” தனு.. இத இப்பவே கண்டிப்பா பண்ண வேண்டுமா??.. நீங்க இத்தனை வருடமா சேர்த்து வைத்தத.. ”
அவளின் இதழில் விரல் வைத்து.. தொடராதே என கூறியவன்.. அவளை மடியில் அமர்த்தி.. ” முயல்குட்டி.. இது எல்லாமே உனக்கானது. என் முயல்குட்டிய பார்த்தபிறகு தான்.. எதிர்காலத்தை பற்றி தெளிவா யோசித்து.. முடிவு எடுத்தேன் என்றே சொல்லலாம். ”
” சென்னையில் முதல்வருடம் ஆரம்பத்தில் கல்லூரில் நடந்த.. ஒரு ஈவன்ட் மூலமா எனக்கு மூன்று நண்பர்கள் கிடைத்தாங்க. அவங்க நல்லா வசதியான காசு உள்ள பசங்கதான். ஆனாலும் அப்பவே.. அவங்களுக்கு என்று தனியா கம்பெனி ஆரம்பிக்க.. அதை பற்றி யோசிக்கும் ஆரம்பநிலையில் இருந்தாங்க.
” நானும் என் அரசியின் நினைவை ஓஓஓரமா.. பத்திரபடுத்திட்டு.. ” அவளிடம் கன்னத்தில் கிள்ளு வாங்கிவிட்டு.. பின் முத்தமும் வாங்கி.. ” அவங்களோட சேர்ந்துட்டேன். நாங்க படிப்போட சேர்த்து.. நினைத்தை ஆரம்பித்து.. எனக்கு அதில் பதினைந்து சதவீதம் பங்கு கொடுத்தாங்க.
நாலு பேரும் படிப்பை முடித்து.. நான் என் வேலை, நம்ம ஹோட்டலிலை பார்த்துக்கொண்டும்.. அவங்க அவங்க அப்பாவோட பார்த்துக்கொண்டும் நடத்தினோம். இப்ப நல்ல நிலைமையில் இருக்கு. நான் அவங்களோட இருப்பது சிலருக்கு மட்டும்தான் தெரியும். ”
அவளின் கன்னத்தில் முத்தமிட்டு.. ” அவங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம். என்னடா பையன் சென்னை வந்து படிக்கிறான்.. எங்கேயும் தேவையில்லாம போவதில்ல.. யாரோடையும் அதிகம் பேசமா.. படிப்பு, புது கம்பெனிய பற்றிய ஆர்வம், வேலை என்றே இருக்கானு.
உனக்கு முதன்முதல் நெக்லஸ் வாங்கினேன் இல்ல.. அப்ப நான் வாங்கிய நேரம் அந்த கடைக்கு அவங்களும் வர.. நான் ஆசையா பார்த்து வாங்கவும்.. மனம் விரும்பிய பொண்ணுக்கு தான் வாங்குறேனு கண்டுபிடிச்சுட்டாங்க. அப்ப நீ எங்க இருக்கனு கேட்டாங்க. நீ ரொம்ப சின்னபொண்ணா.. அதனால நான் அப்ப சொல்ல. “
” முன்னமே.. ஊரில் வந்து உணவுப்பொருட்கள் வைத்து பிஸ்னஸ் பண்ணனும் சொல்லியிருக்கேன். நான் அங்க ரிசைன் பண்ணப்போறேன் சொன்னப்ப தான்.. உன்னை பற்றியும்.. இங்க வந்து என்ன பிளான்?. என்பதையும் சொன்னேன்.
பின்ன ஒருவாரம் கழித்து.. அவங்க கம்பெனி லாபத்தில் வர பணத்தை கால்வாசியை எங்க சொந்த யூஸ்சுக்கும், மீதிய அப்பா கம்பெனி, அவர் பாட்னரா இருக்க கம்பெனி, அவங்க விருப்பிய கம்பெனி, சிலது சேர்ஸ் என்று இதில் எல்லாமே நல்ல லாபம் வரமாதிரி அவங்களோடது சேர்ந்து.. என்னோட பணத்தையும் போட்டு இருப்பதா சொன்னாங்க. ஏன்னு கேட்டேன்?. ” அவளின் நெற்றில் முத்தமிட்டான்.
” உன்னதால் தான் ஆரம்பத்தில் இருந்தே.. நான் நல்லா பையனா, அவங்களுக்கு நல்ல பிஸ்னஸ் பாட்னரா.. நல்ல உழைப்பாளி.. ரொம்ப அமைதியான பையனா இருந்ததேனா. அதற்கு காரணமா நீயும்.. நான் அப்படி இருந்ததற்கான பலனாவும்.. நாம்ம எதிர்காலத்தில் எந்த பணம் பற்றிய பிரச்சனை இல்லாம சந்தோஷமா வாழ வேண்டும் என்று.. நான் எப்ப உன்னைய பற்றியும், கல்யாணம் பற்றி கூறும் போது.. பரிசா கொடுக்க வேண்டும் நினைத்தாங்களா. எனக்குரிய பணத்தை இன்வெஸ்ட் பண்ணாறாங்கனு தெரியும். ஆனா அவங்க பணத்தோடவே பண்ணுறாங்கனு தெரியாது. “
” நான் ஏற்கனவே இத்தனை வருடமா வந்த பணத்தில்.. இங்க வாங்கிய இரண்டு இடம், தங்க காயின் வாங்கி.. வேண்ணும் என்கிற போது நகையா வாங்கியிருந்தேன். கொஞ்சம் பணமும் சேர்த்து இருந்தேன். சென்னையில் இருக்க வீடு.. அந்த கம்பெனி வந்த லாபத்தில் தனித்தனியா நாலுவீடு.. நாங்க ஒன்னா வாங்கியதில் ஒன்று தான். “
” அவங்க காசு பற்றி சொல்லும் முன்ன.. என்னோட பிளான் என்னோட சேர்ஸ் பாதி சதவீதம் விற்பது, இன்னும் ஒன்னறை வருடபணம், சென்னைவீடு விற்பது, பேங்க் லோன் வாங்கி ஆரம்பிக்கனும் நினைத்தேன். பின்ன உடனடியா வரனும், இனிப்பகமும் ஆரம்பிக்க வேண்டும்.. அப்பதான்.. எதுக்கும் பணம் வேண்டும் என்றால்.. அப்பா, மாமாவிடமும். ”
அவனின் இதழில் மென்மையாக இதழ் பதித்து எடுத்தவள்.. ” இப்ப எந்த பணம் பிரச்சனையும் இல்ல.. அதனால எல்லாவற்றையும் என் பெயரில் மாற்றுவதற்வதற்கு உண்டான.. முதல்படியா தேவையான இடத்தில் பயன்படுத்த சைன் வாங்குறீங்க. ”
‘ ஆம் ‘ என வேந்தன் தலையசைக்க..
” ஆனா தனு இது பற்றி வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தா பிரச்சனை ஆகிடாத. இதில் அவங்களுக்கும் பங்கு இருக்குல?. ”
“ இல்ல அரசி. இதில் எந்த விதத்திலும் யாருக்கும் உரிமை கிடையாது. ”
ஏன்?.என்பது போல பார்க்க.. ” அதுவந்து.. ” கதவு தட்டு ஓசை கேட்டக.. அவளின் நெற்றியில் அழுத்த முத்தமிட்டவன்.. அவளை ஷோபாவில் அமர வைத்தான்.
கதவை திறக்க விஸ்வநாதன் நின்றுயிருக்க.. இருவரும் அமரும் இடம் வந்தார்கள்.
புன்னகையுடன் எழிலரசியை பார்த்தவன்.. ” என்னம்மா.. வேந்தன் செய்வதில் உனக்கு சம்மதம் தானே?. ” வேந்தன் ஏதோ கூற வர..
” நீ எதுவும் சொல்லாத வேந்தா. நீ பண்ணபோறது ஒன்னும் சின்ன விஷயம் இல்ல. உன்னைய விட அவங்கள தான் நிறைய கேள்வியும், தவறா பேச.. இல்ல நினைக்க வாய்ப்பு அதிகம். இதையெல்லாம் அவங்கதான் வாய திறந்து சமாளிக்கனும்.
கல்யாணம் முடிந்தவுடனா.. சுலபம், பிரச்சனையிலாம யாரையும் சமாளிக்கவும் முடியும். அதையும் சொன்னா கேட்கமாட்டேன்.. அதற்கு முன்னமே முடியனும் சொல்லுற. மனைவியா ஆகும் முன்ன ஏன் கேட்டா?. சொல்லமாட்டேன் சொல்லுற. இவங்களுக்காவது காரணம் தெரியும்மா?. “
மெல்லிய புன்னகையுடன்.. ‘ ஆம் ‘ என தலையசைக்க..
” ம்.. பரவாயில்ல இவங்களுக்குக்காவது சொல்லியிருக்கியே. ” பெருமுச்சு ஒன்றை வெளிப்படுத்தி.. ” வேந்தா உன்னாக ரொம்ப ரிஸ்க் எடுக்குறேன். ”
இதில் என்னயிருக்கு?. கேள்வியுடன் வேந்தன் விஸ்வாவை பார்க்க..
” நீ ஏன்டா பார்க்க மாட்ட. வீட்டில் எப்ப தெரிந்தாலும் ஏன் எங்களிடம் சொல்லல?. ஏன் மாற்ற சம்மதம் சொன்னேனு. என்னைய தான் முதலில் கேள்வி கேட்பாங்க. “
” ம்.. உங்க நிலை கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் உங்களையும், அரசியையும் யாரும் தேவையில்லாம கேள்வி கேட்க விடமாட்டேன் மாமா. அதனால அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். ”
அரசி தன்னவன் தன்னை யாரும் கேள்வி கேட்க விடமாட்டான்.. உங்களையும் பார்த்துக்கொள்வான் என்ற உறுதியை.. இவர்கள் பேசும் போதே சைன் செய்து முடித்து நாதனிடம் கொடுத்தாள். புன்னகையுடன் வாங்கி ஒருமுறை செக் செய்துவிட்டு..
” ம்.. எல்லாம் ஓகேம்மா. ” சரி என இருவரும் சந்துருவுடன் வெளியே சொல்கிறோம் என்பதை மீண்டும் கூறிவிட்டு.. புன்னகையுடன் ஹாலிற்கு வந்தனர்.
சித்ரா பத்மாவின் அருகில் அமர்ந்தபடி அவர்களை பார்த்தார். வேந்தன் தன் வேஷ்டி மட்டும் மாற்றி பச்சை ஷேடு இருக்கும் ஜீன்ஸ் அணிந்து.. வினோவின் அருகிலும், எழிலரசி மஸ்டர்ட் ( கடுகுஎண்ணெய்) கலர் டாப், கடல்நீலம் பேன்ட், ஷால் என சுடி மாற்றியிருந்தாள். காலையில் வைத்திருந்த பூவில் பாதி அளவு மட்டுமே சூடியிருந்தவள் சத்யாவின் பக்கத்தில் அமர்ந்தாள்.
” ம்மா.. நாங்க சந்துரு, கதிரவனுடன்.. சந்துருவின் கடைக்கு கிளம்புறோம். டிரஸ் வாங்க போனவங்க வந்தவுடன்.. சிறிது நேரத்திலேயே கிளம்பி நகைகடைக்கு போய் வாங்கிட்டு வீட்டிற்கு அப்படியே போய்விடலாம். ”
” சரிப்பா. நீங்க போய்யிட்டுவாங்க. “வீட்டில் சென்று கேட்டுக் கொள்ளலாம் என எதுவும் கேட்கவில்லை.
இவனின் குரல் கேட்டு வெளியில் நின்றவர்கள் உள்ளே வர.. வந்தவர்களை போகலாம் என நினைத்தவர்கள் அனைவரும் கிளம்ப..
” வேந்தா என்ன சத்யாவும் இப்பவே பொருட்கள் வாங்க வராளா?.. ”
வேந்தன் ‘ என்ன பொருட்கள்?. ‘ என புரியாமல் சத்யாவை பார்க்க.. வினோ உடனே.. ” அதான் அண்ணா.. சத்யா பிளவுஸ் டிசைன் பண்ண பொருட்கள் வாங்கனு.. அண்ணி இங்க இருங்கானு தானே திலகன் அண்ணாவோட இன்பா அனுப்பினாங்கள.. அந்த பொருட்களை வாங்க.. இப்பவே உங்ககூட வராங்களானு கேட்குறாங்க அம்மா. ” கேட்டவர்கள் மெல்லிய புன்னகை விரிய..
ஓ.. இப்படி சொல்லியிருக்கியா.. ” ஆமாம் ம்மா. சந்துரு கடை பக்கத்தில் தான்.. பொருட்கள் வாங்கும் கடை இருக்கு. ”
‘ இவங்க பார்வையே சரியல்லையே. என்னமோ போங்க.. ஒழுக்கா போய்யிட்டு ஒழுங்கா வந்தா சரி. ‘ என எண்ணியபடி சரி என தலையசைத்தார்.
அனைவரும் சந்துருவின் காரிலேயே சென்றனர். சந்துரு கார் ஒட்ட.. கதிரவன் முன்அமர.. பின்னால் நால்வரும் அமர.. கார் வீட்டை கடந்த சிறிது தூரத்தில் வேந்தன் அரசியை தன் மடியில் அமர்த்திக் கொண்டு இருவரையும் நன்றாக அமரக் கூறினான்.
” டேய் உன்னையெல்லாம் கேட்க ஆள்யில்லைனு.. கொஞ்சம் ஓவரா தான்டா போற. நீ நல்லா கண்ண திறந்து பார்த்து சொல்லு.. இப்ப நாலு பேருக்கும் இடம் பத்தலனு.. நீ எழில மடியில் உட்கார வைத்துயிருக்க. ” முன்னால இருந்தவர்கள் அதிர்வுடன் பார்த்து திரும்பியிருக்க.. இவன் கூறுவதை கேட்டு சிரிப்புடன் பார்த்தனர்.
” ஆமாம் டா. நீயே சத்யாவிடம் கேளு. ” அவன் கேட்க மாட்டான் என்ற தைரியத்தில் கூற.. அதேதான் நடந்தது.
” ம்.. அப்படியே சத்யா.. உனக்கு எதிரா உண்மைய சொல்லிட்டாலும். ” இழுவையாக கூறி திரும்பிக் கொண்டான்.
பெண்கள் அவனை பார்த்து சிரித்தும்.. பின் பேசியபடி வர.. வேந்தன் அவர்களின் திருமண நிச்சியத்திற்கான இரு மோதிரத்தையும்.. அதை அணிந்த தன்னவளின் விரலை சுகமாக வருடியபடி வந்தான். அவன் அவளுடன் அமைதியாக இருக்கும் தருணத்தில்.. எப்போதும் செய்யும் செயல் என்பதால் அரசி புன்னகையுடன் அவ்வப்போது பார்த்தபடியே வந்தாள்.
உள்அலங்காரம் சம்பந்த அனைத்து பொருட்களையும் சந்துரு.. அவனின் ஷோரூம் மட்டுமல்லாது.. மற்றபிற கடைகளுக்கு சென்றும் காண்பித்தான். அவனிற்கு எழிலரசி வேந்தனை பற்றி கதிரவன் கூறியதும்.. இருவரையும் பிடித்து.. எழிலரசிக்கு நம்பிக்கை வர வேண்டும்.. அவள் விருப்பி எதை கேட்டாலும் அது தேவையா, இல்லையா.. அதன் ஆயுட்காலம் எவ்வளவு?. பராமரிப்பதில் உள்ள சுலபம், கஷ்டம் என முக்கிய சந்தேகங்கள் அனைத்தும் அவன் தெளிவுபடுத்தான். மற்றவர்களும் அவளுடன் அவன் கூறுவதை அமைதியாக கேட்டனர். எதற்கும் வாய்திறக்கவில்லை. அனுபவம்!.
ஒருமணி நேரம் மேல் கடந்துயிருக்க.. அவளிற்கு திருப்தியாக இருக்கிறது என்பதை வேந்தன் அவள் சந்துருவிடம் பேசும் விதத்தில் புரிந்துக்கொண்டான். இருந்தும் அவன் செய்து கொடுத்த வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் செல்லலாம் எனவும் ஏற்கனவே வருவோம் என சந்துரு கூறியிருந்தால் முதலில் இருவீடுகள் அடுத்து கடைகள் பார்த்தனர்.
ஹோட்டல் பார்க்க செல்லும் வழியில்.. அவர்கள் உடைகள் டிசைன் செய்ய தேவையான பொருட்கள் வாங்கும் கடையிருக்க.. சித்ராவிடம் கூறிவிட்டார்கள் அதனிலும்.. அங்குவிட இங்கே இன்னும் விலைமலிவாக, விதவிதமான கூடுதல் பொருட்கள், நிறைய விதமான நூல்கள் இருக்கும் என்பதால்.. நால்வர் மட்டும் தன் துணைகளுடன் நடந்து சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு ஹோட்டல் வருவதாக கூற.. சரி என இருவரும் தாங்கள் டிரஸ் வாங்கிவிட்டு அங்கு வருவதாக கூறிச் சென்றனர்.
எழிலரசி, சத்யா இருவரில் எழில் இப்போது அதிகம் செய்வதில்லை. மறக்கக்கூடாது என்பதற்காக ஞாயிறு அன்று சத்யாவை வீடு வர வைத்து வாரம் ஒரு ப்லௌவ்ஸ் மட்டும் செய்து பழகுகிறாள். அவளிற்கு இப்போது வேந்தன் அதிகம் விரும்பும் நூல்வேலைபாடுகள் கற்க ஆசை.
நால்வரும் தேவையானதை வாங்கிவிட்டு.. வரும்வழியில் ஐஸ்கீரிம் கடையிருக்க.. சத்யா மட்டும் கப்பில் வைத்தது வாங்கிக்கொண்டு பேசியபடி நடந்து வந்தனர். இதனை நாலு பெண்கள் ஜூஸ் குடித்தபடி பார்த்தனர்.
” அங்க பாரு வசு. உன் அண்ணா நம்மள டிரைவரோட இங்க தனியா அனுப்பிட்டு.. உங்க அண்ணாவும், அவரு பிரண்டும் ஜோடி போட்டு வராங்க. ”
” காவ்யா அக்கா ஜோடியா வராங்களா?. ஒரு ஜோடி தானே?. ”
” ஓ மேகா.. அப்ப உனக்கு இவங்க விஷயம் தெரியாது போல ?. ”
என்ன?. என்பது போல மேகாவுடன், வசும் பார்க்க.
” திலகனுக்கும், சத்யாவிற்கும் வேந்தன், எழில் கல்யாணத்திற்கு பிறகு அவங்களுக்கும் முடிக்கலானு அவங்க இரண்டு வீடு, எழிலரசி வீடு இவங்களுக்கு உள்ள மட்டும் பேசி வைத்திருக்காங்க. ”
” என்ன இவங்க இரண்டு பேருக்கும் கல்யாணமா?. உங்களுக்கு எப்படி தெரியும்?. “
அவர்களுக்கு இதில் விரும்பி மணம் செய்கிறார்களா?. இல்லை பெரியவர்கள் கேட்டு முடிவு செய்ததா என்று கேட்க தோன்றவில்லை. பெரும்பாலும் ஒரு திருமணத்திற்குள் ஒருசில ஜோடிகள் இணைவர்கள் என்பதால்.. இருவருக்கும் அதை பற்றிய கவலையில்லை.
“ போனவாரம்.. திலகன் அம்மா.. அத்தைகிட்ட இதை பற்றி கோயிலில் பேசிட்டுயிருந்தாங்க. அப்ப தான் தெரியும். ”
” ஓ.. அதான் எழில் கூட இருந்தது போலவும் இருக்கும்.. இவங்களும் இப்படி ஒன்னா போய்கலாம். இன்பா கால் செய்தவுடனே இரண்டுபேரும்.. இவ்வளவு சீக்கிரம் வேலையெல்லாம் ஆள்மாற்றிவிட்டு.. ஒன்னா வந்துட்டாங்களா. ” பார்த்தபடி இருந்தவர்கள்..
” சரி சரி.. இவங்கள பார்த்து டென்ஷன் ஆகியது போதும். வா வசு போகலாம். அவங்கயெல்லாம் முடிச்சுட்டாங்க. நாம்ம போகும்வழியில் கொஞ்சம் அக்சசரிஸ் மட்டும் பார்த்துட்டு கார்கிட்ட போகலாம். ”
வசுந்தரா ஏதோ ஒன்றை முடிவு செய்து.. சரி என தலையசைப்புடன் இருவரும் முன்னே செல்ல.. பின்னால் காவ்யா மெல்லிய சிரிப்புடனுடன் செல்ல.. தன் அக்காவை ரேவதியும் கவனித்த படி உடன் வந்தாள்.
” பசிக்குது தனு. இன்னும் ஹோட்டல் எவ்வளவு தூரம் இருக்கு?.. அவ வேற ஐஸ்கீரிம் சாப்பிட்டு என்னய கடுப்போத்துறா. ”
” அங்கேயே ஜூஸ் குடினு சொன்னேலடி. அங்க நீ வேண்டானு சொல்லிட்ட. இப்ப பசிக்குதுனு இதுதோட மூனுதடவை சொல்லிட்ட. இதே வந்தாச்சு. ”
” ம்.. ஜூஸ் குடிச்சா.. பின்ன இங்க வந்து இன்னும் கொஞ்சம் சாப்பிடு.. கொஞ்சம் முயல்குட்டி என்னய பாடு படுத்துவிங்க. நம்ம ஹோட்டலில் சாப்பிடும் போது யாரும் இருக்கமாட்டாங்க. இங்கேயும் நீங்க கொஞ்சுனா.. இல்ல இல்ல கெஞ்சுனா.. உங்கள தான் நாலுபேரும் கிண்டல் பண்ணுவாங்க. ” புன்னகையுடன் கூற..
” ஆமாம் இப்ப மட்டும் திலகன் அமைதியா இருக்கான் பாரு. அவனும், சத்யாவும் வந்தப்ப எல்லோரும் இருந்தாங்க. அப்படி கிண்டல் பண்ணுறான். இதில் என்கூட இன்பாவையும் சேர்த்துக்கிட்டான். ஆனா யார் கிண்டல் பண்ணினா என் முயல்குட்டிய நான் கொஞ்சுவேன், கெஞ்சுவேன். ” சிரிப்புடன் இருவரும் அவர்கள் பார்க்க வந்த புதிதாக ஆரம்பிக்கபட்ட ஹோட்டல் வர.. கதிரவன், சந்துரு இன்னும் வராமல் இருக்க..முன்னேயே நின்றார்கள்.
அவனின் தோள்தட்டி யாரோ அழைக்க.. யார்டா?. திரும்பியவன்.. புன்னகை முகமாக.. ” சங்கவி!.. நீங்க என்ன இந்நேரத்தில் இங்க?. ”
எதிர்எதிர் பேசிய படி இருந்தவர்கள்.. அந்நேரம் அரசிக்கு கால்வர.. அவனின் முதுகில் பின்னால் பேசிக்கொண்டுயிருக்க..
” காலேஜ் கல்ச்சுரல் விஷயமா.. பிரண்ட்ஸ் கூட கொஞ்சம் திங்ஸ் வாங்க வந்தேன் மாமா. ”
” அப்படியா. முடிந்ததா?. ” ஆம் என தலையாட்டா.. ” நேரா வீட்டுகா?. ”
” ம்… பிரண்ட்ஸ் கிளம்பிட்டாங்க. நேரா வீட்டுக்குதான். சரி நீங்க என்ன இங்க?. ” அவன் கூறவரும் வேலையில்.. ” தனு.. கதி, சந்துரு அண்ணா வர இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்மா. வாங்க நாம்ம முதலில் போய் ஆடர் பண்ணினா அவங்க வந்தவுடன் சாப்பிட சரியா இருக்கும். ” அவள் பசியினால்.. தன் முன்னால் யார் இருக்கிறார்?. என்று பார்க்காமல் அவனை பார்த்து மட்டும்கூற..
” சரி டா. ” அவளின் பசி முகத்தில் சோர்வாக தெரிய.. வேந்தனும் அவளை தன்னில் சாய்த்துக்கொண்டு.. திலகனை பார்க்க அவன் சத்யாவுடன் சற்று தள்ளி நின்றுயிருக்க.. அவனிற்கு போனில் அழைக்க போக.. அவனின் பிடியிலிருந்து வேகமாக விலகினாள்.
” எதுக்கு இப்ப?. ”
” தனுனு.. நீங்க சங்கவிய பார்த்திங்களா?. ” தன் அரசியால் ஒருநிமிடத்தில் அவன் சங்கவியை மறந்து போனான். ” ஓ.. சாரிங்க. ”
” ம். பரவாயில்ல மாமா. அண்ணி சொல்லியிருக்காங்க. உங்களோட அக்காயிருந்தா மத்தவங்க கண்ணுக்கே தெரியமாட்டோனு. நான் உங்களை பார்த்தப்ப இவங்கள பார்க்கல. இல்லையென்றால் நான் கொஞ்சம் சுதாரித்து இருப்பேன். ” மெல்லிய புன்னகையுடன் கூற.
இருவரும் சிரிப்பை மட்டும் உதிக்க.. திலகனும், சத்யாவும் அழைக்காமலே இவர்களின் அருகில்வர.. ” சரி நாங்களும் சாப்பிட்டு நேரா.. வீட்டிற்கு தான். வாங்க நீங்களும் எங்களோட சாப்பிடுங்க. ”
” ம்.” சரி என தலையசைத்து..
திலகனிடம் பேசியதை கூறி.. அவர்கள் உள்ளே வந்து அமர்ந்து உணவை ஆடர் செய்ய.. சில நிமிடங்களில் உணவு வந்தது. திலகன் அவர்கள் வந்துவிட்டதை பார்த்தான்.
” வேந்தா அவங்க வந்துட்டாங்க. ” சரி என தலையசைத்த படியே அரசிக்கு முதலில் எடுத்து வைத்தான்.
” லேட் ஆகிடுஞ்சா?. அண்ணா. ”
” இல்லடா. வாங்க முதலில் சாப்பிடுங்க. “
அவர்கள் நிமிடங்கள் கழித்து வந்து அமர.. அவர்களுக்கு சங்கவியை அறிமுகம் செய்யும் வேலையை திலகன் பார்த்தான். அரசி சாப்பிட்டு முடிக்கும் வரை.. அவன் தனிஉலகில் இருந்தான். அவள் சிறிது மட்டுமே சாப்பிட வேண்டியது.. பின்னர் சிலமணி நேரத்திலேயே பசியில் இருக்கவேண்டியது.. அவளை எல்லாவற்றையும் செய்ய வைத்த அவனால் இதை மட்டும் முடியவில்லை. புன்னகையுடன் அவனை பார்த்தபடி அவர்களும் சாப்பிட்டனர்.
” டேய் நீயும் ஒழுங்கா சாப்பிடுடா. அவங்க சாப்பாடு சாப்பிடாட்டியும் நடுவில் ஏதாவது வாங்கி சாப்பிடுறாங்க. நீ எதையும் வாங்கி சாப்பிடமாட்ட. ” அவனை முறைத்துவிட்டு அவன் கூறியதற்காக சிறிது சேர்த்து சாப்பிட்டான்.
பின்னர் மூவர் மட்டும் புதிகாக ஆரம்பிக்கபட்ட ஹோட்டலை பார்வையிட செல்ல.. நால்வரும் இனிப்பு சாப்பிட்டுக் கொண்டுயிருந்தனர்.
” சத்யா.. எழில் இவ்வளவு இடத்தையும் உன்னிப்பா கவனிப்பதா பார்த்தா.. கடைக்கு மட்டும் பார்ப்பது போல இல்ல. நிறைய இடத்திற்கும் சேர்த்து பார்ப்பது போல இருக்கும். ”
புன்னகையுடன்.. ” ம்.. எனக்கும் அதுதான் தோனுது. அவங்க வீடு கட்டி ரொம்ப வருடம் ஆச்சு.. இவங்க கல்யாணம், அடுத்து இன்பா அண்ணா கூடவே இவரோட கல்யாணம். ”
” சத்யா இத விட்டுட்ட உங்க இரண்டு பேரோட கல்யாணம். ”
இவ்வளவு நேரம் திலகனை பார்த்து பேசியவள்.. இப்போது சட்டென்று கூறிய தங்கள் திருமணம் என்ற வார்த்தையில்.. வந்த வெக்கத்தை திலகனிடமிருந்து மறைக்க.. அவளின் பார்வை கதிரவனிடம் திரும்பி..
புன்னகையுடன்.. ” ம்.. இவ்வளவு கல்யாணம் இருக்கு. அதனால அவ உங்களையும், சந்துரு அண்ணாவ எல்லோரோட வீட்டையும் ஒரு ரவுண்ட் அடிக்க வைத்து.. இப்போதைக்கு ஏற்றார்போல மாற்ற முடியுமானு பார்த்து பண்ணுவா. கூடவே ஹோட்டலையும் மாத்துவா. ”
” சத்யா அக்கா இவ்வளவு இடத்திலும் அக்கா சொன்னா போதுமா. உடனே மாத்தி விடுவாங்களா?. ” ஆச்சரியத்துடன் கேட்க.
” ம்.. அவ போய் சொல்ல வேண்டாம். இந்தமாதிரி எண்ணம் இருக்குனு அவ வேந்தன் அண்ணாவிடம் சொன்னா போதும். மற்றத அவர் பார்த்துப்பார் சங்கவி. ”
தன்னவளிடம் இருந்து எப்போதாவது வரும் அழகான வெக்கத்தை கண்டுகொண்டு.. அதனை ரசித்துவிட்டு.. ” ஆமாம்.. ஆமாம்.. அடுத்து அவன் எங்க வருவான். நேரா முதலில் என்னிடம்.. அடுத்து மச்சானிடம் போவான். அவன் வேல அவ்வளவு தான். அது முடிந்தது. ” கடுப்பு போல சொல்ல..
” ஓ.. ரொம்ப சலுச்சுக்கிறீங்க போல.. எழில் வரட்டும் நீங்க சொன்னத சொல்லுறேன். ”
” ஏம்மா உனக்கு என்மேல இவ்வளவு கொலைவெறி. காலையில் கோர்த்துவிட்டது பத்தானு.. இப்ப வேறயா. ஒருநாளைக்கு ஒன்னுபோதும். ” கண்கள் வேறு கூற.. வார்த்தை மட்டும் பாவமாக கூற.. ‘ ம். அந்த பயம் இருக்கனும் ‘ என்ற பார்வையும்.. அவனின் கண்களால் தன்னை தழுவிய பார்வையில் நாணம் வந்து திரும்ப.. பார்க்க சென்றவர்கள் வந்தனர்.
அனைத்தும் பார்வையிட்ட திருப்தியுடன்.. காரில் வரும்போது எப்படி அமர்ந்தனரோ அப்படியே அமர்ந்தனர். இதில் சங்கவி உட்கார நன்றாகவே இடம்இருந்தது.
திலகன்.. வேந்தனை ‘ என்னமோ நால்வர் உட்கார இடம் இல்லைனு சொன்ன?. ‘ என பார்வையால் கேட்டு முறைக்க..
‘ ஆமாம். சத்யாவிடம் கேளேன். ‘ பதில் பார்வை அவளை காண்பித்து புன்னகைக்க.. ‘ போடா டேய்.. ‘ புன்னகையுடன் திரும்பிக் கொண்டான்.