வேந்தன் நால்வரையும் சென்னைக்கு வழியனுப்பி வைத்து உள்வந்தவனை வினோ.. ” என்ன அண்ணா!.. இப்பதான் இந்த பக்கமே வந்த.. திரும்பி எங்க வேகமா போற?.. அண்ணிய இங்க வரச்சொல்லலாம். “
” ம்.. அரசி கொஞ்சம் டையா இருந்தா ஜூஸ் கொடுத்துட்டு.. நானே கூப்பிட்டு வரேன். சரி தீபாஅக்கா, மாமா எல்லாம் வீட்டுக்கு கிளம்பிட்டாங்களா?.. அத்தை, மாமா திருச்சிக்கு எப்ப போறாங்க?.. இல்ல உங்க கூடவே நைட்டு தான் கிளம்புறாங்களா?.. ”
அவன் கேட்ட இரு கேள்வியை முடிப்பதற்குள்.. தன் அரசி இருந்த அறையை 3 முறை திரும்பி பார்த்துவிட்டான். அவள் தான் வெளிவரும் போது முகத்தில் மலர்ச்சி இல்லை.. இப்போது கண்டிப்பாக ஏதாவது நினைத்து வருந்திக் கொண்டுயிருப்பாள் என நினைத்தே இச்செயல். இல்லையெனில் இந்நேரம் அவள் இவர்களுடன் வந்து அமர்ந்துயிருப்பாளே.
இவனின் செயலை பார்த்தவள்.. அவனின் முகத்தில் தோன்றிய சிறு வருத்தம். அண்ணியை உடனே பார்க்க வேண்டுமோ?.. ” நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன். அதுக்கு முன்ன இந்தா அண்ணா.. பசங்களுக்கு எடுத்து வைத்துயிருந்த ஜூஸ்.. இத அண்ணிட்ட கொடுத்து குடிக்க வைத்து.. அதிக நேரம் ஆக்கமா.. கொஞ்சம் சீக்கிரம் இங்க வாங்க. ” கடைசியை புன்னகையுடன் கூற..
முதலில் புரியாமல் முழித்தவன்.. பின் புன்னகையுடன் ஜீஸ் வாங்கிச் சென்றான்.
வேகநடையுடன் சொல்லும் அவனையே பார்த்திருந்த சித்ராவிற்கு என்ன சொல்வது?. என்ன நினைப்பது என்று தெரியவில்லை?. வினோவிடம் தேவையானதை மறக்காமலும் கேட்டான். அதேசமயம் மனம் முழுவதும் அரசியின் அறையில் இருப்பதையும் பார்த்தார்.
ஆனால் அவனையே பார்த்திருந்த சிலருக்கு இன்று புதுமையாக தெரிந்தான். எழிலரசியின் பக்கத்தில் எவரையும் அவன் விடுவதில்லை. எல்லாமே அவன்தான் அவளிற்கு செய்ய வேண்டும். அனைவருடன் இருக்கும் போதும் அவனின் பக்கத்தில்.. இல்லை.. தன் கண்பார்வையில் தான் இருக்கும் படி பார்த்து அவன் நிற்பான்.. இல்லை அவளை அமர வைத்தான். பார்த்த எல்லோருக்கும் புதுவிதமாகவும், சற்று அதிக படியாகவும் இருந்தது. தங்களின் திருமணத்திற்கு பிறகு கூட தங்களின் கணவன்மார்கள் இவ்வாறு நடந்துக் கொண்டது இல்லை என்பதாலே.. அல்லது வேந்தனை போல் யாரும் வெளிப்படையாக செய்யாததாலும் இவ்வாறு இவர்களை எண்ண வைத்தது.
வேந்தன் அரசி இருக்கும் அறையில் நுழைந்து கதவை சாற்றி திரும்பிய சில நொடியில் அவள் தன்னை அணைப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. சற்று தடுமாறி நேராக நின்றான். ” என்னாச்சு முயல்குட்டிக்கு?. ” கேட்டுக் கொண்டுயிருக்கும் போதே..
அவன் தன் மார்பில் இளஞ்சூட்டை உணர.. எதுவும் கேட்காமலே புரிந்தது.. அவன்தான் பார்த்தானே அவளின் கலங்கிய கண்களை. ராகினி.. தான் அன்று நடந்துக் கொண்டதை பற்றி அவளிடம் பகிர்ந்து உள்ளாள் போல.. அவளை அறிந்து.. இவ்வளவு நேரம் அணைக்காமல் இருந்தவன்.. இப்போது அவனின் இறுக்கிய அணைப்பில் அவள் இருந்தாள்.
அவனின் அணைப்பிற்காகவே அவள் காத்துயிருந்தாளோ என்னவோ.. தன் கால் விரல் நுனிகளை அழுத்தி.. பாதங்களை சற்று உயர்த்தி.. முதுகில் இருந்த கைகளை.. கழுத்திற்கு மாலையாக கொண்டு சென்று.. அவன் உணரமுன் தன்னவனின் இதழ்களில்.. தன் இதழ்களை மென்மையாக பதித்தாள். பதித்த சிலநொடி மட்டுமே அவள் அறிவாள்.. அடுத்த சிலநொடிகளில் அவனின் இதழ் ஆளுகைக்குள் அவள் இதழ் வன்மையாக மாட்டிக்கொண்டது.
பின் வன்மையில் இருந்து மென்மைக்கு வந்தான்.. ஆனால் அவனின் கைகள் வன்மைக்கு மாறியது. முதுகில் இருந்த ஒருகை அவளின் இடைபகுதியை இழுத்து தன்னுடன் இறுக்கி அழுத்தி பிடிக்க.. மற்றொரு கை அவளின் முதுகு மற்றும் வெற்றிடையில் விளையாட ஆரம்பித்தது. தன்னவனின் அரசியோ புதுவிதமான தாக்குதலில் நடுக்கம்,சுகம் என்ற இரு மனநிலையில் அவனில் ஒன்ற.. தன் கை சற்று எல்லைமீற ஆரம்பிக்கையில் தான் தன்னவளின் நடுக்கத்தை உணர்ந்தான். அவனால் உடனே தன் உணர்வை கட்டுப்படுத்தி.. தன்னவளிடமிருந்து தன்னை பிரிக்க முடியவில்லை. மெல்ல மெல்ல தன் உணர்விற்கு வந்து.. தன் இதழ்களை தன்னவளிடமிருந்து விடுதலை பெற்றுக்கொண்டான்.
நிச்சியத்தினால் அவளிள் தோன்றியிருக்கும் பொலிவு, மோதிரம் அணிந்ததில் இருந்து.. அவளை அணைக்க நினைத்தது.. கொலுசு அணிவிக்கும் போது அவளின் பாதத்தில் இருந்து தான் உணர்ந்த சிலிர்ப்பு.. அதன்பின் பார்த்த வதனசிவப்பு.. இப்போது அவளின் நெருக்கம்.. அனைத்திற்கு மேலாக இன்று.. ஒரு புது உணர்வை.. அவள் அவனுள் தோற்றுவித்தால் ஒரு சுவையின் மூலம்.
அரசியை தன் மார்பில் சாய்த்துக் கொண்டான். இருவரின் இதயத்துடிப்பும் இருவருக்கும் கேட்கும் அளவிற்கு ஒலித்தது. இருவரும் ஒருவாறு சமநிலை வந்த பிறகு.. தன்னில் இருந்து முயல்குட்டியை அங்கு இருந்த கட்டியில் அமர வைத்தவன்.. தன் கைகளால் முடிகளை கோதியும், கழுத்தை தேய்த்தும்.. அவனால் முழுமையாக சமநிலை அடைய முடியவில்லை. தானே இப்படி என்றால்.. தன்னவளை பார்க்க அவள்.. அவள்.. ஒன்றை ஆராய்ச்சி செய்துக் கொண்டுயிருந்தாள்.
வந்ததே கோபம்.. ” இப்படி போட்டு படுத்தி எடுத்துட்ட. கொஞ்சம் விட்டுயிருந்தா இந்நேரம் இந்த அறை.. வேறு அறையா மாறியிருக்கும். உதட்டிற்கு என்னடி போட்ட?.. எப்போதும் போல இல்ல. ” என்னமோ வருடகணக்கில் இவர்கள் சந்திப்பின் போது இவ்வாறு நடந்துக்கொண்டது போல.. சற்றே சற்று குரல் உயர்த்தி அவளிடம் கேட்க..
தன் உதட்டை தடவி பார்த்துக் கொண்டுயிருந்தவளும் இதை தானே அவளும் யோசிக்கிறாள். அவனின் கேள்வியில் முதலில் முழித்தவள்.. பின் இப்படியிருக்குமோ?.. இருந்தாலும் தன்னவனிடம் சொல்ல முடியாமல் பாவமாக பார்க்க.. அவன் அதனை பார்த்து முறைக்க.. மீண்டும் கூற முடியாமல் உதட்டை மடித்து.. கடித்து அவனை கடுப்பேற்ற.
” இப்ப என்னனு சொல்லப்போறியா?. இல்ல உதட்ட கடிச்சுட்டு இருக்கதான் ஆசை இருந்தா.. நான் வரட்டா அந்த வேலைய பண்ண. ” கூறியபடி அவள் முகத்தின் அருகில் வர..
முகத்தை சற்று பின்நோக்கி இழுத்தவள்.. திரும்பவுமா!.. முழித்து.. ” இல்ல இல்ல சொல்லுறேன் தனு. அது அது.. மேக்கப் பண்ணும்போது லிப்ஸ்டிக் போட்டுக்க மாட்டோன் சொன்னேன். அதுக்கு உதடு டிரையாகாம இருக்க அவங்க லிப்கிளாஸ் மட்டுமாவது போடுங்கனு சொல்லி போட்டுவிட்டாங்க. நான் போட்டு பழக்கமில்லனு சொன்னேன். அவங்க போட்டோ எடுக்கும் போது மேக்கப் போட்டு.. உதடுக்கு எதுவுமே போடாம இருந்தா நல்லாயிருக்காது.. இன்னைக்கு மட்டும் போட்டுக்க சொன்னாங்க. சரினு முதலில் கொஞ்சமா தான் போட சொன்னேன். இப்ப போட்டோ எடுக்க முன்ன திரும்ப போட்டு விட்டாங்க. ” பாவமாக கூற..
அவள் முகபாவனையை பார்த்த அவனிற்கோ திரும்ப அள்ளி அணைக்கத் தோன்றியது. பெருமுச்சு ஒன்றை விடுத்து.. ” சரி முயல்குட்டி.. கல்யாணத்திற்கு முன்ன இந்த மாதிரி போட்டு என் பக்கத்தில் வந்துராத.. இல்ல இல்ல அதுவரை நீ உதட்டிற்கு எதுவுமே போடக்கூடாது. ” கூறிக் கொண்டே நெருங்கி வந்தவன்.. அவளை எழுப்பி இடைபிடித்தவன் அவள் காதில் ” அதன்பிறகு எனக்கு வேண்டும் என்ற நேரத்தில் நானே போட்டு விடுகிறேன். ” இடையில் அழுத்தம் கொடுத்து கூறினான்.
” ம் ” தலைமட்டும் தான் அவளால் அசைக்க முடிந்தது.. மீண்டும் அவனின் நெருக்கதினால்.. அவளுக்கு அவஸ்தை உண்டாக.. ” சரி சரி கைய எடுங்க தனு.. இடுப்பே வலிக்குது. ”
அவனோ அதை உண்மை என நம்பி.. ” நிஐமா வலிக்குதா முயல்குட்டி?.. ” அவளின் இடுப்பை நீவி விட போகவும்.. அவள் புன்னகையுடன் ஆம்.. என தலையசைக்கவும் சரியாக இருக்க..
அவளவன் அதை கண்டுக்கொண்டான். கேடி முயல்குட்டி.. மேலும் இறுக்கியவன்.. ” சரி இதுக்கே இப்படி என் முயல்குட்டிக்கு வலிச்சா.. அப்ப எப்படி நமக்கு டிவின்ஸ் வரது. அதுக்கு.. ” முடிப்பதுற்குள்..
அவனவள் அவன் இதழை விரல் வைத்து முட.. ” தனுமாமா ரொம்ப பேசுற. இன்னும் கல்யாணத்திற்கு மூனுமாசம் இருக்கு. ” அவனின் மார்பில் வெக்கத்துடன் சாய்ந்துக் கொண்டாள்.
‘ இந்த முயல்குட்டி என்னவெல்லாம் என்னைய பேசவைக்கிறா!.. ‘ என வெக்கப் புன்னகையுடன்.. சில மணித்துளிகள் அதே நிலையில் இருவரும் இருந்து.. தங்களை சமநிலைக்கு கொண்டு வந்தனர்.
” முயல்குட்டி ஜீஸ் குடிக்கிறியா?. இல்ல சாப்பிட போகலாமா?. ”
” ஜூஸ் பாதி பாதி குடித்துவிடலாம். அப்படியே கொண்டு போனா. அவ்வளவுதான். நீங்க குடித்துவிட்டு.. எல்லாம் சாப்பிட்டாங்களானு கேட்டு.. அவங்க கூட பேசிட்டு இருங்க. நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன். ” ம் என்ற தலையசைப்புடன் அவன் குடித்துவிட்டு வெளியேறியவன்.. குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் வந்தமர்ந்தான்.
” வினோ எல்லாம் சாப்பிட்டாச்சா. எங்க அப்பா, மாமா. முன்னாடி பார்த்தப்பவும் காணோம். ” சுற்றிலும் தென்படுகிறார்களா என பார்வையிட்டவாரே கேட்க.
” அண்ணா உங்களுக்கு நேரா பார்த்தே.. கேள்வி கேட்க தெரியாதா?.. இல்ல எப்பவும் இப்படிதான் இருப்பிங்களா?. ”
மெல்லிய புன்னகையுடன்.. ” ம். ஆபிஸ்ல யார் வந்து பேசினாலும்.. அவங்களை திரும்பி பார்க்காம.. வேலை செய்துட்டே தான் பேசுவோம். அதனால பழகிடுச்சு. அடுத்து கேள்வி கேட்காத.. அரசியிடமும் இப்படிதானா என்று?. அவ வாய் திறந்து கேள்விகேட்டா.. பதில் சொல்வேன். ஆனா கேட்கமாட்டா. சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் வரல. ”
தலையசைப்பு கேட்டிருந்தவள்.. ” அண்ணா இரண்டு பேரும்.. சத்யா, இன்பானு நாலுபேர் சாப்பிடல. அப்பா, அத்த, மாமா தீபா அக்காவோட போயிருந்தாங்க.. அப்பா மட்டும் பக்கத்தில் வந்துட்டாங்க. நீங்க சாப்பிட வருவீங்கனு.. மாமா உங்களுக்குகாக இப்ப தான் சாப்பிடுற இடத்தில்இருக்காங்க. நீங்க சாப்பிட்டவுடன்.. நாம்ம நம்ம வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான். ”
கேட்டவன்.. ” சரி.. அரசி வந்தவுடன் நாங்க சாப்பிட போறேன். நீ அப்பா வந்தவுடன்.. நாம்ம அரசிய வீட்டல விட்டுதான் போறோமா?.. இல்ல நான், அப்பா, அம்மா, வசு அக்கா மாமா இல்ல நீயும் மாமா யாராவது அரசிய வீட்டில் விட்ட பின்தான்.. நாம்ம வீடு போகனும் சொல்லு. ” கூறி முடிக்க..
அரசி கண்களால் ‘ போகலாம்மா?. ‘ என கேட்டபடி அவர்களிடம் வந்தாள்.
அவளை பார்த்தவுடன் இருவரின் நண்பர்களை பார்த்தான்.. அவர்கள் அருகில் வந்தவுடன்.. சற்றுதள்ளி சுமதி அத்தையுடன் உட்கார்ந்துயிருந்த சித்ராவை பார்த்தான்.. அவரும் புரிந்து தலையசைக்க.. அவர்கள் அனைவரும் சாப்பிட சென்றார்கள்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் ரவிந்திரன் வர.. ” என்னம்மா.. அண்ணா சாப்பிட்டு இன்னும் வரவில்லையா?.. அம்மா எங்க?.. ” கேட்க ஆரம்பிக்க.. சித்ரா அவர்களிடம் வந்தார்.
” சித்ரா எல்லா வேலையும் முடிந்தது தானே. வேந்தன் வந்தவுடன் வீட்டுக்கு கிளம்பலாம் தானே?.. ” சித்ரா பதில் அளிக்கும் முன்..
” அப்பா.. அண்ணா அண்ணிய வீட்டல விட்டுவிட்டு தானே போறோமானு கேட்டாங்க. இல்லையென்றால் அண்ணி வீட்டிற்கு போய்விட்ட பின்னாடிதான் நாம்ம போகனும் சொல்ல சொன்னாங்க ப்பா. ” கூறியவுடன்..
ரவிந்திரன் சித்ராவை பார்க்க.. வேந்தன் எப்படியும் நாம் சொல்வதை கேட்க போவது இல்லை என்று தெரிந்ததால்.. சரி என்று தலையாட்ட.
வயதானர்கள் அனைவரும் முன்பே சென்றிருக்க.. பின்னர் வேந்தன், எழிலின் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்ற இளையவர்கள் அனைவரும் அதிகாலையில் இருந்தே.. குழந்தைகளுடன் இருப்பதால் அவர்களும் கிளம்ப ஆயத்தமார்கள். சாப்பிட போனவர்களும் அங்கு வர அவர்களிடம் சொல்லியும் கிளப்பி விட்டனர். மீதம் இருந்தவர்களை வைத்தே முதலில் எங்கு சொல்வோம் என புரிந்துக் கொண்டான்.
வேந்தன், எழிலரசியின் திருமணநிச்சியம்!.. நிறைய ஆசிர்வாதம், சந்தோஷம், மகிழ்ச்சிகளுடனும்.. சிலபல யோசனை, கேள்விகள், விருப்பு, வெறுப்புகளுடனும் நிறைவடைந்து.
நிச்சியம் முடிந்ததும்.. வேந்தனின் அரசியை அவள் வீட்டில் விட்டுச்செல்ல குடும்பத்துடன் வந்தவர்கள்.. இருவருக்கும் திருஷ்டி கழித்து.. பின் பூஜை அறையில் விளக்கேற்றிய பின் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க.. எழிலரசி சமையல் அறையில் இருந்தாள்.
வேந்தன் போனில் ஏதோ பார்த்தபடி இருந்தவன்.. சட்டென்று எழுந்தான். தீடர் என்று எழுந்தவனை ஏன்?.. என்பது போல அருகில் இருந்த சித்ரா பார்க்க.
” என் ரூம் போய் ஒன்னு எடுக்கனும்.. அதான். ”
சித்ரா அவன் கூறுவதை கேட்டு முழித்தவர்.. அருகில் இருந்த ரவியை பார்க்க அவர் பாவனை.. அவருக்கு புரியவில்லை. மீண்டும் வேந்தனை பார்த்து.. ” என்ன உன் ரூம்மா?.. ” முடிக்கும் முன்..
அய்யோ என நினைத்தவன்.. ” இல்லம்மா.. அரசியோட ரூமில் போய் எடுக்கனும். ” தன் வீடு போல தன்னவளின் அறையிருக்கும் மாடிக்கு சென்ற அவனை.. அங்கு இருந்தவர்கள் வாய் பிளக்காத குறையாக பார்த்தனர்.
வேந்தன் சென்ற சில நிமிடத்தில் ” அரசிசிசி… ” என்ற அழைப்பு மாடியில் இருந்து வீடு அதிர!. கேட்டது.
எழிலரசி முதன்முறையாக வேந்தனின் குடும்பத்தினருக்கு.. தன் கையால் கோதுமை மாவில் செய்த சிற்றுண்டி மற்றும் டீயுடன் ஆசையாக ஹாலிற்கு அப்போதுதான் வந்தாள். சட்டென்று தன்னவனின் ” அரசிசிசி.. ” என்ற அழைப்பு மாடியிலிருந்து கேட்க..
ஒரு நொடி தன்னவளையும்.. மற்றவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தான். இருவர் தவிர.. மற்றவர்கள் ஒருவரை ஒருவர் வேந்தனின் அழைப்பு மற்றும் எழிலரசியை பார்த்து மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தினர்.
கல்யாணத்திற்கு முன்.. அவர்கள் இளையவர்களுடன் இருக்கும் போது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பெரியவர்கள் முன்.. அவளால் சட்டென்று தன்னவனிடம் செல்ல சற்று தயக்கம் மற்றும் சங்கடத்துடன் தன் முன் இருந்தவர்களை பார்த்தாள்.
அவளின் தயக்கம் புரிந்து.. ” எழில்.. வேந்தன் உன் ரூம்மில் இருக்கான். நீ எங்க எல்லோர்க்கும் கொடுத்துவிட்டு.. அவனுக்கு மாடிக்கு எடுத்துட்டு போம்மா. ” ரவிந்திரன் கூற.. அவள் தலையசைத்த படியே தன் அப்பாவை பார்க்க.. அவரும் மெல்லிய அசைவு செய்து சரி என்று கூறினார்.
அனைவருக்கும் கொடுத்தவள்.. அவர்களின் முன்னால் தன்னவனிற்கு எடுத்துச் செல்வதால் வெக்கமும், தன்னவனின் மீது சிறு கோபத்துடன்.. தங்களின் அறைக்கு சென்றாள்.
அங்கு அவனோ ஊஞ்சலில் புன்னகை முகத்துடன் போட்டோ ஆல்பத்தை பார்த்துக் கொண்டுயிருந்தான். மனதிற்குள் தனுமாமா!. என்ற கொஞ்சலுடன்.. தான் கொண்டு வந்ததை பக்கத்தில் வைத்துவிட்டு..
” என்ன?. கல்யாணம் முடிந்து.. மாமனார் வீட்டிற்கு வந்து பொண்டாட்டி ரூம்மில் இருக்க.. புதுமாப்பிள்ளை மாதிரி.. எதுக்கு இப்ப வீட்டே அதிரும்படியா அரசினு கூப்பிட்டிங்க?.. ” கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி கேட்க..
அவளின் தனு.. அவளையும், தன்னையும் பார்த்தவன்.. புன்னகையுடன்.. ” அதுக்கு இன்னும் 3 மாசம் இருக்கே டி முயல்குட்டி. அதன்பிறகு பார்.. வீடு என்ன.. இந்த தெருவே அதிரும்படிய கூப்பிடுவேன். ஆனா அதுக்குனு நீ அப்ப அப்ப.. இதனை நாள் இருக்குகேனு.. என்னை கடுப்புபேற்றும் கேள்விய கேட்காத. ஏதோ ஒர் ஆர்வத்தில் நீ பக்கத்தில் இல்லைனு கூப்பிட்டேன்.
சரி அதவிடு. இந்த போட்டோ நீ பூப்பெய்த அன்னைக்கே எடுத்தா முயல்குட்டி?. ” தன்னவளை இழுத்து மடியில் அமர வைத்து.. அவளின் கேள்விக்கு பதில் அளித்து.. பின் அவளின் புகைபடத்தை காண்பித்து தன் சந்தேகத்தை கேட்க..
அவள் ‘ ஆம் ‘ என தலையசைத்து.. தன்னவனின் தோள் வளையில் சாய்ந்துக் கொண்டாள். தன்னவன் காண்பித்த போட்டோவை பார்த்து.. அவளிற்கு அப்படி ஒரு வெக்கமோ வெக்கம்..
அது அவளின் பூப்பெய்த முதல்நாள் எடுத்த போட்டோ.
ஆனால் அவனிற்கோ அந்த புகைபடத்தை பார்த்து.. எல்லையில்லா சந்தோஷத்தில்!. இருந்தான்.
ஏன் இருக்காது?.. இத்தனை நாட்களாக அவனிற்கு தன்னவளை பார்த்த, உடன் இருந்த சில மணித்துளிகளை நினைத்தாலே!.. வலியால் பயந்து, அழுது, களைப்பினாள் சோர்த்துயிருந்த.. தன் முயல்குட்டியின் முகம் தானே அவனின் நினைவிற்கு வரும்.
ஆனால் இப்போது அவன் கையில்.. அன்று மாலையே சில சடங்குகள் செய்து.. தன்னவளோ குட்டிப்பெண்ணாக.. கொழுகொழு வென்று.. சிவப்பு, பச்சை பாவாடை தாவணியில் இருக்க.. ஓலைக்குடிலில்.. அவள் உள்நுழைவதற்கு முன்.. புன்னகை முகத்துடன் இருந்த.. அவனின் அரசியை எடுத்த புகைப்படம்.
‘ அன்று மாலையே ஓரளவிற்கு வலி குறைந்து விட்டதுபோல. ‘ அரசியின் முகத்தை பார்க்க.. பார்க்க.. அப்படி ஒரு ஆறுதலும், மனநிம்மதியும் தந்தது. புகைபடத்தில் இருந்த அரசியின் முகத்தை மென்மையாக தடவிப்பார்த்தான். இனி இந்த முகம்தான் முதலில்.. அடுத்து அந்த முகம் ஞாபகத்தில் வரவேண்டும் என கண்களால் நிரப்பிக் கொண்டான்.. குட்டி முயல்குட்டியான!. எழிலரசியை.
தன் தோள் சாய்ந்திருந்தவளை நெற்றியில் முத்தமிட்டு.. ” முயல்குட்டி நான் ஒன்னு கேட்குறேன்.. அடிச்சுறாத. அன்னைக்கு இந்த ஓலையை யார் கட்டினா?.. ”
இதை கேட்டவுடன் அவளின் உடல் சிவப்போ சிவப்பாக மாறி.. ‘ பயபுள்ள கேட்கும் கேள்வியபாரு.. ஆனாலும் அவனுக்கு தேவையானதை.. சரியா கேட்குறான் டா. அவனை கடுப்பு பேற்றுவோமா?.. வேண்டாம் பாவம்!. ‘
அவனின் கன்னத்தை பிடித்திழுத்தும்.. ஆட்டியும்.. ” தனு மாமா.. அந்த போட்டோவில் பார்த்த தெரியலையா.. யார் ஓலை வைத்துயிருக்கா?? அம்மாவோட அண்ணா.
என் தனு எதிர்பார்த்து கேட்ட கேள்வியில்.. எனக்கு எந்த மாமா, அத்த பையனும்.. இதுவரைக்கு எதுவும் செய்தது கிடையாது, நான் செய்யவிட்டதும் இல்ல. ”
” என் தனுமாமா தான் முதல்தடவையா.. எனக்கு பாவாடைதாவணி, சேலை, நகை, பூ, வளையல், இன்னைக்கு போட்டுவிட்ட கொலுசு வரைக்கும்.. வாங்கிக் கொடுத்தது. ” அவனை போல நெற்றிமுட்டி புன்னகையுடன் முடிக்க.
‘ வேந்தன் அவளின் தனுமாமா.. அதற்கு பதில் ஒன்றும் கூறவில்லை.. கூறவும் முடியவில்லை. அவளிடம் வார்த்தைகளால் கூறமுடியாத ஆனந்தம்!. தன் முயல்குட்டியை இறுக்கி அணைத்து.. அந்த நிமிடத்தை அனுபவித்தான். அவளும் புரிந்து.. அவனுள் புதைந்துக் கொண்டாள். சில நொடிகள் கழித்து.. தன்னவள் தங்களுக்கு முதல்முறை செய்த சிற்றுண்டிக்காக.. அவளின் கையின் உள்பக்கம் அழுத்த இதழ்பதித்து.. அவளை கட்டியில் அமர வைத்தான்.
பின் தான் எதற்காக?. அரசி அறைக்கு வந்தானோ அதை பார்த்தான். தன்னவன் செய்து முடிப்பதற்குள்ளாக அவள் செய்ய வேண்டிய வேலையை பார்த்தாள்.
” நீ என் கூட இருக்கும்போது பிரிக்கனும் தான்.. இன்னும் இந்த பாக்ஸ் பிரிக்காம வைத்துயிருக்கியா?. ”
‘ ஆம் ‘ என தலையாட்ட.. அவளை முறைத்து.. அவள் செய்துக் கொண்டுயிருந்த வேலையில் தன்னால் ஆன உதவிகளை புன்னகையுடன் செய்துவிட்டு.. பாக்ஸ் எடுத்து பிரித்தான்.
‘ அதில் புதிகாக ஆப்பிள் லாப்டாப் எழிலரசிக்கும், மானிடர் அவனிற்கும் வாங்கியதை அவளிடம் காண்பித்து.. எல்லாம் இருக்கிறா.. என செக் செய்து இரண்டையும் எடுத்துக் கொண்டு கீழ் இறங்கி வந்தனர். ‘