” ராதா பழையவீடா இருந்தாலும் நல்லா பெருசா இருக்குல. ஆனாலும் வேந்தன் இந்த காயத்திற்கு போய் எழில் குட்டிக்காக இவ்வளவு செலவு செய்யகூடாது டி. ”
வீட்டை சுற்றி பார்த்துவிட்டு.. அதில் உள்ள பொருட்களையும் பார்த்த பின் ஹாலில் அமர்ந்து கூற..
” சத்தமா பேசாத க்கா. இங்க நடந்ததை காவ்யா பொண்ணு சொன்னாதா.. மேகா நேற்று சொன்னதை மறந்துட்டியா. “
“ போடி.. எழில் விழுந்ததுக்கு மேகாவும் மற்ற இரண்டுபேரும் காரணம்னா.. சேலைய தரைய விரித்து உட்கார்ந்து இருந்து.. கவனமாக பார்க்காம எழுந்தது.. இந்த குட்டியோட தப்பு. அதுக்காக அவர் இவங்க மூனுபேரை மட்டும் காரணம் சொன்னா. ” வேதகி கோபமாக கூறும் கொண்டுயிருக்க..
” இதாங்க டீ எடுத்துக்கோங்க. ” மெல்லிய புன்னகையுடன் மாலதி இருவரிடமும் கொடுக்க.. அவர்கள் புன்னகையுடன் வாங்கிக்கொள்ள..
இருவரின் அருகில் அமர்ந்த மாலதி.. ” நீங்க எழிலரசி அத்தைங்கனு சாந்தி அண்ணி சொன்னாங்க. நான் இந்த வீட்டு மருமக காவ்யா அம்மா மாலதி. ”
இருவரும் அறிமுக புன்னகை புரிந்தார்கள்.
” நிச்சியம்போதே நமக்கான அறிமுகம் நடந்துயிருக்கனும். அப்ப வளைகாப்பும் சேர்ந்து நடந்ததால.. நம்மா தெரிந்துக்கொள்ளவே நேரம் அமையல. ”
” ஆமாம். நான் எழிலரசி பெரிய அத்த தேவகி, இவ என் தங்கை சின்ன அத்த ராதா. நாங்க.. ” கூறிக்கொண்டுயிருக்கும் போது..
” அம்மா நீங்க வரும்போதே பிரியாவ கூட கூப்பிட்டுதானே வரச்சொன்னேன். ஏன் கூட்டி வரல. ” கதிரவன் வேகமாக வந்து ராதாவிடம் கேட்க..
” மேகா தான் சொன்னா.. இந்த வீட்டை தாண்டி போய் கூப்பிட்டு வரவதற்கு.. சத்யா கூட.. “
அவரை முடிக்கவிடமால். ” அது எனக்கு தெரியாமையா உங்கள கூப்பிட்டு வரச்சொன்னேன். ” அவரை முறைத்துவிட்டு போன்னை எடுத்து ” டேய் சந்துரு.. ” பேசியபடி மாடிக்கு சென்றான்.
” ராதா அக்கா.. இவர் உங்க பையானா?. ” போகும் அவனை பார்த்துக்கேட்க..
” ஆமாம்.. என் இரண்டாவது பையன். ”
குழப்ப முகத்துடன் மாலதி.. ” எழில் உங்க பையன.. அண்ணானு தானே கூப்பிடுட்டு பார்த்துயிருக்கேன். ஏன் மாமானு கூப்பிடுவதற்கு பதில அண்ணானு கூப்பிடுது. ”
” அத கொடுமைய ஏன் கேட்கிறிங்க!.. எழில் எங்க பசங்க யாரையும் முதலில் மாமானு கூப்பிடமாட்டா. அவங்க அக்காவை கல்யாணம் செய்த பின் தான் இரண்டு பசங்களை மட்டும் எப்பயாவது கூப்பிடுவா. மற்ற இரண்டுபேரையும்.. ம்ஹூம். அவ யாரையும் மாமானு கூப்பிடமாட்டிகிறா. ஏன் உங்க மாப்பிள்ளைய கூட அண்ணானு தான் கூப்பிடுவா கவனித்தது இல்லையா. ”
” இல்லையே.. அது எப்படி கூப்பிடுவா. அண்ணியிடம் கேட்குறேன். ”
சாந்தியை அழைக்க.. அவருடன் சித்ராவும் வர.. வந்தவர்கள் இருவரையும் புன்னகையுடன் பார்த்து அமர.. என்னவென்று மாலதியை பார்த்து இருக்க..
” அண்ணி எழிலரசி.. ஈஸ்வர் மாப்பிள்ளைய அண்ணானு தான் கூப்பிடுவாளாமே?. ” சற்று கோபமாக கேட்க..
” எழில் அண்ணானு இல்ல.. தனு அண்ணா கூப்பிடுவா. ”
” ஏன் மாமானு கூப்பிட்டா என்னவாமா?. “
” அதனால என்ன அண்ணி.. அவ வேந்தனோட அண்ணானு.. அவளுக்கு பிடித்தமாதிரி கூப்பிடுறா. ஈஸ்வரே அதை கேட்டு.. சரி அப்படியே எப்பவும் கூப்பிடுனு சொல்லிட்டான். அதன்பிறகு நாம்ம என்ன சொல்ல. ” மாலதி அதற்கு கேள்வி கேட்க முடியாத பதிலை சாந்தி கூற.. கடுப்புடன் சித்ராவை பார்த்து ஏதோ கேட்கவர..
” அம்மா.. ” அழைத்த படி அருகில் வந்த வேந்தன்..
மாலதியின் கேள்வியில் இவர்போல பலர் கேட்பார்களே என்று எழிலரசி மேல் கோபமா?. இல்ல வருத்தமா என்ற நிலையில் இருந்தவரிடம்..
அவளின் தனு அழைப்பதை கேட்டு அருகில் வந்தவனை.. ‘ என்ன டா?. ‘ ஒரு பார்வை செலுத்த.. ” ஸ்விட் வெளியில் எங்கேயும் இல்ல. உள்ள எங்கேயும் இருக்கா?. ”
” வீட்டில் இல்லையே. கேக், சாக்லேட் நிறைய இருக்கேனு எதுவும் வாங்கள. சரி இப்ப எதுக்காடா?. ”
” நான் எதுக்கு கேப்பேன். அரசிக்கு கட்டுபோடனும். மாட்டேனு உட்கார்ந்து இருக்கா. அவள சமாளிக்கதான். ”
” இப்ப கட்டா?. அதான் இனி போட வேண்டானு சொல்லிட்டாங்களா.. பின்ன எதுக்கு இப்ப?. ” பதட்டத்துடன் கேட்க..
அதை உணரந்தவன்.. ” சும்மா சேப்ட்டிக்கு ம்மா. சுடிபோட்டு தெரியும்படியா.. கட்டு போட்டுக்கொண்டா அவ அமைதியாவும் உட்கார்ந்துயிருப்பா. இல்ல எல்லோரும் இருப்பதால்.. யாராவது கூப்பிடிட்டா மறந்துபோய் எழுந்து திருப்ப விழுந்துவிடுவா. ”
” டேய்.. ஒருதடவை மாட்டியது தெரியாம எழுந்து.. நாம்ம யாரும் இல்லாததால விழுந்துட்டா. எல்லா நேரமும் அப்படியே நடக்கும்மா?. எல்லோருக்கும் இருக்கோம்.. கவனமா பார்த்தும்போம். அவ கட்டோட இருந்தா பார்க்க நல்லாவா இருக்கும்.”
” அம்மா.. அவ வேற வழியில்லாம தனியா இருந்து.. தெரியமா விழுந்துயிருந்தா பரவாயில்ல. ” வருத்தமும் கோபமுமாக கூற ஆரம்பித்தவன்..
” அதவிடுங்க அதைபற்றியும்.. யாரை பற்றியும் பேசவிரும்பல. நான்தான் இனி முன் ஜாக்கிரையதையா இருந்துக்கனும். அவள யாரும் பார்க்கவும் வேண்டாம். பார்த்துக்கவும் வேண்டாம். சரி வாங்க பால்பாசயம் வைக்கலாம். அவ இன்பாவை சமாளித்து கீழ வரவதற்குள்ள.. நான் போகனும். ” அவன் முன்னால் சொல்ல..
” சித்ரா பால் இல்லைதானே?. ” ஆம் என ஆம் என அவர் தலையாட்ட..
பின் சாந்தி யார் அருகில் இருக்கா என பார்த்தவர்.. ” ராஜேஷ் இங்க ப்பா.”
தன் அம்மாவை என்னவென்று பார்த்தபடி வந்தவன்.. ” சொல்லுங்க அத்த.. ”
” பக்கத்து கடையில் போய் பால் வாங்கி வாயேன். எழிலிற்கு வேண்டும். ”
எழிலிற்கா?. தன் உடன் வந்த பாலா, கிருஷ்ணாவை பார்த்தவன்.. ” ஒரு பத்துநிமிடம் கழித்து போகட்டா. இப்பதான் நாங்ககடையில் இருந்து வந்தோம். ” அவன் கூறிக்கொண்டுயிருக்கும் போதே..
” பரவாயில்ல அண்ணா. நீங்க மாடிக்கு போங்க. நான் போய் வாங்கிட்டு வரேன். பாலா நீ இன்பாவிடம் வேற ஏதாவது அமுல்பேபிக்கு வேண்டும்மா?. அம்மா.. ” என அலறி திரும்ப.. அங்கு வேந்தன் முறைத்து நின்றுயிருந்தான்.
என்ன பாலையும் காணோம்?. அம்மாவையும் காணோம் பாலை பற்றி கேட்ட வெளியே வர.. ஹாலில்.. ‘ வேற ஏதாவது அமுல்பேபிக்கு ‘ என்று கேட்கவும்.. கூறியவன் யார் என தெரிந்து அடித்தான். அவனோ அலறி திரும்ப..
” மாமா நீங்க இங்கதான் இருந்தீங்களா?. ”
பதறி.. ” டேய் உனக்கும் நான் மாமா வாடா!?. ”
கிருஷ்ணா புன்னகையுடன்.. ” இன்பாக்கு மாமா என்பதால்.. ” பாதியில் நிறுத்து என்பது போல சைகை செய்து.. ” போ போய் பக்கத்தில் இருக்கும் ஸ்விட் கடையில் ஏதாவது நல்ல ஸ்விட் வாங்கிட்டு கால் பண்ணு. ” அவன் புன்னகையுடன் செல்ல.
பாலாவிடம் திரும்பிய வேந்தன் ஏதோ கூறவர.. ” அண்ணா அவன் ஏதோ மறந்து சொல்லிட்டான். இனி கூப்பிடமாட்டான். ” வேகமாக பாலா கூற..
கேட்டவன் சரி என்பதுபோல தலையாட்டி புன்னகையுடன் மாடிக்கு செல்ல.. புரியாமல் நின்றுயிருந்தவர்களிடம் ஸ்கூல் கதை கூற.. இருவர் மட்டும் புன்னகைக்க.. மற்றவர்கள் தங்கள் மகள்களை மறைமுகமாக குற்றம் சாட்டியவனையும், அதற்கு காரணமானவளின் மேல் கோபத்தில் இருந்தபடியே கேட்டுயிருந்தனர். ஒருவன் என்ன மனநிலையில் உள்ளான் என தெரியவில்லை.
வீட்டின் மேல்மாடியில் வெப்பத்தின் தாக்கம் முழுவதும் குறைந்து.. குளிர்ந்த காற்று நன்றாக வீச.. அங்கு யாழினி குட்டி.. எழிலரசி, வேந்தன் கொடுத்த பட்டுபாவாடை அணிந்து.. ராஜேஷ் வாங்கிக்கொடுத்த சாக்லேட்சீஸ் கேக் வெட்டி.. அதன்பின் அவளின் பிறந்தநாள் விருந்து நடைப்பெற்றுக் கொண்டுயிருந்தது.
” தனு நாம்ம கீழபோலமா?. ”
” ஏன்?. கால் ஏதும்?. ” அவளின் முறைப்பை பார்க்காமல் கேட்க ஆரம்பித்தவன்.. முகத்தை பார்த்து அப்படியே நிறுத்தினான். ” ஏன் முயல்குட்டி இப்ப முறைக்கிற?. ”
” முறைக்காம என்ன பண்ணுவனா?. எல்லோரும் இன்னும் சரியாகலையா?. ஆகிடுச்சுனு சொன்னாங்களேனு பார்த்து.. சேப்டிக்கானனு உங்க பதில கேட்டு பக்கத்தில் உட்காராம போறாங்க. நாம்ம போகலாம். ” சிறிது கோபத்துடன் கூற..
‘ நான் செய்வது உனக்கு புரியவில்லையா?.’ என பதில் பார்வை மட்டும் பார்த்து.. அவளை படிவரைக்கும் நடக்க வைத்து.. பின் தூக்கிக்கொண்டு சென்றான்.
மஞ்சள் நிற பட்டு அர்னாகலி சுடி அதற்கு இளஞ்சிவப்பு பட்டு நூல் வேலைபாடு அமைத்த ஷாலும், இளஞ்சிவப்பு நிற சாட், லைட்புளூ ஜீன்ஸ் அணிந்து சொல்லும் வேந்தன், எழிலரசியை அங்குயிருக்கும் அனைவர் கண்களும் பார்த்தும் பார்க்காதது போல இருந்தது.
பெண்கள் அனைவரும் அந்த இடத்திற்கு ஏற்றார்போல அழகாக வந்து இருந்தாலும்.. வேந்தன் வாங்கிய உடைகள், சுடிக்கு ஏற்றார் போல வைர தோடு, அளவான மேக்கப், கூந்தலை அடியில் இருந்து சிறிது முடிக்கள் மட்டும் எடுத்து கிளிப்போட்டு.. கொஞ்சமாக மல்லிக்கை பூ வைத்து என அவர்களைவிட சற்று மாறுபட்டு தனித்து தெரிந்தால் எழிலரசி.
வேந்தன் எங்கும் சொல்லாமல் அருகில் இருந்தும்.. எல்லோரையும் தன் அருகில் அமர வைத்து அவளை எந்த இடையூறும் இல்லாமல் ஓரமாக உட்கார வைத்து..பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள். ஆனாலும் அவன் எல்லாவற்றிலும் அவளிடம் காட்டும் அதிகபடியான அக்கறையும், கவனிப்பும் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி, குழப்பம், சந்தேகம், பொறாமை என தோற்றிவித்தது.
” இளமதி.. வேந்தன் எப்பயாவது எழிலை.. உன்னுடனோட இல்ல.. உன் கிளாஸ் வரும்போதோ பார்த்துயிருப்பாரு?. இன்பா கிளாஸ்க்கு எழில் போய்.. பாலா,கிருஷ்ணானு கதிரவன்அறிமுகப்படுத்தி வைத்த பசங்களுக்கு எழிலை தெரிந்துயிருக்கே.. அது மாதிரி வேந்தனுக்கும் தெரியுமோ?. “
” அக்கா.. நான் இருந்தவரை அவ கிளாஸ்க்கு நான் தான் போவோன். அவ வந்ததே இல்ல. நாங்க படித்து முடிந்த பிறகுதான் இன்பா கிளாஸ் போயிருப்பா. அதனால வேந்தன் அவளை பார்த்திருக்க வாய்ப்பு இல்ல. ஏன் அக்கா?. ”
” இல்லடி.. அவர் நடவடிக்கை, எழிலிற்கு வாங்கியிருக்கும் சுடியெல்லாம் அவ உயரத்திற்கு சரியா இருக்கா. அதான் கேட்டேன். ”
” அக்கா ஸ்கூல் பசங்களோட பசங்களா பார்த்திருக்கலாம். ஆனா தங்கைனு தெரியாம இருக்கும். இப்ப வரன் பார்த்தவுடன்.. யோகா அண்ணி மூலம் நீங்க, நானு எல்லாம் முன்னமே தெரிந்தவங்களா இருப்பதால்.. அவளிடம் கொஞ்சம் பழக சாதாரணமா இருந்து.. கல்யாணம் பிறகு வர பாசம் கொஞ்சம் சீக்கிரமா வந்துயிருக்கும்.
பின் புன்னகையுடன்.. ” அக்கா வரப்போற மனைவிக்கு இவ்வளவு உடை, நகை வாங்குபவர்.. தன் மனைவி இப்படிதான் இருக்கனும் என்று நினைக்காமையா இருப்பாரு. அதில் இந்த உயரத்தில் தான் தனக்கு மனைவி வரனும் நினைத்து.. எல்லாம் வாங்கியிருப்பாரு. ” இதனை உடன் இருந்த சுரபி, தர்ஷினி.
இவர்கள் அருகில் இருந்த பெண்கள் கூட தங்களுக்குள் இருந்த சந்தேகத்திற்கு விடைகிடைத்தது போல அவரவர் மனதில் நினைத்தனர்.
ஆனால் சற்று தள்ளி அனைவரையும் பார்த்துயிருந்த ஆண்களில் சிலருக்கு அவனிடம் வேறு ஒரு சந்தேகம் மற்றும் கேள்வியை கொண்டுவந்தது.
” கணேஷ்.. வேந்தன் செய்தது பற்றிய சில விஷயங்கள் இப்பதான் சுந்தரம் சொல்லி கேள்விபட்டேன். அதை பற்றி உங்களிடம் இப்ப கேட்கட்டா?. ”
” ம்.. சொல்லுங்க சுவாமி அண்ணா. என்ன உங்களுக்கு அவனிடம் சந்தேகம்?. ” அவனை நினைத்து கடுப்புடன் கேட்க..
அன்று வேந்தன் கோபத்தில் கூறி கேட்டதை சுந்தரம் சுமாமிநாதனிடம் கூறி.. அதை கணேஷிடம்கூறி.. ” வேந்தன் என்ன தான் படித்துயிருக்கான்?. என்ன வேலை?. எப்போதில் இருந்தே இதை செய்யுறான்?. “
” ஓ.. அந்த பொண்ணுக்காக!.. இப்படி செய்ததேனு.. சொல்லிக்காட்டும் அளவிற்கு வந்தட்டானா. ” பெருமுச்சு ஒன்றை வெளிப்படுத்தி..
” ம்.. அண்ணா எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. சித்ராவிடம் கேட்டபோ.. அவன் யூஜி B.Sc முடிந்த உடனே பிஜி படித்துக்கொண்டே சென்னையில் இருக்க பிரண்ட் கம்பெனிக்கு ரெகுலர் வேலைனு இல்லாம.. அவனின் நேரத்திற்கு ஏற்றார் போல வேலைக்கு போவானா. ஒரு வேலை முடித்து கொடுத்தாலே.. அதில் நல்ல பணம் வருமாம்.
அப்ப அந்த இரண்டு வருடம் தான்.. இப்ப இருக்க வீடு இருக்கும் நிலத்திற்கு உண்டான காசையும், ஹோட்டல் விரிவாக்கம் பண்ணவும் கொடுத்தான். பின்ன கேம்பஸ் செலக்ட் ஆகி பெங்களூர் போனான். அங்க பார்த்துக்கொண்டே இரண்டு சனி, ஞாயிறு சென்னை கம்பெனிக்கு வருவான். அப்பதான் இரண்டு வேலை, ஹோட்டல், நிலத்தில் வரும் வருவானம் வைத்து வீடுகட்டினான். ஒருவருடம் கழித்து வேலை பார்த்துக்கொண்டே MBA படித்தான்.
வினோ கல்யாணம் நகையும், பாதி செலவு ரவி மாமா போட்டார். மீதி கல்யாண செலவு, அப்பயும் எல்லாருக்கும் நகை வாங்கினான். அதை அவன் இன்னொரு வேலையில் வரும் வருமானத்தில் செய்தானா.
MBA முடித்து ஒருவருடம் கழித்து.. சென்னையில் இன்னும் நல்ல சம்பள வேலை கிடைத்தவுடன்அங்க போய்யிடான். நடுவில் இங்க அவனுக்கு இரண்டு இடம் வாங்கினான். இப்ப வரைக்கும் அவன் சென்னையில் இரண்டு வேலையும்.. ஹோட்டல், நிலம் பொறுப்பை ஆள் வைத்து பார்த்துகிறான். அவன் வீட்டிற்கே ஆறு மாதத்திற்கு ஒருதடவை தான் வருவான். வந்தாலும் நான் வெளிய பார்த்தே இல்ல. ஹோட்டல் தான் இருப்பான்.
ஆனா இப்ப இந்த ஒருமாதமும் தினமும் அந்த பொண்ணு கார் ஒட்ட.. அவன் கூட வருவதை பார்க்கிறேன். ” வேந்தனின் இத்தனை வருடம், இதனை வேலைகள் செய்ததை பற்றி கூற.. அதிர்வுடன் இருவரும் கேட்டனர்.
” அப்படினா!. இப்ப இருக்க வீடு, இடம், பண்ணப்போற தொழில் எதிலும் வினோ, வசுவிற்கு பங்கு இருக்காதோ?. ”
” அது எப்படி இல்லாம போகும். இதையெல்லாம் சித்ரா வாய் வார்த்தையில் சொன்னது. ஆனா இதையெல்லாம் ரவிக்கும் இருக்கும் ஹோட்டல், நிலம் இதில் வரும் வருமானம் வைத்துதான் வாங்கியிருக்கனும். தனியா எல்லாம் இவ்வளவு காசு கொடுத்து வாங்க முடியாது. ”
” இல்லனா நான் வேற ஒன்னும் கேள்விபட்டேன். அதை வைத்து பார்த்தா கண்டிப்பா தனியா வாங்க வாய்ப்பு இருக்கு. இன்னும் அதை பற்றி விசாரித்தா தான் தெளிவா தெரியும். ” அவர் அறிந்ததை கூறினார்.
வேந்தனை பற்றி அறிந்ததையும், அவனின் செயல்களை பார்த்து விவாதம் நடக்க அவனோ தன்னவளை அழைத்துக்கொண்டு அவள் வீடு வந்துயிந்தான்.