் அழைக்க வேண்டும் என அவர்களிடமும் கூறாமல் விட்டனர். ஆனால் அவர்கள் வேந்தன்– எழிலரசி வந்த அழகை பார்த்து.. காபி குடிக்கலாம் என வந்தவர்கள் இவர்களை பார்த்து ஏன்?. கேட்டு அவர்களும் இணைந்து விட்டார்கள். கோயிலின் முன் இருவரையும் பார்த்தவர்கள்.. இவர்களை தனியாக விட்டால் சீக்கிரம் வரமாட்டார்கள் என எண்ணி அவர்களை அழைக்க தான் மூவரும் வர.. பின் அனைவரும் வந்தார்கள்.
இருவருக்கும் அந்த சூழல்புரிய அடுத்த ஒருநிமிடம் பிடிக்க.. புன்னகையுடன் அனைவரையும் பார்த்தனர். ‘ என்ன கூற?. ‘ இப்படி ஒரு வரவேற்பையும்.. அங்கு இருந்தவர்களையும் எதிர்பார்க்கவில்லை இவர்கள்.
” என்ன தம்பி வேந்தா.. காலையிலேயே உங்க அரசியோட பைக்கில் நகர்வலம் போயிருந்தீங்க போல.. ”
‘ யோகலட்சுமி காரில் வரும்போது என்னடா?.. இந்த முகத்தை எங்கோ பார்த்தமாதிரி இருக்கென்று தன் கணவனிடம் கூற.. கார்த்திக் தான் இது வேந்தன்.. முன் இருப்பது அரசி என கூற.. ஆனால் ஏன் இந்த வண்டியில்?.. எதற்காக இப்படி?.. புரியவில்லை கூறினான். பின் வேந்தன் தங்கள் வண்டியை பார்த்தும் தான் தெரியாதது போல காரை தெருவில் திருப்பி விட.. இவர்கள்கடைக்கு வந்தும் அவர்கள் வராமல் இருப்பதால் வரும் வரை உள்ளிருக்கலாம் என வந்தால் உள்ளே கடையை பார்க்க வந்த எழிலின் அக்கா, அண்ணி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இருக்க.. காரணம் அறிந்து மகிழ்வுடன் அவர்களுடன் இணைந்து வரவேற்க காத்துயிருந்து அவர்களை அதிர்வுறச் செய்தார்கள் அனைவரும். ‘
டேய் இவங்களும் பார்த்துட்டாங்களா?.. புன்னகையுடன்.. ” அரசி புது பைக்கில் சும்மா ஒரு ரவுண்டு போயிட்டு வந்தோம் க்கா. நீங்க எங்கள பார்த்திங்களா என்ன?.. “
” ஓ.. நீ எங்கள பார்க்கல?.. ” இல்லை என தலையாட்டி.. ” அரசி நீ இவங்கள பார்த்த?.. ” அவனை முறைத்துக் கொண்டே இல்லை என்றாள்.
” சரி அதவிடுங்க.. எங்க அத்தை மாமா?.. ” அவர்களிடமும், தங்களை வரவேற்றவர்களிடம் சிலவார்த்தைகள் பேசிவிட்டு.. தன்னவளிற்கு உணவகத்தின் முக்கிய பகுதிகளை காண்பித்தான்.
வேந்தன்– எழிலரசி மற்றும் நண்பர்கள் மட்டும் உணவகத்தில் இருந்தார்கள். அப்போது அனைவருக்கும் காபி வர.. எழிலரசிக்கு மட்டும் பருத்திப்பால் வைக்கப்பட..
” என்ன ஈஸ்வர் அண்ணா எழிலரசி மட்டும் பருத்திப்பால்?.. நாங்கெல்லாம் குடிக்க மாட்டமா?. இல்ல புது மேடத்திற்கு மட்டும் ஸ்பெஷல்லோ!.. “
” ஆமா திலகா.. இவங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் தான். ” கூறி வேந்தனின் அண்ணா.. எழிலரசியை சிரிப்புடன் பார்க்க.. அவள் முறைக்க இருந்தாள். இவர்களை பார்த்த மற்றவர்கள் என்னடா பார்வையே சரியில்லையே!..
வேந்தனுக்கு அரசி உள் நுழையும்போது யோசனையுடன் வந்தது ஞாபகத்திற்கு வர.. ” அண்ணா நீங்க அரசிய முன்னாடியே பார்த்துயிருக்கிங்களா?.. “
சிரிப்புடன்.. ” ம்.. பார்த்துயிருக்கேன் ஒரு ஐந்துவருடத்திற்கு முன். ”
‘ என்ன நீங்களும் மா?.. ‘ என வேந்தன்– எழிலரசி பற்றி தெரிந்த நால்வர் அவர்கள் மூவரையும் பார்த்தார்கள்.
” இங்கயா ண்ணா?. “
” ம்.. ”
” அரசி நீ கடை தெரியாது.. வந்தது இல்லனு சொன்ன. மறந்திட்டியோ?.. ”
‘ அவன் வீட்டிற்கு அடுத்தபடியாக இங்குதானே இருப்பான். தன்னவள் இங்கு முன்பே வந்துயிருக்கிறாள் என்பது ஆனந்தமாகவும்.. ஆனால் அது ஞாபகத்தில் இல்லை என்பது வருத்தமாக இருந்ததால்.. மறந்து விட்டாலோ என நினைத்து கேட்க.. ஆனாலும் அவள் இங்கு வந்தபோது.. தான் அப்போது ஏன் இங்கு இல்லாமல் போனேன்.. என்ற ஏக்கமும் வந்தது. ‘
ஈஸ்வரை ஒருபார்வை பார்த்துவிட்டு.. தன்னவனின் எண்ணம் புரிந்து.. ” தனு நான் வந்தப்ப.. என்ன கடைனு கூட எனக்கு தெரியாது ?.. அன்னைக்கு தீடிர்னு நல்ல மழை. குடை அப்ப இல்ல. அப்படியே போயிருப்பேன். புதுசா இன்பா வாங்கிக் கொடுத்த டிரஸ் போட்டுயிருந்தனா. வேற வழியில்லாம உள்ள வந்தேன். அப்புறம் இவர் மேல இருந்த கடு.. இந்த இடத்தையே மறந்துட்டேன். இப்ப கடை முன்பகுதி, இவங்கள பக்கத்தில் பார்த்த பிறகுதான் ஞாபகம் வருது. “
” ஹேய் எழில் அந்த பருத்திப்பால் விஷயமா டி. “
” ம்.. “ என்றவுடன் ஈஸ்வர் சிரிக்க.. மற்றவர்கள் புரியாமல் மூவரையும் பார்க்க..
சத்யா புன்னகையுடன்.. ” அது ஒன்னும் இல்ல ண்ணா. அது சின்ன விஷயம். ”
” இரும்மா நான் சொல்றேன். இந்த மேடம் அன்னைக்கு பண்ண கூத்த. ”
” என்ன கூத்தா ” அனைவரும் கேட்க.. அவள் முறைக்க..
” ஆமாம்டா. அன்னைக்கு மழையில் இருந்து ஒதுங்கி.. முன்பகுதியில் எனக்கு கொஞ்சம் பக்கத்தில் நின்னாங்க. அப்ப எனக்கு சூட பருத்திப்பால் வந்து வச்சாங்களா.. இவங்க அப்ப லைட்டா நனஞ்சு இருந்தாங்க. அவங்களுக்கும் ஏதாவது சூட குடித்தா நல்லாயிருக்குனு நினைத்தாங்க போல.. என் டம்ளரையே பார்த்துயிருங்க. நான் எதுவும் யோசிக்காம.. நடுங்குறிங்க இத குடிக்கனு கொடுத்தேன். அவங்களும் ஒன்னும் சொல்லாம.. நல்லா ரசிச்சு கண்முடி குடிச்சாங்க. பின்ன டம்ளர கொடுத்துட்டு.. ஏதோ யோச்சிட்டு நின்னாங்க. என்னு கேட்டா?.. “
புன்னகையுடன் வேந்தன்.. அரசியை பார்த்துவிட்டு.. ” இன்னொரு டம்பளர் வேண்ணும்.. என்று தானே?. “
” எப்படிடா?.. ”
சிரிப்புடன்.. ” மேல சொல்லுங்க ண்ணா.”
தலையசைத்து.. ” ம்.. நானும் கொண்டு வரச்சொல்லி அதையும் குடிச்சாங்க. சரி ரொம்ப பிடித்தது போலனு.. அப்பதான் பாப்பா பிறந்துயிருந்தாளா!.. பாப்பா ஞாபகத்தில் தெரியாதனமா.. ஒரு பேர் சொல்லி உங்களுக்கு பிடிச்சுயிருந்ததானு கேட்டேன் டா. என்னா அதுக்கு சண்டை. அவங்க குடித்த பாலுக்கு காசு பாதிதான் இருக்கு மீதி இல்லனு.. அடுத்த கொஞ்ச நேரத்திலேயே வந்து கொடுத்துட்டு போனாங்கடா. அதன் பிறகு கொஞ்சநாள் பொண்ண கூப்பிட்டா கூட எனக்கு சிரிப்பு வரும். “
சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு.. ” ஏன் ண்ணா. அந்த பேர் கூட சொல்ல பயப்படுறிங்க. அந்த அளவிற்கு சண்ட போட்டாளோ. ”
” பயம் இல்ல.. ஆனா நீங்க அவங்கள கிண்டல் பண்ணினா. அதுக்கும் இப்ப முறைப்பது போல இன்னும் முறைப்பாங்ளோ.. இல்ல அடிவிழ கூட வாய்ப்பு இருக்கு. “
” அதெல்லாம் பயப்படாதிங்க இப்ப ஒன்னும் பண்ணமாட்டா. என்ன குட்டிம்மா?.. அப்படிதானே. “
” டேய் டேய்.. நான் சொல்லாமலே.. எப்படிடா நான் அந்ந பேர் தான் கூப்பிட்டேனு கண்டுபிடிச்ச?. ”
‘ ஏன்னா இவள பார்த்தவுடன் நானும் இதே பேர கூப்பிட்டுதான் திட்டு வாங்கினேன். இத வெளிய சொல்ல வா முடியும்.’
அரசியை புன்னகைத்து விட்டு.. ” அது ண்ணா.. அரசிய வீட்டல இருக்கவங்க கூப்பிடுவாங்க.. அவங்களிடம் ரொம்ப பொறுமையா கூப்பிடாதிங்கனு.. சொல்லுவானு கேள்வி பட்டேன். “
சிரிப்புடன்.. ” ஓ. சரி சரி.. ” மற்றவர்கள் அவளை புரிந்து சிரிக்க..
பொறுமையாக அமர்ந்துயிருந்தவள்.. ” தனு அண்ணா.. ” ஈஸ்வரை பார்த்து முறைப்புடன் கூப்பிட..
” என்ன தனு அண்ணாவா?.. ஓ.. நீ மாமானு யாரையும் கூப்பிட மாட்டேனு சொன்னில. ஆனா மாமானு கூப்பிட்டா.. உங்க இரண்டு பேருக்கும் ஒரு நியூஸ்சும்.. ஒரு சூப்பர் பரிசு கொடுப்பேன். “
” எனக்கு ஒன்னும் வேண்டாம். நீங்களே வைச்சுக்கோங்க. “
அவனுடைய பரிசை காண்பித்து.. ” நல்லா பார்த்து சொல்லு.. இது உனக்கு வேண்டாம்மா?.. ” அவர்கள் இருவர் முன் காண்பிக்க..
வாங்கி பார்த்தவர்கள்.. என்ன?.. அதிர்ந்து!.. ” அண்ணா இது?. “
சிரிப்புடன்.. ” ம்.. மேடம் அன்னைக்கு ரசிச்சு குடித்தது.. நீ பண்ண பருத்திப்பால் தான். நீ என் போனில் போட்டோ எடுத்துட்டு பால் கொண்டு வரப்ப போனை கொடுத்து விட்டுயிருந்த. அப்ப நீ செய்ததை கண்முடி ரசித்து குடிக்கிறாங்கனு.. உனக்கு காண்பிக்க போட்டோ எடுத்தேன்.. நீ பார்த்தவுடன் டெலிட் பண்ணிவிடலானு இருந்தேன். உன்னிடம் காண்பிக்கவும் மறந்துடேன்.. போட்டோவை டெலிட் பண்ணவும் மறந்துட்டேன். ”
” இவங்க வீட்டல ஸ்கூல், காலேஜ் போட்டோஸ் பார்த்தப்பதான் ஞாபகம் வந்தது. பழைய போனில் இருக்கானு பார்த்தேன். அப்ப தான் நீ எடுத்த போட்டோவையும் பார்த்தேன். அதான் இங்க உன்னோட வரப்ப கொடுக்க நினைத்தேன். சரி இப்பவாவது மாமா கூப்பிடுவியா?.. ” கடைசியாக எழிலரசியை பார்த்துக் கேட்க.
‘ வேந்தனுக்கு வார்த்தைகள் இல்லை. வேந்தன் தன்னவளை நினைத்துதான்.. இங்கு வரும் ஒவ்வொரு முறையும் ஏதாவது இனிப்பு செய்வான். தன் போனில் போட்டோ எடுத்து வைப்பான். அன்று தன் போனில் எடுக்க முடியாமல் அண்ணா போனில் எடுத்தான். அன்று தான் உள்ளியிருக்க.. தன் முயல்குட்டி!.. அவளிற்காக செய்ததை.. அவளே ஒருதடவை ரசித்து குடித்து.. பின் மீண்டும் கேட்டு அதுவும் தான் குடிக்கலாம் என்று வைத்துயிருந்ததை அவள் பருகியிருக்கிறாள். அண்ணா.. என் முயல்குட்டியை ஞாபகம் வைத்து.. இரண்டு போட்டோயும் ஒரு பிரேமில் வைத்து தங்களுக்கு வாழ்வில் மிகவும் பொக்கிஷமான பரிசை வழங்கியிருக்கிறார். ‘
சட்டென்று எழுந்து.. இருவரின் சார்பாக.. ” தேங்க்ஸ் ண்ணா. ” கட்டிக் கொண்டான். வேறு வார்த்தைகள் இல்லை.
சிரிப்புடன் ஏற்று.. எழிலரசியை பார்க்க.. ” நீங்க என்ன கொடுத்தாலும் தனு அண்ணாதான். ” அவளிற்கும் வார்த்தைகள் இல்லை. தன்னவனுக்கும் தனக்கும் இடையே தங்களுக்கு தெரியாமலையே ஒரு இனிமையான நிகழ்வு.
” ம்.. பரவாயில்ல. ஒரு குட்டிபொண்ணு என்ன அண்ணாணு கூப்பிடுற. அதனால விடுறேன். ”
” இல்லைனா என்ன பண்ணிருப்பீங்க?.. “
” உன்னோட என்னால சண்ட போட முடியாதுமா.. இவன் வேற இப்படி எனக்கு சப்போட் பண்ணாம சிரிச்சுக்கிட்டுயிருக்கான். இரு என் பொண்ண கூப்பிட்டு வரேன். இரண்டு குட்டிம்மாவும் சண்ட போடுங்க. “
” கூப்பிடுங்க கூப்பிடுங்க. ” அருகில் இருந்தவன்.. ” முயல்குட்டி ஐந்து வயது குழந்தைய கூப்பிடுவேனு சொல்லுறார். நீ அதுகூட சண்ட போடப்போறியா?.. உன்னை அவர் குட்டிம்மானு சொல்லமா வேறு என்ன கூப்பிடுவார். ”
” 5வயசா?.. ” இருவரும் தலையாட்ட.. ” அப்ப நீங்க என்ன இப்பதான் நடப்பழகற குட்டிபாப்பானு சொல்லவறீங்களா?.. “
சிரிப்புடன் ‘ ஆம், இல்லை ‘ என இருவரும் தலையாட்ட.. அவர்களை முறைத்துவிட்டு.. ” போங்க எனக்கு இன்னொரு கப் பருத்திப்பால் கொண்டு வாங்க. ” ஈஸ்வர் தலையாட்டி சிரிப்புடன் சென்று கொண்டு வந்தார்.
இவர்கள் பேசும் காட்சியை அவர்களின் பின்னால் சற்று தள்ளியிருந்து ஈஸ்வரனின் மனைவி, மாமனார், மாமியார், தங்கை, தம்பி பார்த்திருந்தார்கள். பேசுவது கேட்க வாய்ப்பில்லை. ஆனால் சிரிப்பு மட்டுமே அவர்களுக்கு தெரிய.. அதுவே அவர்களுக்கு சற்றும் பிடிக்காத நிலை.
ஈஸ்வரின் மாமா சுந்தரம் ” என்ன காவ்யா இது. மாப்பிள்ளைக்கு அந்த பொண்ணு மரியாதையே கொடுக்காம பேசுது. அவர் நிக்குறாரு.. இவங்க உட்கார்ந்து இருங்காங்க. என்னமோ அந்த பொண்ணு கேட்டதுக்கு.. அவரே வந்து கொடுத்துட்டு போறாரு. ”
” அப்பா எழிலரசி மரியாதை தெரிந்த பெண்தான் ப்பா. யார் எப்படினு?. அவருக்கு தெரியும். நானே அவர் இவ்வளவு ஜாலியா சிரித்து பேசுவாரானு பார்க்கிறேன். எழிலரசிகிட்ட பேசுறப்ப நம்ம பாப்பாட்ட பேசுறா மாதிரி பேசுறாரு. “
” நீ இப்படி இருந்தா அவ்வளவுதான். அவர் உன் மகளிடம் பேசுவது போல பேசட்டும் நமக்கு என்ன?.. மாப்பிள்ள நினைத்துயிருந்தா இந்நேரம் உன் தங்கச்சி.. அந்த வீட்டிற்கு மருமகளா போய்யிருக்கலாம். அந்த வேந்தன் தம்பி.. உறவுமுறையில் முடியாது சொன்னாதா சொல்லுற. வெளியில் இருந்து வந்த அந்த பொண்ண பாரு.. எப்படி வந்துயிருக்கா. நீ எப்படி வந்துயிருக்க. இந்த கடை இன்னும்.. ஒன்னாதான் இருக்கு. அதனால நீ முத்த மருமகளா பார்த்து இருந்துக்கோ. ”
” என்னம்மா… வேந்தன் தம்பி ஆரம்பிக்கும் கடைக்கு.. இப்ப பூமிபூஜை நடக்க போகுது. அதனால எழில் நல்லா வந்துயிருக்காங்க. நான் எதுக்கு வரனும். “
” ம்.. நீ எதுக்கு வரனும்?. உன் புருஷன் தனியா ஆரம்பித்தா வரலாம். ஆனா இன்னும் அவங்களுக்கு கல்யாணமே ஆகல. அந்த தம்பியும் இந்த கடையில் இருந்துக் கொண்டே அதுக்குனு தனியா ஆரம்பிக்க போகுது. ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆகி 10 வருடம் ஆகபோகுது.. நீ இனிமே தான் நீ கவனமா இருக்கனும். வரவு செலவு கணக்கெல்லாம் நீயும் அப்பப்ப தெரிஞ்சுக்கோ.. அதான் உங்களுக்கு நல்லது. நகையா அடிக்கடி வாங்கி வைச்சுகோ. அந்த பொண்ணு போட்டுயிருந்த பார்த்தில.. இரண்டுபேரும் வெளிய போனா முதல்ல பார்ப்பது.. சேலையும், நகையும் தான்.. அடுத்துதான் மற்றதெல்லாம். ”
” ம்.. சரிம்மா அதை நான் பார்த்துக்கிறேன். ஆனா எழிலரசி பத்தி வெளிய யார்க்கிட்டையும் சும்மா பேச்சுக்கு கூட புலம்பாத. அப்புறம் வேந்தன் தம்பி என்ன பண்ணுவாருனே தெரியாது?.. உங்க மாப்பிள்ள கூட உங்களுக்கு சப்போட்டுக்கு வரமாட்டார். இவங்களிடம் எல்லாம் வாயால சொல்லி புலம்பாம.. செயல்தான் செய்யனும் ம்மா. எல்லாத்துக்கும் தான் சொல்லுறேன். பார்த்து கவனமா பேசுங்க. ” சரி என்ற தலைசைப்புடன் அவர்கள் கடையின் வெளியே வந்தார்கள்.