நாள் தள்ளி போனதென்று நாணமுடன் சொல்ல
நாடி பார்த்து மருவத்துவச்சி நல்லசெய்தி சொன்னாள்
மூன்றுமாதம் முடியும் வரை மசக்கையில் நாலே
அவள் முன்னும் பின்னும் ஓடிஓடி வாந்தி எடுத்தாள்
நாலு அஞ்சு ஆறு ஏழு மாதம் முடிந்ததும்
அவள் மசக்கை தெளிந்து வயிறும் தெரிந்து நடையும் தளர்ந்தனள்
மேலும் கீழும் மூச்சு வாங்கி மெல்ல நடந்தனள்
முட்டி உதைக்கும் பிள்ளைதனை வயிற்றில் சுமந்தனள்….
ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ…. ஓஓஓ
நான் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ… ஓஓ
சொந்தமெல்லாம் ஒன்று கூடி நல்லநாள் பார்த்து
நலங்கு வைத்து வளையல் பூட்டி பூச்சூடல் செய்தார்
பச்சைவளை பவளவளை முத்து வளையல்
மஞ்சளுடன் நீலவளை பட்டுவளையல்
கருப்புவளை சிவப்புவளை கங்கணங்களும்
தங்கவளை கல் பதித்த வைர வளைகளும்…
ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ…. ஓஓஓ
நான் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ… ஓஓ
மல்லி முல்லை ஈருவாச்சி சாதி சம்பங்கி
மரிக்கொழுந்தும் ரோசாவும் சென்பகப் பூவும்
சரச்சரமாய் கோர்த்து தலையில் சூட்டி விட்டனர்
காப்பும் கொலுசும் கைநிறைய அடுக்கி மகிழ்ந்தனர்
கையை தட்டி கும்மி கொட்டி பாட்டுக்கள் பாடி
ஏற்றி இறக்கி ஆலம் சுற்றி திச்டி கழித்த பின்
என்ன வேணும் ஏது வேணும் எனது கண்மணி
இக்கணமே செய்து தருவோம் உனக்கு சொல்லடி என்றார்…
ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ…. ஓஓஓ
நான் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ… ஓஓ
அப்பமுடன் கொழுக்கட்டையும் சீடையும் வேண்டும்
என் அடி நாக்கு திரிக்க ஒரு அதிசரமும் வேண்டும்
சிறுதானியத்துடன் செய்த இட்லி பொங்கலும் வேண்டும்
என் ஆயாசம் திண்திடவே பாயசம் வேண்டும்…
ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ…. ஓஓஓ
நான் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ… ஓஓ
நான் கேட்டதெல்லாம் வாங்கி தர தகப்பனார் வேண்டும்
நான் சொன்னதெல்லாம் செய்து தர தாயாரும் வேண்டும்
ஓடி ஓடி வேலை செய்ய உடன் பிறந்தோரும்
பாசத்துடன் பக்கத்திலே பாட்டி தாத்தாவும்
அத்தை சித்தி மாமன் மாமி அனைத்தும் சொந்தமும்
அன்புடனே என்னை சுற்றி இருந்திட வேண்டும்…
ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ…. ஓஓஓ
நான் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ… ஓஓ
இத்தனையும் ஆன பின்னே பத்தாம் மாதத்தில்
நான் முத்துபோல பிள்ளைதனை பெற்று தருவனே
ஊரை கூட்டி பெயரை சூட்டி தொட்டில் போடனும்
என் மாமனாரும் மாமியாரும் பார்த்து மகிழனும்
கணமும் என்னை பிரிந்திடாமல் கணவனும் என்னை
கண்ணுக்குள்ளே மணியை போல காத்திட வேணும்….
ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ…. ஓஓஓ
நான் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ… ஓஓ
மிக ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ… ஓஓ
ஆரி ராராரோ… ஓஓஓ… ஆரி ராராரோ… ஓஓ
கணவர் கண்ணன், முதல் குழந்தை குகன் உடன்.. மஞ்சள் வண்ண கல்யாணபுடவை.. அடர்பச்சை வண்ண பிளவுஸ் அதில் நூல் வேலைபாடு செய்யப்பட்டு இருந்தன. மிதமான நகை அணிந்து.. முகம்முழுவதும் புன்னகை தவழ.. தன் கையில் வளையல்கள் அணிப்பவர்களிடத்தில் குடும்பமாக ஆசிர்வாதம் வாங்கி முடித்து.. தன் உறவினர் அனைவரையும் பார்த்த படியும்.. அவளிற்காக பாடும் பாடலை வெக்கத்துடனும் கேட்டுக் கொண்டு இருந்தார்.. இவ்விழாவின் நாயகி தீபா.
ஆனால் பாடலை பாடுபவளோ வளைகாப்பு பெண்ணின் ஆசைகளை கூறுவது போல தன்னுடைய ஆசைகள், விருப்பங்கள் அனைத்தையும் தன் மன்னவனிடத்தில் கூறிக் கொண்டுயிருந்தாள்.
மண்டபத்தின் முன்.. நிச்சிய பெண்ணிற்கு உண்டான தனி சிறப்பு பொலிவுடனும், அழகுடனும் தன்னவனின் வால்வோ காரில் இருந்து.. எழிலரசி.. அவளுடன் தர்ஷினி, சாருலதா, சத்யா இறங்கினர். அவளை வரவேற்கவே காத்திருந்திருந்தனர்.. வேந்தனின் முத்ததங்கை வினோ, அக்கா யோக லட்சுமி, கார்த்திக்கேயன். அவளின் அக்கா இளமதி, மாமா அருள்நிதி.
‘ எழிலரசியை வரவேற்க இருந்தவர்களில் பெண்கள் அனைவரும்.. அவளை தீயில் வறுக்காது ஒன்று தான் குறை. அவர்களிடம் இருந்து.. அவ்வளவு அனல். இருக்காதா பின்ன!.. எப்போது வரவேண்டியவள்.. முதல் நிகழ்ச்சி வளைகாப்பு ஆரம்பிக்க.. சற்று நேரமே இருக்கிறது. வந்தவர்களில் பாதி பேர் நிச்சைய பெண் எங்கே?. என கேட்டுவிட்டனர். அவர்களால் பதில்கூற முடியவில்லை. ஆள்ஆளிற்க்கு ஏதோ ஏதோ ஒரு பதில் கூறி சமாளித்தார்கள். ‘
‘ மிகமிக நெருங்கிய உறவுகள் மட்டும் அழைத்து உறுதி நடந்திருக்க.. வளைகாப்பு உடன்.. நிச்சயம் வைத்துயிருப்பதால்.. அனைத்து வழி உறவினர்களையும் அழைக்கப்பட்டு இருந்தனர். இரு வீடுகளிலும் முதல்முறையாக வெளியிட சம்பந்தத்தில் நடக்கும் திருமண நிச்சியம்!.. என்பதால்.. நிச்சியத்திற்கு வந்து இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்து. ‘
‘ என்ன தான் முக்கியமானவர்கள் அனைவரும் நண்பர்கள் என்றாலும்.. சில உறவுமுறையினர்களுக்காக சற்று கடினமாக நடந்துக் கொள்ளும் சூழ்நிலை இருந்தது. அதனை இருகுடும்பமும் புரிந்துக் கொண்டு பொறுப்புடன் நடந்துக் கொண்டுயிருக்க.. இவள் தூங்கி எழுந்து சரியாக வளைகாப்பு ஆரம்பிக்கும் நேரத்திற்கு வந்து இறங்குகிறாள். ஆனால் ஒருவனை நினைத்து ஒன்றும் சொல்லவில்லை.. சொல்லவும் முடியவில்லை. அதான் எல்லோருடைய பார்வையும் பலமாக உள்ளது. ‘
அவர்களின் பார்வையை உணர்த்து.. ” சத்யா காரில் குடையேதும் இருக்கா பாரு. “
‘ எதுக்கு?.. ‘ என்பது போல இடுப்பில் அவள் கைவைக்க.. புன்னகையை கட்டுப்படுத்தி.. ” இல்ல இங்க ரொம்ப அனல் அடிக்குதா.. என் மேக்கப் எல்லாம் கலைந்துவிட்டா?.. அதுக்குதான். ” அதை கேட்டு அவளோ கொலைவெறி பார்வை பார்க்க..
” சரி விடு.. இல்லைனா.. இல்லைனு சொல்லு.. அதவிட்டு எதுக்கு இந்த பச்ச பிள்ளைய பயம்பட வைக்கிற. நார்மலாகு நார்மல். “
தோழியின் கையை பிடித்துக் கொண்டு புன்னகை முகத்துடன் வந்தாலும்… நிச்சிய பெண்ணுக்கேயான.. வெக்கமும், நாணமும் அவளுள் இருந்ததால் மற்றவர்களை பார்த்தும் பார்க்காதபடி.. தலையை சிறிது குனிந்தும், நிமிர்ந்தும் நடந்து வந்து மண்டபத்தின் நுழைவாயிலில் நின்றாள்.
ஆரத்தி தட்டுடன் தன்னவனின் அம்மா சித்ரா புன்னகையுடன் நின்றிருத்தார். அவரை பார்த்ததில் இருந்து தோன்றும் அதே எண்ணம் தான் இப்போதும்.. ‘ தன் தனு என்னை பார்க்க காரணமானவர்!. ‘ என்று அவர்களை புன்னகையுடன் பார்த்து நின்றாள்.
தன் வருங்கால மாமியாரின் ஆரத்தி வரவேற்பு முடிந்தவுடன் அவர்களை மெல்லியதாய் அணைத்து விடுவித்தாள். சித்ராவும்.. வேந்தனின் குடும்பத்தினரும் இதனை எதிர்பார்க்கவில்லை. எழிலரசி சாதாரணமாக புன்னகையுடன் நிற்க.
இவள என்ன பண்ண?.. அவளை அர்ச்சித்து… சத்யாதான் ” அது ம்மா.. அவ சந்தோஷமா இருந்தா!. எப்பவாவது இப்படிதான் தீடிர்னு பண்ணுவா. இல்ல ஏதாவது ஐஸ் வைக்க வேண்டுமானலும் பண்ணுவா!.. சரிம்மா அண்ணா எங்க?.. ” அவளை மாட்டிவிட..
” ஓ.. அதான் விஷயமா. அவன நானும் பார்க்கல.. எங்குனு கண்டுபிடித்து கொடும்மா மருமகளே. ” வேண்டுமென்றே புன்னகையுடன் கூறி அவளை தோள்வளைவில் அணைத்து விடுவிக்க..
அவளோ அப்படியே ஒருநொடி நின்றாள்!.. பின் அவர்களுடன் நடந்து சென்றபடியே.. ‘ இவர்கள் போல் தானோ.. தன்னவனின் இதேபோலனான செய்கை. ‘
‘ உடனே தன்னவனை பார்க்க ஆசைவர.. இப்போது அனைத்தும் மறந்து.. நேராக நிமிர்ந்த முகமாக வந்துக் கொண்டுயிருக்க.. அதில் கண்கள் அலைபாய்ந்து தன்னவனை தேடிக் கொண்டுயிருந்தது. ‘
‘ வேந்தன் குடும்பத்தினர்க்கு.. யார் இந்த பெண் என்று?. இவளை சிறப்புடன் வரவேற்பதிலேயே தெரிந்தது.. அறிந்துக் கொண்டவர்கள்.. நேராக நிமிர்ந்து வருவதை பார்த்து.. என்ன?.. இந்த பெண்ணிற்கு நிச்சிய பெண்ணிற்கான நாணம்!.. என்ற ஒன்று இல்லையோ?. என்று பார்த்தார்கள். நம் உறவுமுறை பெண்கள் எல்லாம் இப்படியா இருப்பார்கள் என அருகில் பேசிய படியும்.. சில பெண் கொடுக்கும் உறவுமுறையில் இருப்பவர்கள்.. அப்படி என்ன இருக்கிறது!. இந்த பெண்ணிடம் என்று?.. ஆராயவும் தொடங்கினர். ‘
‘ தேடும் விழிகளுக்கு சொந்தக்காரன் தன்னவளை இறங்கியது முதல் அவளை பார்த்துக் கொண்டுயிருந்தான். என்ன!.. போனில் சிலதும்.. தன் அம்மாவிடம் அவள் செய்த செய்கையில் இருந்து நேராகவும் பார்க்க ஆரம்பித்தவன்.. அதில் கடுப்பாகி இருந்தவன்.. அவள் நொடி நிற்பதையும் அதன்பின் தன்னை தன் முயல்கண்களால் தேடும் அழகை ரசித்தவன்.. அடுத்து.. ‘
‘ ஆரஞ்வண்ணம் புடவை. அதில் உடல்முழுவதும் தங்கநிற சரிகையால் நீள்வண்ணவரிகள் இருக்க.. தங்கநிற பாடர் அதில் பூக்களும் மயிலும் கலந்துயிருந்து. மயில்கழுத்து வண்ண அதில் சிறுசிறு பூக்கள் மட்டுமேயான ஆரிவேலைபாடு செய்யப்பட்ட பிளெளஸ் அணிந்துயிருந்தாள். காலையில் அணிந்திருந்த வைர ஆரத்துடன்.. பவள முத்துகள் பதித்த.. லட்சுமி வடிவ உள்ள பதக்கம் கொண்ட நெக்லஸ் மற்றும் பார்ப்பதற்கு நன்றாக தெரியும் படியான தோடும் அணித்துயிருந்தாள். மெல்லிய ஒப்பனை, தலைஅலங்காரம் செய்து மல்லிகை பூ வைத்துயிருந்தாள். கையில் உடையின் நிறத்திற்கு வளையல் அணித்திருந்தவளை.. கண்களால் களவாடிக் கொண்டுயிருந்தான். ‘
எழிலரசியை மேடையின் வலதுபக்கத்தில் அவளின் பாட்டி ரொங்கநாயகி அருகில் அவளை அமர.. அப்போதுதான் மேடையில் வளைகாப்பு நாயகி தீபா அமர வைத்தனர். பின் கண்ணா அண்ணா, குழந்தையை மடியில் வைத்து அவரும் அமர்ந்தார்.
‘ மேடையானது பச்சை மற்றும் இளம்ரோஜா வண்ண துணிகள் அதன் மேல் சம்மங்கி, ரோஜா இணைக்கப்பட்டு மலர் சரங்கள். அதில் ஆங்காங்கே பச்சைகிளிகள், பலவளையல்கள் தொங்கவிட பட்டுயிருந்தது. தீபாவின் முன் வளையல்கள், மாலை, பழங்கள், இனிப்புகள், இன்னபிற பல சீர்வரிசை தட்டுகள் இருந்தன. ‘
‘ வளைகாப்பு சடங்குகள் ஆரம்பமாயிற்று.. ஆனால் இன்னும் அரசியின் தனு மாமா மட்டும் அவளின் கண்ணில் படவேவில்லை மெதுவாக பின்புறமாக திரும்பிக் கூட பார்த்துவிட்டாள். ‘ம்ஹூம்.. ‘ என நினைத்தபடி திரும்ப.. ‘
‘ அரசியின் உடைக்கு ஏற்றார்போல் மயில்வண்ண சைனிஸ் காலர் வைத்த சட்டை.. சந்தனநிற பேன்ட், எப்போதும் அணியும் மெல்லிய அணிகலன்களுடன் இன்று கூடுதலாக கை செயின் அணிந்திருந்தான் அவளின் தனு.. எதிர்பக்கத்தில் இருந்து புன்னகை முகத்துடன் வரும் வழியில் இருப்பவர்களை வரவேற்று.. அரசியின் பக்கத்தில்.. தன் நண்பர்களுடன் நின்றுக் கொண்டவனை..
இவ்வளவு நேரம் தன்முன் வராமல் இருந்தலால்.. ‘ போடா இனி நான் உன்ன பார்ப்பேன் ‘ என நினைத்து.. அவனின் விருப்ப பார்வையான முறைப்பை செலுத்திவிட்டு.. சடங்குகளை பார்க்க ஆரம்பித்தாள். ‘
முதல்குழந்தையின் போது அவர்கள் வெளிநாட்டில் இருந்தால்.. அங்குயிருந்த நண்பர்கள் மிக சிலரை வைத்து தீபாவின் வளைகாப்பு நடைப்பெற்றது. இரண்டாவது குழந்தைக்கு அனைவருடனும் இருக்கிறோம் என்ற மகிழ்ச்சி முகத்தில் மின்ன அமர்ந்துயிருந்த தீபா அண்ணியை ஆவலுடன் பார்த்திருந்தாள்.
எதிர்ச்சையாக அண்ணியின் அருகில் இருந்த குகனை பார்க்க அவன் தன்னை அழைப்பது போலிருக்க.. தன்னைதான் அழைக்கிறானா?.. என்றும் உறுதிப்படுத்த பின்னால் பார்த்து மீண்டும் பார்த்தாள்.. ‘ அவன் வாங்க..’ என கையால் அழைத்தான்.
‘ இந்த குட்டி எதுக்கு நம்மாள கூப்பிடுது ‘ என எண்ணியவாறே.. கண்ணன் அண்ணாவை பார்க்க.. அவர் தான் எழிலரசியை தலையசைத்து அழைத்தார்.
‘ என்னடா இவரிடம் பேசியது கூட கிடையாது!.. இவர் எதுக்காக நம்மை அழைக்கிறார்?.. ‘ என நினைத்து தனுவை பார்க்க.. அவன் ‘ ஹப்பா பார்த்திட்டியா!.. ‘ என்பது போல ஒரு லுக்விட!.. புன்னகையுடன் குனிந்து.. அவனிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். அவன் அதனை பார்த்துவிட்டு மாமாவை பார்க்கச் சென்றான்.
‘ அண்ணா ஏதோ கூற.. தனு அவளை பார்த்தான்.. பின் அண்ணாவிடம் ஏதோ கூறி சற்று தள்ளி.. ஆனால் அவன் முகத்தை பார்க்க நின்று.. தன் அரசியை போனில் அழைத்தவன் விஷயத்தை கூற.. விழி விரித்து அவனை பார்க்க.. போனில் பேசுகிறோம்.. என்ற உணர்வு கூட இல்லாமல் வேகமாக ‘ முடியாது ‘ என தலையசைக்க.. பின் அவன் ஏதோ கூறிய பின் தீபா அண்ணியை பார்த்தாள். அவர்களின் விருப்பம் என்றவுடன் தன்னவனை பார்த்தவள்.. பின் ஏதோ கூறியவன்.. புன்னகையுடன் ‘ சரி ‘ என்று கூறிவிட்டாள். இவர்களை பார்த்து என்னடா நடக்குது?.. என பார்த்தும் பார்க்காது போல இருந்தார்கள். ‘
சிறிது நேரத்தில் தீபா அண்ணிக்கு வளையல்கள் அணிவினுக்கும் சடங்குகள் முடிந்த நிலையில்.. யோகா அவளிடம் வர பின் அவர்களுடன் சென்று தீபாவின் வலது பக்கத்தில் யோகா, சுரபி, சாருலதா சில குழந்தைகளுடன் அமர்ந்துக்கொண்டாள்.
சில நிமிடங்கள் முன்.. கண்ணன் எழிலரசியை இப்போது பார்த்தவுடன் உறுதி அன்று பாடிய பாடலை தீபாவும், சாரு போனில் பார்த்திருக்கிறான். வாய்ஸ் நன்றாகயிருக்கிறது நினைத்தவன். ‘ ஏன்?.. எழிலரசியை தீபாவின் விருப்பான ஒருபாடலை பாடவைத்து.. தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றினால் என்ன?.. ‘ என தோன்றி எழிலரசியை அழைக்க..
வேந்தன் வருவதை பார்த்தவன்.. ‘ அவங்கள வரச்சொன்னா இவன் வரான்!.. ‘ புன்னகையுடன் நினைத்தவன்.. வேந்தனிடம் தீபாவின் விருப்பத்தை கூற.. தன்னவள் பயப்படுவளே!.. என அவளை பார்த்தவன்.. பின் ஒரு முடிவு எடுத்து அவளிடம் கூற முதலில் மறுத்தவள்.. பின் யோசனையை கூறியபின் புன்னகையுடன் தலையாட்டி..
‘ இப்போது தீபாவின் முன் இருவரும் அமர்ந்தார்கள். எழிலரசி அனைவர் முன்னும் அவள் காதில் ஒயிர்லஸ் புளூத்டூத் அணிந்து உட்கார.. வீடியோகாலில் வேந்தன் பக்கத்தில் இருந்த அறையில் உட்கார்ந்தான். அரசிக்கு பாடப்போகும் பாடல் தெரியும் என்பதால்.. தன்னவன் வீடியோகாலில் வந்தவுடன்.. தீபாவை எழிலரசி பார்த்தப்படி புன்னகையுடன் இருவரும் சேர்ந்து வளைகாப்பு பாடலை பாட ஆரம்பினர். ‘
நாள் தள்ளி போனதென்று நாணமுடன் சொல்ல
நாடி பார்த்து மருவத்துவச்சி நல்லசெய்தி சொன்னாள்..
‘ வேந்தன் பாடுவது யாருக்கும் கேட்டாது.. ஆனால் எழிலரசி தன்னவன் பாடுவதையும் கேட்டு, ரசனையுடன் அவன் முகத்தை அவ்வப்போது பார்த்தும்.. தீபாவின் முகம் பார்த்தது பாட ஆரம்பித்தவள்.. அவள் அறியாமலையே பாடலில் உள்சென்று அப்படியே தன்னை நினைத்துக் கொண்டு.. மேடையில் இருந்த அனைவரையும் பார்த்தபடியே தன் ஆசைகளை தன் உறவினர்களிடம், தன்னவனிடமும் கூறி பாடலை சிறப்புடன் பாடி முடித்தாள். ‘
‘ முடித்தவுடன் அனைவரையும் பார்க்க.. இளையவர்கள் இவள் யாருக்காக பாடினாள்? தீபாவிற்காகவா?.. இல்லை தனக்காகவா?.. என்றும்.. கூச்சமே இல்லாம.. உங்க கல்யாணத்திற்கு முன்னமே.. குழந்தை ஆசையை தன் வருங்கால கணவனிடம் எல்லோர் முன்னும் கூறுகிறாய்.. தைரியம்தான் என எண்ணி சிரிப்பை அடக்கப்பாடுபட்டனர். ‘
பெரியவர்களுக்கும் இதே எண்ணம்தான்.. ஆனால் அதை காண்பிக்காமல்.. யாருக்கும் எழிலரசி பாடுவது தெரியாததால்.. முதலில் நன்றாக பாடினாய் வாழ்த்தியவர்கள்.. பின் உடனே அவளிற்கு என்ற ஒதுக்கப்பட்ட அறைக்கு யோகா அழைத்துச் சென்றுவிட்டார்.
‘ அறையில் இருந்து வெளிவந்த வேந்தனோ அக்காவுடன் செல்லும் தன்னவளையே பார்த்தபடியே.. தன் அரசியின் தனக்கான பிரத்தேக பார்வையில் அவளின் ஆசைகளை கண்களில் தெரிவித்த அந்த நிமிடம்!.. காலையிலும், உறங்கிய பின் அவளின் வயிற்றை தொடும்போது இல்லாத உணர்வு.. அவள் மேல் விழுந்தபோது எதிர்பாராமல் தன் கைபட்டவுடனே.. அவனுள் பல புதிதான உணர்வுகள் உருவாகி தன்வசம் இழந்தான். ‘
‘ அந்த மணிவயிற்றில் தங்களின் உயிர்!.. ‘ என நினைக்கும்போது ஜீவ்வென்று மின்சாரம் தலை முதல் கால் வரை பாய்ந்த உணர்வு தோன்றியது. அவன் தலைகோதி தன்னை மீட்டுக் கொண்டவன்.. ‘ வேந்தா நீ காலையில் இருந்து இந்த முயல்குட்டியிடம் உன் கட்டுபாடு தளர்ந்துட்டே வருதுடா. கல்யாணத்திற்கு முன்ன இந்த முயல்குட்டி உன்ன ஒருவழி ஆக்காம விடமாட்டா போல.. இன்னும் எவ்வளவு பார்க்கப்போறனோ?. ‘ என நினைத்தாலும் புலம்பினாலும்.. மறுபக்கம் இருவரும் சேர்ந்து பாடியதினால் மிகுந்த ஆனந்தத்திலும் இருந்தான். ‘
” வசும்மா ஏன் மேடைக்கு வரமா?.. இரண்டு பேரும் இங்கயே உட்கார்ந்து இருக்கிங்க” அண்ணன் மகள் நந்தினியை பார்த்தும் சித்ரா கேட்க.
இப்பதான் நான் உங்க கண்ணுக்கே தெரியறனா?.. என்ற பார்வையோடு.. ” அம்மா சீக்கிரமே எழுந்ததால தலைவலிக்குது. அதான் அண்ணியோட இங்கயே உட்கார்ந்துட்டேன். “
” அப்படியா. சரி.. வளைகாப்பு சாதம் அங்க ரெடியா இருக்கு.. கொஞ்சமா போய் சாப்பிட்டு வா. மாத்திரை என்னிடம் இருக்கு.. இன்னைக்கு மட்டும் போட்டுக்க. ” சரி என வசுந்தரா தலையசைத்தாள்.
” அத்த.. வசு சொன்னா.. எழிலரசிக்கு உங்க மகன்தான் இன்னைக்கு எல்லாம் ட்ரஸ், நகையெல்லாம் எடுத்து கொடுத்தாறாமே. நிஜமா அத்த?. ”
” ஆமாம் நந்தினி.. வேந்தன் அதை ஆரம்பதிலேயே சொல்லிட்டான். சரி அவன் விருப்பம் என்று விட்டாச்சு. நிச்சியத்திற்கு மட்டும் இல்ல.. காலையில், இப்ப போட்டுயிறுக்க நகை, புடவை கூட அவன் எடுத்ததுதான். ”
என்ன!.. ” ஏன் அம்மா அந்த நகைய பார்த்தா.. வைரம் மாதிரி தெரியுது. இதுநாள் வரை அண்ணா சாதாரணமானவே செலவு பண்ண அவ்வளவு யோசிப்பாரு. இப்ப வெறும் நிச்சியத்திற்கே இவ்வளவு செலவு பண்ணுறாரு. நீயும் அப்பாவும் ஒன்னும் கேட்கலையா?.. ”
‘ தனக்கு கூட அண்ணா தங்கம் தவிர வேறு வாங்கி தந்தது இல்லை என்ற பொறாமை?. ஆதங்கம்?.. இன்னும் பலபல.. எழிலரசியின் மேல் இவை வேண்டாம் என நினைத்த வசுந்தராவிற்கு.. இதனை கேட்டவுடன் மீண்டும் தலைதூக்கியது. ‘
” வசு.. நானும் அதை கவனித்து.. யோசித்தேன் தான். ஆனா அவன் தான் எனக்குனு தனி ஆசையிருக்குனு சொல்லிட்டானே.. பின்ன என்ன கேட்ப?. ”
” ஓ.. அதான் அவங்களும் எந்த கூச்சமும் இல்லாம போட்டுகிறாங்க போல. என்ன பாருங்க தங்கத்தில ஒரு நொக்ஸ் போட்டுயிருக்கேன். புதுசா வந்தவங்க எப்படி போட்டுயிருக்காங்க. நீங்களும் என்னை கவனிக்கல. ”
” ஏன் வசு நீ போட்டுயிருப்பது சின்னதா?.. இது எத்தனை பவுனு தெரியுமா உனக்கு?.. எழிலரசி போட்டுயிருப்பதும் இதுவும் ஒரே விலையாதான் இருக்கும். ” என வசு அணிந்துயிருக்கும் ஆண்டிக் ஜீவல் பார்த்து கேட்டார்.
” போங்க போங்க உங்க மருமகள ஒன்னும் நாங்க சொல்லாம இருக்கோம்.. அதுக்காக சமாளிக்காதிங்க. இனி அண்ணாவிடம் எதுவும் கேட்க மாட்டேன்.. அப்பாகிட்டயே கேட்டு வாங்கிப்பேன். உங்களுக்கு ஆவது இனி செய்தாபோதும். அண்ணா இப்பவே எல்லோருக்கும் தெரிந்து.. அவங்களுக்கு என்றே கடை ஆரம்பித்து இருக்காரு. இன்னும் உங்களுக்கு தெரியாம என்ன செய்தாரோ?.. இனி என்னவெல்லாம் பண்ணப்போறாரோ?.. “
மகன் தன்னிடம் எதுவும் மறைத்துயிருக்க மாட்டான் என்ற நம்பிக்கையும், வசுவின் பேச்சில் இருந்த கோபத்தை பார்த்து சற்று கலக்கத்துடன்.. ” வசும்மா என்ன இது!. நீ இப்படியெல்லாம் நினைக்ககூடாது. எனக்கு அப்பா ஏதாவது பண்ணா இப்படிதான் நினைப்பியா?.. எழிலரசி உன் அண்ணாவோட வாழ்க்கை துணையா வரப்போறவங்க. “
” இதுநாள்வரை அண்ணா அவனுக்கு ஏதாவது பண்ணியிருக்கானா. இப்ப வரப்போற மனைவிக்கு பண்ணுறான். அது ஒன்னும் தப்புல்ல. இதுநாள் வர நமக்கு தேவையானத சொல்லாமலேயே செஞ்ச அண்ணா இனிமேலும் பண்ணுவான். ”
‘ என்ன இவள கவனிக்காம விட்டுவிட்டோமோ என சற்று தாமதமாக எண்ணினார். சரி இனி வேந்தன் வீட்டில்தானே இருப்பான் இவளை பார்த்துக் கொள்ள சொல்ல வேண்டும். ‘
” ஏன் ம்மா.. அண்ணா எதுவும் மறைத்துயிருக்க மாட்டானு அவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு. சரி உங்களிடம் ஒன்னு கேட்குறேன். இப்ப அவங்க பாடினப்ப வீடியோகாலில் இருந்து அண்ணாவும் அவங்களோட பாடினாங்களாமே!.. ” ஆமாம் என சித்ரா தலையாட்ட..
” நமக்கு அண்ணா டான்ஸ் ஆடுவாங்க.. ஆனா எல்லோர் முன்னும் ஆடமாட்டாங்கனு தெரியும். ஆனா உறுதி அன்னைக்கு எங்க எல்லோர் முன்பும் டான்ஸ் அதுவும் அவங்களோட சேர்ந்து ஆடி.. நமக்கு இத்தன வருடம் தெரியாத.. அண்ணா அவங்களுக்காக முதன்முறையா பாடினாங்க அது தெரியுமா?.. ” சற்று காட்டதுடன் கூறினாள்.
‘ என்ன தன் மகனை பற்றி தெரியாத ஒன்று உள்ளனவா?.. ‘ வருத்தம் உடனே வர. பின் சரி சித்ரா அவனுக்கு மனைவிடம் தெரிவிக்க தோன்றியிருக்கு.. நம்ம தெரிந்து கொண்டு.. எழில் மாதிரி அவனோட சோர்ந்து பாடப்போறமா?. சின்ன பொண்ணு அண்ணாவிடம் கோச்சுக்கிறா.. ஆனா விசுவை இப்படியே நினைக்கவிடக்கூடாது.
” சரி வசு ஏதுவாக இருந்தாலும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.. போய் சாப்பிட்டு வாங்க. ” என கூறிக் கொண்டுயிருக்கும் போது..
” என்ன அண்ணி நம்ம நந்தினி இருக்கும் போது.. ஏன் வெளியில் இருந்து.. இந்த பொண்ண நம்ம வேந்தனுக்கு பார்த்திருக்கிங்க?.. ” அங்கு வந்த உறவுமுறை பெண் கேட்க.
‘ அய்யோ இது வேறயா!.. ‘ என வசு, நந்தினியை பார்க்க.. அவர்கள் சித்ரா சொல்லும் பதிலுக்காக அவர் முகத்தை பார்த்திருந்தனர். கூடவே சற்று தள்ளி இவ்வளவு நேரம் இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டுயிருந்த நால்வரும் கூட.
‘ மறைக்க என்னயிருக்கு ‘ என நினைத்து.. மெல்லிய புன்னகையுடன்.. ” அதுவந்து கோகிலாஅண்ணி.. என்ன தான் தாய்மாமா பொண்ணாயிருந்தாலும் வேந்தனுக்கு விருப்பம் இருக்கனும் தானே. ” அவர் ஏதோ கூறவர..
” உடனே நீங்க கேட்பிங்க?.. இவ்வளவு அம்சமா அழகாக இருக்க பொண்ண ஏன் விருப்பலனு?.. எங்க நந்தினியை தப்பா நினைக்காதிங்க. சின்ன சின்ன விஷயத்தில் கூட ஒவ்வொருவருக்கும் விருப்பம் மாறுபடும் அப்படியிருக்கப்ப.. கல்யாணம் என்பது எவ்வளவு பெரிய விஷயம். இதுல அவன் விருப்பம் மீறி நடத்தி வைக்க முடியும்மா?.. சொல்லுங்க. ”
” அடுத்து இதை நினைப்பிங்க!.. வேறு யாரும் நம்ம உறவுமுறை பொண்ணுங்க இல்லையானு?.. வேந்தன் தாய்மாமா பொண்ணையே வேண்டாம் சொல்லிட்டோம்.. மத்த யாரையாவது கல்யாணம் பண்ணினா அவர் வருத்தப்படுவாருனு நினைத்தானோ என்னவோ!.. சில வருடம் முன்பே சொல்லிட்டான்.. உறவுமுறையில் வேறு யாரும் பார்க்க வேண்டாம். வெளியிலிருந்து தான் பொண்ணு நம்ம வீட்டுக்கு வரும் என்று சொல்லிட்டான். வேந்தனுக்கு இப்பதான் நேரம் கூடிவந்தது.. மருமக எழிலரசிய அவனுக்கு பிடிச்சு இப்ப நிச்சியம் நடக்கப்போகுது. எல்லோருக்கும் நேரம்காலம் இருக்கு. ” கடைசி வரியை நந்தினியை பார்த்துக் கூறினார்.
‘ அவருக்கும் நந்தினி திருமணம் அமையும்முன் வேந்தனிற்கு கல்யாணம் செய்யப்போவது வருத்தம் தான். ஆனால் அண்ணா அவருக்கென்று ஒரு முடிவு எடுத்து மகளிற்கு மாப்பிள்ளை பார்க்கிறார். நாம் கேட்டவும் முடியாது. பின் வேந்தனை நந்தினிக்கு கேட்பார். வேந்தனின் விருப்பத்திற்கு மாறாக நடக்கவும் முடியாது.
அவருக்கு தெரியும் இதுபோலனா பேச்சுக்கள் வரும் என்று. ஆனால் தன் மகனிற்காக எதையும் சமாளிக்கலாம் என நினைத்தார். ‘
ஆனால் இவருக்கு வேந்தனின் எழிலரசியின் மீதான பல வருடகாதல் தெரிந்தால்?.. இவர் இவ்வாறு யோசிப்பாரா???…