கதிர் கூறியதை கேட்டு கொண்டிருந்த அரவிந்த் அவன் கூறியதை ஒப்பு கொண்டு வீட்டுக்கு சென்றான் . வீட்டுக்கு சென்று அவன் அம்மா விடம் போனான் . அவரிடம் , ” அம்மா ! எனக்கு கல்யாணம் செய்ய முழு சம்மதம் , அந்த பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்கிறேன். எனக்கு பதிவு திருமணம் போதும் , அந்த பெண்ணிடம் சொல்லிடுங்க ” என்று கூறினான் . அம்மா அவனை பார்த்து , ” அரவிந்த் , எனக்கு ரொம்ப சந்தோசம் ஆனா எதுக்கு உன் கல்யாணம் இப்படி பதிவு திருமணமாக நடக்க வேண்டும் , நமக்கு இருக்கும் செல்வத்திற்கு திருவிழா மாதிரி நடத்தலாமே ” என்று கேட்டார் . அவன் அதற்கு , ” அம்மா , எனக்கு கல்யாணம் இப்படி தான் நடக்கும். இப்படி நடந்தால் சரி , இல்லை என்றால் எனக்கு கல்யாணம் வேண்டாம் ” என்று கத்தினான். அவன் அம்மா அவன் கூறியதற்கு சரி என்று கூறினாள். அவன் அவன் அம்மா விடம் , ” அம்மா , அந்த பொண்ணுடயும் சொல்லிருங்க வருகிற வெள்ளிக்கிழமை கல்யாணம் என்று ” கூறினான் .
அவன் அம்மா ப்ரீத்தி கு போன் செய்தாள். ப்ரீதியிடம் வெள்ளிக்கிழமை கல்யாணம் என்றும் அதற்கு புடவை எடுக்க நாளை வருமாறு கூறினாள் . அவளும் சரி என்று கூறினாள் . அவன் அம்மா அரவிந்த் யை அழைத்தாள்.அவனிடம் , ” அரவிந்த் , நாளைக்கு உன் கல்யாணத்துக்கு உடை எடுக்க போகணும் நாளை உன் வேலையெல்லாம் ஒதுக்கி வை ” என்றார் . அவன் அவளிடம் , ” கல்யாணமே வேண்டாம் என்றேன், நீங்கள் எப்படியோ என்னை கல்யாணம் பண்ண வைத்துவிட்டீர்கள் . எடுக்கலாம் நான் எதற்கு ஏதாச்சும் ஒரு துணியை நீங்களே எடுத்துக்கோங்க ” என்றான் சலிப்பாக . அவன் அம்மா அவனிடம் , ” ஏன்டா இப்படி பண்ற உன்னை நம்பி ஒரு பெண் வர போகிறாள் . நீ என்ன வென்றால் இப்படி சொல்கிறாய் . உனக்கு இப்படி ஒரு கல்யாணம் அவசியமா ! நீ அந்த பெண்ணை நன்றாக பார்த்து கொள்வென் என்று எனக்கு வாக்கு குடு ” என்றாள். அவன் அவளிடம் , ” அம்மா , நான் அவளை கண்டிப்பாக என்னுடைய மனைவி என்ற மரியாதையை அவளுக்கு கொடுப்பான். எனக்கு காதல் வருமா என்று தெரியவில்லை. ஆனால் அவளுக்கு என்னுடைய மரியாதையை கண்டிப்பாக இருக்கும் ” என்றான் . அவளும் சரி என்று ஒத்துக்கொள்கிறாள் . அவன் அவளிடம் , ” அம்மா அந்த பெண்ணை இந்த பேப்பர் இல் கையெழுத்து வாங்கி தர வேண்டும்” என்று ஒரு பேப்பரை கொடுத்தான் . அவன் அம்மா அவனிடம் எதற்கு கையெழுத்து என்று கேட்டாள். அவன் அம்மா , ” இது ஒரு தேவை பதிவு திருமணம் செய்ய என்று ” கூறினான் . அவளும் சரி என்று வாங்கிகொண்டாள் . அவன் கொடுத்த பேப்பர் விவாகரத்து பத்திரமும் தன்னுடைய சொத்தில் அவளுக்கு சம்பந்தம் இல்லை . விவாகரத்திற்கு அவளுக்கு 1 கோடி ரூபாய் ஜீவனாம்சம் என்று அவன் முடிவு செய்து பேப்பர் ஐ கொடுத்துவிட்டான் .
இனி என்ன நடக்கும் ? அவள் கையெழுத்து போடுவாளா ? அவள் படித்து பார்த்தால் என்ன வாகும் ?
கல்யாணம் நடக்குமா ? அவனுக்கு அவள் மேல் காதல் வருமா ?