அவனுக்கு கல்யாணத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்தான் . அவனுக்கு அப்போது அவன் நண்பன் ஒருவர் கிரிமினல் வக்கீலாக இருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது அவனுக்கு போன் செய்தான் . அவனிடம் , ” ஹலோ ! அது கதிர் தான கிரிமினல் வக்கீல் , நான் அரவிந்த்” . கதிர் , ” நான் கதிர் தான் , அரவிந்த் எப்படி இருக்க . என்ன திடீர் னு அழைத்திருக்கிறாய் எதாவது பிரச்னையா” என்று வினவினான் . அரவிந்த் அவனிடம் , ” எப்படி மச்சான் கண்டுபுடிச்ச நான் இப்போ பெரிய பிரச்சனையில் இருக்கேன் என்னை எப்படி யாவது காப்பாற்று டா !” என்றான் . கதிர் , ” உனக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை . நீ என்னை காண பார்க்க என் வீட்டுக்கு வா உட்காந்து பேசலாம் ” என்று கூறினான் . அரவிந்த் , ” கண்டிப்பா மச்சான் வருகிறேன்” என்று போனை துண்டித்தான் . அவன் இரவு அவனை காண சென்றான் . அவனிடம் நடந்ததை கூறி ஏதாச்சும் வழி இருக்க என்று கேட்டான் . கதிர் அவனிடம் , ” வழி இருக்கு மச்சான் கவலை படாத”. அரவிந்த் அவனிடம் , ” என்ன வழி மச்சான் ?” என்று கேட்டான் . அவன் , ” மச்சான் உன்னுடைய அப்பா சம்பாதித்த சொத்து அதனால் அவர் உரிமை இல்லாமல் நீ ஒன்றும் செய்ய முடியாது , நீ கல்யாணம் பண்ணிக்கோ , அந்த பெண்ணிடம் உன்னுடைய கண்டிஷன் எல்லாமே சொல்லு உன்னுடைய கனவு இலவச கல்வி எல்லாமே சொல்லு நீ சொல்லியும் அந்த பெண் உன்னை கல்யாணம் செய்ய சம்மதித்தாள் , அவள் ரொம்ப நல்ல பெண்ணாக இருப்பாள் உனக்கு உறுதுணையாக இருப்பாள் . நீ நினைத்தது நிறைவேறும் ” என்று கூறினான் . அரவிந்த் , ” நான் அவளிடம் எல்லாமே சொல்லிவிட்டேன் அதற்கு அவள் தனக்கு பிரச்னை இல்லை நான் கல்யாணத்தை நிறுத்த மாட்டான் உங்களுக்கு வேண்டும் என்றால் உங்கள் அம்மாவிடம் சொல்லி கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று சொல்கிறாள் . இப்போது நான் என்ன செய்ய மச்சான் ” . கதிர் , ” அரவிந்த் , நீ சொல்லாத வச்சு பார்க்கும் போது அந்த பெண்ணுக்கு பெரிய அளவு செல்வாக்கு இல்லை என்று தெரிகிறது , உன் அம்மா கூறியதை வைத்து தனக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கிறது என்று வருகிறாள் . ஆனால் அவள் சொல்வதில் ஒரு திமிரு இருக்கிறது . உன்னிடம் ஒரு பயமும் இல்லாமல் உங்களால் முடிந்தால் கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று கூறுகிறாள் , அவளுக்கு நன்கு தெரிந்தது உன்னால் கல்யாணத்தை நிறுத்த முடியாமல் அவளிடம் பேசிருக்கிறாய் என்று , அவள் கொஞ்சம் புத்திசாலி தான் . அவளை கல்யாணம் பண்ணிக்கோ , உங்க வீட்ல சொல்லு ஆடம்பர கல்யாணம் வேண்டாம் பதிவு திருமணம் போதும் என்று அவர்களை சம்பாதிக்க வை அந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோ . கல்யாண சான்று கையெழுத்து வாங்கும் போது கூடவே ஒரு விவாகரத்து சான்று வை அவள் வாசிக்க வாய்ப்பு இல்லை அவளுக்கு உன்னுடைய சொத்தில் விவாகரத்திற்கு பிறகு எந்த சம்பந்தமும் இல்லை என்று சான்று தயாரித்து விடு . உனக்கு ஒரு வருடத்திற்குள் அவளை பிடித்திருந்தால் விவாகரத்து விசயத்தை அவளிடம் சொல்லாதே அவளுடன் வாழு பிடிக்கவில்லை என்றால் அவளிடம் சொல்லிவிடு ” என்றான் . அரவிந்த் , ” யோசனை நல்ல தான் இருக்கு ஆனால் அவள் அதை படித்து விட்டால் மொத்தமும் பாழாக போயிரும்.” கதிர் , ” கவலை படாதே , உன் கல்யாணம் உன் வீட்டில் நடக்கும். எப்படியும் கையெழுத்து வாங்கிறலாம்.” என்றான் .
இனி என்ன நடக்கும் ? அவளிடம் கையெழுத்து வாங்கிவிடுவான ? அவள் யார் ? எப்படி இப்படி ஒரு வாழ்க்கைக்கு அவள் தயாராகிறாள் ?
இனி வரும் அத்தியாயத்தில் ………..
தொடரும்……………………