ம்.. எனக்கு இது மறந்தேபோச்சு.. ” சரி.. நாம்ம கீழ போகலாம். நீ பிரஷ்ஷாகி ரெடியா இரு. நான் வீட்டில் இல்லையென்றாலும்.. பக்கத்தில் நாள்முழுவதும் திறந்துயிருக்கும் கடை இருக்கு. வாங்கிவந்து போட்டு எடுத்துட்டு வரேன். நான் கடைக்கு போன சொல்லுறேன். இன்பா கூட இங்க வந்து படுத்துக்கோ. ”
” ம்.. சரி ” அவன் அவளை அப்படியே அள்ளிக்கொண்டே எழ.. “தனு என்ன பண்ணுறிங்க!.. யாராவது முழித்து இருப்பாங்க. கீழயிறக்கி விடுங்க. ”
” யாரும் விழித்துயிருக்க மாட்டாங்க. அரசி கொஞ்சம் எடை கூடியது போல இருக்க. “
அவனை முறைத்தவள்.. ” மூனுநேரமும் மூனுபேர் சாப்பாடு நிறைய ஊட்டிவிட்டா. பின்ன ஏறமா?. ”
” ம்.. அப்படியே நாங்க ஊட்ட ஊட்ட வாங்கி சாப்பிடுற பார். உனக்கு ஊட்டிவிடுவதற்கு உள்ள இரண்டு குழந்தைகளுக்கு ஊட்டிவிடலாம். அவ்வளவு போக்குகாட்டுற. ”
” சரி சரி அமைதியா வாங்க. படியில் பேசினா அப்படியே இரண்டாவது மாடியில் இருந்து கீழவரைக்கும் கேட்கும். ” சரி என அவள் நெற்றிமுட்டி அழைத்துச்சென்று சங்கவி அறைமுன் இறக்கிவிட்டான்.
மெட்டைமாடியில் மூவர்தவிர அனைவரும் தரை, முதல் தளத்தில் இருந்தனர். அரசி உள்ளே செல்ல. வேந்தன் கீழே சென்றான். வசு, மேகா இன்பாவை பார்த்தனர்.
காதில் குளிருக்கும், இவர்கள் எழுவார்கள் என்று தெரியுமாககையால் காட்டன்பஞ்சை காதில் வைத்து.. கண்களில் வெளிச்சம் வந்தால் தெரியாமல் இருக்க கவர்( sleeping cover) அணிந்தும்.. ஆழந்த உறக்கத்தில் இருந்தான்.
வேந்தன் படிகளில் இறங்கிய போதே பெண்கள் பேச்சு குரல் அதிகம் கேட்க.. அங்குயிருந்தவர்களை இந்நேரத்திலேயே எதிர்பார்க்கவில்லை. ” அக்கா, அண்ணி என்ன இவ்வளவு சீக்கிரமா?. ”
யோகா, ஆர்த்தி, இளமதி, சுரபி, சாருலதா இவர்களை வினோத் அழைந்து வந்திருந்தான். அங்கு காவ்யா, தாமரை, ரேவதி, வினோ எழுப்பியதால் ஹாலில் படுத்துயிருந்த இவர்கள் தவிர.. குழந்தைகளும், வித்யாவும் உள்ளே படுத்திருந்தனர்.
” இங்க வந்து ரொம்ப நாளாச்சுல.. அதான் பசங்களை வீட்டில் எங்க வீட்டுகார்களிடம் வீட்டுவிட்டு.. அவங்கயெல்லாம் எழும் முன்ன சீக்கிரமே வந்துட்டோம். சித்தப்பா, மாமா கொஞ்சம் நேரத்தில் வருவாங்க டா. “
ஓ.. அதான் மாமா யாரும் வரலைனு மெசேஜ் செய்தார்களா. சரி என தலையசைக்க.. அந்நேரத்தில் பத்மா, சித்ராவும் வெளிவந்தனர்.
” அண்ணா நீங்க என்ன இந்நேரத்திலயே?. ”
அனைவரும் முக்கியமானவர்கள்.. யாரும் எழும் வாய்ப்பில்ல.. இல்லை ஒன்று இரண்டுபேர் இருப்பார்கள் சமாளிக்கலாம் என நினைத்துவர.. அய்யோ எல்லாம் ஓட்டுவாங்களே. சரிடா என்ன பண்ணிவிடுவாங்க?.
” அது வினோ.. சத்துமாவு கஞ்சி வைத்து எடுத்துட்டு போலானு வந்தேன். மாவு இருக்குல?. ”
” யாருக்கு மட்டும் ” சுரபி சிரிப்புடன் கேட்க..
” ஏன் உங்களுக்கும் வேண்டும்மா?. ”
” கொடுத்தா குடிக்கலாம்.”
புன்னகையுடன் வினோவை பார்த்தான்.
” ம்.. மாவு இருக்கு ண்ணா. ”
எழுந்தவன்.. ” சரி யார்க்கு டீ, காபி வேண்டுனு சொல்லுங்க. நானே போட்டு எடுத்துட்டு வரேன். வினோத் நீ மாடில முதல் ரூம் சென்று ரெஸ்ட் எடு. ”
” இல்லடா.. தூக்கம் வரல. நானும் உன்கூடவே வரேன். ”
சரி என தலையாட்டி.. மற்றவர்களை பார்க்க.. அவர்கள் தேவையானதை கூற.. பின் வினோத்துடன் பேசிய படி உள்ளே சென்றான்.
” யோகா அக்கா.. காலையில் சாப்பிட இட்லி, இடியாப்பம், சப்பாத்தி உடன், வெஜ்கிரேவி, நான்வெஜ் மட்டன் தொக்கு, நாட்டுக்கோழி குழம்பு மட்டும் சொல்லியிருக்கு. அங்க கருவாடு குழம்பு பண்ணமாட்டாங்களா. எல்லோருக்கும் பிடிக்கும் இல்ல. அதை மட்டும் வீட்டில் சாதம் வைத்து வைச்சுக்கலாமா?. ”
” ம்.. வைக்கலாம்தான். ஆனா?. ” என்ன என்பது போல வினோ பார்க்க?. ” நீ யாருக்கு வைக்கனும் நினைக்கிறீயோ.. அவன் சாப்பிடுவானா என்று தெரியவில்லையே?. ” ஏன் என அவள் பார்க்கும் வேலையில்..
” யோகா அக்கா?. அண்ணாக்கு வினோ அக்கா வைப்பது ரொம்ப பிடிக்கும்மே?. ” வசு, வரும்போதே கூறிக்கொண்டு வர.
அவள் அருகில் இருந்த மேகா.. வசுவை பார்த்தவாறே.. ” எழிலரசிக்கு.. கருவாடு வாசனையென்றாலே பிடிக்காது. லைட்டா வாசம் வந்தாலே வாமிட் பண்ணிவிடுவா. ”
வினோ.. இளமதியை பார்க்க. ‘ ஆம் ‘ என தலையசைக்க..
” அதனால என்ன வினோ. எழில் மாடியில் தானே இருக்கா. நீ பண்ணு வேந்தன் சாப்பிடுவான். ”
மாமியார் வீட்டில் மகள் ஆசையாக செய்கிறேன் எனக் கூறுவதாலும்.. அவனிற்கு பிடித்த உணவை.. இப்போது விட்டால் இந்த உணவை எப்போதும் சாப்பிட மாட்டேன் என்று கூறவும் வாய்ப்பிருக்கிறது என்பதால் கூற..
” இல்ல ம்மா. நான் அண்ணாவிடம் எதுக்கும் கேட்டுகிறேன். வேண்டானா.. இன்னைக்கு பண்ணமா நான் நாளைக்கு எங்களுக்கு செய்துக்கிறோம். “
அவர்களின் அண்ணாவை கவனித்தவள்.. அண்ணியை கவனிக்கவில்லை என கூறக்கூடாது பத்மாவை பார்க்க. நேற்று கோப்பட்டதை பார்த்தும் கூட வேண்டாம் என்றா கூறுவார். சரி என தலையசைக்க.. யார் வீட்டில்.. யாருக்காக.. எங்களுக்கு வேண்டாம் என கூறுவது என்று. ரேவதி தன்அம்மாவை முறைக்கதான் செய்தாள். ஆனால் அண்ணாவை நினைத்து அமைதியாக இருந்தாள்.
” வினோ இங்க வாயேன். ” வேந்தன் அழைக்க.. வினோவுடன் யோகாவும் சென்றார். அவன் அனைவருக்கும் எடுத்து வைத்துயிருக்க.. ” வினோ இதை கொடுங்க. நான் கொஞ்ச நேரத்தில் வரேன். ”
அவன் அவர்களுக்கு பதில் அளிக்க இடம் கொடுக்காமல் வெளியே வர.. அவனின் பின்னால் வினோத் காபி கப்புடனும் வர..
” டேய் ஒருநிமிஷம் நில்லுடா. ” காபி தட்டை வசுவிடமும், சங்கவியிடமும் அனைவருக்கும் கொடுக்க கூறி..
” டேய் வினோ கடுவாடு குழம்பு வைக்க நினைக்கிறா.. ” முடிக்கும் முன்..
அக்கா கேட்க வருவது புரிந்து வினோவிடம் திரும்பியவன்.. ” வினோ அரசி சாப்பிடுவா. நான் சொல்வது போல கொஞ்சமும், நீ வைப்பது போல கொஞ்சமும் வை. நான் கொஞ்ச நேரத்தில் வந்து சொல்லுறேன். ”
அப்படா என்ற நிம்மதி புன்னகையுடன்.. ” சரி அண்ணா. ”
” சரி நீ எதுக்குடா இப்படி பறக்குற?. ”
யோகாவின் அருகில் சென்று.. ” அக்கா.. அரசி என்னாக மொட்டை மாடியில் வெட்டிங். ” கையில் ஒருகப் மட்டும் இருக்க.. புன்னகையுடன் சரி எனதலைசைக்க. வினோத் அறைக்கு செல்ல.. அவன் அரசியிடம் சென்றான்.
” என்ன அவ்வளவு தூரத்தில் இருக்கு?. எப்படி எடுக்க?. ” தனக்கு வேண்டியதை எடுக்க.. ஏதாவது இருக்கிறாதா?. என சுற்றிலும் பார்த்தாள்.
தன் முயல்குட்டியின் செயலை பார்த்தபடி வந்தவன்.. ” இந்தா குடிச்சுட்டு தெம்பா.. இன்னும் எடு. பக்கத்து வீட்டு திருட்டு நெல்லிகாய்.. இன்னும் சூப்பரா இருக்கும். ” அவள் முறைப்புடன் வாங்க.. அவளை சுவரில் உட்காரவைத்து.. அவன் சாய்ந்தபடி நின்றுக் கொண்டான்.
” கொழுப்பா தனு . இந்த நெல்லிகாய் அங்க ரொம்ப பார்த்ததில்ல. மரத்தில் பிரஷ்ஷா பார்த்தவுடன் சாப்பிட தேனுச்சு. ஆனா எந்த வீட்டு மரம் என்று பார்க்கல. ” குடிக்கும்.. அவள் இதழை அவன் பார்த்தவாரே அவள் கூறுவதை கேட்டான்.
அவன் பதில் அளிக்காமல் இருப்பதை பார்த்தவள்.. ” தனு இந்தாங்க. ”
” எனக்கு வேண்டாம்.. உனக்கு மட்டும்தான். ” கள்ளப் புன்னகையுடன் கூற..
ஏன் என கேட்காமலே.. கப் பார்த்தவுடன் ஞாபகம் வர.. உதயாமாகி கொண்டுயிருக்கும் ஆதவனின் நிறமாகி போனது அவளின் வதனம். ஆனாலும் தன்னவனை பார்த்தபடியே தான் குடித்தாள். அவனும் வேண்டும் என்றோ?. அவள் வேண்டும்மா?. என்றும் கேட்கவில்லை. சில நிமிடங்கள் கடந்த நிலையில்..
” முயல்குட்டி.. இப்ப யார்?. யாரை வசியம் செய்து வைத்துயிருக்கா?. ”
வெக்கத்தை மறைத்து.. கண்களை சிமிட்டு.. உதட்டை பிதுக்கி.. தோளை குலுக்கி தெரியவில்லை எனக் கூற.. அவளின் வதனம், செய்கை அவனை ஏதோ ஏதோ செய்தது. அவளின் மிக அருகில் நின்றவன்.. தன்னவளின் கைகளை பற்றிக்கொண்டு அமைதியாக நின்றான். ‘ மனதிலே எப்ப முயல்குட்டி உன் தனுவா மாறாப்போறேனு இருக்கும்டி. கொல்லுறடி முயல்குட்டி!.. ‘
” வேந்தா.. வேந்தா.. ” அழைப்பு கேட்க…
” தனு இது.. யோகா அண்ணி வாய்ஸ் மாதிரி இருக்கு?. ” கைகளை தன்னவள் உணராதவாறு விடிவித்துக் கொண்டே.. ‘ அய்யோ சொல்லவே மறந்துடேன் ‘ அவளை பார்த்து ‘ ஆம் ‘ என தலையாட்ட..
அவர்கள் எதிரில் சித்ரா, பத்மா உட்பட அனைவரும் படியில் இருந்து வெளிவர.. அவர்கள் பார்க்கும் முன் அவள் கீழ் நின்றும்.. இருவரும் தள்ளியும் நின்றுயிருந்தனர். கப்பை வாங்கி பின்னால் வைத்துவிட்டான்.
அவர்கள் படியின் எதிரே எதிர்பார்க்க.. இவர்கள் பக்கவாட்டில் நின்றுயிருக்க.. அங்கு எழிலரசியை பார்த்து.. புன்னகைப்பதா?. முறைப்பதா தெரியாத நிலையில் நின்றார்கள்.
” வாங்க அண்ணி.. ஹாய் ஆர்த்தி அக்கா. ” அவள் முறைக்க.. அப்படியே அருகில் சிரிப்புடன் இருந்தவளிடம் மெதுவாக ” சுரபி அண்ணி எப்ப வந்தீங்க?. ”
” நாங்க வந்து ஒருமணி நேரம் ஆகப்போகுது. அண்ணா சொல்லலையா?. ”
இல்லை என தலையாட்டிய படியே தன் அம்மா, தங்கைகளுடன் நின்றவனை முறைக்க.. அவன் ‘ சாரிடி மறந்துட்டேன். ‘ என்பது போல திருப்பி திருப்பி பார்த்தான்.
‘ இவனை.. ‘ திட்டிக் கொண்டுயிருந்தவளை.. ” இது என்ன டிரஸ் எழில்?. எங்கயிருக்க?. இதை போட்டுயிருக்க. ஒழுக்க முதலில் போய் குளித்து சாரி இல்ல சுடி போடு. ” இளமதி கூற.. ஆர்த்தியும் போ என்று பார்த்தாள்.
இவர்களை பார்த்திருந்தவன் தன்னவளின் முகத்தில் சிறு மாற்றம் தெரிய.. அவர்களிடம் வந்துவிட்டான். அவர்கள் என்ன கூறியிருப்பார்கள் தெரிந்து.
” இளமதி அரசி வேண்டாம் தான் சொன்னா. நான்தான் அவள போட சொன்னேன். ”
” ஏன் வேந்தன் இப்படி பண்ணுறீங்க? இது வினோ வீடு.. கல்யாணப்பொண்ணு இப்படி பாவாடைதாவணியில்?.. ”
” இளமதி வீட்டில் நமக்கு வசதியா, நாகரீகமா தெரியும் படியான உடை எதுவுமே போடலாம். ”
தன்னவளிடம் திரும்பியவன்.. ” அரசி.. நீ ரூம்மிற்கு போ. வரேன். ” அவளை யாரும் கேள்வி கேட்பது பிடிக்காமல் கூற. அவளும் எதுவும் கூறாமல் சென்றுவிட.. ஏன் போகிறாள்?. என மாடியை சுற்றி உள்ள வீடுகளை பார்த்துக் கொண்டுயிருந்தவர்கள் அவளையும் பார்த்தனர்.. உடையையும் பார்க்க தவறவில்லை.
காவ்யாவுடன் நின்றுயிருந்த யோகா.. ஏன் போகிறாள்?. என பார்க்க.. தன் தோழியின் முகத்தை வைத்தே புரிந்தது.
” ஏன் ஆரு.. உங்களுக்கு தெரியாதா. அவன் எல்லாம் தெரியாமையா போட சொல்லியிருப்பான். தூங்கும் முன்தான் போட்டு.. அவ மாடியில் தான் இருந்துயிருப்பா. ”
” ம்.. உன் தம்பிய நீதான் மெச்சிகனும். நேத்து அவர் பண்ண வேலையை. சங்கவி சொல்லி இப்பதானே கேட்டோம். இவள இப்படி பார்த்தா.. திருப்பி அவங்கள ஏதோ விதத்தில் எழில் மேல இன்னும் கோபமாக்கும்.
நீயே பாரு. அவங்க யாராவது.. ஏன் உன் சித்தி முதற்கொண்டு அவ பக்கத்தில் வந்தாங்களா. இப்ப இந்த வீட்டலையே.. அவர் கல்யாண பண்ணுற முறையில் இரண்டு பொண்ணுங்க இருக்காங்க. என்னடா இந்த பெண்ணு இப்படி இருக்கு? நாம்ம தப்பு பண்ணிவிட்டோமே நினைக்ககூடாது. பத்மா அம்மா பேச்சிற்கு கூட கம்பேர் பண்ணிகூடாது. அதுக்குதான் யோகி. ”
” இங்க பாரு ஆரு. நீ சொன்னதெல்லாம் விடக்கூட ஜாஸ்தியாவே பேசியிருப்பாங்க தான். ஆனா அது எழில் எப்படி நடந்துக் கொண்டாலும் நடக்கும். அதெல்லாம் தெரிந்துது தான்.. வேந்தன் அவன் ஆசைபடுவதை எல்லாம் செய்றான். ”
அவனை இளமதி தேட.. ” மதி அவன் உன் தங்கச்சிய சமாதானம் செய்ய அப்பவே கீழ போய்யிட்டான். ”
யோகா கூறியது போல நேற்று மாலையே அவர்கள் கிளம்பியவுடனே நடந்தது. தன் மகள் இங்குயிருக்க.. பொதுவான விஷயங்களை கலந்தவாறு எழிலரசியை பற்றி பேசினார்கள்.
புன்னகையுடன் வினோவின் அருகில் சென்றவர்கள்.. ” வீடு துடைக்க ஆள்யிருக்காங்க தானே. ” ஆம் என கூற..
” ம். சரிவா வினோ நாம்ம கீழ போலாம். ?. குழம்பு செய்து சாப்பிட்டு.. எல்லாம் குளித்து கிளம்பனும். நாம்ம கிளம்பும் முன்ன துடைத்துவிட்டா இன்னும் நல்லாயிருக்கும். ”
” சரிக்கா.. ஆடர் பண்ணியது கொஞ்ச நேரத்தில் வந்துவிடும். அதற்குள்ள வீட்டிலும் செய்துவிடலாம். ” இவர்கள் ஐவர்மட்டும் கீழே வந்தனர்.
நால்வர் ஹாலிலே உறங்க.. இன்பாவை அரசி கீழே போககூறி.. அவனும் , மூவர் மற்றொரு அறையில் இன்னும் உறங்கிக் கொண்டுயிருக்க.. அரசியிருக்கும் ரூம்மில் சத்தமில்லாமல் நுழைந்து.. குளிக்க தயார் நிலையில் இருந்த தன்னவளிடம் வந்தவன்..
” அவங்க சொன்னாங்க என்பதற்காக நீ உடனே குளிக்க கிளம்பிட்டியா?.. “
” ம்.. அக்கா, அண்ணி இருப்பதால் கீழ போகனும் இல்ல. உங்க ஆசைக்கு நான் போட்டுட்டேன். அவங்க என்னைய ஏதும் சொல்லிடக்கூடாது தானே சொல்லுறாங்க. அதனால்தான். ” அம்மா முதற்கொண்டு அனைவரின் பார்வையும் பாத்தானே. அதுவும் சரிதான் என நினைத்தவன்..
” சரி.. நீ சுடி மாற்றிவா. காலை சாப்பாடு நான்வெஜ். அதனால டிரஸ் எடுக்க போவதால் சாப்பிட்டு வந்து தலைகுளிச்சுக்கோ. அதுவா காய்ந்துவிடும் என்று முடிவிட்டு பின்னிறாத. பேக்கில் டிரையர் இருக்கு.. எடுத்து காய வைத்துவிடு. சரியா. “
சரி என தலையசைத்தவள். அவனின் அனுசரனையில் கன்னத்தில் எக்கி முத்தமிட.. அவளின் மச்சம் அவனைவா என அழைக்க.. அவளை அப்படியே தூக்கி அழுத்த அதில் முத்தமிட்டான். அவளின் மொத்த கூந்தலை எடுத்துவிட்டு.. சிறு கிளிப்பில் அடக்கி.. சிறு பகுதியை மச்சத்தின் பக்கம் கொண்டுவிட்டான்.
” முயல்குட்டி இனி இப்படி இருக்க மாதிரி பாத்துக்கோ. முதல்முத்தம் கொடுக்கும் வரை என்னால கட்டுபடுத்த முடிந்தது. ஆனா இனி சுத்தமா முடியாதுடி. ” பாவமாக கூற..
புன்னகையுடன் அவனை பார்த்து ம்ஹூம்.. முடியாது என கூந்தலை பின்பக்கமாக போட்டுக்கொண்டு.. ” இதேபோல எந்நேரம் போடமுடியாது தனு. பூ வைக்கும் போது பின்னல் போடனும்.. அப்பதான் நல்லாயிருக்கும். அதனால நீங்கதான்.. ”
அவளின் இடை இழுத்து இறுக்கி.. கழுத்தில்புதைந்து மச்சத்தில் அழுத்த முத்தமிட்டு.. ” தோன்றும் போதெல்லாம் இப்படி முத்தம் கொடுப்பேன்.. வாங்கிக்கோ முயல்குட்டி. டிரஸ் மாத்திட்டுவா. ” அவளின் நெற்றி முட்டி கூறி.. மனம்முழுவதும் அவளை நினைத்து துள்ளலுடன் ஹாலில் இருந்த ஒற்றை ஷோபாவில் அமர்ந்தான்.
தன்முன் இருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தவள்.. தன்னவன் அளித்ததையும் நினைத்து.. கைவிரல் தானாக அங்கு சென்றது. அவன் இதழின் ஈரமும், மீசையின் குறுகுறுப்பும் இன்னும் தன் உடல் உணர்ந்தது சிலிர்த்தது. அதே உணர்விலே உடைமாற்றி வெளியே சென்றாள்.
இவள் வரவிற்காகவே காத்திருந்து.. அங்குயிருந்தவர்ளை வேந்தன் எழுப்பி.. அவர்களிடம் பிரஷ்ஷாகி விட்டு சீக்கிரம் கீழே வாருங்கள் என கூறிக்கொண்டுயிருக்க.. ஏற்கனவே அறையில்இருந்த இன்பா, கமலேஷ், வினோத், சந்துரு வேந்தனின் குரல்கேட்டு வெளியே வர.. அவர்களுடன் கீழே சென்றான்.
வேந்தன் சமையல்அறையில் இருந்து வெளி தோட்டத்தில் இருந்த அரசியை பார்த்துக்கொண்டே தன் வேலையை செய்துக்கொண்டுயிருந்தான்.
” ஏன்டா நானே செய்யுறேன் தானே சொன்னேன். பின்ன நீ ஏன் பண்ணுற?. இத்தனை பேர் இருக்க.. நீ செய்வதை சித்தி பார்த்தா திட்ட போறாங்க. ” இவனை என்ன பண்ணலாம் என்று ஆர்த்தி, இளமதி நினைக்க..
” அக்கா நீங்க ஆரம்பிக்கும் போது வந்துட்டேன். நீங்க செய்தை சாப்பிட்டு அரசி வாட்மிட் பண்ணிடா அவ்வளவுதான். இனி சாப்பிடவே மாட்டா. நானே எவ்வளவு கஷ்டப்பட்டு பழகி வைத்துயிருக்கேன். நீங்க அதை கெடுத்துவிட பார்க்கிறீங்க. முடிச்சுடேன் க்கா. நல்லாயிருக்கா பாருங்க. ”
சுவைத்து பார்த்தவள்.. ” ம்.. சூப்பரா இருக்குடா. வாசனையும் அதிகம் இல்ல. ” மற்றவர்களும் சுவைத்தனர். ” அண்ணா.. நான் வைத்தவிட நல்லா இருக்கு. இதை யாரிடமும் முதலில் கொடுத்துவிடாதிங்க. அப்புறம் எனக்கு தான் பிரச்சனை. அண்ணிக்கு புளிப்புனா ரொம்ப பிடிக்கும்மா?. ” ஆம் என புன்னகையுடன் தலையசைக்க..
” ஓ.. அப்ப மாடியில் நெல்லிகாய் பறிச்சுயிருந்தே.. அவங்கதான் பறிச்சாங்களா?. ”
” ஆசையா பறிச்சா!.. அங்கேயேவா இருந்தது. இந்த நெல்லிகாய் அங்க கிடைக்கலனு சொன்னா. வினோ நீ பக்கத்து வீட்டில் கேட்டு வரியா?. சரினு சொன்னா போகும் போது கொஞ்சம் பறிச்சு எடுத்துட்டு போகனும்.”
” வேந்தன் கொஞ்சம் முச்சுவிட்டு பேசுங்க. உங்கள போட்டோல பார்த்துட்டு மாமானார் ரொம்ப பேசவே மாட்டீங்கனு சொன்னாங்க. நான் நீங்க ஸ்கூலில் வாய்யடிச்சதை சொன்னா நம்பவே மாட்டேங்கிறாங்க. அவங்க முன்னாடி ஒருதடவை இப்படி பேசுங்களே. ”
புன்னகையுடன்.. ” மதி நீ இவன உங்க மாமானார் பக்கத்தில் எழில நீக்கவை. பேச்சு அப்படியே அருவி மாதிரி கொட்டும். ” அக்காவை முறைத்தவன்..
” உண்மையை தானே சொல்லுறேன். இப்பவே டெஸ்ட் பண்ணட்டுமா?. ”
” டெஸ்ட் பண்ண தேவையில்ல. உண்மைய ஒத்துக்குறேன். அவளேயே சொல்லிட்டு இருக்காதிங்க. அரசிய தான் தப்பா பேசுவாங்க. ” சற்று வருத்தத்துடன் கூற..
” டேய் நான் விளையாட்டிற்கு தான்டா சொன்னேன். நீ தேவையான நேரத்தில் நல்லா பேசுவதான். ஆனா மற்ற நேரத்தில் முகம் மட்டும் கொஞ்சம் உம்முனு இருக்கும்.
ஆனா இப்ப தூக்கம்போது கூட சிரிக்கிட்டே தூக்குற. இரண்டுதடவ டிரஸ் மாத்துற. நாங்க உறுதிக்கு பிறகு உன்முகத்தில் தாடியே பார்க்கல. அடிக்கடி வேஷ்டி கட்டுற. ஒரே மாதிரி செயின் போட்டுயிருக்கீங்க. ”
” அக்கா இதவிட்டிங்க.. எழில் நெற்றியில் இருக்க மாதிரியே அச்சு அசலா மஞ்சள்.. ” அடுத்து கூற வரும்முன்..
கை எடுத்து கும்பிட்டு.. வெக்கப்புன்னகையுடன்.. ” போதும்.. போதும் இதுவரை சொன்னதேபோதும். நான் வெளிய போறேன். ”
போனவன் திரும்பிநின்று.. ” வினோ.. முதலில் பசங்களோட இருக்கவங்களையும், சாப்பிட வேண்டும் என்பவர்களை சாப்பிட வை. அவங்க கிளம்ப சரியாஇருக்கும். அவங்க சாப்பிட்ட பிறகு நம்மயெல்லாம் ஒன்னா சாப்பிடலாம். ”
“ சரி அண்ணா. நீ அண்ணிக்கிட்டயா போறா. ” புன்னகையுடன் கேட்க.
அவளுக்கு செல்லமுறைப்பை செலுத்திவிட்டு.. அரசியின் அருகில் புன்னகையுடன் நிற்க.. அவனின் சிவந்த கன்னத்தை பார்த்தவள்.. எட்டி சமையல் அறை பார்க்க அவர்களின் சிரிப்பு சத்தத்திலேயே புரிந்தது.. தன்னை வைத்து தனுவை ஓட்டியிருக்கிறார்கள் என்று.
வேந்தன் வினோவிடம் கூறியது போவே ரேவதி, காவ்யா என பசங்களுடனும் மேலும் சிலர் முதலிலும், மற்றவர்கள் ஒன்றாக அமர.. வசு, மேகா, சங்கவி பரிமாறினார்கள். வேந்தன் அரசிக்கு என்று செய்த குழம்பின் ருசி.. அருமையாக இருக்கும் என.. சித்ரா முதல் யாரும் எதிர்பார்க்கவில்லை. கொடுத்து வைத்தவள் எழிலரசி என்று நினைக்க வைத்தான் அவளின் மணவாளன்.