” ரொம்ப சந்தோஷம் அண்ணி.. வினோதினி எப்படி இருக்கா?. ” கண்களில் மகிழ்வுடன் பேசியவர்..
அனைவரையும் பார்த்தவர்.. ” அண்ணி எல்லோரும் வீட்டில் இருக்கோம். நான் ஸ்பிக்கரில் போடுறேன். நீங்களே எல்லோருக்கும் இந்த விஷயத்தை சொல்லிருங்க. ”
அவர் புன்னகையுடன் ஸ்பிக்கர் ஆன் செய்ய.. ” சொல்லுங்க அண்ணி. ”
” ம்.. எல்லோரும் நல்ல செய்தி. வினோவும் விஸ்வநாதனும் இன்னொரு குழந்தைக்கு தாய்,தகப்பன் ஆக போறாங்க. நம்ம எல்லோருக்கும் புது உறவு வரப்போறாங்க. ” புன்னகையுடன் கூற..
அனைவரும் அவருக்கு வாழ்த்தும், வினோ பற்றிய நலம் விசாரிப்பும், எப்போ தெரிந்து?. என்ற தகவலும் கேட்டு.. பேசும் போதே பால்கோவா அனைவருக்கும் கொடுத்து.. அவ்வீட்டின் மகிழ்ச்சி இருமடங்காக பெருகினர். ஒருசிலருக்கு மகிழ்வதா ?.இல்லை பொறாமைபடுவதா?. என்று அமைதியாக இருந்தனர்.
” முயல்குட்டி வீட்டிற்குள்ள நுழைந்தவுடனே அத்தை ஆகிட்டீங்க. எல்லோருக்கும் சந்தோஷதையும் கொண்டு வந்துடீங்க. ” கண்களில் குறும்பு.. விரித்த புன்னகையுடன் கூற..
” ஓ.. அப்ப ஏதாவது மனசு வருந்தி எல்லோரும் அழுதா.. என்னால தானு சொல்லுவீங்களா தனு. ” கண்களில் சிறு முறைப்புடன்.. கையை கிள்ளி கேட்க..
குறும்புடன் சிரித்த கண்கள்.. இப்போது தன்னவளை ‘ லூசாடி ‘ என்ற கேள்வியுடன் கோபமாக பார்க்க..
புன்னகையுடன் அவனின் கைகளுக்குள் தன் கையை வைத்து அழுத்திக்கொண்டே” சந்தோஷமோ, துக்கமோ எதுவா இருந்தாலும்.. என் தனுமாமாவிற்கு மட்டும்தான்!. நான் இருக்கனும். வேறு யாருக்கும்.. எதுவாகவும்?. இருக்க விரும்பல. ” அவனின் கண்களை பார்த்துகூற..
தன்னவளின் பார்வையில் என்றும் போல் அள்ளிக் கொஞ்ச தோன்ற.. அவளின் கையை அவனும் அழுத்திய படியே அனைவரையும் பார்க்க..
அப்பா அங்கு இல்லை. அம்மா, பெரியம்மா, அண்ணி சமையல் அறையில் இருக்க.. மற்றவர்கள் பேசியக்கொண்டுயிருக்க.. ” முயல்குட்டி எழுந்து என்கூட வா. ” அவன் எழபோக..
அவனை எழவிடமால் இழுக்க.. ” என்னடி!. ” ஆசையுடன் கூட்டிப்போக நினைக்கையில்.. கூடஎழாமல் இழுக்கவும்.. அதனால் குறைப்பட்டு உடன் இருப்பவர்களை மறந்து சற்று அதிக குரலில் கேட்க..
சற்று அமைதியாக இருந்த இடத்தில் அனைவருக்கும் கேட்க.. அவர்களின் பார்வை இவர்களிடம் திரும்ப..
எழிலரசி வேந்தனை முறைப்புடன் பார்த்து.. ” தனு உட்காருங்க. நாம்ம மட்டும் எப்படி போக.. அண்ணாயெல்லாம் நம்மளையே பார்க்குறாங்க. சாப்பிட்டு எல்லோரும் போகலாம். ”
பார்க்கிறார்கள் என்றவுடன்.. அவர்களிடம் திரும்பி ‘ உங்களுக்கு என்ன இங்க பார்வை வேண்டியிருக்கு?. ‘ என்ற லுக்கை விட..
புன்னகையுடன் இன்பா.. ” ஒன்னும் இல்ல மாமா. சாப்பாடு வர லேட் ஆகும் என்றால்?. எழிலக்கு வீட்டை சுற்றி காண்பித்து வாங்களே கேட்க வந்தேன். ”
” ம்.. அதுக்குதான் அரசிய கூப்பிட்டேன். சாப்பிட்டு போலாம் சொல்லுறா. நீயே சொல்லு. ” கண்கள் குறும்புடன் அவளை பார்க்க.. போடா என பார்த்து.. அவளோ தன் அண்ணாவை பார்த்தாள்.
” இல்ல அண்ணா.. நான் சாப்பிட்டே பார்த்துக்கிறேன். ” வேந்தனிடம் திரும்பி..
” தனு அவங்க பிரஷ்ஷாகி வர கூட்டிட்டு போங்க.. நீங்களும் ஆகிட்டு வாங்க. நான் அம்மாவிடம் பேசனும்.. அவங்க எதிர்பார்த்துட்டு இருப்பாங்க. ”
” இரு சேர்ந்தே வீடியோ கால் பார்க்கலாம்.. அவங்களுக்கு ரூம் காண்பித்துட்டு வரேன். ” கையை மென்மையாக பிடித்து கூறி.. அவர்கள் மூவரையும் அழைத்துச் சென்றான்.
வீட்டின் ஆள் என்ற உரிமையுடன்.. எழிலரசி கூற.. அதனை வேந்தன் கேட்டு அவர்களை கீழே உள்ள விருந்தினர் அறைக்கு அழைத்து சென்றதை.. பார்த்தபடியே வந்த காவ்யா.. சற்றுமுன் பேசியதை நினைத்து கோபம் கோபமாக வந்தது.
இனிப்பு சாப்பிட்டதற்கு தண்ணீர் குடிக்கலாம் என சமையல்அறை சென்ற போது.. ” அக்கா எனக்கு காவ்யா சொல்லும் போது நேரம் பார்க்க கூட்டிட்டு வரானே என்று.. அப்ப மனசுல கொஞ்சம் கவலை வந்தது. ஆனா இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. கொஞ்சநாளா விசாகனிற்கு 5வயது ஆக போகுது இப்பவே வினோவிற்கு இரண்டாவது குழந்தை வந்துட்டா நல்லாயிருக்கும் என்று நினைத்துட்டு இருந்ததேன். எழிலரசி இங்க வந்த நேரத்தோடவே.. பிள்ளைசெல்வம் செய்தியையும் கொண்டு வந்து என் கவலைய போக்கிட்டா அக்கா. ”
நல்ல செய்தியோட வந்துவிட்டாளா!. தொடந்து அவர்களின் பேச்சை கேட்க அப்படியே நின்றுவிட்டாள்..
” சித்ரா.. ஏதாவது துக்க செய்தியோ.. இல்ல மனம் வருந்தும் படியான செய்தி இந்நேரம் வந்திருந்தாலும் இப்படிதான் நினைத்துயிருப்பியா?.. ”
” தெரியல அக்கா. ”
” அப்ப மனதிற்கு நெருக்கமானவங்களா இருந்தா நினைத்துயிருப்ப. இப்படி நினைப்பது உனக்கு நல்லதுக்கு இல்ல சித்ரா. இனி வினோ குழந்தை பற்றி யோசிக்கும் போது எழிலரசிதான் நல்லசெய்தி கொண்டு வந்தானு நினைக்காத.. உனக்கு அண்ணி போன் செய்த நேரத்தில் மருமக கூட இருந்தா நினைச்சுக்கோ. அப்படியும் ஏதாவது தோன்றினா கூடவே வேந்தனையும் நினை. ” புரியாமல் பார்க்க..
” சித்ரா.. எழிலரசி நம்ப வேந்தனோட சரிபாதியா வரப்போறவ. எழில் எப்படி இந்த வீட்டிற்கு கல்யாணம் ஆகப்போகும் புதுபெண்ணா வந்தாலே.. அதே மாதிரிதான் ரொம்ப நாட்கள் கழித்து.. இங்க நம்ம பையனும் புது மாப்பிள்ளையா வந்துயிருக்கான். அதனால அவங்க இரண்டுபேருக்கும்.. எந்த செய்தி நமக்கு வந்துயிருந்தாலும்.. அதுக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்ல. “
” நீ கவனித்து இருக்கியானு தெரியல.. நீங்க புது வீட்டிற்கு போனபிறகு வேந்தன் அதிகம் இங்க வரவே மாட்டான். வந்தாலும் பத்துநிமிடம் இருப்பான். எழிலரசியோட இன்னைக்கு வரும்போதும் சரி.. அதன்பிறகும் பார்த்தியா!. அவன் அவ கைய பிடித்தேதான் இருந்தான். அவன் முகம்முழுவதும் சந்தோஷதோட பேசிட்டு இருந்தான். வந்தவுடனே இன்னைக்கே இங்க கூட்டிட்டு வந்து பால்காய்ச்ச தோன்றியது. ” கூறிக்கொண்டுயிருக்கும் மாமியாரை..
என்ன கல்யாணம் முடியும் முன்னமே இன்னைக்கே பால்காய்ச்சி.. வீட்டிலும் அவளுக்கு உரிமை கொடுத்துயிருப்பிங்களா?. அதன்பிறகு கேட்க பிடிக்காமல் ஹாலிற்கு வர.. இங்கு என்னடா என்றால்..
எழிலரசியையும்.. மற்றவர்களையும்.. நீங்கள் போய் முகம்கழுவி வாருங்கள் என தான்.. கூறவேண்டியதை அவளே கட்டளையிடுவது போல கூறுகிறாள்.
எழிலரசி போனில் எதையே பார்த்தபடி குனிந்துயிருக்க.. அத்தைகள் அங்க இருக்க.. உடை மாற்றி வரலாம் கூடவே இருவருரையும் அழைத்து சென்றால்.. ‘ எழில் தனியாக இருக்கட்டும். ‘ என எண்ணி.. காவ்யா வசுவை வா என சைகையில் அழைத்து இருவரையும் தங்கள் அறைக்கு கூட்டிச்சென்றாள்.
போனை பார்த்திருந்தவள்.. அம்மாவிடம் பேசவேண்டும் எங்கே இன்னும் தனுவை காணவில்லை என நிமிர.. ஹாலில் யாரும் இல்லை என்பதை பார்த்தாள். சரி அவர்களும் தேவையாக உள்ளே சென்றுயிருப்பார்கள் என நினைத்தவள்.. எழிலரசி தன்னவன் சற்றுமுன் வரும்பாதையை பற்றி.. கூறியது ஞாபகம் வர.. அங்கே சென்றே பேசலாம் என்று எழுந்து நின்றவள்..
அங்குயிருந்து சற்றுதள்ளி குழந்தையின் புகைபடம் ஒன்றை பார்த்து அப்படியே நின்றாள்.
இரண்டு இல்லை மூன்று வயது குழந்தை. குழந்தையின் முகம் அந்த வயதிற்கே உரிய கொழுகொழு கன்னம். ஆனால் அதில் இருக்கும் கண்களும், இதழ் காட்டியிருக்கும் மெல்லிய இதழ்விரித்த புன்னகை.. ‘ இதே கண்களும், புன்னகையும் தன்னை மயக்குபவனின் உடையதாச்சே?.!. அப்படியென்றால் இந்த புகைபடம்?. ‘ அந்த புகைபடத்தை அருகில் சென்று எடுத்து பார்க்கலாம். என கால் எடுத்து வைத்தவள்..
” அம்மாஆஆ.. ” அலறலுடன் தடுமாறி அவளின் பக்கவாட்டில் கீழே விழப்போனவளை..
தன்னை பிரஷ்ஷாகிக் கொண்டு அறையின் வெளியே வந்தவன்.. அங்கு ஷோபாவின் முன் இருந்த மரடேபிளில் முட்டி இடித்து.. நிற்க முடியாமல் காலில் ஏதோ தடுக்கி தடுமாறி பக்கவாட்டில்.. கண்களில் வலிநிறைந்த தன்னவளின்.. ” அம்மாஆஆ.. ” சத்தத்தில்..
அவன் மூளையும், இதயமும் ஒருநொடி செயல் இழந்து.. உயிர் போய் பின் உயிர் வந்து.. தரையில் விழபோனவளை.. ” அரசிசிசி.. ” வேகமாக வந்து அவளை தாங்கிபிடிக்க..
தீடிர் என்ற நிகழ்விலும்.. பதட்டத்திலும் வேந்தனும் நிற்க முடியாமல் விழ இருந்த நேரம்.. அப்போதுதான் உணவை கொண்டு வந்தவர்களுடன் உள்ளே நுழைந்த ஈஸ்வர், கமலேஷ் அதிர்ச்சியுடன்.. இருவரையும் தாங்கி பிடித்து ஷோபாவைவில் அமர வைக்க போகும் போது..
மீண்டும் ” தனுனுஉ.. ” கண்ணீருடன் எழிலரசி தன்னவனின் சட்டையை இறுக்கி..
” தனு.. சேலை அடி… மாட்டி..” அவள் நின்றபடியே கூற..
இருவரின் சத்தத்தில் இன்பா, கதிரவன், சந்துருவும் வந்தவர்கள்.. அவளின் கையின் சைகையில் புரிந்தது கதிரவனும், இன்பாவும் வேகமாக அடிசேலையில் நன்றாக மாட்டியிருந்த டேபிளை நகர்த்த.. சந்துரு சேலை எடுத்துட்டுவிட்டு.. பின் அவளை உட்கார வைத்தனர்.
எழிலரசியின் கண்கள் கண்ணீர் சிந்தியபடியே.. தன் வலியை எப்போதும் போல தன்னவனின் இறுக்கிய பிடியிலேயே காண்பித்தாள். அவன் கண்களும் கலங்கியபடியே பிடித்துயிருக்க.. அவளிடம் எங்கே வலி என கேட்க வரும்போது..
அவளின் காலின் அடியில் உட்கார்ந்த இன்பா.. ” எழில் எங்க வலிக்குது ம்மா.?.” அவனுக்கு வார்த்தைகள் தடுமாற..
அவள் மிகமெல்லிய குரலில்.. ” தனு.. ” அவளின் அழைப்பில்.. இதற்குமேல் பொறுக்க முடியாமல்.. அவளை அள்ளி மடியில் வைத்து.. அவளின் இதழை தன் காதருக்கே கொண்டு வந்தான்.
” முயல்குட்டி எங்க வலிக்குது?. ” அவனின் இப்படியான செயலை இன்பா தவிர மற்றவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஒருநொடி அதிர்ந்து.. பின் குனிந்து கேட்பதற்கு பதிலாக.. இப்படி கேட்கிறான் போல பார்த்தனர்.
காலில் அடி என்பதால் தற்போதைய முதல் உதவியாக நல்லெண்ணெய், ஜஸ் கட்டியை கொண்டு வர..
” தனு கணுக்காலில் அதிகமா.. முட்டியில் லைட்டா. ” அவனின் கழுத்தின் இறுக்கத்தை கூட்டி அப்படியே தலை வைக்க.. இருவருக்கும் இது சாதாரணமாக இருக்க..
உடன் இருந்தவர்களில் வசுவும், மேகாவும் தங்கள் நடுக்கத்தை மறைத்து சற்று தள்ளி உட்கார.. மற்றவர்கள் பதில் அறிய நின்றுயிருக்க..
” இன்பா சுள்ளுக்கா தான் இருக்கும் நினைக்கிறேன். ” அவனின் போன்னை கொடுத்து
” இதில் Dr. ஆனந்த் போன் செய்து.. விழந்ததை கூறி இங்க வரச்சொல்லு. அவனால் முடியலையென்றால்.. அவனுக்கு தெரிந்தவர உடனே வரச்சொல்லு. அப்படியே போய் ஒரு நைட்டிரஸ் வாங்கிவா. நாங்க மாடியில் இருக்கோம். “
கடைசி வரியை அனைவரிடமும் பார்த்துக்கூறி.. ஐஸ்கட்டியை மட்டும் வாங்கிக்கொண்டு.. தன் அரசியை அப்படியே அணைத்து தூக்கி.. மாடியில் இங்கேயேயும் யாரும் அதிகம் பயன்படுத்தாமல் தன்கென்று இருக்கும்.. தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டான்.
இன்பா அவன் கூறிய வேலையை செய்யபோக.. வேந்தனின் இந்த செயலை சிலர் மட்டுமே அதிர பார்த்தனர். பின் அவர்களும் ஒன்றும் கூறமுடியாமல் ஷோபாவில் அமர போகையில்..
சந்துரு யோசனையுடன்.. ” டேய் கதிரவா எப்படி டா சேலை டேபிள் அடியில் நல்ல மாட்டியது. நான் பார்த்தனே வேந்தன் அண்ணா எழில் கால சைடா திருப்பி.. அந்த கேப்பில் தான் நம்ம கூட வந்தாரு. அதன்பிறகு எப்படி அடியில்?. ” அவன் பாட்டிற்கு பேசிய படியே மீண்டும் வைக்க..
” டேய் முன்னாடி இங்கயா இருந்தது?. எழில் முன்பக்கம் டேபிளே இல்லையே? அண்ணா முன்னாடி வரைக்கும் தான் இருந்தது. ” அவனை பார்க்க..
கதிரவனோ தலைகுனிந்து கைகளை பிசைந்தபடி இருந்த மேகா, வசுவை பார்த்திருந்தான்.
” மேகா நீ ஏதும் எழுந்து உள்ளே போகும்போது நகர்த்துனியா?. ” அவளின் முன்னால் டேபிள் இருந்ததால்.. அருகில் அமர்ந்தும்.. ” நீ ஏன் தாரா இப்படி உட்கார்ந்துயிருக்க?. வசு அருகில் வந்து நின்று என இருவரும் ஒரு சேர கேட்க.. ஏதாவது கத்தி கேட்டு இன்பாவின் காதில் விழுந்தால் அவ்வளவுதான்.
வசு, மேகாவும் ஒருவரை ஒருவர் பார்க்க.. நால்வரும் அவர்களை பார்க்க.. கதிரவன் பொறுமையிழந்து.. ” மேகா.. இரண்டுபேரும் என்ன பண்ணீங்க?. ”
” அண்ணா.. காவ்யா அண்ணி எங்களை கூப்பிடாங்க. எழில் பக்கத்தில் உட்கார்ந்துயிருந்த வசு.. எழில் போனில் ஏதோ பார்த்துட்டு இருந்தால.. வெளியே வர கொஞ்சம் நகர்த்தினோம். ஆனா அதுசரியா எழில் சேலையின் மேல் இருந்தயிருக்கும் போல. நாங்க அதை கவனிக்காம உள்ள போயிட்டோம். ”
” சரி.. நீங்க உள்ள போகும்போது எழில் கூட யார் இருந்தா?. ”
மேகா இல்லை என தலையாட்ட..
” மேகா இதுக்கு என்ன அர்த்தம் புரியல?. . என் முகத்தை பார்த்து பதில் சொல்லு?. “
” நாங்க போனப்ப.. எழில் கூட யாரும் இல்ல அண்ணா. வேந்தன் அண்ணா வந்துடுவாங்கனு.”
கதிரவன் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான். அருகில் இருந்த சந்துரு.. ” சரி விடுடா. தெரியாம தானே நடந்தது. எழிலுக்கு ஒன்னும்.. ”
” டேய் லூசு மாதிரி பேசாத.. எழில் எப்படி கத்தினானு கேட்டில.. அவளுக்கு மாதம்மாதம் வயிற்றுவலி அதிகமாக இருக்கும் போதுகூட இன்பாவ பிடிச்சுட்டு அமைதியா தான் அழுவா. அப்படி இருக்கவ கத்தியிருக்கான.. எப்படி வலிக்கோதே தெரியல. போன வாரம் தான் பீரியட்ஸ்யோட காய்ச்சல் வந்து மூனுநாள் படுத்தேயிருந்தா. திரும்பவும் என்ன பண்ணப்போகுதோ?. அதவிட அண்ணாவ பார்த்தில.. ” அவனின் கையை பிடித்து தடுத்து.. முன்னால் இருந்தவரை பார்க்க கூற..
சாந்தி பதட்டத்துடன் நின்றுயிருந்தார்.. ” கதிரவா எழிலிற்கு போன வாரம் காய்ச்சல் வந்திருந்ததா?. ”
” அதுவந்து பெரியம்மா.. எழில் மழையில் நனைச்சுட்டா. அதனால தான். அண்ணா டாக்டரை வரவைத்தும் பார்த்துட்டார். வேற ஒன்னும் பிரச்சனையில்ல. ”
இதை கேட்டு ” வேந்தன்.. ” ஆரம்பிக்கையில்..
” ஈஸ்வர் மாமா.. ” அழைப்புடன் இன்பா உள்ளேவர.. ” மாமா.. வேந்தன் மாமா சொன்னவர் வரல.. அவருக்கு தெரிந்தவர் தான் வராங்க. மாடியில் ரூம் எங்க?. ”
” இரண்டாவது ரூம். ஒரு நிமிஷம் இரு. ” இரண்டு தண்ணீர் பாட்டில் கொண்டு வர..
” இந்த அவனிடம் கொடு. ” சரி என தலையசைத்து.. வாங்கி வந்த துணியை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்து சென்றான்.
கதவை தட்டி.. ” மாமா.. மாமா.. ” துணியினை உடனே போடுவதற்கு ஏற்றவாறு எடுத்துக்கொண்டுயிருக்க.. ” உள்ள வாடா. ”
உள்சென்றவன் தன் தங்கையை பார்த்து அதிர்ந்துபோனான். மெளனமாக அழுது கொண்டே.. வேந்தனின் கழுத்தை இறுக்கிபிடித்து அதில் புதைந்து.. மடியைவிட்டு இறங்கி படுக்காமல் கால்களை இரு தலையணையின் மீது வைத்துயிருக்க.. பாதங்கள் இரண்டும் விங்கியிருந்து. பக்கத்தில் ஐஸ் பேக் இருக்க ஒத்தடம் கொடுத்துயிருக்கிறார் என்பது புரிந்தது.
” இரண்டும் காலும்மா?. ” ஆம் என மெல்லிய தலையசைப்பு.. அவனும் அழுதுயிருக்கான் என முகத்தில் தெரிய..
” என்ன மாமா நீங்களும் அவளோட சேர்ந்து அழுதிங்களா?. அதான் இன்னும் எழில்.. ”
” என்னால முடியல டா. நான் முதலில் கூப்பிட்டப்பவே வந்துயிருந்தா.. இப்படி ஆகிடுக்குமா சொல்லு?. இந்த ரூமிற்கு இவள.. எவ்வளவு சந்தோஷதோட தூக்கிட்டு வருனும் நினைச்சேன்.. இப்படி தூக்கிட்டு வர வச்சுட்டா. இதில் இறங்கவே மாட்டேனு அடம். முட்டியில் காயம் வேற.. இப்ப எப்படி டிரஸ் மாத்த போறேன் தெரியல. ”
இன்பாவிற்கு கவலையிருந்தாலும்.. கடைசி வரியில் சிரிப்புவர.. ” இருங்க நான் சத்யாவ வரச்சொல்லுறேன். நம்ம கிட்ட இப்படிதான் அடம்பிடிப்பா. அவளுக்கு மட்டும்தான் அடங்குவா.”
” வேண்ட.. வேண்டாம்.. ஏற்கனவே நிறையபேர் இருக்கோம். நீ கொடு. நான் எப்படியாவது மாற்ற வச்சுடுவேன். நீ போய் சாப்பிடு. ”
” இல்ல மாமா. எழில டாக்டர் பார்த்தபின்பு. ”
” டேய் டாக்டர் இவள பார்க்கும்போது அவளை தாங்கிபிடிக்க ஒருத்தருக்காவது தெம்பு வேண்டும்டா. நீ போய் சீக்கிரம் சாப்பிடு.. வந்துவிட போறாரு. ஹாஸ்பிட்டல் உடனே போகனும் என்றால் போகனும். ” சரி என தலையசைத்து அவன் கீழே செல்ல.
ரவி மாமா மட்டும் சாப்பிட்டு சென்றுயிருக்க.. மற்றவர்கள் எழிலின் உடல்நிலை என்ன என்று அறிய அவனை பார்த்தனர்.
அவன் ஹாலில் நின்றபடியே.. ” சாந்தி அத்த எனக்கு கொஞ்சமா சாம்பார் சாதம் எடுத்துட்டு வரங்கீங்களா. டாக்டர் வருவதற்குள்ள சாப்பிடனும். ”
இதோ என அவர் போக எழுகையில் ஈஸ்வர் சென்றுவிட்டான்.
” அது எழிலிற்கு இரண்டு காலும் வீங்கியிருக்கு. முட்டியில் காயம் இருக்கா. அதான் அவள பார்த்துக்க..” அவன் முடிக்கும் முன்..
” வசு, மேகா, காவ்யா இருக்காங்கள.. ” அவர் முடிப்பதற்குள்..
” இல்ல அத்த.. நானும், மாமாவும் பார்த்துப்போம்.. அது பிரச்சனையில்ல. சரி நீங்கயெல்லாம் சாப்பிட போங்க. ”
” இல்ல டா. எழில டாக்டர் பார்த்துட்டு போகட்டும். எழில் சாப்பிடாம நாங்க எப்படி சாப்பிட?. ”
புன்னகையுடன்.. ” சந்துரு அண்ணா.. அப்படினா நீங்க ராத்திரி இல்ல நாளை காலை வரை காத்திருக்கனும். அவ இப்ப சாப்பிடுவது, சாப்பிட வைப்பது ரொம்பவே கஷ்டம். ” அவன் கூறியவுடனே அமர்ந்து விட்டனர்.
வேலையிருப்பர்கள் போக வேண்டும்.. வயது காரணம்.. அதனால் அனைவரும் சாந்தி, சித்ரா தவிர டைனிங் டேபிள் வைக்கப்பட்டுயிருந்த உணவை தேவையானதை எடுத்துக் கொண்டு கீழே அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
” அதுவரைக்கும் சாப்பிடாமலலே இருப்பாளா? “
” ம்… இருப்பா. அவளுக்கு நான், சத்யா இல்ல அ.. ” அவனின் போனின் ஒலி கேட்க.. எடுத்தவன்.. ” ம்.. சரி அண்ணா. ம். ”
” டாக்டர் வந்துட்டு இருக்காறா. நான் மாடிக்கு போறேன். ” வேகமாக கை கழுவி.. ஒரு கப்பில் ஸ்பூன் வைத்து ரசம்சாதம், மற்றொரு கப்பில் சிறிது ஸ்விட் மட்டும் எடுத்துச்சென்றான்.
” மேகா நீயாவது போ.. பொண்ணுங்க துணை இல்லாம எழில் எப்படி டிரஸ் மாத்துவா. ” கவலையுடன் வேகமாக போகும் இன்பாவை பார்த்தபடி.. சாந்தி கூற..
” அதெல்லாம் வேண்டாம் பெரியம்மா. நான் போனா தான் அவ கூச்சப்படுவா. ஏன் இப்ப அத்தையே போனாலும் விடமாட்டா. அவள அவங்க இரண்டு பேரும் பார்த்துபாங்க.. அவளாவே யார் துணையில்லாம ட்ரஸ் மாத்திடுவா. ஆனா என்ன அவள மாத்த போக வைப்பதுதான் கஷ்டம்.. அதுக்குதான் மாமா ஸ்விட் எடுத்துட்டு போறாங்க. ” வினோதமாக கேட்டுக் கொண்டுயிருந்தவர்கள் கடைசி வரியை கூறும்போது சிரித்துவிட்டனர்.
” நிஜமா எழில் கூட இன்பா இருப்பான்.. ஆனா லட்சுமி அண்ணிய விட மாட்டாள. ” ஆம் என தலையசைக்க.. ” சின்ன வயசில் இருந்தே இப்படிதானா?. ”
” ம்.. அவ பூப்பெய்த நாளில் இருந்தே இப்படிதான். ” அன்றுமுதல் இன்றுவரை மேலோட்டமாக கூற.. இதை கேட்டிருந்த சித்ரா..
” வேந்தனும் அவன் தங்கைகளுக்கு பண்ணுவான். அதான் எழிலுக்கு அவனிடம் கூச்சம் இல்லயோ?. ”
” சித்ரா மா.. வேந்தன் மாமா எப்போதிலிருந்து தங்கைகளுக்கு பண்ண ஆரம்பித்தாரு?. ” அவரும் வினோவில் இருந்து கூற..
வெளியில் சாதாரணமாகவும்.. மனதில் ஒன்றை ஓரளவிற்கு கண்டுபிடித்து விட்டதை நினைத்து புன்னகையுடன் கேட்டிருந்தான் சந்துரு.. தன் பக்கத்தில் அமர்ந்தவனை அர்த்தம் பொதிந்த பார்வையை ஒருமுறை பார்த்துவிட்டது சாப்பாட்டை தொடர..
அங்கு மாடியில்.. மடியில் இருந்த தன் அரசியை ஒருவாய் சாப்பிட வைக்க.. பாடாது பாடுபட்டான் அவளின் வேந்தன்.
உணவை கொடுத்துவிட்டு.. உடை மாற்றியிருந்த தங்கையை தலையை தடவியபடியே.. ” மாமா இவ்வளவு சீக்கிரம் எழில டிரஸ் மாத்த வைச்சுட்டிங்க?. நான் ஸ்விட் கொண்டு வந்தது வேஸ்ட் ஆகிடுச்சோ. ”
நான் இருக்க அவளுக்கு எதுக்கு ஸ்விட்… ” சரிடா நீ டாக்டரை கீழ போய் கூட்டிட்டு வா. நான் இவள முடிந்தளவு சாப்பிட வைக்கிறேன். ” சரி என தலையசைத்து மாடி பால்கனியிலேயே நின்று பார்த்திருந்தான்.
” முயல்குட்டி.. டாக்டர் பார்க்கும் போது கொஞ்சம் தெம்பா இருக்கனும் இல்ல. கொஞ்சமாவது சாப்பிடேன். ” அவள் வாய்திறந்து சிறிது மட்டுமே வாங்கி.. ” வேண்டாம் தனுமாமா முடியல. ” அவனின் கழுத்தை கட்டி தோளில் படுத்துக்கொள்ள..
” சரிடி ரசம் மட்டுமாவது குடி. ” ஸ்பூனில் ரசம் மட்டும் எடுத்து கொடுத்தான். அதையும் சிறிது மட்டுமே வாங்கியனாள். சரி டாக்டர் பார்த்தபிறகு கொடுக்கலாம் என அருகில் வைத்துவிட்டு..
அவளின் தலை முடியை ஒதுக்கி.. நெற்றியில் முத்தமிட்டு ” முயல்குட்டி டாக்டர் வந்த பிறகு அவர் கேட்கும் கேள்விக்கு சரியா பதில் சொல்லனும். ” சரி என்பது போல அவனின் கன்னத்தில் இதழ்வைக்க.
” திரும்பியதில் இடுப்புவலி இல்லை தானே?. ” இல்லை என அவனின் கழுத்தில் இதழ்வைக்க.. அவளின் பதில் அளிக்கும்விதம் அவனை நிலையிலக்க செய்தது.
” ஏன்னடி இப்படி பண்ணுற?. இந்த ரூம்மில் உன்னய எப்படி கூட்டிட்டு வரனும்.. பேசிட்டே எப்படியெல்லாம் முத்தம் கொடுக்கனும், வாங்கனும் உன்னைய கூப்பிட்டேன். ஆனா இப்ப கொஞ்சம் கூட வாயே திறக்கமாட்டிகிற. அப்படி எந்த நினைப்பிலடி?. முன்னாடி இருந்த டேபிளைகூட பார்க்காம கால எடுத்து வைத்த?. “
பதிலுக்கு காத்திருந்த அவனை இழுத்து.. நெற்றில் முத்தம் வைக்க.. ” என்ன!. என்னையா?. . “
தன்னவனின் கவலை போக்க.. இதழில் இதழ் வைத்தவள்.. ” கிருஷ்ணன் வேடம் போட்ட.. என் குட்டி தனுமாமாவோட போட்டோவ பார்த்துட்டு.. அதை பக்கத்தில் பார்க்கலானு…” மிக மெல்லிய குரலில் கூறிக்கு கொண்டுயிருக்கும் போது..
” போதும்டி.. அவ்வளவு நேரம் கூட இருந்தேன்.. அப்ப ஏன்னடி நீ அதை பார்க்காம போன?. அந்த உயரத்தில் உள்ளதை என்னைய தானே எடுக்க சொல்லியிருப்ப.. அதுபோல என்கூடவே பார்க்க தோன்றியிருக்கலாம் தானே. ” அவளின் இதழில் நீண்ட ஆழ்ந்த முத்தம் கொடுத்தான்.
அவனிற்கு பல வருடம்முன் தன் முயல்குட்டியின் வலியுடன் இருந்த முகத்தை பார்த்ததையே.. சிலநாட்கள் முன்.. அன்றே அவள் புன்னகையுடன் எடுத்த போட்டோவை பார்த்துதான் மறந்தான். இப்போது தன்னுடைய புகைபடத்தை பார்க்கச் சென்று.. மீண்டும் அதைவிட வலி நிறைத்த கண்கள், முகம், அவள் விழபோன அந்த காட்சியும் கண்முன் வந்து.. கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்துக்கொண்டுயிருந்தது.