” பாலா.. இது காவ்யா பெண்ணோட வீடு தானே?. ”
” இதுதான் ப்பா. ஏன் கேட்கிறீங்க?. “
” நாம்ம பார்க்க வந்துயிருக்கும் பையனோட அக்காவீடு என்பதால்.. நம்மிடம் அதிகம் பேர் வரவேண்டானு சொன்னாங்க. ஆனா இங்க கார் நிறைய நிக்குதா.. நேத்து ஹோட்டலை மட்டும்தானே பார்த்துட்டு போனோம். அதான் கேட்டேன். ”
” அதிகம் பேர் இருந்தா என்ன அப்பா?. நீங்க அவங்களுக்கு கால் செய்து வந்துட்டோனு சொல்லுங்க. ” காரை விட்டு இறங்கி பின்பக்கம் இருந்த தன் தங்கையின் அருகில் வந்தவன்..
” அஞ்சலி சொந்தகாரங்க வீட்டிற்கு வந்துயிருப்பது போல தான். எல்லோரிடமும் சாதாரணமா பேசு. எல்லோருக்கும் பையன், குடும்பம் பிடித்துயிருந்தா தான் அடுத்து. ” மெல்லிய புன்னகையுடன் அவள் சரி எனக்கூறவும்..
” வாங்க வாங்க மூர்த்தி. வாங்க எல்லோரும். ”
மூர்த்தி அவர் மனைவி சரஸ்வதி, மகள் அஞ்சலி, பையன் பாலா. அவனின் நண்பன் கிருஷ்ணா, மூர்த்தியின் தங்கை, சரஸ்வதியின் அண்ணன், மூர்த்தியின் அண்ணன் மகள் கவிதா. புன்னகையுடன் காவ்யாவின் அப்பா சுந்தரம் வரவேற்றார்.
வந்தவர்கள் பெரிய வீடு, சுற்றிலும் இடவசதியுடன் கூடிய அழகிய தோட்டம் போன்ற அமைப்பை அளந்தபடியே வீட்டின் வாசலுக்கு வர.. அங்கு வீட்டினுள் அதிகம் பேர் இருப்பதற்காகன அறிகுறிகள்.. கேள்வி பார்வையை சரஸ்வதி.. மூர்த்தியை பார்த்துவிட்டு அனைவரும் உள்ளே நுழைய..
அங்கு இருந்த மாலதி, ராஜேஷ், காவ்யா, ஈஸ்வர், மாணிக்கம், சாந்தி, சித்ரா அமர்ந்து இருந்தவர்களை மனதில் சிறிய குழப்பமும், புன்னகையுடன் பார்த்து.. பின் என்னவோ போங்க சாதாரண நிலைக்கு சென்றார்கள்.
அந்த பெரிய ஹாலில் புதிகாக வீற்றுயிருந்த பெரிய இருபக்கம் கொண்ட ஷோபாவில் சிலரும்… சற்று தள்ளியிருந்த ‘ ட‘ வடிவில் இருந்த ஷோபாவில் சிலரும் அமர்ந்தார்கள். அதுவே வந்தவர்களுக்கு அவ்வீட்டின் செழுமையை கூறியது போல இருந்தது. வியப்புடன் பார்த்தபடி அமர்ந்தார்கள்.
வந்தவர்கள் இருகுடும்பத்திரையும் அறிமுகம் செய்துக்கொண்டு.. அதிகம் பழகமில்லாத சொந்தங்கள் என்பதால்.. பொதுவான சில விஷயம் முதலில் பேசிக் கொண்டுயிருக்க.. அவர்களின் பின்பக்கத்தில் இருந்து அதிக பேச்சு சத்தத்துடன் சிலர் வருவதை உணர்ந்தார்கள்.
” அண்ணி அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா எல்லோரும் வெளிய போவது போல வரோம். ”
” தனு கோயிலுக்கு ஊருக்கு போறோம் இல்ல அப்ப இவங்க வரமாதிரி ஏற்பாடு பண்ணுங்க. ” மெல்லிய புன்னகையுடன் சரி என தலையாட்ட..
” 50வது தடவை அண்ணா. இரண்டு மணிநேரத்திலே அண்ணி எது சொன்னாலும் ஆட்டுறீங்க. பாவம் நீங்க. ” சோகம் போல கூற..
” நிஷா தனு.. நான் எது சொன்னாலும் இரண்டுமணி நேரத்தில் 50 என்ன 500 கூட தலையாட்டாடுவார். ” அப்படிதானே என வேந்தனை பார்க்க..
‘ ஆமாம்டி முயல்குட்டி ‘ என்று காதலுடன் அதற்கும் தலையாட்ட..
கண்களில் தெரிந்த காதலை கண்டுக்கொண்டவர்கள்.. ” அண்ணா இதெல்லாம் ரொம்பவே ஓவர். ”
ஆகாஷ், ஆர்த்தி, நிஷா, அனு, ராகினி, சத்யா, திலகன், இன்பா, தர்ஷினி, கதிரவன் கூட வேந்தன், எழிலரசி அனைவரின் சிரிப்பும், பேசும் சத்தத்துடன் ஹாலிற்கு வந்தார்கள்.
புதிதாக வந்தவர்கள்.. ஹாலிற்கு வந்து நின்றவர்களையும்.. அவர்களின் நடுவில் கையில் இருக்கும் பெண்ணான எழிலரசியையும்.. அவளை ஏந்தியபடி இருந்த வேந்தனையும் ஒரு புரியாத, அதிர்ச்சி, குழப்ப பார்வையுடன் பார்த்தனர்.
ஈஸ்வர் எழுந்து வந்து.. ” பிளைட்டுக்கு நேரம் இருக்கு.. ஹோட்டல் போய் சாப்பிட்டு போங்க. ” திலகனை பார்த்தவாற கூற..
புன்னகையுடன்.. ” கண்டிப்பா அண்ணா. அங்கு வைத்துயிருக்கும் ஸ்விட்டை நாங்களும் இப்பவேசாப்பிட்டு பார்க்கனும் இல்ல. அதை சாப்பிட்டு அண்ணியிடம் அங்கயிருந்தே கருத்து சொல்லிட்டுதான் போவோம். இல்ல அண்ணியிடம் யார் கிள்ளு வாங்குவது. நாங்க என்ன வேந்தன் அண்ணாவா. எவ்வளவு கிள்ளினாலும் வலிக்காத மாதிரியே இருக்க. ” இதை கேட்டு அருகில் இருந்த அனைவரிடத்திலும் மெல்லிய சிரிப்பு சத்தம் வர..
மானத்தை வாங்குறாளே!. ” அனு ” வேந்தன் அடக்கபட்ட சிரிப்புடன் கூப்பிட.. திரும்பியவள் அங்கு முறைப்பு பார்வையுடன் ஒருத்தி பார்க்க..
அவளிடம் சமாதானம் ஆக.. ” அண்ணி… கால கவனமா பார்த்துக்கோங்க. அடுத்த தடவை வரும்போது.. உங்களுக்கு பிடித்த ஸ்விட் நிறைய வாங்கிட்டு வரேன். ” அருகில் வந்து ” எப்போதும் அண்ணனை நினைத்து கனவிலே மிதக்காதீங்க. ” உடனே நகர்த்துவிட்டாள்.
வெக்க புன்னகையுடன்.. ” ஹேய் அனு.. ”
சிவந்துயிருந்த அவளின் கன்னம் பிடித்துயிழுத்து.. ” பாய் அண்ணி. பாய் அண்.. ” அவன் முறைக்க.. ஓ.. பொறாமைய பாருடா!. மீண்டும் எழிலரசி கன்னம் பிடித்துயிழுத்து.. ” பாய் அண்ணா.. “ கூறிவிட்டு வெளியே ஒடிவிட்டாள்.
அனைவரும் புரிந்து சிரிப்புடன் இருவரையும் பார்த்து.. வெளியே சென்றார்கள். சென்னையில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களை அழைத்துக்கொண்டு திலகன், சத்யாவும் சொல்ல.. மீதம் இருப்போர் வெளி திண்ணையில் கால் நீட்டியபடி அரசி அமர.. மற்றவர்கள் சேர் எடுத்து வந்து அமர்ந்தார்கள்.
புதியவர்களின் புரியாத பார்வையை பார்த்த சாந்தி.. ” மருமக எழிலரசி.. கால் தடுக்கி கீழவிழுந்துட்டா. அவளை பார்க்க பையன் வேந்தனோட சென்னையில் வேலை செய்தவங்க.. காலையில் தான் பார்க்க வந்தாங்க. உடனே போகனும் கிளம்புறாங்க. ”
” ஹோட்டல் பக்கத்தில் எழில்வேந்தன் ஸ்விட் கடை இவங்கதான் பார்த்துக் போறாங்களா?. ”
மெல்லிய புன்னகையுடன்.. ” ஆமாம்.. அடுத்தமாதம் திறப்புவிழா. ”
ஓ.. அப்ப பையன் மச்சானோட இரண்டு கடையை பார்த்துக் கொள்வானோ?. புன்னகையுடன்.. அவர்களை பார்த்த மூர்த்தியை.. அருகில் இருந்த பாலா அழைத்து..
” அப்பா நீங்க நினைப்பது போல புதுகடை ஹோட்டல் மாதிரி பொதுகிடையாது. அது வேந்தன் உடைய கடை. ராஜேஷ் ஹோட்டலில் மட்டும்தான்.. அவர்வேலை பழகி ஆரம்பிக்க போறாரு. அப்புறம் அவங்க இரண்டுபேருக்கும் நிச்சியம் தான் முடிந்துயிருக்கு. கல்யாணம் ஆகல. ”
” அதனால நமக்கு என்னடா. அந்த ஸ்விட் கடையும் இன்னும் ஒரு ஃபேக்டரியோட ஒருகடை வரபோகுதா.. இதையெல்லாம் இந்த பொண்ணுதான் பார்க்குது. இதையெல்லாம் நாம்ம பார்க்க தேவையில்ல. பையன் என்ன பண்ணப்போறானு மட்டும் தான் தெரியனும். ”
பாலா தலையாட்டி ராஜேஷை பார்க்க.. அவன் தன் அம்மாவிடம் பேசிக்கொண்டுயிருக்கும் அஞ்சலியை பார்த்தும் பார்க்காதது போல இருக்க..
அப்பாவிடம் திரும்பி.. ” அப்பா நீங்க நினைப்பதை பற்றி அவர் அப்பாவிடம் பொதுவாக இல்ல தனியா போய் கேளுங்க. ” ம்… என பார்த்து..
” சுந்தரம் மச்சான்.. ராஜேஷ் தம்பி எப்ப ஹோட்டல் ஆரம்பிக்க போறாரு?. இப்பவே அதற்காக பிளான் எல்லாம் ரெடியா இருக்கா?. ” சுந்தரம் காவ்யாவை பார்க்க.. காவ்யா ஈஸ்வரை பார்த்தாள்.
நாம்ம தான் சமாளிக்கனும்மா. புன்னகையுடன்.. ” மச்சான் இன்னும் அதற்கான வேலைய ஆறுமாதத்தில் ஆரம்பிப்பார். இவ்வளவு நாள் நல்ல கம்பெனியில் வேலை செய்தவர்.. தனியா ஆரம்பிக்க கொஞ்சம் நாட்கள் எடுத்தா நல்லது நினைக்கிறோம். அப்பதானே ஆரம்பிக்கும் ஹோட்டல் நிலைத்து இருக்கும். ”
” அப்ப ஆரம்பிக்கும் வரை எவ்வளவு வருமானம் வரும்?. ” ஈஸ்வர் அருகில் இருந்த சரஸ்வதியின் அண்ணா மெதுவாக கேட்க.. இது மூர்த்திக்கும் கேட்டது. தேவையான கேள்வி.
ஈஸ்வர் இதை பற்றி காவ்யாவிடம் பேசவில்லை.. அவனும் மெதுவாகவே.. ” இப்போதைக்கு ஹோட்டல் வேலை சம்பந்தம் இல்லாம.. சொந்தமா அவருக்கு வீடு, கடைகள் திருச்சியில் இருக்கு. அதில் இருந்து ஐம்பதாயிரம் மேல் வரும்.” சரி என தலையசைத்து..
ஈஸ்வர் அருகில் வந்த காவ்யா ” ஏங்க கடைக்குனு ஏதாவது ஒரு தொகையும் சேர்த்து சொல்ல வேண்டியது தானே?. ”
” அப்பா, சித்தாப்பாவிடம் அதை பற்றி பேசி முடிவு செய்யாம சொல்லமுடியாது. நான் அதிகமா சொல்லிட்டா அதைதான் கொடுக்கனும் நீ நினைப்ப. பின்ன தேவையில்லாத பிரச்சனைதான் வரும். புசுசா பிஸ்னஸ் ஆரம்பிக்க போகும் உன் தம்பியிடமிருந்து அவங்க இரண்டு வருடத்திற்கு.. அதில் இருந்து எதையும் எதிர்பார்க்க கூடாது. நிலைத்து நின்று அதன்பிறகு தான் அதில் வருமானமேபார்க்க முடியும். அதனால அவங்க ராஜேஷ் மாப்பிள்ளையா ஏற்பதற்கு.. நான் சொன்னதே போதும்.
அந்த பொண்ணு இந்த வீட்டை பார்ப்பதிலேயே.. நிறைய எதிர்பார்ப்பு இருப்பதுபோல இருக்கு. நாம்ம அளவா சொன்னாதான் எல்லோரும் சம்மதம் தெரிவித்தா.. அந்த பொண்ணு அதற்கு ஏற்றார் மனதை தயார்படுத்திக் கொள்ளும். ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாம இருப்பதுதான் உன் தம்பிக்கும் நல்லது. ”
இதை கேட்டவள்.. சிலது சரியென்று பட்டாலும்.. மாமாக்களிடம் கேட்டுதான் கூறுவேன் என்பதில் கோபம் தான் வந்தது. ஒன்றும் கூறாமல் திரும்பிக் கொண்டாள்.
அந்நேரம் எழிலரசிக்கு ஜூஸ் எடுக்க இன்பன் சமையல்அறை வந்தான். அவனை பாலாவும், கிருஷ்ணாவும் யோசனையுடன் பார்த்து பேசிக்கொண்டனர்.
பின் அங்குயிருந்து வருபவனிடம் எழுந்து அருகில் வந்த பாலா ” நீங்க இன்பன் தானே?. ”
சட்டென்று வரவும் ஒரு அடி பின்னோக்கி நகர்ந்தான். பின் நிதானித்து.. ” ம்.. ஆமாம். நீங்க?. ”
” நான் பாலா. உன் கூட 11த்தில் இருந்து படித்தேன். ஞாபகம் இருக்கா?. ” உடனே ஞாபகம் வரவில்லை என்பதால் ‘ இல்லை ‘ என தலையசைக்க..
” ம்.. இப்ப கால் அடிபட்டு இருப்பது உன் தங்கச்சி அமுல்.. எழிலரசி தானே?. ”
அவனை முறைப்புடன் முகத்தை நன்றாக பார்த்து.. ‘ எவன்டா நீ?. ‘ என யோசிக்க.. சிறிது மட்டுமே ஞாபகம் வந்தது.
” கொஞ்சம் வெளியவரீங்களா.. ” கோபமாக கூற..
வெளியே யார் இருக்கீறார்கள் என்பதை உணர்ந்து.. பாவமாக ” உன் மாமா வேந்தனிடம் எழிலரசி பெயரை சொல்லி கேட்டேனு மாட்டிவிட்டுடாத. கல்யாணம் முன்பே.. உன் தங்கச்சி அனைவர் முன்பும் தைரியமா தூக்கியிருப்பதிலேயே தெரியுது. அவர் உன் தங்கச்சி மேல் வைத்துயிருக்கும் அன்பு எப்படினு!.?.
எனக்கு ராஜேஷ் பற்றி நல்லா தெரியனும். அதான் உனக்கு என்னைய ஞாபகம் வருவதற்காகதான்.. உன் இல்ல இல்ல நம்ம தங்கச்சி பெயரை சொல்லி கேட்டேன். ”
முறைப்புடன் இருந்தவன்.. சிரிப்புடன் வேந்தனின் மேல் சாய்ந்து கால் நீட்டி வீக்கம் குறைந்து விட்டதால் தலையணை ஒன்றுமட்டும் வைத்து உட்கார்ந்து இருந்த எழிலிடம் ஜூஸ் கொடுத்தான்.
அவர்களின் பின்னால் வந்த கிருஷ்ணா.. ” டேய் பாலா.. இது இன்பா தங்கை அமுல்பேபி தானே?. ” கேட்டவன் அய்யோ என நினைத்து.. காலில் மிதிக்க..
இவர்களை கவனித்த கதிரவன்.. ” எழிலரசியை பார்த்து இவர் என்ன சொன்னார்?. ”
கேள்வியை எதிர்பாராதவன்.. ” அது வந்துண்ணா.. இன்பா கூட நாங்க படித்தவங்க. இன்பாவுடன் எழிலரசிய பார்த்துயிருக்கோம். அதுதான் எழிலரசிதானேனு கேட்டான். ”
அவனை முறைத்து.. ” அதுக்கு எதுக்கு காலில் மிதிக்கனும்?. ” அனைவரும் இதனை கவனித்தனர்.
கிருஷ்ணாவை முறைத்து.. வேந்தனை பாவமாக பார்த்து.. ” அது அது எழிலரசியை அமுல்.. ” பாதியில் நிறுத்த..
புன்னகையுடன் இன்பா ” அமுல்பேபி தானே!. என்று கேட்டாறா?. ” ஆம் என பாலா தலையாட்ட..
வந்ததே ஒருத்திக்கு கோபம்.. மரியாதையுடன்.. ” ஏன்டா அண்ணா.. எவ்வளவு தைரியம் இருந்தா இத்தனை வருடத்திற்கு பிறகும்.. இந்த பேர ஞாபகம் வைத்துயிருப்பாங்க. உங்க கிளாஸ் பசங்களுக்கு எல்லாம் கொழுப்பு ஜாஸ்திதான் போல. ” கேள்வி அண்ணாவிடமும்.. பார்வை இருவரிடம்.
வேந்தனிடம் திருப்ப.. மரியாதையான பேச்சில் இவ்வளவு நேரம் புன்னகையுடன் இருந்தவன்.. அவள் திரும்பியவுடன் கட்டுபடுத்திக் கொண்டு அமைதியாக பார்க்க..
” தனு இவன் கிளாஸ் பசங்க எல்லாம் நானும்,சத்யாவும் கிளாஸ் போய்.. இவனை கூப்பிட சொன்னா.. டேய் இன்பா உன் தங்க அமுல்பேபி வந்துயிருக்கானு சொல்லி தான் வரச்சொல்லுவாங்க. நானும் நிறைய தடவை திட்டியிருக்கேன். கேட்கவே இல்ல தனு. ஏன்டா கூப்பிட்டிங்கனு இப்ப நீ கேட்குற. ”
குழந்தைபோல அவள் கூற கூற புன்னகையும், பேசும் இதழில் முத்தம் கொடுக்க வேண்டும் என கிறக்கமும் ஒருசேர வர.. மிகவும் கஷ்டப்பட்டு அடக்கி அவளின் தலையை முன்பக்கம் திருப்பி.. ” ஏன்டா??.. ” மெல்லிய புன்னகையுடன் கேட்க..
இன்பாவை பார்க்க.. அவனோ புன்னகை மாறாமல்.. ” மாமா.. எழில் அப்பயெல்லாம் அவ உயரம் கம்மியா.. கொஞ்சமா கொழுகொழுனு.. கன்னம் மட்டும் பெரிசானு இருப்பாளா. அதனால என் பிரண்ட்ஸ்.. கிளாஸ் ரூம்மில் இருக்கும்போது மட்டும் அவ என்னை கூப்பிட வரும்போது கூப்பிடுவாங்க. அதை இவங்க கேட்டு.. இவ பேரே அமுல்பேபி நினைத்துயிருப்பாங்கனு நினைக்கிறேன். ”
அப்படியா என எழிலரசி லுக்விட..
” ஆமாம் ” பாலா, கிருஷ்ணா இருவரும் ஒருசேர கூற.. அவள் அவர்களை முறைத்துவிட்டு.. அமைதியாக ஜூஸ் குடிக்கும் வேலைய பார்த்தாள்.
பாலா மீண்டும் இன்பாவை பார்க்க.. புரிந்து.. ” மாமா.. இவருக்கு ராஜேஷ் பற்றி தெரியுனுமா?. ”
இப்போது நார்மலாக மாறிய வேந்தன்.. ” நீங்க யார்?. ” அவனை பற்றி கூற..
” சாரி பாலா. நான் ராஜேஷ் கூட அவ்வளவா பேசியது கிடையாது. வேண்டும் என்றால் நீங்களே அவரிடம் நார்மலா பேசி பாருங்க. அதன்பிறகு உங்களுக்கு அவரை பிடித்துயிருந்து அவர் குணம் பற்றி பெரியவர்களிடம் கேட்க தோன்றினா.. என் தங்கை கணவர் விஸ்வநாதன்.. ராஜேஷின் பெரியப்பா பையன்தான்.. அவரிடம் பேசுங்க. ”
” ம்.. நான் முதலில் ராஜேஷ் கூட பேசுறேன் அண்ணா. அதன்பின் வீட்டில் பேசிட்டு அடுத்து பார்க்கிறேன். ”
” சரி பாலா. ” அவனும் சரி என தலையசைத்து.. இன்னும் முறைத்துக் கொண்டுயிருக்கும் எழிலரசியை புன்னகையுடன் பார்த்துச்செல்ல.. அவனுடன் கிருஷ்ணாவும் சென்றான்.
இவர்களின் புன்னகை, முறைப்பான பேச்சை தூரத்தில் இருந்து காவ்யா கவனித்துயிருந்தாள்.
உள்ளே சென்றவன் கூறியது போல ராஜேஷ் உடன் பேசி பார்த்தும்.. அந்த நேரத்தில் காவ்யாஅஞ்சலியுடன் பேசியும்.. மற்றவர்கள் தேவையான தகவல்களை பெற்றும், வாங்கியும் மனம் நிறைந்தவர்களாக பாலா குடும்பத்தினர் கிளம்பிவிட்டனர்.
அவர்கள் இருக்கும் போதே வசுந்தரா, சாருலதா மதியமே காலேஜ் முடிந்து கமலேஷ் உடன் வந்திருக்க.. சாப்பிட்டு ஈஸ்வர், மாணிக்கம், இன்பா கடைக்கும், கதிரவன், தர்ஷினி வீட்டிற்கும் சென்று விட்டனர். வேந்தன் எழிலரசிக்கு ஒத்தடம் பின் உணவும் கொடுத்துக் கொண்டுயிருக்க.. சுந்தரம், மாலதி பெண்வீட்டரை பற்றி அறையினுள்ளும்.. மற்றவர்கள் வெளியேயும் பேசியபடி இருந்தனர்.
” ராஜேஷ் உனக்கு எல்லாம் ஓகேயா?. ”
” ம்.. எனக்கு பார்த்து பேசிய வரைக்கும் சரிதான் அக்கா. ”
முகத்தில் ஏதோ பிடிக்காத உணர்வு தெரிய.. மெதுவாக ” என்னடா பிரச்சனை?. ”
” அக்கா இன்பாவும், பாலாவும் ஒன்னா படித்தவர்களா. எழிலரசிய தெரியும்போல. அங்க பேச போனால.. அங்க யாரோ சொல்லிதான் என்னிடம் ராஜேஷ் பேசவே வந்துயிருக்கான். ”
” யாரோ இல்ல.. வேந்தன் சொல்லிதான் வந்துயிருப்பான். அவன் தான் அதிகநேரம் பேசிட்டு இருந்தது. ஏன்டா இவங்களுக்கு வேற ஸ்கூலே கிடைக்கலையா.. இவங்க கூட பேசபோறவன் எல்லாம் ஒரே ஸ்கூல், காலேஜ்னு ஒன்னா சேர்ந்து விடுறாங்க.
சரி அதைவிடு.. அஞ்சலி அவங்க குடும்பம்பற்றி மட்டும் யோசி. மாமா கால் செய்வதற்கு உள்ள நீ கடைக்கு கிளம்பு. “
” அய்யோ அக்கா.. என்னால எல்லாம் கலந்த வாசனையில் இருக்கவே முடியல. ” கூறிக்கொண்டுஇருக்கும்போதே..
” டேய் ஒருவாரத்திற்கு அப்படிதான் இருக்கும். எழிலரசி கூட முதல் நாள் வாமிட் பண்ணிடா. அதிகமா சாப்பிடவே இல்ல. இப்ப பாரு சகஜமா இருக்கா. ”
” அக்கா எழில் ஏசி ரூம்மில் இருப்பதும்.. நான் வெளியில் இருப்பதும் ஒன்னா. ”
அவனைமுறைத்து.. ” மாமா எல்லாம் வெளியில் உட்கார்ந்துயிருந்து தான்டா.. இவ்வளவு பெரிய கடை உருவாக்கியிருக்காங்க. அதுமாதிரி நீயும் எதிர்காலத்தில் வரனும்.
டேய் நீ ஆசைபட்டது போல தனியா பிஸ்னஸ் ஆரம்பிக்க ஹோட்டல் தவிர வேற எதிலையும் முடியாது. ஏனா இதில் உள்ள வேலை நுணுக்கத்துடன் கத்துக்கொடுக்க மாமா மூனுபேர் இருக்காங்க. ஆரம்பிக்க பண உதவி செய்ய நான் இருக்கேன். அதனால எல்லாவற்றையும் ஆர்வமா கத்துக்கோ. ”
அக்கா கூறியது உண்மைதான்.. தொழிலை நுண்ணுக்கத்துடன் கற்றுதரவும்.. தேவையான நேரத்தில் உடன் இருந்து உதவி செய்யமுடியும் எண்ணிய படி.. சரி என அக்காவிற்கு தலையசைத்தான்.
அப்போது வேந்தன் உணவு தட்டை சமையல்அறையில் வைத்து சொல்வதை பார்த்த கமலேஷ்.. ” வேந்தா எழிலிற்கு ரூம்மில் வைத்தே சாப்பாடு கொடுக்காமா?. இங்க கூட்டிட்டு வந்துயிருக்கலாம் தானே. ”
” இல்லடா.. ” அவன் கூற ஆரம்பிக்கும் போது..
” மாமா.. அவங்க சின்ன குழந்தை.. இவர் ஊட்டிவிட்டா தான் சாப்பிடுவாங்க. இங்க கூட்டிட்டு வந்தா அவங்க ஒழுங்கா சாப்பிட மாட்டாங்க. ” வேந்தன் கமலேஷை முறைத்துவிட்டு மாடிக்கு சொல்ல..
” ஏன் தாரா.. அவன் இங்க நம்ம முன்னாடி ஊட்டி விடமாட்டானு நினைக்கிறீயா. ஏதோ அவன் பெரியவங்க முன்னாடி அமைதியா இருப்பதால்.. உன் இஷ்டத்திற்கு அவனிடம் பேசிட்டு இருக்க. ஒருநாள் அவன் பொறுமையிழந்து பேச போறான் அன்னைக்கு.. ”
” என்னைய என்ன பண்ணமுடியும்?. “
இவர்களின் பேச்சு அருகில் சிலருக்கு மட்டும் கேட்க.. அப்போது வேந்தன் உறங்கிக் கொண்டுயிருக்கும் அரசியை கையில் ஏந்தி வந்தவன்.. அவர்களின் எதிர்புறம் இருந்த ட வடிவ ஷோபாவில் படுக்க வைத்தான். கண்களுக்கு கேப் போட்டுவிட்டு.. ஷோபாவின் அருகில் இருந்த ஐன்னலை திறந்துவிட.. அங்குயிருந்து வந்த இதமான காற்று ஏசி காற்றையும் மிஞ்சியது.
பின் யாரையும் கண்டுக்கொள்ளாமல் தன்னவளின் அருகில் கால்நீட்டி அமர்ந்தபடி.. தன் போனில் டைப் செய்ய ஆரம்பித்த சிறிதுநேரத்தில்..
” வேந்தா.. ” தன் அருகில் வர.. எழும் அம்மாவை பார்த்தவன்..
” அம்மா இங்க வந்து எந்த ரகசியமும் பேச வேண்டாம். எதுவானாலும் எல்லாருக்கும் கேட்கும்படி அங்க இருந்தே.. ஐந்து நிமிடம் கழித்து கேளுங்க. ”