” வாங்க சம்மந்தி.. வாங்க பெரிய சம்மந்தி.. வாங்க எல்லோரும்.. ”
” ம்.. வரோம் சம்மந்தி.. எப்படியிருக்கிங்க சுவாமிநாதன்?. ”
” ம்.. நல்லாயிருக்கோம். உங்க பையன் கல்யாண வேலைக்கு வரும்போது தான் எங்க வீட்டிற்குகே வரீங்க. ”
” ஆமாம்.. அதுக்கான நேரம் இப்பதான் அமைந்துயிருக்கு. ” புன்னகையுடன் பேசியபடி வேந்தனின் பெரியப்பா மாணிக்கம் உடன் சாந்தி, ரவிந்திரன், எழிலரசியின் அப்பா அருணாச்சலம், லட்சுமி, இளமதி குழந்தை தீக்ஷா, அத்தை அம்பிகா.
வந்தவர்கள் அனைவரும் ஷோபாவில் அமர.. ” எங்க எல்லாம்?. கிளம்பிட்டாங்களா?. ஆனா என்ன சத்தம் கம்மியா இருக்கு?. ”
” ம்.. பாதி பேர் தான் இருங்காங்க. காலையில் வந்தவங்க எல்லாம் மாடியிலும், இங்கயும் கிளம்புறாங்க. வேந்தன், எழிலரசி அவங்க நண்பர்கள், மச்சான் எல்லாம் இங்க சந்துருனு பிரண்ட் வீட்டிற்கு போயிட்டு அப்படியே அங்க இருந்தே கிளம்பி வந்துவிடுறோம் சொல்லிட்டாங்க. ”
” அதுவும் சரிதான்.. எல்லோரும் சீக்கிரமா கிளம்ப முடியாது இல்ல. ” ரேவதியும், பத்மாவும் காபி கொடுக்க.. அவர்கள் மற்ற விஷயங்களை அதை குடித்தபடியே பேசிக் கொண்டுயிருக்க.. மாடியில் இருந்தவர்களும் குளிந்து சுடி மாற்றி சேலையுடனும்.. சிறு பெண்கள் சுடியுடனும் வந்தார்கள்.
” அப்பா இப்பதான் வந்தீங்களா?. ” வசு ரவியிடம் அவர் அருகில் நின்றபடி கேட்டாள்.
” 10நிமிடம் இருக்கும் மா. ”
” அப்பா உங்களிடம் ஒன்னு சொல்லனும்.. மாடிக்கு போகலமா?.. ” அவளிற்கு வேந்தன் இல்லாத நேரம் பேசவேண்டிய விசயம் இருந்தது.
மகள் கூறியதும் சித்ராவை பார்க்க.. அவர் சாந்தியுடன் பேசிக்கொண்டுயிருந்தார். ” சரிம்மா பேசலாம் அண்ணா வந்துவிட்டும். ”
” இல்ல இப்பவே பேசலாம். ” சற்று பிடிவாதம் இருக்க..
அவர் அருகில் இருப்பவர்களை பார்த்தார். அவர்களில் பெண்கள் மகள், மருமகள் உடன் பேசிக்கொண்டுயிருக்க.. அருணாச்சலம் மேகாவிடம் பேசிக் கொண்டுயிருந்தார்.
” சரிம்மா நான் வினோ ரூம்மிற்கு போறேன். நீ அம்மா, அக்காவோட மாடிக்கு வா. ”
மெல்லிய புன்னகையுடன்.. ” சரிப்பா. ” உடனே அவள் சித்ராவின் முன் நின்றாள்.
இவர்களின் பேச்சுவார்த்தை மெல்லிய குரலில் இருந்ததால் யாருக்கும் கேட்கவில்லை. சாதாரணமான உரையாடல் போல இருந்தது.
மாடியில் அவர் தன் மகளின் அறையை பார்ப்பது போல செல்ல.. சில நிமிடங்களில் அப்பா கூப்பிடுகிறார் என சித்ரா, வினோவை அழைத்து வசுந்தரா மாடிக்கு சென்றாள்.
” சொல்லுமா இங்க வந்து பேசும் அளவிற்கு என்ன விஷயம்?. ” சாதாரணமாக கேட்க.
” அப்பா எனக்கு இப்ப அண்ணா கல்யாணத்திற்கு என்று போட வைர நெக்ஸ், ஆரமும் வேண்டும். ” சாதாரணம் போல் கேட்க.. வினோ, ரவி அதிர..
சித்ரா ” வசும்மா.. அதான் நீ காலையில் கேட்ட அப்பவே.. அண்ணாவிடம் சொல்லி வாங்க தரேனு சொன்னேன் தானே. பின்ன எதுக்கு அப்பாவிடம் கேட்குற?. ” சித்ரா கூறியது அதைவிட அதிர்ச்சி தர..
” சித்ரா என்ன பேசுற?. வேந்தனை கேட்டாமலையே இதெல்லாம் வாங்கி தரச் சொல்லுறேனு வசுவிடம் உறுதிபடுத்துற. அவன் வாங்கி தர முடியாது சொல்லிட்டா என்ன பண்ணுவ?. ”
” ஏன் வாங்கி தரமாட்டான்?.”
அவரை முறைந்தவர்.. ” சித்ரா வசு கேட்பது தங்கம் கிடையாது. வைரம். ”
” வைரம் தானே.. அதனால என்ன?. அவ ஆசையா அண்ணா வாங்கி தந்து.. அவன் கல்யாணத்தில் போட.. உரிமையா கேட்குறா. அவன் வாங்கி தரமாட்டானா?. ”
” இவ்வளவு அதிகமா வாங்கி தரலாம். ஆனா இப்ப இல்ல. வசுக்கு வாங்கினா.. வினோவிற்கும் வாங்கனும். பின்ன எழிலரசிக்கு அவன் தான் எல்லாம் பண்ணுவேனு சொல்லியிருக்கான். மருமகளிற்கு இன்னும் ஆரம்பித்த மாதிரி தெரியல. அதனால.. ”
” அதான் அவன் ஒரு பெட்டி நிறைய நகை வாங்கி வைத்துயிருக்கானே. இதுக்கும் மேல வாங்க.. போட என்னயிருக்கு?. ” அவர் மறந்து வாய்விட..
வசுவிற்கு இதயம் அய்யோ போச்சு என துடிக்க.. ரவி, வினோவிற்கு என்ன சொல்லுறார்?.
” புரியல சித்ரா. வேந்தன் பெட்டி நிறைய நகை வைத்துயிருப்பது.. உனக்கு எப்படி தெரியும்?. நீ எங்க பார்த்த?. வேந்தன் சொன்னானா?. “ அவர் கூறிய பிறகு தான் சித்ராவிற்கு கடவுளே உளறிட்டனா?.
” வேந்தனிடம் எழிலரசிக்கு நகையிருக்கு. இன்னைக்கு அது பிரச்சனையில.. நான் வீட்டிற்கு போன பிறகு சொல்லுறேன். நீங்க இப்ப வேந்தனிடம் வசு ஆசைப்பட்டத வாங்கிதர சொல்லுங்க.. அவ்வளவு தான். ”
இவளுக்கு எப்படி புரியவைக்க.. ” சித்ரா.. வசு கேட்பது எப்படியும் பத்து பதினைத்து லட்சம் மேல் வரும். வேந்தன் வாங்கி தருவானே வச்சுக்குவோம். வசுக்கு கல்யாணம் ஆகல. வினோவிற்கு ஆகிடுச்சு. வசு கல்யாணம் நடக்கும் போது இவ்வளவு அதிகமானதேயே.. அவ கல்யாணத்திற்கு யூஸ் பண்ணிப்பாளா?. இல்ல வேறு வாங்கி தரச்சொல்லுவாளா?. நீ சபையில் வைக்க வேண்டும் சொன்னேயே. இப்பவே இவ்வளவு செய்துடா?. அப்ப செய்ய வேண்டாமா?. அப்ப இதைவிட கம்மியா செய்தா நல்லாயிருக்குமா?.
வினோவிற்கு கல்யாணம் முடிந்ததால்.. வேந்தன் வினோவிற்கு எவ்வளவு செய்யுறானோ.. அதில் முக்கால் பகுதியாவது விஸ்வநாதன் மாப்பிள்ளை திருப்பி கல்யாணம் அன்று பண்ணனும். அவரால பண்ணமுடியுமா?. இல்ல பண்ணினாலும் அவரு.. இரண்டு தங்கைகளுக்கும் கொஞ்சமாவது செய்யனும். மூன்றையும் ஒரே நேரத்தில் அவரால் பண்ண முடியுமா?. “
சித்ராவே குழம்பி போனார். இதில் சில விஷயங்கள் உள்ளடக்கி இருப்பது தெரியும். அதைபற்றி என்ன?. தன் மகனிற்கு எவ்வளவு செய்ய முடிய முடியுமோ செய்யட்டும்.. இல்லையென்றால் ஒன்றும் இல்லை.. தங்களுக்கு எதுவும் வேண்டாம். ஆனால் மகள் ஆசை நிறைவேற்ற நினைத்தார். அதைவிட எழிலரசி தன் மகன் வாங்கி கொடுத்ததை நகையை யாருக்கும் கொடுக்க விரும்பாதபோது.. இதற்குமேல் அவன் வாங்ககூடாது எனவும் நினைத்தார்.
“வசு கல்யாணத்திற்கு இன்னும் நாள் இருக்கு. அதுக்குள்ள அவனால இதை விட வாங்கித் தரமுடியும். வினோவுக்கும் வாங்கி தருவான். ஆனா பதிலுக்கு பண்ணவேண்டாம். எழிலரசிக்கு அவன் தானே எல்லாம் பண்ணுறான். அவங்க வீட்டில் இருந்து.. ஒன்னும் வாங்க விருப்பாதவன். இதைமட்டும் ஏன் வாங்க போறான்?. யாரிடமும் வேந்தனிற்கு செய்முறை செய்யாவேண்டானு சொல்லிவிடுங்க.
பின்ன மாப்பிள்ளைக்கு யாருக்கும் செய்ய வேண்டும் என்ற பிரச்சனை இல்ல. அவ்வளவு தான். ”
வினோவிடம் திரும்பி.. ” வினோ.. “.. ஆரம்பிக்கும் முன்
” அப்பா அண்ணா வசுக்கு வாங்கி கொடுப்பது போல வாங்கி கொடுத்தா.. நான் வேண்டானு சொல்ல மாட்டேன். ”
நீயும்மா? என்பது போல அவர் பார்வையிருக்க..
அதை உணர்ந்தவள்.. ” அப்பா நான் வாங்கிப்பேன் தான். ஆனா அதை கண்டிப்பா போட விரும்பாம தான் போடும் சூழ்நிலை. எனக்கு அதிகமான நகை போடவே பிடிக்காது. ஆனா அத்தைபோட சொல்லுவாங்க. இப்ப அவங்க முன்னாடி தான் அண்ணா வசுவிற்கு வாங்கினா.. அதை எனக்கும் அதே மாதிரிதான் வாங்கி கொடுக்கனும் நினைப்பாங்க. அதனால்தான். ” அவருக்கும் புரிந்தது.. என்று வாங்க சென்று இருந்தாலும் அவர் வருவார். எல்லாம் வேண்டும் நினைப்பார்கள் தான்.
” பின்ன நான் அதை கல்யாணத்திற்கு கண்டிப்பா போட வேண்டி வரும்.. ஆனா அம்மா சொல்வது போல அண்ணாக்கு திரும்பி செய்யாம இருக்கலாம்.. ஆனா அதையும் சேர்த்து.. உன் மனைவி போட்டு போகும் போது.. என் மகள் போட வேண்டாமானு கேட்டு.. அண்ணி, சங்கவிக்கு அத்த வாங்கி தரச் சொல்லுவாங்க. ”
எல்லாம் கேட்ட ரவி.. வேந்தன் தனியாக செய்யும் பெரிய தொகை என்பதால் அவர் உறுதிகொடுக்க விரும்பவில்லை.
” சித்ரா.. நீ வசுந்தரா ஆசைப்படுவதை செய்ய நினைப்பது சரிதான். ஆனா என்னால அவனிடம் வாங்கிதானு கட்டாயபடுத்த முடியாது. ” அடுத்து முடிக்கும் முன்..
” ஏங்க? ஏன் ப்பா?. ” ஒருசேர கேட்க.
முறைத்தவறே.. ” நீ சொன்ன மாதிரி அவன் முன்னாடியே நகை வாங்கிய காசு.. இப்ப உன் மக ஆசைப்பட்டத வாங்கி கொடுக்கும் நகைய வாங்க ஆகும் காசு.. எல்லாம் ஒரே இரவில் வந்தது கிடையாது. அதை அவன் கொஞ்சம் கொஞ்சமா.. ஆபிஸ், ஹோட்டல், நிலம், வரும் வருமானத்தில்.. தனக்கு தேவையானதை மட்டும் வாங்கிக் கொண்டு.. சேர்த்து வைத்த பணம்.
இன்னும் வருவான் நீ சொல்லுறியே.. அப்பவும் அவன் கஷ்டப்பட்டு உழைத்தா தான் வரும். நீயும், மகளும் ஏதோ வேற எண்ணத்தில் தான் இதையெல்லாம் பண்ணுறீங்க. அது என்னனு நான் தெரிஞ்சிக்க விருப்பல. நான் அவனிடம் செல்வேன். அவ்வளவுதான். செய்வது.. செய்யாது அவன் விருப்பம். “
” என்ன ப்பா. நீங்க.. ”
” வசுந்தரா.. நான் ஒன்னு உன்னிடம் கேட்குறேன். இதே சூழ்நிலையில் கமலேஷ் இருந்தா என்ன யோசித்துயிருப்ப?.. கமலேஷ் அப்பா உதவியில்லாம தனியா.. சாருலதாவும், நந்தினியும்.. இப்ப உன்னைய மாதிரி கேட்டா என்ன செய்வ?. சொல்லுவ?. ”
அவள் முழித்தாள்.. தனக்கே திரும்பும் என எதிர்பார்க்கவில்லை.. என்ன யோசிப்பேன்?. ” பண்ணமுடியுமா?. காசு போதுமா?. இது கண்டிப்பா இரண்டு பேருக்கும் தேவையா?. ” மனதில்நினைப்பாதாக நினைத்து வாய்விட்டு கூற..
புன்னகையுடன்.. ” சரியா சொன்ன வசு.. கண்டிப்பா இரண்டுபேருக்கும் தேவையானு?. ”
” அப்பா நான் எப்ப?. ” கடவுளே..
அப்போது கதவு தட்டும் ஓசைக்கேட்க.. வினோ திறந்தாள்.வேந்தன், எழிலரசி நிற்க.. ” அண்ணா.. ”
” வினோ நான் அப்பா கிட்ட கடைக்கு போகும் முன்ன பேசனும் நினைத்தேன். நீங்கயெல்லாம் இங்க இருப்பதா சொன்னாங்க. அதான் வந்தோம். ”
ஏன்?. எதற்கு?. என யோசனையுடன் ” உள்ளே வாங்க அண்ணா. ”
உள்ளிருந்தவர்களின் முகத்தில் இருந்ததை படிக்க முயற்சிக்க.. முடியாது.. ரவியின் அருகில் உட்கார.. ” சொல்லுப்பா. என்ன விஷயம்?. ”
வேந்தன் தன் அரசியை பார்த்து பின்.. ” அப்பா இன்னைக்கு வினோ, வசுக்கு.. எவ்வளவு நகை வாங்க?. அங்க போய் கேட்க முடியாது. இப்போதைக்கு எவ்வளவு வாங்கினா போதும் சொன்னா?. அவங்க இரண்டுபேரும் பார்க்க வசதியா இருக்கும். ”
” ம்.. சொல்லுறேன். நீ மருமகளிற்கு இன்னைக்கு வாங்க போறாயா?. ”
தன்னவளை பார்த்தவன். வேண்டாம் என்ற மெல்லிய தலையாட்டல் இருக்க..
” தெரியலப்பா?. ” என்ன பதில் இது?. என அனைவரும் பார்க்க..
புன்னகையுடன்.. ” அப்பா நான் ஏற்கனவே கொஞ்சம் வாங்கின நகைங்க வீட்டில் இருக்கு. அதேபோதும் அரசி சொல்லுறா. முன்னாடி எல்லோருக்கும் வாங்கும் போது மனைவிக்குனு வாங்கியது. ஆனா அதை கல்யாணத்திற்கு என்று வாங்கல. இனி பார்ப்பது பிடிச்சா கல்யாணத்திற்குனு வாங்குவேன். ”
” ம்.. சரி வேந்தா. வசுந்தரா இப்ப தான் சொன்னா.. அவளுக்கு தங்கம் வேண்டாமா?. அவளுக்கு வைரத்தில் நெக்ஸ், ஆரம் அதுவும் நீதான் வாங்கி தரனுமாம். அம்மாவும் அதைதான் விரும்புறாங்க. ஆனா இதில் ஒரு பிரச்சனை இருக்கு. ” அவர்கள் பேசியதை கூற..
மூவரையும் பார்த்தவாரே அமைதியாக கேட்டவன்.. பின் தன் தங்கையை பார்த்தவன்.. ” வசு நேற்று வரைக்கும் தங்கம் வேண்டுனு கேட்ட.. இன்னைக்கு எப்படி மனசு மாதிரியது?. ”
என்ன கூறுவாள்?. அவள் நேற்று நினைத்தது ஒன்று.. இன்று நடப்பது வேறு.
” அது வந்து.. நேற்று நீங்க சொன்ன மாதிரி.. டிரஸ், நகைகள் டிசைன்ஸ் பார்த்தேன். எல்லாம் நான் வைத்துயிருப்பது போல இருந்தது. என்னிடம் வைரம் இல்ல தானே. அதான் அதையும் பார்த்தேன். அப்பதான் தோனுச்சு.. ரிஷப்சனுக்கு நெக்லஸ்சும், கல்யாணம் போது வைத்திருக்கும் தங்கமும், வைர ஆரமும் போட்டுக்களாம் நினைத்தேன். ” அவனிற்கு அவள் யோசித்து யோசித்து பேசுவதில் ஏதோ சரியாக படவில்லை.
” ம்.. உன் யோசனை நல்லாதா இருக்கு. பார்த்தேனு சொன்னியே அப்படியே அதோட விலையும் பார்த்தியா?. ஏன் கேட்குறனா?.. எனக்கு யோசிக்க வசதியா இருக்கும். அதான். எவ்வளவு போட்டுயிருந்தது. இல்ல போட்டோ ஏதாவது எடுத்தியா?. ”
ரவிந்தரனிற்கு மனதில் சிரிப்பாதா?. வருந்துவதா?. தெரியவில்லை.
அவள் திருதிரு என மனதில் விழிக்க.. ” அண்ணா அந்த அளவிற்கு பொறுமையா பார்க்கல. தங்கம் பார்த்து பின் வைரம் பார்க்கும் போது அண்ணி போலானு கூப்பிட்டாங்க. ” அப்படியா என்பது போல பார்க்க..
சித்ராவிற்கு அவன் கேட்பது பிடிக்காமல்.. ” வேந்தா எதுக்கு இப்ப கேள்வி கேட்குற. வாங்கி தருவியா?. இல்லையா?. நேரம் ஆகுது. எல்லாம் கீழ இருக்காங்க. ”
யோசித்தவன்.. அரசியை பார்க்க.. அவள் போனில் ஏதோ செய்துக் கொண்டுயிருக்க.. யாருக்கும் பிரச்சனையில்லாமல் இருக்க விரும்பினான். ” ம்மா. முதலில் டிரஸ் தானே எடுக்கபோறோம். நான் நகை எடுக்கபோகும் நேரம் சொல்றனே. “
அவன் எழிலை பார்த்ததும் புரிந்தது. அவளிடம் பேசிய பின் முடிவை கூறுகிறேன் என்கிறான்.
” இதில் நீ யோசிக்க என்னயிருக்கு.?. ”
” ம்மா.. இதில் யோசிக்க நிறைய இருக்கு. வசு கல்யாணத்தின் போது எல்லாம் புதுசாதான் வாங்கனும். ஏற்கனவே அவளுக்குனு வீட்டில் தனியா நிறைய நகை இருக்கு. இப்ப வாங்கும் நகையும் அதோடதான் போய் சேரும். அப்படியிருக்கப்ப இப்ப இரண்டுபேருக்கும் வாங்கும் நகை.. ஒன்னும் கொஞ்சம் காசு கிடையாது ம்மா. அதனால நான் யோசித்து தான் ஆகனும்.
ஆனா இப்ப தோனுது.. இதை பற்றியே யோசித்து.. நான் இந்த அரைநாளா ஸ்பாயில் பண்ணவிரும்பல. ” அரசியை பார்த்தான்.
அவள் இன்னும் போனில் இருக்க.. ” அரசி இன்னும் என்ன பண்ணுற? ” கோபமாக கேட்க.
அவன் முகத்தை கூட பார்க்காமல்.. ” தனு.. அண்ணா எல்லாம் வந்துட்டாங்களா. கார் வைக்க இடம் இல்ல.. என்ன பண்ணனு?. கேட்டாங்க. அதான் முன்னாடி கடைக்கு போங்கனு சொல்லிட்டு இருந்தேன். அவங்க திங்ஸ் எடுத்து வரச்சொன்னாங்க. வேறனு என்னனு கேட்டேன். ம்.. சொல்லுங்க. ” நிமிர்ந்து கேட்க..
அவளை முறைத்து.. ” இப்ப என்ன சொல்லட்டும்?. ”
” தனு.. நான் என்ன?. ” தயக்கத்துடன் கேட்க..
” அரசிசி.. இவங்க சொன்னதை கவனிச்சியா?. இல்லையா?. ” கவனித்தேன் என தலையசைக்க.. ” ம்.. அப்ப என்ன பண்ணலாம் சொல்லு?. ”
‘ ஏன்டா இப்படி?. ‘ அவனை பாவமாக பார்க்க.. ‘ சொல்லு முயல்குட்டி ‘ கண்ணால் மிரட்ட..
சிரிப்புதான் வந்தது.. யோசனை செய்வது போல.. உதட்டை மடித்து.. சிரிப்பை கட்டுபடுத்தி.. அவனை பார்க்க.. அவன் முறைக்க.. சரிசரி…
” தனு.. இப்ப வாங்குவதை இரண்டும் பேரும் மாத்தி போட்டுபாங்க தானே?.. ” வேந்தன் இருவரையும் பார்த்தான்.
” ம்.. போட்டுப்போம். ”
” அப்ப ஒருத்தவங்களுக்கு பிடித்த மாதிரி தங்க நெக்லஸ், வைர ஆரம், தோடு. இன்னொருவருக்கு பிடித்தமாதிரி வைர நெக்லஸ் , தங்க ஆரம், தோடு வாங்கலாம். இவங்க அதை.. இருக்கும் நகையுடன் எப்படி வேண்டாலும் மாற்றி போட்டுகலாம்.
உங்களுக்கு காசு அதிகமும்.. கம்மியா இல்லாம இருக்கும். விஸ்வா அண்ணாவும் தங்கைகளுக்கு அவரால எதை வாங்கி கொடுக்க முடியுமோ அதை வாங்கி தந்து சமாளிக்க முடியும். ” தன்னவன் கேட்டதற்கு பதிலாக.. அவனை பார்த்து மட்டுமே கூறினாள்.
முயல்குட்டி.. ம்.. இரண்டுபேரும் சந்தோஷம்.. எல்லோரையும் பார்த்தான். ” அரசி சொன்னதில் உங்களுக்கு ஏதும்.. ” முடிக்கும் முன்..
” அண்ணா எங்களுக்கு அண்ணி சொன்னதில் சம்மதம். வசுவுக்கு பிடித்த மாதிரியும் இருக்கு.. எனக்கு பிடித்த மாதிரியும் இருக்கு. சரி அண்ணா நேரம் ஆச்சு. நாங்க முன்னாடி போறோம்.. நீங்க திங்ஸ் எடுத்துட்டு வாங்க. ம்மா.. போகலாம். ”
சித்ராவிற்கு இதில் உடன்பாடு சற்று குறைவுதான். ஆனால் மறுக்கவில்லை. வசு ஆசையை போல வினோவின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமே.
” வினோ நீபோமா. நாங்க வரோம். ” சரி என அவள் தலையசைத்து வெளியேற..
ரவிந்திரன் வேந்தனை பார்த்தார்.. ” வேந்தா இனி உன்னோட.. எழிலரசியோட தனிப்பட்ட வாழ்க்கை தவிர.. யாருக்கும் எதையும் செய்வேனு என்னிடம் கூறாம எப்பவும் உறுதிக் கொடுக்கக்கூடாது.
உனக்குனு ஒரு பொண்ணு வரபோறா. இன்னைக்கு மாதிரி ஏதாவது உறுதிகொடுத்து.. அதுக்குனு நீ கஷ்டப்பட்டு நேரத்தையும், பணத்தையும் செலவு செய்வதால முதலில் பாதிக்கப்பட போவது உறுதி கொடுப்பியே அவங்க கிடையாது. ”
” எழிலரசி தான். இத்தனை வருடம் நீ ஒரு மகனா, அண்ணா.. அளவுக்கு அதிகமாகவே நீ எங்க எல்லோருக்கும் பண்ணிட்ட. இனி உனக்கு.. உனக்கு மட்டும் தேவையானதை பண்ணு. சரியா. ” சித்ரா, வசுவை பார்த்துக் கொண்டே கூறியவர்.. எழிலரசியின் தலையை தடவியவாறு வேந்தனிடம் கூறிமுடித்தார்.
அவனுக்கும் புரிந்தது..” சரிப்பா.. என் அளவுக்கு மீறிய ஒன்னுனா.. கண்டிப்பா இப்ப பேச வந்தமாதிரி.. உங்கிட்ட கலந்து பேசாம எதையும் பண்ணமாட்டேன். ”
” சரிப்பா. நீங்க திங்ஸ் எடுத்துட்டு வாங்க.” அவர் செல்ல.. இப்போது எதை கூறினாலும் பிரச்சனை என அமைதியாக.. அவரின் பின்னால் சித்ராவும், வசுவும் சென்றனர்.
வேந்தன் அவர்கள் சென்ற அடுத்த நொடி தன்னவள் உணரும்முன்.. முகமெங்கும் முத்தமிட்டு.. இறுக்கி கட்டியணைத்து.. ” அரசி அப்பா சொன்னபோல நிறைய பண்ணிட்டேன். இனி நான், என் முயல்குட்டி, நம்ம குடும்பமா சேர்ந்து வாழும் வாழ்க்கைதான் முதலில். ஐ லவ் யூ முயல்குட்டி. ” அவள் மச்சத்தில் முத்தமிட்டான்.
” ம்.. தனு மாமா அதுக்கான தொடக்கமா நம்ம கல்யாணத்திற்கு எல்லோருக்கும் தேவையானதை எடுக்கப்போறோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ” அவளும் முகம்முழுவதும் முத்தமிட்டு.. அவனின் கன்னம் பிடித்து கொஞ்சி.. சில நிமிடங்கள் கழித்து வேண்டியதை எடுத்துக்கொண்டு.. முகம்முழுவதும் சந்தோஷத்துடன் கல்யாண கலையுடன் தங்கள் பெற்றோர்களின் அருகில் நின்றனர்.
இருவரும் தெய்வத்தின் முன் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு.. வேந்தன் தன்னவள் விருப்பவது போல அவள் நெற்றியில் வைத்துவிட்டு.. தானும் அதையே வைத்துக்கொண்டு.. மற்றவர்களின் கேளிப்புன்னகையும் ஏற்று கல்யாண ஷாப்பிங் செய்ய இருவரின் பெற்றோர்களுடன் கிளம்பினர்.