எழிலரசியின் இப்படியான நிமிர்ந்த பேச்சில் மூவரும் அதிர்ந்தனர்.. முதலில் சுதாரித்த காவ்யா.. ” எழிலரசி இங்க இப்ப.. உன்னைவிட எங்களுக்கு தான் அதிக உரிமை இருக்கு. யாரும் எங்களை கேட்க வேண்டாம். ”
மெல்லிய புன்னகையுடன்.. இருவரையும் பார்த்து.. ” அதிகம் இருக்குகோ.. கம்மியா இருக்கோ.. எனக்கு அது அவசியம் இல்லாதது. இங்க புதுகடைகள் சம்பந்தபட்டது மட்டும் தான் நான் கேட்பேன். ஹோட்டல் சம்பந்தபட்டத்தை தனுவோ இல்ல.. யாரும் என்னைய கேட்க சொன்னாதான் கேட்பேன்.
என் இஷ்டத்திற்கு மற்றவங்க உரிமையில் தலையிடமாட்டேன். அதே சமயம் என்னோட உரிமையில் யாராவது தலையிட்டா அமைதியா இருக்கவும் மாட்டேன். ”
கடைசி வரியை வசுந்தராவை பார்த்துக் கூறினாள். இதை கவனித்த இருவரும் ஏதோ வசுந்தராவால் நடந்துயிருக்கிறது.. அதை மறைமுகமாக கூறுகிறாள் என்று புரிந்துக் கொண்டனர்.
வசுந்தரா இருவரின் பார்வையினால் எழிலரசிக்கு பதில் அளிக்க எண்ணி.. எழுந்து அருகில் செல்லும் வேலையில்.. கதவு தட்டும் சத்தம் கேட்க அவளே.. ” உள்ள வாங்க. ” அழைக்க..
திறந்து வந்தவர்கள். உள்இருப்பவர்களை பார்த்தவன்.. ” மேகா நீ இங்க என்ன பண்ணுற?. ” ஜூஸ் தான் கொண்டு வந்து இருப்பார்கள் என நினைக்க.. மூவரும் இவர்களை எதிர்பார்க்கவில்லை.
கதிரவனை பார்த்து முதலில் தடுமாறியவள்.. பின் நிதானித்து.. ” அண்ணா நான் இவங்கள கோயில் பார்.. ”
இரண்டுநாட்களாக இவர்களுடன் சேர்ந்து.. இவளின் நடவடிக்கையே வேறு விதமாக இருப்பதால்.. அவளை பேசவிடாமல்.. ” என்ன பண்ணற கேட்டேன்?. ”
” இவங்க இங்க வருவதாத சொன்னாங்க. வீட்டில் தனியா இருக்கனுமே நினைத்து சும்மா தான் வந்தேன் ண்ணா. ” அவளை எதுவும் கூறமுடியாமல்.. முறைப்பை செலுத்தி எழிலரசியின் எதிரே இருந்த சந்துருவின் அருகில் அமர்ந்தான்.
சில நிமிடங்களில் கதவு திறந்து வேந்தன் வர.. அவனின் பின்னால் ஜூஸ் கொண்டு வந்த நபர் மற்றவர்களுக்கு எடுத்து வைத்துவிட்டு சென்றார்.
வேந்தன் தன்கையால் அரசிக்கு ஜூஸ் எடுத்து வரும்போதே.. அவள் கண்கள் தன்னை பார்த்தும் புன்னகைக்காமல் இருக்க.. ஏதோ நிகழ்வு நடந்துயிருக்கிறது என்று புரிய.. அவளை மாற்றும் விதமாக எல்லோருக்கும் எதிர்புறத்தில் தான் இருப்பதால்.. அவளின் கன்னத்தை பார்த்தவாறே ஜூஸ் கப்பை நீட்ட.. ‘ இவன.. ‘ அவன் விரும்பும் முறைப்பு பார்வை செலுத்தி.. சத்தமில்லாமல்.. ” போடா தனுமாமா ” கூறி வாங்கிக்கொண்டாள்.
இவனும் ” போடி முயல்குட்டி ” சத்தமில்லாமல் புன்னகையுடன் கூறி.. மூன்று பெண்களுக்கு எதிரே இருந்த ஒற்றை சேரில்.. அரசியின் வேந்தனாக அமர்ந்தான்.
அனைவரும் ஜூஸ் குடித்து முடிக்கும்வரை காத்திருந்தவன்.. அரசியை பார்க்க.. அவள் எதிர் இருந்தவர்களிடம் ஏதோ காண்பித்து கேட்டுக் கொண்டுயிருந்தாள்.
தன் எதிரே இருந்தவர்.. ஆரம்பிக்க தடுமாறுவது போல் இருக்க.. அவனே.. ” அண்ணி.. நீங்க ஸ்கூல் பங்சனிற்கு காலை டீ பிரேக், லஞ்ச் ஆடர் பண்ண வந்ததா.. ராஜன் அண்ணா சொன்னாங்க. என்னைக்கு?. எத்தனை பேர்?. ” காவ்யா எண்ணிக்கையும், தேதியையும் கூற..
புன்னகையுடன்.. ” யாழினி பிறந்தநாள் அன்னைக்கா?. ” ஆம் என தலையசைக்க..
யோசித்தவன்.. ” அண்ணி நீங்க கேட்டதற்கான டீடைல் கொடுக்கிறேன். அதுபோக.. நாம்ம பிறந்தநாளிற்காக யாழினி பாப்பா உடன் படிக்கும் குழந்தைகளுக்கும் எல்லோருக்கும் காலை பிரேக் போது ஏதாவது கொடுக்கலாமா? கேட்டு சொல்லுங்க. ”
இதை பற்றி காவ்யா யோசிக்கவில்லை.. இந்த யோசனை நன்றாக இருக்க.. ” நாங்க அன்னைக்கு சாய்ந்திரம் வீட்டில் விருந்து ஏற்பாடு பண்ணலாம் நினைத்தோம். அதனால இதை பற்றி யோசிக்க தோனல.. நான் நாளைக்கே கேட்டு சொல்லுறேன். ” புன்னகையுடன் கூறி..
” நீங்க இப்பதான் யாழினி பிறந்தநாள் அப்ப இங்க இருக்க போறீங்கனு நினைக்கிறேன். நீங்க வீட்டிற்கு கண்டிப்பா வரனும். ” காவ்யா கூறியதை புன்னகையுடன் கேட்டபடியே தன்னவளை பார்க்க.. பதில் கூறாமல் அவன் பார்வை போகும் திசையை மூவருமே பார்த்தனர்.
‘ ம்.. அங்க சொன்னதான் இங்க பதில்வரும்மா.. ‘ மனதிற்குள்ளே பெருமுச்சு ஒன்றை விடுத்து.. எழிலரசியிடம் திரும்பி.. ” எழிலரசி.. ” பேசிக் கொண்டுயிருந்தவள் நிமிர்ந்து பார்க்க..
” எழிலரசி யாழினி பிறந்தநாள் வர சனிக்கிழமை வருது. அன்னைக்கு வீட்டில் விருந்து வைத்துயிருக்கு. நீ கண்டிப்பா வரனும். ” மெல்லிய புன்னகையுடன் கூற..
முதலில் புரியாமல் விழித்தவள்.. பின்னர் புரிந்து ‘ தன் தனு பிறந்தவீடுடா?!. ‘ அவளின் கண்கள் தன்னவனை பார்க்க..
அதில் மின்னல் பார்வை வீசியது. அதனிடமே அவர்களிடம் என்ன பதில் கூற?. புருவத்தை ஏற்றியிறக்கி கேட்க.. அய்யோ முயல்குட்டி இப்படி பார்த்து கொல்லுறாளே!. ‘ பார்வைய செலுத்த.. இது நிமிடத்திற்குள்ளாக நடக்க.. மற்றவர்களின் கண்கள் இதனை கண்டறியவில்லை..
“ நாங்க வருவோம் அண்ணி. அண்ணாவும் நீங்களும்.. அரசி வீட்டிற்கு போய் அழைத்துயிருங்க. ” அரசியின் முகத்தை பார்த்துக்கூற..
நேரில் சென்றா?. ” ம்.. மாமாவிடம் சொல்றேன். நேரத்தை பொறுத்து போய்யிட்டு வரோம். இல்லையென்றால் போனில்.. ” அவள் முடிக்கும் முன்..
முதல்முறை அரசி தங்கள் வீட்டிற்கு வருவதால்.. போனில் கூப்பிட்டால் சரியாக இருக்காது என நினைத்தவன்.. ” நான் அண்ணாவிடம் பேசிக்கிறேன் அண்ணி. ”
அதற்குமேல் இதுபற்றி பேசவிரும்பாமல்.. ” இருங்க.. ஐந்துநிமிடத்தில் நீங்க கேட்ட டீடைல்ஸ் கொடுக்குறேன். ” சட்டென்ற அவனின் அடுத்த செயலின் பேச்சில் என்ன கூற விழித்தவள்?. பின் தலையசைப்புடன் சரி எனக் கூறினாள்.
காவ்யாவிற்கு தேவையான தகவலை குறிப்பிட்டு அதனை பிரிண்ட்அவுட் கொடுத்து.. எடுக்க காத்துயிருந்த சமயத்தில்..
‘ வேந்தனிற்கு கோயிலில் ஆடி மாதம் நாளை ஆரம்பம் எனக்கூறிய ஞாபகம் வந்தது.’
‘ பெரியப்பா குடும்பம் இருக்கும் வீடு.. தங்களுக்கும் இன்னும் உரிமை இருக்கும் வீடுதான். அதாவது இருவருக்கும் பொதுவான வீடுதான். அரசி முதன்முதலில் வரலாமா தெரியவில்லையே. இல்லை இதெல்லாம் பார்பார்களா என்று கூட தெரியவில்லை. ‘
‘ அந்த வீட்டில் தான் நான் பிறந்து வளர்ந்தது. அதுகூடவே முயல்குட்டியை மனம் விருப்பியவளாக நினைத்து.. பெரும்பான்மையான வருடங்கள் இருந்தது. வேண்டாம் என கூறினால்.. தான் மட்டும் பிறந்தநாள் அன்று போகமுடியாது.. போகாமல் இருக்கவும் முடியாது. ‘
‘ நம்பிக்கை இருக்கு இல்லை என்பதை.. தன் அரசியை தன் வீட்டிற்குள் பாதம் வைப்பதில் சோதித்து பார்க்க விரும்பவில்லை. என்ன செய்யலாம்?. என யோசித்தவன். ‘
உடனே தன் போனில் இன்றைய அந்நாளை பார்க்க.. அதில் ஒன்றும் பிரச்சனையில்லை. மணியை பார்த்து.. தன்னுடன் இருப்பவர்களை பார்த்தான்.
முதலில்.. ” அண்ணி நீங்க அடுத்து வீட்டிற்காக இல்ல வேறு எங்கேயும் போறீங்களா?. ” வேறு ஒருவருக்காக மறைமுகமாக தெரிந்துக்கொள்ள கேட்க..
” வீட்டிற்கு தான். ”
திரும்பி.. ” கதிரவா உங்க இரண்டுபேருக்கு உடனடியா எங்கயாவது போகனும் மா?. ”
” இல்ல அண்ணா. சாப்பிட்டு தான் கார்த்தி அண்ணா கடைக்கு போகனும். ”
உடனே போன்னை எடுத்தவன்.. ஈஸ்வருக்கு கால்செய்தான். ” அண்ணா நான் இப்ப அரசியை நம்ம வீட்டிற்கு கூட்டிட்டு போறேன். அப்பாவ கீழ வரச் சொல்லுறீங்களா?. ”
” ம்.. சரி அண்ணா. ” அவன் அரசியை பார்த்தான். அவள் அவனின் நடவடிக்கையை கைகட்டி பார்த்திருக்க..
அவன் ஏதோ கூற வர.. ” தனு இன்பாக்கு கால் பண்ணல?. அண்ணாவும் வரனுமே. “ புன்னகையுடன் கூற..
உடனே அவனையும் நேராக வீட்டின் அருகே வரச்சொல்ல.. அனைவரும் புரியாமல் பார்த்தார்கள்.
கதவு தட்டும் ஓசை கேட்க.. வேந்தனே எழுந்து திறக்க..
” எதுக்குடா இப்ப மருமகளோட வீட்டிற்கு போகனும் வரச்சொன்ன?. ”
இருவரும் வெளியே நின்று கதவை சாற்றி.. காவ்யா கூறியது.. அதனால வந்த எண்ணத்தை கூற..
” வேந்தா நாம்ம தனியா இருப்பதால் அந்த வீட்டிற்கு பார்க்கமாட்டாங்க தான்.. இருந்தாலும் தெளிவாக தெரியல. ஆனா உனக்காக இப்ப போலாம். உங்க நேரம் அம்மாவும் அங்கதான் இருக்காங்க. ”
மெல்லிய புன்னகையுடன்.. ” அப்படியா?. சரிப்பா. நான் அரசிய கூட்டிட்டு வரேன். நாம்ம போகலாம். ”
” நீங்க காரில் உட்காருங்க. நான் வந்துர்றேன். ” ரவிந்திரன் புன்னகையுடன் கூறி ஹோட்டலினுள் செல்ல..
அறை உள்ளே வந்த வேந்தனை.. ” தனு.. ”
தன்னவளின் அருகில் சென்றவன்.. ” பூ வாங்கிட்டு வாங்க. ” அவனிடம் பிரண்ட்அவுட் பேப்பரை கொடுக்கும் போது மெல்லிய குரலில் கூறினாள்.
மெல்லிய புன்னகையுடன் தலையசைத்து.. அதே புன்னகையுடன் காவ்யாவிடம் வந்தவன்..
” அண்ணி நீங்க கேட்டது. ” அவர் பதில் அளிக்கும் முன் வெளியே சென்றுவிட்டான்.
சில நிமிடங்களில் வந்த வேந்தன்.. காவ்யாவிடம் தன் கையில் இருந்த ஒரு கவரை கொடுத்து.. ” அண்ணி முனுபேரும் இதை வைச்சுக்கோங்க. நீங்க முன்னாடி வீட்டுக்கு போங்க. நாங்க வறோம்.”
தன்னவளிடம் முன் மற்றொரு கவரை வைத்துவிட்டு.. இதோ வந்துவிடுவேன் என்ற பார்வையுடன்.. மற்றொரு வழியாக சமையல்அறைக்கு ஸ்விட் எடுக்க சென்றான்.
மேகா கதிரவனை பார்க்க.. ” நீ அவங்க கூட போ. அங்க இன்பா இருந்தா அவன் கூடவே நில்லு.. இல்லை என்றால் உள்ள போய் இரு. ”
அவனை முறைத்து.. ” அங்க இன்பா கூட போய் நிற்பதற்கு.. உங்க கூடவே நான் வரலாம். ”
” ம்.. அதான் நானும் நினைத்தேன். நீ அவங்க கூட போக விருப்புவனு இப்படி சொன்னேன். எனக்கு எதுனாலும் ஓகே. ”
இதனை கேட்ட மற்ற இரு பெண்களும்.. ” மேகா வாங்க நம்ம போகலாம். ”
வசு, காவ்யா இருவரும்.. ஒரு சேர எரிச்சலுடன் கூறினார்கள். ஏன் தீடிர் இப்படி?. என்று வேந்தனை மனத்திற்குள் பலவாறு திட்டி மூன்று பெண்களும் கிளம்பி விட்டார்கள்.
” டேய் கதிரவா.. இவர் என்னடா பண்ணுறாரு?. இந்த அறைமணி நேரத்தில் எல்லோருடைய பிளானையே மாற்றிட்டு.. இப்படி சுத்துறாரு!.. ”
எழுந்து நின்றவன்.. ” எனக்கும் புரியல. ஆனா இந்த மேடத்திற்கு மட்டும் புரியது. ” அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்க.. அவனே கதவை திறந்தான்.
” டேய் இங்க.. ” உள்ளே வந்த இன்பா ” இதைபோட்டுக்க எழில். ” ஒரு கவரை கொடுத்தான்.
” டேய் இப்ப தான் மாமா ஒரு கவர் வைத்தார். இப்போ நீ. இது என்னடா?. “அங்க பாருங்க என்ற கண் காண்பிக்க..
அவளின் சேலைக்கு ஏற்ற வளையல், ஒரு ஆரம்.. சற்று பெரிய தோடு. ‘ எப்படிடா ‘ என பார்க்க
” மாமா நான் வீட்டிற்கு போயிட்டு இருந்தப்ப தான்.. மாணிக்கம் மாமா வீட்டிற்கு போகனும் போன் செய்தாங்க. சரி எழில் முதன்முதலா அங்கு போறதாதல இன்னும் அழகாக இருக்கும் இல்ல.. அதான் இதை எடுத்துட்டு வந்தேன். “
உறுதி முடிந்து.. யாருக்கும் தெரியாமல் காதலியாக வேந்தன் வீட்டிற்கு சென்றதால் எப்படி வேண்டும் என்றாலும் செல்லலாம். ஆனால் இப்போது அவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்த வீட்டிற்கு முதன்முறை செல்லும் போது இன்னும் பொலிவுடன் சொல்ல வேண்டும் என அண்ணாக யோசித்து எடுத்து வந்தான்.
” இன்பா எதுக்கு இப்ப அங்க போறோனு.. உனக்கு ஏதாவது விளங்குதா?. ” எழிலை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே கேட்க..
” தெரியல மாமா. ஆனா வேந்தன் மாமா ஏதாவது ரிசன் இல்லாமா எதையும் பண்ணமாட்டாரு. ” கூறிக் கொண்டுயிருக்கும் போதே வேந்தன் வர..
முதலில் தன்னவளின் மாற்றத்தை பார்த்தான்.. பின்அருகில் இருந்த இன்பாவை பார்த்தவன்.. இருவரும் எழிலரசிக்காக யோசிக்கும் விதத்தை எப்போதும் போல மகிழ்ந்தான்.
இன்பாவை பார்த்தபடியே புன்னகையுடன் வந்தவன்.. தன் கையில் இருந்ததை கொடுத்து.. ” நீங்க காரில் இருங்க வறோம். ” கூறிவிட்டு பூவை எடுத்து சரியாக வைத்துக் கொண்டுயிருந்தவன்..
மூவரும் போகாமல் தங்களின் பொருட்களை எடுத்துக் கொண்டுயிருப்பதை பார்த்து.. “ இவ்வளவுநேரம் எடுத்து வைக்காம என்ன பண்ணிங்க?. சீக்கிரம் வெளிய போங்களே டா. ” கோபம் போல கேட்க..
அவனை சந்துரு ஒரு லுக் விட்டு.. ” என்ன இப்போ?. பூ தானே வைத்துவிட போறீங்க.. வைங்க. நாங்க எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்த்தா என்ன?. நீங்க சொன்னவுடனே.. எதுவும் கேட்காம கிளம்புவதே பெரிசு. இதில் நாங்க பட வேண்டிய கோபத்தை.. நீங்க படுறீங்க. “
மற்ற இருவரை பார்த்து.. ” டேய் வந்த ஒருநாளிலேயே இவரோட அலும்பு தாங்கள. நீங்க எப்படிடா இத்தனைநாள்?. ”
அவனின் முதுகில் ஒரு அடிவிழ.. ” இப்படி அடிச்சு அவங்கள அடக்கி வைத்துயிருக்கேன். நீ அவங்களிடம் என்ன கேட்டாலும் பதில் வராது. வாங்க போகலாம். ” புன்னகையுடன் கூறி.. அரசியின் கையில் அழுத்தம் கொடுத்து விடுவித்து. போகலாம் என காரிற்கு வர..
அங்கு ரவிந்திரன் நின்றுயிருக்க.. இன்பாவை பார்த்தவர்.. ” இன்பா நாம்ம நாலுபேரும் ஒரே காரில் போகலாம். ” சரி என கூறி அவர்கள் இன்பாவின் காரிற்கு செல்ல..
வேந்தன் தன் அரசிக்கு கதவை திறந்து அமர வைத்து.. தானும் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்ததும்.. ” ஐ லவ் யூ முயல்குட்டி!. ” கண்கள் சிறிது கலங்கி..
தன் நெடுநாள் ஆசையில் ஒன்று நிறைவேற போகிறது என்ற மகிழ்ச்சியில்.. அவளின் கண்களை பார்த்துக் கூறி காரை வீட்டை நோக்கி செலுத்த..
எழிலரசிக்கு எதையும் வார்த்தைகளால் கூற முடியாத ஒருநிலை. அவனை பார்த்த படியே வந்தாள். தனு காவ்யாவிடம் வருகிறோம் கூறியதும் சந்தோஷத்தில் தன்னவன் முகத்தை பார்த்தவள்.. சிறிதுநேரத்திலே அவனின் முகத்தில் சிந்தனை ரேகையை பார்த்தும்.. ஏதோ செய்யப்போகிறான் என நினைத்துயிருக்க..
தனு தன்அண்ணாவிடம் கூறிய செய்தியை கேட்டவுடன் முதலில் அதிர்வுதான்.. பின் எதற்கு பிறகு இந்த முடிவு என யோசிக்க.. நாள் பிரச்சனை என விளங்க.. பின் துள்ளலுடன்!. அவனவளின் நடவடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.. இன்னும் பார்க்கிறாள்.
தான் சிவப்பும், மஞ்சள் கலந்த சாப்ட் சிலக்சேலை, தன்னவன் அடர்பச்சை கலர் சட்டை, லைட்புளூ ஜீன்ஸ்.
இருவரும்.. அவனின் குழந்தை முதல் தன்வாழ்க்கை துணையை தேர்ந்ததெடுத்து விட்ட பொழுது வரை வாழ்ந்த வீட்டை நோக்கி செல்கிறோம்.
” எதுக்கு இப்ப வேந்தன் எழிலரசிய இங்க அழைத்து வரான்?. ”
அவனை மனதில் வறுத்து.. ” எங்களிடம் எதையும் சொல்ல அத்த.. நான் யாழினி பாப்பா பிறந்தநாளிற்கு வேந்தன், எழிலரசிய வாங்கனு கூப்பிட்டேன்.. சரினு சொன்ன ஒரு ஐந்துநிமிடத்தில் மாமாவிடம் கால் செய்து இங்கு போறோம்.. ரவி மாமாவ கீழ வரச் சொல்லுங்கனு அவர் போனில் பேசினார். இன்பாவ வரச்சொன்னார்.. எங்கள முன்னாடி போகச் சொன்னார்.. பின்ன நாங்க இங்க இருக்கோம். ” இதனை சித்ராவும், சாந்தியும் கேட்டுயிருக்க..
சாந்தி மெல்லிய புன்னகையுடன்.. ” சித்ரா.. நான் நினைக்கிறேன் வேந்தன் நாளை ஆடி மாதம் தொடங்குவதால்.. இது பொதுவான வீடு என்பதால்.. எங்க பிறந்தநாள் அப்ப எழிலரசிய வரவேண்டானு சொல்லிவிடுவோனு.. இன்னைக்கு கூட்டுட்டு வரானு நினைக்கிறேன். ”
” ஏன் அக்கா சும்மா வரக்கூட ஆடிமாதம் கணக்கு இருக்கா என்ன?. ”
” தெளிவா தெரியல சித்ரா. இதைபற்றி கூறிதான் கேட்கனும்.. ஆனா நாம்ம கொஞ்சம் யோசித்தாலும் யோசித்து இருப்போம். ”
இதை கேட்ட காவ்யா.. ” சித்ரா அத்தை.. என்னிடம் உங்க பையன் பிறந்தநாளிற்கு எழிலரசிய அங்கயே.. வாங்கனு கூப்பிட்டதற்கு.. வீட்டில் சென்று முறையா கூப்பிடுங்க.. அப்பதான் எழிலரசியோட நானும் வருவேன் என்பது போல சொன்னாரு. இப்ப என்னடானா.. தீடிர்னு எழிலரசிய புகுந்தவீட்டிற்கு நல்லநேரம் பார்க்காம?. பெரியவங்க யாரும் இல்லாம கூப்பிட்டு வராறே.. இது எனக்கு நல்லாதவே படல. ”
தான் கூறியதை மறுத்து.. அண்ணாவிடம் பேசுகிறேன் என எவ்வளவு அதிகாரமாக கூறி.. இப்போது தீடிர் என அழைத்து வருவதினால் உண்டான கோபத்தை வேந்தனை கேட்க வேண்டியதை சித்ராவிடம் கேட்டு தீர்த்துக் கொண்டாள். எப்படியும் தான் கேட்க வேண்டியதை இவர் கேட்பார் எனவும் எண்ணினாள்.
அண்ணன் மகளால் தன் தங்கை போன்றவளின் முகம் யோசனையில் சென்றதை சரியில்லையே என எண்ணிய சாந்தி.. ” காவ்யா ” மனதில் யோசித்து இருந்தவள் அழைப்பில் திரும்பி.. ” சொல்லுங்க அத்த.. ”
” வேந்தன் நாங்க வரோம் சொன்னானு சொன்னியே.. யார்?. யார் கூட வரான்?. ”
” ரவி மாமா, இன்பா, மேகா கடைசி அண்ணண் கதிரவன், அவரோட பிரண்ட் சந்துரு. நாங்க வந்ததால எங்க கூட மேகா வந்தா. ”
நபர்களை கேட்டவர்.. புன்னகையுடன்.. ” இவங்க பத்தாத.. இன்னைக்கு நல்ல நாள் இல்லாட்டியும்.. எதுவும் இல்லாத நாள்தான். அவங்க கூட இரண்டு பேர் முறைக்கும் அண்ணா, தம்பி , நாத்தனார், மாமானு அவங்ககூட வராங்க. இங்க பெரியம்மா, அம்மா, அண்ணி, தங்கை இருக்கோம். அப்புறம் என்ன நமக்கு.
சித்ரா எனக்கு தெரிந்து இந்த வீட்டிற்கும், இந்த ஆடி மாதத்திற்கும் பார்க்க தேவையில்லதான். அம்மன் பெண் தெய்வத்தை தான் இந்த மாதம் வணங்குகிறோம். நம்ம பையனும், மருமகளும் காலையில் தான் அம்மனின் ஆசிர்வாதம் வாங்கி இருக்காங்க. அதன்பிறகு தான் எல்லாம் நடந்து.. இப்ப நம்ம வீட்டிற்கு வராங்க. எதை பற்றியும் யாரும் யோசிக்க வேண்டாம். வசு நீ மேகா கூட உட்காரு. வாங்க நாம்ம வரவங்களுக்கு கொடுக்க ஏதாவது.. ” கூறிக்கொண்டுயிருக்கும் போது..
சித்ராவின் போன் ஒலி கேட்க.. ” சொல்லுங்க பா. ”
” சித்ரா.. வசு சொல்லியிருப்பா. நாங்க பக்கத்தில் வந்துட்டோம். எல்லோருக்கும் சாப்பாடு கடையில் இருந்து கொண்டுவராங்க. நீங்க எதுவும் ஆரம்பித்து விடாதீங்க. ”
” ம்.. சரிங்க. வாங்க . ” போன்னை வைத்தவுடன்.. ரவி கூறியதை கூற..
” ம்.. ரவி தம்பி வேந்தன விட வேகமா இருக்காரு. ” புன்னகையுடன் கூறவும் வாசலில் காரின் மெல்லிய ஹாரன் சத்தம் கேட்டு வெளியே வந்தனர்.
‘ அவர்கள் பார்க்கும் போது ஒருபக்கம் தன் வாழ்க்கை துணையான தன் தனுமாமாவின் அரசியாகவும்.. மறுபக்கம் தனக்கு இன்றும் என்றும் பக்கபலமாக எதற்கும் துணையாக இருக்கும் தமையன் இன்பாவின் எழிலாக.. முகம் முழுவதும் மகிழ்ச்சியை பூசிக்கொண்டு.. நடுவில் எழிலரசியாக வந்தாள். ‘
” சித்ரா நம்ம மருமக அப்படியே அம்மன் மாதிரியே புடவை, அளவான நகை, தலைநிறைய பூனு அம்சமா.. நம்ம பையனுடன் நடந்து வரா. இப்படியா காலையில் நீ கோவில் பார்க்கும்போதும் இருந்தா?. ”
” புடவை இதேதான்.. ஆனா நகையெல்லாம் கண்ணுக்கே தெரியல. ”
பக்கத்தில் இதை கேட்க மேகா.. ” சித்ரா ம்மா. இன்பா மாமாவ.. இங்க போனும் அண்ணா அழைத்தவுடனே வீட்டிற்கு போய் எடுத்துட்டு வந்துயிருப்பார். அவ்வளவு தங்கை பாசம். ”
இதை கேட்டவர்கள் தங்கையின் மீதான பாசத்தை நினைத்து புன்னகைக்க.. கூறியவள் எரிச்சலானால்.
அரசி தன் மன்னவனுடன் வந்தவள்.. தனு அவர்கள் இருக்கும் வீடு அழைத்து சென்றபோது.. வீட்டின் வெளியில் வைத்து அள்ளிக்கொண்டவன்.. தங்களின் ரூம் தவிர.. வேறு எங்கும் நடக்கவிடமால்.. மீண்டும் வெளியில் வந்து தான் இறக்கி விட்டாதால்..
இப்போது தன் பெற்றோர்களின் சம்மதத்துடன்.. ‘ ஆம் தன் தனுவும், ரவிமாமாவும் இருவரும் சாப்பாடு, ஸ்விட் எடுக்க போகும்போது அனுமதி வாங்கிவிட்டனர். ‘ தன் வேந்தனின் கையை மென்மையாக பற்றிய படி.. தான் வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் உற்சாகத்துடன் நடந்து வந்தாள்.
தன்னவனிடம் திரும்பி.. ” தனு நீங்க இங்கெல்லாம் தானே குழந்தையா.. நடந்தது.. சின்ன வயசில் விளையாடி இருப்பீங்கள!. ” ஆசையுடன் கேட்க..
அவளை கண்களால் அள்ளி அணைத்து.. அவளை போல மெல்லிய குரலில்.. ” ஆமா முயல்குட்டி.. கூடவே இங்கதான் உன்னைய முதன்முறை பார்த்து வந்தபிறகு.. ஒருவாரம் உன்னை நினைத்து நினைத்து.. ஒரு ஆயிரம்தடவை மேல நடந்துயிருப்பேன். ” புன்னகையுடன் கூறவும்..
அதனை கேட்டவள் என்ன உணர்வுகள்!. என கூறமுடியாமல் தன்னவனை அழுத்தி பிடிக்க.. அவனும் தனக்குள் புகுத்திக் கொண்டு.. இருவரும் கைகோர்த்து ஒன்றாக நிற்க.. இருவரையும் ஆலம் சுற்றி.. வீட்டினுள் அழைத்துச் சென்றனர்.
காரை விட்டு இறங்கியபோது பார்த்ததில்.. ஏனோ தங்கள் கண்ணே பட்டுவிட்டது என.. உடனே சாந்தி, சித்ரா இருவரும் வேகமாக ஆலம் கரைத்து வந்து.. இளையவர்களை சுற்ற வைத்தனர். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஏன் என கேட்வும் இல்லை.
சாந்தி இவர்களை முதலில் பூஜை அறை அழைத்து சென்று.. அவரே அவர்களுக்கு பிரசாதம்.. அரசி விரும்பும் விதமாகவே புன்னகையுடன் நெற்றியில் வைத்துவிட்டார். அதனை இருவரும் மகிழ்வுடன் ஏற்று ஹாலிற்கு வந்து.. அனைவரைக்கும் மெல்லிய புன்னகையை செலுத்திவிட்டு ஷோபாவில் அமர்ந்தார்கள்.
அப்போது சித்ராவின் போன் மணி ஒலிக்க.. அதனை ஏற்று காதில் வைத்தவுடன் எதுவும் பேசாமல் இருந்தவர்.. ” அப்படியா?. இது எப்போ தெரிந்தது?. “