இவ்வளவு நேரம் அரசியின் கூந்தலுக்குள் மசாஜ் செய்தபடி ஒருகையும், மற்றொரு கை போனில் இருக்க.. இப்போது இருகைகளை கொண்டு மெயில் ஒன்றிக்கு பதில் அனுப்பும் வேலையை வேகமாக செய்தான்.
சொன்ன நேரத்தில் தலைநிமிர்த்தி.. ” ம்.. என்ன கேட்க வந்தீங்க?. ”
அரசியின் தலையை தன்மடியில் எடுத்து வைக்க.. அவளோ ரூம்மில் இருக்கிறோம் என்ற நினைப்பில் அவனின் இடையை கட்டிக்கொண்டு படுத்தாள். ஒருநொடி அதிர்ந்தவன்.. பின் சாதாரணம் போல ஒரு கையை எடுத்து அவளின் இடைமேல் வைத்தும்.. மற்றொரு கையை அழுத்தி பிடித்துக் கொண்டான்.
இதனை பார்த்த கமலேஷ் அருகில் இருந்த வசுவிடம்.. சற்று கோபமாகவே மெல்லிய குரலில்.. ” நீ வாய திறக்காம இருந்துயிருந்தா.. அவன் பாட்டிற்கு மாடியில் வேலை செய்தும்.. எழில தூங்கியும் இருந்து இருப்பாங்க. இப்ப பாரு எல்லோர் முன்னேயும்.. எழிலிற்கு இது தெரிந்துகூட இருக்காது. “
இதனை பார்த்தும், கமலேஷ் கூறியது சற்று கேட்டும் சங்கடமாகதான் இருந்தது. ஆனால் சித்ராவிற்கு அமைதியாக ஒன்றை கேட்க வேண்டும் என நினைத்திருக்க.. அவனே சத்தமாக கேட்க கூறிவிட்டான். பின்னர் எனக்கு என்ன?.
நேற்று இரு வீட்டிலும் யாரிடமும் ஒருவார்த்தை கூறாமல்.. அவனாக செய்த செயல்.. இங்கு மாலை வந்தால் கீழே சிறிதும் மாடியில் பாதி மாறியிருக்க.. ஏன் இப்படி?. என யார் கேட்கும் கேள்விக்கும் தன்னிடமிருந்து பதில் இல்லை.
ஈஸ்வர் கூறியது அவனாக நினைத்து கூறுவது. ஆனால் இவனிடம் இருந்து பதில் அறிய வேண்டும் என்ற எண்ணமும்.. வந்ததில் இருந்து தன்னிடம் பேசவில்லை என்ற கோபமும் அவருக்கு எதுவும் யோசிக்க தோன்றவில்லை.
” எதுக்கு வேந்தா நேற்று இரண்டு வீட்டிலையும் நல்லா இருக்கும் ஷோபா, டேபிளை மாற்றி.. புதுசா இரண்டும்.. இன்னும் மாடியில் ஹாலில், ரூம்மில் என்று ஏசி, பிரிட்ஜ், ஷோபா சேட், டிவி, டேபிள், கட்டில், மெத்தை, ஊஞ்சல் எல்லாம் அவசியம் இல்லாம இப்ப எதுக்காக?. புசுசா வாங்கியிருங்க. ” அதில் யாருக்காக என்ற கேள்வியும் அடங்கியிருந்தது.
பொறுமையாக கேட்டவன்.. ” அரசி பயன்படுத்த. ”
” எல்லாம் எப்படியும் மூன்றுலட்சம் கிட்ட இருக்கும் போல. நகை எடுக்க போனப்ப.. நீயும், அப்பாவும் காசு சம்பாரிப்பது, தேவையானதற்கு மட்டுமே செலவு செய்யனும் பற்றி ஒரு பக்கத்திற்கு பேசினீங்க.
இப்ப நாலு நாள் தங்க போற எழிலரசிக்கு.. எதுக்காக?. இவ்வளவு செலவு செய்து இருக்க. நகையாவது ஒரு சேமிப்பும், முதலீடு மாதிரி. அதுக்கே அவ்வளவு பேசினீங்க. இப்ப இது.. ” பேசிமுடிக்கும் முன்..
” அம்மா உங்களுக்கு என்ன பிரச்சனை?. என்ன தெரியனும்?. நேரடியா கேளுங்க. ” குரலை உயர்த்தாமல்.. அதே அழுத்தமாக கேட்க..
அவரும் பெருமுச்சு ஒன்றை எடுத்து.. ” நீ ஏன் யாரையும் கேட்காம.. ஏன் நாலு நாளைக்காக இவ்வளவு செலவு செய்து வாங்கியிருக்க?. ”
” எனக்கு மனைவியா வரப்போற அரசிக்கு.. எனக்கு சொந்தமான வீட்டில்.. என் சொந்த காசில் செய்ய யாரிடம் கேட்டகனும்?. எதுக்காக கேட்கனும்?. ” கோபமாக கேட்க..
கேட்ட சித்ராவிற்கு கண்கள் கலங்கிவிட.. ” டேய் அப்ப மனைவிக்கு ஏதாவது சொந்த காசில் செய்தா எதுவும் சொல்லிட்டு செய்யமாட்டியா?. டா. ”
பாதியில் பேசமுடியாமல் இருக்க.. சாந்தி ‘ ஏன் இப்படி?. ‘ என இருவரையும் பார்க்க..
‘ இனி பேசாதே ‘ என்பது போல.. கமலேஷ் வேந்தனின் அருகில் வந்துவிட்டான்.
அவனோ அதை பார்ப்பதாக இல்லை.. மெல்லிய வருத்த புன்னகையுடன்.. ” நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். என் மனைவிக்கு நான் நினைப்பதை செய்வேனு. நீங்க எல்லாம் தான்.. ஒவ்வொரு தடவை செய்யும் போதும் புசுசா யோசித்து.. புசுசா கேள்வி கேட்கீறிங்க.
சரி உங்களிடம் நான் கேட்டு.. அதன்பிறகு நீங்க வாங்களாம.. வேண்டாமானு யோசித்து.. வாங்க சொல்லி.. அதை நான் வாங்கி.. அரசி உபயோகபடுத்தும் வரைக்கும்.. அவளுக்கு வரும் வலிய உங்களில் யார் வாங்கிப்பீங்க?.
இல்ல இதனால் தான் ஏற்பட்டது என அதை பார்க்கும் போகும்போது எனக்கு வரும் வருத்தத்த.. எவ்வளவு காசு கொடுத்து போக்குவீங்க?. ” அனைவரும் வாயடைத்து போனார்கள். இதை எப்படி செய்யமுடியும்?!.
” நீங்க அரசிக்கு செய்யும் செலவ.. நகை வாங்கும் காசோட கம்பேர் பண்ணுறீங்களே.. அன்னைக்கு அவ்வளவு பேசியும்.. ஆசைபட்ட நகை வாங்கி கொடுத்த வாங்கியும்.. இப்ப அரசி விழ காரணமாகியதும் மட்டும் இல்லாம.. வலியால் சாப்பிட முடியாம இருப்பவள நக்கலா பேசினாலே.. அவ வந்து.. நான் வாங்கும் வரைக்கும் அரசியோட வலிய வாங்கிப்பாளா?. இல்ல யார் யார் விழ காரணம் தெரிந்தும்.. அவ அழுகைய பார்த்தும் இவ்வளவு கேட்கும் நீங்கதான்.. ”
வசுவை கைநீட்டியே.. காவ்யாவை பார்வை பார்த்தும்.. அம்மாவிடம் பேசியவனின் வார்த்தைகள் பாதியில் நின்றது.
” அரசிக்கு வலி தெரியமா இருக்க நாலு நாளைக்கு இல்ல.. நாலு மணி நேரத்திற்கு கூட.. என்னால என்ன பண்ணமுடியுமோ.. அதை எவ்வளவு செலவானாலும் அதை செய்வேன்.
நான் என்னமோ இப்பதான் யாரையும் கேட்காம.. அதிக செலவு செய்து போல புசுசா இப்ப கேட்கிறீங்க. இந்த வீடு ரெனவேட் செய்தப்ப, அந்த வீடு கட்டும்போதும், வினோ கல்யாண செலவு, அப்ப தனியா எல்லோருக்கும் நகை வாங்க, ஹோட்டல் விரிவாக்கம் செய்த போது எல்லாவற்றிக்கும் காசு கொடுத்தனே.. அப்பயெல்லாம் ஏன் ம்மா நீங்க இவ்வளவு கொடுக்குற?. எதுக்காக இவ்வளவு செலவு செய்யுறனு கேட்கல?.
ஏன் கேட்கலனா?. அதை நீங்க என் கடமையா பார்த்தீங்க. அதனால கேட்க தோனால.. சந்தோஷமா அதை ஏத்துக்கிட்டீங்க. ஆனா அதையே நான் என் அரசிக்கு செய்வது உங்களுக்கு கடமையா தெரியல.. ” கூறிக் கொண்டுயிருக்கும் போதே..
அவ்வளவு நேரம் தான் செய்ததில் தவறு இல்லை என அழுத்தமாக பேசிக்கொண்டுயிருந்தவன்.. கடைசி வரியில் குரல் கலங்கி பேச.. உடனே வேந்தனின் அருகில் சித்ரா, சாந்தியும் வந்து அமர்ந்தார்கள்.
” என்ன வேந்தா இப்படியெல்லாம் நினைக்கிற?. நாங்க அந்தமாதிரி உனக்கு கடமையில்லை என்று நினைத்துயிருந்தா.. உங்க இரண்டுபேரையும் கல்யாணம் முன்பே.. இரண்டுபேர் வீட்டிலும் உன்னைய எழிலிற்கு எல்லாம் செய்யவும், தனி ரூம்மில் இருக்கவும் அனுமதித்து இருப்பமா சொல்லு?. ”
மெல்லிய புன்னகையுடன்.. ” பெரியம்மா எனக்கு அரசிக்கு எல்லாம் செய்ய ரூம் அவசிமே இல்ல. ”
அவரும் புன்னகையுடன்.. ” அதான் இப்ப பார்த்தாலே தெரியுதே. நாங்கதான் ரூம்மில் போய் இருக்கனும் போல. ”
அவனை வேதனையுடன் பார்த்த சித்ரா.. ” சரி டா. நீ யாரையும் கேட்டுயிருக்க வேண்டாம். ஆனா கம்மியான பொருட்களை வாங்கி இருக்கலாம். உடனே என் அரசிக்கு.. என் இஷ்டத்திற்கு வாங்குவேனு பொங்கி எழாத?. ” சாந்தி, வேந்தன் இருவரும் புன்னகைக்க.. சொன்ன சித்ராவிற்கே சிரிப்பு வந்துவிட்டது.
மெதுவாக ” நான் என்ன சொல்ல?. கேட்க வரனா?. இப்ப யாழினி பிறந்தநாளிற்கு வரவங்க கண்டிப்பா இதை பார்த்து கேட்பாங்க. நீ சொன்ன காரணத்தை சொன்னா.. நான் கேட்டதை தான்.. ” நிறுந்துங்க எப்போது போல அவரின் கையை பிடித்து..
” கேட்பதை பற்றி இனி கவலைபடாதீங்க. அந்த கேள்வியே வராது. ” புரியாமல் இருவரும் பார்க்க..
” யாழினி பிறந்தநாள் முடிந்து.. அடுத்த இரண்டு வாரத்திற்கு அரசியோட கால் முழுசா சரியாகும் வரை நாங்க இங்கதான் இருக்க போறோம். ” அடுத்த அதிர்ச்சியை கொடுக்க.
” டேய் ஏன்டா இப்படி ” அவர் முடிப்பதற்குள்..
” அம்மா இதை நான் மட்டும் முடிவு பண்ணல அண்ணா, பெரியப்பா, அப்பா, மாமா சேர்ந்து யோசித்தது. அரசி வீட்டினுள் கொஞ்சம் ரெனவேட் பண்ணலாம் முடிவு செய்துயிருந்தது.. அதை இப்பவே செய்திடலாமானு கேட்டாங்க. சந்துருவிடம் கேட்டு முடிவு சொல்லுறேன் சொன்னேன். ஆனா இப்ப முடிவே செய்துட்டேன். யாராவது கேட்டா?. அரசிக்காக நான் வாங்கியது முடித்துவிடுங்க. ”
” அப்ப இன்பாவும் மா. ”
” ம்.. இப்போதைக்கு அரசி மட்டும் இருந்தா நல்லாயிருக்காது. அதனால இன்பாவ இங்க இருக்க வைத்து.. அங்க சந்துருவையும், கதிரவனையும் இருக்க சொல்லனும். ”
” நல்லவேளை இன்பாவும் இங்க இருக்க வேண்டும் என்று யோசிக்கிறீயே. ” புன்னகையுடன் சாந்தி கூற..
சித்ராவிற்கு சிறிது நிம்மதியும், பக்கத்தில் இருந்தும் வீட்டிற்கு வராமல் இங்கேயே இருப்பானே.. என்ற கவலையும் இருந்தது.
புன்னகையுடன் இருக்கும் மூவரையும் பார்த்த பின் தான் கமலேஷ் மனம் ‘ அப்பாடா!. ‘ எங்கே மனம் வருந்தி யாராவது யாரிடம் இன்னும் பேசிவிடுவார்களோ என பயந்துபோனான்.
பின் சித்ரா, சாந்தி அங்குயிருந்து சென்று மூவரிடமும் கூற.. சாருலதா வேந்தனிடம் வர.. மற்ற மூவர் அதிர்ச்சி அடைய.. ராஜேஷ் கடைக்கு செல்கிறேன் என கிளம்பி விட்டான். வித்யாவிற்கு ஏன்டா இங்கு இருக்கிறோம்?. என்ற நிலையில் இருந்தாள்.
கமலேஷ் அருகில் இருந்த சாரு மெதுவாக.. ” அண்ணா.. இங்க இவ்வளவு களேபரம் நடக்குது. ஆனா அக்கா இன்னும் அசையாம தூங்குறாங்க?. ”
வஞ்சையுடன் பார்த்தவன்.. ” வீக்கம் இல்ல.. ஆனா வலி அதிகமா தான் இருக்கு சொன்னான். அதனால வலி மாத்திரை போட்டுயிருப்பா. ”
அப்படியா என அவளின் முகத்தில் தெரிந்த முகம்சுருக்கம் வலியை தூக்கத்திலும் உணர்கிறார்கள் போல என்று நினைத்தவள்.. ” மாமா.. அக்காக்கு வலிக்கும் போல மாத்திரை குடித்தாங்கள?. ”
அரசியின் முகத்தை பார்த்து.. ” நைட் தூக்கம் வராதுனு பாதி மாத்திரை தான் போட்டா அதனால இருக்கும். ” வலியில் சுருங்கும் நெற்றி, புருவத்தை நீவி விட்டவாறே கூறினான்.
” சரி டா . நாங்க கிளம்புறோம். ” சரி என தலையாட்ட.. இருவரும் அங்கும் சொல்ல..
சித்ரா ” கமலேஷ் நீ எங்களை அப்படியே வீட்டில் விட்டுபோ. ” சாந்தி ஏதோ கூறவர..
” அக்கா நான் தூங்கி எழுந்தா நல்லாயிருக்கும். அதனாலதான். நான் காலையில் சீக்கிரமா வரேன். ” சரி என தலையசைத்து நால்வரும் கிளம்பினர். அதன்பின் மற்ற மூவரும் உள்ளே சென்றனர்.
தன்னவளின் முகத்தை வருடி.. ” முயல்குட்டி என்கூடவே இன்னும் இரண்டு வாரத்திற்கும் இருக்கப்போறியா!. சந்தோஷமா இருக்கு. ”
தன்னவளை கட்டிக்கொண்டு நிறைய பேசவேண்டும் என்ற எண்ணம் வர.. அவளை அள்ளிக்அணைத்து தூக்கிக்கொண்டு மாடிக்கு சென்றுவிட்டான்.
இருவரும் சென்றதை நால்வரும் பார்த்தனர். ” ஏம்மா.. வேந்தன் காசு கொடுத்தது பற்றி கூறியது உண்மையாமா? “
” தெரியல ப்பா. இது நடந்தது எல்லாம் யாழினி வயிற்றில் இருந்தபோ.. பாப்பா பிறந்த சமயம். நான் இதையெல்லாம் கவனிக்கல. “
குழந்தைகளின் மழழை குரலில் யாழினிக்கு பிறந்தநாள் வாழ்த்துபாட.. பின் அவர்களுக்கு இனிப்புகளை யாழினி வழங்குவதை.. வேந்தனும், எழிலரசியும் ஈஸ்வருடன் வீடியோகாலில் இணைந்து யாழினியின் வகுப்பறையில் நடப்பதை மகிழ்வுடன் பார்த்துக் கொண்டுயிருந்தார்கள்.
பிறந்தநாளிற்காக காவ்யாவிடம் கேட்க கூறியதை.. பள்ளியில் ஒத்துக்கொண்டு குழந்தைகளுக்கு இனிப்பகம் சார்பாக இனிப்பு வகைகள் அடங்கிய பாக்ஸ் மற்றும் உணவகத்தின் சார்பாக மதியஉணவு கொடுக்கப்படுகிறது. அதனுடன் பள்ளிவிழாவிற்கு வேந்தன் குறித்த உணவுகளை ஏற்று.. செய்து தரப்படுகிறது.
அரசிக்கு எக்ஸ்ரே எடுத்து ஒன்றும் பயமில்லை என்று கூறிய பின்.. இன்று தான் அரசி வெளியிடத்தில் நான்கு ஐந்து அடிகள் மட்டும் எடுத்து வைக்கும் அளவிற்கு முன்னேறியிருந்தாள். அவளை அதற்கு நடக்க விடவில்லை அவளின் தனு. அவளிற்கு இன்னும் வலி மற்றும் இருகால்களும் என்பதால் அவனிற்கு பயம். ஒன்றும் அவசரம் இல்லை என அவளை அதட்டி, கெஞ்சி, கொஞ்சி வைத்திருக்கிறான்.
பேசி முடித்ததும் அவளை மடியில் அமர்த்திக்கொண்டு.. அவன் தன்அருகில் கவரில் வைத்துயிருந்ததை எடுத்து காண்பித்து..
” முயல்குட்டி இதை யாருக்காக டிசைன் செய்து வைத்துயிருக்க?. ” கேட்டவள் அவனின் இருகன்னத்திலும் முத்தமிட்டமிட..
நெற்றி முட்டி.. ” ம்.. இப்பவே ஏன்?. ”
தோள் குலுக்கி.. கண்கள் மூடி திறந்து.. பச் என்ற சத்தம் கொடுக்க.. அவளின் இதழை மட்டும் பிடித்து.. ” முயல்குட்டி இந்த மாதிரி கல்யாணம் வரை பண்ணக்கூடாது சொல்லியிருக்கேன் தானே.. ஏன்டி மாமாவ நினைத்து பாவமாவே இல்லையா?. ”
அவனின் கையை தட்டிவிட்டு.. ” நான் எதை தான் பண்ண?. எது பண்ணாலும் சொன்னேன் இல்ல.. சொன்னேன் இல்லனு சொல்லுற?. ”
” ம்.. முயல்குட்டி என்ன பண்ணினாலும் அவள ஒருவழி பண்ணதோனுதே. ஆனா கல்யாணம்முடியும் வரை கொஞ்சம் நல்ல பையனா இருக்கனுமே. மாமாக்கு உதவி பண்ணமாட்டியாடி. ” கூறியபடியே.. முகம் முழுவதும் முத்தமிட்டு.. இதழை இதழால் மெல்ல தொட்டு எடுக்க..
” தனுனு.. ” தன்னவனின் செயலால் உடல் தளர்ந்து பிடிமானத்திற்கு கழுத்தை அழுத்திபிடித்து அழைத்தவள்.. சிலநொடிகள் கழித்து.. ” நான் வாய திறந்தே பதில் கூறியிருக்கலாம் போல.. ” அவனின் கன்னத்தை பிடித்துயிழுத்து கூறியவள்..
தன்னவனின் கைகளில் இளந்தளிர் நாவல்பழ நிற மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில்.. ஒருவயது குழந்தைகளுக்கான.. இரு பட்டு பாவடைசட்டை துணி.. அதன் சட்டையில் அழகான கிளியும், பூக்களால் டிசைன் செய்யபட்டும்..
மற்றும் ஒரு குர்தி, பேட். குர்தியில் அதே டிசைன் செய்யபட்ட.. தைக்காத மூன்று செட்துணிகள் இருந்தனர். இந்த துணிகள் அரசிக்கு வேந்தன் முதன்முதலில் தேர்ந்தெடுத்த சேலை நிறத்தில் வேண்டும் என விரும்பி.. தன்னவனையே வாங்கி வரச்சொல்லி.. டிசைன் செய்திருந்தாள்.
அவளிடம் 6வயதிற்குள் அடியேடுத்து வைக்கும் யாழினிக்கு கழுத்து மற்றும் ஆங்காங்கே பூக்கள் அதன் நடுவில் கற்கள் பதிக்கப்பட்ட மஞ்சள்சட்டையும், சிவப்பு நிற பட்டு பாவாடை எழிலரசியால் டிசைன் செய்யபட்டு.. சத்யாவால் தைக்கப்பட்டு இருந்தது.
தனுவின் நெற்றில் முத்தமிட்டு.. ” முதன்முதலில் குழந்தைகளுக்கு டிசைன் செய்ய ஆரம்பிப்பது. அதான் நமக்கு முதலில் செய்தேன். ஏன் இதை நான் வாங்கி வரச்சொல்லும் போதே.. என் தனுமாமாவிற்கு தெரியதா?. ” நம் குழந்தைகளுக்கு என தன்னவன் மடியில் அதனை கூறும்போதே.. அவள் வதனம் செந்நிறமாய் மாறி.. சிலர்த்தும் தன்னவனை காதலுடன் பார்த்தும் கூற..
அவனும் நமக்கு என்றதில் உள்ள நம்குழந்தைகள் என்றதும் இடை இறுக்கி புன்னகைமட்டும் புரிந்து கேட்டிருந்தவன்.. கூறும்போதே வனப்புடன் மாறிய தன்னவளின் கழுத்தில் முத்தமிட்டவாறே.. ” தெரியும்.. ஆனா செய்யும் காரணத்தை என் முயல்குட்டி வாயாலே சந்தோஷமா கூறி கேட்டு.. அதில் நான் சந்தோஷப்பட்டு இப்படி இருக்கும் உன்னைய பார்த்து ரசிக்கனும் தான். ” அவனின் பார்வையும், செயலும் அவளை வாய்திறத்து எதுவும் கூறமுடியாத நிலையில் அவனின் தோள்களுக்குள் தஞ்சம் புக.. அவனும் அவளை தன்னுள் புகுத்திக்கொண்டான்.