சூரியன் அனைவரையும் புத்துணர்வுடன் இந்நாளை தொடங்குங்கள்!.. என வாழ்த்தி!.. தானும் தன் பணியை தொடங்கிய அந்நேரத்தில் தங்களின் எதிர்கால முன்னேற்றத்தின் முதல்படியாக இவ்வூரில் தான் வாங்கிய.. தன் முயல்குட்டிக்காக ஆரம்பிக்க போகும் ஸ்விட் கடையின் பூமிபூஜை நடைபெற உள்ள இடத்தில் வேந்தன் தன் அரசியுடன் காலடி எடுத்து வைத்தான். சில அடிகள் வந்த பின்தான் அவ்விடத்தின் அளவை கவனித்தான்.
தன்னவனின் உழைப்பை பார்த்து ரசித்தவாறே தனுவை பார்க்க.. அவன் முகம் ஏதோ சிந்தனையில் இருப்பது போல தெரிய.. ” தனு ” பதில் இல்லை.. ” தனு.. ”
” என்ன அரசி?.. ” அவன் கண்களில் குழப்பம் தெரிய.. ” என்னாச்சு?.. ஏன் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு?.. ”
” எனக்கு சில விஷயம் புரியல?.. ஆனா பிரச்சனை இல்ல முயல்குட்டி. ம்.. இந்த இடம் எப்படி இருக்கு?.. ” கையை அழுத்தமாக பற்றி கேட்க.
தன்னவனின் முகத்தில் வந்த தெளிவில்.. ” ம் நல்லாயிருக்கு. ஆனா நீங்க சொன்ன அளவை விட அதிகமா இருக்க மாதிரி இருக்கு.? “
புன்னகையுடன்.. ” ம்.. எனக்கும் அதான் புரியல. சரி இதை பின்ன பேசலாம். ” அவள் தலையசைப்புடன்.. அவர்கள் தங்கள் பெற்றோர்களை நோக்கிச் செல்ல..
‘ அங்குயிருந்த அனைவரும்.. இருவரையும் பார்த்தால் இவர்களுக்கு கல்யாணம் ஆகவில்லை என்று கூறினால் நம்பவே மாட்டார்கள் என்று நினைக்கும் வகையில் இருவரில் அரசியின் சேலைக்கு பொருத்தமான பச்சை நிறச் சட்டையும், தங்க நிறத்தில் பாடர்வைத்த வேஷ்டியும் அணிந்து.. கணவன், மனைவிக்கான முகலட்சணத்துடன் புன்னகை முகமாக வந்துக் கொண்டுயிருந்தார்கள். ‘
இருவரும் தன் பெற்றோர்கள் நடுவில் போய் நிற்க.. மற்றவர்கள் அங்கு இருந்த சேர்களில் அமர்ந்தனர். வேந்தன் பூஜைக்கு வந்தவர்களில் ஹோட்டலில் பார்க்கதவர்களை பார்த்து புன்னகைத்தான்.. ” அப்பா பூஜை ஆரம்பிக்க நேரம் ஆகுமா?.. “
” எல்லாம் ரெடியா இருக்கு வேந்தா. கணேஷ் மாமா 10நிமிடத்தில் வந்து விடுவாங்களாம். வந்தவுடன் ஆரம்பிக்க வேண்டியதுதான். ” சரி என்ற தலையசைப்புடன்.. ” அப்பா நான் வினோ அத்த, மாமாவுடன் பேசிட்டு வரேன். ”
” சரிப்பா.. நீ எழில கூப்பிட்டுபோய் பேசிட்டு வா. ”
” ம்.. ” வேந்தன் அரசியின் பெற்றோரிடம் கூறி.. வினோவிடம் சென்று.. அவள் அத்தை மாமாவிடம் தன்னவளை அறிமுகம் செய்து வைத்து.. பின் அனைவரும் பேசிக் கொண்டுயிருக்க..
” என்ன மச்சான் எப்படி இருக்கீங்க?. உறுதி முடிந்து சென்னை போனவுடன் பேசியது. ஒருமாதம் ரொம்ப வேகமா போயிடுச்சு. “
என்ன வேகமாவா?.. ” ம்.. ரொம்ப வேகமாதான் போச்சு மாமா. ” அவன் அரசியை பார்த்தான். அவள் வினோ, அருகில் இருந்த இருவரின் அக்காவுடன் பேசிக் கொண்டுயிருந்தாள்.
” எழில் நீயும் சித்தியும் ஒரே மாதிரி பூ வைத்துயிருக்கீங்க?. அழகாக இருக்கு. யாருக்கு?. யார் வாங்கி கொடுத்தா?..”
” இது காலையில் தனு வாங்கிட்டு வந்தது அண்ணி. அவர் எங்க வாங்கினார்னு தெரியல?.. அவரிடமே கேளுங்க. ”
” என்ன காலையில் வேந்தன் வாங்கிட்டு வந்தனா?.. “
” என்ன அக்கா காலையில் வாங்கிட்டு வந்த கேட்டே இப்படி ஆச்சரியப்படுறிங்க!.. ஒரு விஷயம் தெரியாமா?.. எழிலரசிக்கு கடந்த ஒருமாதமா வேந்தன் அண்ணாதான்.. இரண்டு வேளையும் பூ சப்ளை பண்ணுவது. இவ அதை யாருக்கும் கொடுக்க மாட்டா. ” சுரபி கூறியதை கேட்டு யோக.. எழிலரசியை பார்க்க.. அவள் ‘ ஆம் ‘ என புன்னகைக்க.
அவளின் வெக்கம் பார்த்து ரசித்து.. புன்னகையுடன்.. ” ஓ.. தம்பி இந்த வேலையெல்லாம் பண்ணுறானா?.. கூப்பிடு அவன. இன்னும் என்ன பண்ணுறான் தெரிஞ்சுக்களாம். “
அவளும் புன்னகையுடன் தன்னவனை பார்க்க.. மாமா, அத்தையுடன் பேசிக் கொண்டே தன்னை பார்க்க திரும்பியவனை.. கண்களால் ‘ வாங்க ‘ என அழைக்க.. மாமாவிடம் கூறி அரசியிடம் வந்தான்.
மற்றவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை.. வரும்போதே கண்ணாலே!. தன்னவளிடம் ‘ எதுக்கு கூப்பிட்ட?.. ‘ என கேட்டவாறு வர.. அவள் அருகில் வந்தவுடன்.. ” டேய்.. நான் தான் கூப்பிட்டேன். வரவர நாங்க உன் கண்ணுக்கே தெரிய மாட்டோங்கிறோம். “
” பொறாமைபடாதிங்க அக்கா. அரசி கூப்பிட்டதினால.. அவள பார்த்துடே வந்தேன்.. ” இல்லைனாலும் பார்ப்படா.. என அவன் மனசாட்சி கூற.. புன்னகையுடன்.. ” சரி சொல்லுங்க.. எதுக்கு என்னைய கூப்பிட்டிங்க?. “
” உனக்கும் எழிலரசிக்கும் இடையில்.. இன்னும் எங்களுக்கு தெரியாமல் என்னவெல்லாம் மறைத்து வைத்துயிருக்க?.. ” யோக சற்று முகத்தை கடினமாக வைத்து கேட்க.
‘ என்ன?.. நால்வரில் யாரேனும் உளறிவிட்டனரா.. என்று அரசியை பார்க்க.. அவள் முகத்தில் மெல்லிய புன்னகை தவழ.. அதுஇல்லையா?. மற்றவர்களை பார்க்க.. அவர்கள் புன்னகைக்க.. ஓ.. இது வேறு ஏதோ?. என நிம்மதிக் கொண்டான். ‘
புன்னகையுடன்.. ” நிறைய இருக்கு க்கா. எதை சொல்வது ?. எதை விட. அதனால உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க?.. “
நிறையவா?.!.. ” ம்.. இப்போதைக்கு ஒன்னு தான் தெரிந்துயிருக்கு. சரி சொல்லு.. எழில் வைத்துயிருக்கும் பூ எங்க வாங்கின?.. அழகாக இருக்கு. எங்க எல்லோருக்கும் வளைகாப்பு, நிச்சியத்திற்கு வைக்க.. மாமாவ சொல்லி வாங்கிட்டு வரச்சொல்லனும். “
புன்னகையுடன்.. ” வேந்தன் பூ கடை க்கா. ”
” அது எங்கடா இருக்கு?.. ”
சிரிப்புடன்.. ” அது இங்கயிருந்து அரைகிலோமீட்டரில் ஒரு விநாயகர்கோவில் வரும்.. அதுக்கு வலது பக்கத்தில் போய்.. இரண்டாவது தெருவில் திருப்பி.. மூணாவது வீட்டில இருக்கு. ”
வேந்தன் கூறியதை கேட்டுக்கொண்டே.. அந்த இடத்தை மனதில் அந்த வழியில் சென்று அவர்கள் நின்ற இடம்.. ” டேய் என்ன டா?.. உங்க வீடு இருக்க இடத்தை சொல்லுற?.. அங்க எங்கடா இருக்கு வேந்தா.. வேந்தன் பூக்கடை?.. ” கூறியவாறு அவனை பார்க்க.. சிரிப்பை உதித்துக் கொண்டுயிருக்க.. ” டேய்.. நீ என்ன சொல்ல வர?. “
” அக்கா இந்த பூவ.. வீட்டில் இருந்த ரோஜா இதழுடன் மல்லியும் வைத்து.. நான் கோர்த்த பூ அக்கா. ”
‘ கேட்ட அனைவரும் ஆச்சரியத்துடன் அவனை பார்க்க.. அவனின் அரசிக்கு இன்னும் கூடுதலான அதிர்ச்சி!. உறுதியன்று வெளியில் வாங்கிய பூவை வைத்து தன்னை அலங்கரித்தான்.. ஆனால் இன்று.. தனக்காக அதிகாலை வந்தவுடன் செய்து இருக்கிறான். ‘
‘ தனுமாமா!.. செல்லமாக கொஞ்சியபடி அவனை கண்களால் அவன் கன்னத்தையும், இதழையும் பார்க்க.. அவள் பார்வைய உணர்ந்தவன்.. அவளை முறைக்க.. அரசியோ.. சிரிப்பை கட்டுப்படுத்தி சுற்றுபுறம் பார்க்க ஆரம்பித்தால். பின் அவன் தான் வெக்கத்துடன் திருப்ப வேண்டியதாயிற்று.. இவர்களை பார்த்த அவனின் நண்பர்கள், இளையவர்கள்.. மீண்டும் நினைத்தார்கள்.. அப்படியே உல்டாவா நடக்குது. ‘
நொடியில் தன்னை சமாளித்தவன்.. ” அக்கா வீட்டல இன்னும் நிறைய பூ இருக்கு க்கா. நீங்க கோர்த்துக்கோங்க. ”
” ஏன்டா நீ எங்களுக்காக கோர்த்து தரமாட்டியா?.. “
” அக்கா.. ” கூற தொடங்க.. எழிலரசியின் தோழி சத்யா.. ” அண்ணா இருங்க.. அதுக்கான பதில நான் சொல்றேன் ” அங்கு இருப்பவர்களை பார்த்து..
” அண்ணா அவர் மனைவிக்கும் மட்டும் தான் பண்ணி தருவார்.. உங்களுக்கு வேண்டும் என்றால்.. உங்க கணவரிடம் தான் போய்தான் கேட்கனும். இதில் அம்மா மட்டும் ஸ்பெசல்!. அப்படிதானே சொல்ல வந்தீங்க அண்ணா. “
புன்னகையுடன்.. ” பரவாயில்லையே நல்லா ஞாபகம் வைத்துயிருக்க சத்யா. ” அருகில் இருந்தவனின் முகம் பிரகாஷமாக!.. அதை பார்த்தவன் அவனிடம் மெல்லிய குரலில்.. ” டேய்.. நீயும் வாங்கிக் கொடுக்க.. சம்மதம் வாங்கிட்ட போல. “ கேட்க.. அவன் புன்னகையுடன் ‘ ஆம் ‘ என தலையசைத்தான்.
ஆம்!.. திலகன்– சத்யா(தியா) ஜோடியின் காதல் 15நாட்களுக்கு முன்பிருந்து இனிதே ஆரம்பம் ஆனது.
வேந்தன் கூறியபின் அவரவர் தங்கள் கணவர்களை ‘ பார்க்க.. ம் இவங்க எப்ப கட்டி?.. நாங்க எப்ப வைக்க?.. ‘ கல்யாணத்திற்கு இவங்களை பார்த்துக் கொள்கிறோம்.
” சரி வேந்தா.. அப்புறம் என்ன விஷயம்?.. ஏன் இன்னும் பூஜை ஆரம்பிக்கல?.. ” இவ்வளவு நேரம் ஒன்றும் கேட்காது போல.. மற்றொரு கேள்வி கேட்க..
” அக்கா என்னமோ கேட்கிங்க?.. ” அவர் யோசனை செய்வது போல முகத்தை வைத்து.. ” என்ன கேட்டேன்?.. ம்.. ஏன் இன்னும் பூஜை ஆரம்பிக்கலனு?.. “
அவனும் புன்னகையுடன் ஏதும் கேட்காதது போல.. ” அது கணேஷ் மாமா.. ” அவன் கூற ஆரம்பிக்க..
” ஹாய் நந்தினி அண்ணி!.. வாங்க.. வாங்க.. உங்களுக்காக தான் நாங்க எல்லோரும் காத்துயிருக்கோம். ” வசுந்தரா.. தன் தாய்மாமா மகள் நந்தினியை சிறிது அணைத்து.. அவளை வரவேற்றாள்.
‘ எப்போதும் வாய் ஓய்யாமல் வாயடிக்கும் வசுந்தரா.. அனைவரும் வரும்போதும் இருந்த இடம் தெரியாமல் இருந்தவள்.. இருவரும் வரும் போது வசுவிற்கு போன்கால் வர.. அண்ணாவோடு சேர்த்து எழிலரசியிடமும் நார்மலான புன்னகை புரிந்து.. போனில் பேசியிருக்க.. பின் யாருடனும் பேசாமல் இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள்.. தீடிர் என்று சற்று உயர் குரலில் கமலேஷ் வந்த காரணத்தினால.. இல்லை தான் இங்குதான் இருக்கிறேன் அண்ணனும்.. வேறு யாரும் தன்னை இவ்வளவு நேரம் கவனிக்கவில்லை.. பேச அழைக்கவில்லை என்ற காரணத்தினாளா?. தெரியவில்லை.. ‘
‘ சாருலதாவை விட நந்தினியின் குணமும், இவளின் குணமும் ஒன்றாக இருக்கும். அதனால் நந்தினியை.. அவளின் செயல்கள் பிடித்து அதன் வழியில் சில சமயம் செல்லக்கூடியவள். பள்ளி பருவத்தில்.. தன் அண்ணாவிற்கு மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாள். அண்ணாவின் மறுப்பு சுத்தமாக பிடிக்கவில்லை. ஏன் அண்ணாவிற்கு இவங்களை பிடிக்கவில்லை. அழகு, திறமை, படிப்பு இருவருக்கும் சமமாக இருக்கிறது. பிறகு ஏன்?.. நினைத்தவள்.. அதன் பிறகு அவரவர் படிப்பு, வேலை என்று செல்ல.. அதை மறந்துவிட்டாள். ‘
‘ ஆரம்பத்தில் இவள் எழிலரசியின் மீது அன்பாக இருந்தவள்.. இவளின் குணம் சுத்தமாக எழிலரசியுடன் ஒத்து வாராதிலும், அண்ணா தன்னுடன் உறுதிக்கு பின் அதை பற்றி வருந்தமோ!.. வருந்தாதே!. என்று விளக்கம் கூறாததில் இருந்தே.. மீண்டும் உறுதியன்று போல் தான் இனி நடந்துக்கொண்டால்.. அண்ணா தன் மேல் கோபம் கொள்ள வாய்ப்பு அதிகம் உள்ளது.. என்பதை இந்த ஒருமாதத்தில் உணர்ந்து புரிந்துக் கொண்டாள். அதனால் இப்போது யாரிடம் பேசாமல் சற்று அமைதியாதாக இருந்தாள். இப்போது அவளின் விருப்பமானவள் வந்தவுடன்.. தன் கட்டுக்குள் வைத்திருந்த அமைதியை தூரத்தி.. தன் உண்மையான குணத்திற்கு வந்து நந்தினியை வரவேற்றாள். ‘
‘ நந்தினி.. சராசரி உயரத்தில், நல்ல நிறமாக அதிலும் அவர் உடுத்தி வந்த இளம் மற்றும் அடர்ரோஜாவண்ண சில்க் டிசைனர் சுடிதார்.. அவளின் நிறத்தையும்.. மெல்லிய ஒப்பனை அழகையும், அவள் பெங்களூரில் பார்க்கும் வேலை சற்று அவளின் கவர்வத்தை கூட்ட.. பார்த்தவுடன் யார்டா இந்தபெண்?.. கேட்கும் அளவிற்கு இருந்தாள். ‘
‘ வரவேற்கப்பட்டவளும் ஏதோ பெருமையுடன் அதனை ஏற்றுக் கொண்டு.. யாரையும் பார்க்காமல் வசுந்தராவுடன் தன் மாமா, அத்தையிடம் சென்றாள். அவளுடன் வந்த கணேஷ், சுமதியும் தன் மகளுடன் செல்ல.. கமலேஷ், சாருலதா இளையவர்களுடன் இணைந்தார்கள். ‘
‘ வசுந்தரா அண்ணி என்று நந்தினியை அழைத்ததும்.. அவள் கமலேஷ் தங்கை என்ற முறையில் எப்போதும் அழைப்பதுதான்.. ஆனால் இவ்வளவு சத்தம் தேவையில்லை.. அதுவும் அவள் எழிலரசியை அண்ணி என்று அழைத்தாக தெரியவில்லை. அதனால் மற்றவர்களில் வேந்தன் வீட்டினர் ஏன் இவ இப்படி?.. என்று நினைத்து.. அவர்கள் எழிலரசியை பார்க்க.. அவள் இதை கவனித்தார்போல் தெரியவில்லை. வேந்தன், கமலேஷ், சாருவோடு பேசிக் கொண்டு இருந்தாள். ‘
‘ எழிலரசியும் நந்தினியை யார் இவர் என்று? கவனித்தால் தான். ஆனால் எழிலரசியை பொருத்தவரை தெரியாத பெண்.. தன்னவனின் தங்கை மிகவும் சந்தோஷத்துடன் வரவேற்றார். அதனால் வந்த கேள்வி?.. பின்தான் கவனித்தால்.. நந்தினி மட்டும் முன்னால் வர.. சில நொடிக்கு பிறகுதான்.. பின்னால் நால்வர.. சரி சாருவின் அக்கா என்று கணேஷ் முகசாடையை வைத்து புரிந்துக்கொண்டாள். ‘
பின் தன்னவனுடன் பேச ஆரம்பிக்க.. அப்போது அக்கா.. என வந்த சாரு இவர்களுடன் இணைந்துக் கொண்டாள். ” அக்கா ஏன் நடுவில் ஒரு தடவ தான் எனக்கு கால் பண்ணிங்க.. அதன் பிறகு பண்ணல?… “
புன்னகையுடன்.. ” அது சாரு, அப்பா, அண்ணாவுடன் கடைக்கு, மில் இப்ப முழுநாளும் போறேனா.. அதான் நேரம் சரியா இருக்கு. இனி கண்டிப்பா வாரம் ஒருமுறை பண்ணுறேன். ஒகேயா. ” எனக்கூற.. அதனை ஏற்றும்.. ஏற்காமல்.. இருந்தவள்.. அருகில் இருந்த வேந்தன் இருப்பதால்.. எழிலரசியை கிண்டல் செய்யும் பொருட்டு..
” ஓ.. மாமாவுடன் பேசவே நேரம் சரியா இருந்ததோ?..” எனக் கேட்டபின் வேந்தனை திடுக்கிட்டு உணர்ந்தாள் எழிலரசி. அரசி சாருவிடம் சொன்ன செய்தி வேந்தனிற்கு புதியது. அவளை கூர்மையாக பார்க்க.. அவளோ தன்னவனை பார்க்கவில்லை.
‘ எழிலரசி கடந்த சில நாட்களாக வேந்தனின் வழியை பின்பற்ற ஆரம்பித்தாள். அவன் ஞாபகம் வராமலிருக்க இந்த இருவாரங்கள்.. ஏதாவது வேலை செய்துக் கொண்டுயிருந்தாள். அப்போதுதான் இரவில் உடனே தூங்க முடிந்தது. ஆனால் சற்று உடல் இளைத்து விட்டாள். அதனை அவளின் தனு.. கண்டுபிடித்த பின்.. வேகமாக பேச்சை மாற்றிவிட்டாள். ‘
‘ அவன் சென்னை கிளம்புபோது அதிகம் சொன்ன வார்த்தை.. நல்லா சாப்பிடு, தூங்கு, உடல் எடை முன்புபோல் இல்லாவிட்டாலும்.. கல்யாணத்திற்கு முன் சற்று எடை கூடியிருக்க வேண்டும் என ரகசியமாக பலமுறை கூறிவிட்டான். நான் இவ்வாறு செய்தேன் என்று தெரிந்தால் அவ்வளவு தான் என்று பேச்சை மாற்றியிருந்தவள்.. இப்போது அனைவரும் இதுபோல வந்ததில் இருந்து கேட்டதால்.. தன்னவன் தன் அருகில் இல்லை என்பதால் கூறிக் கொண்டுயிருந்தாள்.. அதேபோல சாரு கேட்டவுடன் மறந்து கூறிவிட பின் அவள் மாமா என வேந்தனை காண்பிக்கவும் தான் உணர்ந்தாள். அவனை பார்க்கவில்லை.. பயம் தான். ‘
‘ அவன் காலையில் தான் தன் அருகில் வலியின் போது.. வேண்டும்!. என்று நான் கூறியதற்கே.. தன் மேலேயே கோபம் கொண்டவன்.. நீ பக்கத்தில் இல்லை என்பதால் தான் என்று.. என் கண்!.. அவனிடம் காட்டிக் கொடுத்துவிடும். பின் மீண்டும் வருந்துவான். அதனால் பார்க்கவில்லை. ‘
வேந்தன் அவளின் எண்ணம் அனைத்தும் புரிந்துக் கொண்டு.. அவளிடம் மெதுவாக.. ” முயல்குட்டி.. நான் வருத்தப்பட மாட்டேன். நீ வெய்ட் குறைந்தத நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்டி. ஏன்னா?.. முன்னவிட இப்ப.. இன்னும் இறுக்கமா என் முயல்குட்டிய தூக்கிட்டு போவேன். அதைவிட உன் இடுப்பு இப்ப.. என் ஒரு கைக்குள்ளவே இன்னும் நல்லாவே அடங்குதா.. அது இன்னும் வசதியா இருக்கு. அதனால இதே வெய்ட்யே மெய்டன் பண்ணு. இன்னும் சில மாதத்திற்கு பிறகு நம்ம இரண்டு குட்டிகள் வந்தா.. நீ தானா உடல் எடை கூடி விடுவ. அதனால இப்ப தனுமாமா பார்ப்பியாம். ” என மெல்லிய புன்னகையுடன் கூறி நிமிர்ந்து அவளை பார்க்க..
‘ அவளால் முடிந்தால் தானே.. அவளிற்கு காலையில் தன்னவனின் இருகைகளும் தனித்தனியாக செய்த செயல்களையும்.. முன்னைய விட இன்று.. அவனின் இறுக்கமான அணைப்புடன் தூக்கி வந்தது.. பின் குழந்தைகள் என கூறிய பின்.. உடம்பில் தலைமுதல் காலைவரை மின்சாரம் தாக்கிய உணர்வில் சிவந்து.. அதனுடன் அங்கு ஓளி வீசிய சூரியகதிர் பட்டு இன்னும் மின்னினாள்.. ‘
திரும்பமாலேயே நின்ற தன்னவளின் உடல்பொலிவை பார்த்ததும்.. ஒருநொடி சுற்றுபுறம் மறந்து.. அவளை பார்த்திருந்தவன்.. தன்னவளை அணைக்க தோன்றிய கையை மிகவும் கடினப்பட்டு அடக்கி.. எங்கே பக்கத்தில் இருந்தால் கையை பிடித்துவிடுவேன். ஆனால் அது நன்றாக இருக்காது என உணர்ந்து.. ” இதோ வரேன் ” பொதுவாக கூறி.. தன் தந்தையை நோக்கி சென்றான்.
‘ டேய் வேந்தா தப்பித்துவிட்ட.. இப்படியா சிவந்துநிப்பா!.. அய்யோ என் முயல்குட்டியின் கன்னம் அப்படியே கடிக்க வேண்டும் போல இருந்ததே.. இன்னைக்குனு பார்த்து என் கண்ணு.. அவ இடைய பார்க்கனும்மா. அடர்ரோஜாநிற பாடருக்கு உடல் சிலிர்த்து இருந்தது.. அப்படியே தெளிவா தெரிந்தே.. நீ ரொம்ப கெட்ட பையன் ஆகிட்ட.. இனிமே நீ மகனே முகம் மட்டும் தான் பார்க்கவேண்டும். அதுதான் உனக்கு நல்லது. தன்னை நினைத்தபடியே.. ‘
யாரையும் பொருட்படுத்தாமல் “பூஜை ஆரம்பிக்கலாம் தானே?. ” அப்பாவிடம் கேட்டவன்.. அவர் தலையசைத்தவுடன்.. தன்னவளை வாய் அசைவில் ‘ வா முயல்குட்டி ‘ அழைக்க.. அவன் சென்றவுடன் அவனையே பார்த்திருந்தவள்.. தனு அழைத்தவுடன் மற்றவர்களிடம் பூஜை ஆரம்பிக்கபோகிறது ” வாங்க ” என அழைப்பு விடுத்து திருப்பியவள்..
‘ இப்பொது ஒருநொடி அவள் அதிர்ந்தாள். ஏனெனில் வா என்று அழைத்தவுடன் வராமல்.. பூஜைக்கு வந்தவர்களை வாங்க!.. என மீண்டும் அழைப்பு விடுத்து தனக்கு அனைவர் முன்பும் மரியாதை செய்தவளை.. தனியாக வரவைப்பாதா என எண்ணியும்.. அவளை கை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் நிறைவேற்ற.. அவளை கைபிடித்து அழைத்து வந்து.. பூஜை செய்யும் இடத்திற்கு பக்கத்தில் அவளை தன் அருகில் நிறுத்திக் கொண்டான். மனையின் உரிமையாளராய் தம்பதிகளாய் வேந்தன்,எழிலரசி நின்றார்கள். அனைவரும் அதனை மகிழ்வுடன் ஏற்றும் கொண்டனர். ‘
‘ ஆனால் அவனின் செயல்களை சற்றும் எதிர்பார்க்கதவர்கள் மூவர் கணேஷ், நந்தினி, வசு.
வேந்தன் வசுவை நேரடியாகவே ஒரு முறைப்பு பார்வை பார்த்தான்.. யாருக்காக நாங்க இவ்வளவு நேரமும் காத்துயிருந்தோம் என கூறினோம்.. நீ அதை கேட்ட.. பின் அவளிடம் நீ கூறினாய். என் அரசிக்காக நான் ஆரம்பிப்பது என்று உனக்கு தெரியும். அப்படியிருக்க இவளிற்காக நாங்க எதற்காக?. அதிலும் அண்ணி என்ற அழைப்புடன் காத்துயிருந்து இருக்கிறோம் என கூறியது அவனால் அதை ஏற்க முடியாமலும், கூடவே அவளுடன் இருப்பதால் வசுவை முறைத்து பார்த்தான். ‘
‘ பின் கணேஷ் மாமாவை வாங்க என்று அவன் அழைக்கவில்லை. இந்த பூஜை யாருக்காக செய்கிறார்கள் என்று.. அவருக்கு தெரியும். ஒருவாரம் முன்.. முக்கியமாவர்களை தனித்தனியாக போனில் அழைத்துயிருந்தான். வந்தது மிக தாமதம். வந்தவுடன் அப்பாவிடம் சென்று பேசியவர்.. தன்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் சிறு வார்த்தை கூட தன்னை எதுவும் கேட்கவில்லை என்பது.. அப்பா தன்னை அழைக்காதில் இருந்தே தெரிய.. சரி அவருக்கு தன்னிடம் பேச விருப்பம் இல்லை போல என நினைத்து.. அப்பா அவரை கவனித்துக் கொள்வார் என கண்டுக் கொள்ளவில்லை. ‘
அவர் மகளோ இவனை வேந்தனா இது!. என்று இவனை பார்த்துயிருந்தாள். அருகில்இருந்தவளிடம்.. ” வசு.. இது உன் அண்ணன் வேந்தன் தானா. இல்ல வேறு யாரோவா?.. ” வசு ஏன்?.. என்பது போல அவளை பார்க்க..
” இல்ல நான் கடைசியா பார்த்த வரைக்கும்.. லைட் கலரில் டீஷர்ட், ஜீன்ஸ் போட்டு, டீரிம் பண்ணதாடியோட.. எப்ப பார்த்தாலும் கடை, இல்லனா வீட்டு ரூம்மில் தானே இருப்பாரு. இப்ப அப்படியே ஆப்போசிட்டா செம்ம பிரைட்கலர் டிரஸ், தாடியொல்லாம் இப்போதைத்து வைத்த மாதிரியே தெரியல.. பார்க்கவே ஆள் செம்மையா இருக்காரு. ” அவள் அடுத்து கூறவரும் முன்..
” அண்ணி இதுக்கு மேல எதுவும் அண்ணா பார்த்தோ!. இல்ல அவரை பற்றியோ பேசாதிங்க. நீங்க சொன்னதில் ஒரு வார்த்தை என் அண்ணாவோ.. எழில் அண்ணியோ கேட்காங்க. அவ்வளவுதான். எழிலரசி மட்டும் தான் என்னை பார்க்கனும். நீ ஏன் பார்க்கிற?.. நான் எப்படி இருந்தா உனக்கு என்ன?. என்று கேட்டு விடுவாங்க. இல்ல அண்ணா உங்கள காண்பித்து.. ஒரு பார்வை பார்த்தாலே போதும்.. அவங்க கேட்காட்டியும் எங்க அப்பாவே அண்ணா சார்பா உங்களிடம் கேட்பார். எழில் அண்ணிய எங்க அண்ணாவிற்கு ரொம்ப பிடிக்கும். அவங்களுக்காக தான் இவர் இப்படி இருக்கார். “
‘ நந்தினி வசுவிடம் ஒன்றும் கூறாமல் எழிலரசியை அப்படி என்ன அந்த பெண்ணிடம் இருக்கிறது?.. என்று பார்த்தாள். தன்னைவிட சிறிய பெண்.. தன்னை போல் கலர் இல்லையென்றாலும்.. பார்த்தவுடன் அனைவரையும் கவரும் முகம்.. அதிலும் வேந்தன் அருகில் இன்னும் கூடுதல் அழகில் இருந்தாள். அது இன்னும் அவள் முகம் எடுப்பாக காட்டியது. இன்றைய உடை, நகை.. அதில் புன்னகையும் சோர்த்து அழகு பாவையாக தான் இருந்தாள். ஆனால் தன் அளவிற்கு இல்லை என்ற எண்ணம் இருந்தது. அதைவிட வேறு ஒன்றும் இருந்தது. ஆனால் அதை நினைக்கக்கூட விரும்பவில்லை. அது தன் தன்மானம் சார்ந்தது என விட்டு விட்டு.. அதன் பிறகு வசுவிடம் பேசாமல் அங்கு நடப்பதை பார்க்க ஆரம்பித்தாள். ‘
‘ இன்பா வேந்தனின் அப்பா ரவிந்தரனிடம் ரிப்பன் சுற்றப்பட்டு இருந்த இரண்டு பொருளை கொடுத்தான். பின் அதில் ஒன்றை வேந்தனின் பெற்றோரும், மற்றொன்றை எழிலரசின் பெற்றோரும் பிடித்துயிருந்தனர். ‘
” வேந்தா, எழிலரசி இங்க பக்கத்தில் வாங்க. ” அவர்களை அழைத்தவர்கள் அருகில் வந்தவுடன்..
” இத திறங்க.. ” அவர்கள் கையில் இருந்ததை இருவரிடமும் தனித்தனியாக கொடுக்க.. அதனை வாங்கி பிரித்தனர்.
‘ முதலில் அரசி பிரிக்க.. அதில் எழில்வேந்தன் இனிப்பகம் என்றும்.. அடுத்து வேந்தன் பிரிக்க.. அதில் அன்னபூரணி மசாலா மற்றும் உணவுப்பொருட்கள் என்ற பெயர்பலகை இருந்தது. ‘
வேந்தன் தான் செய்ய சொன்ன பெயர்பலகை.. தன் முயல்குட்டி கையில் இருப்பதை ஆசையுடன் பார்த்தவன்.. தன் கையில் இருப்பதில் ஒன்றும் புரியவில்லை.
” அப்பா உணவுப்பொருட்கள் கடை அடுத்த வருடம் தானே ஆரம்பிப்பதா இருந்தது. இப்ப எதுக்கு இத கொடுக்கிறிங்க?. ”
‘ பூமி பூஜைக்கு வந்தவர்களில் சிலருக்கு ஸ்விட் கடை பெயர் இதுவாக தான் இருக்கும்.. ஆனால் ஏன் இப்போதே பெயர் வைத்து.. பூஜை என்று தெரியவில்லை?.. அதற்கு மேல் மற்றொரு கடை.. அதுபற்றி வேந்தனுக்கே தெரியாதா என்று!.. நடப்பதை அனைத்தும் என்னவென்று ஆர்வமாக பார்த்தார்கள். ‘
” நீ சொல்லியிருக்க வேந்தா.. கல்யாண விஷயத்தில் நாங்க சொல்வதை கேட்பதா. ” ஆமாம் என தலையாட்டியவன்.. ” அதனால் தான் நாங்க சொல்லி.. இப்ப நீ பார்க்கும் வேலைய கூட ரிசைன் பண்ணிட்ட.. பண்ணிட்டதானே?.. ”
‘ ஆம் என வேந்தன் தலையசைத்தான். ‘
‘ ஒருசிலரை தவிர மற்றவர்கள்.. அதிர்ச்சியுடன் நிஜமா!.. என்று வேந்தனை பார்த்து.. பின் எழிலரசிக்கு தெரியுமா?. என்று பார்த்தார்கள். அவள் முகத்தில் ஒன்றும் அறிய முடியவில்லை. ‘
” வேந்தா இதுபற்றி உனக்கு பிறகு தெளிவா சொல்றேன். இங்க பூஜைய முடித்து.. ஃபேக்டரி கட்டும் இடத்தில் போய் பூஜை பண்ண வேண்டும்.. அதனால உங்க கையில் இருப்பதை அங்க வைங்க. பூஜையை ஆரம்பிக்கலாம். ” பூஜை செய்ய வந்தவருக்கும், அனைவருக்கும் பொதுவாக கூறி ஆரம்பிக்கப்பட்டது. உடனே யாரும் எதுவும் கேட்ட முடியாமல்.. நடப்பதை கவனித்தார்கள்.
சில நிமிடத்தில்.. அரசியின் முகம் யோசனையா?.. மகிழ்ச்சியா?.. அதிர்ச்சியா?.. நிலையில் இருக்க.. தன்னவளை பார்த்த வேந்தன் மெதுவாக.. ” முயல்குட்டி ” அவள் திரும்ப.. ” ஐ லவ் யூ முயல்குட்டி. ”
” என்ன?.. ” அவளை முறைத்து.. ” ஐ லவ் யூ முயல்குட்டி!. சொன்னேன். ”
புன்னகையுடன்.. ” தனு இதுதான் சொல்லற இடமா?.. பக்கத்தில் எல்லோரும் இருக்காங்க. யாராவது கேட்டா?.. ”
” ஐ லவ் யூனு உனக்கு மட்டும் தான்டி என்னால சொல்ல முடியும். ” அவனை முறைத்து.. ” இது ஜோக்கா?.. கருத்தா?.. ”
” இரண்டும் இல்லடி முயல்குட்டி.. அன்பு, காதல்.. ”
தலை தேய்த்தவள்.. ” இப்ப என்னை சமாளிக்க.. எதுக்கு இப்படி தேவையில்லாம பேசிட்டுயிருக்கீங்க. நான் நார்மலா தான் இருக்கேன் தனு. அதான் நீங்க எனக்கு ரிசைன் பண்ணப்போறேனு.. மெசேஜ் , வாய்ஸ் மெசேஜ், வீடியோ மெசேஜ் எல்லாம் பண்ணிட்டு.. சொல்லிட்டு தானே பண்ணிங்க. நான் அதுக்கு கவலபடல தனு. நீங்க எதுவும் யோசிக்காம செய்திருக்க மாட்டாங்க. ”
” நீங்க பூஜைய கவனிக்க.. எல்லோரும் நம்மளயே பார்ப்பதுபோல இருக்கு. உங்க கையையும் பிடிக்க முடியலையா.. அதான் என் முகம் ஒருமாதிரி இருக்கு உங்களுக்கும் லவ் யூ தனுமாமா. ” சாதாரணமாக கூறி புன்னகையுடன் நடப்பதை பார்க்க ஆரம்பிக்க..
‘ அவனும் அவளின் பதில் நிம்மதி கொண்டு புன்னகையுடன் பார்க்க ஆரம்பித்தான். ஆனால் இருவரின் மனதிலும் பல கேள்விகள், குழப்பங்கள் இருந்தன. இப்போதைக்கு நடப்பதை கவனிக்க வேண்டுமே என ஒருவரை ஒருவர் சமாதானம் செய்துக் கொண்டனர். வேந்தன் தன்னவளின் கைகளை மென்மையாக பற்றிக் கொண்டான். அவளே கூறிய பின் அமைதியாகவா நிற்பான். ‘
‘ பூமி பூஜைக்கு என்று குறிப்பட்ட இடத்தில் வெட்டப்பட்ட பகுதியின் முன்.. குலதெய்வ படங்கள், விநாயகர், இஷ்ட தெய்வ படங்கள் வைக்கப்பட்டும்.. ஒற்றை படையில் செங்கற்கள் வைத்து.. மஞ்சள், பூக்கள், குங்குமம் கலந்த தண்ணிர் குடங்கள் இருந்தன. பூ, பழங்கள் பூஜைக்கு இருக்கும் பொருட்களை வாழை இலையில் வைக்கப்பட்டு இருந்தன. ‘
‘ தண்ணீர் குடங்களில் உள்ள தண்ணீரை இருவரின் அக்கா, தங்கை, அரசியும் ஊற்ற.. அங்குயிருந்த விளக்குகளில் நெய் ஊற்றி.. அதனை வேந்தனின் தாய், தந்தையின் தாயார்கள், இருவரின் அம்மாக்கள், எழிலரசி ஏற்றினார்கள். பின் தேங்காய் உடைத்து, ரவிந்திரன், அருணாச்சலம், வேந்தன் தீபாராதனை செய்தனர். பின்னர் கட்டிடத்திற்கு தேவையான கற்களை வைத்து பூஜை செய்தனர். ‘
‘ பின் அந்த கற்களை நீரில் தாத்தாக்கள், பெரியப்பாக்கள், மாமாக்கள், அண்ணாக்கள், வேந்தன், எழிலரசி ஆகியோர் எடுத்து வைத்தனர். பின்னர் நவதானியங்களை கல் வைக்கப்பட்ட நீரில் போட்டு.. மீண்டும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜையை நிறைவு செய்தனர். பின் அனைவரையும் சேர்த்து திருஷ்டியும் கழிக்கப்பட்டு.. இந்த இடத்தின் பூமி பூஜையை சிறப்பாக செய்து முடித்து ஒரு இடத்தில் நின்றுயிருக்க. ‘
ரவிந்திரன் அங்கு இருப்பவர்களை பார்த்து.. ” நீங்க எல்லாம் அவங்க அவங்க வண்டில அந்த இடத்திற்கு வந்துடுங்க. ” அனைவரும் சரி என்று கூற.. அவர்களில் ஆண்களில் கணேஷ், வேந்தன் தவிர எல்லோருக்கும் அங்கும்.. இன்று பூஜை என்று தெரிந்திருக்க.. சரி என்று தங்களின் குடும்பத்துடன் அவரவர் வண்டியில் ஏற சென்றார்கள்.
” வேந்தா நீங்க இரண்டு பேரும் திலகன் காரில் வரிங்களா?.. ” நிச்சியத்தை வைத்துக் கொண்டு.. நெடுஞ்சாலையில் பைக்கில் இருவரும் வரவேண்டும்மா?. என நினைத்துக் கேட்க..
” நாங்க பைக்கில் மெதுவா ஒட்டிட்டு வரோம் ப்பா. நீங்க கிளம்புங்க.. எங்க பக்கத்திலே வேண்ணா திலகன் கார் வரட்டும். ” அவனும் அவரின் எண்ணத்தை புரிந்து கூற.. அவரும், சித்ராவும், லட்சுமி, அருணாச்சலம் புன்னகையுடன் காரில் ஃபேக்டரி கட்டப்போகும் இடத்திற்கு கிளம்பினர்.
மீதம் இருந்தவர்களில் வினோத் கார் ஒட்ட.. திலகன் முன்னால் உட்கார.. பெண்கள் சத்யா, தீபிகா, தர்ஷினி அமர்ந்துக் கொண்ட பின் அவர்கள் கிளம்ப.. அவர்களின் சற்று பின்னால் வேந்தனும் எழிலரசியும் பைக்கில் கிளம்பினார்கள்.