கதவு தட்டும் சத்தம் கேட்க.. அவளை கட்டிலில் சாய்வாக உட்காரவைத்து கதவை திறந்தான். டாக்டராக ஒரு பெண்மணியும் உடன் சித்ராவும் இருந்தார்.
தற்போது எழிலரசி நைட் டிரஸ் மாற்றி.. இரு கால்களையும் இரண்டு தலையணையின் மீதுவைத்தும்.. அழுது அழுது சிவந்த கண்கள், கன்னங்கள். டாக்டர் தொட்டு பார்க்கும்போது வலியை தன்னவனின் கையின் பிடித்திருப்பதில் காண்பித்து.. டாக்டர் கேட்கும் கேள்விக்கு மெல்லிய குரலில் பதில் அளிக்க.. அவள் பதில் புரியாமல் இருக்கும் நேரங்களில் இன்பா கூற.. அனைத்தும் பொறுமையாக கேட்டார்.
அவரின் கேள்விக்கு முக்கால் பாகம் பதிலும், கேள்வியும் பல கேட்ட வேந்தனை புன்னகையுடன்.. ” வேந்தன் எழிலரசிக்கு சுள்ளுக்குதான் உண்டாகியிருக்கு. பன்டேஜ் கட்டியிருக்கேன்.. வீக்கம் கொஞ்சம் குறைந்துவிடும். 3நாட்களுக்கு 4 மணி நேரத்துக்கு ஒரு தடவை 10 நிமிடங்களுக்கு.. வீங்கிய, வலியுள்ள பகுதில ஐஸ் ஒத்தடம் கொடுங்க. தேவையானத்திற்கு மட்டும் நடந்து.. மற்றநேரம் நடக்காம நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்.
இன்னைக்கு சாப்பிட முடிந்த அளவு சாப்பிடட்டும். பெயின்கில்லர் கொடுத்துயிருக்குறேன். தூங்கி எழுந்தா நல்லா சாப்பிடுவாங்க. காய்ச்சல் வந்தாலும் கவலதேவையில்ல. வீக்கம் கம்மியாகும் வரை 3தலையணையா வைத்துக்கோங்க.. மூன்றுநாள் கழித்து எதுக்கும் ஹாஸ்பிட்டல் வந்து எக்ஸ்ரே எடுத்துக்கோங்க. ” மேலும் வேந்தனும், இன்பாவும் தங்களுங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டு தெரிந்துக் கொண்டனர்.
இவை அனைத்தையும் சில நிமிடங்காளாக டாக்டர் பெண்மணி… எழிலரசிக்கு மென்மையாக மசாஜ் செய்தவாறே கூற.. இன்பா அவளின் பின்னால் இருந்து தலையில் மென்மையாக மசாஜ் செய்ய.. தன்னவனின் அணைப்பில் உட்கார்த்துயிருந்த அரசி.. அவனின் தோளில் சாய்ந்தபடியே உறங்கிவிட்டாள். இதனை சித்ரா ஆச்சிரியத்துடன் பார்த்திருந்தார்.
டாக்டர் செல்லும்போதுதே சித்ராவும், இன்பாவும் சென்றுவிட.. வேந்தன் அரசியை நன்றாக படுக்க வைத்துவிட்டு கீழே வந்தான். ஆண்கள் டாக்டரிடம் எழிலரசியின் உடல்நிலை பற்றி கேட்டு தெரிந்துக்கொண்டு.. அவள் உறங்கிவிட்டாள் என்பதால் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என கிளம்பியிருக்க.. ஹோட்டலில் வண்டி இருப்பதால் மேகா ஈஸ்வருடனே சென்றுவிட்டாள். அங்கு இன்பாவும் மற்றும் பெண்கள் நால்வர் மட்டுமே இருந்தார்கள்.
இன்பா கிளம்பலாம் என வேந்தனை பார்க்க.. ” நாங்க வீட்டிற்கு கிளம்புறோம் பெரியம்மா. ”
ஏதோ யோசித்த சாந்தி.. ” வேந்தா எழிலரசி இங்கேயே இருந்துட்டு யாழினி பிறந்தநாள் முடிந்து கூட்டிப்போயே. ”
வேந்தன் சாந்தி கூறியதும் ஒருநொடி மகிழ்ந்தான். ஆனால்..” அதெல்லாம் வேண்டாம் பெரியம்மா. பெரியப்பா , அண்ணா இருப்பதால.. எங்களுக்கு இங்கு வசதியா இருக்காது. ” இன்பாவை ஒரு பார்வை பார்த்துக்கூற..
” அவங்க என்ன நாள்முழுவதும் இங்கேயேவா இருங்காங்க?. ” அவர் கூறிக் கொண்டுயிருக்கும்போதே..
” இல்ல பெரியம்மா சும்மா இருந்தா பரவல.. அவள நடக்கவே கூடாதுனு சொல்லி இருக்காங்க. அங்க ரூம்மிலே இருக்காம.. ஹாலில் வைத்து கூட பார்த்துப்போம். இங்க அப்படி நாங்க இருக்க முடியாது. இங்க யாராவது வந்துட்டு போய்யிட்டு இருப்பாங்க. கல்யாணம் முன்ன இப்படி இருப்பதை பார்த்து ஏதாவது பேசிட்டா. ”
அவனை முறைத்து.. ” டேய் நீ அங்க இருப்பதை பார்த்து மட்டும் ஏதாவது நினைக்க மாட்டாங்களா?. அதுக்கு இது எவ்வளவு பரவாயில்லடா. எனக்கு யார் என்ன சொன்னாலும் கவலையில்ல.. நீங்க இரண்டுபேரும் வரும்போது எவ்வளவு சந்தோஷமா வந்தீங்களோ.. அதே மாதிரிதான் திருப்ப வீட்டிற்கு போகும் போதும் போகனும். அதனால எதை பற்றியும் யோசிக்காத.
உன் ரூம் பக்கத்திலே இன்பாவும் இருக்கட்டும். எழில எப்படி பார்த்துக்கனும் நினைக்கிறீங்களோ பார்த்துக்கோங்க. நாலுநாளில் அவ சிரித்த முகமா வீட்டிற்கு போகனும்.. அதுதான் எனக்கு வேண்டும். ”
வேந்தனிற்கு என்ன சொல்ல என்று தெரியாத நிலையில் இன்பாவை பார்க்க.. அவனுக்கும் அதே நிலைதான்.
” பெரியம்மா.. அரசி தூங்கி எழுந்த பிறகு கேட்டு சொல்லுறேன். அவ என்ன சொல்லுறாளோ அதுதான். ” இருமனதாக சரியென சாந்தி தலையாட்ட..
மகனின் முகத்தில் தெரிந்த சோர்வை பார்த்த சித்ரா.. ” சரிடா.. நீ வந்து சாப்பிடு. ” இன்பாவை பார்த்து.. ” நீயும் வா.. பாதியிலேயே வச்சுட்ட. ” அவர் உணவை எடுத்து வைக்க சென்றுவிட..
அரசி சாப்பிடாமல் இருக்க.. தான்மட்டும் எப்படி என யோசனையில் நிற்க.. ” மாமா வாங்க.. எழில் எழுந்தோனியே உங்க முகத்தை பார்த்து கேட்பா. பின்ன அவளாதானு அழ ஆரம்பித்துவிடுவா. ”
மீண்டும் அழுகையா.. பதில் கூறாமல் கைகழவ சென்றான். அவனின் பின்னால் புன்னகையுடன் இன்பா சென்றான்.
இந்நேரம் வரை வேந்தன் வசுவை பார்க்கவே இல்லை. அவளோ தெரிந்தால் என்ன கூறுவானோ?. என்ற சிறுபயத்தில் காவ்யாவின் அருகில் சாப்பிட சொல்லும் அவனேயே பார்த்திருக்க..
காவ்யாவோ அத்தை .. யாரையும் கலந்து பேசாமல் தீடிர் என்று அவராக எடுத்த முடிவில் அதிர்ச்சி, கோபம் என்ற மனநிலையில் பார்த்திருந்தவள்.. அவர்கள் சாப்பிட்டு எழும் நேரத்தில்.. அங்கு இருக்க முடியாமல்.. காரில் வாங்கிய பொருட்களை எடுத்து வந்து தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
ஹாலிற்கு வந்த வேந்தன் நேராக தன்னுடைய குழந்தைவயது புகைபடத்தை தான்.. முதலில் எடுத்து.. அதை பார்த்தபடி அங்கேயே நின்றுயிருக்க.. ” ஏன் மாமா இதையே பார்த்துட்டு இருக்கீங்க?. “அவனிடம் கொடுத்து..
” இதை பார்த்துட்டு எடுக்க வந்தப்பதான். ” அவனிற்கு அதற்குமேல் வார்த்தை வரவில்லை.
” மாமா.. நீங்க குழந்தையில் ரொம்ப அழகாக எழில் மாதிரியே கன்னமெல்லாம் கொழுகொழு இருக்கீங்க. ” மெல்லிய புன்னகையுடன் அவனை மாற்ற.. அவனின் அரசியை இழுக்க பேசியபடியே ஷோபாவில் இருவரும் புகைபடத்துடன் அமர..
வேந்தன் கூறியது ஞாபகம் வர.. எழில் இதை பார்த்து எடுக்க போறேனு விழுந்தாளா?. அவன் முன்னால் இல்லாத டேபிளை பார்த்தான். தன் அருகில் வேந்தனை பார்த்தான். மாமா உட்கார்ந்து இருக்கும் இடத்தில் தானே எழில் முன் அமர்ந்துயிருந்தாள். பின் எப்படி?. பார்வை சுழற்ற..
இதை பார்த்த வேந்தன்.. ” என்னடா.. எழில் முன்னாடி டேபிள் இருக்கலையே.. பின் எப்படி விழுந்தானு யோசிக்கிறீயா?. ” ஆம் என இன்பா தலையாட்ட..
” இதை நான் முன்னாடியே யோசிச்சுட்டேன். நான் பார்க்கும்போது அரசி தனியாதான் இருந்தா. நான் நினைக்கிறேன்.. ” மேகா கூறியதை அப்படியே அவனும் கூற..
வேகமாக வசுவை பார்த்தான். முகம் சாதாரணமாகவும்.. பதட்டத்தை கையை பிசைந்தபடி அதில் காண்பித்தாள்.
” ஏன் மாமா இப்படி?. ”
அவனின் கையை அழுத்தி.. ” விடு இன்பா.. இது தெரியமா தான் நடந்துயிருக்கும். ஆனா ஏதோ அவங்க அரசிகிட்ட நடந்துக் கொள்ளும் நடவடிக்கை சரியில்லைனு மட்டும் தெரியுது. அவ சரி ஆகட்டும்.. இவங்கள அதன்பிறகு தனியா கவனித்துக்கொள்ளலாம். இப்ப நீ கிளம்பு. நான் அரசி முழித்தவுடன் கால் செய்யுறேன். ”
” ம்.. சரி மாமா. நீங்களும் அவளுடனே கொஞ்சம் நேரம் தூங்குங்க. ” அவன் கிளம்பிவிட.. வேந்தனும் அம்மா, பெரியம்மாவையும் ஓய்வு எடுக்கக்கூறி.. தன்னவளின் காலில் பலமுத்தங்கள் கொடுத்து அதன் அருகிலேயே படுத்து உறங்கிவிட்டான்.
” வா ப்பா திலகா. வாம்மா சத்யா. ” பெயருக்கு புன்னகை புரிந்து இருவரும் அமர்ந்தார்கள்.
” சரி அக்கா.. வேந்தன் வந்தவுடன் என்னவென்று கேட்டு கால் செய்யுங்க. நாங்க கிளம்புறோம். ” வசுவை கிளம்பலாம் என்ற பார்த்தவாறு கூற..
” நீ இரு சித்ரா. வசுவும், காவ்யா மட்டும் வண்டியில் போயி.. லைட் போட்டு.. கொஞ்சம் நேரம் இருந்துட்டு வரட்டும். எழில் என்ன சொல்லுறானு பார்த்துட்டு அதற்கு ஏற்ப கிளம்பு. ”
அவர்கள் இருவரையும் பார்த்து.. ” நீங்க இரண்டுபேரும் போயிட்டு வாங்க. யாழினி இங்கயே இருக்கட்டும். ”
எதுவும் மறுத்துக் கூறமுடியாமல் சித்ரா சரி என அமைதியாக இருக்க.. மற்ற இருவரும் உடனே கிளம்பி விட்டார்கள்.
மற்ற இருவரையும் பார்த்தவர்.. ” ஏதாவது குடிக்கிறீங்களா?. இல்ல சாப்பிடுறீங்களா?. ”
சத்யா அழுது மிகவும் சோர்ந்து போய் சாப்பிடாமல் இருப்பது நன்றாக தெரிந்தது.
” இல்ல ம்மா. நாங்க எழில பார்த்துட்டு சாப்பிட்டுக் கொள்கிறோம். ” அழுகை அடக்கியும் முடியாமல் கண்ணீர் உடன் கூறினாள். திலகன் மென்மையாக கைபற்றிக் கொண்டான். அவனும் எவ்வளவு தேற்றியும் அழுகை குறைக்க மாட்டேன் என்கிறாள்.
சத்யாவின் அருகில் வந்த சித்ரா.. ” டாக்டர் எழிலிற்கு அதிகம் அடியில்லை.. சீக்கிரம் சரியாகிடும் என்று சொல்லியிருக்காங்க. இப்படி அழுத முகத்துடன் உன்னைய அவ பார்த்த அவளும் அழுவா. ஏற்கனவே ரொம்பவே அழுக. இன்னும் அவ அழுது காய்ச்சல் வந்துட போகுது. ” காய்ச்சல் என்றவுடனே சென்றவாரம் ஞாபகம் வர.. உடனே அடக்கி கொண்டாள்.
” ஏம்மா வீட்டில் நீங்கயெல்லாம் இருக்கும்போதே.. அவள தனியா வீட்டீங்க. யாராவது கூட இருந்து இருந்தா முட்டி இடிக்கும்போதே பார்த்து.. அவள நிற்க வைத்துயிருக்கலாம். ” இன்பா கூறிகேட்டு.. ஏதோ ஆதங்கத்தில் கேட்க.
இருவருக்கும் தனியாக இருந்தாளா?. அவர்களுக்கு இது புது தகவல் என்பதால்.. ” இல்லமா.. எழில் கூட எங்க இரண்டுபேர் தவிர எல்லாம் இருந்தாங்களே. ”
” யாரும் இல்லையா ம்மா. இன்பா சொன்னான். நான் கூட இருந்துயிருந்தா.. கண்டிப்பா விழந்துயிருக்க மாட்டானு சொல்லியும், நினைத்தும்.. இவங்களுக்கு ஒரே அழுகை. வேந்தன் இவங்கள இங்க வரும்போதும் கூப்பிடல.. இந்நேரம் வரை கால் செய்யலைனு.. அவன் மேல செம்ம கோபத்தில் இருக்காங்க. ” கடைசியை மெல்லிய புன்னகையுடன் கூற..
” என்ன வேந்தன் கொள்கை பரப்பு செயலாளர் சத்யாவுக்கு.. வேந்தன் மேலே கோபமா?. ஆச்சரியமா இருக்கு!. ” கூறியபடியே சந்துரும்.. உடன் கதிரவனும் வர.. அவர்களை முறைத்து விட்டு அமைதியாக மாடிபடியையே பார்த்திருந்தாள்.
அவன் கூறியதால் தோன்றிய மெல்லிய புன்னகையோடு.. இருவரும் வரவேற்று.. காவ்யா இல்லாததால் சித்ராவும், சாந்தியும் நால்வருக்கும் சாப்பிட எடுத்துவர சமையல்அறை சென்றுவிட..
இதனை சாதகமாக்கிக் கொண்ட சந்துரு.. ” சத்யா.. எழிலரசி வேந்தன் மாமாவ இதே ஊரில் கல்யாணம் செய்ய போவதால்.. எழில தனியா விடமாம பார்த்துக்க.. நீங்க திலகன் அண்ணாவ கூட்டி வந்துவிடுவீங்க. இதுவே வெளியூர் எங்காகாவது முடிவாகி இருந்தா என்ன செய்திருப்பிங்க?. ”
” அதெல்லாம் எழில் எங்கேயும் போய்யிருக்கமாட்டா. வேந்தன் அண்ணா அந்த அளவிற்கு போக விட்டுயிருக்க மாட்டாரு. இந்நேரம் அண்ணா தவிர.. எழில் போட்டோவை கூட யாரும் பார்த்திருக்க மாட்டாங்க. ” ஏதோ ஞாபகத்தில் உளற..
” மாமா மேல எப்படி இவ்வளவு நம்பிக்கை உங்களுக்கு?. ” ஆர்வமுடன் கேட்க..
பக்கத்தில் திலகன் அவளின் கையை அழுத்த.. அய்யயோ!. என முழித்த நேரம்..
” அதோ.. அண்ணாவே வராங்க.. அவரிடமே என் பதில சொல்லட்டா?. ”
இப்போது அவன் முழிக்க.. ” என்ன அண்ணா பதில காணோம்?.” சிரிப்பை அடக்கி கேட்க.
மாமாவா?. ” பரவாயில்ல சத்யா.. அவசரம் இல்ல.. இன்னொரு நாள் சொல்லு. ”
அவர்கள் முன் முகம் வாடி, பொலிவிழந்த வேந்தனை பார்த்து ஒருநொடி அதிர்ந்தனர். அங்கு இருந்தவர்களிடம் மெல்லிய புன்னகை மட்டுமே உதித்து.. நேராக சமையல்அறை சென்று.. டீ போட பாத்திரம் எடுத்தான்.
” எதுக்கு அதை வேந்தா எடுக்குற?. நான் போட்டு முடிச்சுட்டேன். இதை எழிலிற்கு எடுத்துபோ. ”
” பரவாயில்ல ம்மா.. நானே அவளுக்கு போட்டு எடுத்துட்டு போறேன். நான் போட்டது என்றால் அவ வேண்டானு சொல்லாம குடிப்பா. நீங்க அவங்களுக்கு கொடுங்க. ” மிகவும் வருந்தத்துடன் கூற.. இதை கேட்டு என்னகூற என தெரியாமல்.. சரி என பார்த்து சித்ரா எடுத்து சென்றுயிருக்க..
அவன் அருகில் வந்த சாந்தி.. ” டேய் அவளுக்கு ஒன்னும் இல்ல. நீ இப்படி இருந்தா அவ ரொம்ப பயந்துடுவா. ஏற்கனவே அவ நகரவே மாட்டேன் என்பது போல உன் கைய அழுத்தி பிடித்துயிருந்ததா அம்மா சொன்னாங்க. அதனால.. ” அவர் கூறிக் கொண்டுயிருக்கும் போதே..
மெல்லிய புன்னகையுடன்.. ” இல்ல பெரியம்மா.. அவ அவளுக்காக என்கைய பிடிக்கல.. பயந்துபோய் இருந்த எனக்காக தான்.. அவ என்னைய பிடித்துயிருந்தா. ”
அவர் சிரித்துட்டு விட்டார். ” நீ எதுக்கும் பயப்படமாட்டியே டா. எல்லாத்தையும் சாதாரணமா செய்யவ. நீ சொல்வதை நம்பவே முடியல.. ஆனாலும் நீயே சொல்லும்போது நம்பிதான் ஆகனும். நீ எதுக்கும் பயப்படாத.. இரண்டுநாள் கொஞ்சம் அதிகமா வலிக்கும்.. அப்புறம் தாங்கும் அளவு தான் வலிக்கும்.
ஏன்டா இந்த வீக்கம், வலிக்கே நீ இப்படி பயப்படுற.. இதில நீ இரட்டை குழந்தைக்கு ஆசைபடுற!. அப்பெல்லாம்.. ” கூறம்போதே..
மலர்ந்த புன்னகையுடன்.. ” அப்படியேல்லாம் அவங்க என்னைய பயப்பட வைக்கமாட்டாங்க. அப்படியே அவங்க அம்மா மாதிரியே. ” அவனின் மலர்ச்சியில் தான் எதிர்பார்த்து நடந்துவிட்டால் அவன் கூறிக்கொண்டுயிருக்கும் போதே..
” டேய் எழில் பற்றி அப்புறம் சொல்லு.. டீ சூட இருக்கும்போதே போய் கொடு. ” புன்னகையுடன் கூற..
சரி என புன்னகையுடன் பிளாஸ்கில் ஊற்றி வெளியே வந்தவன் அங்கு இருந்தவர்களிடம்.. ” கால் செய்யுறேன்.. அதன்பிறகு வாங்க. ” புன்னகை இன்னும் முகத்தில் இருக்க.. நால்வரையும் ஒருபார்வை பார்த்து.. ஒருநொடி நின்று கூறி வேகமாக சென்றுவிட்டான்.
போகும் அவனை ‘ என்னடா வந்தப்ப அப்படி சோர்த்து போய் இருந்தான்.. இப்ப அப்படியே மாறி இருக்கான் ‘ என யோசிக்க..
பின் அவனின் பின்னால் புன்னகையுடன் வந்த சாந்தியை பார்த்து புரிந்துக் கொண்டனர். உள்ளே அவன் மனம் விருப்பும் ஏதோ ஒன்றை பேசி அவனை மாற்றியிருக்கிறார் என்று. பின் அவனின் போனிற்காக காத்துயிருக்கலாம் என டீ பருகியபடியே பேசிக் கொண்டுயிருந்தனர்.
மாடியில் அரசியை பாத்ரூம் செல்லவைத்து.. கட்டியில் அமர்த்தி முகம் துடைத்துவிட்டு.. இருவரும் டீயை குடித்து முடித்தனர். அவளை மடியில் அமர்த்தி தலையணையை அதற்கு ஏற்றார்போல வைத்துவிட்டான்.
பெரியம்மா வீட்டில் இருக்க கூறியதை.. தான் கேட்ட பிறகு அவள் என்ன கூறினாலும் பரவாயில்லை.. தன் இளம்வயதில் இருந்த அறையில் தற்போது தன்னவள் இருக்கிறாள் என்ற மகிழ்ச்சியை மட்டும் மனதில் வைத்து.. அவளை இறுக்கஅணைத்து அவன் விருப்பம் இடம்மெல்லாம் அதரமுத்தம் கொடுக்க.. இரவு உடை என்பது இருவருக்கும் புதிது.. அவளின் வலியை மறந்து சிறிதுநேரத்திற்கு வேறு உலகத்திற்கு சென்றவள்..
தன்னவனின் கைகள் எங்கோ சொல்வது போல இருக்க சுதாரித்து.. ” தனு.. தனு மாமா.. ” அவனின் காதில் மிக மெல்லிய குரலில் அழைக்க.. ” அவனும் அதை உணர்ந்தால்.. அவளின் அழைப்பில் மட்டும் கிறங்கி.. அலைபாய்ந்த கையை அமைதியாகி இடையில் மட்டும் இறுக்கத்தை கூட்டினான்.
முகத்தில் முத்தம் கொடுத்தவறே ” முயல்குட்டி பெரியம்மா.. ” அவனும் சாந்தி பேசியது.. பின் இருவரும் சந்தோஷமாக போக வேண்டும் என்று கூறியதை கூறி..
” யாழினி பிறந்தநாள் முடிந்த பின்னாடி போக சொல்லுறாங்க. உன்னைய கேட்டு சொல்லுறேனு சொல்லியிருக்கேன். இருக்கலாமா?. இல்ல வீட்டிற்கு போகலாமா?. ”
கேட்டவள் அதிர்ந்து.. தன்நிலைக்கு வந்து தன்னவனின் முகத்தை தன்னில் இருந்து பிரித்து.. கன்னத்தை பிடித்து.. ” என்ன?. என்ன சொன்னீங்க தனு?. நாம்ம இங்க.. இன்னும் ஐந்துநாட்களுக்காக?. ” மின்னல் பார்வையில் கேட்க..
ஒருபக்கம் மகிழ்ச்சிதான்.. ஆனால்.. ” இருந்தா உங்களால் பார்த்துக் கொள்ள முடியுமா?. யாரும் ஒன்னும் சொல்ல.. ” அவளின் இதழின்மேல் விரல் வைத்து..
” முயல்குட்டிக்கு இருக்கனும்மா?. போகனும்மானு மட்டும் சொல்லு. வேறு எதை பற்றியும் யோசிக்காத. “
மெல்லிய புன்னகையுடன்.. மெதுவாக ” என் தனுமாமா இந்த ரூம்மில் எந்த எந்த தருணத்தில் இருந்தாரு என்று தெரிந்தும்.. இப்பவே இங்க இருக்க வாய்ப்பு கிடைத்தா.. வேண்டாம் என்றா சொல்லுவேன். ” அவளின் புருவத்தை உயர்த்தி கேட்க..
” முயல்குட்டி சொல்ல மாட்டாதான். ஆனா இங்க.. ” அவனின் இதழில் கைவைத்து.. ” நமக்கு கல்யாணம் இன்னும் முடியலைனு நினைக்கிறீங்களா தனு?. ”
” ம்.. காவ்யா அண்ணியோட தம்பிக்கு தூரத்து சொந்ததில் இருந்து.. வரன் வந்துயிருக்கா. அவங்களை புதன் அன்று இங்க வரச்சொல்லி இருக்காங்க. தம்பி வந்து நம்ம ஹோட்டலில் இனி வேலை கத்துக்க போறார். அவங்க அம்மா, தங்கை யாழினியோட பிறந்த நாள் வரைக்கும் அண்ணியோட இங்க இருக்கலானு..
மூனுபேரும் நாளைக்கே வராங்களா. அவங்க ஏதாவது உன்னைய தப்பா பேசிட்டா. கூட இன்பா வேற இருப்பான். கடை சம்பந்தமா, நீ இப்படி இருப்பதால் உன்னைய பார்க்கனு யாராவது வருவாங்க. அதான். “
அவனை மெதுவாக கிள்ளி.. ” பொய் சொல்லாத தனு. அங்க இன்பா ரூம் மட்டும் மாடியில் இருப்பதால்.. பிரச்சனையில்லாம இருக்கு. இங்க தனு அண்ணா ரூம் பக்கத்தில் இருப்பதால்.. அவங்களும் அவர் கடைக்கு போயிட்டா அக்கா கூட இங்க இருப்பாங்க. அதனால உனக்கு பீரியா இங்க இருக்கமுடியாது. அதனால தானே. ” வலி வந்து அவனை கட்டிக்கொண்டே கேட்க..
புன்னகையுடன்.. ” ம்.. அது கொஞ்சம் தான்டி. நாம்ம எவ்வளவு நேரம் ரூம்மில் இருக்க.. ஹாலில் போய் இல்ல தோட்டத்தில்னு வெளிய போய் உட்கார்ந்தா நல்லாயிருக்கும். நான் உன்னைய தூக்கிட்டு தான் போவேன்.
இந்த மாதிரி மேலும் சில விஷயங்கள் அவங்க கண்ணுக்கு நல்லாதாபடாது. அதான் எனக்கு கொஞ்சம் யோசனையா இருக்கு. ஆனா நீ எதையும் பொருட்டா எடுத்துக்க மாட்டனு நீ சொல்லிட்டா.. நான் எதுக்கும் கவலை படமாட்டேன். பெரியம்மாவிடம் உன் முடிவுதான் சொல்லிட்டேன். நீ எந்த முடிவு எடுத்தாலும் அவங்களுக்கு சந்தோஷம் தான். ”
யோசித்தவள்.. ” தனு நாம்ம இங்கு இருக்கலாம். நீங்க சொன்னதிலும் கொஞ்சம் யோசிக்கனும்தான். ஒரு யோசனை சொல்றேன்.. நீங்க என்கூட இங்க இருப்பீங்க. அதனால மூனுநாளைக்கு மட்டும் உங்க அண்ணாவையும், அக்கா அம்மாவோட வரவங்களையும் அந்த வீட்டில் போய் இருக்க சொல்லலாமா?. ”
” இல்லடி. நம்ம முடிவ சொல்லி.. இதை அண்ணா, பெரியம்மா அவங்க தான் சொல்லனும். நம்ம சொன்னா சரியாக இருக்காது. சரிவிடு. கீழ நாலுபேர் உன்ன பார்க்க ரொம்ப நேரமா வெயிட்டிங். அவங்கள வரச்சொல்லுறேன். வந்த பிறகு நான் போய் நாம்ம இங்க இருக்கோனு சொல்லிட்டுவரேன். ”
இப்போது இங்கு இருக்க போகிறோம் என்ற உணர்வில்.. அவளை நெற்றில் முத்தமிட்டு.. ” என் முயல்குட்டிய பார்த்துட்டு வந்த அந்தநாட்களில் இதே கட்டில்.. ஆனா பெட்வேற. தூங்கமா!. உனக்கு இன்னும் வலிக்குமா?. என்ன பண்ணிட்டு இருப்ப, யோசிச்சிட்டு இருந்தேன். அதன்பிறகும் பலநாள் என் யோசனையில் மட்டும் இருந்த என் அரசி.. இன்னைக்கு என்கூடவே ரூம்மில் இருக்கபோறா. ஆனா.. ”
இதழில் இதழில் பதித்து.. ” தனுமாமா கூட முயல்குட்டி இருக்கா.. அவ்வளவுதான். ” அவனின் நெற்றில் அழுத்த முத்தம் பதித்து..
” அவங்கள கூப்பிடு.. எனக்கு நீ காலையில் உன் கையால ஸ்விட் செய்து தரேனு சொன்ன. யார்யாரிடம் சொல்லமோ அவங்களிடம் ஒரே காலில் கூப்பிட்டு.. என் அரசிம்மா என்கூட இருக்கபோறா.. நான் நல்லா பாத்துப்பேனும்.. எல்லோரையும் கவலபடமா இருக்க சொல்லிட்டு.. தனுமாமாவிற்கு பிடிச்ச ஸ்விட்ட செய்து கொண்டுவரனும். ” சரி என் அரசியே என அவனும் நெற்றியில் முத்தமிட்டு..
தன்னவளின் காதலில் மீசை ரோமம் உரச ” முயல்குட்டி இந்த டிரஸ் உனக்கு செம்மையா இருக்குடி. ” தாபமாக கூறி.. காதில் இதழ் பதித்து எடுத்தான். அவளின் சிவந்த முகத்தை பார்த்தவாறே.. நால்வரை அழைத்தான். பின் அவளை சரியாக அமர வைத்த பின் கதவை திறக்க..
திறந்த அடுத்த நொடி முதலில் வேந்தனை முறைத்தவாறே சத்யா உள்நுழைந்து.. கண் சிறிது கலங்கி எழிலரசியின் தோளை கட்டிக்கொண்டாள். பின் வந்த மூவரும் அவளை பார்த்து வருந்தம் மறைத்து மெல்லிய புன்னகை புரிந்தனர்.
அவர்களை பார்த்தவன்.. ” யாழினி பிறந்தநாள் வர சனிக்கிழமை. அதுவரைக்கும் பெரியம்மா இங்க இருக்க சொன்னாங்க.. அதனால நாங்களும், இன்பாவும் இங்கதான் இருக்கபோறோம். ” சரி என தலை அசைத்தார்கள்.
” இதை அரசி வீட்டலையும், இங்கேயும் சொல்லிட்டு.. இவ ஸ்விட் கேட்டா ”
ஸ்விட்டா வேந்தனை பார்த்திருந்த நால்வரும் எழிலை வேகமாக பார்க்க.. அவளோ மேல் நிமிர்ந்து ரூம்மை சுற்றி சுற்றி பார்க்க..
புன்னகையுடன்.. ” அரசி.. பார்த்து பத்திரமா இரு. ” கூறி வெளியேற..